Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புதுச்சேரியில், முதல்வராகிறார்... ரங்கசாமி! புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்கவுள்ளார். அந்தவகையில், என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி எதிர்வரும் ஏழு அல்லது ஒன்பதாம் திகதி முதல்வராகப் பதவியேற்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் ஆறாம் திகதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றதுடன் இதில், 81.70 வீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஆறு மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்று முடிவுகள் மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்…

  2. இலங்கை அகதியின் இதயம் ஹெலியில் பறந்தது விபத்தில் மூளைச்சாவு அடைந்த இலங்கை அகதியின் இதயம்,சிறுநீரகம் உள்ளிட்ட உடலுறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன. ஹெலிகாப்டர் மூலம் அவரது இதயத்தை சென்னை மருத்துவமனைக்கு வைத்தியர்கள் எடுத்துச் சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 22) என்பவரின் உடலுறுப்புகளே இவ்வாறு தானமாக அளிக்கப்பட்டுள்ளன. கடந்த 29ஆம் திகதி அடையாளம் என்ற கிராமத்தின் அருகே இடம் பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த கிருபாகரன், வேலூர் சிஎம்சி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில், நேற்று மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் உ…

  3. `28 வயதில் எம்.பி; 1,000 பள்ளிகளை திறந்து சாதனை’ - 101 வயதில் மறைந்த டி.எம்.காளியண்ணன் கவுண்டர் துரை.வேம்பையன்நா.ராஜமுருகன் காளியண்ணன் கவுண்டர் ( நா.ராஜமுருகன் ) இந்தப் பதவியை வைத்து ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் ஆயிரம் பள்ளிகளை இவர் திறந்தார். 'இங்குள்ள பிள்ளைகள் நாலெழுத்து படிக்கோணும். அதுக்காகதான் ஆயிரம் பள்ளிகள். கடைக்கோடி பிள்ளைக்கும் கல்வி கிடைக்கணும்னா, இன்னும் அதிகம் பள்ளிகளை திறப்பேன்' என்று தெரிவித்தார். 28 வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை எனப்படும் திருச்செங்கோடு முதல் பாராளுமன்ற உறுப்பினர், 1,000 பள்ளிகளை திறந்த கல்வியாளர், 36 முறை தேர்தலைச் சந்தித்தவர், ஜமீன்தார் என்றாலும், தனது சொத்துகளை மக்களுக்காக செலவிட்டவர…

    • 3 replies
    • 829 views
  4. விருதுநகர்: தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. அரசியல் கட்சிகளுக்கு மாற்று அரசியலின் நுழைவு வாயிலாக ம.தி.மு.க. திகழும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க.வின் மாநில மாநாடு செப்டம்பர் 15 ஆம் தேதி விருதுநகரில் நடக்கிறது. மாநாட்டுக்காக, விருதுநகரில் இருந்து சாத்தூர் செல்லும் ரோட்டில் சூலக்கரை அருகே 25 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. விருதுநகர் மாநாடு மாநாட்டு பந்தலுக்கான பந்தக்கால் நடும்விழா இன்று ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தலைமையில் நடந்தது. அப்போது, நிருபர்களிடம் பேசிய வைகோ, ‘‘தமிழகத்தில் முல்லை பெரியாறு அணை பிரச்னை உள்பட தமிழக மக்களின் நலனுக்காக ம.தி.மு.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. விருதுநகரில் நடக்…

    • 1 reply
    • 436 views
  5. சென்னையில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார்: தினகரனை இன்று விசாரிக்கின்றனர் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் சென்னை வந்தடைந்தனர். டி.டி.வி தினகரனிடம் இன்று அவர்கள் விசாரணை நடத்த இருக்கிறார்கள். இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக டி.டி.வி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக, டெல்லி போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து, டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, சுகேஷ் சந்தர் என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக தினகரனிடம் இருந்து பணம் வாங்கியது தெரிய வந்தது. இது தொடர்பான எப்ஐஆர் நகலை…

  6. சென்னை: தனது தொகுதியான ஸ்ரீரங்கத்தில் ரூ. 100 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய சட்டப் பள்ளியை முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையிலிருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். மேலும் அதில் சேர்ந்துள்ள 7 மாணவ, மாணவியருக்கு அட்மிஷன் உத்தரவுகளையும் அவர் வழங்கினார். இதுதொடர்பாக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு... முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் பொறுப்பு வகிக்கும் ராஜேஷ் குமார் அக்ரவால் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்ட சட்ட உயர்கல்வி வழங்கப்படும் வக…

  7. குளித்தலை... கோட்டை... குடும்பம்! - கருணாநிதி 60 ப.திருமாவேலன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி ‘Very good speech’ - கருணாநிதி பேசிவிட்டு உட்கார்ந்ததும், அவர் கையில் தரப்பட்ட காகிதத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது. அந்தத் துண்டுச் சீட்டு இப்போது கிடைத்து, அதைக் கருணாநிதியின் கையில் கொடுத்தால் ஒருவேளை அவர் பேசும் சக்தியைப் பெற்று விடலாம். ஏனென்றால், முதன்முறையாக அவர் சட்டமன்றத்துக்குள் சென்று, முதன்முறையாகப் பேசிவிட்டு உட்கார்ந்ததும், முதன்முறையாகக் கிடைத்த பாராட்டு வாசகம் அது. இப்படி எழுதி அனுப்பியவர் அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் யு.கிருஷ்ணாராவ். எழுதி அனுப்பிய நாள் 4.5.1957. நாள் ஆகஆகத்தான் உலோகம், வைரம் ஆகிறது. தந்தைக்கு வைர விழா எடுக்கிறார் தனயன். அதை …

  8. என் மகன் உயிரோடு இருந்திருந்தால், விடுதலைப்புலி பிரபாகரனை அவனுக்கு ரோல்மாடலாகக் காட்டியிருப்பேன்’னு சொல்லியிருக்கீங்க. பிரபாகரன் மீதான விமர்சனங்களை தாண்டியும் அவரை அவ்வளவு பிடிக்குமா?'' பிரபாகரன் மேல் எனக்கு எந்த விமர்சனமும் இல்லைனு சொல்லமாட்டேன். அதே நேரம், விமர்சனம் இல்லாமல் யாருமே இருக்க முடியாது. கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் செய்த காந்திமீதுகூட விமர்சனங்களை அடுக்கின ஆளுங்கதான் நாம். ஆனா, விமர்சனங்களையும் தாண்டி கருத்து வேறுபாடுகளையும் கடந்து, யார் மக்களுக்கு உண்மையா இருந்திருக்காங்களோ, அவங்கதான் தலைவர்கள். தன் போராட்டத்துக்கும் தன்னை நம்பிய மக்களுக்கும், உண்மையாவும் நேர்மையாவும் பிரபாகரன் நடந்துக்கிட்டார்னு நான் நம்புறேன். போரில் தன் மகனைப் பலி கொடுத்ததில் தொட…

  9. in அ.தி.மு.க, இதர கட்சிகள், இந்திய தரகு முதலாளிகள், ஈழம், ஊழல் - முறைகேடுகள் by வினவு, October 25, 2013 மன்னார்குடி மாபியாவின் காசில் தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையையே உருவாக்க முடியும் என்றால், மணல் மாபியாவின் பணத்தில் சீமானால் இனவுணர்வைக் கூட ஊட்ட முடியாதா என்ன? “வீழ்ந்துவிடாத வீரம்; மண்டியிடாத மானம்” என்று எதுகை மோனையுடன் பஞ்ச் டயலாக் பேசி முஷ்டியை முறுக்குகிறார் சீமான். கருணாநிதிக்கு எதிராக காது ஜவ்வு கிழிய கத்தும் சீமான், ஜெயலலிதா பெயரைச் சொன்னதும், மிஸ்ஸுக்குப் பயப்படும் பள்ளிக்கூட சிறுவன் மாதிரி பம்முகிறார். ஜெயலலிதா மட்டுமல்ல… இந்தப் பட்டியலில் பலர் உண்டு. சமீபத்திய உதாரணம், தன் திருமணத்தின்போது மனைவி சகிதமாக சசிகலாவின் கணவர் நடராஜன் காலில் விழுந்தா…

  10. மாரிதாஸ் கைது: சீமான் எதிர்ப்பு ஏன்?- சுபவீ விளக்கம்! மின்னம்பலம்2021-12-11 டிசம்பர் 8 ஆம் தேதி, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் வீரமரணம் அடைந்தனர். இதுகுறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட யு ட்யூபர் மாரிதாஸ் டிசம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் தமிழக பாட நூல் அறிவுரைக் குழு உறுப்பினரும், திராவிட தமிழர் பேரவை தலைவருமான பேராசிரியர் சுபவீரபாண்டியன் இவ்விவகாரம் தொடர்பாக இன்று (டிசம்பர் 11) ஒரு விளக்கம் அளித்துள்ளார். “இந்திய முப்படைகளின் தளபத…

  11. செப். 20 வரை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உயர் நீதிமன்றம் தடை! செப்டம்பர் 20-ம் தேதி வரை பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததைத் தொடர்ந்து 19 எம்.எல்.ஏ-க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்துவருகின்றனர். எனவே, சபாநாயகரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கு எடப்பாடி அணி முயற்சி செய்துவருகிறது. எனவே, சபாநாயகர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் வழக்கு தொடர்ந்தனர். அதுதொடர்பான வழக்கு…

  12. பேரறிவாளனின்... விடுதலை குறித்த வழக்கு, ஒத்திவைப்பு! பேரறிவாளனின் விடுதலை குறித்த வழக்கு ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. இதன்போது நீதிபதிகள் குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ என்ன அதிகாரம் இருந்தாலும், அரசியல் சாசனத்தை மீறி யாரும் செயல்பட முடியாது எனத் தெரித்துள்ளனர். அதேநேரம் குடியரசு தலைவர் ஆளுநருக்கு எங்களால் உத்தரவிட முடியாது எனவும், ஆனால் இந்த வழக்கில் அரசியல் சாசன அடிப்படையில் தீர்ப்பை வழங்க முடியும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். https:…

  13. சென்னை: சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் 2 நபர்கள் நடமாடுவதாக மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 1ஆம் தேதி காலை சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சுவாதி என்ற ஆந்திர இளம்பெண் பலியானதோடு, 14 பேர் படுகாயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து மறுநாள் (2ஆம் தேதி) ஆவடி ரயில் நிலையத்திற்கும், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவன்யூ வணிக வளாகம் உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (6ஆம் தேதி) சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் 2 நபர்கள் நடமாடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்ட்ரல் ரயில் நிலைய உதவி மையத்துக்கு ஒரு தொலை…

  14. தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று மு.க. ஸ்டாலின் ராஜினாமா...? சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு பொறுப்பேற்று அதற்குக் காரணமானவர்கள் விலக வேண்டும் என்று மு.க.அழகிரி கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தான் விலக முன்வருவதாகவும், அவர் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தபோது தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் 35ல் திமுக போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலவில்லை. இதனால், இத்தோல்விக்கு முழுப் பொறுப்ப…

  15. தேர்தல் செலவு விவகாரம் தினகரன் பதவிக்கு சிக்கல் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி, 20 ரூபாய், 'டோக்கன்' வழங்கியதாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதால், தினகரன் எம்.எல்.ஏ., பதவிக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன், தேர்தல் பிரசாரத்தின் போது,பணத்தை வாரி இறைத்தார். தகுதி நீக்கம் அவர் பிரசாரத்திற்கு, எவ்வளவு பேர் வந்தனர்; அவர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விபரங்களை, தேர்தல் பார்வையாளர்கள், ஆதாரத்துடன் சேகரித்துள்ளனர். அவற்…

  16. கோயில் திருவிழாவில் நடந்த கச்சேரியில் பாடிக் கொண்டிருந்த போது மைக் ஷாக் அடித்து பாடகர் பலியானார். ஆலந்தூரை அடுத்த மடுவின் கரை பெரிய பாளையத்தம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடித் திருவிழா தொடங்கியது. அன்றைய தினம் இரவு கோயில் வளாகத்தில் ராம் ரிதம்ஸ் குழுவினரின் இன்னிசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கச்சேரிக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி தொடங்கியது. கச்சேரிக்கு முன்னதாக மழை பெய்திருந்ததால் மேடையும் மின்சார ஒயர்களும் ஈரமாக இருந்துள்ளன. அத்துடன் மின்சாரமும் வந்து போய்க் கொண்டு இருந்துள்ளது. இந்நிலையில் கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ரகுகுமார் திடீரென்று அலறியவாறு மேடையில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்…

  17. ஈரோடு மாவட்டம் சத்தி வட்டம்மல்லியம்பட்டி கிராமம்

    • 0 replies
    • 770 views
  18. இனி அதிக இடங்களில் போட்டி..ஸ்ராலினின் தேசிய அரசியல் நகர்வு.. சென்னை: 2024 நாடாளு்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக இடங்களில் போட்டியிடும் திட்டத்தில் திமுக இருப்பதாக திமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் வென்ற குஷியில் இருக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணி 2024 லோக்சபா தேர்தலுக்காக தயாராக தொடங்கி உள்ளது. இந்த வெற்றி தொடர் வெற்றிகளை சந்தித்து வரும் திமுகவிற்கு மிகப்பெரிய உந்துதலாக அமைந்து உள்ளது. இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் கடந்த முறையை விட அதிக இடங்களில் போட்டியிடலாம் என்ற ஆலோசனையில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பின் பல்வேறு திட்டங்களை திமுக வகுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுக …

  19. பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட விசாரணை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்ச…

  20. இந்தியாவில் முதல்முறையாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திட்ட கருத்துரு September 30, 2018 1 Min Read இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சென்னை மாநகராட்சி அனுப்பிய 425 கோடி ரூபா பெறுமதியான திட்ட கருத்துருவுக்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம், டெல்லியில் மாணவி ஒருவர் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்திருந்ததனையடுத்து பல சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. சிறுவர் குற்றவியல் சட்டத்தில், 16 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் கொடூர குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களை வயது வந்தவர்களாக கருதலாம் எனவும் திருத்தம் மேற்கொ…

  21. தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு.. December 24, 2018 தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுல்தான்பேட்டை, பல்லடத்தில் இன்று 8-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கின்றது தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 17-ம் திகதி முதல் கோவை, திருப்பூர், திண்டுக்கல் விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் தூக்கு போட்டு போராட்டம், ஒப்பாரி போராட்டம், கருப்பு துணி கட்டி போராட்டம் என்று தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி…

  22. Published By: VISHNU 02 APR, 2024 | 08:19 PM ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். நாளை காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இவ் மூவரும் வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்த குறித்த அனைவரும் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர். இதில் சாந்தன் நோய்வாய்ப்பட்ட நிலையில், கடந்த ம…

  23. பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே இன்று (வெள்ளிக்கிழமை) திருநங்கைகள், பெண்கள், ஆண்கள் ஒன்று சேர்ந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர். ''பெண்ணின் ஒழுக்கம் மட்டும் பேசாதே - ஆணுக்கும் ஒழுக்கம் உண்டு மறவாதே'' உட்பட பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியுள்ளனர். …

  24. மெல்லிசை மன்னர் என தமிழ்ச் சமூகத்தால் அன்புடன் அழைக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர் எம். எஸ் விஸ்வநாதன்( வயது 87) இன்று அதிகாலை 4.15 மணிக்கு மரணமடைந்தார். மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற இயற்பெயர் கொண்ட எம். எஸ் விஸ்வநாதன் பாலக்காட்டில் உள்ள எலப்புள்ளி கிராமத்தில் மனயங்கத் சுப்பிரமணியன் - நாராயணி குட்டி தம்பதியினருக்கு 1928இல் பிறந்தார். நான்கு வயதில் தந்தையை இழந்து வறுமையில் வாடிய விஸ்வநாதன் மிக இளம் வயதிலேயே நாடகக் குழுவில் சேர்ந்தார். நடிக்கவும், பாட்டுப் பாடவுமே அவரது விருப்பமாக இருந்தது. 13 வயதில் திருவனந்தபுரத்தில் தனது முதல் மேடைக் கச்சேரியை நடத்திய அவர், 1950களில் எஸ். எம் சுப்பையா நாயுடு மற்றும் சி.ஆர் சுப்பாராமன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். 1952இல…

    • 22 replies
    • 3.4k views
  25. ராஜபக்சேவை பற்றி வைகோவிடம் பிரதமர் மோடி. July 22, 20152:37 pm இன்று ஜூலை 22 ஆம் நாள், பகல் 12.30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறையில் பிரதமரைச் சந்திப்பதற்கு வைகோவுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 11.45 க்கெல்லாம் வைகோ அங்கே சென்று விட்டார். பிரதமர் நரேந்திர மோடி 12 மணிக்கே வைகோவை அழைத்தார். உள்ளே நுழைந்தவுடன், ‘நரேந்திர மோடி வைகோவைக் கட்டித் தழுவிக்கொண்டு, நீங்கள் என்னைச் சந்திக்க வந்தததில் மிக்க மகிழ்ச்சி’ என்றார். ‘நான் தினமும் உங்களை விமர்சித்து வருகிறேன். ஆனாலும் நீங்கள் என் நண்பர். சந்திக்க நேரம் கேட்டவுடனே உடனே வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி’ என்றார் வைகோ ‘நீங்கள் உணர்ச்சிடமையமானவர். அதனால்தான் ஈழப்பிரச்சினையை அப்படி அணுகுகிறீர்கள்’ எ…

    • 0 replies
    • 348 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.