தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
டெல்லியில் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டார். அப்போது, தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திட்டக்குழு துணைத் தலைவர் அலுவாலியாவிடம் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்புக்குப் பிறகு நிருபர்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:- 2013-14 நிதியாண்டில் தமிழகத்திற்கு ரூ.37 ஆயிரத்து 128 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 37 ஆயிரம் கோடி திட்ட இலக்கை கடந்து தமிழகம் சாதனை படைக்கும். பா.ஜனதா கட்சியின் பொறுப்புகளில் இருந்து அத்வானி விலகியது உட்கட்சி விவகாரம். அதுபற்றி கூற முடியாது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடும். பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதே எங…
-
- 0 replies
- 435 views
-
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேலைகளில் பிஸியாகியுள்ளன. அதிமுக, திமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளும் தங்களது கூட்டணியை பிரிந்து தனித்து நிற்கின்றன. எந்த எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று உறுதியாகவில்லை என்றாலும், சில கட்சிகளில் நடவடிக்கைகளைப் பார்த்தால் திமுக, தேமுதிக-வுடன் கூட்டணி அமைப்பதற்காக வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரிந்த திமுக, இனி காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டது. அதேபோல தேமுதிக-அதிமுக கூட்டணி பிரிந்து விட்டதாலும், இவர்களும் இனி கூட்டண் அமைக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் தேமுதிக-வுடன் கூட்டணி அமைத்தால் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம் என்று கருதும்…
-
- 1 reply
- 629 views
-
-
பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைக்குமா? என்பதற்கு கனிமொழி எம்.பி. பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கனிமொழி எம்.பி. இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கலை இலக்கிய பகுத்தறிவு சார்பில் அமைப்பாளர் பூக்கடை ராமச்சந்திரன் தலைமையில் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு முடிந்ததும் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி: பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைக்குமா? பதில்: தலைவர்கள் தான் பேசி முடிவு செய்ய வேண்டும். கேள்வி: மதுரை மாவட்டத்தில் 6 தி.மு.க. நிர்வாகிகள் நீக்கப்பட்டதற்க…
-
- 0 replies
- 413 views
-
-
வரும் 2014 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு தமிழர் பிரதிநிதியாக மக்களால் தேர்வு செய்து அனுப்பப்பட உள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரை இரு பெரும் திராவிடக் கட்சிகள் தான் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் இடம் பிடிக்கின்றன. இதற்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாக வேண்டும் என்று சிலர் எண்ணி தேசியக் கட்சியான பாஜக வுடன் மதிமுக பாமக போன்ற கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளன. பாஜக காங்கிரஸ் ஆகிய இவ்விரண்டு கட்சிகளும் கொள்கை அளவிலும், ஊழல் அளவிலும், தமிழின விரோதப் போக்கின் அளவிலும் ஒரே நிலையில் இயங்கும் கட்சிகளாகும். இக்கட்சிகளோடு கூட்டணி வைத்து தமிழர்களிடம் வாக்கு சேர்ப்பது தமிழினத்திற…
-
- 0 replies
- 271 views
-
-
பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி சேர்வது என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி முடிவு செய்வார் என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார். பேட்டி காரைக்காலுக்கு வந்த மத்திய மந்திரி வி.நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– கடந்த 3 ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்தில் எந்தவொரு திட்டங்களும் நிறைவேற்றப்படாதது வருத்தத்திற்குரியது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் எதற்கெடுத்தாலும் மத்திய அரசையும் பாராளுமன்ற உறுப்பினரையும் குறை கூறி ஆட்சி நடத்த முதல்–அமைச்சர் நினைக்கிறார். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்பதை மக்கள் தெளிவாக தெரிந்து வைத்துள்ளனர். காங்கிரஸ் அரசில் அனை…
-
- 0 replies
- 290 views
-
-
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை வைகோ அமைத்துள்ளார். கூட்டம் பாராளுமன்ற தேர்தல் குறித்து முடிவு எடுக்க ம.தி.மு.க. ஆட்சி மன்ற குழு மற்றும் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று காலை நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கணேசமூர்த்தி எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தென் மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் தவிர மற்ற மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய வைகோ, மத்தியில் காங்கிரஸ் வரக்கூடாது என்பது தான் ம.தி.மு.க.வின் நிலைப்பாடு. இதை ஏற்கனவே நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன். எனவே அதனை …
-
- 1 reply
- 476 views
-
-
உள்ளரங்கத் திராவிட ஒழிப்பு மாநாட்டை நடாத்த முனைந்த பாரிசாலன் அவர்களும் ஏனையோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திராவிட எதிரப்புக் கருத்தியலைப் பேசிவருபவர் என்ற வகையிற் தமிழர்களால் அவதானிக்கபடும் ஒருவராக உள்ளவர் என்பது தமிழர்கள் அறிந்ததே. செய்தியை அனைவரும் அறிய வேண்டும் என்ற நோக்கில் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப்
-
- 15 replies
- 1.7k views
-
-
பாரிவேந்தரான பச்சமுத்துவும், ஆயிரம் கோடியும், அவர் கைதான கதையும் ஒரே பார்வையில்.... 26 ஆகஸ்ட் 2016 மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக கூறி 102 மாணவர்களிடம் ரூ72 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்து என்ற பாரிவேந்தரை சென்னை பொலீசார் திடீரென இன்று கைது செய்தனர். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரான மதன், சில மாதங்களுக்கு முன்பு மாயமானார். அவர் எழுதியதாக வெளியான கடிதத்தில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பெற்ற பணத்தை பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதாகவும், பணம் கொடுத்த மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்ட…
-
- 1 reply
- 857 views
-
-
பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் பாரபட்சம் காட்டும் நிதி நிறுவனங்கள்: சட்டம் என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு கிரெடிட் கார்டு, செக்புக், மாதத் தவணை மற்றும் கடன் வழங்குவதல் போன்ற அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கு நிதி நிறுவனங்கள் மறுத்து வருவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுதிறனாளி சக்திவேல் என்பவர், ”வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் நிறுவனம் ஒன்று …
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
நல்ல இனிமையான ஒரு மாலைப் பொழுதில் சுவையான தேநீர் குடித்து, நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு ஒரு திரைப்படத்தை பார்க்கிறோம்.. வீட்டு வரவேற்பறையில் நொறுக்குத் தீனிகளை கொறித்துக்கொண்டே தொலைக்காட்சியில் காதுக்கு இனிய இசை நிகழ்ச்சியையோ, மனதிற்கினிய தொடர்களையோ பார்த்து ரசிக்கிறோம். நன்றாக இருக்கிறது. ஒரு பார்வையாளராய் நமக்கு பிடித்ததை, நமது ரசனைக்கு உகந்தவற்றை ரசிக்கிறோம்.. அந்த பொழுது மிக இனிமையாகத்தான் கழிகிறது. ஆனால்.. இலங்கையில் மண்ணை நனைத்த மனித உரிமை மீறல் காட்சிகள் ஒவ்வொரு முறையும் புதிய தலைமுறையில் வெளிப்படுகிறது.. வெளிச்சத்திற்கு வரும் உண்மைகளில், ரத்தம் தோய்ந்த.. மனிதாபிமானம் அற்ற மிருகத்தனமான மனித உரிமை மீறல்களையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஒரு…
-
- 1 reply
- 676 views
-
-
பாறு கழுகுகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு முயற்சி செய்வது ஏன்? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 43 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ARULAGAM படக்குறிப்பு, கருங் கழுத்துப் பாறுக் கழுகு இறந்த விலங்குகளை உண்டு வாழும் பாறு கழுகுகளை பாதுகாக்க தமிழக அரசு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இது 16 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு கிடைத்திருக்கும் பரிசு என்கிறார்கள் பறவைகள் நல ஆர்வலர்கள். இந்தக் குழு என்ன செய்யப் போகிறது, இந்தப் பறவையைப் பாதுகாப்பதால் என்ன பயன் கிடைத்துவிடும்? பாறு கழுகுகளை முன்னர் பிணந்தின்னி கழுகுகள் என்று அழைத்து வந்தார்கள். அந்தப் பெயர் ஓர் எதிர்ம…
-
- 0 replies
- 463 views
- 1 follower
-
-
பதிவு செய்த நாள் 25 டிச 2014 08:16 சென்னை: இயக்குநர் சிகரம் பாலசந்தரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றபோது, அதை அனைத்து தொலைக்காட்சிகளும் நேரடியாக ஔிபரப்பின. பெசன்ட் நகர் மின் மயானத்தில் ஏராளமானவர்கள் கூடி நின்று மறைந்த திரைஉலக மேதைக்கு அஞ்சலி செலுத்தியதைக் காண முடிந்தது. பல இமாலய படைப்புக்களை படைத்த இயக்குநர் ஒருவருக்கு இறுதி சடங்கு நடந்த வேளையில் எங்கும் சோகம் நிலவியது. கண்ணீருடன் நடிகர், நடிகைகள் சடங்கில் கலந்து கொண்டனர். சிலர் கதறி அழுதனர். எங்கும் சோகம் கப்பிய நிலையில், இறுதி சடங்குகள் முடிந்து, நடிகர், நடிகைகள் அங்கிருந்து வௌியேறினர். அதுவரை சோகமாக இருந்த சூழ்நிலை திடீரென மாறியது. மின்மயானத்தில் திரண்டிருந்த கூட்டம், சோகத்தில் இருந்து விடுபட்டு, தங்களின் அபிமான நடி…
-
- 1 reply
- 588 views
-
-
Published By: RAJEEBAN 19 MAY, 2025 | 08:20 AM விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் அவன் இன்றும் உயிர் வாழ்கின்றான் என்றென்றும் உயிர்வாழ்வான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மே 18ம் திகதி கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் கட்சியின் தமிழனப் பேரெழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பிரபாகரன் முதல் அனைவரையும் கொன்றுவிட்டோம் என தெரிவித்தார்கள். இங்கு கூடியிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரபாகரன். இந்த குழந்தை பாலசந்திரன் 12 வயதில் கொல்லப்பட்டபோது, நான் அவரின் கதையை எழுதினேன். அவரை நேரடியாக ப…
-
- 1 reply
- 263 views
- 1 follower
-
-
சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரன் இலங்கை ராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டது, மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதனால் இலங்கை மீது சர்வதேச பொருளாதாரத் தடையைக் கொண்டு வர மத்திய அரசு அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், சிறுவன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது கொஞ்சம் கூட மனிதாபிமானமற்ற செயல். ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியில் நடந்தது தான் நினைவுக்கு வருகிறது. ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் இன்ப படுகொலை செய…
-
- 1 reply
- 824 views
-
-
பாலசிங்கம் கொலைமுயற்சி வழக்கு: விகேடி பாலன் மனு தள்ளுபடி! மின்னம்பலம் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான பாலசிங்கத்தை குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொல்ல முயன்றதாக வி.கே.டி.பாலன் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தை கொலை செய்யும் நோக்குடன், கடந்த 1985ஆம் ஆண்டு சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் எவரும் காயமடையவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கந்தசாமி, வி.கே.டி.பாலன், ரஞ்சன், மணவை தம்பி, பவானி, பிரேம்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது…
-
- 4 replies
- 1.6k views
-
-
திருப்பதி: இலங்கை அதிபர் பாலசிறிசேன வருகையின்போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க கதவின் பூட்டை திறக்க முடியாமல்போனதால் உடைக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவர் அறையின் கதவு தங்கத்தால் செய்யப்பட்டவை. இந்த கதவு தினமும் அதிகாலை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை செய்யப்படும். இந்நிலையில் இலங்கை அதிபர் பாலசிறிசேன, அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் என 42 பேருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்தார். அப்போது, மூலவர் அறையின் தங்க கதவு பூட்டை திறக்க முயன்றனர். ஆனால், அந்த பூட்டை திறக்க முடியவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வெல்டிங் செய்து பூட்டு அகற்றப்பட்டு சுப்ரபாத சேவை செய்யப்பட்டது.…
-
- 2 replies
- 474 views
-
-
பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் இந்தியா ஈழத்தமிழர்கள் மீது திணிக்கும் ஒன்று பட்ட இலங்கையை பேசும் அய்யோக்கிய 13வது சட்டதிருத்ததை எரித்தும் இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடக்கக்கூடாது என வலியுறுத்தியும் பின்வரும் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பாலச்சந்திரன் மாணவர் இயக்கதின் ஆர்ப்பாட்டம் கோரிக்கைகள்:- 1) தனித்தமிழீழ கோரிக்கையை சிதைக்க இந்தியா திணிக்கும் 13வது சட்டத்திருத்தத்தை புறக்கணிக்கின்றோம். 2)தனித்தமிழீழத்திற்கான ஒரே தீர்வான பொதுவாக்கெடுப்பை சர்வதேச சமூகமே உடனே நடத்து. 3) இனப்படுகொலையை மறைக்கும் பொருட்டு இந்தியா, இலங்கை மற்றும் உலக நாடுகளின் கூட்டுச்சதியால் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது. 4) காமன்வெல்…
-
- 0 replies
- 434 views
-
-
பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறித்து கவலைப்படும் உறுப்பினர்கள், அண்டை நாடான இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போதும் யாரும் குரல் கொடுக்காதது ஏன்? என்று அ.தி.மு.க உறுப்பினர் மைத்ரேயன் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களவை காலை கூடியதும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக வேறொருநாளில் விவாதம் நடத்தலாம் என அவைத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்தார். அதை ஏற்காத எதிர்க்கட்சிகள், தாக்குதல் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் வி…
-
- 0 replies
- 256 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், சுஜாதா பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டை வளப்படுத்தும் முக்கிய ஆறுகளுள் ஒன்றான பாலாறு, கழிவுகள் கலந்து முற்றிலும் காணாமல் போகும் அபாயத்தில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் என்ற இடத்தில் தொடங்கும் பாலாறு, அம்மாநிலத்தில் இருந்து 93 கி.மீ பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ கடந்து தமிழகத்தை வந்தடைகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 222 கி.மீ தூரம் ஓடும் பாலாற்றின் மொத்த நீளம் 348 கி.மீ. தமிழ்நாட்டில் பாலாறு, காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் அருகே முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. …
-
- 0 replies
- 452 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் ஓடும் நதியான பாலாறு முற்றாக வறண்டு போவதிலிருந்து காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை என்று மீண்டும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வறண்டு போன நிலையில் பாலாறு கர்நாடக மாநிலத்தில் இந்த நதி உற்பத்தியாகும் இடத்தை அண்டியப் பகுதிகளில் பெருமளவில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டுள்ளது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது என்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் பாலாறு நதி பாயும் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்துள்ளது என்றும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அந்த நதியை காப்பாற்ற முடியாத ஒரு சூழலும் ஏற்படும் என்றும் பிபிசி தமிழோசையிடம் கூறினார், வேலூர் மாவட்ட பாலாறு நதி பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் ஜமுனா தியாகராஜன். கர்நாடகா…
-
- 0 replies
- 439 views
-
-
பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் ஆந்திரா; தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,FACEBOOK / YSJAGAN படக்குறிப்பு, ஜெகன் மோகன் ரெட்டி கட்டுரை தகவல் எழுதியவர், சுஜாதா பதவி, பிபிசி தமிழுக்காக 27 பிப்ரவரி 2024, 06:52 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு ரூ. 215 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருப்பதற்கு தமிழ்நாட்டு விவசாயிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் சென…
-
- 0 replies
- 520 views
- 1 follower
-
-
பரதேசி படம் மிக அற்புதம் நான் அந்த படத்தை சிலாகித்து எழுதும் இரண்டாவது பதிவு இது . ஒட்டுபொறுக்கி யின் பாட்டி திரையில் வரும் வரை , ஏதோ மிதமிஞ்சிய கற்பனை என்ற எண்ண ஓட்டமே என் மனதில் இருந்தது , அந்த கிழவிக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா அந்த கிழவியை திரைக்கு தேர்ந்து எடுத்த இயக்குனர் என்று அவர்களின் பணி மிக அற்புதம். அந்த கிழவி , திரையில் வந்த மறு நிமிடம் படத்தோடு அனைவரும் ஒன்றி விட்டார்கள் . நான் பாலாவை , ஒரு மன நலம் பாதித்த இயக்குனர் என்றே அவரது அனைத்து முந்தைய படங்களை பார்த்த பின்பு ஒரு பிம்பத்தை மனதில் வைத்து இருந்தேன் .(இந்த மனுஷனுக்கு சுத்தமே பிடிக்காது போல , எல்லா பயலையும் அழுக்காவே காட்டுறான் என்று ) அது இல்லை !, பாலா அனைவரது மனத்தையும் பாதிக்கும் திரை பதிப்ப…
-
- 0 replies
- 451 views
-
-
30 AUG, 2024 | 02:00 PM திருச்சி: திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஒப்பந்த பணியாளரை கண்டித்தும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்திய என்ஐடி நிர்வாகத்தை கண்டித்தும் விடுதி வார்டனை சஸ்பெண்ட் செய்யக் கோரியும் திருச்சி என்ஐடி வளாகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவிலிருந்து மாணவ - மாணவியர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு நேரில் சென்ற காவல்துறை கண்காணிப்பாளர் மாணவர்கள் சமாதானப்படுத்தி போராட்டத்தை வாபஸ் பெறவைத்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த துவாக்குடியில் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) அமைந்துள்ளது. மத்திய மனிதவள மேம…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல் தாம் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் செயல்பாடு காணொளியொன்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தாம் வகித்து வந்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் கே.டி. ராகவன். தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திக்கப்போதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள இடுகைகளில்,, "தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யார் என்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடங்களாக எந்த ஒரு பிரதிபலனுமின்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைதளங்களில…
-
- 161 replies
- 9.7k views
- 1 follower
-
-
பாலியல் கொடூரங்கள்: காரணிகளை, பின்னணிகளை அலச வேண்டாமா? Published : 15 Mar 2019 09:39 IST Updated : 15 Mar 2019 09:39 IST ஓவியா இதயத்தை அறுக்கும் அனாதரவான அழுகை கடந்த சில தினங்களாக தமிழகத்தையே உறையச் செய்திருக்கிறது. “உன்னை நம்பித்தானே வந்தேன். ஏண்டா இப்பிடி பண்ணிட்ட?” என்ற இளம்பெண்ணின் பரிதவித்த அழுகுரல் நம்மைக் கையறு நிலையில் நிறுத்தியிருக்கிறது. பொதுவாக நாம் கேள்விப்படும் தனிநபர் பாலியல் வன்முறைகளிலிருந்து இந்தப் பிரச்சினை வேறுபடும் புள்ளி மிக முக்கியமானது. இது ஒரு தனிநபர் குற்றச் செயலல்ல. குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இளைஞர்களுக்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாமல் நீண்டுசெல்லும் அதிகார மையங்களின் வலைப்பின்னலே நம்மை அச்சுறுதலுக்…
-
- 0 replies
- 494 views
- 1 follower
-