Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழக முதல்வர்கள் இலங்கைக்கு செல்லாதது ஏன்? கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் கருணாநிதியும் ஜெயலலிதாவுமே ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையில் நீடித்துவரும் தீஸ்தா நதி நீர் பிரச்சனை தொடர்பாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பேனர்ஜி இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு சுமுகமாக இருந்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை என்பதால், மாநில முதலமைச்சரான மமதா ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திட முடியாது. ஆனால், ஏதாவது ஒரு மாநிலத்திற்கு அண்டை நாடு தொடர்பாக பிரச்சனை இருக்கும்போது பயணம் மேற்கொண்டால், அந்தப் பணயம் பிரச்சனையை தெளிவாகப் புரிந்த…

  2. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பால்குடம் எடுத்தல், மண் சோறு சாப்பிடுதல், அலகு குத்தி தேர் இழுத்தல், அக்னி சட்டி ஏந்துதல் என பலவிதமான வேண்டுதல்களை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில் தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொண்டு வேண்டுதலில் ஈடுபடப்போவதாக பிரபல கராத்தே வீரர் ஹூசைனி அறிவித்திருந்தார். அதன்படி சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது இல்லத்தில் வேன்டுதலை தொடங்கினார். இதற்காக எட்டு அடி உயரம், ஆறு…

  3. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய படை - மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவு! கேரளா மனு தள்ளுபடி! டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படையை நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அணையில் 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு விளக்கம் கோரிய கேரளாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று முல்லை பெரியார் அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. ஆனால் அப்படி உயர்த்த முடியாது என கேரளா அவசர சட்டம் நிறைவேற்றியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள தமி…

  4. திருப்பதி: இலங்கை அதிபர் பாலசிறிசேன வருகையின்போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க கதவின் பூட்டை திறக்க முடியாமல்போனதால் உடைக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவர் அறையின் கதவு தங்கத்தால் செய்யப்பட்டவை. இந்த கதவு தினமும் அதிகாலை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை செய்யப்படும். இந்நிலையில் இலங்கை அதிபர் பாலசிறிசேன, அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் என 42 பேருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்தார். அப்போது, மூலவர் அறையின் தங்க கதவு பூட்டை திறக்க முயன்றனர். ஆனால், அந்த பூட்டை திறக்க முடியவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வெல்டிங் செய்து பூட்டு அகற்றப்பட்டு சுப்ரபாத சேவை செய்யப்பட்டது.…

  5. ஸ்ரீரங்கம்: ஜெயலலிதாவை பின்னுக்கு தள்ளி வளர்மதி சாதனை! திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் வளர்மதி சுமார் 96,516 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான ஜெயலலிதாவை விட அதிக வாக்குகள் வாங்கி வளர்மதி சாதனை படைத்துள்ளார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் இளைஞணி அமைப்பாளர் ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வளர்மதி, பா.ஜ.க சார்பில் இன்ஜினீயர் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 25 சுயேச்சைகளுடன், களத்தில் மொத்தம் 29 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதிக்கு கடந்த 13ஆம் தேதி…

  6. ராமநாதபுரம்: நாம் தமிழர் கட்சி இப்போதும் தனது தலைமையில்தான் செயல்பட்டு வருவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் சமீபத்தில் பிளவு ஏற்பட்டது. அந்த அமைப்பின் முன்னணி தலைவர்கள் சிலர், சீமானை நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தனர். இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கு ராமநாதபுர்ம மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக சீமான் இன்று ராமநாதபுரம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நாம் தமிழர் கட்சி இப்போதும் என் தலைமையில் தான் செயல்பட்டு வருகிறது கட…

  7. மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இன்று மாலை 4.45 மணிக்கு, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‘டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அளித்துள்ள தீர்ப்பு, இந்திய ஜனநாயகத்தின் மதிப்பை உலக அளவில் உயர்த்தி இருக்கின்றது. சாதாரண மனிதனும் அதிகார லகான்களைக் கையில் ஏந்த முடியும் என்பது நிரூபணம் ஆகி இருக்கின்றது. உங்கள் கட்சியின் சின்னமான துடைப்பம் பாரதிய ஜனதா கட்சியை அதிகாரத் தாழ்வாரத்தில் நடமாட விடாமல் ஒதுக்கி ஓரம் கட்டி விட்டது. இந்திய ஜனநாயகத்தின் மாண்பை உயர்த்துகின்ற விதத்தில், உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றியை வரவேற்று ந…

  8. உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது 1977 க்குப் பின்னர் மீண்டும் இப்போது டெல்லி மாநில வாக்காளர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநில வாக்காளர்கள் பாசிச இந்துத்துவ வெறிபிடித்த நரேந்திர மோடி அரசுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில், பாரதிய ஜனதா கட்சியை விளக்குமாற்றால் விரட்டி, படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள். உலக உத்தமர் காந்தியாரை பிரார்த்தனைக் கூட்டத்தில் சுட்டுக் கொன்ற கொலைகாரப் பாவி நாதுராம் விநாயக் கோட்சே எனும் நச்சுப்பாம்பைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி, சிலையும் எழுப்ப முற்பட்ட இந்துத்துவ சக்திகளுக்கும், அதற்கு வெண்சாமரம் வீசிய நரேந்திர மோடி அரசுக்கும் வாக்காளர்கள் …

  9. சென்னையில் உள்ள கல்லுாரிகளிலேயே, அதிகமான முனைவர்களை உருவாக்கும் பெருமை, சென்னை மாநில கல்லுாரிக்கு உண்டு. அதில், ஆண்டுக்கு சராசரி 30 முனைவர்களை உருவாக்கும், இயற்பியல் துறைக்கு சென்றோம். ஆய்வு மாணவர்கள் சிலரைசந்தித்தோம். அவர்களின் சிறுசிறு ஆய்வு முடிவுகள் சில, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருக்க, தாவரங்கள் வேண்டும் என, சூழலியல் ஆய்வாளர்கள் கூவிக்கொண்டிருக்கும் வேளையில், சில தாவரங்களை அழித்தே ஆக வேண்டும் என, பேசி வரும், பேராசிரியர், ஆர்.சாமுவேல் செல்வராஜிடமும் பேசினோம். அவர் கூறியதாவது:இப்போது, உலகம் முழுவதும், வெப்பமயமாதலை பற்றி பேசி கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தாவரங்களை பற்றி பேச வேண்டியது, அவசியம்…

  10. உலகளவில் அழிந்துவரும் அரிய உயிரினங்களைப் பாதுகாக்கும் பொருட்டு சுவிட்சர்லாந்தில் 1948-ம் ஆண்டு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் 140 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர் களும் உறுப்பினர்களாகப் பணி புரிகின்றனர். சிவப்புப் பட்டியலில் 15 உயிரினங்கள் ஆண்டுதோறும் அழிந்துவரும் மற்றும் ஆபத்தில் உள்ள உயிரினங்களை சிவப்புப் பட்டியல் (Red List) என்ற பெயரில் ஐ.யு.சி.என். வெளியிட்டு வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த வரையாடு, சிங்கவால் குரங்கு, புனுகுப் பூனை, பிணந்தின்னிக் கழுகு, உள்ளான் பறவை, பாறை எலி, சிஸ்பாரா பல்லி, பாண்டிச்சேரி சுறா, அழுங்காமை, ஆனைமலை தவளை, தேரைத் தோல் தவளை, கிரெய்ட் ப…

  11. வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன மனைவி: 591 நாட்கள் கழித்து கண்டுபிடித்து கண்ணீர் விட்ட கணவன்! உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன மனைவியை 591 நாட்கள் கழித்து கணவர் கண்டுபிடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிகம்புரா கிராமத்தை சேர்ந்தவர் விஜேந்திர சிங். இவர் அங்குள்ள சுற்றுலா பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். அந்நிறுவனம் செய்த ஏற்பாட்டின் படி கடந்த யூன் 2013 ஆண்டு 30 சுற்றுலா பயணிகளையும், தனது மனைவி லீலாவையும் பேருந்தில் ஏற்றிக்கொண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத்துக்கு சுற்றுலா சென்றார். பத்ரிநாத்தில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீக தலமான சர் தாம் கோயிலுக்கு அவர்கள் சென்ற அவர்கள் அங்கு தங…

    • 9 replies
    • 761 views
  12. கொழும்பு துறைமுக நகர திட்டத்தை செயல்படுத்த சீனாவுக்கு இலங்கை அனுமதி: இந்தியா கடும் அதிருப்தி கொழும்பு துறைமுக நகரத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதி. (கோப்புப் படம்) கொழும்பு துறைமுக நகர திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் இந்திய வட்டாரங்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அதிபர் ராஜபக்ச ஆட்சியின்போது கொழும்பு துறைமுக நகர திட்டத்தை செயல் படுத்த இலங்கை, சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சீன அதிபர் ஜி ஜின்பிங் திட்டத்தை தொடங்கிவைத்தார். கடந்த ஜனவரியில் நடந்த அதிபர் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனா, அவர…

  13. கொழும்பு: ' சீனாவின் கூட்டுடன் துறைமுக நகர் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வோம்' என, இலங்கை அதிபர் தேர்தலில் கூறிய எதிர்க்கட்சி ஆளுங்கட்சியான பிறகு அத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. கொழும்பு துறைமுகம் அருகே 233 எக்டேர் பரப்பில், சீனாநிதியுதவியுடன் துறைமுக நகர் அமைய உள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான அனுமதியை பெறவில்லை என்று கூறி, ஆட்சிக்கு வந்தால், இத்திட்டத்தை ரத்து செய்வோம் என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே முழங்கினார். இந்நிலையில், எதிர்க்கட்சி பொது வேட்பாளரான மைத்ரிபாலா சிறிசேன, வெற்றி பெற்று, இலங்கை அதிபரான நிலையில், துறைமுக நகருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை உறுதி செய்த இலங்கை அமைச்சரவை செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனரத்ன, "இலங்கை அரசு அறி…

  14. சென்னை: இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சியில் பண்பாட்டு மீட்புக்காக வீரத் தமிழர் முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நாளை பழனியில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை: பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது என்பதை நடுகல் மரபினராகிய நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். இயற்கை வழிபாட்டை கொண்ட தமிழர் நாம் உலகப் பொதுமறையாம் திருக்குறளே எமது மறை; எங்கள் வழி வள்ளுவம்; எங்கள் வழிபாடு இயற்கை; எங்கள் தெய்வங்கள் முன்னோர்கள் என்ற நெறியின் படி.. பெரும்புகழ் இறையோன் முருகன், வாழ்வியல் நெறிகட்டி வள்ளுவப் பெருந்தகை, தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்…

  15. தமிழீழ அகதிகள் விரும்பினால் மட்டுமே இலங்கை அனுப்ப வேண்டும் : இளங்கோவன் தமிழகத்தில் உள்ள தமிழீழ அகதிகள் அவர்களாக விருப்பப்பட்டால் மட்டுமே இலங்கை அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழீழ அகதிகளை அரசு கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்பக் கூடாது. அவர்களாக விரும்பினால் இலங்கை செல்லலாம். இலங்கை அகதிகள் இந்தியாவிலேயே தங்கியிருக்க விரும்பினால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தினமணி டிஸ்கி: தமிழீழமா...? என்ன இந்தாள் 'போட்டு'கிட்டு உளருகிறாரா? மத்தியில் ஆளும்போது 'தமிழீழம்' என்ற சொல்லையே எ…

  16. கனடாவுக்கு அனுப்புவதாக கூறி நபரொருவர் தம்மிடம் 10 இலட்சம் இந்திய ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, இலங்கை அகதி ஒருவர் குடும்பத்துடன் சென்று பொலிஸாரிடம் முறையிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வவுனியாவை சேர்ந்த செல்வராஜா என்பவரே தனது மனைவி மகேஸ்வரி மற்றும் மகள் தர்சிகா மற்றும் தனது 2 மகன்களும் வந்து இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். இவர்கள் கடந்த 2007ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக சென்று, பவானிசாகர் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் சிலருடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு திங்கட்கிழமை(02) காலையில் சென்ற செல்வராஜா, முறைப்பாடொன்றை வழங்கியுள்ளார். 2009ஆம் ஆண்டில் ராஜ்கபூர் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் சென்…

  17. இலங்கை தமிழர்பால் தனக்குள்ள காழ்ப்புணர்ச்சி இன்னமும் தணியாத நிலையில் இங்கே உள்ள இலங்கை அகதிகளை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று கருணாநிதி விரும்புவதாக தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பும் விவகாரம் தொடர்பாக தமிழக அரசைக் குற்றம்சாட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை பல முரண்பாடுகளைக் கொண்டதாக உள்ளது என கூறியுள்ளார். இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பும் விவகாரம் தொடர்பாக, இந்தியத் தலைநகர் தில்லியில் நடந்த கூட்டத்தில் தமிழக அரசு கலந்து கொள்ளாதது சரியான நிலைப்பாடு என்பதை கருணாநிதி ஒப்புக்கொண்டிருப்பதாக…

  18. இந்தியாவில் விமானம் ஒன்றில் பயணம் செய்த பெண்ணின் பின் இருக்கையில் இருந்த நபர் ஒருவர் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இளம்பெண் ஒருவர் புவனேஷ்வருக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் பின் இருக்கையில் இருந்த முதியவர் ஒருவர் இருக்கையின் இடைவெளியில் கைவிட்டு அந்த பெண்ணை தொட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் செய்வதறியாது திகைத்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து விமானம் தரையிறங்கவுள்ள நேரத்தில் மீண்டும் அந்த நபரின் கைகள் அந்த பெண்னை தொடுவதற்கு தயாராக இருக்கையின் இடைவெளி அருகே இருந்துள்ளது. இதையடுத்து விமானம் தரையிறங்கியதும், எழுந்த அந்த பெண் அனைவர் முன்னிலையிலும் சத்தமாக நடந்தவற்றை கூறி சண்டையிடத் தொடங்கியுள்…

  19. தமிழக கேரள எல்லையில் மாவோயிஸ்டுக்கள் கண்டுபிடிப்பு (காணொளி) https://www.youtube.com/watch?v=FZwu6MFcuiM

  20. கரூர் பேருந்து நிலையத்தில் ஜன. 27-ம் தேதி பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் போதையில் மயங்கிகிடந்த மாணவர் பள்ளியில் இருந்து நேற்று நீக்கப்பட்டார். கரூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்துவந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவர் கடந்த ஜன.27-ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதையில் நண்பர்களுடன் கரூர் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்றார். நண்பர்கள் சாலையைக் கடந்து பேருந்து நிலையத்துக்குள் சென்றுவிட போதை உச்சத்தில் இருந்த மாணவர் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் மயங்கி கீழே விழுந்துவிட்டார். பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் மாணவர் போதையில் மயங்கி விழுந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் மாணவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்பமுயன்றனர். ஆனால்…

  21. தஞ்சை: 'கார்த்தி சிதம்பரமே... கட்சியை விட்டு வெளியேறு!' என தஞ்சாவூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலின் தோல்விக்கு பிறகு கட்சியை பலப்படுத்தும் வேலையை தொடங்கியுள்ளது. கட்சி உறுப்பினர்கள் அடையாள அட்டையில் காமராஜர் படத்தையும், மூப்பனார் படத்தையும் நீக்க வேண்டும் என கட்சி தலைமை சொன்னதாக செய்தி வெளியானது. இதனால் கோபமடைந்த ஜி.கே.வாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். இந்த சமயத்தில் "காமராஜரை தூக்கி ஓரமாக வையுங்கள், அவர் பெயரை சொல்லி கட்சியை இனிமேல் வளர்க்க முடியாது!" என கார்த்தி சிதம்பரம் கூறியதாக செய்திகள் வெளியானது. இதை அவர் மறுத்தாலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும் கடும் சலசலப்பை ஏற…

  22. பெரம்பலூர்: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய எண்ணெய் லாரி டிரைவர், கிளீனரை காப்பாற்றாமல், லாரியில் இருந்து கொட்டிய எண்ணெய்யை பொதுமக்கள் பிடித்து சென்ற சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சென்னையிலிருந்து தனியார் டேங்கர் லாரி ஒன்று பாமாயில் எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி பெரம்பலூர் மாவட்டம், துறைமங்களம் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து. நெடுஞ்சாலைத்துறை டிவைடரில் ஏறி, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டிரைவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கைகளிலும் காயம் ஏற்பட்டது. அதேபோல், கிளீனருக்கும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இருவரும் …

  23. கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் ஸ்ரீரங்கத்தில் இறக்கும் அதிமுக... அசந்து நிற்கும் திமுக! சென்னை: போடுங்கம்மா ஓட்டு... நம்ம சின்னத்தைப் பார்த்து... என்று கையில் பதாகை ஏந்தி வாக்கு கேட்டு போனால் ஒரு சுற்று சுற்றி முடித்த பின்னர் டீ கடையில் வடையும் டீயும் வாங்கித்தருவார்கள். வேட்பாளர் வசதியாக இருந்தால் டொரீனோ கலரோ, பவன்டோ கலரோ கிடைக்கும். அந்தக்காலமெல்லாம் மலையேறிப் போச்சு... தலைக்கு 300 ரூபா பிரியாணி பொட்டலம் கொடுத்தால் வர்றோம்... இல்லையா வேற ஆளைப் பார் என்கிற காலம் வந்துவிட்டது. ஆனாலும் அசராமல் ‘கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் பயன்படுத்தி' ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு ஆள் பிடித்து அசத்துகின்றனர் அதிமுகவினர். விட்டுருவோமா நாங்க பொதுத்தேர்தலுக்கே…

  24. திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் நடத்தப்படும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும், வாக்குசேகரிப்பிலும் பங்கேற்கும் நபர்களுக்கு பிரியாணி மற்றும் தலா 300 ரூபாய் பணமும் வழங்கப் படுவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அதிமுக சார்பில் இடைத் தேர்தல் பணிக்குழுவில் உள்ள 30 அமைச்சர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 50 பேரும் திருச்சியில் முகாமிட்டுள்ளனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 6 வார்டுகளைக் கவனிக்கும் அமைச்சர்கள் மட்டும் ஹோட்டல்களில் தங்கியபடியும் , மற்றவர்கள் அனைவரும் அந்தந்த பகுதியிலேயே தங்கியும் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள முக்கிய பகுதிகள் அல்லது அருகில் உள்ள பகுதிகளில் காலியாக உள்ள வீடுகள் அமை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.