தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
சென்னை: ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்று, காரைக்கால் அருகே நடுக்கடலில் சிக்கி தவித்த இலங்கை அகதிகள் 120 பேரை கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அகதிகள் முகாம்களில் இருந்த பெண்கள், குழந்தைகள் என 120 இலங்கை தமிழர்கள், படகு ஒன்றில் அனுமதி இன்றி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற படகு இன்று காலை வேளாங்கண்ணி - காரைக்கால் இடையே சென்றபோது, படகின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் படகு மூழ்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் கடலோர காவல்படையினருக்கு செல்பேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதனிடையே இது தொடர்பாக தகவல் அறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கடலில் மூழ்கும் நிலையில் இருக்கின்ற 120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுமாற…
-
- 0 replies
- 658 views
-
-
2ஜி ஒதுக்கீட்டில் பிரதமர் மன்மோகன் சிங்குடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகே முடிவுகள் எடுக்கப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும், 2ஜி ஒதுக்கீட்டில் பிரதமரை அப்போதைய தொலை தொடர்புதுறை அமைச்சராக இருந்த ஆ. ராசா தவறாக வழிநடத்தினார் என்றும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணை வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கையை ஏற்க முடியாது என திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, பிரதமரை ஒரு அமைச்சர் தவறாக வழிநடத்த …
-
- 1 reply
- 410 views
-
-
தேமுதிக தலைவர் விஜயகாந்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவன் திடீரென்று சந்தித்து பேசினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பின் போது மரக்காணம் கலவரம் குறித்து விஜயகாந்துடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். மரக்காணம் கலவரத்திற்கு பாமக தான் காரணம் என்று திருமாவளவன் ஏற்கனவே கூறியுள்ளார். கலவரப் பிரச்சனையில் பாமகவிற்கு எதிராக இதர கட்சிகளை அணி சேர்க்க திருமா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14328:vijayakanth-suddenly-grow-with&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 467 views
-
-
Sunday 26th May 2013 கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அணுஉலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் நடத்தி வருவது மட்டுமின்றி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் குழு இன்று இடிந்தகரைக்கு வந்துள்ளது. பையனூர் ராமச்சந்திரன் என்பவரின் தலைமையில் வந்துள்ள இந்த குழுவில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என 130பேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் நடந்துவரும் பந்தலில் இன்றுகாலை “கூடங்குளம் தொடர்வண்டி”…
-
- 0 replies
- 488 views
-
-
கவர்னர் மாளிகை முன்பு கூடுதல் பாதுகாப்பு சென்னை : கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகை முற்றுகையிடப்படும் எனக்கிடைத்த தகவலையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு: சென்னை-கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையான ‛ராஜ்பவன்' முன்பு போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையை முற்றுகையிட வாய்ப்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரபரப்பு: சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பதற்கான பணிகள் சென்னை பல்கலையில் நடைபெற்று வந்த நிலையில், கவர்னரின் ஒப்புதல் கிடைக்காததால் பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டதாக தகவல…
-
- 2 replies
- 358 views
-
-
தமிழகத்தில் விவசாய நிலத்தின் பரப்பு, கடந்த 10 ஆண்டுகளில், 17.66 லட்சம் எக்டர் குறைந்துள்ளது. ஆண்டுதோறும் விவசாய பரப்பு மற்றும் விளைபொருட்களின் உற்பத்தி குறைந்து வருவதை தடுக்க, தமிழக அரசு தனி பட்ஜெட் தயாரிக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பருவமழை பொய்த்து போவதால், பாசன திட்டங்களை நம்பியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கின்றன. மழைநீரை சேமிக்கும் குளம், குட்டைகளை தூர்வாரி புனரமைக்காததாலும்; நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீரை சேமிக்காததால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்துள்ளது. இதுமட்டுமின்றி விவசாய பணிகளுக்கான தொழிலாளர் தட்டுப்பாடு, விவசாயிகளுக்கு சென்றடையாத வேளாண் பல்கலை., தொழில்நுட்பங்கள், பெரும் சவாலாக உள்ளன. மழையின்மையால் ஏற்பட்ட வறட்சி, தொழில்நுட்ப பிரச்ன…
-
- 0 replies
- 2.5k views
-
-
கலக்கம்...! கண்ணீர் அஞ்சலி விளம்பரம்: அ.தி.மு.க.,வினர் தொகுதி மக்களின் கருத்துக்கு எதிராக, இடைப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்த அமைச்சர்களுக்கு எதிராக, கண்ணீர் அஞ்சலி விளம்பரங்கள் வெளியாவதால், அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர். வேலுார் மாவட்டம், வாணியம்பாடி தொகுதியில், நேற்று காலை, 9:00 மணியில் இருந்து வீடு வீடாகச் சென்று, அமைச்சர் நிலோபர் கபிலுக்கு எதிரான துண்டு பிரசுரத்தை, சிலர் கொடுத்து சென்றனர். அதில் கூறியிருப்பது: கண்ணீர் அஞ்சலி... திருமதி நிலோபர் கபில், தொகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி, வேலைக்காரியின் வேலைக்காரனுக்கு ஆதரவாக வாக்களித்ததால், தொகுதி மக்கள் சார்பாக, அர…
-
- 0 replies
- 514 views
-
-
சசிகலாவின் கைப்பொம்மை முதல்வரா?' உயிரை விடுவேன்' என்கிறார் கட்ஜு புதுடில்லி, : 'சிறைப் பறவை சசிகலாவின் கைப் பொம்மையாக உள்ள,இடைப்பாடி பழனி சாமியை, தமிழக முதல்வராக ஏற்க முடியாது; அதற்கு பதில், நான் உயிரை மாய்த்துக் கொள் வேன்' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், நீதிபதி மார்க் கண்டேய கட்ஜு வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:சிறைப்பறவை சசிகலா வின் கைப்பொம்மை, இடைப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக அமர்த்தப் பட்டுள்ளார். இதைப் பார்த்து, தமிழக மக்கள், எதுவும் செய்யாமல் மவுனம் சாதிக்கின்றனர். சோழர், பாண்டியர், சேரர் உள்ளிட்ட மாப…
-
- 0 replies
- 315 views
-
-
சசிகலா- பன்னீர்செல்வம் அணியினருக்கு கட்சிப் பெயர், சின்னம் ஒதுக்கீடு! ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு 'தொப்பி' சின்னத்தையும், பன்னீர்செல்வம் அணிக்கு 'இரட்டை மின்கம்பம்' சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக மூன்றாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தலைமையில் ஓர் அணியும் உருவானது. இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் சசிகலா அணியில் டி.டி.வி. தினகரனும், பன்னீர்செல்வம் அணியில் மதுச…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்! மின்னம்பலம் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்து வருகிற நிலையில், பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்கள், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் திறப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். அதன் படி, இன்று(ஜூன் 13) தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள பா…
-
- 1 reply
- 633 views
-
-
அமைச்சர்கள் எதிர்ப்பு, பொது மக்கள் வெறுப்பு, வழக்குகள் குவிப்பு என, பல முனை தாக்குதலால், அ.தி.மு.க.,வில் இருந்து, தினகரன் ஓட்டம் பிடித்தார். போட்டி, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கைவிட்டு, கட்சியில் இருந்தே ஒதுங்கி விட்டதாக அறிவித்தார். சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த பின், துணை பொதுச் செயலர் பதவியை துறக்கவும் முடிவு செய்துள்ளார். அவருக்கு கூஜா துாக்கிய, கூவத்துார் புகழ், எம்.எல்.ஏ.,க்கள், இப்போது பன்னீர் புகழ் பாடத் துவங்கி உள்ளனர். சசிகலா சிறைக்கு சென்றதும், அவரால், அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட தினகரன், கட்சியை தன் வசம் கொண்டு வந்தார். முதல்வராக ஆசைப்பட்ட அவர், பொது மக்கள் எதிர்ப்பை மீறி, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் …
-
- 1 reply
- 492 views
-
-
கனிமொழி முதல் விஜயபாஸ்கர் வரை... ஆள்பவர்களுக்கு வந்த சிக்கலும் ஆண்டவன் தரிசனமும்! நாட்டு மக்களின் வழக்குகளை தீர்த்துவைக்கவேண்டியவர்கள் அரசியல்வாதிகள். ஆனால் அவர்களே வழக்குகளுக்கு ஆளாகி கோவில் கோவிலாக ஏறி இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக. அரசியல்வாதிகள் தங்களின் பிரச்னைகளுக்கென பிரத்யேக கோவில்களில் வழிபாடு செய்வதுண்டு. மறைந்த ஜெயலலிதாவுக்கு ராசியாக கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவில், சைதாப்பேட்டை குறுங்காலீஸ்வரர் என பல கோவில்கள் சொல்லப்பட்டாலும் தலைமைச் செயலகத்தின் வெளியே உள்ள கோட்டை நாகாத்தம்மன் அவரது நம்பிக்கைக்குரிய கோவில். அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது அவரது வாகனம் சில நிமிடங்கள் கோவில் …
-
- 0 replies
- 527 views
-
-
' எந்த வகையில் நான் உங்களுக்கு எதிரி?' -சசிகலா சமாதானத்தை ஏற்றாரா மோடி? எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஒரேநேரத்தில் ஆதரவுக்கரம் நீட்டும் மத்திய அரசை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். " இரண்டு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் மோடியின் விருப்பமாக இருக்கிறது. இதில், பிரதமரின் கோபத்தைத் தணிக்கும் வகையில் தூதுவர் மூலமாக பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டு வருகின்றனர் சசிகலா குடும்பத்தினர்" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'வறட்சி நிவாரணம் உள்பட தமிழக மக்களின் நலன்கள் தொடர்பாக விவாதித்தேன்…
-
- 0 replies
- 415 views
-
-
வேலூரில் மது குடித்த 5 வயது பேரன், தாத்தா மரணம் - என்ன நடந்தது? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்த 5 வயது சிறுவன், மற்றும் அந்த மதுவை வாங்கி வந்த சிறுவனின் தாத்தா அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருவலம் அருகேயுள்ள திருப்பாக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தூரபாண்டியன் - விஜயா தம்பதிர். இவர்களுக்கு ரூத்தேஷ் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுவன் ரூத்தேஷின் தாத்தா சின்னசாமி (வயது 62) வீட்டில் மது அருந்தியுள்ளார். பிறகு பாட்டிலில் மீதமிருந்த …
-
- 0 replies
- 359 views
- 1 follower
-
-
யார் ஆண்டாலும் மோடி உள்பட, இந்தியா வல்லரசாக முடியாது: தொடர்! அதிக பணக்காரர்களும் மிக அதிக ஏழைகளும் வாழும் நாடாக இந்தியா மாறும். ராக்கெட் விட்டாலும் வல்லரசாகாது சுயமா ராக்கெட் விடாதவரை. எவனோ செய்த ராக்கெட்டை விடுவதில் என்ன பெருமை? cryogenic engine நம்மளால செய்ய முடியுமா? cryogenic technology -ம் காசு கொடுத்து வாங்கனும். சுயமா என்ன கண்டுபிடிச்சு இருக்கோம்? சொல்லுங்கள் நண்பர்களே! எப்படி இதே இந்தியர்கள் மேலை நாடுகளுக்கு வந்தால் பிராகாசிக்கிறார்கள்? அதுவும் இங்கு பிறக்கும் [இந்தியருக்கு பிறந்த] குழந்தைகள் நிறைய கண்டு பிடிப்பார்கள் வரும் காலங்களில். இளம் விஞ்ஞானிகளில் நிறைய நம்ம குழந்தைகள் இருக்கிறார்கள். நமது கலவி முறை மாறாத வரை இந்தியா இப்படித்தான் இருக்கும்--உருப்பட…
-
- 2 replies
- 1.1k views
-
-
வாழ்வின் விளிம்பு நிலையில் பூம்பூம் மாட்டுக்காரர்கள்.. அழிந்து வருகிறது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அடையாளம் நம்பிக்கை இன்மை என்பது தற்போதைய வாழ்க்கையில் ஒரு அம்சமாக மாறிவிட்டது. அத நேரத்தில் யாராவது நம்பிக்கை வார்த்தை சொல்லமாட்டார்களா? என்ற தவிப்பும் ஏக்கமும் இதயத்தின் ஓரத்தில் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் நாம் ஏங்கும் நம்பிக்கை வார்த்தையை மனிதனோ மாடோ சொன்னால் கூட திருப்தியடையும் மனநிலையில் தான் முந்தைய காலங்கள் இருந்தன. மனைவியோ அல்லது தான் சார்ந்த கட்சியின் தலைவர் / தலைவியோ எதைச் சொன்னாலும் மறுதலிக்காமல் தலையினை ஆட்டுபவர்களை பூம் பூம் மாடு எனக் கிண்டலாகச் சொல்வதுண்டு. கிண்டலாகச் சொல்லப்பட்டாலும் பூம்பூம் மாடு என்பது தமிழ்ச் சமூகத்தின் கலாச்சார அடையாளம் என்பதை மறுக…
-
- 9 replies
- 2.5k views
-
-
சிவாஜி சிலை அரசியல் உச்சகட்ட அரசியல் பரபரப்புகளுக்கு இடையே சிலை அரசியல் மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் இவ்வாரம் அரங்கேறியிருக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை மெரினா கடற்கரையிலிருந்து அகற்றப்பட்டதோடு அச்சிலையை நிறுவிய தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெயரும் அச்சிலை யில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இது ஒருபுறம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு சிவாஜி மணிமண்டப திற ப்பு விழாவும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியில் உள்ள கட்சி தொடங்கும் நல்ல திட்டங்கள் கூட அடுத்து வரும் ஆட்சியினால் அப்படியே கிடப்பில் போடப்பட்டு புதுதிட்டங்கள் தொடங்கப்படுவத…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடைக்கு அவசர சட்டம் - 7 தகவல்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FANATIC STUDIO VIA GETTY IMAGES இணைய வழி விளையாட்டுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர சட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திங்கட்கிழமை (செப்டம்பர் 26) நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் அவசர சட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த விளையாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமாக இந்தச் சட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான ஏழு தகவல்களை இங்கே …
-
- 2 replies
- 391 views
- 1 follower
-
-
அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையிலான கூட்டணி முறிந்துவிட்டதாக இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு, அ.தி.மு.க. அறிவித்துள்ளது. கூட்டணியாக இருந்த பாரதீய ஜனதா கட்சிக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 69 மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பலரும் பா.ஜ.கவுடனான கூட்டணி தேவையில்லை என்பதையே வலியுறுத்திவந்தனர். இதற்குப் பிறகு, பா.ஜ.கவுடனான கூட்டணியிலி…
-
- 0 replies
- 235 views
-
-
2019ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூரில் தொடங்கியது... பார்வையாளர்கள் ஆரவாரம் 2019- ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூர் மாவட்டத்தில் தொடங்கி உள்ளது. ஏராளமானோர் ஆரவாரம் செய்து ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அலங்கரிக்கப்பட்ட 500 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலிலிருந்து சீறிபாய்ந்து வந்த காளைகளை, காளையர்கள் அடக்க முயன்றனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு வெள்ளிகாசுகள், கட்டில், ச…
-
- 0 replies
- 460 views
-
-
31 JAN, 2024 | 10:50 AM இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் ஆபத்து முதலில் தெற்கிலிருந்தே வரும் என்பதை இந்திய மத்திய அரசாங்கம் உணரவேண்டும் என தமிழக நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார் இந்த நாள் சோகமயமான நாள். 76 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 30 ஆம் நாள்இ இந்தியாவே கண்ணீர் கடலில் மிதந்த நாள். தேசப் பிதா உத்தமர் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நாள். எங்கள் மாநிலத்திற்கு ஒரு ஆளுநர் வந்திருக்கிறார். எதையாவது உளறிக்கொண்டிருப்பதே அவருக்கு வழக்கம். அண்மையில் சொன்னார்இ …
-
- 2 replies
- 632 views
-
-
சென்னையில் ஒரே வாரத்தில் போலீஸ் என மிரட்டி 2 கோடி ரூபாய் பறிப்பு: அடுத்தடுத்த சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி Published : 16 Mar 2019 16:55 IST Updated : 16 Mar 2019 16:55 IST சித்தரிப்புப் படம் சென்னையில் கடந்த வாரம் போலீஸ் எனக்கூறி ஒருவரை வேனில் ஏற்றி கடத்திச் சென்று ரூ.98 லட்சத்தை பறித்துச் சென்ற கும்பலை தேடி வரும் நிலையில் நேற்று சைதாப்பேட்டையில் மீண்டும் தனியார் நிறுவன மேலாளரிடம் அதேபாணியில் ரூ.1 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வளசரவாக்கம், பிருந்தாவன் நகரில் வசிப்பவர் உதய குமார் (40). இவர் தண்டலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Kotec Auto) அக்கவுண்ட் மேனேஜராக பணியாற்றுகிறார். …
-
- 0 replies
- 538 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 11 ஏப்ரல் 2024 தென் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமாகி வருகிறது, ஹைதராபாத்-இல் அடுத்த சில வாரங்களில் பற்றாக்குறை ஏற்படுமா என்ற கேள்வி உள்ளது. இந்நிலையில் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பை பார்க்கும் போது, சென்னையிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெங்களூரூவுக்கு குடிநீர் வழங்கும் காவிரி ஆற்று நீரை பெற்று வரும் நீர் நிலைகளில் 39…
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
‘தமிழர்களால் டெல்லி மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோவது உண்மைதான்’ - கெஜ்ரிவால் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு புதுடெல்லி, நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூரு நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாக ஆதரவு தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெல்லியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரகாஷ்ராஜ் நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் அவர் ஒரு வாரம் பிரசாரம் செய்ய இருக்கிறார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் அவர் நிருப…
-
- 6 replies
- 1.9k views
-
-
https://www.jaffnamuslim.com/2024/11/blog-post_201.html இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியதை சுட்டிக்காட்டியே அவர் இந்த வலியுறுத்தலை மத்திய அரசாங்கத்திடம் விடுத்துள்ளார். இலங்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள் துப்பாக்கி…
-
-
- 58 replies
- 7.3k views
- 1 follower
-