Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம்- போட்டுத்தாக்கும் நிர்மலா பெரியசாமி விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், 93 வயது தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம் என்று அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் அமர்க்களப்படுத்தி வருகின்றனர். கூடவே பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி எடத்தெரு கீழப்புதூரில் திருச்சி ஏர்போர்ட் பகுதி கழகம் சார்பாக பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. ஏர்போர்ட் பகுதிகழக செயலாளர் வெல்லமண்டி சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசு த…

  2. விஜயகாந்த் உருவ பொம்மையை எரித்த அதிமுகவினர் மீது தீ பற்றிய பரபரப்பு வீடியோ! விழுப்புரம்: விழுப்புரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கண்டித்து அவரின் உருவ பொம்மையை அதிமுகவினர் எரிக்க முயன்ற போது அவர்களின் மீது தீ பற்றிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. vikadan.com

  3. விஜயகாந்த் கனவு மட்டுமல்ல, கட்சியும் கலையப் போகுது: திண்டுக்கல் லியோனியின் 'கட்சிக்கு ஒரு பாட்டு' பொதுக்கூட்டங்கள் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட திமுக பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ.லியோனியிடம், ‘களத்தில் நிற்கும் ஒவ்வொரு அணிக்கும் ஒரு சினிமா பாட் டைப் பாடி ‘நச்’சுன்னு நாலு வார்த்தை சொல்ல முடியுமா? என்று கேட்டோம்.. ‘அதுக்கென்ன சொல்றேன், எழுதிக்குங்க..’ என்று ஆரம்பித்துவிட்டார். அதிமுக ‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.. அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்.. உறவெல்லாம் முள்ளாகும்.. நினைவெல்லாம் கல்லாகும்..’ இந்தப் பாட்டுதான் இப்ப அதிமுகவுக்கு பொருத்தமான பாட்டு. போன தேர்தல்ல அதிம…

  4. விஜயகாந்த் செல்வாக்கு? - ஸ்பெஷல் சர்வே... ரிசல்ட்! விஜயகாந்த்... 15-வது சட்டமன்றத் தேர்தலில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர். கருணாநிதி vs ஜெயலலிதா என்கிற யுத்தத்தைவிட விஜயகாந்த்தின் ஆதரவு காந்தத்துக்குத்தான் மவுசு அதிகம். அறிவாலயமும் கமலாலயமும் தாயகமும் பாலன் இல்லமும் பி.ராமமூர்த்தி நினைவகமும் தே.மு.தி.க-வின் வரவுக்காகக் காத்துக் கிடக்கின்றன. ‘பழம் நழுவிக்கொண்டிருக்கிறது... பாலில் விழும்’ என கருணாநிதி சொல்ல... ‘தனித்துப் போட்டி’ என தனி ரூட்டில் பயணிக்கிறார் விஜயகாந்த். எந்தக் கூட்டணியிலும் சேராமல் தே.மு.தி.க தலைமையில் கூட்டணி என புதுப் பொங்கல் வைத்திருக்கிறார் விஜயகாந்த். தனித்துப் போட்டி என்ற அறிவிப்பு சட்டமன்றத் தேர்தலில் புதுத் திருப்பம். இந்த அதிரடி அறிவிப்ப…

  5. விஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்! " வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும், எங்கள் தலைமையில் இணையும் கட்சிகள் இணையலாம்" என்று விஜயகாந்த் அறிவித்ததையடுத்து சூடு பிடித்துள்ள தமிழக அரசியல் களம், பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் பரபரத்து கிடக்கிறது. பாஜக கூட்டணி அல்லது திமுக கூட்டணி அல்லது மக்கள் நலக் கூட்டணி என ஏதாவது ஒன்றில் தேமுதிக ஐக்கியமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், 'தனித்துக் களம் காணுவோம் ,எங்கள் தலைமையை ஏற்பவர்கள் வரலாம்' என்று விஜயகாந்த் முடிவாகக் கூறியது மற்ற கட்சிகள் மத்தியில் உண்மையிலேயே ஒருவித கலக்கத்தை உண்டாக்கிவிட்டது. இதனால் மிகவும் சோர்ந்துபோனது திமுக. பாஜக என்ன செ…

  6. தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு மூர்த்தி என்பவரின் மனைவி ஜெயந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தேர்தல் விதிகளை மீறி தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்றும் விஜயகாந்த் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன், வ…

  7. விஜயகாந்த் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார்! சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர் இப்ராஹிம் ராவுத்தர். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் ராவுத்தர் இருந்தார். கடைசியாக இவர், "புரியாத ஆனந்தம் புதிதாய் ஆரம்பம்" என்ற படத்தை தயாரித்தார். அண்மையில் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இப்ராஹிம் ராவுத்தர் அனுமதிக்கப்பட்டிருந்தார். கோமா நிலையில் இருந்த அவரை நண்பர் விஜயகாந்த் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். "நண்பா நீ எழுந்து வருவாய்" என்று உருக்கமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.…

  8. விஜயகாந்த் பேசுவது ஏன் புரியவில்லை தெரியுமா..? விளக்கிய பிரேமலதா! சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசுவது புரியவில்லை ஏன் தெரியுமா..? என்று தே.மு.தி.க.வின் மகளிர் அணிக் கூட்டத்தில் விளக்கினார் பிரேமலதா. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மகளிர் தினத்தை ஒட்டி, தே.மு.தி.க.வின் மகளிர் அணிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாலை 3 மணிக்கு தொடங்கவிருந்த கூட்டம், மாலை 5 மணி வரை தள்ளிப் போனது. அதுவரை, விஜயகாந்த் நடித்த படங்களின் பாடல்களுக்கு மேடையில் நடனக் கலைஞர்கள் ஆட்டம்போட்டனர். தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் இருந்து வந்திருந்த மகளிர் அணி உறுப்பினர்கள், நிகழ்ச்சி தொடங்கியவுடன் அனைத்துக் கட்சிகளையும் விளாசத் தொடங்கினர். ''அன்புமணிக்கு என்ன…

  9. சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, விஜயகாந்த்தோ, அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, விஜயகாந்த் ஜாமீனில் வெளியே வரமுடியாத படி பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம். இதையடுத்து, பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விஜயகாந்த் கடந்த 3ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்…

  10. விஜயகாந்த் மௌன பிரச்சாரம்! மின்னம்பலம் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேற்று (மார்ச்25) மாலை கும்மிடிப்பூண்டியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா சில நாட்களுக்கு முன் தலைமைக் கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “நான் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதால் அங்கே நிறைய பணிகள் இருப்பதால் தமிழகம் முழுதும் என்னால் பிரச்சாரம் செய்ய இயலாது. அதனால் துணைச் செயலாளர் சுதீஷ் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்வார். கேப்டன் விஜயகாந்த் இறுதிக்கட்டப் பிரச்சாரத்துக்காக வருவார்”என்று தெரிவித்திருந்தார். ஆனால் சுதீஷுக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டு அவரது பிரச்சாரப் பயணத்தை முடக்கியது. கொரோனா…

  11. விஜயகாந்த், கமல், சீமான்: மாற்று அரசியல் மாய்மாலங்கள்! தனியன் தமிழக அரசியலில் கமலோ, சீமானோ விஜயகாந்த் அளவுக்குக்கூடச் செல்வாக்கில்லாதவர்கள் என்பதையே இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் காண்பித்திருக்கின்றன. விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கிறார். அடுத்த ஓராண்டில் (2006) அவரது கட்சி போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 8.4% வாக்குகளைப் பெறுகிறது. அடுத்து அவர் 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 10.3%. இதற்கு மாறாக இந்தத் தேர்தலில் சீமான் கட்சி பெற்ற வாக்குகள் 3.87%. கமல்ஹாசன் கட்சி பெற்ற வாக்குகள் 3.78%. இதே தேர்தலில் “மற்ற” கட்சிகள் 4.94% வாங்கியிருக்கின்றன. NOTAவுக்கு 1.28% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. …

  12. விஜயகாந்த், திருமாவை கடுப்பேற்றிய வைகோ...! -விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை தொகுதிப் பங்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவதில் ரொம்பவே சோர்ந்துவிட்டார்கள் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள். வைகோவின் பிடிவாதத்தால் விடிய விடிய பேச்சுவார்த்தை நடந்ததால், கடுப்பில் இருக்கிறார்கள் தலைவர்கள். மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா இணைந்ததையடுத்து, எந்தப் பிரச்னையும் இல்லாமல் போட்டியிடும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், எந்தெந்த தொகுதிகள் என்பதை முடிவு செய்வதில், கடந்த இரண்டு நாட்களாக முட்டி மோதி வருகின்றனர் கூட்டணியின் ஆறு தலைவர்களும். கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் இன்று அதிகாலை 2 மணியைக் கடந்தும் தொகுதியை முடிவு செய்ய முடியாமல் தவித்துள்ளனர் கூட்டணிக் க…

  13. சென்னை: இதுவரை இல்லாத புதுமையாக தமிழக அரசியல் தலைவர் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து புதுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. மூத்த தலைவர் கருணாநிதிக்கோ அல்லது வேறு யாருக்குமே இதுவரை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பழக்கப்பட்டவரில்லை ராகுல் காந்தி. ஆனால் முதல் முறையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து பேக்ஸ் அனுப்பி புதுப் புதுக் கதைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் ராகுல் காந்தி.61வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார் விஜயகாந்த். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து பேக்ஸ் அனுப்பியிருந்தார் ராகுல் காந்தி.ராகுல் காந்தி இப்படி தமிழக தலைவர் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பது இதுதான் முதல் முறையாம். க…

    • 6 replies
    • 2.5k views
  14. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரிக்கு கடந்த சில நாட்களாக கட்சியில் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் மதுரை மாவட்ட தி.மு.க. அமைப்பு ஒட்டுமொத்தமாகக் கலைக்கப்பட்டது. புதிய பொறுப்புக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. நீக்கப்பட்டவர்கள் அழகிரி ஆதரவாளர்கள் என்பதும், புதிய பொறுப்புக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் மு.க. ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழ்நிலையில், மு.க.அழகிரி இன்று காலை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விஜயகாந்த் தற்போது எல்லா கட்சிகளுடனும் பேரம் பேசி வருகிறார். விஜயகாந்தை ஒரு அரசியல் தலைவராக நான் மதிக்கவில்லை. அவரிடம் அரச…

  15. விஜயபாஸ்கருக்கு அடுத்த நெருக்கடி! கல்குவாரியில் மத்திய பொதுப்பணித்துறை அதிரடி ஆய்வு! புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசலில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கல் குவாரியில் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் காலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தனர். விஜயபாஸ்கரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சரத்குமாரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை நடந்த அதே நேரத்தில் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டவர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையை நடத்தினர். ஏற்கெனவே புதுக்கோட்டை உள்ளிட்ட 30-க்கும…

  16. விஜயபாஸ்கரை வளைத்த வணங்காமுடிகள்! - ஐ.டி சோதனை பின்னணி 1 நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனில் உள்ள ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் வழக்கத்துக்கு மாறான சுறுசுறுப்புடன் வலம் வருகிறார்கள். இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராக இருக்கிறார். "ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப் போகும் முன் தேடுதல் பணியில் மிகக் கவனமாக இருப்பார்கள். விஜயபாஸ்கர் விவகாரத்தில் ஆதாரங்கள் துல்லியமாகக் கிடைப்பதற்குக் காரணமே வருமான வரித்துறையின் இரண்டு அதிகாரிகள்தான்" என்கின்றனர் அதிகாரிகள். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை முன்வைத்து ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க. கடந்த டிசம்பர் மாதம் சேகர் ரெட்டி வளைக்கப…

  17. விஜயபாஸ்கர் உறவினர்கள் தங்கியுள்ள விடுதியிலும் ரெய்டு! ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதையடுத்து இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகினர். விஜயபாஸ்கரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சரத்குமாரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டவர்கள் இடங்களில் வருமான வரித்துறையின் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கெனவே புதுக்கோட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அவரின் உதவியாளர்கள், உறவினர்கள் ஆகியோர் தங்கியிருந்த இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை பூக்கடையில் உள்ள ஒரு விடுதியில் வ…

  18. 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டில்லியில் முகாமிட்டுள்ள நிலையில்,அவருக்கு சொந்தமான, குவாரி உள்ளிட்ட மொத்த சொத்துகளையும், வருமான வரித்துறை முடக்கி உள்ளது. அவரின், 92 ஏக்கர் நிலங்களையும் கையகப்படுத்தி உள்ளது. சென்னையில், 'குட்கா' ஆலை நடத்திய, மாதவ்ராவ் உட்பட, சிலரது வீடுகளில், 2016 ஜூலை, 8ல், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சிக்கிய டைரியில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பதற்காக, 2015ல் இருந்து, அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் மத்திய கலால் துறை அதிகாரிகளுக்கு, மாதவ்ராவ் தொடர்ந்து லஞ்சம் தந்த விபரம் தெரிய வந்தது. இதையடுத்து, தொடர் …

  19. சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவரை கைது செய்ய தற்போது விதிக்கப்பட்டு உள்ள தடை நீக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக கூறி உள்ளது. அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன. சீமான் விஜயலட்சுமி வழக்கு இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சீமான் செப்டம்பர் 24-க்குள் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. விஜயலட்சுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவரிடம் க…

  20. 'விஜய் அறிவிப்பு தமிழக அரசியலில் மாற்றத்திற்கான தொடக்கம்' - பிபிசி தமிழுக்கு கிருஷ்ணசாமி பேட்டி பட மூலாதாரம்,Krishnasamy கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் "ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கம்பளிப்பூச்சி போலப் பார்க்கின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியிருப்பது, தமிழகத்தில் நடக்கவிருக்கின்ற அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பம் என்று நான் கருதுகிறேன்.'' என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டி: கடந்த சில தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம், இப்போதும் அந்…

  21. கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயை, கடந்த திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 10) ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. பிரசாந்த் கிஷோர் முன்பு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அவர் தொடங்கிய நிறுவனம் தற்போதும் தேர்தல் வியூக பணிகளை செய்து வருகிறது. பிரசாந்த் கிஷோரின் வருகையால் த.வெ.க-வுக்குள் குழப்பம் ஏற்படவே வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். த.வெ.க தலைவர் விஜயை பிரசாந்த் கிஷோ…

  22. விஜய் அரசியலுக்கு வருவதை நினைத்து பயப்படக் கூடாது எனவும் புதியவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். நாடாளுமன்றத் தேர்தலில் போடியிடப் போவதில்லை என அறிவித்த அவர், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் களமிறங்க போவதாக அறிவித்தார். விரைவில் அக்கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: “தமிழகத்தில் இன்று நான்கு முனை போட்டி உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, புதியதாக நடிகர் விஜய் வருகிறார். நடிகர் விஜய்யை நான…

  23. விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி! Vignesh SelvarajPublished: Wednesday, October 8, 2025, 23:32 [IST] நாமக்கல்: அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டசபை தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்…

  24. ரசிகர்களின் ஆதரவு இருப்பதால், அவர்களின் விருப்பப்படி புத்தாண்டில் புதுக்கட்சி துவக்கி, தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்ட நடிகர் விஜய், 50 வயதில் அரசியலுக்கு வந்தால் போதும் என்ற, தன் தந்தையான இயக்குனர் சந்திரசேகரின் தடையால் தவிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்க்கு, தமிழகம் முழுவதும் 3,500 ரசிகர் மன்றங்கள் உள்ளன. அதில், 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது நடிகர் விஜயின் நீண்ட நாள் ஆசை. அதனால் தான், சில ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை சந்தித்தார். தி.மு.க., தரப்புடனும் இணக்கமாக இருந்தார். பின், படம் வெளியிடுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால், நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் மனக்கசப்பு ஏற்பட்டதால், …

  25. படக்குறிப்பு, ''தி.மு.கவின் அழுத்தத்தால்தான் நான் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போகவில்லை என்ற கருத்து ஏற்புடையதல்ல.'' கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் சில வாரங்களுக்கு முன்பாக நடந்த, 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயுடன் கலந்துகொள்வதாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதில் கலந்துகொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விழாவில் விஜயும் அப்போது வி.சி.கவில் இருந்த ஆதவ் அர்ஜுனாவும் பேசிய பல விஷயங்களும் அரசியல் களத்தை பரபரக்க வைத்தன. ஆனால், தொல். திருமாவளவன் பிபிசியுடனான நேர்காணலில் இத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.