தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் முக்கொம்பு சுற்றுலா தளம் அமைந்து உள்ளது. இங்கு கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை ஜீயபுரம் எஸ்.ஐ. சசிகுமார், நாவல்பட்டி காவல் நிலைய காவலர் பிரசாத், திருவெறும்பூர், ரோந்துப் பணியில் இருந்த முதல் நிலை காவலர் சங்கர் ராஜபாண்டியன, ஜீயபுரம் போக்குவரத்துக் காவல் நிலைய காவலர் சித்தார்த்தன் ஆகிய 4 பேரும் பணியில் இருந்த போது, உயர் அதிகாரிகளிடம் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் முக்கொம்பு பகுதிக்குச் சென்று காவிரி ஆற்றின் கரையில் குளித்துவிட்டு அங்கேயே அமர்ந்து மது அருந்தி உள்ளனர்…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
ரூ.1000 கோடி வருமானம் மறைப்பு! ஜெகத்ரட்சகன் ரெய்டில் சிக்கிய 60 கோடி பணம், தங்கம்-வருமான வரித்துறை Nantha Kumar RUpdated: Thursday, October 19, 2023, 0:08 [IST] சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடந்த நிலையில் ரூ.32 கோடி ரொக்கம், ரூ.28 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு ரூ.400 கோடிக்கு கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவலை வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அவர் நடத்தும் ஹோட்டல் உட்பட அவருக்குத் தொடர்புடைய 100 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட பல இடங்களில் இந்த சோத…
-
- 0 replies
- 653 views
-
-
01 JUL, 2024 | 02:34 PM சென்னை: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்கள் 10 பேர் மீதான கொலை வழக்கை திரும்பப் பெறச் செய்யவும், அவர்களை விடுதலை செய்து தாயகத்துக்கு அழைத்து வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மற்றும் கடலூர் மாவட்ட மீனவர்கள் 10 பேரை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ள இலங்கைக் கடற்படையினர், அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். ஒரு குற்றமும் செய்யாத தமிழக மீனவர்கள் மீது பொய்யான கொலை வ…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
நாடாளுமன்றத்தில் தற்போது நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்திருந்தார். இது பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் செயல், மத சுதந்திரத்தில் தலையிடும் செயல் என எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. அதைத் தொடர்ந்து, இந்த திருத்த மசோதா மீது ஆய்வு மேற்கொள்ள 31 எம்.பி-க்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. மசூதி இந்த நிலையில், வக்பு திருத்த சட்ட மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்ப…
-
- 1 reply
- 299 views
-
-
மாண்புமிகு முதல்வர் அவர்களே ! - சுப.சோமசுந்தரம் தலைப்பில் நான் எழுத நினைக்கும் பொருள் வெளிப்படவில்லை ஆயினும், அப்பொருளின் தொனி புலப்படாமல் இல்லை. எனவே பொருளினுள் செல்லுமுன் கோட்பாடு சார்ந்து எனது நிலைப்பாடு யாது என்பதை அறுதியிட்டுக் கூறுவது எனது கடமை ஆகிறது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சியாளர் அம்பேத்கர், உழைக்கும் வர்க்கத்தின் விடிவெள்ளியான கார்ல் மார்க்ஸ் போன்றோரை எஞ்சாமிகள் என உள்ளத்தில் கொண்டு திரியும் சாமானியருள் ஒருவன்; இடதுசாரி மற்றும் திராவிட இயக்கக் கோட்பாடுகளின் கலவையாகத் தன்னை மனதில் வரித்துக் கொண்டவன் ! கருப்பு அல்லது சிவப்புச் சட்டையை பெருமிதத்துடன் எடுத்து அணிபவன் - இவ்வளவே நான். எனவே முதல்வ…
-
-
- 3 replies
- 613 views
- 1 follower
-
-
மதுரை 144 எதிரொலி : இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது! Feb 4, 2025 திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று (பிப்ரவரி 4) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்ட நிலையில், இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இரு தரப்பிலும் போராட்டங்கள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக ‘திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம்’ என்ற கோரிக்கையுடன் பிப்ரவரி 4 (இன்று) மாலை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி கட்சி அறிவித்தது. இதனையடுத்த…
-
- 0 replies
- 351 views
-
-
FOLLOW US செய்திப்பிரிவு Published : 11 Feb 2020 18:18 pm Updated : 11 Feb 2020 18:18 pm பேரறிவாளன் விடுதலை தொடர்பான ஆளுநரின் நிலை என்ன?- கேட்டுச்சொல்லுங்கள்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மான கோப்பின் நிலை என்ன? என்பது தொடர்பாக 2 வாரத்துக்குள் ஆளுநரிடம் கேட்டுத் தெரிவிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்…
-
- 3 replies
- 588 views
-
-
அ.தி.மு.க., தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதுவரை, 13 பேரை, முதல்வர் ஜெயலலிதா மாற்றியுள்ளதால், வேட்பாளர் அந்தஸ்து நீடிக்குமா என்ற படபடப்பு, அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை பற்றிய புகார்கள், போயஸ் தோட்டத்தில் குவிந்து வருவதால், மனு தாக்கல் முடியும் வரை, இந்த மாற்றம் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, இம்மாதம், 4ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அந்தப் பட்டியலில், புதுமுகங்களுக்கு அதிக அளவு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் பெரும்பாலானோர் புகார்களுக்கு ஆளானவர்கள் என்பதால், அதிர்ச்சி அடைந்த கட்…
-
- 0 replies
- 503 views
-
-
நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் கலைஞர் கருணாநிதியின் கொள்ளுபேரனும், கெவின் நிறுவன இயக்குனர் சி.கே.ரங்கநாதன்-தேன்மொழி தம்பதிகள் மகனுமான மனு ரஞ்சித்துக்கும் பெரியவர்கள் திருமணம் பேசி முடித்திருந்தனர். இந்த திருமண நிச்சயதார்த்த விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 7 நட்சத்திர ஓட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட விக்ரமுக்கு மிக நெருக்கமான நண்பர்களும், மற்றும் இரு குடும்பத்தைச் சேர்ந்த நெருக்கமான உறவினர்களும், மணமகள் அக்ஷிதாவின் தோழிகளும், மணமகன் மனு ரஞ்சித்தின் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண திகதி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. என்றாலும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது. திருமணத்தை தி.மு.கழக தலைவர் கருணா…
-
- 0 replies
- 610 views
-
-
கருணாநிதி அன்று முதல் இன்று வரை நா கூசவில்லையா 18.11.2009 அன்று கருணாநிதி வெளியிட்டுள்ள உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் “சகோதர இப்படி காரணமாக நம்மை நாமே கொன்று குவித்துக் கொண்டது மாத்திரமல்ல, முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால், நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழக்க நேரிட்டது ?“ என்று எழுதியுள்ளார். வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் என்ற வள்ளுவன் வாக்கு கருணாநிதிக்கு மட்டும் தான் தெரியுமா என்ன ? புலிகள் தம்முடைய பலத்தையும், மாற்றான் பலத்தையும் துல்லியமாக கணிக்கத் தெரியாதவர்களா என்ன …
-
- 0 replies
- 1.8k views
-
-
'முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றி நடக்கும் மோசடிகள்...!' -படபடக்கும் சசிகலா புஷ்பா மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விரிவான கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. ' முதல்வர் உடல்நலமில்லாமல் இருப்பதைப் பயன்படுத்தி, சிலர் தவறான காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அவற்றின்மீது உறுதியான நடவடிக்கை எடுங்கள்' என வேண்டுகோள் வைத்திருக்கிறார். அ.தி.மு.கவில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டுவிட்டாலும், அதுதொடர்பான கடிதத்தை மாநிலங்களவை செயலரிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் இன்னமும் அளிக்கவில்லை. தமிழக முதல்வரோடு முரண்பட்டு நின்றாலும், அ.தி.மு.கவின் மாநிலங்களவை எம்.பியாகவே அவர் தொடர்கிறார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மகாராஷ்ட்டி…
-
- 0 replies
- 466 views
-
-
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையின்போது தமிழக எம்.பி.க்கள் இலங்கைத் தமிழர் பிரச்னையை எழுப்பினர். மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி தமது உரையை தொடங்கிய சிறிது நேரத்தில், திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர். இலங்கை அரசின் கொடூரச் செயல்களுக்கு மேலும் பல ஆதாரங்கள் கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டிய தமிழக எம்.பி.க்கள், இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். மேலும் ஐ.நா. மனித உரிமை அவையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின்போது, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்றும் திமுக மற்றும் அதிமுக எம்.பி.க்கள் உரத்த குரலில் கூறினர். இலங்கைத் தமிழர் பிரச்னையை தமிழக எம்.பி.க்கள் கிளப்பியதால் குடியர…
-
- 1 reply
- 868 views
-
-
5001 பேர் கலந்து கொண்ட, அதிமுக பால் குட ஊர்வலம்... ஸ்தம்பித்தது வேலூர்.சென்னை: இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது ஷங்கர் படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சி போலவே இருக்கிறது இல்லையா. ஆனால் இது வேலூரில் அதிமுகவினர் நடத்திய பால் குட ஊர்வலம். இந்த ஊர்வலத்தால் வேலூரே ஸ்தம்பித்துப் போனது. உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டிய அதிமுகவினர் தொடர்ந்து விதம் விதமான பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர்.அந்த வகையில், ஜெயலலிதா பூரண குணம்பெற வேண்டி வணிக வரித்துறை அமைச்சர் கேசி வீரமணி தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் முன்னிலையில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வர்ர் ஆலயத்தில் 5001பெண்கள் பால்குடம் ஏ…
-
- 12 replies
- 1.1k views
-
-
மருத்துவ துறையில் 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டது – முதலமைச்சர் by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/06/EPS.jpg மருத்துவ துறையில் 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மருத்துவ வசதிகளோடு, மனித வளம் மற்றும் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயற்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளைப்போல தனியார் மருத்துவமனைகளும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றன என்றும் மருத்துவம் ஒரு கலை, வணிகம் அல்ல…
-
- 0 replies
- 422 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரையில், 'காதற்ற ஊசியாக' காங்கிரஸ் மாறி வெகுநாள் ஆகிறது. சென்னை கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதக் களத்துக்கு அசட்டுத் துணிவோடு சென்ற காங்கிரஸார், அவமானப்பட்டது சமீபத்திய காட்சி! தி.மு.க-வின் நடவடிக்கைகளோ - 'வேலிக்கு ஓணான் சாட்சி'! இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது 'அரை நாள் உண்ணாவிரதம்' இருந்துவிட்டு, 'போர் முடிந்தது' என்று வீடு திரும்பிய அதே தலைவர், இப்போது 'டெசோ’ சார்பில் டெல்லியில் கருத்தரங்கம், தமிழ்நாட்டில் பொது வேலைநிறுத்தம் என்று புதிய பூச்சாண்டி காட்டுகிறார். எரிவதைப் பிடுங்கினாலே, கொதிப்பது தன்னால் அடங்கும் என்று நன்றாகத் தெரிந்தும்கூட, கொழுந்துவிடும் நெருப்புக்குக் காவலாக நின்றபடி... 'கொதிக்கிறதே... கவ…
-
- 3 replies
- 988 views
-
-
முருகன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முருகன் வேலூர் சிறையில் உள்ளார். இவர் செல்போன் ‘வாட்ஸ் அப்’பில் தனது உறவினர்களுடன் பேச அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த மாதம் 23-ந் திகதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் அவரது உடல் மிகவும் சோர்வடைந்திருந்ததால் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அவருக்கு உணவு வழங்க வேண்டும் என வதை்தியர்கள் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து சிறையில் அதிகாரிகள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி கஞ்சி மட்டுமாவது குடிக்க வேண்டும் என கூறினர். அவர் மறுத்ததால் வலுக்கட்டாயமாக கஞ்சி குடிக்க வைத்ததாக கூறப்படு…
-
- 1 reply
- 749 views
-
-
தியாகராயநகரில் உள்ள தீபா வீட்டில் குவியும் அ.தி.மு.க. தொண்டர்க தியாகராயநகரில் உள்ள தீபா வீட்டில் திரளும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். சென்னை: ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க.வை வழி நடத்த வேண்டியது யார்? என்பதில் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே மாறுபட்ட கருத்து நிலவி வருகிறது. ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகளாக இருந்த அவரது தோழி சசிகலா பொறுப்பேற்றால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்பது அமைச்சர்கள் மற்ற…
-
- 0 replies
- 466 views
-
-
`கல்வி கடனுக்கு கல்தா.. இலவச ஸ்மார்ட்போன்?’ - தி.மு.க-வுக்கு செக் வைக்கும் எடப்பாடி பட்ஜெட்! அ.சையது அபுதாஹிர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் விவசாயக்கடன் ரத்து செய்யபப்டும் என்றார் ஸ்டாலின். ஆனால் தமிழக அரசு விவசாய கடனை ரத்து செய்து தி.மு.க-வுக்கு ஷாக் கொடுத்தது. அதே போல் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க -வுக்கு அடுத்த ஷாக் கொடுக்க அ.தி.மு.க தயாராகி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி வரும் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் தேர்தல் களத்தினை எதிர்நோக்கி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிவருகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலலில் தி.மு.க ஆட்சியை கைப்பற்…
-
- 4 replies
- 514 views
-
-
பன்னீர் தியானத்துக்குப் பிறகு... சசிகலா, தி.மு.க, சட்டசபை என்னவாகும்? மெரீனா கடற்கரை மற்றொரு வரலாற்று நிகழ்வுக்கு சாட்சியாக நின்று அலைகளை வரித்துக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மாணவர்களின் திரட்சியான போராட்டம் அந்தக் கடற்கரையில் பெற்ற அதே முக்கியத்துவத்தை, ஓ.பன்னீர் செல்வம் என்ற ஒற்றை மனிதனின் இறுகிய தியானமும் பெற்றுள்ளது. தியானத்துக்குப் பிறகு தன் மௌனம் கலைத்த பன்னீர் செல்வம் உச்சரித்த ஒவ்வொரு வார்த்தையிலும் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டு இருக்கிறது. அமைதியே உருவான அந்த ஒற்றை மனிதனின் நிதானமான வார்த்தைகள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும், கோடிக்கணக்கான தொண்டர்களுடைய மனச்சாட்சியின் குரல் பேரிரிசைச்சலாய் ஒலித்தது. “நான் வேண்டாம் என்று சொல்லியும் க…
-
- 0 replies
- 380 views
-
-
‘ஜெயில் கதவை திற... எங்க அம்மாவைப் பாக்கணும்..!’ பரப்பன அக்ரஹாரவை பரபரப்பாக்கிய பெண் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சிறை வளாகம் பரபரப்பு மிகுந்து காட்சியளிக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி சுதாகரன் ஆகிய 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது சிறை வளாகம் முழுக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வந்தது…
-
- 0 replies
- 876 views
-
-
சசிகலாவின் எழுச்சியும் வீழ்ச்சியும் சசிகலா | கோப்பு படம் அதிமுக பொதுச்செயலாள ராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக திரை மறைவில் அதிகாரம் செலுத்தி வந்த வி.கே.சசிகலா, திரைக்கு வெளியே வந்தது கடந்த 2016 டிசம்பர் 5. அன்றுதான் ஜெயலலிதா காலமானார். ஜெயலலிதா வீட்டிலேயே சுமார் 30 ஆண்டுகள் வசித்தாலும் அவர் உயி ரோடு இருக்கும்வரை சசிகலாவால் தன்னை சிறு அளவில்கூட வெளிப்படுத் திக் கொள்ள முடியவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை யும், தமிழக அரசையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். அதுவே அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. சாதாரண குடும்பப் பெண்ணாக இர…
-
- 0 replies
- 306 views
-
-
சென்னை: ராஜபக்சே ஆட்சியில் தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார். சுதந்திரப் போரட்ட தியாகி தீரர் சத்தியமூர்த்தி மற்றும் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் தலைமையில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஞானதேசிகன், இலங்கையை நட்பு நாடாக பார்க்காவிட்டால் 13வது சட்ட திருத்தம் தொடர்பாக இந்தியா யாரிடம் பேசுவது? என்று கேள்வி எழுப்பினார். தமிழக அரசியல் கட்சிகள் கூறுவது போல இலங்கையை நட்பு நாடாக கருத வேண்டாம் என்றால், யாரிடம் பேச வேண்டும்…
-
- 7 replies
- 2.8k views
-
-
15 நாள் நீதிமன்றக் காவல்! திகார் சிறையில் டி.டி.வி.தினகரன் அடைப்பு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து தீர்ப்பளித்துள்ளது டெல்லி மாவட்ட நீதிமன்றம். தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்தரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனிடையே 5 நாள் விசாரணை முடிந்த பின்பு இன்று டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து அவ…
-
- 1 reply
- 466 views
-
-
சென்னை: தமிழகத்தில் நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, பா.ம.க தலைவர் ஜி.கே.மணி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றும், அதனை எதிர்த்து தமிழகத்திலே ஜனநாயகத்திலே அக்கறை உள்ள அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இத்தகவலை தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. http://tamil.oneindia.in/news/2013/08/29/tamilnadu-pmk-writes-dmk-on…
-
- 1 reply
- 2k views
-
-
உடையும் ‘சிதம்பர’ ரகசியம்! - ஜூ.வி லென்ஸ் தமிழகத்தில் அ.தி.மு.க வட்டாரத்தையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்த ரெய்டு பூதம், இந்தமுறை காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த 16-ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டுக் கதவைத் தட்டியது, சி.பி.ஐ படையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு. கார்த்தி சிதம்பரத்தைக் குறிவைத்து, சென்னை, டெல்லி, மும்பை, குர்கான் ஆகிய நகரங்களில் ஒரே நேரத்தில் சி.பி.ஐ ரெய்டு நடந்தது. எல்லா ரெய்டுகளுக்கும் பின்னால் அதிகாரக் காரணங்கள் இருப்பதுபோல், அரசியல் காரணமும் இருக்கும். கார்த்தி சிதம்பரம் விவகாரத்திலும் அப்படிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. அதிகாரக் காரணங்கள் என்ன? மும்பையைச் சேர்ந்த மீட…
-
- 0 replies
- 2.1k views
-