Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மேலவளவு கிராமத்தில் "25 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லை" - கொல்லப்பட்ட முருகேசன் மனைவி பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, முருகேசனின் மனைவி மணிமேகலை "ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற ஒரே காரணத்திற்காக எனது கணவர் முருகேசனை கொன்றுவிட்டார்கள். அன்றிலிருந்து தற்போது வரை எங்கள் காலனி பகுதிக்கு எந்தவிதமான சலுகையும் செய்து கொடுக்கவில்லை" என்கிறார் படுகொலை செய்யப்பட்ட மேலளவு முருகேசன் மனைவி. ஆனால், சுடுகாட்டுப் பாதை போன்ற பிரச்சனையில் சிக்கல் இருந்தாலும், எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை என்பதை ஊராட்சித…

  2. விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டியெழுப்ப போதை மருந்துக் கடத்தல்: என்.ஐ.ஏ. Jul 21, 2022 07:24AM IST இந்தியா,இலங்கையில் போதை மருந்துக் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவதாக தானாக முன் வந்து பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. நேற்று (ஜூலை 20) தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு, திருச்சி மாவட்டங்களில் குற்றம் சாட்டப்பட்ட மற்றும் சந்தேகத்துக்குரியவர்கள் தொடர்பான 22 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். முகாமில் உள்ள சந்தேகத்திற்கிடமான சிலரிடம் தேசிய புலனாய்வு முகமை அதி…

    • 3 replies
    • 551 views
  3. தமிழ்நாடு அரசு மின்சார கட்டணத்தை உயர்த்துவதால் பிரச்னை தீருமா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மின் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது மாநில அரசு. ஆனால், மின் துறையில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க இந்த நடவடிக்கை மட்டும் போதுமானதா? தமிழ்நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை. 2014ஆம் ஆண்டு டிசம்பரில் கடைசியாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது (2017ஆம் ஆண்டில் மிகச் சிறிய அளவில் மின் கட்டணம் திருத்தப்பட்டது). ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்…

  4. ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி, இப்போது கள்ளக்குறிச்சி போராட்டம்: 'கும்பல்' மனநிலைக்கு வசப்படும் இளைஞர்கள் - உளவியல் பார்வை பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளியில் மாணவி இறந்ததற்கு நீதி கேட்பதாக கூறி, போராட்டக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் திரண்டு, வன்முறையில் ஈடுபட்டனர். பள்ளி வாகனம், காவல்துறை வாகனம் போன்றவற்றை சேதப்படுத்தியதோடு, கற்களை வீசி காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய காட்சிகள் வைரல் ஆயின. இதில் கூட்டம், கூட்டமாக இளைஞர்கள் பள்ளி வளாகத்திற்கு திரண்டு வந்தது எப்படி என்ற கேள்வி ஒருபுறம்…

  5. 18 வயதில் 13 மொழிகள்: போஜ்புரியில் பேசி காணாமல் போனவரை கண்டறிய உதவிய மாணவி பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 16 ஜூலை 2022 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 18 வயதில் 13 மொழிகள் கற்ற சென்னை கல்லூரி மாணவி ஒருவர், திருப்பூரில் காணாமல் போன வடமாநில இளைஞரை கண்டறிய போஜ்புரி மொழியில் பேசி, ரயில்வே காவல்துறைக்கு உதவி, அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளார். பிறப்பால் கேரளாவைச் சேர்ந்த ஆர்த்ரா, தனது தாயாரின் பணி இடமாற்றம் காரணமாக இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட பல மாநிலங்களில் பேசும் மொழிகளை கற்கும் வாய்ப்பை பெற்றிருந்தார். சிறு வயதில் இருந்த…

  6. ‘அதிமுக ஒருங்கிணைப்பாளர்’ நலம்பெற மு.க.ஸ்டாலின் வாழ்த்து! Jul 16, 2022 15:01PM IST கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பன்னீர் செல்வம் விரைந்து குணமடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுகவில் இருக்கும் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் மாறி மாறி நீக்கி வருகின்றனர். இதில் எடப்பாடி பழனிசாமி பன்னீரைக் கட்சியிலிருந்து நீக்க, பன்னீர் செல்வம் எடப்பாடியைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். எதிர்க்கட்சித் துணை தலைவர் பதவியை பன்னீர் வகித்து வந்த நிலையில் அந்த பதவிக்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான வேலைகளில் …

  7. நீட் தேர்வு பயம்: அரியலூரில் மாணவி விபரீத முடிவு- நடந்தது என்ன? ஆர்.அருண்குமார் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் நீட் தேர்வில் வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கடினமாக இருந்ததால் அரியலூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? அரியலூர் ரயில்வே நிலையம் அருகே நடராஜன், உமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது மகள் கடந்த ஆண்டு பிளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் கடந்த ஆண்டு நீட் தேர்வ…

  8. கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு; நடந்தது என்ன? நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் சந்தேக மரணம் என்று காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வரும் சூழலில், தன் மகளின் மரணம் குறித்து உரிய விசாரணை செய்யப்படும் வரை உடலை வாங்க மறுத்து கடந்த 4 நாட்களாக பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் போராடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் நடந்தது என்ன? பின்னணி என்ன? கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத…

  9. ராமேஸ்வரம் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து: அமைச்சர் எ.வ.வேலு Jul 16, 2022 06:17AM ராமேஸ்வரம் – இலங்கை தலைமன்னார் இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, “ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலம் பகுதியில் 10 மீட்டர் அளவுக்கு கடல் பகுதியை தூர்வாரி ஆழப்படுத்தினால் சிறிய, வர்த்தக கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக இருக்கும். இதுதொடர்பாக மத்திய அரசிடம் சாகர்மாலா திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கி தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளதால் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. ராமேஸ்வரம் கோதண்டராமர் …

  10. சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் ஜாதி பற்றிய சர்ச்சை கேள்வி - பூதாகரமாகும் விவகாரம் ஏ.எம் சுதாகர் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் முக்கிய அம்சங்கள் தமிழ்நாட்டில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்ற ஒரு கேள்வி தொடர்பான தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, சர்ச்சை கேள்வி தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழு தரும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உறுதியளித்துள்ளார். …

  11. ஆழியாறு - ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு ஏன்? தமிழ்நாடு - கேரளா நட்பு முறியுமா? மோகன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஆழியாறு - கோப்புப்படம் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் எடுத்துச் செல்லும் புதிய திட்டம் ஒன்று தயாராகிவந்தது. தற்போது அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பொள்ளாச்சி…

  12. அதிமுகவில் புதிய நிர்வாகிகள்: தேர்தல் ஆணையத்துக்கு பன்னீர் கடிதம்! மின்னம்பலம்2022-07-14 அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்களை அங்கீகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். சென்னை வானகரத்தில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு, பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தான் தொ…

  13. சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக தமிழ்நாடு முழுவதும் மோசடி - நடந்தது என்ன ? மோகன் பிபிசி தமிழுக்காக 12 ஜூலை 2022, 00:49 GMT புதுப்பிக்கப்பட்டது 12 ஜூலை 2022, 03:51 GMT பட மூலாதாரம்,SEAN GLADWELL / GETTY IMAGES "எங்களை விமான நிலையத்துக்கு ஏற்றிச்செல்ல வண்டி வரும் என்றார்கள். ஆனால், ஏமாற்றம்தான் வந்தது" என்கிறார்கள், சிங்கப்பூர் வேலைக்காக சென்னை வருவதற்குத் தயாராக காத்திருந்த தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களிடம் இருந்து வந்த சொற்கள் இவை. நடந்தது என்ன? சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டவ…

  14. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் 19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்" என பதிவிட்டுள்ளார். Social embed from twitter தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி - தமிழில் செய்திகள் (bbc.com)

  15. அதிமுக அலுவலகத்துக்கு சீல்: நீதிமன்றத்தை நாடிய எடப்பாடி மின்னம்பலம்2022-07-12 அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நேற்று வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டனர். தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய வர…

  16. அதிமுக நெருக்கடி: "கட்சித் தலைவரே இப்படி செய்யலாமா?" - ஓபிஎஸ் மனு நிராகரிப்பு தீர்ப்பின் முழு விவரம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் அதிமுக பொதுக்குழு கூட்டம் அதன் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பப்படியே நடத்தப்பட திட்டமிடப்பட்டதால் அதில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் அந்த கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண அரங்கில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது கட்சி விதிகளுக்கு எதிரானது என்று கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்க…

  17. எடப்பாடி இடைக்காலப் பொதுச் செயலாளர்: பொதுக்குழு தீர்மானம்! மின்னம்பலம்2022-07-11 அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 11) தொடங்கியதும் அதிமுகவில் இதுவரை இருந்த இரட்டைத் தலைமை ரத்து செய்யப்பட்டதாகவும், இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாகவும் அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியதும், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனை பொதுக்குழுவை தலைமை தாங்கி நடத்தித் தருமாறு எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்தார். அதை கே.பி. முனுசாமி வழிமொழிந்தார். ”செயற்குழுவில் கொண்டுவரப்பட்ட 16 தீர்மானங்களையும், அதோடு தற்…

  18. "இலங்கையில் மக்கள் சக்தி வென்றிருக்கிறது" - ராமதாஸ் கருத்து சென்னை: "இலங்கையில் ஊழலில் திளைத்த ராஜபக்ச குடும்பம் அதை மறைக்க தமிழர்களை இனப்படுகொலை செய்தது, அதற்காக கடன் வாங்கியது, இனப்படுகொலைக்கு உதவிய நாடுகள் இலங்கையை கொள்ளையடிக்க அனுமதித்தது ஆகியவை தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இலங்கையை திவாலாக்கிய ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றியுள்ளனர். இலங்கையில் மக்கள் சக்தி வென்றிருக்கிறது. மக்கள் சக்திக்கும், ஆத்திரத்திற்கும் அஞ்சி அதிபர் …

  19. கடலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவரை சக வகுப்பைச் சேர்ந்த மூன்று மாணவர்களே பாலியல் வல்லுறவு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்-பெண் இருபாலரும் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, அவர் உடன் பயிலும் சக வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் மிரட்டி பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவத்தின் பின்னணி என்ன? என்பதைக் காவல் துறையிடம் பிபிசி தமிழ் பேசியது. நண்பருடன் பேசிய புகைப்படத்தை காட்டி மிரட்டிய சிறுவர்கள் …

  20. நியமன எம்பிக்களாக தென்னிந்தியர்களை தேர்வு செய்த பாஜக அரசு - 'மிஷன் சௌத் இந்தியா'வின் ஒரு பகுதியா? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@NARENDRAMODI/TWITTER தென்னிந்தியாவின் நான்கு பிரபலமான ஆளுமைகள், குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டு நியமிக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான இளையராஜா, விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா (கேரளா), பிரபல தெலுங்குப்பட கதையாசிரியரும் இயக்குநருமான விஜயேந்திர பிரசாத…

  21. "தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை" - இந்திய அமைச்சர் வி.கே.சிங் 6 மணி நேரங்களுக்கு முன்னர் (இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (07/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று (ஜூலை 6) நடைபெற்றது. இதில், அத்தொகுதி பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அமைச்சர் வி.கே.சிங், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டா…

  22. தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவமதிக்கப்பட்டாரா? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@DRTAMILISAIGUV/TWITTER சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் அமர்ந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் வேறு இடத்தில் சென்று அமரும்படி கூறி தீட்சிதர் அவமதித்தாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் என்னை வேறு இடத்தில் அமர சொன்னது உண்மைதான் ஆனால் அவமதிக்கவில்லை, எந்த பிரச்னையும் இல்லை என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் மார்கழி மாதம் நடைபெறக்கூடிய ஆருத்ரா தரிசனம், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் ஆகியவை மிக…

  23. இளையராஜா எம்.பி ஆகிறார் - சாதனை, சர்ச்சைகளுடன் 50 வருட திரைப்பயணம் 51 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராகவுள்ளார். குடியரசு தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்டு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள் வரிசையில் இவரது நியமனம் வருகிறது. இளையராஜா மட்டுமின்றி விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, பிரபல தெலுங்குப்பட கதையாசிரியரும் இயக்குநருமான விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெகடே ஆகியோரும் நியமன உறுப்பினர்களாக தேர்வாகின்றனர். இவர்கள…

  24. கேரளாவும் தமிழ்நாடும் எழுத்தாளர்களை நடத்தும் விதம் மூன்றாண்டுகளுக்கு முன்பு நான் சுமார் 90 பேர் கொண்ட என் வகுப்புக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுத்தேன். தனியாகவோ நான்கைந்து பேர் சேர்ந்தோ தமது தாய்மொழியில் அல்லது இந்திய மொழி ஒன்றில் இருந்து ஒரு கதையை ஆங்கிலத்தில் மொழியாக்க வேண்டும். அக்கதைகளில் பத்தை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தேன். அப்போது நான் ஒரு விசித்திரத்தைக் கண்டேன். எங்கள் பல்கலைக்கழகத்தில் மலையாளிகள் அதிகம், ஓரளவுக்கு தமிழ் மாணவர்களும் உண்டு, அடுத்து இந்திக்காரர்கள் வருவார்கள். கன்னட மொழி பேசும் மாணவர்கள் அமைதியாக நிழலைப் போல் இருப்பார்கள். ஒரு மாணவர் கூட கன்னடக் கதையை மொழியாக்கவில்லை. முப்பதுக்கு மேல் மலையாள சிறுகதைகளும், இருபதுக்கு மேல் …

  25. "வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆபத்து" - காப்புக்காடு அருகே புதிய கல்குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இயற்கை வளங்களை சுரண்டுவதற்காக எடமச்சி காப்புக்காட்டில் தடையை மீறி புதிய கல்குவாரிக்கான சுரங்கப் பணிகள் நடைபெறுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பழையசீவரம், திருமுக்கூடல், அருங்குன்றம், பழவேலி, மதூர், பட்டா, சிறுமையூலூர் என பல கிராமங்களில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. உரிய அனுமதி இல்ல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.