தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
02 AUG, 2024 | 10:46 AM இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் மலைச்சாமி கொலை செய்யப்பட்டமைக்கு பாஜக, திமுக அரசாங்கங்களின் கையாலாகத்தனமே காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார் . அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி படகினை தாக்கி ராமேசுவரம் மீனவர் மலைச்சாமியை நடுக்கடலில் மூழ்கடித்துப் பச்சைப் படுகொலை செய்த இலங்கை கடற்படையின் இனவெறி அட்டூழியச் செயலானது பொறுக்கவியலா கடும் ஆத்திரத்தையும் பெரும் மனவேதனையும் அளிக்கிறது. தமிழ் மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்களை தடுக்கத் தவறிய இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
24 FEB, 2025 | 10:46 AM சென்னை- ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 450 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அதிகாலை மன்னார் கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் எல்லை தாண்டியதாக கூறி 5 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். 32 மீனவர்களை கைது செய்தனர். இந்நிலையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினர…
-
- 1 reply
- 217 views
- 1 follower
-
-
30 JUN, 2025 | 02:11 PM சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும் மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில் இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர் 29.06.2025 அன்று இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 08 மீனவர்களுடன் I…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
தமிழக மீனவர்களை இலங்கையின் கடற்படையினர் பயமுறுத்தி விரட்டிய சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நேற்றுக் காலை கச்சத்தீவு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று தமிழக மீனவர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. தமது மீனவர்களை பயமுறுத்திய இலங்கையின் கடற்படையினர் கரை திரும்புமாறு உத்தரவிட்டதாக இராமேஸ்வரம் மீனவர்களின் சம்மேளன தலைவர் எஸ் எமீரிட் தெரிவித்துள்ளார். இதன் போது இலங்கை கடற்படையினர் 20 படகுகளையும் வலைகளையும் நாசப்படுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக சுமார் 1000 படகுகளில் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பியதாகவும் எமீரிட் தெரிவித்துள்ளார். tamilwin.com
-
- 0 replies
- 306 views
-
-
கடந்த சில நாட்களாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய பகுதியில் பயங்கர காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாலும் கடந்த 5 நாட்களாக ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு டோக்கன் வழங்கப்பட்டது. நேற்று மதியம் 752 விசைப் படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சில மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடலில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் 15 ரோந்து படகுகளில் அங்கு வந்தனர். அங்கு மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்களை பார்த்து எத்தனை முறைதான் சொல்வது இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது எ…
-
- 1 reply
- 500 views
-
-
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடிக்கச் சென்றனர்.அப்போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 22 மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் கொண்டு வந்த ஜி.பி.எஸ்.கருவிகளை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து டெசோ அமைப்பு சார்பில் இன்றைய தினம் நாகையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=780741848819684336
-
- 1 reply
- 710 views
-
-
எல்லை தாண்டி மீன்படித்ததாக நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போதும், தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போதும் அவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்கின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று இரவு மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் 6 மீனவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து 1 நாட்டுப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தது. மே…
-
- 0 replies
- 354 views
-
-
இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: 3,500 தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3,500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததோடு, அவர்களது படகுகளை சேதப்படுத்தியும், வலைகளை அறுத்தெறிந்தும் உள்ளனர். சுமார் 50 படகுகளில் இருந்து வீசப்பட்ட வலைகளை அறுத்தெறிந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 650 படகுகளில் சென்ற மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு எச்ச…
-
- 0 replies
- 347 views
-
-
இலங்கை கடற்படையினர் தாக்குதல்: ராமேசுவரம் மீனவர் மண்டை உடைப்பு காயமடைந்த மீனவர் வர்க்கீஸ் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் ராமேசுவரம் மீனவரின் மண்டை உடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இதில் அலெக்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வர்க்கீஸ், மார்டோ, முருகேசன், மாடசாமி ஆகியஆகியோரும் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கப்பலில் ரோந்து வந்…
-
- 0 replies
- 246 views
-
-
இலங்கை கடற்படையின் தாக்குதலில் தமிழக மீனவர் படுகாயம் 30 Views எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கியுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 580இற்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், 3000 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்றைய தினம்(26) மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். இதில் பூண்டிராஜன் என்பவரின் விசைப்படகில் 6பேர் சென்றிருந்தனர். இவர்கள் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டித்துக் கொண்டிருந்த சமயம் கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் படகிலிருந்த சுரேஷ் (38) என்பவர் காயமடைந்தார். அதன் பின்னர் அந்த மீனவர்கள் அவசரமாக கரை திரு…
-
- 0 replies
- 539 views
-
-
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து செல்வதை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து செல்கின்றனர். மேலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களது படகுகளையும் சேதப்படுத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த இரு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை ராமேஸ்வரம் தாலுகா அலுவலகம் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், அதேபோல் இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களையும் நிபந்தனை இன்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எட…
-
- 1 reply
- 408 views
-
-
Published By: DIGITAL DESK 3 23 MAR, 2024 | 11:22 AM இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பித்துள்ளனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரியும் படகுகளை மீட்கக் கோரியும் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 800-கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்காதபட்சத்தில் ஏப்ரல்-8ல் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டைகளை ஒப்படைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
இலங்கை கடற்பரப்புக்குள் செல்ல வேண்டாமென இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை! இலங்கை கடற் பரப்புக்குள் அத்துமீறுவதை தவிர்க்குமாறும், அவ்வாறு செல்லும் போது உங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமெனவும் தமிழக பொலிஸார் இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்ற நிலையில், கடலோர மாவட்ட மீனவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு கடற்பிராந்தியத்தில், மீன் பிடிப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என கோரி இராமேஷ்வரம் மீனவர்கள் கடந்த ஒ…
-
- 0 replies
- 373 views
-
-
இலங்கை கடலில் மிதப்பது இந்தியர்களின் சடலங்களா? இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் சில சடலங்கள் மிதந்து கொண்டிருப்பதாக கிடைத்துள்ள தகவல்களையடுத்து அந்நாட்டு கடற்படை அப்பகுதியில் திங்கட்கிழமை இரண்டாவது நாளாகவும் தேடுதலில் ஈடுபட்டுள்ளது. இந்த சடலங்கள் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ள இராமேஸ்வரம் மீனவர்களுடைய சடலங்களாக இருக்கலாம் அல்லது தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுடைய சடலங்களாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளபோதிலும், அதனை உறுதிப்படுத்தும் வகையிலான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. திருகோணமலை கடலில் 10 மைல்களுக்கு அப்பால் சில சடலங்கள் மிதந்து கொண்டிருப்பதாக உள்ளுர் மீனவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸார…
-
- 0 replies
- 536 views
-
-
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்ற நிலையில் இந்திய அரசாங்கத்தின் கோரிக்கையை கவனத்தில் எடுக்காது இலங்கை அரசு செயற்படுவது கண்டனத்திற்குரியது. தமிழக, காரைக்கால் மீனவர்களை பாதுகாக்க இலங்கை கடல் எல்லையில் ஹெலிக்கெப்டர் ரோந்து பணியை தீவிரப்படுத்தவேண்டும் என்று இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். காரைக்காலில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ''கடந்த சில தினங்களாக காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்களை பாதுகாக்க இந்திய அரசு பலமுறை இலங்கை அரசுடன் பேசி உள்ளது. ஆனாலும் இலங்கை அரசு அதற்கு செவி ச…
-
- 7 replies
- 1.1k views
-
-
இலங்கை காவலில் உள்ள 128 இயந்திர மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கு தலா 5 இலட்சமும், நாட்டுப்படகுகளின் உரிமையாளர்கள் 17 பேருக்கு தலா 1.5 இலட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் போது 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களால் ஏற்பட்ட சேதத்திற்கு ரூபாய் 5.66 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். பல்வேறு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் மு.க. ஸ்டாலினை சந்தித்து, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். 20 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மீன்பிடி மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ண…
-
- 0 replies
- 248 views
-
-
இலங்கை கிரிக்கெட்; வீரர்கள் இந்தியா பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கு பற்ற கூடாது இந்திய பிரிமியர் லீக் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்ப்பதட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகம் கட்சி ஆகியன இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்;டத்தை மேற்கொள்கின்றன. இலங்கை கிரிக்கெட்; வீரர்கள் இந்தியா பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கு பற்ற கூடாது தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதானது தமிழ்நாட்டில் உள்ளவர்களை உளவியல் ரீதியாக தாக்கத்திற்கு உள்ளாக்கும் என எனவும் ஆர்ப்பாட்ட காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். …
-
- 4 replies
- 868 views
-
-
இலங்கை குண்டு வெடிப்பு – தமிழக கடற்கரை – ராமேசுவரம் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது April 22, 2019 இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து ராமேசுவரம் கோவில், தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்றையதினம் 8 இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 290 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதன் எதிரொலியாக தமிழக கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது. குறிப்பாக இலங்கையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் உள்ள ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோர காவல்படையினர் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் இருந்து தீவிவாதிகள் பாக் ஜலச…
-
- 0 replies
- 749 views
-
-
இலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி!- சீமான் இலங்கையில் தேர்தல் நெருங்குகின்ற வேளையில் பல இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமையானது அரசியல் சதியாகவே இருக்ககூடுமென சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சீமான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடுமெனவும் பெரும்பாலான மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக வெளியாகிய தகவல்கள் மீள முடியாத துயரை தொடர்ந்து தருகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இந்திய உளவுத் துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்த போதி…
-
- 0 replies
- 1.2k views
-
-
கோவையில் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வுத் துறையினர், அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். இங்குள்ள சில நபர்கள் இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளியோடு தொடர்பில் இருந்துள்ளனர் எனவும், தமிழகம் ,கேரளாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்த திட்டங்கள் இருப்பதாகவும் புலனாய்வுத் துறை விசாரணையில் தெரிய வந்ததால் இந்த சோதனைகள் நடைபெற்றுள்ளது. உக்கடத்தை சேர்ந்த முகமது அசாருதீன், சேக் இதயத்துல்லா, இப்ராகிம், போத்தனூரை சேர்ந்த அக்ரம் சிந்தா, சதாம் உசைன், குனியமுத்தூரை சேர்ந்த அபுபக்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது அசாருதீன், ‘khilafah GFX’ என்னும் முகநூல் பக்கத்தின் வழியாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கருத்துக்களை பரப்பியுள்ளார். மே…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்! இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது கவலையளிக்கின்றது. இத்தகைய கைது நடவடிக்கைகளால் மீன்பிடித் தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள மீனவர்களிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது. இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்தத் தளர்வும் இ…
-
- 0 replies
- 538 views
-
-
மீனவர்கள் அனைவரும், அவர்களது படகுகளும் நாளை வியாழக்கிழமை தொடங்கி உடனடியாக விடுவிக்கப்படும் என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார். இருநாட்டு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்தியா சென்றுள்ள இலங்கை அமைச்சர், இன்று புதன்கிழமை இந்திய வெளியுறவு மற்றும் விவசாய அமைச்சர்களை சந்தித்துப் பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த மாதம் 20 ஆம் தேதி இருநாட்டு மீனவர்களிடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் இலங்கை மீனவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதையும் அவர் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார். இந்த பயணத்துக்கு வட மாகாண கடற்தொழிலாளர்கள் இணையம் மற்றும் தேசிய மீனவர்கள் ஒத்துழ…
-
- 2 replies
- 632 views
-
-
Published By: VISHNU 06 NOV, 2023 | 05:09 PM இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 64 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கடந்த 6 ஆண்டுகளாக மீட்கப்படாமல் இலங்கை வசம் உள்ள 133 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டத்தை திங்கட்கிழமை (6) தொடங்கி நடத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து கடந்த மாதம் 14 மற்றும் 28 ஆகிய இரு தேதிகளில் மீன்பிடிக்க…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்! தென் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் விடுவிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் உடனடி இராஜதந்திர முயற்சிகளைத் தொடங்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், இலங்கை கடற்படையினரால் அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த 35 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். நவம்பர் 3 ஆம் திகதி, இலங்கை கடற்படை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இ…
-
- 0 replies
- 93 views
-
-
இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்! இலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலையில் கைது செய்யப்பட்ட ஏழு ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அவசர இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து கவலை தெரிவித்தார். ஜூலை 13 ஆம் திகதி அதிகாலையில், ஏழு மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டினார். மேலும், தற்போது, 232 தமிழக மீன்பிடி படகுகளும் 50 மீனவர்களும் இலங்கை அதிகா…
-
- 0 replies
- 88 views
-