அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3287 topics in this forum
-
சூரத்தில் வெள்ளிக்கிழமை மாலை வணிகவளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீயால், குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கட்டடத்தில் இருந்து குதித்தபோது 15 மாணவர்கள் உயிரிழந்தனர் என்று குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் கூறியுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. டேக்சிலா எனும் கட்டடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் தீ எரிந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பான காட்சிகளில் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் இருந்து மாணவர்கள் குதிப்பது காட்டப்பட்டு வருகிறது. இந்த தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என குஜராத் முதல…
-
- 0 replies
- 368 views
-
-
டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது May 24, 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 343 இடங்களில் ஏறத்தாழ வெற்றியை உறுதி செய்துள்ளது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றியை உறுதி செய்கிறது. இதனால், மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளதுடன் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். இந்த நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. தற்போதைய மக்களவையின் பதவிகாலம் முடிந்து, புதிய மக்களவை தொடங்குவதோடு, பிரதமர் மோ…
-
- 0 replies
- 269 views
-
-
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க 300-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. பல மாநிலங்களில் 2014 தேர்தலைவிட அதிக இடங்களில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் சரிவை செய்துள்ளது. 50 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இந்தத் தேர்தலில் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். இந்த முறை அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியைப் பரிசளித்துள்ளது. கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் ராகுல்காந்தி செய்தி…
-
- 2 replies
- 685 views
-
-
மோடியின் வெற்றி எப்படி சாத்தியமானது? அசுடோஸ் என்டிடீவி பிரதமர் நரேந்திரமோடி தலைமை வகிக்கும் இந்துத்துவ கொள்கையை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் புதிய கருத்துருவாக்கங்களையும் புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தவேண்டிய தருணம் உருவாகியுள்ளது. இந்த வெற்றிக்காக மோடியை மாத்திரம் பாராட்டவேண்டும், குஜராத்தில் தான் கற்றுக்கொண்டதை அவர் தேசிய அளவில் பயன்படுத்தியுள்ளார். என்னை போன்ற அரசியல் ஆய்வாளர்கள் பலர் மோடியினால் மீண்டும் அந்த மாயாஜாலத்தை செய்து காண்பிக்க முடியாது என கருதினார்கள். ஆனால் இந்த விடயத்திலேயே மோடி மேதையாக காணப்படுகின்றார். நான் எப்போதும் அவர் பின்பற்றும் கொள்கைகயையும் அவரது பாணி அரசியலையும் விமர்சித்து வந்துள்ளேன். ஆனால் அவர் …
-
- 0 replies
- 430 views
-
-
அமித் ஷா, பிரதமர் மோடியின் கோட்டை எனக் கூறப்படும் குஜராத்தில் இந்த முறையும் 26 மக்களவைத் தொகுதிகளையும் 2-வது முறையாகக் கைப்பற்றுகிறது பாஜக. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 26 இடங்களையும் பாஜக கைப்பற்றிய நிலையில், 2-வது முறையாகவும் 26 இடங்களையும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜகவும், காங்கிரஸ் கட்சிக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டும், அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை நோக்கியுள்ளது. காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவேடாவைக் காட்டிலும் 5 லட்சம் வாக்குகள் முன்னிலையுடன் உள்ளார். இதேபோல பாஜக வேட்பாளர் மன்சு…
-
- 0 replies
- 406 views
-
-
60 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை! இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி 96 தொகுதிகளில் பா.ஜ.க 60 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அத்துடன் காங்கிரஸ் 17 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதுடன், தேசியவாத காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், டி.ஆர்.எஸ்.எஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மேலும் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாளம், தி.மு.க, அகாலிதளம், மிசோதேசிய முன்னணி ஆகிய கட்சிகள் தலா ஒவ்வொரு தொகுதியிலும் முன்னணி வகிக்கின்றன. http://athavannews.com/60-தொகுதிகளில்-பா-ஜ-க-முன்னி/ #################### ######################## ######################## ######## அமேதி தொகுதியில் ராகுல் காந்தி பின்னடைவு! …
-
- 2 replies
- 939 views
-
-
ஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு: அரியணை ஏறுகிறார் ஜெகன்மோகன் ரெட்டி ஐ.ஏ.என்.எஸ்ஹைதராபாத், ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியுடன் ஆட்சியைப் பிடிக்கிறது. அதேசமயம், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி இழக்கிறது. ராஜகசேகர் ரெட்டியிடம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை இழந்த சந்திரபாபு நாயுடு, தற்போது அவரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆட்சியைப் பறிகொடுக்கிறார். மொத்தம் உள்ள 174 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 108 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி 21 இடங…
-
- 0 replies
- 306 views
-
-
சூடுபிடித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் களம் – தற்போதைய நிலைவரம்! இந்தியவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 542 பேரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நிறைவடைந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில், தற்போதைய நிலைவரப்படி 17 தொகுதிகளில் பா.ஜ.க 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதுடன், மதசார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் முன்னணி வகிக்கிறது. அத்துடன் சிவ சேனா ஒரு தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், மிசோ தேசிய முன்னணி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. http://athavannews.com/சூடுபிடித்துள்ள-நாடாளு-6/
-
- 2 replies
- 417 views
-
-
குமாரசாமி இரவு தூங்கமாட்டார்; வெள்ளிக்கிழமைக்குப் பிறகு பதவியில் இருக்க முடியாது: சதானந்த கவுடா இந்து தமிழ் திசைபெங்களூரு கர்நாடக முதல்வராக குமாரசாமி வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 -ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கடந்த 19-ம் தேதி வெளியாகின. இதில் அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியதாவது: கர்நாடக முதல்வராக இருக்கும் குமாரசாமி…
-
- 3 replies
- 535 views
-
-
பாஜக அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா..? அமைச்சர் கனவில் அதிமுக வேட்பாளர்கள்..! ஒரு வேளை மத்தியில் பாஜக கூட்டணி அரசு அமைந்தால், மந்திரி சபையில் அதிமுக இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 7 கட்டங்களாக நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தல் முடிந்துவிட்டது . தேர்தல் முடிவு நாளை மறுதினம் வெளியாக உள்ளது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. பாஜகவும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நம்பிக்கையில் உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியே பெரும்பான்மையான இடங்களை வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் அதிமுக கூட்டணி சராசரியாக 4 - 9 தொகுதிகள் வரை வெல்லும் …
-
- 2 replies
- 1.2k views
-
-
பாகிஸ்தானில் அதிகளவான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிப்பு May 22, 2019 பாகிஸ்தானில் அதிகளவான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், ஒரு குழந்தை தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து அதிகளவான குழந்தைகள் தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இதனையடுத்து குழந்தைகளின் ரத்தத்தை பரிசோதித்து பார்த்ததில் அவர்கள் அனைவருக்கும் எச்.ஐ.வி இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த ஏப்ரல் 24ம் திகதி ஒரு சிறு பகுதியில் மட்டும் 15 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து சிந்து மாகாணத்தில் தீவிர …
-
- 0 replies
- 336 views
-
-
ரஃபேல் விவகாரம்: காங்கிரஸ் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப்பெற்றார் அனில் அம்பானி! ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவுனரான அனில் அம்பானி திரும்பப்பெற்றுள்ளார். ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடுகள் காணப்படுவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக குற்றம் சுமத்திவருகின்றது. இந்நிலையில், இதனை அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மீது அனில் அம்பானி அவதூறு வழக்கினை தொடர்ந்திருந்தார். இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நிறைவடைந்து தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அனில் அம்பானியின் குறித்த முடிவு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலி…
-
- 0 replies
- 232 views
-
-
மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி பாஜக கூட்டணி 306 இடங்களில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் கூட்டணி 132 இடங்களில் வெற்றி பெறும் எனவும், மற்றவர்கள் 104 இடங்களில் வெற்றி பெறும் எனவும் டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடை பெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 11-ம் தேதி முதல் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்தன. இறுதியாக இன்று 7-ம் கட்டத் தேர்தல் இன்று நடந்தது. இதைத்தொடர்ந்து கருத்து கணிப்பு இன்ற மாலை முடிவுகள் இன்று வெ…
-
- 6 replies
- 1.1k views
-
-
ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் இன்று May 21, 2019 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூரப்படுகின்ற நிலையில் பல முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர் அத்துடன் நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப்படங்கள் மற்றும் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதேவேளை ராஜீவ்காந்தியின் 28-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று 21ம்திகதி தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்…
-
- 2 replies
- 790 views
-
-
பாகிஸ்தான் தனது பொருளாதார தடுமாற்றங்களைச் சீர்த்திருத்த பலவகைகளிலும் போராடி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டுக்குப் புதிய பின்னடைவாக கச்சா எண்ணெய், எரிவாயு எடுக்கும் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. கராச்சி நகரின் அரபிக்கடல் பகுதியில் எரிவாயு, கச்சா எண்ணெய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிணறு தோண்டும் நடவடிக்கையில் அந்நாடு ஈடுபட்டிருந்தது. ஆனால் அவர்கள் இத்தனை காலம் முயன்று பார்த்ததில் எதிர்பார்த்ததைப் போல் தோண்டிய இடத்தில் எரிவாயுவும் இல்லை, கச்சா எண்ணெய்க்கான வாய்ப்பும் இல்லை என்று தெரியவந்ததாக பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சக தெரிவித்துள்ளது. தங்கள் தேவைக்கான எண்ணெய் அங்கு உள்ளது அதனை எடுக்கலாம் என்று தொடங்கிய திட்டம் தோல்வியடைந்தது பாகிஸ்தானுக்கு பெர…
-
- 0 replies
- 300 views
-
-
சூடுபிடிக்கும் தேர்தல் களம் – இறுதி வாக்குப்பதிவுகள் ஆரம்பம் மக்களவை தேர்தலுக்கான இறுதி மற்றும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்று வருகின்றன. 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப், பீகார், மத்தியப்பிரதேஸ் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் வாக்குபதிவுகள் இடம்பெறுகின்றன. இறுதிக்கட்ட தேர்தலில் 918 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குறித்த வாக்குப்பதிவில் சுமார் 10 கோடியே ஒரு இலட்சத்து, 75 ஆயிரத்து 153 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் ஒரு இலட்சத்து, 12 ஆயிரத்த…
-
- 0 replies
- 576 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது மத்திய அரசு. இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பை தீவிரவாத இயக்கம் என்ற பட்டியலில் கடந்த 2006-ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் சேர்த்தது. இதனால் ஐரோப்பிய நாடுகள் அந்த இயக்கங்களுக்கு தடை விதித்தன. இதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு நீதிமன்றம் வெளியிட்டது.அதில் 2009-ம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பதால் அந்த அமைப்ப…
-
- 21 replies
- 2.7k views
- 1 follower
-
-
கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோதி இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரண்டாவது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்தார். இந்திய மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோதி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா இருவரும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். மேலும், கடந்த இரு மக்களவை தேர்தல்களின்போது (2009, 2014), ஐபிஎல் போட்டிகளைக்கூட நடத்த முடியவில்லை. அரசாங்கம் வலுவாக இருந்தால், ஐபிஎல், ரம்சான், பள்ளித் தேர்வுகள் என அனைத்…
-
- 1 reply
- 584 views
-
-
இந்தியாவின் ஒரு பகுதியை உரிமை கோரியுள்ளது ஐ.எஸ்.எஸ். இந்தியாவின் ஒரு பகுதியை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு முதன் முறையாக உரிமை கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.எஸ் அமைப்பின் செய்தி இணையதளமான Amaq News Agency’யிலேயே இவ்விடயம் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதில் விலயாஹ் ஈஃப ஹிண்ட் (Wilayah of Hind) என்ற பகுதியை தங்களது புதிய மாகாணமாக ஐ.எஸ் அமைப்பு தங்களது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர்- சோபியான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் கொல்லப்பட்ட பயங்கரவாதியான அகமது சோபி, தமது அமைப்பை சேர்ந்தவர் என்பதையும் ஐ.எஸ் அமைப்பின் இ…
-
- 2 replies
- 583 views
-
-
1980களில் மோடி இ- மெயில் அனுப்பினார்? டிஜிட்டல் கேமரா வெச்சிருந்தார்?.. ட்விட்டரில் ‘தெறி’சர்ச்சை. 1980களில் தாம் டிஜிட்டல் கேமரா மற்றும் டிஜிட்டல் பேட் வைத்திருந்ததாக பிரதமர் மோடி அளித்த பேட்டி ட்விட்டரில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. மேகங்களுக்கு இடையே விமானங்கள் சென்றால் ரேடாரில் அது தெரியாது என பிரதமர் மோடி பகிரங்கமாக அளித்த பேட்டி பெரும் கேலிக்குரியதாகிவிட்டது. சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். தற்போது நியூஸ் நேஷன் டிவிக்கு மோடி அளித்த பேட்டி மற்றொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. நியூஸ் நேஷனுக்கு அளித்த பேட்டியில், 1990களின் தொடக்கத்திலேயே டிஜிட்டல் பேட் வைத்திருந்தேன். இப்போது அனைவரும் அதனை பயன்படுத்துகிறார்கள். அத…
-
- 0 replies
- 376 views
-
-
அல்வார் பாலியல் வழக்கு: ராஜஸ்தான் முதல்வர் ராஜிநாமா செய்யக்கோரி பா.ஜ.க. அழுத்தம் ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு தோல்வியடைந்துவிட்டதால், முதல்வர் அசோக் கெலாட் ராஜிநாமா செய்யவேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ராஜஸ்தானில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் மற்றும் மற்ற வன்முறைகளையும் நாங்கள் கண்டிக்கிறோம். மே 6-ஆம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெறுவதால் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் முதலில் ரகசியமாக வைக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்றது ஏப்ரல் 26-ஆம் திகதி, பொலிஸாரிடம் தெரிவிக்…
-
- 0 replies
- 492 views
-
-
மக்களவைத் தேர்தலுக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று May 12, 2019 இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்ற நிலையில் ஏற்கெனவே 425 தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளதனையடுத்து இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று உத்தரப் பிரதேசம் , மேற்கு வங்கம் , பிகாரர் , மத்தியப் பிரதேசம் , ஹரியானா , டெல்லி , ஜார்கண்டி ஆகிய பகுதிகளில் உள்ள 59 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறுகின்றது. அத்துடன் திரிபுராவில் 168 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புக்காகக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்ற…
-
- 0 replies
- 253 views
-
-
இலங்கையை தொடர்ந்து பாக்-ல் சீனா வல்லுநர்களுக்கு குறி... தெற்காசியாவில் சர்வதேச நாடுகளின் சதிராட்டம் ? ரெல்லி: தெற்காசியாவில் விஸ்வரூபமெடுத்து நிற்க விரும்பும் சீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் அந்நாட்டின் விஞ்ஞானிகள்,. பொருளாதார வல்லுநர்களை இலக்கு வைத்து தீவிரவாத குழுக்கள் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. தெற்காசியாவில் சீனாவின் அடுத்த கட்ட நகர்வுகளைத் தடுக்கும் வகையில் சர்வதேச நாடுகளின் திட்டமிடலுடன் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இலங்கையில் ஈஸ்டர் நாளன்று தொடர் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு 359 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இத்தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பா…
-
- 0 replies
- 615 views
-
-
மோடி எப்படிப்பட்ட தலைவர் ?' - `ரைம்ஸ்’ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! இந்த இதழ் டைம்ஸ் பத்திரிகையில் இடம்பெற்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. பிரபலங்கள் பிரபல சர்வதேசப் பத்திரிகைகளில் இடம்பெறுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை என்றாலும் அவர் குறித்தான கவர் ஸ்டோரியில் அந்தப் பத்திரிகை எடுத்திருக்கும் நிலைப்பாடு விவாதிக்கத்தக்க வகையிலாக அமைந்துள்ளது. பொதுத் தேர்தலில் இன்னும் இரண்டுகட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் ‘பிரிவினைவாதிகளின் தலைவர்’ என்று பிரதமர் மோடியைத் தனது பத்திரிகை அட்டையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். “பிரபலங்களுக்கு அடிபணிந்துபோன ஜனநாயகங்களில் முதன்மையாக இந்தியா இருக்கும். மோடியின் கடந்த ஐந்தாண்டுக்கால ஆட்சியில் இந்தியா பல வக…
-
- 2 replies
- 862 views
-
-
படத்தின் காப்புரிமை Ani Image caption ஆண்டனோவ் ஏ.என்-12 வகை விமானத்தின் மாதிரி படம் இந்திய எல்லைக்குள் அனுமதியில்லாத வான்வெளியில் பறந்த ஆண்டனோவ் ஏ.என்-12 வகை பாகிஸ்தான் சரக்கு விமானம் ஒன்றை இந்திய விமானப்படை இன்று, வெள்ளிக்கிழமை, இடைமறித்து, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க வைத்தது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இன்று மாலை 4.55 மணிக்கு தரையிறங்கிய அந்த விமானத்தின் குழுவினரிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று மூத்த அரசு அதிகாரிகள் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர். …
-
- 0 replies
- 382 views
-