அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் புது தந்திரம் அம்பலம் .. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் ஒரே நோக்கமாக உள்ளது. அதற்கு சமீபத்திய உதாரணம் தான், உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம்.புதிதாக கட்டிய இடுக்கி அணைக்கு போதிய நீர் செல்லாததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதை கண்டு எரிச்சல் அடைந்த கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது தகர்த்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி திரிகிறது. தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் வாழும் சுமார் ஒரு கோடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், விவசாயிகளின் ஒரே நீர் ஆதாரமாக இருப்பது முல்…
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
அருணாச்சலில் சீன படைகள் அத்துமீறல் – மீண்டும் பதற்றம்… October 16, 2018 1 Min Read காஷ்மீரில் உள்ள லடாக் எல்லைப் பகுதியில் 2 சீன ஹெலிடிகொப்டர்கள் அத்துமீறி நுழைந்து பறந்தன என இந்தோ – திபெத் எல்லைக் காவல்துறைப் படையினர் தெரிவித்துள்ளனர். சீனாவைச் சேர்ந்த எம்ஐ-17 ரக ஹெலிகொப்டர்கள் இரண்டு, லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து 5 நிமிடங்களுக்கு மேல் பறந்தததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய பகுதிக்குள் சீன ஹெலிகொப்டர்கள் அத்துமீறி நுழைவது இது முதல் முறை அல்ல எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள் இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 5 முறை சீன ஹெலிகொப்டர்கள் அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளன…
-
- 0 replies
- 858 views
-
-
22 APR, 2024 | 11:41 AM பெங்களூரு: கர்நாடக பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நேஹா என்ற மாணவியை சக மாணவர் ஃபயாஸ் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கொலையாளி ஃபயஸின் தந்தை பாபா சாஹேப் சுபானி தனது மகனின் செயலுக்காக இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹுப்ளியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன் ஹிரேமத். தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத், ஹுப்பள்ளியில் உள்ள கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் படித்த ஃபயாஸ் (23) என்ற மாணவர் பல்கலைக்கழக வளா…
-
- 2 replies
- 345 views
- 1 follower
-
-
உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை: நரேந்திர மோடி. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக ஓஸ்திரியாவுக்கு சென்றிருந்த நிலையில் இன்று காலை டெல்லிக்கு திரும்பியுள்ளார். ஒஸ்ட்ரியாவுக்கு (AUSTRIA) விஜயம் செய்திருந்த போது , அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதனை தொடர்ந்து ஓஸ்திரியாவில் உள்ள இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றியிருந்தார். அப்போது, “பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் நமது திறமை, அறிவை பகிர்ந்து வருகிறோம். நாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை. இந்தியா எப்போது அம…
-
-
- 10 replies
- 540 views
- 1 follower
-
-
இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் வெளியிட தடை! காஷ்மீர் பிரச்சினையில் இந்திய அரசு எடுத்துள்ள அதிரடி தீர்மானங்களின் காரணமாக இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தானிடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையின் காரணமாக இந்தியாவுடனான வர்த்தக உறவை துண்டித்துக் கொள்வதாகவும், தூதரக உறவை குறைத்துக் கொள்வதாகவும் பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. இதன்காரணமாக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 40 ஆண்டுகளாக இந்திய திரைப்படங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த 2005ஆம் ஆண்டு பாகிஸ்தான் நீக்கியது. இதனையடுத்து காஷ்மீர் விவகாரத்தின் காரணமாக இந்திய திரைப்படங்கள் மீது பாகிஸ்தா…
-
- 0 replies
- 413 views
-
-
படத்தின் காப்புரிமை MONEY SHARMA ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விவகாரத்தில் ப. சிதம்பரம் கைதுசெய்யப்பட்டிருப்பது ஒரு அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார் தி இந்து குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம். இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் என்கிறார் அவர். பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனுக்கு அளித்த பேட்டியிலிருந்து: கே. முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கைதுசெய்யப்பட்டிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன? ப. இது ஓர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அவர் மீது ஒரு குற்றச்சாட்டும் சுமத்…
-
- 5 replies
- 1.2k views
-
-
* இரண்டரை ஆண்டுக்கு பின் முதல்வர் பதவியை ஒப்படைக்க எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் போட வலியுறுத்தல் மும்பை: மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜ- சிவசேனா இடையே கருத்து வேறுபாடு அதிகமாகி இருக்கிறது. ‘இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி, 50 சதவீத அமைச்சர்கள் பதவி வழங்கப்படும்’ என எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் எழுதி கொடுக்க வேண்டும் என பாஜ.வுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிபந்தனை விதித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க இருக்கின்றன. ஆனால், ஆட்சியில் தங்களுக்கு முதல்வர் பதவி உட்பட அனைத்திலும் சமபங்கு கொடுக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூற…
-
- 0 replies
- 328 views
-
-
நிர்பயா வழக்கு – உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில், மத்திய அரசின் மனு மீது, டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. டெல்லியில் 2012ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் தொடர்ச்சியாக கருணை மனு, சீராய்வு மனு தாக்கல் செய்து வருவதை அடுத்து, தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. கடந்த முதலாம் திகதி சந்தேகநபர்களை திஹார் சிறையில் தூக்கிலிட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய…
-
- 1 reply
- 348 views
-
-
குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்பட்ட இரவு விருந்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்ப் மகள் இவான்கா டிரம்ப் ஆகியோருடன் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். நேற்று நண்பகலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வருகை தந்த அவர், சபர்மதி காந்தி ஆசிரமம், மொதோரா மைதானம், தாஜ்மகால் ஆகிய இடங்களுக்குச் சென்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டொனால்ட் டிரம்புக்கு இன்று இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில், பிரதமர் மோடி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய அமைச்சர்கள், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தெலங்கானா முதல்வர் சந்திர…
-
- 2 replies
- 785 views
-
-
03 Oct, 2025 | 05:17 PM இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் 'கோல்ட்ரிப்' (Coldrip) எனப்படும் இருமல் மருந்தை உட்கொண்டதனால் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் இந்த மருந்து விற்பனைக்கும் விநியோகத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தற்காலிகத் தடை உத்தரவை தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை பிறப்பித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த 15 நாட்களுக்குள் 1 முதல் 7 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு அதற்குக் காரணம் என்பது தெரியவந்தது. உயிரிழந்த அந்தக் குழந்தைகள் அனைவரும் 'கோல்ட் ரிப்' உள்ளிட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டிருந்தமை விசாரணையில் கண்டறி…
-
-
- 10 replies
- 623 views
- 1 follower
-
-
மணிப்பூரில் தொடரும் கலவரம். 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு! மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி சமூகங்களுக்கிடையில் கடந்த 2 வருடங்களாக ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து பா.ஜ.க அரசு விலகியதால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நிலவிய நிலையில் கடந்த 04ஆம் திகதி கெம்சந்த் சிங் தலைமையில் புது பா.ஜ.க அரசு பதவியேற்றது. இந்நிலையில் மீண்டும் மணிப்பூரில் கலவரம் வெடித்துள்ளது. உக்ருல் மாவட்டம் லிட்டன் சரேய்கோங் கிராமத்துக்குள் புகுந்த கும்பலொன்று தங்குல் சமூகத்தை சேர்ந்த நபரொருவரை தாக்கி, வீடுகளுக்கும் தீ வைத்துள்ளதுடன் குறித்த கிராமத்தில் இன்று (10) அதிகாலை துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிரு…
-
- 0 replies
- 66 views
-
-
முன்னாள் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரர் ஜெயமோகன் போதையில் இருந்த மகனால் அடித்து கொலை கொல்லம், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர் ஜெயமோகன் தம்பி. கேரளாவின் மணக்காடு பகுதியில் வசித்து வரும் இவர் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து துணை மேலாளராக ஓய்வு பெற்றவர். கடந்த 2 வருடங்களுக்கு முன் இவரது மனைவி அனிதா காலமானார். இதனால் அவர் தொடர்ந்து மனவருத்தத்துடன் இருந்து வந்துள்ளார். இவரது மூத்த மகன் அஸ்வின், ஓட்டலில் ‘செஃப்’பாக இருந்து வருகிறார். எனினும், பண தேவைக்காக தனது தந்தையை சார்ந்தே இருந்துள்ளார். மனைவி மறைவு மற்றும் மகனின் நிலை ஆகியவற்றால் வருத்தத்தில் இருந்த ஜெயமோகன் தனது மகனுடன் சேர்ந்து மது குடிக்க ஆரம்பித்த…
-
- 0 replies
- 398 views
-
-
பாகிஸ்தானின் ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா – ஆயுதங்களும் மீட்பு! பாகிஸ்தானினுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் கதுவா அருகே இன்று (20) காலை 5.10 மணிக்கு பறந்த போது சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் இருந்து சுமார் 250 மீற்றர் தொலைவில் குறித்த விமானம் பறந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். பலவிதமான ஆயுதங்களை தாங்கிய இந்த விமானத்தில் இருத்து M4-கார்பின் மெசின் துப்பாக்கி, M4-தோட்டாக்கள் இரண்டு, 5.56-எம்எம் வகை தோட்டாக்கள் 60, கைக் குண்டுகள் 7 என்பன மீட்கப்பட்டுள்ளன. …
-
- 8 replies
- 815 views
-
-
UNSC on Kashmir: காஷ்மீர் கடந்து வந்த பாதை - 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் பட மூலாதாரம், GETTY IMAGES இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்புச் சட்டப்பிரிவு 370ன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகளை இந்திய அரசு கடந்த ஆண்டு (2019) ஆகஸ்ட் 5ம் தேதி அகற்றியதோடு ஜம்மு - காஷ்மீர் - லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாகவும் அந்த மாநிலத்தைப் பிரித்தது. இதையடுத்து, அப்போது இந்தப் பிரச்சனை ஐ.நா.விலும் விவாதிக்கப்பட்டது. அதையொட்டி எழுதப்பட்ட காஷ்மீரின் சுருக்கமான வரலாற்று நிகழ்வுகளை காஷ்மீரின் நிலை மாற்றி…
-
- 0 replies
- 632 views
-
-
காஷ்மீரில் கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றம்- திறந்தவெளியில் குழந்தை பிறந்தது காஷ்மீர் மாநிலம் பாண்டிபோரே மாவட்டம் வேவான் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாண்டிபோரேவில் உள்ள ஆஸ்பத்திரியில் அந்த பெண்ணை அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பதற்கான பாசிடிவ் முடிவு வந்தது. கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா இருப்பதால், சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மறுத்தனர். அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹாஜின் பகுதியில் உள்ள கோவிட் மருத்துவமனைக்கு கொண்டு செ…
-
- 0 replies
- 456 views
-
-
இந்திய மாணவர்கள் எவரும்... வீட்டை விட்டு, வெளியே வர வேண்டாம்! இந்தியத் தூதரகம் அழைப்புவிடுக்கும் வரை உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மத்திய வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது. சுமி நகரில் சுமார் 700 மாணவர்கள் சிக்கியுள்ள நிலையில். வாகன வசதி கிடைக்காத அவர்கள் நடந்தே நாட்டின் எல்லை வரை செல்ல முடிவெடுத்து ஒரு குழுவாக சென்றுள்ளனர். இது தொடர்பாக படங்கள் வெளியான நிலையில் குண்டுகள் பொழியும் சூழலில் மாணவர்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என்றும் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறும் இந்திய தூதரகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுடன் தூதரகங்கள் மூலம் தொடர்பு கொண்டு வருவதாகவும் அவர்களுக்கு அழ…
-
- 2 replies
- 255 views
-
-
ராமர் சிலைக்கான பாறைகள் நேபாளத்தில் இருந்து வரவைப்பு! அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், ராமரின் குழந்தை வடிவ சிலையை செதுக்குவதற்கான 2 அபூர்வ பாறைகள், நேபாளத்திலிருந்து அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நேபாள நாட்டின் முஸ்டாங் மாவட்டம் முக்திநாத் அருகே உள்ள கண்டாகி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இந்த பாறைகள், 6 கோடி ஆண்டுகள் பழமையானவையாகும். ஒரு பாறை 26 டன் எடையும், இன்னொரு பாறை 14 டன் எடையும் கொண்டவை. நேற்று (வியாழக்கிழமை) இந்த பாறைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 51 வேத விற்பன்னர்களும் வழிபட்டனர். நேபாளத்தில் உள்ள ஜானகி கோவில் நிர்வாகி மகந்த் தபேஸ்வர் தாஸ், அந்த பாறைகளை ராமஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் ஒப்படைத்த…
-
- 0 replies
- 299 views
-
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கீர்த்தி துபே பதவி, பிபிசி செய்தியாளர் 27 நிமிடங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, காலை 9.30 மணிக்கு, அரசு ஆதரவுடன் ஹேக்கர்கள் சிலர், செல்ஃபோன் தகவல்களை திருட முயன்றனர் என்று ஆப்பிள் நிறுவனத்திலிருந்து தனக்கு குறுஞ்செய்தி வந்ததாக, திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மெஹுவா மொய்த்ரா, X தளத்தில், பதிவிட்டிருந்தார். மெஹுவா மொய்த்ரா மட்டுமல்ல, சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் உள்பட பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில பத்திரிகையாளர்களும் கூட தங்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தில…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா Facebook Twitter Google+ Mail Text Size Print பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை இந்தியாவின் சுகோய் 30MKI விமானம் சுட்டு வீழ்த்தியது. பதிவு: மார்ச் 04, 2019 19:31 PM ஸ்ரீநகர், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் போர் விமானங்களும் இந்திய வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைய முயன்றன. …
-
- 0 replies
- 429 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் இந்து வைத்தியர் மீது மத அவமதிப்பு வழக்கு-கடைகளுக்கு தீ வைப்பு பாகிஸ்தானில் அண்மைக் காலங்களில் மத அவமதிப்பு தொடர்பாக பலர் நெருக்கடிகளுக்கு உள்ளாகினர். இதன்போது ஆசியா பீபி என்ற பெண் கூட நாட்டை விட்டு வௌியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இந்தநிலையில், தற்போது மத அவமதிப்பு மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்து வைத்திய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள புலாடியான் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்ற வைத்தியர் இந்து மதத்தை சேர்ந்தவராவார். இவர் கால்நடை வைத்தியராக பணிப்புரிந்து வருகிறார். இவர் மத அவமதிப்பு செய்வதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. குறித்த பகுதியை சேர்ந்த தலைமை மதகுருவான மவுலவி இசாக் நோக்ரி என்…
-
- 0 replies
- 419 views
-
-
"பல தசாப்தங்களுக்கு பிறகு, தனிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக இந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்" என்று நாடாளுமன்றத்தில் பேசியபோது பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோதி இன்று உரையாற்றினார். "நான் தேர்தல்களை வெற்றி, தோல்வி என்ற பார்வையில் பார்ப்பதில்லை. 130 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக இதனை பார்க்கிறேன். ஒவ்வொரு குடிமகனின் வாழ்வின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதில் எனக்கு மகிழ்ச்சி" என்று அவர் தெரிவித்தார். கடந்த 70 ஆண்டுகளாக இருக்கும் சிலவற்றை மாற்றுவதற்கு நேரம் தேவைப்படும் என்றும் …
-
- 0 replies
- 307 views
-
-
Automatic Exchange Of Information ஒப்பந்தத்தின் மூலம் இந்த விவரத்தை சுவிஸ் வங்கி இந்தியாவுடன் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள், பெரும்பாலும் அந்த பணத்தை தங்களது சுவிஸ் வங்கி கணக்கில் வைத்திருக்கிறார்கள். எனவே கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலை வெளியிட வேண்டுமென எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியை அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருக்கும். பாஜக, காங்கிரஸ் என இதில் வித்தியாசம் காண முடியாது. கேட்கும் போதெல்லாம் ஆளும் கட்சியும் ஏதாவது ஒரு பதிலை சொல்லி வைப்பார்கள். இந்தியர்கள் மட்டுமின்றி, உலக நாடுகளில் அனைத்திலிருந்தும் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்படுகிறது. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபா…
-
- 1 reply
- 489 views
-
-
படக்குறிப்பு, பகிடெரு கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து வெந்நீர் வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், கர்க்கிபட்டி உமாகண்ட் பதவி, பிபிசிக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீரானது கிணறுகள், கடல் நீர் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருகின்றது. தெலங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பகிடேரு கிராமத்தில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து வெந்நீர் வந்துகொண்டிருக்கிறது. மோட்டார்களோ, வேறு எந்த உபகரணங்களோ இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளாக 365 நாட்களும் வெந்நீர் வந்துகொண்டிருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். "இந்த பகுதியில் அதிக நிலக்கரி இருக்கின்றது. பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரி வளங்களை பற்றி தெர…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
ரா உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்! 28 Jun 2025, 8:54 PM ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் ரா எனப்படும் உளவு அமைப்பின் தலைவராக பதவி வகித்து வரும் ரவி சின்ஹா வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய தலைவரை நியமிப்பதற்கு ஆலோசித்து வந்த மத்திய அரசு பராக் ஜெயினை புதிய தலைவராக அறிவித்துள்ளது. ஜெயின் 1989 ஆம் ஆண்டு பஞ்சாப் கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தற்போது விமான ஆராய்ச்சி மையத்தின் (ARC) தலைவராக உள்ளார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மறைவிடங்களில் துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களை எளிதாக்கும் உளவு தகவல்களை வழங்கியதன் மூலம், ஆபரேஷன் சிந்தூரில் ARC முக்கிய பங்கு வகித்ததாக அறியப்படுகிறது. அந்தவகைய…
-
- 1 reply
- 172 views
-