அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3315 topics in this forum
-
இழப்புகளை சந்திப்பீர்கள்.. அதிர்ச்சியை தாங்க முடியாது.. இந்தியாவிற்கு சீனா எச்சரிக்கை.! பெய்ஜிங்: இந்தியா பெரிய இழப்புகளை சந்திக்கும், இந்தியாவால் இதற்கு மேலும் அதிர்ச்சியை தாங்க முடியாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. களமிறக்கப்பட்ட நவீன ஆயுதங்கள். இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்படும் படைகள். முதல் முறையாக சீனா எல்லை பிரச்சனையில் இந்தியாவிற்கு எதிராக பேசி இருக்கிறது.இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பிரச்சனை மோசம் அடைந்து வருகிறது. இரண்டு நாட்டு படைகளும் எல்லையில் ராணுவத்தை குவித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இதனால் போர் வெடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். மத்தியஸ்தம் இந்த பிரச்சனையில் மத்தியஸ்தம் பேச விருப்பப்படுவதா…
-
- 1 reply
- 438 views
-
-
லடாக் பகுதி எல்லை பிரச்சினை : இந்திய – சீன இராணுவ மட்ட கலந்துரையாடல் எல்லை நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்திய – சீன இராணுவ மட்ட கலந்துரையாடலுக்கான ஒப்புதல்கள் இருதரப்பிலிருந்தும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையில், உண்மையான கட்டுப்பாட்டு எல்லை மாற்றுவது ஏற்புடையதல்ல என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீயை சுட்டிக்காட்டியே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார் . எனவே பதற்றங்களுக்கு வழிவகுக்காது எல்லையில் காணப்பட கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை எட்டும் வகையில் மூத்த இராணுவ அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல் அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சின் …
-
- 1 reply
- 355 views
-
-
இலங்கை - இந்திய மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை General17 July 2025 இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பினரையும் உடன்பாடு ஒன்றுக்கு கொண்டு வருவதே முக்கியமானதாகும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கே இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் நாராயண் திருப்பதி இந்த விடயம் தொடர்பில் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள் மற்றும் இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுடன் இந்த பிரச்ச…
-
- 1 reply
- 112 views
-
-
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் ஆ. நந்தகுமார் பிபிசி தமிழ் 19 ஆகஸ்ட் 2025, 02:52 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்க வேண்டும் எனச் சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது நாடு தழுவிய அளவில் ஒரு பரந்த விவாதத்தைத் தூண்டியுள்ளது. குழந்தைகளைக் கடிப்பது, சாலையில் நடந்து செல்வோரைக் கடிப்பது, ரேபிஸ் நோய் உயிரிழப்புகள் என தெருநாய்கள் விவகாரம் ஓர் ஆபத்தான விஷயமாக மாறியுள்ளதால், ஒரு தரப்பினர் இந்த உத்தரவை வரவேற்கின்றனர். அதேசமயம் நாய்களை இப்படி கூண்டோடு அகற்றுவது மனிதாபிமானமற்ற செயல் என்றும், சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்றும் விலங்கு நல அமைப்புகள் கூறுகின்றன. ஆ…
-
- 1 reply
- 180 views
- 1 follower
-
-
கோவாவில் விடுதியொன்றில் தீ விபத்து – 25 பேர் உயிரிழப்பு! வடக்கு கோவாவில் செயல்பட்டு வந்த இரவு விடுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபா நிவாரணமாக வழங்கவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதுடன் அவர்களில் பலர் சுற்றுலாப் பயணிகள், விடுதி ஊழியர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். இதேவேளை, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணி்களில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து சமையல் அறை பகுதியில் நிகழ்ந்துள்ள…
-
- 1 reply
- 127 views
- 1 follower
-
-
மக்களவைத் தேர்தலில் 295 முதல் 335 இடங்களில் வென்று பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்: ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல் 27 DEC, 2023 | 12:01 PM புதுடெல்லி: வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில்இ 3-வது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா அல்லது காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில்இ இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பாக ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி வோட்டர் அமைப்பு இணைந்துஇ கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. டிசம்பர் 15 முதல் டிசம்பர் 21 வரையில்…
-
- 1 reply
- 186 views
-
-
இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு – 2 நாட்களில் 2.72 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்தனர். இந்தியாவில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தொடர்ந்து பங்குச்சந்தையில் தளம்பல் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த 2 நாட்களில் முதலீட்டாளர்கள் 2.72 லட்சம் கோடியை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் அமெரிக்க டொலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாட்டு நாணயங்கள் சரிவினை சந்தித்து வருகின்ற நிலையில் , இந்திய ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவைச் …
-
- 1 reply
- 833 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செபி தலைவர் மதாபி புச் (கோப்புப்படம்) 49 நிமிடங்களுக்கு முன்னர் அதானி குழுமத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பெர்க் தற்போது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மதாபி புச் மற்றும் அவருடைய கணவர் மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இந்தக் குற்றாச்சாட்டை இருவரும் மறுத்துள்ளனர். அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை வைத்துள்ளதாக அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் தனிநபர் ஆவணங்களை மேற்கோளிட்டுத் தெரிவித்துள்ளது. செபி தலைவர் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர்…
-
- 1 reply
- 690 views
- 1 follower
-
-
பெட்ரோல் ரூ. 9.50, டீசல் ரூ.7, சிலிண்டர் ரூ.200 வரை குறைந்தது - நரேந்திர மோதி அரசின் புதிய அறிவிப்புகள் - பின்னணி என்ன? 21 மே 2022, 14:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 9.50, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7, சிலிண்டர் ஒன்றின் விலையை ரூ.200 வரை குறைத்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதன் மூலம் இந்த அறிவிப்பு சாத்தியமாகியிருக்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீதான மாநில அளவிலான மதிப்புக் கூட்டு வ…
-
- 1 reply
- 209 views
- 1 follower
-
-
அசாம் மாநிலத்தில், தொடரும் மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி... இதுவரை 62 பேர் உயிரிழப்பு இந்தியா – அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வடைந்துள்ளது. மழை வெள்ளத்தால் 32 மாவட்டங்களில் மொத்தம் 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்பு பணி தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 1.56 இலட்ச…
-
- 1 reply
- 200 views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் புத்துயிரூட்ட முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி மலேசியாவில் போராட்டங்கள் துவங்கியுள்ளன. மலேசிய காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இரு வேறு மாநிலங்களை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களும் இதில் அடங்குவர். இந்நிலையில், மலாக்கா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதனின் மனைவி உமாதேவி தனது கணவரை விடுவிக்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பை வெளியிட்டதோடு, கோலாலம்பூரில் உள்ள மலேசிய காவல்துறை தலைமை அலுவலகமான புக்கிட் அமானுக்கு எதிரே சாலையோரம் அமர்ந்து தனது போராட்டத்தை…
-
- 1 reply
- 375 views
-
-
சீனா ஆதரவாளரை தூதுவராக ஏற்றுக்கொள்ள இந்தியா இணக்கம் 20 Views இந்தியாவுக்கான இலங்கை தூதுவராக மிலிந்த மொரகொடவை ஏற்றுக்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்காவின் இந்த நியமனத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற ஊகங்கள் முன்னர் வெளியிடப்பட்டிருந்தன. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒரு நெருக்கமான பிணைப்பை ஏற்றுடுத்துவதில் முன்னின்று உழைத்ததுடன், சீனாவின் ஆதரவாளராக மொரகொட இருப்பதே இந்தியா அவரது நியமனத்தை ஏற்றுக்கொள்ளாது என்பதற்கான காரணங்களாக கூறப்பட்டன. ஆனால் இந்தியா தற்போது மொரொகொடாவை ஏற்றுக்கொள்ளும் தனது முடிவில் மாற்றமில்லை எனவும், அவரின் பதவியேற்பில்…
-
- 1 reply
- 590 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இழுபறி ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி 4 மணி நேரங்களுக்கு முன்னர் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை புதன்கிழமை அன்று ஏற்றுக்கொண்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஒரு பெரிய நடவடிக்கை என்று மத்திய அரசு கூறுகிறது. குழுவின் பரி…
-
- 1 reply
- 166 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாலத்தீவு அதிபர் முய்சு, "தங்கள் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகளை திரும்பப் பெற இந்திய அரசு ஒப்புக்கொண்டதாக" தெரிவித்திருந்தார். 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு மாலத்தீவு அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சிகளைக் கொடுத்துள்ளது. முதலில் தனது நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகளை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அது கூறியது. தற்போது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் போடப்பட்ட ஹைட்ரோகிராஃபிக் சர்வே ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி, அப்போதைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ்ஹின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்தி…
-
- 1 reply
- 230 views
- 1 follower
-
-
குழந்தைகள் பாலியல் காணொளிகள் கொரோனா காலத்தில் அதிகரித்தது ஏன்? வினீத் கரே பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 2020 ஆம் ஆண்டு ஜூலையில், அசாம் மாநில காவல்துறைக்கு 'சந்தேகத்திற்கிடமான' ஃபேஸ்புக் பக்கம் தொடர்பாக புகார் வந்தது. அரச சார்பற்ற அமைப்பு ஒன்றின் மூலம் இந்தப்புகார் கிடைத்தது. இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் குழந்தைகளின் வீடியோக்கள் மற்றும் இடுகைகள் உள்ளன என்றும், அந்தப்பக்கம் சிறார் பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள் அல்லது CSAM (Child Sexual Abuse Material) ஐ ஊக்குவிப்பதாக இருக்கலாம் என்றும் அந்த அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கப்பட…
-
- 1 reply
- 380 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்திய ராணுவம் அனந்த்நாக்கில் புதன்கிழமையன்று கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், ரியாஸ் மஸ்ரூர் பதவி, பிபிசி உருது செய்தியாளர், ஸ்ரீநகரில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அழகிய சுற்றுலாத் தலமான கோகர்நாக்கில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் சில தினங்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் ஒரு கர்னல், ஒரு மேஜர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் டிஎஸ்பி ஆகியோர் கொல்லப்பட்டனர். …
-
- 1 reply
- 295 views
- 1 follower
-
-
விவசாயிகளின் பிரச்சினை : கனடா பிரதமருக்கு இந்தியா கண்டனம்! வேளாண் சட்டமூலங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று (புதன்கிழமை) ஏழாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தெரிவித்துள்ள கருத்திற்கு இந்தியா கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா “ இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தொடர்பாக முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ளாமல் கனடாவைச் சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவிப்பதைக் காண்கிறோம். ஒரு ஜனநாயக நாட்டின் உள்விவகாரங்கள் குறித்த இதுபோன்ற கருத்துகள் தேவையற்றவை. இராஜாங்க ரீதியான பேச்சுகள் அரசியல் காரணங்களுக்காக தவறாக சித்திரிக…
-
- 1 reply
- 265 views
-
-
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: நாடு கடத்தப்பட்ட ராஜீவ் சக்சேனா கைது! ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தேடப்பட்டு வந்த டுபாய் தொழிலதிபர் ராஜீவ் சக்சேனா கைது செய்யப்பட்டுள்ளார். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் எனப்படும் குறித்த வழக்கில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் அவரை அமலாக்கத்துறை இன்று (வியாழக்கிழமை) கைது செய்துள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகொப்டர்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் 450 கோடி ரூபாய் இலஞ்சம் வழங்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, இவ்விடயம் தொடர…
-
- 1 reply
- 429 views
-
-
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணையை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜ துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. ஆனால் தன் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அரசியலைப்பு சட்டத்தை பின்பற்றி அமைக்கப்பட்டவில்லை எனக்கோரி முஷாரஃப் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த திங்கள்கிழமை, இந்த மேல்முறையீட்டு வழக…
-
- 1 reply
- 509 views
-
-
பிரேசிலில் பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்திய போது இந்தியாவுக்கு ரஷ்யாவின் எஸ்.400 ஏவுகணைத் தடுப்பு ஆயுதங்களை விற்பது தொடர்பான ஆலோசனை நடந்திருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார், கடந்த ஆண்டு இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ்.400 ஏவுகணைத் தடுப்புகளை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சீனாவின் எல்லை அச்சுறுத்தலை எதிர்கொள்ள இவை தேவைப்படுவதாக இந்திய பாதுகாப்புத் துறை தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தின் படி அனைத்து நடவடிக்கைகளும் சுமுகமான முறையில் நடைபெற்று வருவதாக பிரேசிலில் செய்தியாளர் சந்திப்பின்போது புதின் தெரிவித்துள்ளார். தனது இறையாண்மையை பெரிதாக மதிக்கும் இந்தியாவுக்கு 135 கோடி மக்கள் தொகை இருப்பதாகவும் குறிப்பிட்ட புதின், இந்தியாவுடன் தொழில்நுட்பம் மிகுந்த ஆயுத…
-
- 1 reply
- 450 views
-
-
43 லட்சம் இந்தியர்கள் சாக வின்ஸ்டன் சர்ச்சில் காரணமானது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,ஜூபைர் அகமது பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROLI BOOKS பிரிட்டனில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அவர் இரண்டாம் உலக போரின் நாயகனாக நினைவு கூரப்படுகிறார். ஹிட்லர் போன்ற சக்தி வாய்ந்த சர்வாதிகாரியை எதிர்த்துப் போராடி தோற்கடித்த தலைவராக அவர் பார்க்கப்படுகிறார். அவர் பிரிட்டனில் ஒரு சக்திவாய்ந்த தலைவராக பார்க்கப்படுகிறார் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் பிரிட்டனின் காலனித்த…
-
- 1 reply
- 607 views
- 1 follower
-
-
13 MAY, 2024 | 10:28 AM சஷி தரூர் இந்திய பொதுத்தேர்தல் அதன் இரண்டாவது மாதத்தில் பிரவேசித்திருக்கும் நிலையில், மிகவும் சம்பிரதாயபூர்வமான எதிர்பார்ப்புகள் தலைகீழாகப் போய்விட்டன. பெரிய மாறுதல் எதுவும் சாத்தியமில்லை என்று நம்புகின்ற அறிஞர்கள் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் வசதியான வெற்றியைப் பெறுவார் என்று நீண்ட நாட்களுக்கு முன்னரே முடிவெடுத்துவிட்டார்கள். ஆனால், ஏழு கட்ட தேர்தலில் ஏற்கெனவே இரு கட்டங்கள் நிறைவடைந்து, சுமார் 190 தொகுதிகளில் மக்கள் தங்கள் வாக்குகளை ஏற்கெனவே பதிவுசெய்துவிட்ட நிலையில் இனிமேலும் நிலைவரம் அவ்வளவு சுலபமானதாக தோன்றவில்லை. வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியே வருகின்ற மக்களிடம் கருத்துக்கேட்டு …
-
- 1 reply
- 298 views
- 1 follower
-
-
பாகிஸ்தானை வீழ்த்த இந்திய இராணுவத்திற்கு 12 நாட்களுக்கு மேல் தேவைப்படாது- மோடி போர் என்று வந்தால், பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு இந்திய இராணுவத்திற்கு 12 நாட்களுக்கு மேல் தேவைப்படாதென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் NCC அமைப்பின் ஒருமாத முகாம் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த முகாமின் ஒரு பகுதியாக கேரியப்பா பரேட் மைதானத்தில் அணிவகுப்பு நடைபெற்றது. இதன்போது அதில் கலந்துகொண்டு பேசிய நரேந்திர மோடி, காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இதற்கு முன் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என கேள்வி எழுப்பினார். மேலும் 4 குடும்பங்கள் இந்த விவகாரத்தை கையாண்ட விதத்தால் பிரச்சினை பூதாகரமாகத்தா…
-
- 1 reply
- 583 views
-
-
இந்திய இசை கருவிகளின் சத்தத்தை... வாகனங்களின் ஒலிப்பான் சத்தமாக மாற்ற நடவடிக்கை இந்திய இசை கருவிகளின் சத்தம் மாத்திரமே வாகனங்களின் ஒலிப்பான் சத்தமாக பயன்படுத்தப்பட வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதற்காக புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அமைச்சர் நிதின் கட்கரி மேலும் கூறியுள்ளதாவது, ஆம்புலன்சுகள் மற்றும் பொலிஸ் துறையினரால் பயன்படுத்தப்படும் சைரன்களின் சத்தத்தை மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அகில இந்திய வானொலியில் ஒலிபரப…
-
- 1 reply
- 227 views
-
-
2006-ல் சிறுமிகள் உட்பட 19 பெண்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை, மேல்முறையீட்டில் வழக்கிலிருந்து விடுத்திருக்கிறது அகமதாபாத் உயர் நீதிமன்றம். இந்தியா மட்டுமல்லாமல் உலகையே உலுக்கிய சம்பவங்களில் ஒன்று 2006-ம் ஆண்டு நடந்த நிதாரி கொடூரம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் சிறு கிராமம் நிதாரி. இந்த கிராமத்தில் இருந்த ஓர் வீட்டின் பின்புறமுள்ள சாக்கடையில், மனித உடல் பாகங்கள் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், டிசம்பர் 29, 2006 அன்று, அந்தச் சாக்கடையிலிருந்து எட்டு சிறுமிகளின் எலும்புக்கூடுகளை கண்டெடுத்தனர். …
-
- 1 reply
- 348 views
-