யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
40 topics in this forum
-
காலங்கள் வேகமாகக் கடக்கின்றன கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்புக்களும் இடர்களும் தந்த மனவலிகள் வேகம் இல்லாமல் கடந்து சென்ற பாதையில்....... இந்தக்கணம் எதோ ஒரு உணர்வு எனைத் தட்டிச் செல்கின்றது கண்களுக்குத் தெரியாத முகங்கள் மறக்க முடியாத நட்புக்கள் உணர்வான வார்த்தைகள் மனம் விட்டுச் சிரித்த வரிகள் யாழ் என்ற களம் தந்த உறவுகள் இவையெல்லாம் சேர்ந்து இந்தக் கடினமான காலத்தில் உங்களுடன் கைகோர்க்கத் தூண்டுகின்றது காத்திருப்போம் தனிமையில் விழித்திருப்போம் அச்சமின்றி கொரோனாவையும் கடந்து செல்லும் இந்தக்களம் இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
-
- 9 replies
- 1.3k views
-
-
என்னை உணரவைக்க வந்ததா? ------------------------------------------------------------------- இறுமாப்பில் எழுந்தாய் நீ மானிடனே என்னை வென்றதாய் என்னைப் புறந்தள்ளி இமயத்தையும் கடந்தாய் ஈரேழு உலகும் பறந்தாய் மறந்தாய் உன்னை; உன்னை மட்டுமல்ல என்னையும் மறந்தாய் எங்கெங்கோ பறந்தாய் என்னைப் பாதுகாக்க என்னோடு இணைந்து செல்ல சிந்திக்கவும் மறந்தாய் காணும் பொருளெங்கும் கண்கள் அலைபாய விண்ணையும் மண்ணையும் உன் எண்ணப்படி கடந்தாய் உன்னை அளப்பாய் என்னையும் அளப்பாய் ஆனால் அழிக்காதே! முன்னோர் சொன்னவற்றை உதறித் தள்ளவிட்டு உன் போக்கில் போகின்றாய் எனக்காக எல்;லாம் என்று சொன்னாய் உனக்காக ஏதும் இல்லை என்று சொல்லி வந்தது கொறொனா! பணமருக்கும்…
-
- 22 replies
- 2.4k views
-
-
ஒன்று காலைக் கதிரவன் கதிர்பரப்பிக் கடைவிரித்த பின்னும்கூட நயினி கட்டிலில் இருந்து எழுந்திருக்க மனமின்றி படுத்தே கிடந்தாள். எழுந்து என்னதான் செய்வது? இந்தப் பரபரப்பான பாரீஸ் நகரின் எல்லையான பொண்டி என்னும் இடத்தில் தான் அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி வீடு அமைந்திருந்தது. ஐம்பது குடும்பங்களாவது வசிக்கும் அக்கட்டடம் பிரதான வீதியிலிருந்து சற்று உள்ளே அமைந்திருந்ததால் எவ்வித வாகன ஓசைகளும் இன்றி அமைதியான பிரதேசமாகக் காணப்பட்டதனால் நாமாக அலாரம் வைத்து எழுந்தாலோ அல்லது நித்திரை முறிந்து எழுந்தாலோ அன்றி யாரும் இடைஞ்சல் தர மாட்டார்கள். முகுந்தன் காலை ஆறுமணிக்கு எழுந்து வேலைக்குச் சென்றானென்றால் மாலை ஐந்து மணிக்குத்தான் திரும்ப வருவான். அதுவரை அவதியாகச் சமைக்க வேண்டிய …
-
- 33 replies
- 4.3k views
- 1 follower
-
-
நேற்று, புதன்கிழமை. தமிழ்க்கடைக்கு புது மரக்கறியள் வந்திருக்கும். முருங்கைக்காய்க்கு, பிலாக்கொட்டை போட்டு சமைத்துச் சாப்பிட்டால் அந்தமாதிரி இருக்கும். நினைக்கவே வாயூறியது. நானே தனியப் போய் வேண்டியிருக்கலாம். மனுசியையும் கூட்டிக் கொண்டு போகலாம் என்ற நினைப்பில் 'தமிழ்க்கடைக்குப் போறனப்பா. வாவன்" என்றன். "உதிலை போறதுக்கு நானேப்பா" "நீயெண்டால் பாத்து நல்ல மரக்கறியளா எடுப்பாய்..." அவளுக்கு உச்சி குளிர... உடனையே வெளிக்கிட்டிட்டாள். தனிய போயிருப்பன். பிறகு "நீங்கள் அதை வேண்டேல்லையப்பா, இதை வேண்டேல்லையப்பா. வெண்டிக்காய் என்ன முத்தலாக் கிடக்கு. முறிச்சுப் பார்த்து வேண்டத் தெரியாதோ..…
-
- 23 replies
- 2.9k views
-
-
வணக்கம், வரலாற்றை பின் களமாக வைத்து வரும் புனைகதைகள் என்றால் எனக்கு சிறு வயது முதலே மிகவும் ஆர்வம். அந்த வகையில் ஈழத்தின் வரலாற்றை பின் புலமாக வைத்து நானும் ஒரு உரை நடை கவிதை எழுதலாம் எனவிழைகிறேன். கவனிக்க - இது வெறும் புனை கதை. இதில் வரலாற்றின் பாத்திரங்கள் வருவர், போவர் ஆனால் இது வரலாறுஇல்லை. சொல்லப்போனால் இதில் இப்போ இலங்கையில் வரலாறு என ஏற்கப்பட்டிருக்கும் நிகழ்வுகள் பலதும், 180 பாகை நேரெதிர் திசையில் சித்தரிக்கப் படுகிறன. இந்த முயற்சிக்கு கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி, அவதார புருசன், ராமானுஜகாவியம் என்பனவே இன்ஸ்பிரேசன். ஆனால் அந்த தரத்தில் எதிர்பாராதீர்கள். உயர, உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது 😂. நன்றி, கோஷான் சே …
-
- 22 replies
- 3k views
-
-
கொறோனாவே என்னிடம் நெருங்காதே! நீ நினைக்கும் உணவு நான் இல்லை... கொறோனாவே என்னிடம் மயங்காதே! நீ தேடும் partner என்னிலில்லை.... Winterல் சில நாள் flu வரலாம்! நீ seasonஏ பார்க்காமல் வந்தாயே! (2) குடிநீரும், ரசமும் வாங்கி வைத்தேன் - அது Peace of mindக்குத் தான் என யாரறிவார்?! கொறோனாவே என்னிடம் நெருங்காதே..... Normal flu வரும் காலத்திலே, வேலைக்கு லீவு போட்டு மெடிக்கல் கொடுப்பேன்... (2) இப்ப Work-from-home செய்கின்றேன் - இனி மெடிக்கலை எந்த மனேஜர் கேட்பார்?! கொறோனாவே என்னிடம் நெருங்காதே... "தனித்திரு" என்று அந்நாளில், ஞானியர் இறைவனை அடைய வழி கூறினரே! (2) உன் பயத்தால் இன்று தனித்துள்ளேன் - எனினும் நீ பீடித்தால் நானும் இறைவனைக் காண்பேனோ?! கொறோ…
-
- 15 replies
- 2.3k views
-
-
இப்போதெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் அல்லது பிரச்சனை என்றால் அது தம் பிள்ளைகளுக்குத் திருமணம் பேசுவதுதான். பிள்ளைகள் படிக்கும் காலங்களில் ஒருத்தனையும் நிமிர்ந்தும் பார்க்கக் கூடாது. படி படி என்று கூறிவிட்டு அவர்களும் எமது அதீத கட்டுப்பாட்டால் ஆண்பிள்ளைகளுடன் அதிகம் பலரது விட்டுவிட்டு அல்லது பழகினாலும் காதல் கீதல் என்று போகாது ஒதுங்கிவிடுவார்கள். பிள்ளைகள் படித்து முடித்து நல்ல வேலை சம்பளம் என்று சுதந்திரமாய் இருக்கவாரம்பித்ததும் திருமணம் பேச ஆரம்பித்துவிடுவர். சில பிள்ளைகள் மிக அன்பாக வெளியுலகம் அதிகம் தெரியாதவர்களாகவும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர். சிலர் தன்னம்பிக்கை அதிகம் உள்ள பிள்ளைகள் பலர் இப்போது ஐரோப்பிய நாடுகளில் முப்பத்தைந்து நாற…
-
- 405 replies
- 37.1k views
- 2 followers
-
-
ஊர் விட்டு ஊரோடி வான் விட்டு நாடோடி நிலவரம் கலவரமாக நீயே என் கதி என ஊர்ப்புதினத்தின் விடுப்புக்காரி கண் எதிரே திரை விரித்தாய். தாய்க்கு நிகர்த்து மொழி பேசி உறவுக்கு நிகர்த்து கதை பேசி கடுகதி வாழ்வில் கனதிகள் குறைக்கும் திரைபேசியானாய் நான் அலைபேசி மறந்தேன். காலவெளியில் கண்ட சங்கதிகள் ஆயிரம் ஆயிரம் அத்தனையும் அடக்கி அமுசடக்கமாய் வளர்ந்து குமரியாய் குலுங்கி நிற்கும் யாழே... நீயே என் மனதை தைத்த மோக முள்... ஊர் தொலைத்தவனின் ஊனத்தை ஊமையாய் புரிந்து கொண்டவள்..! சாதனைக்குள் சோதனை சாதாரணம்..! சார்ந்திருந்தோர் எதிர் நின்றோர் எ…
-
- 10 replies
- 1.8k views
-
-
வறுமையின் நிறம் கதிரவன் கடல் குளித்து கிழக்குவானில் தலைதுவட்டத் தொடங்கியிருந்தான். வாடைக்காற்று புழுதியை வாரி இறைத்தபடி சுழன்றடித்துக்கொண்டிருந்தது. காலை ஜந்து மணிக்கே விழித்துவிடும் எமது ஊரான காவலூர். அதிகாலையானால் எமது ஊரில் குடிநீருக்கான போராட்டம் தொடங்கிவிடும். பட்டினசபையால் வழங்கப்படும் குடிநீரை குழாய்களில் எடுப்பதற்காக குழாயடியில் வரிசையாக குடங்களும் வாளிகளும் நிரையாக நிற்கத் தொடங்கிவிடும். (இது நடந்தது இன்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னைய காலம்.) இன்று வீடுகளுக்கு குழாய்நீர் வசதி வந்து விட்டதால் குழாயடியில் குழுமும் பெண்கள் கூட்டமும் வரிசையாக நிற்கும் குடங்களும் காணாமல் போய்விட்டன. அன்றைய நாட்களில் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை எல்லாமே அந்தக் குழாயடிச் செய்திக…
-
- 11 replies
- 2k views
-
-
கார் முகில்கள் கலந்துரையாடி அடை மழை தூவுதே எழில் மயில்கள் நடனம் புரியவே சாரல்களும் பாராட்டி கைதட்டுதே சோலைக்கு பசுமை சேலை கட்டிவிடும் உரிமை நீருக்கு கிடைத்ததே எண்ணிலடங்கா முத்தங்கள் வைக்கவே மண்ணில் விதை வித்துக்கள் பிறக்குதே மாரி நீ மகர்ந்தசேர்க்கை செய்யவே ஏரியும் தூறு வாரி தவம் கிடக்குதே திரை சென்று உவர்ப்பாகும் முன்பே இதழ்களில் இனிப்பானதே
-
- 2 replies
- 993 views
-
-
அழகிய பனிபடர் அல்ப் மலைத்தொடர் ஐக்கிய நாடுகள் சபை தலைமைக்காரியாலம்.. மற்றும் போர் வேண்டாம் என்பதை உணர்த்த வைப்பட்டுள்ள பீரங்கியும். பல்லாயிரம் சொந்தங்களைப் பறிகொடுத்த பின்னும்.. தமது உரிமைக்காக பாதுகாப்பான ஜெனிவாவில் கூடிக் கூட போராட மனநிலையற்ற தமிழர்கள் பலர். ஒரு சிலரின் சொந்த முயற்சியால்.. ஜெனிவா வாழ் பிற இன மக்களிடம் உள்ள ஈழத்தமிழர் துயர் பட்டறிவு அதிகம். ஐநா சபை. ஐநா வின் முன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கால் முறிந்த கதிரை. இதன் அர்த்தம்.. இன்னும் சரிவரப் புரியவில்லை.. தெரிந்தவர்கள் சொல்லலாம்..?! எனி ஐநாவில் இருந்து அறிவியல் நோக்கி.. இங்கு தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள.. கடவுளின் துகள…
-
- 18 replies
- 2.3k views
- 1 follower
-
-
சின்னத்துரையாருக்கு ஒரு வருத்தம். கிளி போல பெண்டாட்டியை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் காகங்களைத் தேடித் திரியிற சில சபலங்களைப் போல அவருக்கு வீட்டில் எவ்வளவு பொருட்கள் இருந்தாலும் போதுமான பணம் வைத்திருந்தாலும் போற வாற இடங்களில் எதையாவது களவெடுக் காட்டில் சரிவராது. அவர் இந்த வருசம் விடுமுறைக்கு பீக்கிங்கு போயிருக்கிறார். அங்கை ஒரு பப்பிளிக் ரொயிலற்றக்கு போவேண்டிய அவசரம் அவருக்கு வந்திருக்கு. போனவருக்கு அங்கை இருந்த ரொயிலற் ரிசு வை பார்த்ததும் அந்தப் புத்தி எடு எடு என்று சொல்லிச்சுது. எடுத்திட்டார். உந்த விளையாட்டு பீக்கிங் இல் அதிமென்றதாலை ரொயிலற்றுக்குள்ளை ஸ்கான் மெசின் பூட்டி வைச்சிருந்ததையும் அவர் உள்ளே போன உடனேயே அவரது முகம் ஸ்கான் செய்யப்பட்டு விட…
-
- 4 replies
- 1.4k views
-
-
அவரை எனக்கு பார்த்த அந்த கணத்திலேயே பிடிக்காமல் போய்விட்டது. ஒரு சிலரை பார்த்தவுடன் பிடிக்காமல் போய், பிறகு பழக வேண்டி வந்து அதன் பின் பிடித்து போய்விட்ட சந்தர்ப்பங்களும் உள்ளது. ஆனால் இந்த மனிசனை கண்டவுடன் ஒரு போதுமே ஆளுடன் பழகக் கூடாது எனும் அளவுக்கு எனக்கு அப்படி ஒரு வெறுப்பு வந்து விட்டது. அரைவாசி மட்டுமே திறந்து பார்க்கும் கண்கள், மற்ற எல்லாரும் மயிருகள் என்ற மாதிரி பார்க்கும் அந்த ஏளனப் பார்வை, முகத்தில் எப்பவும் இருக்கும் ஒரு கிழமைக்கும் மேல் சவரம் செய்யாத தாடி, சாயம் போனது போன்று தோன்றும் முழுக்கை ஷேர்ட்டும் காக்கி நிற டவுசரும், அருகில் வந்தால் மூக்கில் அடைக்கும் சிகரெட் மணமும் என்று ஆள் ஒரு டைப்பாகவே இருப்பார். இலங்கை இந்திய உணவுப் பொருட்களை வாங்கு…
-
- 18 replies
- 3.2k views
-
-
அத்தை மகள் அங்கே சோலையில் அத்திப்பழம் பறிக்க அவள் அழகை கண்டு அக்கா மகன் மனம் தடுமாற திட்டம் போட்டு திருட தானோ பொழுதெல்லாம் கண்டும் காணாத மாதிரி நோட்டம் விடுகிறான் என அவள் எண்ண சந்தர்ப்பங்களில் சந்திக்க முற்படும்போதெல்லாம் நாணமும் பிறந்து நாழிகையும் இறக்குதே உரையாடமல் நடைபோட்டு இருவரும் விலகி சென்றதாலே கண்மூடித்தனமான எண்ணங்கள் பிறக்குதே திருமணத்திற்கு பின்பு கணவன் பிறை நுதலில் இடும் முத்தம் திருத்தாமாகுதே திருமணத்திற்கு முன்பு காதலன் இதழில் வைக்கும் முத்தம் கீழான உணர்வு மேலும் வளர காரணமாகுதே ஊடலில் ஏற்படும் பிரிவுகளே உண்மையான அன்பை விரிவாக்கும் தூண்டுக…
-
- 7 replies
- 1.7k views
-
-
ஏனுங்க அம்மணி மினுமினுக்குது தாவணி எங்கே கிளம்பி போகிறிங்கிலாக்கு பட்டணத்துக்கு சினிமா மொத ஆட்டத்துக்கு போறேனுங்கோ ஆகட்டும் அது சரி ஊருக்குள்ள உங்களப்பத்தி ஏதோ பேசிக்கிட்டாங்கோ நீங்கள் யாரையோ காதலிக்கிறதாகவும் சீக்கிரம் அவரையே கண்ணாலம் செய்துகிறதாகவும் அது அம்புட்டும் உண்மையாங்க ? அப்படியெல்லாம் எதுவுமில்லிங்க முச்சுட்டும் புரளிங்க மக்க இப்படியெல்லாம் இல்லாத பொல்லாததெல்லாம் பேசி ஊர்குடியை கெடுப்பதாலே பலர் வாழ்வில் இழப்புகள் மட்டுமே மிஞ்சுமுங்க நேரங்கணக்க பேசிக்கிட்டிருந்ததால தாமதமாயிடுச்சிங்க படம் முடிச்சிடுங்கோ நான் போயி வாறேனுங்கோ எனக் கூறி வறப்பிலே ஓடினால் அம்மணி…….
-
- 7 replies
- 1.3k views
-