COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
அரசுகளால், உலக சுகாதார சபை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் , நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்களால் மற்றும் உறுதி செய்யப்பட்ட COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் இங்கு பதிந்து கொள்ளுங்கள். COVID-19: Coronavirus செய்திகள் இப்பகுதியில் இணைக்கப்படலாகாது. செய்திகள் அதற்குரிய பகுதிகளில் இணைத்துக்கொள்ளுங்கள்.
273 topics in this forum
-
இரு தடுப்பூசிகளை, பெற்றுக்கொண்டவர்களுக்கு கூட... பாதுகாப்பு குறைகின்றது – ஆராய்ச்சி இரு கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்து வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மே மற்றும் ஜூலை 2021 க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தரவை உள்ளடக்கியே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பைசர் அல்லது அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டு அளவுகளைப் பெற்ற ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களிடையே குறித்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் பைசர் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டவர்களின் பாதுகாப்பு ஒரு மாதத்தில் 88% லிருந்து ஐந்து முதல் ஆறு மாதங்களில் 74% ஆகக் குறைந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இ…
-
- 0 replies
- 340 views
-
-
By Shana NO COMMENTS கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் இந்த ஊரடங்கு அமுல்செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவின் போது 19 செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, கீழ் காணும் 19 செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது 1. சுகாதார சேவைகள் 2. பொலிஸ் நிலையங்கள் 3. கிராம அலுவலகர்கள் 4. அனைத்து துறைகளைச் சேர்ந்த களவிஜய அதிகாரிகள் 5. உள்ளுராட்சி அமைப்புக்கள் ( தேவையான ஆளனியுடன் இயங்க முடியும்) 6. நாள…
-
- 0 replies
- 498 views
-
-
கொரோனாவுக்கு 109 நாள் சிகிச்சை - நிமிடத்துக்கு 10 லிட்டர் ஆக்சிஜன்; 62 நாள் எக்மோ - மீண்டும் பிறந்த திருச்சி முத்திஜா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MAKSIM LABKOUSKI / GETTY IMAGES கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தொடர்ந்து 62 நாள்கள் எக்மோ சிகிச்சையில் இருந்து மீண்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. "நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுத்தும் பலன் கிடைக்காததால் எக்மோ சிகிச்சையளித்தோம். அவ்வாறு செய்தால் ஒரு மாதத்துக்குள் நுரையீரல் சரியாவதற்கு வாய்ப்புகள் உள்ளன," என்கிறார் இந்த சிகிச்சை நடந்த ரேலா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் முகமது ரேலா. என்ன நடந்தது? நிமிடத்துக்கு 1…
-
- 0 replies
- 503 views
- 1 follower
-
-
அமெரிக்காவில்... நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மக்களுக்கு, மூன்றாவது அளவு கொவிட் தடுப்பூசி! அமெரிக்காவில் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மக்கள் மூன்றாவது அளவு கொவிட் தடுப்பூசியை பெற அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, ஃபைஸர் மற்றும் மொடர்னா கொவிட-19 தடுப்பூசிகளுக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரங்களை திருத்தம் செய்யத் தயாராக உள்ளதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. திட்டங்களை நன்கு அறிந்த இரண்டு ஆதாரங்களின்படி, சமரசம் செய்யப்பட்ட நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு மூன்றாவது அளவு கிடைக்கும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்கான ஆலோசகர்கள் குழு ஜூலையில் கூடி, நோயெதிர்ப்பு குறைபாடுள்ள பெரியவர்களுக்கு கூடுதல் அளவுகளில்…
-
- 0 replies
- 390 views
-
-
தடுப்பூசிகள்... பற்றிய வதந்திகளால், பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர் வதந்திகள் காரணமாக கொழும்பில் 60 வயதுக்கு மேற்பட்ட 40,000 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர் என வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகள் காரணமாக இவர்கள் தடுப்பூசி போடுவதைத் தவிர்த்துள்ளதாக அவர் மேலும் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன இதனை குறிப்பிட்டார். ஒருவகை தடுப்பூசி மற்றொன்றை விட சிறந்தது அல்லது ஒரு குறிப்பிட்ட பிராண்ட் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்பர்களுக்கு சிறந்தது போன்ற வதந்திகள் காரணமாக பலர் தடுப்பூசியை…
-
- 1 reply
- 492 views
- 1 follower
-
-
டெல்டா வைரஸுக்கு எதிராக... மூன்றாவது டோஸ், வழங்குவதை நிறுத்துங்கள்: உலக சுகாதார நிறுவனம்! தடுப்பூசி வழங்கலில் நிலவும் ஏற்றத்தாழ்வை சீராக்கும் வகையில், டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்துங்கள் என வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. மாறுபாடு அடைந்துள்ள டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ்களாக ஜேர்மனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மூன்றாவது டோஸ் செலுத்த தயாராகி வருகின்ற நிலையில், அவரின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியேஸஸ் கூறுகையில், ‘உலக நாடுகள் தங்கள் மக்களின் உயிரைப் பாதுகாக்க காட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. …
-
- 0 replies
- 408 views
-
-
-
- 0 replies
- 704 views
-
-
2021 May 6ல் எனக்கு செய்யப்பட்ட pcr testன் ரிசல்ட் positive. எனவே நான் கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டேன் அதோடு எனது வீடும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. Corona விற்கான 2 வது தடுப்பூசி (covishield) போடப்பட்டு அடுத்தநாள் காலையில் காய்ச்சல்,தொண்டைவலி ,உடல்வலி போன்ற அறிகுறிகள் இருந்ததால் நானாக சென்று pcr பரிசோதனையை செய்துகொண்டேன்,ரிசல்ட் பொசிட்டிவ் என்றுகாட்டியது.உடனடியாக வைத்தியசாலையில் தடுத்துவைக்கப்பட்டேன் 2 நாட்கள் intermediate ward எனப்படும் வாட்டில் அனுமதிக்கப்பட்டேன் அங்கும் என்னைப்போல் பலர் என்னுடன் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.கொரோனா பொசிட்டிவ் ஆகியிருந்தாலும் உடலில் எந்தவித அறிகுறிகளும் தென்படாமல் விட்டால்தான் தனிமைப்படுத்தல் நிலையத்த…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
கோவிட் தடுப்பு மருந்தை எதிர்காலத்தில் மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்ள முடியுமா? 45 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கோவிட்-19க்கு எதிரான பாதுகாப்பு இப்போது ஒரு தடுப்பூசி வடிவில் கிடைக்கிறது. ஆனால், அந்தத் தடுப்பு மருந்து எதிர்காலத்தில் இன்ஹேலர்களாகவோ மாத்திரைகளாகவோ கிடைக்கலாம். தெற்கு ஸ்வீடனின் மிகப்பெரிய அறிவியல் பூங்காக்களில் ஒன்றான மெடிக்கான் வில்லேஜில் ஒரு இன்ஹேலரை எடுத்துக் காட்டுகிறார் மருந்தாளுநர் இங்கேமோ ஆண்டர்சன். அது ஒரு தீப்பெட்டி அளவில் பாதிதான் இருக்கிறது. எதிர்காலத்தில் தடுப்பு மருந்துகளை தூள் வடிவில் எடுத்துக்கொள்ள முடியும் என்று அவரது குழு நம்புகிறது. ஆஸ்துமா நோயா…
-
- 1 reply
- 698 views
- 1 follower
-
-
முழுமையான பலனைத் தராத கொவிட் தடுப்பூசிகள்: மூன்றாவது டோஸ் செலுத்த ஹங்கேரி முடிவு! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகள் முழுமையான பலனைத் தராத நிலையில், மூன்றாவது டோஸ் செலுத்த ஹங்கேரி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஹங்கேரி பிரதமர் விக்டோர் ஆர்பன் தனது மக்களுக்கு வானொலி மூலம் தெரியப்படுத்தியதாவது, ‘தனது மக்களுக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் மூன்றாவது தவணை தவணை தடுப்பூசி கிடைக்கும். இந்த மூன்றாவது தவணை தடுப்பூசியானது வயது, உடல் நிலை ஆகியவற்றைப் பொறுத்து அளிக்கப்படும். இரண்டாவது தவணை செலுத்தப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகே, மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இரண்டாவது தவணையாக என்ன தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களோ, அதற்கு மாற்றாக வேறு த…
-
- 0 replies
- 665 views
-
-
கொரோனா தடுப்பூசி போடும்போது இரு வேறு தயாரிப்பு மருந்துகளை போடுவது ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் நோக்குடன் உலக அளவில் பல்வேறு நாடுகளில் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் மற்றும் உள்நாட்டில் மருத்துவ அமைப்பால் ஒப்புதல் தரப்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சில இடங்களில் இரு வகை தடுப்பூசி மருந்துகளை போட்டுக் கொண்டால் கொரோனா எதிர்ப்புத்திறன் பெருகுவதாக தகவல் வெளியானது. சமீபத்தில் தாய்லாந்து அரசு கூட தமது குடிமக்களுக்கு இரு வேறு தயாரிப்பு கொரோனா தடுப்பூசி போட ஏதுவாக அதன் தடுப்பூசி கொள்கையில் மாற்றம் செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்…
-
- 0 replies
- 478 views
-
-
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க குழந்தைகளுக்கு ஃப்ளூ காய்ச்சல் தடுப்பூசி உதவுமா? ஜெயகுமார் சுதந்திரபாண்டியன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 18 வயதுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இல்லாத போது, அவர்களுக்கு இன்ஃபுளுயன்சா (ஃப்ளூ) வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த சில மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய குழந்தை நல மருத்துவரும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வருமான தேரணிராஜன், இன்ஃபுளுயன்சா (ஃப்ளூ) வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்ட 27 ஆயிரம் குழந்தைகளிடம் நடத்தப்ப…
-
- 0 replies
- 631 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ்: குழந்தைகளுக்கு அதிக ஆபத்தில்லை - ஆறுதல் தரும் புதிய தகவல் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கொரோனா வைரஸால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவது மற்றும் இறப்பது மிகவும் குறைவு என சமீபத்தைய கொரோனா தரவுகள் பகுப்பாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு முதல் 12 மாதங்களில் இங்கிலாந்தில் 18 வயதுக்குக் குறைவானவர்களில் 25 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்கள். பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், நரம்பியல் சார்ந்த குறைபாடு உள்ளவர்கள் தான் அதிக அபாயத்தில் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக குழந்தைகளுக்கு கொரோன…
-
- 0 replies
- 652 views
- 1 follower
-
-
ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகளால் இதய அழற்சி ஏற்படலாம்: ஐரோப்பிய மருத்துவ முகமை மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 19 பேருக்கு மையோகார்டிட்டிஸ் மற்றும் 19 பேருக்கு பெரிகார்டிட்டிஸ் ஏற்பட்டிருக்கிறது என்று ஐரோப்பிய மருத்துவ முகமையின் பகுப்பாய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் ஐந்து பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். அந்த ஐவரும் வயதானவர்கள், தவிர அவர்களுக்கு மற்ற பல உடல்நலக் கோளாறுகள் இருந்ததாகவும் பகுப்பாய்வில் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக பிரிட்டன் மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்காற்று முகமை விசாரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவுக்கான ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்ப…
-
- 1 reply
- 677 views
- 1 follower
-
-
கொரோனாவின் 'லேம்டா' திரிபு: இந்தியாவுக்கு ஆபத்தா? - உண்மை என்ன? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கொரோனா வைரஸின் டெல்டா திரிபால் இந்தியாவிலும் தொற்றுகள் பரவியிருக்கும் நிலையில் அச்சுறுத்தும் வகையில் லேம்டா என்ற மற்றொரு திரிபின் பெயர் அண்மைக் காலமாக பேசப்பட்டு வருகிறது. இது ஆபத்தானதா, வேகமாகப் பரவக்கூடியதா, இறப்பு விகிதம் எப்படியிருக்கும், எங்கெல்லாம் பரவியிருக்கிறது, இந்தியா அஞ்ச வேண்டுமா என்பன போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. லேம்டா திரிபு "கவனிக்கப்பட வேண்டிய திரிபு" (Variant of Interest) என உலக சுகாதார அமைப்பு கடந…
-
- 0 replies
- 402 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: சிறப்பு குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் ஆபத்தா அவசியமா? - நிபுணர்கள் விளக்கம் பரணிதரன் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக அளவில் தணியத் தொடங்கிய வேளையில், அதற்கு எதிரான தடுப்பூசி இயக்கம் அனைத்து நாடுகளாலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பெருந்தொற்று காலத்தில் கைவிடப்பட்ட அல்லது கண்டு காணப்படாத நிலையில் இருப்பவர்களாக சிறப்புக் குழந்தைகள் உள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன் உள்பட வல்லரசு நாடுகளில் கொரோனா முதல் அலை தீவிரமானபோது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்போது கொரோனா தாக…
-
- 0 replies
- 907 views
- 1 follower
-
-
சிங்கிள் டோஸ்; ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் தடுப்பூசியின் சிறப்பம்சம் என்ன? டெல்டா வைரஸுக்கு எதிராக செயல்பாடு எப்படி? படம் உதவி | ட்விட்டர் நியூ ஜெர்ஸி உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், மற்றும் உருமாற்றம் அடைந்த டெல்டா உள்ளிட்ட பல்வேறு வகை வைரஸ்களுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படும் வகையில் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு(Janssen Ad26.CoV2.S vaccine ) உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதுவரை உலக மக்களின் பயன்பாட்டுக்கு இருக்கும் தடுப்பூசிகள…
-
- 0 replies
- 483 views
-
-
Covid Questions: அல்சர் உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? ஆர்.வைதேகி Covid Questions: அல்சர் உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? A doctor prepares to administer vaccine ( AP Photo/Rafiq Maqbool ) கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. அல்சர் உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? - கலைக்கண்ணன் சிவஞானம் படையாட்சி பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பி.செந்த…
-
- 0 replies
- 631 views
-
-
இங்கிலாந்தில்... சுமார் இரண்டு மில்லியன் மக்களுக்கு, நீண்டகால கொவிட் அறிகுறி! இங்கிலாந்தில் சுமார் இரண்டு மில்லியன் மக்களுக்கு நீண்டகால கொவிட் அறிகுறி இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சில நேரங்களில் இது ‘நீண்ட கொவிட்’ என்று அழைக்கப்படுகிறது. அரை மில்லியன் பெரியவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தங்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக அறிக்கை செய்யும் மூன்றில் ஒரு பகுதியினர் குறைந்தது 12 வாரங்களுக்கு நீடிக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளைக் கொண்டிருப்பதாக ஆய்வு தெரிவிக்கின்றது. நீண்டகால விளைவுகளை நிர்வகிப்பது ஒரு பெரிய சவால் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நீண்ட கொவிட் பற்றிய ஆராய்ச…
-
- 0 replies
- 770 views
-
-
வருகிறது சூப்பர் வேக்சின்...! எல்லா வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு எல்லா வகையான கொரோனா வைரஸ்களையும் எதிர்க்கும் சூப்பர் வேக்சினை அமெரிக்க ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். பதிவு: ஜூன் 24, 2021 13:25 PM வாஷிங்டன் கொரோனா வைரஸ் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என உருமாறி அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், விஞ்ஞானிகள் எல்லா வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும் புதிய சூப்பர் வேக்சின் ஒன்றை கண்டறிந்து உள்ளனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், சூப்பர் வேக்சின் என்று குறிப்பிடப்படும் ஹைபிரிட் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர். கொரோனா வைரசின் ஆபத்தான அமைப்பான ஸ்பைக் …
-
- 0 replies
- 713 views
-
-
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு! கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருந்தால், தொடர் மருத்துவ பரிசோதனைகளை செய்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அதுல் இன்கேல் மேற்படி கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர், ‘கொரோனாவில் இருந்து நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்களுக்கு, ஆறு மாத காலத்திற்கு சிறுநீரக கோளாறு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறுநீரக கோளாறுகளில் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. ஆறுமாதங்களுக்கு பின் பரிசோதனை செய்யும்போது …
-
- 0 replies
- 481 views
-
-
கோவிட் -19 தடுப்பூசி வினைத்திறனும், எமது பங்கும் -காருண்யா 335 Views இக்கட்டுரையில் வரும் கணிப்பீடுகள் மே மாதம் 31ஆம் திகதிக்கு உட்பட்டவைகள். இன்றைய உலகை ஆட்டிப் படைக்கும் ஒற்றைக் காரணியாக விளங்கும் கோவிட் -19 நோயின் தாக்கம் எல்லோராலும் உணரப்பட்டு வருகின்ற தருணமிது. இவ்வேளையில் எதிர்பார்த்தது போலவே இந்த நெருக்கடிக்கான தற்காலிக தீர்வாக கோவிட்-19 இற்கான தடுப்பூசிகள் மட்டுமே விளங்குகின்றன என்பதுவும் மறுக்க முடியாதது. இவ்வருடம் ஜூன் 10ஆம் திகதி வரை உலகெங்கும் 2,156,384,616 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கணிப்பிடுகிறது. அதாவது இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனி நபரும் இரண்டு தடுப்ப…
-
- 0 replies
- 492 views
-
-
புதிது, புதிதாக... கண்டறியப்படும் பூஞ்சை தொற்றுகள்! இந்தியாவில் முதன் முறையாக பச்சை பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் அரவிந்தோ மருத்துவமனையில் கடந்த ஒன்றரை மாதங்களாக கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சைப் பெற்று வந்த 34 வயதுடைய நபர் ஒருவரே மேற்படி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது நுரையீரல் பாதிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த நோய் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மும்பை நகருக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய பலர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு …
-
- 1 reply
- 740 views
-
-
அமெரிக்காவின் நோவாவேக்ஸ் கொவிட் தடுப்பூசி 90.4 சதவீத செயற்திறன் கொண்டது! அமெரிக்காவின் நோவாவேக்ஸ் கொவிட் தடுப்பூசி 90.4 சதவீத செயற்திறன் கொண்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் சுமார் 29,960 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் மிதமான, கடுமையான நோயில் இருந்து 100 சதவீதம் பாதுகாக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நோவாவேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த தடுப்பூசியை இருப்பு வைப்பதும் எடுத்து செல்வதும் சுலபம். 2021ஆம் ஆண்டின் மூன்றாலம் காலாண்டில் அனுமதி பெற்று விடுவோம். காலாண்டு இறுதியில் மாதத்திற்கு 10 கோடி டோஸ்களும், ஆண்டு இறுதி காலண்டிற்குள் மாதத்திற்கு 15 கோடி டோஸ்கள் தயாரிக்க முடியும்’ என தெரிவிக்கப்…
-
- 0 replies
- 372 views
-
-
Covid Questions: தடுப்பூசி போட்டவுடன் ரத்தம் உறைவதைத் தவிர்க்க ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளலாமா? ஆர்.வைதேகி Covid Questions: தடுப்பூசி போட்டவுடன் ரத்தம் உறைவதைத் தவிர்க்க ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளலாமா? கொரோனா தடுப்பூசி கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. ரத்த உறைதல் பயத்தால் இதுவரை தடுப்பூசி போடுவதைத் தவிர்த்து வருகிறேன். தடுப்பூசி போட்டவுடன் ரத்தம் உறைவதைத் தவிர்க்க ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளலாமா? - திருவள்ளுவன் (விகடன் இணையத்திலிருந்து) …
-
- 0 replies
- 541 views
-