COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
அரசுகளால், உலக சுகாதார சபை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் , நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்களால் மற்றும் உறுதி செய்யப்பட்ட COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் இங்கு பதிந்து கொள்ளுங்கள். COVID-19: Coronavirus செய்திகள் இப்பகுதியில் இணைக்கப்படலாகாது. செய்திகள் அதற்குரிய பகுதிகளில் இணைத்துக்கொள்ளுங்கள்.
273 topics in this forum
-
Covid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? ஆர்.வைதேகி Covid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? Mucormycosis Testing ( AP Photo / Mahesh Kumar A ) கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. Covid question: ௭ன் உறவினருக்கு டயாபடிக் நியூரோபதி (Diabetic Neuropathy) உள்ளது. அவர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ௭டுத்துக்கொள்ளலாமா? - வீரா (விகடன் இணையத்திலிருந்து) …
-
- 12 replies
- 1.1k views
-
-
இரண்டாவது கொவிட் தடுப்பூசி அளவை பெற்ற பின்னரே பாதுகாப்பு: பிரான்ஸ் சுகாதார அமைச்சர்! இரண்டாவது கொவிட் தடுப்பூசி அளவை பெற்ற பின்னரே பாதுகாப்பு ஏற்படும் என பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார். ஆகவே தற்போதைக்கு வெளிப்புறங்களில் முகக்கவசம் அணியும் கட்டாயத்தினை நீக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘முதல் அளவு கொரோனத் தடுப்பூசி போட்டவுடன், பலர் சுகாதாரக் கட்டுப்பாடுகளில் அவதானம் செலுத்த மறக்கின்றனர். இது ஆபத்தானது. முதல் அளவு தடுப்பூசி மிகச் சொற்பமான பாதுகாப்பையே வழங்கும். இரண்டாவது அளவு தடுப்பூசியும் போட்டு, பத்து நாட்களிற்குப் பின்னர்தான் பாதுகாப்பு ஏற்படும். அதன் பின்னரும் சுகாதாரக் கட்டுப்பாடுகளில…
-
- 0 replies
- 419 views
-
-
தடுப்பூசிகள் போட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் நிகழாது: எய்ம்ஸ் தகவல் தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மரணமும் ஏற்படவில்லை என்று எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பதிவு: ஜூன் 06, 2021 09:28 AM புதுடெல்லி, இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியாவில் 3 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் நாடெங்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மிகவும் குறைவான இடங்களில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இவை அனைத்திலும் இரு டோஸ…
-
- 0 replies
- 480 views
-
-
கோவிட்-19 தொற்றுக்கு கண்டறிந்ததுபோல் எந்த நோய்க்கும் இவ்வளவு வேகமாகத் தடுப்பூசி கண்டறியப்படவில்லை. பல நாடுகளில் நடைபெற்றுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் கோவிட்-19 தடுப்பூசி ஒரு தோல்வி என்று எடுத்துக்கொள்ள முடியாது. தோல்வியடைய வாய்ப்பும் இல்லை. கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணி இந்தியாவில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் தடுப்பூசி குறித்த சர்ச்சைகள், சந்தேகங்கள் தீர்ந்தபாடில்லை. இதுதொடர்பாக அண்மையில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் 2,382 காவல்துறையினர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, அவர்களில் ஐந்து ப…
-
- 0 replies
- 698 views
-
-
கொவிட்-19 தடுப்பூசிகளைக் கலந்து செலுத்திக்கொள்ள முடியும்: கனேடிய மருத்துவர்கள்! கொவிட்-19 தடுப்பூசிகளைக் கலந்து செலுத்திக்கொள்ள முடியும் என கனேடிய மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் மற்றும் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் ஹோவர்ட் என்ஜூ ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். கனடாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள அஸ்ட்ராஸெனெகா, ஃபைசர்- பயோஎன்டெக் அல்லது மொடர்னா கொவிட் -19 தடுப்பூசி அளவுகளை சில சூழ்நிலைகளில் மாறி மாறி இணைக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, தடுப்பூசிகளின் பரிமாற்றம் என்பது உங்கள் முதல் அளவுக்கு ஒரு தடுப்பூசி தயாரிப்பைப் பெறலாம் என்பதோடு, உங்கள் இரண்டு அளவுத் தடு…
-
- 0 replies
- 516 views
-
-
அவசரகால பயன்பாட்டிற்காக... "சினோவக்" தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் அவசரகால பயன்பாட்டிற்காக சீனாவின் சினோவக் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 51 விகிதமானவர்களுக்கு தடுப்பூசி நோயினை தடுத்தது என்றும் கடுமையான பாதிப்புடன் வைத்தியசாலையில் சேர்வதை 100 சதவீதம் தடுத்துள்ளது என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. சினோபோர்மிற்குப் பின்னர், உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் இரண்டாவது சீன தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவைப் போலவே, சிலி, பிரேசில், இந்தோனேசியா, மெக்ஸிகோ, தாய்லாந்து மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் இந்த தடுப்பூசி ஏற்கனவே செலுத்தப்பட்டு வருகிறது. …
-
- 0 replies
- 569 views
-
-
12-15 வயதுடையவர்களுக்கு ஃபைஸர்- பயோஎன்டெக் தடுப்பூசி செலுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்! 12-15 வயதுடையவர்களுக்கு ஃபைஸர்- பயோஎன்டெக் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் (ஈ.எம்.ஏ) அனுமதி வழங்கியுள்ளது. தனிப்பட்ட உறுப்பு நாடுகள் இப்போது சிறுவர்களுக்கு தடுப்பூசியை வழங்குமா என்பதை தீர்மானிக்க வேண்டும். ஆனால் இதற்கு ஜேர்மனி அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவும் கனடாவும் இந்த மாத தொடக்கத்தில் இளம் பருவத்தினருக்கான ஃபைஸர் தடுப்பூசியை அங்கீகரித்தன. ஐரோப்பா தனது தடுப்பூசி தயாரிப்பை விரைவுபடுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (றுர்ழு) கூறிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறைந்தது 70 சதவீத மக்கள் தடுப்பூசி போடும் வரை தொற்றுநோய்…
-
- 0 replies
- 472 views
-
-
ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசி பிரித்தானியா அனுமதி! ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசியான ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கான அனுமதியை பிரித்தானியா வழங்கியுள்ளது. ஒரே அளவு மட்டுமே செலுத்தப்படும் ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசி, ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசி பரவலை தடுப்பதில் ஒட்டுமொத்தமாக 67 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாகக் தரவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன், சில ஆய்வுகள் இது மருத்துவமனையில் சேருதல் மற்றும் இறப்பு ஆகியவற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பையும் வழங்குகிறது என்று கூறுகின்றன. இந்தநிலையில் தொற்று அதிகரிப்பை தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக களமிறங்கியுள்ள பிரித்தானியா, ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து …
-
- 0 replies
- 424 views
-
-
கொரோனா தொற்றால் இதயம், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுமா? கொரோனாவால் இதயம், நீரிழிவு நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் அதிகமா? என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. கேள்வி-பதில் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மனதில் எழும் சந்தேகங்கள், கேள்விகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேள்வி-பதில் வடிவில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- கேள்வி:- இதய நோயாளிகள், நீரிழிவு அல்லது ரத்த அழுத்த நோயாளிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமா? அவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் உடல் மோசம் அடைவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளதா? பதில்:- மற்றவர்களை விட இதய நோயாளிகள், …
-
- 5 replies
- 999 views
-
-
17 மே 2021 ஒரு டோஸ் ஆஸ்ட்ராசெனீகா மற்றும் ஒரு டோஸ் ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உடலில் செலுத்திக் கொண்டவர்களுக்கு லேசான கோவிட் அறிகுறிகளும், பக்க விளைவுகளும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இருவேறு தடுப்பு மருந்து டோஸ்களை எடுத்து கொண்டவர்களுக்கு குளிர், தலைவலி, தசை வலி போன்ற பிரச்னைகள் அடிக்கடி எழுந்துள்ளன. வெவ்வேறு தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொண்டதால் உண்டான பாதகமான விளைவுகள் குறைந்த நேரமே இருந்தன. "இது உண்மையில் கவலைத்தரும் கண்டுபிடிப்புகள், மேலும் இதை நாங்கள் எதிர்பார்த்திருக்கவும் இல்லை." என ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசி குழுவின் பேராசிரியர் மாத்யூ ஸ்னேப் தெரிவித்துள்ளார்.தி க…
-
- 0 replies
- 625 views
-
-
தடுப்பூசியின் முதல் அளவை பெற்றவர்களுக்கு... கொவிட்-19 பரவல் அபாயம் குறைகிறது! அஸ்ட்ராஸெனா மற்றும் ஃபைஸர்- பயோன்டெக் ஆகிய தடுப்பூசிகளின் முதல் அளவை பெற்றவர்களுக்கு கொரோனா பரவல் அபாயம் 38 முதல் 49 சதவீதம் குறைவதாக இங்கிலாந்து பொது சுகாதார துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல, தடுப்பூசி செலுத்திய 14 நாட்களுக்கு பிறகு கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கிறது. அதில் வயது வித்தியாசமில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்திருக்கின்றன. தடுப்பூசி ஒரு அளவு போட்டாலே வீடுகளில் 50 சதவீதம் தொற்று பரவல் குறைவது உறுதியாகி இருக்கிறது. தடுப்பூசிதான் நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் காக்கிறது என்பதற்கு இது சான்றாகிறது என இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…
-
- 51 replies
- 5.2k views
- 1 follower
-
-
தொற்றுநோய் அச்சுறுத்தலில் கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள் 12 Views கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள இந்த காலங்களில் கர்ப்பிணித் தாய்மார் ஏன் அதிக கவனமாக இருக்க வேண்டும்? என்பது தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. நீங்கள் கர்ப்பிணி மற்றும் உங்கள் பிறக்காத குழந்தையின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள இந்த நேரத்தில் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பது மற்றும் சரியான சுகாதார ஆலோசனைகள் மற்றும் சேவைகளைப் பெறுவது அவசியம் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஒரு கர்ப்பிணித் தாய் அவசர தேவையைத் தவிர வேறு எந்த காரணத்திற்கா…
-
- 0 replies
- 352 views
-
-
சீனாவின் தடுப்பூசி குறித்து, உலக சுகாதார நிறுவனம் தகவல்! சீனாவின் சினோவக் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி 60 வயதிற்குட்பட்ட பெரியவர்களுக்கு கொரோனா தொற்றைத் தடுப்பதில் திறமையானது என உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். எனினும், குறித்த தடுப்பூசியால் கடுமையான பாதகமான விளைவுகளின் ஆபத்து குறித்து இன்னும் சரியான முடிவுகள் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் மூலோபாய ஆலோசனைக் குழுவின் சுயாதீன வல்லுநர்கள், சீனா, பிரேசில், இந்தோனேசியா, துருக்கி மற்றும் சிலி ஆகிய நாடுகளில் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளிலிருந்து சினோவக்கின் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். இதேவேளை, சில கொரோனா நோயாளிகளுக்கு கடுமையான பக்கவிளைவுகளி…
-
- 2 replies
- 705 views
-
-
-
- 0 replies
- 486 views
-
-
விவேக் மரணமும் கோவிட் தடுப்பூசியும் || ஷாஜஹான் இல்லுமினாட்டி சதி, தடுப்பு மருந்துகளே தேவையில்லை, இயற்கை மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது என்னும் வாட்ஸ்அப் வாயர்களின் உளறல்களை நம்பிக் கொண்டு இருந்தீர்கள் என்றால், உங்கள் சுற்றத்தாரையும் பிள்ளைகளையும் அபாயத்தில் தள்ளுகிறீர்கள் என்றுதான் பொருள். April 20, 2021 “தடுப்பூசி போட்டதால்தான் விவேக் போயிட்டாரு” என்பது இன்றைய சூடான விஷயம், சிலர் பரப்பும் விஷமம். அவருக்கு ஏற்கெனவே இதயத்தில் பிரச்சினை இருந்திருக்கலாம். தடுப்பூசிக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை எல்லாம் நம்புவதற்கு அவர்கள் தயாராக இல்லை. அவர்களைப் பொறுத்தவரை, தடுப்பூசி வேண்டாம், அதற்கு இன்னொரு சாக்கு இது. (நொண்டிச்சாக்கு என்று எழுதியிருந்தேன்.…
-
- 2 replies
- 678 views
-
-
ஆஸ்ட்ரா ஜெனிகா, ஸ்புட்னிக் 5, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய 3 தடுப்பூசிகளும் தற்போது இவ்வகை ரத்தம் உறைதல் பாதிப்பை அளிப்பதாக அறிவியல் தரவுகள் சொல்கின்றன. இது ஏன் ஏற்படுகிறது? கடந்த சில நாள்களாக மக்களிடையே பெருகிவரும் அச்சம், கோவிட் தடுப்பூசியால் மனிதர்களுக்கு ஏற்படும் ரத்த உறைவு ஏற்படுமா என்பதுதான். காரணம், அது தொடர்பான ஊடகச் செய்திகள். உலகில் பல்வேறு நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி ஆய்வில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம். உலகின் முன்னணி மருத்துவ நிறுவனங்களான ஃபைஸர், ஜான்சன் அண்ட் ஜான்சன் எனப் பல நிறுவனங்கள் அவர்களுடைய இணை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடனோ, தம் மருத்துவ ஆய்வகத்தின் உதவியுடனோ தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து மக்கள் நலனுக்காகச் சந்தைப்ப…
-
- 0 replies
- 793 views
-
-
Quote
-
- 0 replies
- 584 views
-
-
தடுப்பூசி போட்டவர்களை கோவிட்-19 தாக்குமா?- வைத்திய நிபுணர் பேராசிரியர்.தி.குமணன் 99 Views தடுப்பூசி போட்டவர்களையும் கோவிட்-19 தாக்கும்’ என்பதனையும் இறப்பு மற்றும் தீவிர நோய்த்தாக்கத்திலிருந்து காப்பதே இத்தடுப்பூசியின் நோக்கம் என்கிறார் யாழ்.பல்கலைக்கழக மருத்துவதுறை பொது வைத்திய நிபுணர் பேராசிரியர்.தி.குமணன். அவரால் வரையப்பட்ட கோவிட்-19 தொடர்பான கட்டுரையிலேயே இவ்விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். கோவிட்-19 தடுப்பு மருந்து செலுத்தகூடியவர்கள், அதன் பாதுகாப்பு முறைகள் மற்றும் அதன் தன்மை உள்ளிட்ட பல விடயங்களை அவர் இவ்வாறு விளக்குகின்றார். கோவிட் தடுப்பூசி (Covid Vaccine) யார் எல்லாம் ஏற்றிக்கொள்ளலாம்? …
-
- 0 replies
- 455 views
-
-
இலங்கை பேராசியர் குழு கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் இலகுவான பரிசோதனையை அறிமுகப்படுத்தியது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எதிர்புடலை அடையாளம் காணும் இலகுவான பரிசோதனை முறையினை பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிபுணர் குழுவினர் கண்டுப்பிடித்துள்ளனர். குறித்த பரிசோதனைக்கு விரல் நுனியில் இருந்து எடுக்கப்படும் ஒரு சொட்டு இரத்தம் போதுமானதாக இருக்குமென நிபுணர் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றினை கண்டவது குறித்து முன்னெடுக்கப்படும் ஏனைய பரிசோதனை முறைமையை விட இது மிகவும் இலகுவானதொன்று எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்கு சுமார் 3,000 குருதி மாதிரிகள் பெறப்பட்டதாக ஆய்வில் பங்கேற்றிருந்த…
-
- 0 replies
- 474 views
-
-
பிரிட்டன், ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து தற்போது கொரோனா வைரஸின் புதிய இரட்டை பிறழ் திரிபு இந்தியாவில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 18 மாநிலங்களில் பரவலாக சேகரிக்கப்பட்ட வைரஸ் மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. சேகரிக்கப்பட்ட 10 ஆயிரத்து 787 மாதிரிகளில், பிரிட்டனில் பரவிய வைரஸ் பிறழ் திரிபு 736 மாதிரிகளுடன் ஒத்துப்போகிறது. இதேபோல, 34 வைரஸ் திரிபு, தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸுடனும் ஒரு திரிபு பிரேஸிலில் உருமாறிய கொரோனா வைரஸுடனும் ஒத்துப் போகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களி…
-
- 0 replies
- 533 views
-
-
கொரோனா தடுப்பூசி மருந்தால் ரத்தம் உறைகிறதா? தீவிரமாகும் சர்ச்சை - திட்டத்தை தொடர ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் 17 மார்ச் 2021 பட மூலாதாரம், REUTERS ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக தயாரிப்பான ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு ரத்த உறைவு அறிகுறிகள் ஏற்படுவதற்கான ஆபத்து கிடையாது என்ற ஆய்வு நிறுவனத்தின் வாதத்தை உறுதிபட நம்புவதாக ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான ஐரோப்பிய மருந்துவ ஏஜென்ஜி தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் முன்னர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய தங்களின் அமைப்பு எடுத்த முடிவில் உறுதியுடன் இருப்பதாக அந்த அமைப்பின் தலைமை அதிகாரி எமெர் குக் தெரிவித்துள்ளார். ஆஸ…
-
- 0 replies
- 568 views
-
-
கொரோனா வைரஸ் தாக்கினால் உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல் கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கினால் அவரது நுரையீரலும், இதயமும் மிக கடுமையாக பாதிக்கப்படும் என்று முதலில் ஆய்வு தகவல்கள் தெரிவித்தன. பிறகு சிறுநீரகத்தையும் இந்த வைரஸ் மிக வேகமாக தாக்கும் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் குணம் அடைந்தாலும் அவர்கள் எதிர்காலத்தில் எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஒரு ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்பட்டு ஆண்மைத் தன்மை பறிபோகும் என்ற ‘பகீர்’ தகவல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா வைரசின் பிந்தைய பின் விளைவுகள் பற்றிய மிகப்…
-
- 0 replies
- 757 views
-
-
மூக்குக் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான சாத்தியம் 3 மடங்கு குறைவு மூக்குக் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான சாத்தியம் 3 மடங்கு குறைவாக காணப்படுகின்றமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள ஆய்வுக் குழுவொன்றினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெவித்துள்ளன. இதன்போது, 304 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மூக்கு கண்ணாடி அணிபவர்கள் குறைந்தளவில் தத்தமது முகத்தினை தொடுவதன் காரணமாக அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுவதற்காக சாத்தியம் குறைவாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு மனிதனும் சராசரியாக மணித்தியாலம் ஒன்றுக்கு 23 தடவைகளை தமது முகத்தை தொடுவதாகவும் அதில் சராசரியாக மூன்று தடவைகள் கண்களை தொடுகி…
-
- 0 replies
- 556 views
-
-
மூலத்தை மதிப்பிடுங்கள் உங்களுடன் தகவல்களைப் பகிர்ந்தவர் யார், அவர்கள் எங்கிருந்து அதைப் பெற்றார்கள் என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் . உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினராக இருந்தாலும், அவர்களின் மூலத்தை நீங்கள் சரிபாக்க வேண்டும். போலி சமூக ஊடக கணக்குகளைச் சரிபார்க்க, குறிப்பிடட கணக்கின் சுயவிவரங்கள்(Profiles) எவ்வளவு காலம் செயலில் இருந்தன, அவற்றைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சமீபத்திய இடுகைகளைப் பாருங்கள். வலைத்தளங்களைப் பொறுத்தவரை, பின்னணி தகவல்கள் மற்றும் முறையான தொடர்பு விவரங்களைத் தேட “எங்களைப் பற்றி” மற்றும் “எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்” பக்கங்களைச் சரிபார்க்கவும். படங்கள் அல்லது காணெளிகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க ஒர…
-
- 1 reply
- 862 views
-
-
`இந்த மூன்றும் கூட கொரோனா அறிகுறிகளாக இருக்கலாம்!' - சொல்லும் பிரிட்டனின் புதிய ஆய்வு Guest Contributor New corona virus ( Pixabay ) காய்ச்சல், இடைவிடாத இருமல், வாசனை மற்றும் சுவை உணர்வுகள் மரத்துப்போவது போன்ற அறிகுறிகள் மட்டுமல்லாமல் தற்போது புதிதாக குளிர், பசியின்மை, தசைவலி போன்றவற்றையும் காட்டக்கூடும் என்று ஆய்வில் கண்டுபிடிப்பு. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருக்கும் இம்பீரியல் கல்லூரி ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. உலக நாடுகளின் பிரதான அச்சமாக உள்ள கொரோனா பெருந்தொற்று முன்பு கூறியுள்ள பல அறிகுறிகளையும் தாண்டி வேறு சில அறிகுறிகளான குளிர், பசியின்மை, தசைவலி போன்றவற்றையும் காட்டக்கூடும் என்பதே அது. …
-
- 1 reply
- 920 views
-