Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்

அரசுகளால், உலக சுகாதார சபை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் , நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்களால் மற்றும் உறுதி செய்யப்பட்ட  COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் இங்கு பதிந்து கொள்ளுங்கள். COVID-19: Coronavirus செய்திகள் இப்பகுதியில் இணைக்கப்படலாகாது. செய்திகள் அதற்குரிய பகுதிகளில் இணைத்துக்கொள்ளுங்கள்.

  1. கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ‘பல்ஸ் ஆக்சி மீட்டர்’ என்றால் என்ன...? பயன்கள்..?

  2. அறிகுறிகள் தோன்றிய நாளிலிருந்து 2 வாரங்களுக்கு கரோனா நோயாளிகளிடம் இருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவும்: நுரையீரல் நோய் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை மதுரை கரோனா நோயிலிருந்து மீண்டாலும் அந்த நோயாளிகளிடம் இருந்து நோய் அறிகுறி தோன்றிய நாளிலிருந்து அடுத்த இரண்டு வாரங்களுக்கு ‘கரோனா’ தொற்று பரவும் வாய்ப்புள்ளதாக நுரையீரல் நோய் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ‘கரோனா’ தொற்று நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் அவரவர் தொந்தரவுகளுக்கான மருந்து மாத்திரைகளுடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சத்தான உணவுகள் சாப்பிட்டாலே இந்த நோயிலிருந்து நோயாளிகள் மிக எளிதாக மீண்டு விடுகின்றனர். அதனால், மதுரை மாநகராட்சிப்பகுதியில் …

  3. கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகள் – மக்களே அவதானம் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்த பின்னர் புதிய அறிகுறிகள் ஏற்படத் தொடங்கின. அதன் தொடர்ச்சியாகத் தற்போது கெண்டைக்கால் பகுதியில் ஏற்படும் வலி, வயிற்றுவலி ஆகியவையும் கொரோனாவின் அறிகுறிகளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்றின் அறிகுறிகளாக முன்னர் சளி, இருமல், காய்ச்சல் மட்டுமே கூறப்பட்டன. தற்போது புதிய அறிகுறிகள் ஏற்படத் தொடங்கியதன் தொடர்ச்சியாகத் வயிற்றுப்போக்கும் இப்போதெல்லாம் கொரோனா அறிகுறியாகத் தென்படுகிறது என கூறப்படுகிறது. நீரிழிவுநோய் இல்லாதவர்களுக்குக்கூட கொரோனா தொற்றால் சர்க்கரையின் அளவானது 400ஐ கடந்து விடுகிறது என்றும் கூறப்படுகிறது. இதேநேரம் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்ப…

  4. கொரோனா வைரஸ்: காற்று வழியாக பரவுவது என்றால் என்ன? கட்டுப்படுத்துவது எப்படி? 24 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அண்மை காலம் வரை கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு, அந்த வைரஸ் இருக்கும் பரப்புகளுடனான தொடர்புகளே தொற்று பரவ ஒரே அறிவியல் ரீதியிலான காரணமாக உலக சுகாதார நிறுவனம் கருதி வந்தது. …

  5. பிரித்தானியாவில் நலவாழ்வு திட்டத்தின் மூலம் வைத்தியர்களின் பணிகள்

  6. கொரோனா வைரஸ் மீண்டும் மீண்டும் ஒருவரைத் தாக்குமா? கொரோனா நோயாளிகளுக்கு ஒருமுறை நெகட்டிவ் முடிவு வந்துவிட்டது என்பதால் மீண்டும் தொற்று ஏற்படாது என்ற முடிவுக்கு வர முடியாது. ஒருமுறை கொரோனா வந்தவர்களுக்கு மீண்டும் வருவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் பல செய்திகளைக் கேள்விப்படுகிறோம். பாதித்தவர்களுக்கே மீண்டும் தொற்று ஏற்படுவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். ஆனால், எந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதற்கு எதிரான எதிர்ப்புப்பொருள் (ஆன்டிபாடி) உடலில் உருவாகும். குறிப்பிட்ட நாள்களுக்கு அது தடுப்பாகச் செயல்பட…

  7. தற்கொலை எண்ணத்தை விரட்ட‘‘ஆமாம்.. எனக்கு கரோனா’’ என்று தைரியமாக சொல்லுங்கள்: மன இறுக்கத்தை போக்கும் மருத்துவர் தீபா கரோனா தொற்றுக்கு ஆளான சிலர் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலைக்கு துணியும் சம்பவங்கள் வேதனையைத் தருகின்றன. இதுகுறித்து, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியரும், துறைத் தலைவருமான டாக்டர் தீபா நம்மிடம் பேசினார். கரோனா சிறப்பு வார்டுகளில் நோயாளிகளுக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகளை அளிப்பதுடன், அவர்களுக்கு இயற்கை மருந்துகளையும் வழங்கி வருகிறார் தீபா. அவருடன் உரையாடியதில் இருந்து.. கரோனா சிகிச்சையில் இருப்பவர்களில் 4 ஆயிரம் பேரை ஆற்றுப்படுத்தி இருக்கிறேன். அவர்களில் பலர் தங்களுக்கு க…

  8. கபசுரக் குடிநீரை யார், எவ்வளவு பருகலாம்? - விரிவான விளக்கம் படத்தின் காப்புரிமை Muralinath / getty images கொரோனா தொற்றின் பிரதான அறிகுறியான காய்ச்சல் மற்றும் சளியை சமாளிக்க அருந்தப்படும் சித்த மருத்துவ குடிநீரான கபசுரக் குடிநீர் பருகும் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படியே பொது மக்கள் அதை அருந்தவேண்டும் என்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் கபசுரக்குடிநீரின் பயன்பாடு குறித்த விரிவான ஆய்வு நடைபெற்றுவருகிறது. ஆரோக்கியமான குழந்தைகள், முதியவர்கள், இளம் வயதினர், கொரோனா நோயாளிகள் என ஒவ்வொருவருக்கும் கபசுரக்குடிநீர…

  9. மலிவான மற்றும் எளிதாக கிடைக்க கூடிய இந்த மருந்து ஒன்றில் மூன்று பேரை காப்பாற்றும் என நம்பப்படுகின்றது.

    • 3 replies
    • 1.6k views
  10. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்துவதை நிறுத்தும் அமெரிக்கா Getty Images ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மலேரியா தடுப்பு மருந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைக்குப் பயன்படுத்துவதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் நிறுத்தியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக இந்த மருந்து செயல்படவில்லை என்பது சமீபத்திய சோதனையில் தெரியவந்துள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஆட்டத்தையே மாற்றப் போகிறது என்று குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், கோவிட்-19 கிசிச்சைக்கு அதைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தினார். கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களின் அவசர சிகிச்சைக்காக இந்த மருந்தைப் பயன்படுத்…

  11. சுதா சேஷய்யன் பதில் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்படும் நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் அக்டோபர் 2020 வரை அதிக அளவில் பரவும் என தமிழ்நாடு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சுதா சேஷய்யன், கொரோனா வைரஸ் மரபணு திடீர் மாற்றமடைவது குறித்தும், இளம் வயது மரணங்கள் ஏன் அதிகரிக்கின்றன, 'சைலன்ட் ஹைபாக்சியா' எனப்படும் அறிகுறிகள் தென்படாமல் நிகழும் சில மரணங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது எப்படி என்பவை குறித்து விளக்கமாகப் பேசினார். அவர் அளித்த பேட்டியிலிருந்து: கொரோனா வைரஸின் கிளையினமான ஏ3ஐ…

  12. கொரோனா வைரஸ்: சமூக பரவல் மற்றும் ஹெர்ட் இம்யூனிட்டி என்றால் என்ன? Getty Images உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொருத்த வரையில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும் சமூக பரவல் மற்றும் ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் ஆகியன பற்றிய கேள்விகள் முன் வரத் தொடங்கின. ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா வைரஸ் சமூக பரவல்…

  13. அபர்ணா ராமமூர்த்தி பிபிசி தமிழ் கொரோனா வைரஸ் பாதிப்பால், பல கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். மாதாந்திர செக் அப், ஸ்கேன், உள்ளிட்ட பல விஷயங்களுக்கு அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கொரோனா தொற்று அதற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, கொரோனா காலகலலத்தில் வெளியே சென்றால், அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் உள்ளது. சென்னை அரசு மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி 191 கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வருவதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. அந்த வகையில் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் 70 பேரும், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 68 பேரும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபா க…

  14. பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும்: நிலைப்பாட்டை மாற்றிய உலக சுகாதார நிறுவனம் ARUN SANKAR / Getty கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடும்போது மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மாஸ்க் அணிவதால் கொரோனா வைரஸ் பரவாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் முன்பு கூறியிருந்த நிலையில், தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளது. தொற்றைப் பரப்பக்கூடிய நுண்ணிய எச்சில் மற்றும் சளி துளிகளைத் தடுக்கும் ஒரு தடையாக மாஸ்க் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை ஏற்கனவே பல நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன. ’’நோய்த்தொ…

  15. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 கரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கியுள்ளது. அந்த நோயாளிகள் உடல்நிலை நல்ல நிலையில் முன்னேற்றம் அடைவதாக மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் மூலம் பெறப்பட்ட பிளாஸ்மா மூலம் மற்ற கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிளாஸ்மா சிகிச்சை முறை கேரளாவில் பின்பற்றப்பட்டது. இந்த முறையில் ஏராளமான நோயாளிகள் குணமடைந்தனர். தற்போது இந்த சிகிச்சை தமிழகத்திலும் கடைபிடிக்கப்படுகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 நோயாளிகளுக்கு இந்த பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. அந்த நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ‘டீன்’ சங்குமணி தெரிவித்தார். …

  16. அறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்களின் ஆபத்பாந்தவன் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்! உங்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவைக் கணக்கிடப் பயன்படும் சிறிய க்ளிப் (Clip) போன்ற ஒரு எலெக்ட்ரானிக் கருவியே ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய 80% பேர் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படுத்தாத ஏசிம்ப்டமடிக் (Asymptomatic) நிலையில் இருப்பவர்களாம்! இந்தத் தகவலை சில வாரங்களுக்கு முன்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) வெளியிட்டது. அதாவது ஏசிம்ப்டமடிக் நிலையில் இருப்பவர்களுக்குக் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற கொரோனாவுக்கான அறிகுறிகள் எதுவுமே இருக்காது. அப்படி இருந்தாலும் மிகவும் கு…

  17. கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருகிறது – இத்தாலி வைத்தியர் கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருவதாக இத்தாலியைச் சேர்ந்த சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனாவின் ஆபத்துக்கள் படிப்படியாக குறையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 2,32,997 பேர் பாதிக்கபட்டுள்ளனர். அத்தோடு, 33,415 பேர் உயிரிழந்துள்ளனர். மே மாதத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இருந்தபோதும் சில கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருவதாக தொலைக்காட்சியொன்றுக்கு வழ…

  18. அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் ஜேர்மனி அதிபர் பங்கேற்கமாட்டார்! அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் பங்கேற்க மாட்டார் என ஜேர்மனிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் சீபர்ட் தெரிவித்துள்ளார். கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் 46ஆவது ஜி-7 உச்சிமாநாடு மார்ச் மாத நடுப்பகுதியில் அமெரிக்காவில் நடைபெறவிருந்தது. எனினும், கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக, இந்த மாநாடை இணைய வழியுடாக நடத்த ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால், வெள்ளை மாளிகைக்குத் தலைவர்களை நேரடியாக அழைத்து, மேரிலாந்து மாநிலத்தில் உள்ள கேம்ப் டேவிட் எ…

  19. சாதாரணமாக வந்து செல்லும் காய்ச்சலாக மாறிவிடும்; கரோனா வைரஸை கண்டு அச்சமடைய வேண்டாம்- பொதுமக்களுக்கு டாக்டர் அஸ்வின் விஜய் அறிவுரை சென்னை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, 130 கோடி மக்கள் தொகை கொண்டஇந்தியாவில், வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் குறைவாகவே உள்ளன. அதனால், கரோனாவைரஸைக் கண்டு மக்கள் அச்சமடைய வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் அஸ்வின் விஜய் கூறியதாவது: கரோனா என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் அச்சமடைகின்றனர். இந்த வைரஸ் உலக அளவில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புதான் இதற்கு காரணம். பரிசோதனைகள் அதிகரிக்கும்போது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அ…

  20. கொரோனா வைரஸ்: சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்படாதா? #BBCRealityCheck ஸ்ருதி மேனன், பீட்டர் மவாய் பிபிசி ரியாலிட்டி செக் அணி Getty Images கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஐந்து மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையிலும், அது ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல் சிறிதும் குறைந்தபாடில்லை. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலுக்கு ஈடாக அதுகுறித்த போலிச் செய்திகளும் அதிவேகமாக பரவி வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான சில போலிச் செய்திகள் குறித்த பின்னணியை பார்ப்போம். 1. மருத்துவர்கள் சைவ உணவுமுறையை பரிந்துரைக்கவில்லை Social Media இந்தியாவின் இரண்டு முக்கிய மருத்துவ அமைப்புகள் மற்றும் அந்த நாட்டின் மூத்…

  21. கொரோனா வைரஸ்: வீட்டுக்குள் இருந்தால் நோய் எதிர்ப்பாற்றல் எப்படி பாதிக்கப்படும்? லிண்டா கெட்டெஸ் பிபிசிக்காக Getty Images கடந்த 2 மாதங்களாக உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் வீடுகளில் முடங்கிக் உள்ளார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியில் செல்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்தை இது குறைத்திருக்கலாம் என்றாலும், வேறு நோய்த் தொற்றுகளுக்கு அதிகளவில் ஆட்படக் கூடிய அளவுக்கு நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மீது இது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். 24 மணி நேர காலத்தில் வெளிச்சம் மற்றும் இருட்டு என்ற உலக வாழ்க்கைக்கு மனிதர்களின் உடல் பழகி வளர்ந்துள்ளது. சூரிய வெளிச்சத்தைப் பொருத்து செயல்படும் வகையில் நமது உடல்கள் அமைந்துள்ளன. புற ஊதா கதி…

  22. கொரோனாவுக்கு டிரம்ப் பரிந்துரைக்கும் மருந்தால் 'மரணிக்க வாய்ப்பு அதிகம்' Getty Images மலேரியாவிற்கு வழங்கப்படும் மருந்தான ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்தை கொரோனா நோய் தொற்று நேயாளிகளுக்கு அளிப்பதால் எந்த பயனும் இல்லை என்றும், மாறாக அதனால், நோயாளிகள் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. லேன்செட் அறிவியல் சஞ்சிகையில் இந்த ஆய்வு பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்தை தாம் எடுத்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்தை உட்கொண்டால் இருதயப் பிரச்சனைகள் வரும் என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்தாலும், தாம் எடுத்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். மருத்த…

  23. சுவை மற்றும் வாசனையின் இழப்பும் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அறிகுறிகளின் பட்டியலில் சுவை மற்றும் வாசனையின் இழப்பை உத்தியோகபூர்வ பிரித்தானியா சேர்த்துள்ளது. இதனால், மக்கள் இதனை கவனித்து அவதானமாக செயற்பட வேண்டுமென மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜொனாதன் வான்-டாம், அரசாங்கத்தின் உயர்மட்ட விஞ்ஞான ஆலோசகர்களுடன் மேற்கொண்ட ஆய்வின் பின்னர், இந்த விடயம் தெரியவந்துள்ளது. தேசிய சுகாதார சேவையின் அறிகுறிகளின் பட்டியலில், முன்னதாக காய்ச்சல் மற்றும் இருமல் மட்டுமே இருந்தன. தற்போது வாசனை அல்லது சுவை இழப்பு (அனோஸ்மியா என்றும் அழைக்கப்படுகிறது) இவை இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. எ…

  24. குறிப்பு : தகவல் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழில் இது தொடர்பான மொழியாக்கம் கிடைத்ததும் இணைக்கப்படலாம். HIGHER TEMPS CUT VIRUS LIFE: William Bryan on how virus survives

    • 4 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.