நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
கொடிய வியாதிகளில் ஒன்றான புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ரத்தப்புற்றுநோய் குறிப்பிடத்தகுந்தது. இதன் பாதிப்பும் எய்ட்ஸ் போலவே ரத்த வெள்ளையணுக்களை அழித்துஇ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் செய்து விடும். மேலும் எலும்புகளையும் தாக்கும். நாளடைவில் ரத்த சிவப்பணுக்களையும் தாக்கி அனிமீயா எனப்படும் மற்றொரு வியாதியையும் தூண்டிவிடும். ரத்தப் புற்றுநோயானது சீரான முறையில் வளர்ச்சி அடையாமல் தாறுமாறாக பெருகி கோரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இதை கட்டுப்படுத்துவதும் சிரமமாக இருந்து வந்தது. இங்கிலாந்தில் மட்டும் ஆண்டு தோறும் 7 ஆயிரம் பேர் இந்த கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு சுமார் 4 ஆயிரம் பேர் இறந்து வந்தனர். இதன் பாதிப்பை கட்டுப்படுத்த நடந்து வந்த ஆய்வுகள் த…
-
- 2 replies
- 1.6k views
-
-
தொழில் சம்பந்தமான பணிகளால் இரவில் நன்றாக தூங்கவில்லையா? இரவில் வெகுநேரம் கண்விழித்து படிக்கிறீர்களா? இது பிற்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. மூளையின் நுட்பமான பகுதிகளின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள். எலிகளை நீண்ட நேரம் தூங்க விடாமல் செய்து அவற்றின் மூளை செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று ஆய்வு செய்தனர். அப்போது எலியின் மூளையில் தசைகள், பீட்டா செல்கள் பாதிக்கப்பட்டன. இதன்மூலம் “அல்சிமர்” நோய் ஏற்படுவதும் தெரிகிறது. எனவே இரவில் சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும். http://www.lankasritechnology.com/index.ph...amp;ucat=2&
-
- 29 replies
- 3.9k views
-
-
உடல் நலம் காக்கும் தாய்பால் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப் பதால் குழந்தைக்கு ஆரோக்கியம் தாய்க்கும் மிகுந்த நன்மை ஏற்படுகிறது. தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் அடங்கி இருக்கிறது. தண்ணீர் கொழுப்பு புரதம் சர்க்கரை தாதுப்பொருட்கள் ஆகியவை தாய்ப்பாலில் காணப்படுகிறது. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு விட்டமின் சி சத்து கிடைக்காது. ஆனால்தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த சத்து கிடைத்துவிடுகிறது. பெண்களின் இரண்டு மார்பகங்களும் சேர்ந்து ஒரு நாளைக்கு 100 மி.லி. முதல் 1.5 லிட்டர் வரையில் பால் உற்பத்தி செய்கின்றன. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கல்சியம் விட்டமின்கள் ஆகியவற்றை மார்பகச் சிற்றறைகள் பிரித்து பாலாக மாற்றுகின்றன. ஆகவே எல்லாவித ச…
-
- 10 replies
- 3.3k views
-
-
சிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடல் அழகாக்க பிடிக்காது அவங்களுக்கு இதோ சில உணவுகள் மூலமே அழகாக்க சில உணவு குறிப்புகள் உடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம் கீரை எல்லா வைகயான கீரையும் அதிகம் சாப்பிடலாம். குறிப்பாக வெந்தயக்கீரை, பசலைக்கீரை,முருங்கை கீரைகளில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் ஜிங்க் சத்து இருக்கு. இந்த கீரைகளுடன் விட்டமீன் சி சத்துள்ள உணவுகள் சேர்த்தும் சாப்பிடும் பொழுது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும் இதன் மூலம் கண்களுக்கு கருவளையம் குறையும், முகத்தில் பருக்கள் வருவது குறையும். வருண்ட சருமம் உள்ளவர்கள்: அதிக வருண்ட சருமம் உள்ளவர்கள் உணவில் கொழுப்பு நிறைந்த உணவுகள் (உடல் நலனுக்கு ஏற்ப) உணவில் சேர்த்துக்கொள…
-
- 5 replies
- 2k views
-
-
எல்லாற்ற மனசிலயும் ஏதோ ஒரு கோவம், ஆத்திரம், பயம், கவலை, ஆற்றாமை ,பரிதவிபு்பு, ஆதங்கம், மன ஏக்கம், கையறுநிலை இப்பிடி ஏதோ ஒரு உணர்வு அல்லது எல்லாம் கலந்த ஒரு உண்ர்வு சமீபகாலமா இருந்துகொண்டே இருக்கு. அந்த மனநிலைல இருந்து எப்பிடி வெளில வாறதெண்டுதான் தெரியேல்ல. கொஞ்சக்காலமாவே எனக்கும் இந்த நிலைதான். யாரை யார் தேற்றுவது? யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யாரிலயோ என்னத்திலயோ இருக்கிற கோவத்தை வருத்தத்தை வேறயாரிடமாவது அல்லது ஒரு சடப்பொருள் மேலயோ காட்டிக்கொண்டிருக்கிறம் இல்லையா? நீங்கள் எப்பிடியோ தெரியாது ஆனால் கொஞ்சநாளா நான் நடந்துகொள்ற விதம் எனக்குப் பிடிக்கவே இல்லை. கிட்டடில ஒருநாள் ஒரு நண்பனிட்ட ஏதோ கேட்டதுக்கு " உம்மோட பெரிய உபத்திரம்" என்று வெகு சாதாரணமா சொன்ன விசயம் நானே எத…
-
- 4 replies
- 2k views
-
-
எடை குறைய எளிய வழிகள். உங்கள் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போகிறதா? உங்கள் உடல் நலத்திற்கு அது பாதகமாக இருக்கும் என்று கவலையா? பட்டினி போட்டு உடலை மெலிய வைக்கும் முயற்சிகள் உடலைப் பலவீனமாக்கி விட்டதா? மனம் தளர வேண்டாம். உடலின் ஆரோக்கியத்திற்கும் பண விரயத்தைக் குறைக்கவும் பாதகமில்லாத வழிகள் உள்ளன. சில எளிய தீர்மானங்களைச் செயல்படுத்தினால் போதும் கை மேல் பலன் உண்டு. 1.பசி எடுத்தால் மட்டுமே உணவு உண்ணுதல். 2.நொறுக்குத் தீனி உண்ணவேண்டும் போல் இருந்தால் ஒரு பேணி தண்ணீர் குடித்தல். 3.கோபம்இ விரக்திஇ வேதனை என உணர்ச்சி வசப்பட்டிருக்கும் போது உணவு உண்பதைத் தவிர்த்தல். 4.இனிப்புவகை உணவுகள்இ தேநீர்இ கோப்பி அருந்துவதை அளவாக வைத்திருத்தல். 5.உணவில் ஒவ்வொரு நாளும் பழங்க…
-
- 14 replies
- 6.8k views
-
-
50 வயதில் மனமும் நினைவுகளும் நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு மூளையாகும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மூளையும் சுறுசுறுப்பாக வேலை செய்யும். பெரும்பாலானவர்கள் எதற்கெடுத்தாலும் "வயதாகிவிட்டது வயதாகிவிட்டது"என்று சொல்லவார்கள். இது ஒரு பிரச்சனையிலிருந்து அல்லது வேலையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்குரிய முயற்சியாகும். வயது என்பது ஒரு பெரிய விடயமல்ல. முயற்சி செய்தால் உலகத்தில் முடியாதது எதுவுமில்லை. ஒரே மாதிரியான வேலையைச் செய்வதால் மூளைக்கு அலுப்புஏற்படும். இதனால் புதிய புதிய உத்திகளைஎண்ணங்களை தினமும் யோசித்து செய்வது மூளைக்கு உற்சாகம் அளிக்கும். புதிய புதிய தேடுதல்களை மேற்கொள்ளுங்கள் ஓய்வு என்பது வேலை செய்யாமல் ஓய்ந்திருப்பது அல்ல. தொடர்ந்து ஏதேனும் ஒரு வேலையைச்…
-
- 11 replies
- 1.7k views
-
-
பித்தப்பை கற்களுக்கு தீர்வு என்ன!!!! முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம். அதாவது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப் பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது. இந்த பித்தப் பை நமது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. அதாவது ஒரு வேளை சாப்பிட்டு அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும். நாம் உணவு உண்டதும் இந்த பித்தப் பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் குடலுக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. அவ்வாறு பித்தப் பை சுருங்கி விரிவடையாமல் நின்று போவதால்இ பித்தப…
-
- 5 replies
- 2.8k views
-
-
குணமளிக்கும் கொய்யாப்பழம் நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் ஒன்று கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா அனைவருக்கும் பிடிக்கும் கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும் மரங்களாகும் கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும் விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது சுவையான கொய்யாப்பழங்களின் மருத்துவ குணங்களைப் பார்ப்போமா! கொய்யா மரத்தின் வேர்இஇலைகள்இ பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல் …
-
- 0 replies
- 2.3k views
-
-
நீங்கள் குறட்டை விடுபவரா?????? யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நின்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம்.குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது உடல் மிகவும களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும் தெளிவற்ர சிந்தனை வரும் அதிக மாக கோவம் வரும் இது மட்டுமன்றி உடலுக்கு போதிய அளவு பிராண வாயு கிடைக்காது. இதனால் இரத்த அழுத்தம் சக்கரை நோய் இதய நோய் பக்க வாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இரக்கிறது. அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடு?வார் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது அதனால் இவற்ரை தடுக்க நடவடிக்கை எட…
-
- 22 replies
- 19.8k views
-
-
உதயன் இணையத்தள செய்தி பன்றிக்காய்ச்சலை இஞ்சி,வெங்காயம், பூண்டு குணப்படுத்தும்பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவுகிறது. இதனால் நாடு முழுவதும் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இடைவிடாத சளி, இருமல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளது. இது ஒருவர் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தொற்று நோய். முதன் முதலில் மெக்சிகோ நாட்டில்தான் பன்றிக்காய்ச்சலுக்கான நோய் கிருமி உருவானது. நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கிருந்து காற்றின் மூலம் மற்ற உலக நாடுகளுக்கும் பரவியது. இந்த நோய் தாக்கப்பட்ட மனிதன் இருமல், தும்மல் மூலம் நிமோனியா…
-
- 0 replies
- 1.1k views
-
-
திங்கட்கிழமை, 10, ஆகஸ்ட் 2009 (15:23 IST) பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவசர கால நடவடிக்கையாக பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். . * காய்ச்சல், இருமல், தொண்டை வலி, ஜலதோஷம், மூக்கொழுகல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் குடும்ப மருத்துவரை அணுக வேண்டும். அவர் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்று தெரிவித்தால் இதற்கென அருகாமையில் உள்ள அரசு சோதனை மையம் அல்லது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். * பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் முகமூடி அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும். * பன்றிக்காய்ச…
-
- 0 replies
- 958 views
-
-
மனித சமுதாயத்தைப் பெரிதும் பாதித்து, பல லட்சக்கணக்கான மக்கள் இறப்பதற்குக் காரணமான கொடிய நோய்கள் இரண்டு எய்ட்ஸ் மற்றும் புற்று நோய்.மனித சமுதாயத்துக்குச் சவாலாக இருக்கும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடக்கின்றன. இந்த ஆராய்ச்சிகளின் பலனாக புற்றுநோய் சிகிச்சையில் ஒரு வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் குறித்து மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, அதிநவீன பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறையில் தோன்றியுள்ள புதிய முறைகள், முன்னேற்றங்களால் இது சாத்தியமானது. எனினும், பெரும்பாலான மக்களிடையே, புற்றுநோய் ஒரு குணப்படுத்த முடியாத நோய் என்ற கருத்து நிலவுகிறது. இந்த நோயைப் பற்றி முழு விவரங்களை யும் அறிந்துகொண்டால், இது குறித்து விழ…
-
- 1 reply
- 2.2k views
-
-
img: wikimedia.org சூரியப்படுக்கைகள் (sun beds அல்லது Tanning Beds) என்று அழைக்கப்படும் புறஊதாக் கதிர்ப்புக்கள் (ultraviolet) கொண்டு ஆக்கப்பட்டுள்ள படுக்கைகள் உடல் நலத்துக்கு தீங்கானவை என்றும் அவை ஆசனிக் மற்றும் நச்சு வாயுக்களுக்கு (Mustard Gas) இணையாக மனிதரை சிறுகச் சிறுகக் கொல்லும் இயல்புடையன என்றும் குறிப்பாக தோல் மற்றும் கண் புற்றுநோய்களின் பெருக்கத்துக்கு காரணமாக இருக்கின்றன என்றும் சமீபத்திய பல ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. முன்னர் புறஊதாக் கதிர்ப்புகளில் ஒருவகை மட்டுமே புற்றுநோய்க்குக் காரணம் என்று கூறப்பட்டு வந்துள்ள நிலையில் அனைத்து வகை புறஊதா கதிர்ப்புகளும் ஏதோ ஒருவகையில் மரபணு அலகுகளில் மாற்றங்களை உண்டு பண்ணி புற்றுநோ…
-
- 1 reply
- 1.2k views
-
-
(Image from: food.gov.uk/ & Edited for translation only.) நீங்கள் அரோக்கியமான வாழ்வு வாழ உண்ண வேண்டியது நிறையுணவு (Balance diet) ஆகும். அந்த நிறை உணவு எவ்வகை உணவுப் பொருட்களை எவ்வெவ்வளவுகளில் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்கிறது இப்படம். நீங்கள் உணவு உண்ணப் பாவிக்கும் வட்ட வடிவ உணவுத் தட்டில் மேற்படி அளவுக்கு குறிப்பிட்ட வகை உணவுகளை நீங்கள் நாள் தோறும் உண்டு வந்து.. நல்ல உடற்பயிற்சி அல்லது உடற்பயிற்சி அளிக்கக் கூடிய கடின வேலைகளையும் செய்து வந்தால் உங்கள் ஆயுள் நீண்டதாக இருக்கும். பூமியில் பிறந்த யாருக்குத்தான் நீண்ட நாள் வாழ ஆசையில்லை. உங்களின் ஆசையை பூர்த்தி செய்ய இக்குறிப்பு உதவும் என்று நம்புகின்றோம். source: http://www.kuruvikal.blogspot.com/
-
- 0 replies
- 4.2k views
-
-
மாரடைப்பைத் தடுக்கும் வெள்ளைப் பூண்டு. வெள்ளைப் பூண்டு அபூர்வ மருத்துவ சக்தி படைத்தது. அதன் பெருமையை தமிழர்கள் நீண்டகாலமாகவே அறிந்திருந்தார்கள். அத்துடன் வெள்ளைப் பூண்டு சிறந்த கிருமி நாசினி. இந்தியாவிலுள்ள விவசாய விஞ்ஞானிகள் தாவரத்தை அழிக்கும் பூச்சி வகைகளை வெள்ளைப் பூண்டு கொல்லக் கூடியது என்பதைக் கண்டு பிடித்துள்ளார்கள். வெள்ளைப் பூண்டுக்கு எத்தனையோ அரிய குணங்கள் உண்டு. அது வியர்வையைப் பெருக்கும்இ உடல் சக்தியை அதிகப் படுத்தும்இ சிறுநீர் தாராளமாக பிரிய வகை செய்யும்இ தாய்ப்பாலை விருத்தி செய்யும்இ சளியைக் கரைத்து சுவாசத் தடையை நீக்கும். அத்தோடு இன்னபல நோய்களையும் தடுக்கும் சக்தி கொண்டது வெள்ளைப் பூண்டு. தமிழர்கள் அதிகளவாக இருதய நோய்க்கு உள்ளாகிறார்கள். …
-
- 1 reply
- 2.5k views
-
-
மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் [09 - July - 2009] லண்டன்: மனித விந்தை முதற்தடவையாக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஆய்வு கூடத்தில் மனித விந்தை உருவாக்கும் சாத்தியத்தை நியூகாளில் பல்கலைக்கழகப் பேராசிரியர் கரிம்நயர்னியா தலைமையிலான ஆராய்ச்சியாளர்களும் வடகிழக்கு இங்கிலாந்தின் ஸ்ரெம் செல் நிறுவனமும் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கியுள்ளனர். இதுவொரு முக்கியமான முன்னேற்றமாகும். விந்து எவ்வாறு உருவாகின்றது என்பது தொடர்பாக விபரமாக ஆராய்ச்சியாளர்கள் கற்றுக் கொள்வதற்கு இது இடமளிக்கிறது. ஆண்களிலுள்ள கருவளமற்ற தன்மை குறித்து சிறப்பான முறையில் விளங்கிக் கொள்ள இது உதவும் ஏன் இது இடம் பெறுகிறது? என்ன காரணம்? என்பதை புரிந்து கொள்ள இது உ…
-
- 18 replies
- 3k views
-
-
40 வயதைக் கடந்த பெண்களுக்கு மட்டுமல்ல இளம் பெண்கள் சிலருக்கும் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு இரத்தம் கசியும். உதடு கறுப்பானதாக மாறிவிடும். இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்துவிட வேண்டும். இரவு நேரங்களில் வெண்ணெயை உதட்டில் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும். கண்ணில் கருவளையமா? சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இதுதான் அவர்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு துணியை பன்…
-
- 14 replies
- 9.9k views
-
-
நாளும் உடலுறவு கொண்டால் நல்ல வளமான ஆணணுக்கள் உருவாகுமாம். ஆண்கள் தினமும் அல்லது இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது உடலுறவு கொண்டால் அவர்களால் வளமான ஆணணுக்களை அதிகம் உருவாக்க முடியும் என்று அவுஸ்திரேலிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்கள் அதிக நாள் இடைவெளியில் உடலுறுவு கொள்வதால் அவர்களின் விந்தணுக்களில் உள்ள டி என் ஏ (DNA) மூலக்கூறுகள் சிதைவடைய அல்லது பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளதாகவும் அதேவேளை தினமும் உடலுறவு கொள்வதன் மூலம் புதிய விந்தணுக்கள் உருவாக அதிக சந்தர்ப்பம் அமைவதோடு டி என் ஏ யில் ஏற்படும் பாதிப்பும் சுமார் 12% குறைவடைவதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இளம் ஆண்களைப் போன்று வயதான ஆண்கள் அதிகம் உடலுறவில் நாட்டம் காட்டுவதில்லை என்றும் இதுவும் பெ…
-
- 32 replies
- 50.7k views
-
-
இந்தியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரும் முட்கள் கொண்ட புதர்ச்செடி அல்லது சிறிய பரந்த மரம். கனிகள் நல்ல மஞ்சள் வண்ணமும், நறுமணமும் கொண்டவை. பூக்களும், கனிகளும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. கனிகளில் சிட்ரிக் அமிலம் மிக முக்கியப் பொருளாகக் காணப்படுகிறது. இவை கிருமிகளுக்கு எதிரானவை. எலுமிச்சம் பழத்தின் தோல், சாறு, விதை எல்லாமே பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஏ, பி, சுண்ணாம்புச் சத்து, உலோகச் சத்து, சர்க்கரை, பாஸ்பரஸ், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், புரோட்டீன், உப்பு, கொழுப்பு முதலியன அடங்கியுள்ளன. வைட்டமின் ‘சி’ சத்து அதிகம் இருப்பதால் சருமம் மற்றும் தலை கழுவியாகவும், சிறந்த சரும டானிக்காகவும் பயன்படுகின்றது. சருமத்திலுள்ள கறைகளை அக…
-
- 0 replies
- 1.8k views
-
-
உன்னயே ............ நீ அறிந்தால் ................ வழக்கம் போல சுந்தரம் ..........கடுப்பா கினான்.கோமதி எங்கே .....இன்னும் இல்லியா ? வேகத்துடன் ......மோட்டார் சைக்கிலை உதைத்தான் . அவனது மதிய சாப்பாட்டை எடுக்காமலே . ஏன்.?..கோமதி சற்று தாமதமாக எழும்பியது உண்மை தான். அதை சுந்தரம் பொறுத்து இருக்கலாம். தான் விரும்புவது போலவே எல்லோரும் இருக்க வேண்டும். சற்றுபிசகினால் கொதி நிலை வந்து விடும் டென்ஷன் .......டென்ஷன்..... இது எங்கே கொண்டு போய் விடும். சென்ற மாதம் தான் லேசான ஹார்ட் அட்டாக் என்று ....வைத்திய சாலையில் இரு ந்து வீடு வந்தான் ............பின் ஒருவாரம் அமேரிக்காவில் இருந்த நண்பர் வீடுக்கு போய் ஓய்வு எடுத்தபின் வந்தார் . சூழ்நிலை ...அமைதி ....அவரை சற…
-
- 1 reply
- 1.1k views
-
-
பன்றிக்காய்ச்சலுக்கு சீனா மருந்து தயாரிப்பு [23 - June - 2009] பன்றிக் காய்ச்சலுக்கு (influenza A(H1N1) சீனா முதற்தொகுதி மருந்தைத் தயாரித்துள்ளதாக நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. சீனாவின் மருந்தாக்கல் நிறுவனமொன்றே இந்த முதற்தொகுதி மருந்துவகையைத் தயாரித்திருப்பதாக அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஐ.ஏ.என்.எஸ்.செய்திகள் தெரிவித்தன. செப்டெம்பரிலேயே சந்தைக்கு இத்தடுப்பு மருந்துகள் பாவனைக்கு விடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுகூடங்களில் பாதுகாப்பு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முன்சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின் செப்டெம்பரில் இந்த மருந்துவகை சந்தைக்கு வரும் என்று ஹியூலான் உயிரியல் பொறியியல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வைரஸ் மாதிரியை உலக…
-
- 0 replies
- 713 views
-
-
பப்பாளியின் சிறப்புக்கள் பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்டால் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம். பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ,போலிக்அமிலம்,பொட்டசியம்,காப
-
- 22 replies
- 13.3k views
-
-
நாரிபிடிப்பை(முதுகுவலி) தவிர்ப்பதற்கு கவனமாக இருக்க வேண்டியவை... வேலை நிலையங்களிலும் இதனையே பின்பற்றும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்... மேலும் அறிய http://equalityco.blogspot.com உங்கள் நாளாந்த வேலைகளின் போது சற்று கவனமாக இருந்தால் அதனை வராமல் தடுக்க முடியும். ஒரு பொருளைத் தூக்க வேண்டுமாயின், தூக்க இருக்கும் பொருளின் பாரம் உங்கள் சக்திக்கு மேற்பட்டதெனில் அதனை நீங்களே தனியே தூக்க முற்பட வேண்டாம். உதவிக்கு ஒருவரை அழையுங்கள்.
-
- 1 reply
- 1.8k views
-
-
ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை . ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே.. இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு. குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து…
-
- 1 reply
- 2k views
-