நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
புற்று நோயாளியான 92 வயது மூதாட்டி மாரத்தான் ஓட்டத்தில் சாதனை June 1, 2015 செய்திகள்0 35 அமெரிக்காவின், சான் டீகோவில் 92 வயது மூதாட்டியும், புற்று நோயிலிருந்து மீண்டவருமான ஹாரியட் தாம்சன் என்ற 92 வயது மூதாட்டி அதிக வயதில் மாரத்தான் ஓடிய பெண்மணி என்ற வகையில் சாதனை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக 2010 ஹோனாலூலு மாரத்தானில் கிளேடிஸ் புரில் என்ற மூதாட்டி தனது 92 வயது 19 நாட்களில் சாதனை நிகழ்த்தினார். ஆனால் தற்போது ஹாரியட் தாம்சன் 92 வயது 65 நாட்களில் மாரத்தான் ஓடி சாதனை புரிந்துள்ளார். இது இவரது 16-வது ராக் அன் ரோல் மாரத்தான் ஓட்டமாகும். ஆனால் இது “கடினமானது” என்கிறார் ஹாரியட் தாம்சன். “இந்த ஆண்டு எனக்கு கடினமாக அமைந்தது. கடந்த ஜனவரியில் கணவர் இறந்து போனார்.…
-
- 0 replies
- 456 views
-
-
பட மூலாதாரம்,SERENITY STRULL/BBC/GETTY IMAGES மைக்ரோக்லியா என்பது நம் மூளையில் நிரந்தரமாக இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள். நோய்க் கிருமிகளைக் கண்டறிந்து அவற்றை அழித்து மூளையின் ரத்த நாளங்களைப் பாதுகாப்பதுதான் அவற்றின் வேலை. ஆனால், அந்த செல்களே மூளைக்குத் தீங்கு விளைவித்தால் என்ன ஆகும்? நோய் எதிர்ப்பு அமைப்பைப் பாதுகாக்கும் செல்களாகவே அவை பெரும்பாலும் அறியப்படுகின்றன. ஆனால், போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல் முதல் வலியை ஏற்படுத்துதல் வரை பலவற்றில் மைக்ரோக்லியா முக்கியப் பங்கு வகிப்பதாக விஞ்ஞானிகள் தற்போது அதிகளவில் நம்புகின்றனர். அல்சைமர் நோய், மன அழுத்தம், மனப் பதற்றம், கோவிட் தாக்கம், நாள்பட்ட சோர்வு ( chronic fatigue syndrome) என அற…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
பதின்ம வயது இளைஞர் ஒருவர் தன் வாழ்க்கையில் பெரும்பாலும் நொறுக்குத்தீனியை மட்டுமே உண்டு வாழ்ந்ததால் அவருக்கு கண்பார்வை பறிபோகியுள்ளது. இதனையடுத்து, நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிடக்கூடாது என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஆரம்பநிலை பள்ளியை முடித்ததில் இருந்து, இந்த இளைஞர் உருளை வருவல் (French Fries), பிரிங்கில்ஸ் (சிப்ஸ் வகை) மற்றும் வைட் பிரட் ஆகியவற்றையே உண்டு வந்துள்ளார். அவ்வப்போது பன்றிக்கறி அல்லது மாட்டுக்கறியோ சாப்பிடுவார். இதனால் அந்த இளைஞருக்கு வைட்டமின் குறைபாடுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட்டதாக பரிசோதனைகளில் தெரிய வந்தது. பார்த்து பார்த்து உண்பவர் பெயர் குறிப்பிட முடியாத அந்த இளைஞர் அவரது 14 வயதில் உடல்நலம் சரியில்லாமல் போனதால…
-
- 0 replies
- 397 views
-
-
வெற்றிலையின் பலன்கள் குழந்தைகள் சரியாகப் பால் குடிக்காத நிலையில், பிரசவித்தப் பெண்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு வீக்கமும் வலியும் இருக்கும். வெற்றிலையைத் தணலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டிவர வீக்கமும் வலியும் குறையும். அதே சமயம், வெற்றிலையை ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, மார்பில் வைத்துக் கட்டினால் அதிக பால் சுரக்கும். சிறு குழந்தைகளுக்குப் பால் மற்றும் பால் பொருட்களால் செரியாமை ஏற்படும்.... பத்து வெற்றிலைக் காம்பு, ஒரு வசம்பு, கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் ஓமம், இரண்டு பூண்டு பல், இரண்டு கிராம்பு ஆகியவற்றை மண் சட்டியில் கருக வறுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாலாடை ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சவும். இதனுடன் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து…
-
- 0 replies
- 593 views
-
-
நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் ! நிலக்கடலை... கடலை, மல்லாக்கொட்டை, மணிலாக் கொட்டை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படும் உணவுப் பொருள். இதை தொடர்ச்சியாக உண்பதால் வாழ்நாள் நீடிக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று. மாறிவிட்ட வாழ்க்கை முறையால், பன்னாட்டு உணவுக் கம்பெனிகளின் கடைவிரிப்பால் நம் மரபுசார்ந்த உணவுப் பொருளான நிலக்கடலையைக் கைவிட்டவர்கள் நம்மில் அதிகம் என்றால் அது மிகை இல்லை. குறிப்பாக நிலக்கடலை எண்ணையை முற்றிலும் புறக்கணித்து விட்டோம் என்றே சொல்லலாம். சமையல் எல்லாமே ரீபைண்ட் ஆயில்தானே! பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில்தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான…
-
- 0 replies
- 693 views
-
-
ஏன் அடிக்கடி சிறுநீர் வருகிறது? | மருத்துவர் கு சிவராமன் | Dr sivaraman
-
- 0 replies
- 569 views
-
-
எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்? சென்னை: இன்றைய உடல் சிக்கல்களையும் தீர்க்க வல்ல போகர் அருளிய பழனி பஞ்சாமிர்தம், இதனை வெறும் பூஜைப் பொருளாகப் பார்ப்பது முறையா? வாழ்வியல் மாற்றங்கள், அதிகப்படியான குளிர்சாதனப் பயன்பாடு, உணவு முறை மாற்றங்கள் என அனைத்தும் பல உடல் கோளாறுகள் ஏற்படக் காரணிகளாகின்றன. இவையே அதிகப்படியான உடல் சோர்வு, தொடர்ச்சியான சளி, காய்ச்சல்,தைராய்டு என பல உடல் சிக்கல்களைக் தோற்றுவிக்க அடிப்படைக் காரணம். மழைக்காலங்களில் ஏற்படும் சளி,இருமல், காய்ச்சல் ஆகியவை இன்று கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் பொதுவானதாக ஆகிவிட்டது. இவற்றை மிக எளிமையாக கையாளும் வழிமுறையினை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர் …
-
- 0 replies
- 354 views
-
-
இஞ்சிப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்[ புதன்கிழமை, 24 யூன் 2015, 09:01.47 மு.ப GMT ] வாயுத்தொல்லை, இரத்தக் குழாய் அடைப்பு போன்றவற்றை இஞ்சிப்பால் குணப்படுத்துகிறது.மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இஞ்சிப்பால் சிறந்த மருந்தாகும். செய்முறை இஞ்சியை தோலைச் நீக்கி விட்டு நசுக்கிக் கொள்ளவும். நசுக்கிய இஞ்சியை முக்கால் கப் தண்ணீரில் போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் இஞ்சியின் சாறு முழுவதும் இறங்கிய உடன் வடிகட்டி சாரை மட்டும் எடுத்துக் கொள்ளணும். ஒரு கப் காய்ச்சிய பாலில் வடிக்கட்டிய இஞ்சி சாறை கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் அல்லது பணங்கற்கண்டு சேர்த்தால் சுவையான இஞ்சிப்பால் தயார். மருத்துவ நன்மைகள் 1.நுரையீரல் சுத்தமாகும். 2. சளியை குணமட…
-
- 0 replies
- 376 views
-
-
உடல் எடை அதிகமாக உள்ளதா? - இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான் படத்தின் காப்புரிமை Getty Images மன உறுதியுடன் இருந்தால் உடல்பருமனை குறைக்க முடியும் என மக்கள் நம்பலாம் ஆனால் ஆராய்ச்சிகள் வேறு சில உண்மைகளை சொல்கின்றன. உடல்பருமன் உண்மைகள் எனும் ஆராய்ச்சியில் வெளிப்பட்டுள்ள உடல் எடையை பாதிக்கும் ஐந்து ஆச்சர்ய உண்மைகளை இங்கே படிக்கலாம். படத்தின் காப்புரிமை J…
-
- 0 replies
- 852 views
-
-
[size=5]வாழைப்பூவைப் பற்றி அறியாத தமிழர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவிலும் இலங்கையிலும் வீட்டுத் தோட்டமாகவும், பெரிய தோட்டங்களாகவும் வளர்க்கின்றனர். வாழைத் தடல், வாழைத்தார், வாழை இலை, வாழைக்காய், வாழைப் பழம் என எல்லாமே அன்றாட சாப்பாட்டுப் பொருளாகவும், பூசைப்பொருளாகவும் பாவனையில் உள்ளன. வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன. இது செடி இனத்தைச் சேர்ந்தது. மரம்போல் நெடித்து வளர்வதால் வாழைமரம் என அழைக்கின்றனர். வாழைப்பூவில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் சித்தர்கள் குணப்படுத்தியுள்ளனர். வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொண்டால் வையித்தியரிடம் செல்லாமலே சில நோய்க…
-
- 0 replies
- 816 views
-
-
கோலா பானங்கள் புற்றுநோயைத் தூண்டுமா? சில வருடங்களுக்கு முன்பு பிரபல கார்பனேட்டட் குளிர்பானம் ஒன்றின் நூற்றாண்டு கால ரகசியம் வெளிப்பட்டது. அதில், சுவையைக் கூட்ட, திரும்பத் திரும்ப குடிக்கத் தூண்ட ஆல்கஹால் கலக்கப்படுகிறது எனத் தெரியவந்தது. தற்போது, மற்றொரு பிரபல குளிர்பானம் ஒன்றில் புற்றுநோய்க்குக் காரணமான ரசாயனம் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விரும்புவது குளிர்பானங்களைத்தான். பல்வேறு நிறங்களில், சுவைகளில் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள், காண்போரை சுலபமாக ஈர்க்கும் தன்மை உடையவை. இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, குளிர்பானங்கள் தயாரிக்க எவ்வளவுதான் வரைமு…
-
- 0 replies
- 518 views
-
-
Covid-19 காலப்பகுதியில் அதிகரித்து வரும் இளவயது நீரிழிவு நோயாளர்கள் கொரோனா காலப்பகுதியில் இளவயதினரிடையே நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் சிறப்பு வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சிவமகாலிங்கம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நவம்பர் மாதம் 14 ஆம் திகதி உலக நீரிழிவு தினமாகும். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருள். இந்த வருடத்தை பொறுத்தவரை தாதியர்களும் நீரிழிவும் என்பது தொனிப்பொருளாகும். தாதியர்கள் மூலமாக நாங்கள் நீரிழிவை கட்டுப்படுத்த முடியும். அவர்கள் பொதுமக்களோடு, நோயாளிகளோடு நெருங்கிய தொடர்பை வைத்திருக்கிறார்கள். கொவிட் 19 போன்ற தொற்று நோய்களும் இன்று அதிகரித்திரு…
-
- 0 replies
- 497 views
-
-
பசி எடுப்பதில்லை என்று அவதிப்படுபவர்கள் மாம்பிஞ்சை வெயிலில் காய வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துச் சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள் பசியை. *நீரிழிவு நோயாளிகளுக்கு மாந்தளிரை வெயிலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி ஒரு கோப்பை வெந்நீரில் இரண்டு டீ ஸ்பூன் தூளைக் கலந்து கலக்கி, தினமும் இரண்டு வேளை வீதம் தொடர்ந்து சாப்பிட்டுவர நீரிழிவு கட்டுப்படும். *மாங்காய் பறிக்கும்போது அதன் காம்பிலிருந்து வழியும் பாலை ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொண்டு தேள் கடி, தேனி கடிகளுக்குத் தடவினால் உடனடி நிவாரணமளிக்கும் மாம்பழ கொட்டையை, சிறிது நெருப்பில் சுட்டு, உள்ளிருக்கும் பருப்பை சாப்பிட்டால் வயிற்றுபோக்குக்கு உடனடி நிவாரணம்
-
- 0 replies
- 1.5k views
-
-
(Image from: food.gov.uk/ & Edited for translation only.) நீங்கள் அரோக்கியமான வாழ்வு வாழ உண்ண வேண்டியது நிறையுணவு (Balance diet) ஆகும். அந்த நிறை உணவு எவ்வகை உணவுப் பொருட்களை எவ்வெவ்வளவுகளில் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்கிறது இப்படம். நீங்கள் உணவு உண்ணப் பாவிக்கும் வட்ட வடிவ உணவுத் தட்டில் மேற்படி அளவுக்கு குறிப்பிட்ட வகை உணவுகளை நீங்கள் நாள் தோறும் உண்டு வந்து.. நல்ல உடற்பயிற்சி அல்லது உடற்பயிற்சி அளிக்கக் கூடிய கடின வேலைகளையும் செய்து வந்தால் உங்கள் ஆயுள் நீண்டதாக இருக்கும். பூமியில் பிறந்த யாருக்குத்தான் நீண்ட நாள் வாழ ஆசையில்லை. உங்களின் ஆசையை பூர்த்தி செய்ய இக்குறிப்பு உதவும் என்று நம்புகின்றோம். source: http://www.kuruvikal.blogspot.com/
-
- 0 replies
- 4.2k views
-
-
மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை. 1. அதிமதுரம்: இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண். 2. சித்தரத்தை: இருமல், சளி, பீனிசம், கோழைக்கட்டு. 3. ஜாதிக்காய்: விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள். 4. வெந்தயம்: பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம். 5. வசம்பு: வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள். 6. ஆவாரம்பூ: அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம். 7. செம்பரத்தம்பூ: தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின்…
-
- 0 replies
- 446 views
-
-
நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர். தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனிகளில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன்மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும். எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலைசுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டல…
-
- 0 replies
- 662 views
-
-
நமது உடம்பில் குறிப்பிடத்தக்க உறுப்புகளில் ஒன்று, கல்லீரல். இது கருஞ்சிவப்பு நிறமுடையது. கல்லீரல், உடம்பில் பெரிய இரத்த வடிகட்டியாகவும், இரண்டாவது பெரிய நோய் எதிர்ப்பு அமைப்பாகவும் இயங்குகிறது. வயிற்றின் இடதுபக்கத்தில் உதரவிதானத்துக்குக் கீழே இடம்பிடித்திருக்கிறது. இது, சுழற்சியில் இருக்கும் இரத்த செல்களின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. நோய்த்தொற்றுகளில் இருந்து உடம்பைக் காக்கிறது.குடல்வாலைப் போல கல்லீரலும் தேவையற்ற ஓர் உறுப்பு என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வந்தது. சோகஉணர்வுக்குக்காரணமான கறுப்பு திரவத்தை கல்லீரல் சுரப்பதாக ஹ்ப்போகிராட்டஸ் என்ற மருத்துவர் ஆய்வாளர் கருதினார். கல்லீரல் முற்றிலும் புதிர்கள் நிறைந்த உறுப்பு என கேலன் என்ற அறிஞர் கூறினார…
-
- 0 replies
- 518 views
-
-
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழி செய்யும் ஹார்மோனை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. தற்போது இவர்களுக்கு "இன்சுலின்' மருந்து மட்டுமே வர பிரசாதமாக உள்ளது. இதற்கு மாற்று வழியை கண்டு பிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள், ரத்தத்தில் "குளுகோஸ்' அளவை குறைக்கும் ஹார்மோனை கண்டு பிடித்துள்ளனர். முதல் கட்டமாக இந்த ஹார்மோனை எலிக்கு சோதனை செய்து பார்த்து வெற்றியடைந்துள்ளனர். இதை மனிதர்களிடம் சோதனை செய்து பார்க்கும் முயற்சியில் விஞ்ஞானி ஜொனாதன் க்ராப் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது."இந்த பரிசோதனை வெற்றியடைந்தா…
-
- 0 replies
- 586 views
-
-
அண்மையில் மறைந்த கியூப பொதுவுடைமைத் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவுக்கு முதுமையில் ஏற்பட்ட நோயிலிருந்து விடுபடப் பெரிதும் உதவியது முருங்கை. காஸ்ட்ரோவுக்கு முருங்கை செய்த உதவி தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் உலாவரும் செய்திகள், அதன் ஒரு பாகத்தை மட்டுமே சொல்கின்றன. காஸ்ட்ரோவின் கெரில்லா படைத் தளபதி சே குவேரா, மெக்சிகோ நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட முருங்கையைக் கியூபாவில் அறிமுகம் செய்தார். அதன்பிறகு ஃபிடெல் காஸ்ட்ரோ தன் வீட்டின் அருகே முருங்கைத் தோட்டத்தை வளர்த்துவந்தார். முதுமையில் தன்னைக் காப்பாற்றிய முருங்கை தாவரத்தின் அற்புதத் திறன்கள் பற்றி, தன் நாட்டு மக்களிடையே காஸ்ட்ரோ உரையாற்றியுள்ளார். அதை அதிசயமான தாவரம் என்று புகழ்ந்து பேசியது மட்டுமல்லாமல், வீடுதோறும் முருங்கை…
-
- 0 replies
- 341 views
-
-
மதுளையில் சுண்ணாம்பு சத்து, தாது உப்புக்கள், இருப்பு சத்து என நோயை எதிர்க்கும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. இப்பழம் நோய் கிருமிகளை அறவே அழிக்கவும், இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி அளிக்கவும் பயன்படுகிறது. உடலை பித்தத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாதுளை பெரும் பங்கு வகிக்கின்றது. வயிற்று வலிக்கு சிறந்த நீவாரணியாகவும், உடலில் உள்ள நீர்ச் சத்துக்களை அதிகரிக்கும் தன்மையும் மதுளம் பழத்திற்கு உண்டு. மாதுளம் பழத்தின் பூ, பழம், அதன் பட்டை என அனைத்திலுமே மருத்துவ குணம் அடங்கியுள்ளது. இது உடல் கடுப்பு மற்றும் சூட்டை தணிக்கும். மூல நோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து எனலாம். இந்த பழத்தை சாறாக எடுத்து சாப்பிடுவதோடு பழமாகவே சாப்பிடுவதால் அனைத்துவிதமான நார்…
-
- 0 replies
- 767 views
-
-
குழந்தைகள் நலம்: உண்மையில் பரிசுத்தமானதா தாய்ப்பால்? அறிவியல் ஆய்வுகள் சொல்வதென்ன? அனா டர்ன்ஸ் பிபிசி ஃப்யூச்சர் பகுதியில் 24 ஜூன் 2022, 07:36 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DANIEL GARZON HERAZO/NURPHOTO VIA GETTY IMAGES என்னுடைய இரண்டு குழந்தைகளும் பிறந்த முதல் ஓராண்டு வரை, நான் அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்தேன். குழந்தைகளுக்கான சத்துக்கள், மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி, ஜீரண மண்டலம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு துணைபுரியும் தாய்ப்பாலை அவர்களுக்குக் கொடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், மாசுபாடு குறித்த புத்தகம் ஒன்றை படித்ததன…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ விற்றமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை. வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும் http://www.tamilkath...ll_article.aspx
-
- 0 replies
- 506 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நான் பல்கலைக்கழக படிப்புக்காக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முந்தைய நாள் எனக்கு 18 வயதானது. பிரிட்டனில் மது வாங்குவதற்கான வயது வரம்பை நான் அப்போது கடந்திருந்தேன். எனது புதிய வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் நான் சென்றபோது, வாரத்திற்கு எத்தனை யூனிட் மது அருந்துவீர்கள் எனக் கேட்டார். பிரிட்டனில் 1.5 யூனிட் என்பது, தோராயமாக ஒரு சிறிய கோப்பை அளவிலான ஒயினுக்கு சமம். நான் தோராயமாக “ஏழு” என பதிலளித்தேன். "இந்த எண்ணிக்கை இனியும் உயரும்” என சிரிப்புடன் பதிலளித்தார். அதிக மது அருந்துவது, ஆயுட்காலம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும். ஆனால் 30, 40 அல்லது 50 வயதுடைய ஒருவர…
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
சுரைக்காய் ஒரு உன்னத மருந்து..! மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை. நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம். ... சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும். சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. உடல் சூடு நீங்க இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவ…
-
- 0 replies
- 444 views
-
-
[size=4]பொதுவாக நீரிழிவுகள் உடலில் இன்சுலின் குறைவாக சுரப்பதனால் தான் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை தற்போதைய அனைத்து வயதினருக்கும் வருகிறது. இதனால் அவர்கள் உண்ணும் உணவுகளில் பெரிதும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியுள்ளது. மேலும் அவற்றை கட்டுப்படுத்த இன்சுலின் ஊசிகள், சர்க்கரை இருக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருப்பது என்று இருக்கிறோம். ஆனால் அத்தகையவர்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அதுதான் காரமான உணவுப் பொருட்களை உண்டால் நீரிழிவு கட்டுப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அத்தகைய காரமான உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை சாப்பிட தொடங்கலாமே. இப்போது அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!![/size] [size=4][/size] [size=4]இலவங்க பட்டை : நீரிழிவைக் கட்டு…
-
- 0 replies
- 732 views
-