Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. தொப்பையை குறைக்க வழி - 3 எப்ப டெலிவரின்னு கிண்டல் பண்றாங்களா? இதோ தொப்பையை குறைக்க வழி... * உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். * பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோர…

  2. சர்க்கரை நோய் (Diabetes ) நீரிழிவு நோய் எமது உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியம். தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையே நீரிழிவு எனப்படுகிறது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல் (யவாநசழளஉடநசழளளை) இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. நீரிழிவில் மூன்று வகைகள் முதலாவதுவகை முதலாவதுவகை (Type I Diabetes) நீரிழிவானது குழந்தைகள் சிறுவர் …

  3. 101 நாளில் எளிதாக குண்டாகலாம் குண்டாக tips உடல் மெலிந்தவர்கள் குண்டாக மாறுவதற்கு பல முயற்சிகளை எடுப்பதற்கு பதில்... 101 நாளில் எளிதாக குண்டாகலாம். 50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து... அதனுடன் ஒரு மேசைக்கரண்டி நெய், வெல்லம் சேர்த்து.... 101 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகிவிடும். ஈஸ்ட்ரோஜென்னை அதிகரிக்கும் சக்தி வெந்தயத்துக்கு உண்டு. குண்டான உடம்புடன் கஷ்டப்படுபவர்கள், உடல் மெலிய... 50 கிராம் கொள்ளை வறுத்து... பொடியாக்கி தினமும் சாப்பிடவும். இது உடலில் உள்ள தண்ணீ¬ரை நீக்கி உடல் எடையை குறைத்துவிடும். உங்களுடைய உடல் சரியான நிலைக்கு வந்தவுடன் கொள்ளு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அல்லது தொடர்ந்து சாப்பிட்டாலும் உடலுக்கு நல்…

    • 2 replies
    • 73.8k views
  4. தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே . பரோட்டாவின் கதை என்ன தெரியுமா பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது. பரோ…

    • 9 replies
    • 13.8k views
  5. கழிப்பறைக்கு செல்ல சோம்பேறிகளான ஆண்கள் - ஆரோக்கியமாக வாழ மாற்றவேண்டிய பழக்கவழக்கங்கள்! [Thursday, 2013-04-11 18:38:56] உடல் மற்றும் மனம் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, சரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய டயட் மட்டுமின்றி, ஒரு சில ஆரோக்கியமான மற்றும் சுத்தமான பழக்கவழக்கங்களும் மிகவும் அவசியம். அதிலும் இத்தகையவற்றை ஆண்களிடம் பார்க்கும் போது, பெரும்பாலான ஆண்களிடம் ஒருசில ஆரோக்கியமற்ற மற்றும் சுத்தமில்லாத பழக்கங்களும் உள்ளன. பொதுவாக உலகில் இருக்கும் அனைவருக்கும் ஒருசில நல்ல மற்றும் கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால் அத்தகைய பழக்கங்களில் கெட்டவை அதிகம் இருந்தால், பின் அவை உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதிலும் புகைப்பிடித்தல் ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருக்கும் கெட…

  6. சீனி, சர்க்கரை, வெல்லம் (sugar) என இப்படி பல பெயர்களில் நாம் அழைக்கும் சுக்குரோஸ், இனிப்பு சுவைக்காக ஒவ்வொருவராலும் நாளாந்த உணவில், மென் பானங்களில் , பழச்சறுகளில் பயன் படுத்தப்படும் ஒரு பதார்த்தம். புகையிலை, போதை பொருள் போல, சீனியின் இனிப்பு சுவை சிறுவர்களை, பெரியவர்களை அடிமையாக்கும் பொருள். சீனி உடலுக்கு தேவையான, உடலுக்கு சக்தியை கொடுக்கும் குளுகோஸை தரும் மூலமாக இருந்தாலும், இதன் அளவுக்கு அதிகமான பவனை உடல் நலனுக்கு உகந்தது அல்ல. நாம் உண்ணும் பழங்கள், சில மரக்கறிகள் (பீற்றுட்) ஆகியவற்றில் இது இயற்கையாகவே இருக்கிறது. அதே போல மாச்சத்து உள்ள, தானியங்கள், (அரிசி, கோதுமை) கிழங்கு வகை போன்றவற்றை உண்ணும் பொது மனித உடலின் சமிபாட்டின் முலம் எமது உடலுக்கு தேவையான சக்தி…

    • 0 replies
    • 1.5k views
  7. இன்று தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த போது எதேச்சையாக fat, sick and nearly dead எனும் ஒரு விவரண படத்தை பார்க்க நேர்ந்தது. இதில், அதிகரித்த உடல் நிறை கொண்ட ஒருவர், உடல் நிறை அதிகரிப்பால் ஏற்படும் பக்க விளைவுகளை போக்க நாளாந்தம் பல்வேறுபட்ட மருந்துகளை குடித்து வந்தது பற்றியும், அதில் இருந்து விடுபடுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியையும் சொல்கிறது. உடல் நிறையை குறைப்பதற்காகவும், மருந்து பாவனையை குறைக்கவும், அவர் 60 நாட்களுக்கு மரக்கறி, பழச்சாறுகளை மட்டுமே உண்கிறார். அதன் முடிவில் 100 பவுன்ஸ் (45 கிலோ) உடல் நிறை குறைவை எட்டி இருக்கிறார். அத்துடன் பல மருந்துகள் எடுக்கும் தேவையும் இல்லது போய் இருக்கிறது. அவர் சொல்லும் முக்கியமான ஆலோசனை, இப்படி மிக கடுமையான உணவு கட்…

    • 7 replies
    • 1.9k views
  8. முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் நிறைய... சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும். முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும். மாதவிடாய் நேரத்தில…

  9. வழுக்கை விழுந்த ஆண்களுக்கு இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது புதிய ஜப்பானிய ஆய்வு ஒன்று. முடி விழாத ஆண்களை விட, வழுக்கை விழுந்த ஆண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. உச்சந்தலையில் இருந்து முடி உதிரும் பிரச்சினையை உடைய ஆண்களுக்கு இருதயக்குழாய் நோய் வரும் ஆபத்து மற்றவர்களை விட 32 சதவீதம் அதிகம் இருப்பதாக, 37,000 ஆண்களிடையே நடத்திய ஆய்வின் பின்னர் இந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தலைமுடி முன்னிருந்து உதிர்ந்து கொண்டே 'பின்வாங்கிச் செல்லும்' பிரச்சினை உடைய ஆண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் காணப்படவில்லை என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த வழுக்கைத் தலைப் பிரச்சினைக்கும் , இருதய நோய் தோன்றுவதற்குமான தொடர்புகள் தெளிவாகத் தெரியவில்லை…

  10. யோகா, நீச்சல், ஜாக்கிங் போன்ற பல வகை உடற்பயிற்சிகள் எவ்வளவு உடலுக்கு முக்கியமோ அதே அளவு பயிற்சி நம் கண்களுக்கும் அவசியமானது. கண்களை ஆரோக்கியமாக வைத்து‌க்கொ‌ள்வது கண்களு‌க்கு ஏற்படும் களைப்புகளை குறைக்கும். கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருப்பதற்கும் வழிவகுக்கும். கண்களுக்கு நாம் தர வேண்டிய அத்தியாவசிய பயிற்சி முறைகள்: 1. ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து, உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான பின் கண்களை உள்ளங்கையால் மூடிகொள்ளவும். அவ்வாறு செய்யும் போது கருவிழிகளின் மேல் அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும் மூடிக்கொள்ளும்படியாக முக்கோன வாக்கில் கைகள் அமைய வேண்டும்.கண்களை மூடும் போது இருளை உணர்ந்து, அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத…

  11. அவர் வந்து உட்கார்ந்ததுபோது கதிரை வேதனையில் கிரீச்சிட்டு அனுங்கியது! தனது வருத்தம் பற்றிக் கூறுவதற்கிடையில் அவரது கண்கள் நகர்ந்து கட்டிலின் கீழ் இருந்த எடைகாட்டியில் தங்கி நிலைத்தன. இவரது நடவடிக்கைகள் எனக்குப் புதினமானவை அல்ல. பல வருடங்களானப் பார்த்துப் பழக்கம். அப் பெண்ணுக்கு தனது எடை பற்றி அக்கறை எப்பொழுதும் உண்டு. எப்பொழுது வந்தாலும் தனது எடையைப் பார்க்காமல் விட மாட்டாள். எடையை எப்படிக் குறைப்பது என்று ஆலோசனையும் தவறாது கேட்பாள். ஐந்து அடி மூன்று அங்குல உயரமுள்ள அவரது தற்போதைய எடை 110 கிலோ ஆகும். அடுத்த முறை வரும்போது நிச்சயம் ஒரு கிலோ ஆவது கூடியிருக்கும் என்பது நிச்சயம். ஒவ்வொரு தடவையும் எடையைக் குறைப்பது பற்றிய ஆலோசனையைக் கேட்பதுடன் சரி. அடுத்த முறை வரும…

  12. நீரில் இறங்காமல் நீச்சலா? பிரஸர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு என மூன்றும் கலந்துழலும் பெண் அவள். 5 அடி உயரத்தில் 80 கிலோ எடையும் சேர்ந்ததால் நிலைமை மேலும் மோசமாயிற்று. "நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்" என்றவுடன் அவளது முகத்தில் கோபம் கொப்பளித்தது. "விடிஞ்சு பொழுது சாயு மட்டும் வீட்டிலை வேலை, வேலை... இதுக்கு மேலை என்ன பயிற்சி செய்யுறது." இன்னுமொருவர் தனியார் துறையில் பொறுப்பு வாய்ந்த வேலையில் இருப்பவர். வேளையோடு வேலைக்குப் போனால் இரவான பின்தான் வீட்டிற்கு வர முடியும். உடற்பயிற்சி பற்றி யோசிக்கவே நேரம் இல்லையாம். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்பதை இருவருமே அறிந்திருந்தார்கள். ஆயினும், நேரம் இல்லாததால் பயிற்சி செய்வதில்லை. ஆனால், நீரில் இறங்காமல் நீந்த…

  13. நடைப்பயிற்சி சில உதவிக் குறிப்புகள் இப்பொழுது எந்த மருத்துவரிடம் போனாலும் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி என ஓடாத குறையாக விரட்டுகிறார்கள். உண்மைதான் உடற் பயிற்சி மிகவும் நல்லது. ஆண் பெண் குழந்தைகள் என எவருக்கும் ஏற்றது. சுலபமாகச் செய்யக் கூடியது. செலவில்லாதது. இடம் தேடி அலைய வேண்டியது இல்லை. வீதியருகின் நடைபாதைகளே போதுமானது. அதீத உடையுள்ளவர்கள், கொலஸ்டரோல் பிரச்சனையுள்ளவர்கள், பிரசர் உள்ளவர்கள், நீரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலதரப்பட்டவர்களுக்கும் அவசியமானது. வாரத்தில் 5 நாட்களுக்காவது செய்வது நல்லது. பொதுவாக 30 நிமிடப் பயிற்சி தேவை. ஆயினும் நடைப் பயிற்சியை ஆரம்பிக்க இருப்பவரின் தேவை என்ன, ஆரோக்கிய நிலை எப்படி போன்றவற்றை கருத்தில் கொண்டு அவை மா…

  14. ஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிகள் உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்துஉடல் இளைத்துப்போவதும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில குறிப்புகள்: * தினமும் ஏதாவது ஒரு பழ யூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ யூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் இனிப்பு மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். இனிப்பு சேர்த்தால் பழத்தின் முழு சத்தும்குறைந்து விடும். * எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுவகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். * வேக வைத்த பயிறு வகைகள், தானியங்க…

  15. உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? M.K முருகானந்தன் வண்ணங்கள் இல்லாத உலகில் வாழ்வது பற்றி கற்பனை பண்ணவே முடியவில்லை. நீல வானம், வெண் மேகங்கள், பசுமை போர்த்திய தாவரங்கள், மாலையில் சூரியன் தாழும்போது மஞ்சள் சிகப்பு எனப் பரவும் நிறக்கலவைகள். ஆகா! என்ன தவம் செய்தோம் இந்த வையகத்தில் மானிடராய் பிறப்பதற்கே! வானவில் காட்டும் வண்ண ஜாலத்தில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற ஏழும் உள்ளத்தைக் களிகொண்டு ஆடச்செய்கிறது. ஆனால் சிவப்பு , நீலம், பச்சை ஆகிய மூன்று மட்டுமே அடிப்படை வண்ணங்கள் ஆகும். பாரதியின் உள்ளத்தையும் வண்ணஙகள் கிளந்தெறச் செய்தன. "என்னடி இந்த வண்ணத்தியல்புகள்! எத்தனை வடிவம்!எத்தனை கலவை…

  16. இரத்தப் பரிசோதனையில் புதிய தொழில்நுட்பம் - சுவிட்சலர்லாந்து விஞ்ஞானிகள் சாதனை! [Wednesday, 2013-03-27 18:43:49] நம்முடைய தோலுக்கு அடியில் பொருத்தப்படுகின்ற ஒரு சிறு கருவி மூலம் நம்முடைய இரத்தப் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் கைத்தொலைபேசியில் பார்க்க வகை செய்யும் கண்டுபிடிப்பு ஒன்றைத் தாம் செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அரை அங்குலம் நீலமும் தீக்குச்சியின் தடிமனுமே கொண்ட இக்கருவியின் மாடல் ஒன்றை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் தற்போது உருவாக்கியுள்ளனர். நம் இரத்தத்திலிருந்து ஐந்து உட்கூறுகளின் அளவுகளை இந்தக் கருவி உடனுக்குடன் தெரிவிக்குமாம். இந்தக் கருவியிலிருந்து பரிசோதனை முடிவுகள் ரேடியோ அலைகள் மூலமாகவும், புளூடூத் கம்பியற்ற தகவல் பரிமாற்றம் மூலமாகவ…

  17. எதுக்கு தங்க நகை - secret of gold தங்க நகை அணிவதால் என்ன நன்மை தங்க நகை அணிவதிலும் அதை வாங்குவதிலும் பெண்களுக்கு அலாதி ஆர்வம்தான். சவரன் எத்தனை ஆயிரம் விற்றாலும் பரவாயில்லை மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு இத்தனை பவுன் சேர்த்துவிடவேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். தங்க நகை அணிவது அழகுக்காக என்பதை விட அது ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது என்கின்றனர் நம்முன்னோர்கள். பழங்காலத்தில் இருந்தே தங்கம், வெள்ளி நகைகளை அணியவும், தாமிரம், பித்தளை பாத்திரங்களை உணவு சமைக்கவும் பயன்படுத்தியுள்ளனர். எகிப்து, இந்தியா, சுமேரியா நாகரீகங்களின் கால கட்டத்திலே தாமிரம், வெள்ளி, தங்கத்தின் பயன்பாடு அதிகமாக இருந்துள்ளதை வரலாற்றுச் சான்றுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதனால்தான் இன…

  18. இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பலநேரங்களில் சொல்வது மறந்திட்டேன் என்பதாகத்தான் இருக்கும். சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது. தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட், தக்காளி, திராட்சை, ஆரஞ்சு, செர்ரி போன்ற பளபளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இ…

  19. நாமெல்லாம் வெளிநாட்டுக்கு வந்து ப்ளாட்களிலும் நாலு சுவத்துக்குள்ளும் அடைந்துகிடைக்கும் வாழ்க்கை வாழுபவர்கள்..வேலை விட்டு வந்தால் குளிர்,நேரமின்மை மற்றும் காரணங்களால் எங்களின் பெரும்பாலான பொழுதுகளை வீட்டுக்குள்ளேயே செலவழிக்கிறோம்..அந்தவீட்டைக்கூட பலர் குளிர்காலங்களில் திறப்பதில்லை..திறந்தால்போல் சுத்தமான் காற்று வரப்போவதும் இல்லை நகர்ப்புறங்களில்..அதனால் வீட்டுக்குள்ளே வளர்க்ககூடிய காற்றை சுத்தப்படுத்தும் ஆறுவகையான தாவரங்களையும் அவற்றின் பயன்களையும் பார்ப்போம்.. 1. Bamboo Palm: இது காற்றில் உள்ள நச்சுத்தன்மையான எரிவை உண்டாக்கும் மெதனல்(formaldehyde)வாயுவை நீக்குகிரது...அத்துடன் இது இயற்கையான காற்று ஈரப்பதமூட்டியாகும்.. 2. Snake Plant: இது காற்றில் உள்ள தீய வா…

  20. கண்களுக்கான ஒரு பயிற்சி 20 - 20 - 20 Step I :- கண்ணியில் வேலை ஆற்றிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு இருபது நிமிடத்துக்கு அப்புறமும் கண்ணணித்திரையில் இருந்து கண்களை எடுத்து ஆகக்குறைந்தது இருபது அடி தூரத்தி அமைந்துள்ள ஏதாவது ஒரு பொருளை பாருங்கள்..இது உங்கள் கண்களின் குவியத்தூரத்தை மாற்றுகிறது..இது களைப்படைந்த கண்களுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று... Step II :- கண்களை ஈரலிப்பாக்குவதற்காக ஒன்றன்பின் ஒன்றாக இருபது தடவை கண்களை மூடிமூடி திறவுங்கள்(கண்ணடியுங்கள். அதற்காக பக்கத்து மேசையில் இருக்கும் பெண்ணைபார்த்து கண்ணடித்து களபரம் ஆனால் அதற்கு நான் பொறுப்பல..நிழலி அண்ணா இதைப்படித்தால் அடைப்புக்குள் உள்ளதை கவனத்தில் எடுக்கவும். .) Step III :- முழு உடலுக்குமான ரத்த சுற்றோட்டத…

  21. குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – சுற்று-1. ---- இக்கட்டுரை 10-09-2008 ல் நண்பர் ஒருவரின் குடிக்கலாச்சாரம் பற்றிய தொகுப்பு நூல் ஒன்றிற்காக எழுதப்பட்டது. அந்நூல் இதவரை வெளிவந்ததற்கான குறிப்புகள் எதுவும் தெரியவில்லை. ஒருவேளை கட்டுரையின் அலுப்பூட்டும் ஆய்வுமுறை ஏற்படுத்திய சுவராஸ்யமின்மை இதனை வெளியிடுவதற்கு அவருக்கு தயக்கத்தை ஏற்படுத்தியருக்கலாம். அதனால் அதை சொல்லத்தயங்கி, நூல் வெளிவந்த குறிப்பு தெரிவிக்கப்படாமல்கூட இருந்திருக்கலாம். எப்படியோ, இதனை இங்கு வெளியிடுவதன் வழியாக 2 மாதங்கள் உழைப்பையும் நேரத்தையும் தின்ற இக்கட்டுரையினை ஆர்வமுள்ளவர்கள் படிக்கட்டுமே. கட்டுரையின் நீளம் கருதி, பகுதி பகுதியாக வெளியிடப்படுகிறது, படிப்பதற்கு வசதியாக. --…

  22. முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்! கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது! பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில: 1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால்,…

  23. ஒவ்வொரு வருடமும் உலக சிறுநீரக தினம் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் வரும் வியாழக்கிழமையன்று கொண்டாடப்படும். இந்த நாளில் சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஆங்காங்கு நடைபெறும். உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு. எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை. நீரிழிவால் மக்கள் எவ்வளவு அவஸ்தைப்படுகின்றனரோ, அவ்வளவு மக்களும் சிறுநீரகப் பிரச்சனையாலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இத்தகைய சிறுநீரக பிரச்சனை வராமல், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும், சிறுநீரகப் பிரச்சனை வரும். சிறுநீரகம் சீராக இயக்குவதற்கு, தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்வது, ந…

    • 3 replies
    • 875 views
  24. இன்றைய நவீன உலகில் மன அழுத்தத்திற்கு ஆளாகாத மனிதர்களே இல்லை எனலாம். அதிலும் மணிக் கணக்கில் கணினி முன் வேலை செய்பவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். இந்த மன அழுத்தத்தை போக்க என்ன வழி இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தவுடன், நினைவில் வரும் முதல் யோசனை தியானம் செய்வது. ஏனெனில் மன அழுத்தத்தை குறைக்க தியானமும் ஒரு கருவியாக பயன்படுகிறது. தியானம் மன அழுத்தத்தை எதிர்த்து போரிடுகிறது. இது தவிர, உடல் நலத்தை ஆதரிக்கிறது மற்றும் நாள்பட்ட வலிகளை தாங்குவதற்கு சக்தியைத் தருகிறது. மேலும் தியானத்தால் நல்ல தூக்கம், மகழ்ச்சி, அமைதியான மனநிலை ஏற்படுகிறது. கணிணியில் வேலை செய்யும் போது, சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு பிடித்த விதமாக தியானம் செய்வதே கணிணி தியானம் எனப்படுகிறது. இதை செய்வதற்கான …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.