Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. பிரதி மீள் குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அண்மையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது கருணா வெளியிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நோர்வே அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து வெளியிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் நோர்வே அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக பாரியளவு நிதியை வழங்கியதாக கருணா தெரிவித்தி…

  2. முடியல்ல, தாங்க முடியல்ல. தேர்ந்து எடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன் விசா மறுக்கப்பட்டார் எனில் கருணா கனடா வந்த கதை...... முடியல்ல, தாங்க முடியல்ல. முன்னர் சந்திரானந்த டி சில்வா பின்னர் விமல் வீரவன்ச மற்றும் சம்பக்க ரணவக்க போன்றோருக்கும் மறுக்கப்பட்டது. காரணம் அவர்களது பழைய வரலாறு. கிரிமினல் ரெகார்ட் இருப்போருக்கு விசா கிடையாது என்பது கனடா சட்டம். இலங்கையில் இருக்கிறதோ இல்லையோ, பிரித்தானியாவில் தண்டிக்கப்பட்ட கிரிமினல். எனவே கனடா வர வழி இல்லை. நல்லா சொல்லு ராங்கப்பா டிடைலு. ஒக்காந்து யோசிபான்களோ?

    • 0 replies
    • 528 views
  3. வாசக நண்பர்கள்,கருத்தினை பதிவோர்கள்,ஏனையோர் பதிந்ததை கொள்முதல் செய்வோர்கள்,ஆக்கங்களை சமைப்போர்கள் அனைவருக்கும் என் வணக்கம்! கருத்துக்களத்தில் இணைந்து கொள்வதற்கு நான் பட்ட​ கஷ்டங்கள் கொஞ்சமல்ல​., சொன்னால் நம்ப​ மாட்டீர்கள், அதனால் சொல்லாமலே இடம் விட்டு நகர்கிறேன். அங்கு போ, இங்கு போ என்று கொஞ்ச​ நாட்களாக​ இந்தக் கருத்துக்களம் என்னை பக்கம் பக்கமாக​ விரட்டியது. அதுவும் அரிச்சுவடியில் இருந்து வந்தால் தான் உன்னை உள்ளேயே விடுவேன் என்று வேறு மிரட்டியது. என்றாலும் நான் ஓய்ந்து போய் விடவில்லை. காரணம் என்ன​ என்று யாரோ கேட்பது போல் தெரிகிறது சொல்லி விடுகிறேன். வேறு என்ன​? இந்தத் தளம் எனக்கு மிகவும் பிடித்து விட்டமை தான். வெளிப்படையான​ சட்ட​ திட்டங்கள்!கொள்கைகள்! …

    • 28 replies
    • 1.7k views
  4. வந்தனம்! உலகம் ஒரு வாசிகசாலை அதில் நானும் ஒரு வாசகி. கற்பனை முகடேறி புதியதோர் உலகைக் காண்பது எனது பொழுதுபோக்கு. என் வாசகசாலை அனைவரையும் அவ்வுலகுக்கு அழைத்துச்செல்ல என்னாசை. அதுக்காக கருத்துக்களத்தில் உங்களுடன் நானும். இந்த வாசகியை வா சகி என வரவேற்று என் வாசகசாலையை சீராக்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் முதலடி எடுத்து வைக்கின்றேன்.

  5. தமிழீழப்பிரச்சனைக்கு தீர்வு என்ன? ஓர் விவாதம்!!!! மிகக்குறைந்தளவு அதிகாரங்களைக் கொண்ட 13 வது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவற்கு கூட விரும்பாத சிங்கள அரசியல்வாதிகளிடம் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வினை எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து போராட்த்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். ஈழமண் முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் போராட்ட முறைகள் மாற்றப்பட்டு பல வளிகளில் எடுத்துச்செல்லப்படும் என்பதில் ஜயமில்லை. தொடர்ந்து ஈழப்பிரச்சினைக்கு தீர்வு என்று வரும்போது அத்தீர்வானது எவ்வாறு இருக்க வேண்டும் அது தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை நிறைவேற்றுமா? என்பது தொடர்பாக யாழ் கருத்துக்கள உறவுகளோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆகவே கீழே ஒன்றைத் தெரிவுசெய்வதோடு அதற்கான கார…

  6. வணக்கம்! நாலைந்து வருடங்கள் முன் வந்த பேர் தவறிப்போச்சு புதிதாக வந்துள்ளேன் வரவேற்புத் தருவியளா அடியேனக் களத்துக்குள் கலக்க நீங்க விடுவியளா?

  7. யாழ்கள நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் விருந்தினருக்கு எனது அன்பு கலந்த வணக்கம்! முதலில் என்னை அறிமுகம் செய்யாது யாழ் களத்தினுள் திறந்த வீட்டினுள் மாடு புகுந்த மாதிரி நுழைந்து கருத்துக்களை எழுதத்தொடங்கி விட்டேன். இப்போது நேரம் கிடைத்துள்ளதால் என்னை அறிமுகம் செய்கின்றேன். முதலில் மாப்பிளை என்ற எனது பெயரை யாராவது தவறுதலாக விளங்கிக் கொள்ள வேண்டாம். இது எம்மிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் சொல்லாக இருப்பதால் இச்சொல்லை எனது யாழ் கள அடையாமாகத் தேர்ந்தெடுத்தேன். தவிர, மற்றும்படி மாப்பிளைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. நான் யாழ் களத்தை சுமார் மூன்று ஆண்டுகளாக பார்வையிட்டு வருகின்றேன். நேரம் கிடைக்காதனாலும், மற்றும் தமிழில் எழுதுவது சிரமாக இருந்ததாலும் யாழ் களத்தில…

    • 111 replies
    • 10.8k views
  8. Started by rajeeve,

    வணக்கம். என்னக்கு படம் எடுக்கோணும் எண்டு நல்ல ஆசை. வழமையா வாற தென் இந்திய மசாலா படங்கள் மாதிரி இல்லாமல் நல்ல தரமான, வித்தியாசமான, மசாலா படங்களை எடுக்கோணும் எண்டது தான் என்னுடைய லட்சியம். உங்கள் வோட்டு, மன்னிக்கவும். உங்கள் ஆதரவு எனக்கு தேவை.

  9. கலோ! எல்லோரும் சுகமா.. என்னுடைய பெயர் ஒதெர்ஸ். வயது 36. தற்போது லன்டனின் வசித்தாலும் சொந்த இடம் கொழும்பு, ஸ்ரீ லன்கா. யாழ்ப்பாண தமிழர் பரம்பரை ( ---- குலம்) தொழில் எதுவும் இப்போது இல்லை . கூடிய சீக்கிரம் ஸ்ரீ லன்காவில் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் தொண்டு நிருவனம் ஒண்டு தொடங்க உத்தேசித்துள்ளேன்.. உங்கள் ஆதரவு எமக்கு தேவை.

    • 15 replies
    • 1.7k views
  10. வணக்கம் இதுவரை யாழ் கருத்துக் களத்தின் வாசகனாக இருந்த நான் கள உறவுகளோடு கருத்தாடல் செய்ய விரும்புகிறேன்

  11. கள உறவுகளே உங்கள் அனைவருக்கும் மீள்வணக்கத்துடன் நொச்சி.

  12. "ஆண்ட தமிழினம் மீண்டும் ஒரு தடவை ஆள நினைப்பதில் என்ன தவறு?" அதே போல யாழ்களமெண்டால் தமிழுக்கு இணையத்தில் பெருகூட்டும் ஒரு பெருமையினை சேர்க்குமொரு புனித தளம். அப்படிப்பட்ட ஒரு தளத்தினை மூட மோகன் அண்ணா நினைக்கிறார் என்று நினைத்தேன். அதிர்ந்தேபோனேன். வாசிகராகவே இதுவரை இருந்த இந்த தூய தமிழன் யாழ் கள நீண்ட கால வாசிகன், புரச்சிகர சிந்தனைகளுடன் யாழ்களத்தில் பல ஆக்கங்களைத்தந்து, கள உறுப்பினர்களைக்கவர இதோ உங்கள் முன்னிலையில். என் கரத்தினை பலமூட்டுங்கள். பல களங்களை கண்டு பதை பதைக்கவில்லை நாம் ஆகவே எதிர்வரும் களங்களையும் சந்திக்க தயார். எங்கே குரல்கொடுங்கள். போராட்டம் உக்கிரமாக அதன் உச்சியில் நின்று நர்த்தனமாடும் இந்தவேளையிலே, படுபாதக செயல்கள் மிகவும் மலிந்து நடைபெறும் இந்த காலத…

  13. நான் வந்துட்டேன் இனி பயப்பட வேண்டாம். வணக்கம், புரட்ச்சித்தலைவரின் பாதையில் செல்பவர்க்கு தோல்வியே இல்லை. இங்கு பலர் கோபமாக இருக்கிறார்கள். புரட்ச்சிதலைவர் எமக்கு காட்டியதுபோல் எதிரியையும் நேசிக்கப் பழகுங்கள். நண்றி வணக்கம். இந்த ஒட்டுப்படை, குத்துப்ப்படை, வெட்டுப்படை, ஓணான்படை, மக்கள்படை எல்லாம் எமக்கு பிடித்த சொறி மாதிரி, டின்ச்சர் போட்டு நல்லா கீளீன் பன்னீட்டு வாங்கோ. களத்தில் யாராவது டாக்டர் இருக்க்றீன்களா?

    • 16 replies
    • 2.5k views
  14. உலகின் தென்கோடி நியூசிலாந்து முதல், வடகோடி கனடா வரை பரந்து வாழும் எனதினிய தமிழீழ உறவுகளே, கையினால் எழுதிய நாளாந்த நாட்டின் செய்தியிலிருந்து, தொலைபேசி செய்தியாகி, இன்று இணையத்தின் உச்சியிலே சுற்றி வருகின்றோம். இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி, நாம் அனைவரும் உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவோமெனில், எம்விடிவு அண்மிப்பதுறுதி. உங்களனைவரையும் யாழ் இணையத்திலே சந்திப்பதிலே மிக்க மகிழ்ச்சி. இதுவும் போர்க்களம், இணையதளப் போர்க் களம் - இங்கும் தாக்கணும், எழுத்துக் கொண்டு தாக்கணும்

  15. முதலில் உங்கள் பாரிய முயற்சசியான யாழ் திறந்த செய்திப்பரிமாற் அரங்கத்திற்கு எனது மனம் நிறைந்த நண்றிகள், உங்களது தளம் இயக்கும் சிந்தனை மிகவும் நவீனமானதும் மெச்சத்தக்கதும்மாகும். நிற்க, நான் இங்கு வந்ததின் காரணம் கீழ்கணும் லா-குறுஆ என்ற பிரஞ்சுப்பத்திரீகையின் புலணாய்வுக்கடடுரையை களத்தின் கவனத்திற்கு சமர்பிக்கவே அண்றி பத்திரீகையாளனாவதற்கல்ல. ஆஃகவே நான் பிழையான இடத்திற்கு வந்துள்ளேணா? இதோ அந்தக்கட்டுரை, உங்களில் யாராவது வேண்டியதை செய்ய முடிந்தால் மிக்கநன்றி பிகிங் சிறீலங்கா அரசின் போரிற்கு எப்படித்தோழ் கொடுத்து. சிறீலங்கா இரணுவத்தின் த. ஈ. வி. பு மீதான வெற்றிக்காண காரணம் பாரிய ஆயுதக்கொள்வனவுத்திட்டம், குறிப்பாக சினாவின் மிகப்பாரிய ஆயுத வினையோகமே... ஃவ்றாண…

  16. Started by ilankathir,

    இன்று எவ்வளவு களைப்பாகத் திரும்பி வந்திருக்கிறேன் என்றால் இந்த வரிகளின் மீது என் கடவாய் எச்சில் வழிகிறது இதன் வாக்கியங்களின் அர்த்தங்களின்மீது நான் தூங்கி வழிகிறேன் பிரகாசமாக எரியும் ஒரு விளக்கின் கீழ் நான் நிர்வாணமாக நின்றுகொண்டிருக்கிறேன் இன்று எனக்கு அளிக்கப்பட்ட உணவை நான் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறேன் அன்பே இன்று நான் எவ்வளவு களைத்திருக்கிறேன் என்றால் உனது இந்த முத்தத்தை இன்று மட்டும் வேறு யாருக்காவது கொடுத்துவிடு என்று கேட்கும் அளவுக்கு -மனுஷ்ய புத்திரன் http://www.ilankathir.com/?p=3567

  17. எல்லோருக்கும் கழுதையின் வணக்கங்கள்!, யாழ்; களத்தில் இணைந்து களமாடும் எண்ணத்தில் இணைகிறேன்.

  18. வணக்கம் இன்று முதல் நானும் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். என்றும் நட்புடன், கவரிமான்

  19. Started by prasaanth,

    கா(கூ)ட்டி கொடுக்க நான் துரோகி அல்ல என் தமிழீழமும், என் தாயும் என்னை தவறாக பெற்றெடுக்கவில்லை.

  20. அன்புடன் தலைமை ஆசிரியருக்கு! நான் கடந்தஒருவருடமாக அரிசுவடியிலேயே நிக்கிறேன் என்னால் அடுத்த கட்டத்துக்கு போகமுடியவில்லை. இது வேதனை அழிக்கிறது. என் உறவுகள் என் தாயகத்தில் துடிக்கும் இந்தனேரத்தில் கூட என்னல் என் தமிழ் உறவுகளுக்காக ஒன்றும் எழுதமுடியவில்லையே என்ற வேதனை என்னை வாட்டி வதைக்கிறது வேதனையில் என் உதிரம் கொதிக்கிறது. தயவு செய்து என்னை நாலுவரியாவது எழுத அனுமதிக்கவும். அன்புடன் யாழ் வாசகன் சூரி

    • 5 replies
    • 826 views
  21. கவிதையின் பல்வேறு வகைகளை விளக்கம் கூற விருப்புகிறேன் அதை எங்கே பதிவது?

  22. காங்கிரசுக் கட்சியில் பக்தவச்சலம் என்றொருவர் இருந்தார். காமராசருக்குப் பின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தார். இந்தி ஒன்றே ஆட்சி மொழி என்ற சட்டம் நடைமுறைக்கு வந்த 1965இல் அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சர். இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த போராட்டத்தை கடுமையான அடக்குமுறையால் நசுக்கிட முயன்றவர் அவர். இந்தியாவின் படை நேரடியாக இறங்கி அந்த மாணவர் போராட்டத்தை ஒடுக்கிட முனைந்தது. இன்றைய முதல்வர் கலைஞருக்கு இரும்புக் கரம் கொண்டு அடக்குவதைக் கற்றுத் தந்த ஆசான் அவர்தானாம். இதை இன்றைய முதல்வரே அவரின் புதைமேடையை திறந்து வைத்த போது சொன்னது. அப்படிப் பட்ட கொடுமைக் காரரான பக்தவச்சலத்திற்கு ஒரு பெயர்த்தி. செயந்தி நடராசன் என்பது அவரின் பெயர். இப்போது தில்லியில் அமர்ந்து க…

    • 0 replies
    • 582 views
  23. Youtube காணொளிகள் இணைக்கமுடியாதுள்ளது, ஏன்?

  24. Started by asan,

    கண்ணீரின் வலி துடைத்து இன்ப உறவுடன் சமரசம் செய்யும் இதயங்களின் நிஜ உருவம். அந்த இரு(பால்) பூச்சிகளும் விழுந்த ஒளிவிளக்கு. அவனும் அவளும் சுவாசிக்கும் இன்பக்காற்று. நீயும் நானும் எழுதும் கவிதையின் காகிதம். நீயும் நானும் எழுதிய கவிதையின் கற்பனை. நீ என்னை ஆழத்துடித்தாய் நான் உன்னில் மூழ்க நினைத்தேன் இருவரையும் குடித்துவிட்ட அமுதசுரபி. காதல்.... உன் உள்மனம் கண்டு ஓரவிழிப்பார்வைகளால் வலியும் கொண்டு வரமறுத்த வார்த்தைகளும் சொல்லத்துடித்த உணர்வுகளும் தருகின்ற வரிகளால் உள்ளக்காகிதத்தில் விழிகள் எழுதுகின்ற மௌனக்கவிதை காதல்...

    • 0 replies
    • 473 views
  25. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கு அமைய, புலம் பெயர்ந்த தமிழர்கழுது தொடர் போராட்டங்கள் எல்லோர் கவனத்தையும் எம்மீது திரிப்பியுள்ளது. நாம் முன்பு செய்த ஆர்பாட்டங்களை ஒரு வரி தனும் எழுதாத பத்திரிகைகள் இப்போ முதல் பக்க செய்தியாக போடுமளவிற்கு எமது மக்களின் தொடர் போராட்டங்கள் அவர்களை மாற்றிவிட்டது( தமிழ் மக்களின் துன்பத்தை உணர்ந்துவிட்டார்கள்).இது புலம் பெயர்ந்த தமிழருக்கு நல்ல வெற்றி. சிங்களவனது பரப்புரை உடைதெறியப் பட்டுளது.ஆனால் நாம் இத்துடன் நின்று விடாமல் எமக்கு நீதி கிடைக்கும் வரை புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் எமது பங்கினை தொடர்ந்து செய்யவேண்டும். நாம் வாழ்கின்ற நாடுகளில் எல்லாம் பத்திரிகை,தொலைகாட்சி,வானொலிக ள் என்று எல்லாவற்றிலும் எமது செய்திகள் வந்த …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.