Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் முரசம்

கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

யாழ் முரசம் பகுதி நிர்வாகத்தினரைச் சேர்ந்தவர்களுக்கானது. இப்பகுதியில் கள விதிமுறைகள், அறிவித்தல்கள், உதவிக்குறிப்புகள் போன்றன நிர்வாகத்தினரால் இணைக்கப்படும்..

  1. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 22ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2021) 23ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. கடந்த வருட ஆரம்பத்தில் இருந்து முழு உலகமுமே ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. முன்னர் குறிப்பிட்ட விடயத்தினையே மீண்டும் இத்தருணத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம். அதாவது எம் ஒவ்வொருவருக்கும் முன்னுள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இவ்வேளையில் யாழ் கள உறுப்பினர்களும் தம்முன் உள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து முன்மாதிரியாக செயற்பட வேண்டிக் கொள்கின்றோம். குறிப்பாக இணைக்கப்படும் மருத்துவ…

  2. கருத்துக்கள விதிமுறைகளை மீறுவதாகக் கருதும் கருத்துக்களை கருத்துக்கள நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரல் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களும் ஆக்கங்களும் மட்டுறுத்தினர்களால் கவனிக்கப்பட்டு, அவை கருத்துக்கள விதிமுறைகளை மீறுவதாயின் தணிக்கை செய்யப்படுகின்றன. நீண்ட நேரம் மட்டுறுத்தினர் இணைப்பில் இல்லாதிருக்கும்போது எழுதப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக வாசித்தே இவ்வாறான கருத்துக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். சில வேளைகளில் விதிமுறைகளை மீறும் கருத்துக்கள் மட்டுறுத்தினர்களின் கவனத்திலிருந்து விலகியிருக்கலாம். இப்படியான சந்தர்ப்பங்களில், அதாவது தலைப்புக்கு பொருத்தமில்லாத வலிந்த திணிப்புகள் இடம்பெறுவதாகவோ அல்லது கருத்துக்கள விதிமுறைகள் மீற…

  3. மகேஸ்வரனை கொலை செய்தவர் அரச புலனாய்வு துறையோடு சம்பந்தப்பட்டவர் கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

  4. திண்ணை தொடர்பான விதிகள்: யாழ் உறவுகள் தமக்குள் உரையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள திண்ணை பகுதியில் இன்றில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் கள விதிகள் யாழ் களத்தின் பொதுவான விதிகள் அனைத்தும் திண்ணைக்கும் பொருந்தும் (உதாரணமாக தனிநபர் தாக்குதல், வா போ போன்ற ஒருமையில் சக உறுப்பினரை அழைப்பது, அநாகரீகமாக உரையாடுவது..), இவற்றுடன் மேலதிகமாக கீழே உள்ள விதிகள் திண்ணை பயன்பாட்டுக்கான பிரத்தியேகமான விதிகள் 1. திண்ணையில் கதைப்பவை வெளியில் கொண்டு செல்லவோ, பரப்புவதோ, பிரதி பண்ணுவதோ தவறு 2. திண்ணையில் உரையாடப்பட்டவற்றை களத்தில் உள்ள திரிகளில் ஒட்டுதலும், தனியாகத் திரி திறந்து இடுவதும் கூடாது 3. திண்ணையில் தமது அடையாளங்களை (பெயர் / முகவரி / பால் / தொலைபேசி இலக்கம…

  5. யாழ் இணையம் - 8 ஆவது அகவை யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள்... வருகிற 30ம் நாள் மார்ச் மாதம் அன்று யாழ் இணையம் தனது 8 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கிறது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி அன்று யாழ் இணையம் தொடங்கப்பட்டது. இன்று அது வளர்ந்து ஒரு பெரும் தளமாக - பல பார்வையாளர்களைக் கொண்ட தளமாக உயர்ந்து நிற்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும், தமிழ் சமூகத்தின் தேவைகளுக்கு முகம்கொடுத்தும் "யாழ் இணையம்" தன்னை வளப்படுத்திக்கொண்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு முயற்சிகளை யாழ் இணையம் முன்னெடுத்தது: யாழ் முற்றம் இணைய சஞ்சிகை, விம்பகம், மின்னஞ்சல் சேவை, வாழ்த்து அட்டை, ஒலிபரப்பு, ஒளிபரப்பு, கருத்துக்களம், அரட்டை அறை, வலை…

  6. வணக்கம், கருத்துக்கள மென்பொருள் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவையுள்ளதால் இன்று (18 Oct 2022) பின்னேரம் 5 மணியளவில் இருந்து சில மணி நேரங்களுக்கு யாழ் இணையம் இயங்க மாட்டாது. நன்றி நிர்வாகம்

  7. வணக்கம், கால மாற்றங்களுக்கு ஏற்ப இதுவரை இருந்த யாழ் கள விதிகள் மீளாய்வு செய்யப்பட்டு தெளிவற்றவை சிலவற்றில் மாற்றங்களும், புதிய விதிகளும் புகுத்தப்பட்டு கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 3.0 கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் 15 டிசம்பர் 2014 ஞாயிறு முதல் (15.12.2014 - 00:00 மணி) நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆகவே யாழ் கள உறுப்பினர்கள் விதிமுறைகளை உள்வாங்கி ஆக்கபூர்வமான கருத்துக்களை வைத்து யாழின் வளர்ச்சிக்குத் துணைபுரியுமாறு வேண்டிக்கொள்கின்றோம். மேலும் கள விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீதும், பதிவர்கள் மீதும் மட்டுறுத்துதலும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். அ) உறுப்பின…

  8. அடிப்படைக் குழுமங்கள் [கருத்துகள நோக்கர்கள்] இவர்கள் யாழ் கருத்துக்களத்தில் உறுப்பினர்களாக இணையாது, பார்வையாளர் மட்டத்தில் மட்டும் இருப்பவர்கள் - கருத்துக்களத்தில் இணைக்கப்படும் ஆக்கங்களை வாசிப்பவர்கள். இவர்களுக்கு "யாழ் உறவுகள்" பகுதியில், "யாழ் செயலரங்கம், யாழ் நாற்சந்தி" ஆகிய பிரிவுகளைப் பார்ப்பதற்கும், வாசிப்பதற்கும், எழுதுவதற்குமான அனுமதி இல்லை. மற்றும் "யாழ் உறவுகள்" பகுதியில், "யாழ் தரவிறக்கம்" பிரிவினைப் பார்ப்பதற்கான அனுமதி உள்ளது - ஆனால் வாசிப்பதற்கும், எழுதுவதற்குமான அனுமதி இல்லை. அதேபோல் ஏனைய அனைத்துப் பகுதிகளையும் பார்ப்பதற்கும், வாசிப்பதற்கும் அனுமதி உள்ளது - ஆனால் புதிய தலைப்பினைத் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தலைப்புக்கு பதில் …

  9. யாழ் களத்தின் இணைய வழங்கியில் சில தொழில்நுட்ப வேலைகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறியத் தந்துள்ளனர். இதன் காரணமாக இன்று இரவும் (14-May-2013) நாளையும் (15-May-2013) யாழ் இணையத்தில் சில தடங்கல்கள் ஏற்படலாம் என கள உறவுகளுக்கு அறியத் தருகின்றோம். நன்றி.

  10. வணக்கம் அனைவருக்கும், யாழ் கருத்துக்களம் தொடர்பான அறிவித்தல்கள், மாற்றங்கள் - புதியன தொடர்பான விளக்கங்கள், உறுப்பினர்கள் தொடர்பான அறிவித்தல்கள், கவனயீர்ப்புகள், எச்சரிக்கைகள், அறிவுறுத்தல்கள் போன்றன இத்தலைப்பின் கீழ் இடம் பெறும்! நன்றி

  11. அனைத்து யாழ் இணைய உறவுகளுக்கும், யாழ் இணையம் தனது 10ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று 11ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம் - பல மேடு பள்ளங்களைக் கடந்து - தடைகளைத் தாண்டி - இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாய் - தமிழர்களின் விடுதலை உணர்வையும், தேசிய எழுச்சியையும் வெளிப்படுத்தும் களமாய் - உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாய் - யாழ் இணையம் உள்ளது. தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது - பல்வேறு வளர்ச்சிப் படிகளை தாண்டி வந்துள்ளது. தொடங்கிய சில காலங்களிலேயே மறைந்து போகும் இணையத்தள…

  12. வணக்கம், 2017 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள் போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது. நன்றி.

  13. வணக்கம், 2018 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள் போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது. நன்றி.

  14. வணக்கம், யாழ் கருத்துக்களத்திற்கான விதிமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்த விதிமுறைகள் காலத்துக்குக் காலம் தேவைகளைப் பொறுத்து செப்பனிடப்படும். விதிமுறைகளை மாற்றியமைக்கப்படவும், புதிய விதிமுறைகள் சேர்த்துக்கொள்ளப்படவும் முடியும். கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் நாளையிலிருந்து (13.04.2007 - 00:00 மணி) நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீதோ, பதிவர்கள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படும். அ) கருத்துகள் 1. கருத்து/விமர்சனம் கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும். சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங…

  15. வடக்கு முதல்வருக்கு துணையாக களம் இறங்கும் முன்னாள் சட்ட மா அதிபர்! எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டும் கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன

  16. வணக்கம், ஆரோக்கியமான உரையாடல்களுக்காகவும் யாழ் கள உறவுகளுக்கிடையேயான இலகுவான மற்றும் சுமூகமான கருத்தாடல்களுக்கான மேடையாகவும் அமைக்கப்பட்டு இருந்த திண்ணை, பல முறை விதி மீறல்களை பற்றி குறிப்பிட்டும் அவற்றை அலட்சியம் செய்து யாழ் கள விதிகளுக்கு முற்றிலும் எதிராகவும், களத்தில் நீக்கப்படுகின்ற விதி மீறல்களுக்குரிய கருத்துகளை வைப்பதற்கான தளமாகவும்,குழுவாதத்தை தூண்டுவதற்கான வெளியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தமையால் யாழில் இருந்து நீக்கப்படுகின்றது. நன்றி நிர்வாகம்

  17. மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 17ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2016) 18ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கும், யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். கூட்டுமுயற்சியினால் கடந்த காலத்தில் ஒரு சில விடயங்களை தாயக ம…

  18. வணக்கம், கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0 இல் இருக்கும் கள விதிகளுக்கு மேலதிகமாக இன்றில் இருந்து நடைமுறைக்கு வரும் விதிகள் / அறிவித்தல் இவை: ---------------------------------------------- குழுக்களாக இயங்குதல் தொடர்பான முக்கிய அறிவித்தல் யாழ் இணையத்தின் கருத்துக் களத்தில் குழுக்களாகச் சிலர் இணைந்து இயங்குவதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. யாழில் கடந்த சில மாதங்களாக இடம்பெறுகின்ற பல விரும்பத்தகாத விடயங்களுக்கு முக்கிய காரணமாக இந்த குழுக்களாக சேர்ந்து இயங்கும் தன்மையே அமைகின்றது. இந்த நிலை தொடர்ந்து அனுமதிக்கப்படுவது கடுமையான ஆரோக்கியமற்ற சூழ்நிலையை தோற்றுவிக்கும் என்பதால் உடனடியாக இத்தகைய குழுக்களாக சேர்ந்து இயங்குவதை தவிர்க்குமாறு கோருகின்றோம். …

  19. சீனாவில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கோவிட் உயிரிழப்புகள்! மயானங்களில் குவியும் சடலங்கள் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. வேறு திரிகளில் இருந்து காவுவதும், தலைப்புக்கு சம்பந்தமற்று கருத்தாடல் புரிவதும் களவிதிகளுக்கு முரணானவை. தொடர்ச்சியாக மீறுபவர்கள் காலவரையின்றி மட்டுறுத்துனர் பார்வையில் வைக்கப்படுவர்.

  20. வணக்கம், கால மாற்றங்களுக்கு ஏற்ப இதுவரை இருந்த யாழ் கள விதிகள் சிலவற்றில் மாற்றங்களும், புதிய விதிகளும் புகுத்தப்பட்டு கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் நாளையிலிருந்து (11.04.2012 - 00:00 மணி) நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீதோ, பதிவர்கள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படும். 1. கருத்து/விமர்சனம் கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும். தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங…

  21. அனைவருக்கும் வணக்கம், எதிர்வரும் வெள்ளிக் கிழமை மாலை (21-Feb-2014) யாழ் இணையம் தற்போது இயங்கிக் கொண்டு இருக்கும் சேர்வரில் (Server) இருந்து புதிய சேர்வரிற்கு மாற்றப்படுவதால் அடுத்த சில நாட்களுக்கு யாழ் இணையத்தில் தடங்கல்கள் ஏற்படலாம் என்பதை அறியத்தருகின்றோம். சேர்வர் மாற்றத்தின் பின் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் தடங்கல்களையும் கூடிய விரைவில் தீர்ப்பதற்கு எம்மாலான முயற்சிகளை மேற் கொள்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். வழக்கம் போன்று உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இம் மாற்றத்தினை செய்ய தீர்மானித்துள்ளோம். அன்புடன், யாழ் இணையம்

  22. Started by மோகன்,

    சமீப நாட்களாக களத்திற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தளம் சில பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அதாவது தளத்தின வேகம் நிலையில்லாது ஒரு தளம்பலாக இருந்தது. Databaseன் அளவே தளம்பலுக்கு முக்கிய காரணியாக இருந்தது. இன்னும் விளக்கமாகச் சொன்னால் அதிக அளவிலான தரவுகளைக் கொண்ட database பலருக்கு ஒரே நேரத்தில் தகவல்களைக் கொடுக்க முடியாது சிக்கல்களை எதிர் கொண்டது. இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பல வழிகள் இருந்தாலும் செலவு குறைந்த வழியினையே தெரிந்தெடுக்க வேண்டிய தேவையில் நாம் இருக்கின்றோம். இதன்படி இவ்வாருட ஆரம்பத்திற்கு முற்பட்ட அனைத்துக் கருத்துக்களும் நீக்கப்பட்டு இக்கருத்துக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. (கடந்த வருடமோ அல்லது அதற்கு முன்னரோ ஆரம்ப…

    • 10 replies
    • 5.1k views
  23. மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 20ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2019) 21ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கும், யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். யாழ் இணையம் 21 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளினைச் சிறப்பிக்கும் முகமாக முன்னைய வருடங்கள் போன்று யாழ் இணைய உறவுகள் பலரும் மிகவும் உற்சாகமாகச் சுயமான ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளி…

  24. 'இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்' என்ற தலைப்பு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

  25. சில மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவையுள்ளதால் அடுத்த சில மணி நேரங்களுக்கு யாழ் இணையம் இயங்க மாட்டாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.