Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரான்சில் 17 விடுதலை புலிகள் கைது பாரீஸ்: பிரான்சில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 17 பேர் கைது செய்யப்பட்டனர். பிரான்சில் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பாரீஸ் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 17 பேர் சிக்கினர். இவர்களில் 16 பேர் தமிழர்கள், ஒருவர் பிரான்சை சேர்ந்தவர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஏராளமான பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. பிரான்ஸ் போலீஸ் வட்டாரங்கள்,"கைது செய்யப்பட்ட 17 பேரும் பிரான்சில் செயல்பட்…

    • 33 replies
    • 7.1k views
  2. "மக்கள்" தொலைக்காட்சியின் இன்றிரவு செய்திகளில் .... இந்திய புலனாய்வுத்துரையினரின் அண்மைய நாடகமான "அண்மையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு, மீண்டு வந்தவர்களில்" ஒருவரான சிறுவன் பல அதிர்ச்சித் தகவல்களை "மக்கள்" தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளான்!! இதை இன்றிரவு செய்திகளில் ஒளிபரப்ப உள்ளனர். .... இலவசமாகத்தான்!!! மெல்ல மெல்ல உண்மைகள் வெளிவரத் தொடங்குகின்றது!!! உண்மைகள் வெளிவருவதை எந்த அளவிற்கு இந்திய உளவுத்துறையினரும், இந்திய அரசும் அனுமதிக்கப் போவதென்பது, நாளடைவில்தான் தெரியும்!!

    • 2 replies
    • 1.5k views
  3. 6 வருடங்களுக்கு முதல் எனது நண்பர் சிறிலங்காவில் இருக்கும்போது இங்கு வருவதற்காக சொன்ன கதைகளி இங்கு கூறுகிறேன்,அங்கு இருக்க முடியாது ஒரே பிரச்சினை பிள்ளைகளை வைத்து கொண்டு அங்கு இருப்பது கடினம்,பிள்ளைகளும் வளர்ந்திட்டாங்க ஆமிகாரன் பிரச்சினை ஒரு பக்கம் மற்ற ஆட்களின் பிரச்சினை ஒரு பக்கம் அரசியல் நிலையும் சரியில்லை எனக்கு அவுஸ்ரெலிய வர உதவி செய்யுமாறு கேட்டிருந்தார்,அவர் விருப்பபடியே அவர் உறவினர் மூலம் அவருக்கு இங்கே வரும் சந்தர்ப்பம் கிடைத்து முதல் தான் தனியாக வந்து பின்னர் குடும்ப அங்கத்தவர் எல்லாரையும் இங்கு வரவழைத்து மெல்பனில் குடியேறி அங்கு வசதி வாயிபுகளுடன் வாழ்கிறார்,அவர் வந்த பொழுதில் நாட்டில் நடந்த இன்னல்களை கூறி அகதி அந்தஸ்து பெற்று பிறகு பிரஜாஉரிமையும் பெற்றவர்,2,3 த…

    • 12 replies
    • 2.4k views
  4. அவுஸ்ரேலியாவிற்கு கல்விக்கென செல்லும் தமிழ் மாணவர்களுக்கான விசா அனுமதியை அவுஸ்ரேலியா நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. பொதுவாக இலங்கையில் இருந்து விண்ணப்பிப்போர் ஒரு சில நிறுவனங்களினூடகவே விண்ணப்பிப்பது வழமை. தற்போது அந் நிறுவனங்களுக்கு அவுஸ்ரேலிய தூதராலயம் விடுத்துள்ள அறிவித்தலில் வடக்கு கிழக்கில் பிறந்த மாணவர்களுக்கான விசா அனுமதி நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர்களை நேரடியாக தூதுவரகத்துடன் தொடர்பு கொள்ளும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது. நேரடியாக விண்ணப்பிப்போர் நிராகரிக்கப் பட்டுள்ளனர். (செய்தி மேலும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது )

    • 37 replies
    • 5.3k views
  5. அண்மையில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கீத் வாஸ் என்னும் இந்திய வம்சாவழி தொழிற்கட்சி எம்பியின் முன் முயற்சியில் ஈழத் தமிழர்களின் அவலமும் சிறிலங்கா இன முரண்பாட்டிற்கான தீர்வும் என்னும் விடயம் பற்றி மூன்று மனித்தியாலங்களுக்கும் மேலாக விவாதிக்கப் பட்டது. இவ்வாறான ஒரு விவாதம் உலகில் தமிழ் நாட்டு சட்டசபைக்கு அடுத்ததாக பிரித்தானியாவிலையே நடை பெற்றது.தொழிற்கட்சி, கன்செர்வேரிவ் கட்சி, மற்றும் லிபரல் டெமக்ரற், மற்றும் ஸ்கொட்டிஸ் தேசயக் கட்சியின் பராளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்காற்றினர்.பெரும்பாலும் லண்டனைப் பிரதினிதித்துவப் படுத்தும் உறுப்பினர்கள் இதில் பங்காற்றினர்.இவர்கள் எல்லோரும் கூறிய விடயங்களைத் தொகுத்தால் அவை பின் வருமாறு வரும். 1)பிரித்தானியாவின் காலனியாக இரு…

  6. மெல்பேனில் 2 பேர் கைது. இந்த செய்தி உண்மையா?? news.com.au இல் போட்டு இருந்தார்கள்

  7. Started by putthan,

    சிட்னியில் பிரபல தமிழ் வானொலியின் ஆனந்த இரவு அமர்கள இரவானது பலமான அலை வந்து அடித்துள்ளது அறிவிப்பாளர்களின் அதிருப்தியால் இது நடந்துள்ளது அறிவிப்பாளர்களும் நேயர்களும் குறைகளையும் நிறைகளையும் கூறினார்கள். பலமுறை இந்த வானொலி சோதனைக்கு உள்ளானது இருந்தும் மீண்டும் மீண்டும் எழும்பி வீறு நடை போட்டது இம்முறை எழும்பி வீறு நடை போடுமா?????????போட வேண்டும் என்பதே அடியேனின் அவா.நிர்வாக குழுவினர்களுக்கும் ஸ்தாபகருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கருத்து (?) பரிமாற்றங்கள் நடைபெற்றது.இறுதியில் நிர்வாக குழுவினர் கண்ணீர் மல்க பத்து அறிவிப்பாளர்களுடன் பிரியாவிடை பெற்றனர்.ஸ்தாபகரும் இள அறிவிப்பாளர்களும் வானலையில் எட்டு திக்கும் பரந்து ஒலிக்கும் என சூளுறைத்தனர்.கா…

    • 27 replies
    • 4.7k views
  8. பிரான்சில் அதிபர் தேர்தல் வெற்றியை எதிர்த்து கலவரம்: கார்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன பிரான்சு நாட்டின் ஜனாதிபதியாக 2 முறை பதவி வகித்தவர் ஜாக்கிஸ் சிராக். இவரது பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. அதிபர் பதவிக்கு கர்சர் வேட்டிவ் கட்சி சார்பில் நிக்கோலஸ் சர்கோஜி, சோச லிஸ்ட் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் செகோலின் ராயலும் மட்டுமே போட்டியிட்டனர். இறுதிக்கட்ட தேர்தலில் நிக்கோலஸ் சர்கோஜிக்கு 53 சதவீத ஓட்டுகளும், பெண் வேட்பாளர் செகோலினுக்கு 47 சதவீத ஓட்டுக்களும் கிடைத்தன. இந்த நிலையில் தோல்வி அடைந்த செகோலின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பாரீஸ் நகரில் அவர்கள் கார்களை தீ வைத்து கொளுத்தினார்கள். கல்வீச்சில…

    • 0 replies
    • 1k views
  9. சிங்களத்தின் ஒட்டுக்கூலிகளான கருணா கும்பலுக்குள் ஏற்பட்ட பாரிய பிளவையடுத்து, சில காலங்களிற்கு முன்பு புலத்தில் திடீரேன "கருணா காதலர்களாக" மாறிய சில ஒட்டுண்ணிகள் என்ன செய்தென்று தெரியாமல் மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பதாக தெரியவருகிறது. கருணாவா? பிள்ளையானா? என்பதில் மிகப் பெரியளவில் மோதல்கள் வெடிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது. கருணா ஒட்டுக்குழுவை வைத்து கப்பங்கள், கடத்தல்களை செய்து வருவதை பங்கிட்டு வந்த டென்மார்க்கில் வாழும் ஒட்டுண்ணிகளான குமாரதுரை குடும்பமே இதில் மிகப் பெரியளவில் பாதிக்கப்பட்டருப்பதாக ஈ.என்.டி.எல்.எப் வட்டாரங்கள் நெருப்புக்குத் தெரிவித்தன. கடந்த காலங்களில் திருமலை மூதூரில் சகோதரரான தங்கத்துரையின் பாராளுமன்ற பதவியை வைத்து வ…

  10. TTN ஒளிபரப்பு இன்று பி.ப. 3.30 மணியின் பின் ஒளிபரப்பைக் காணோம். மிகவும் மன வருத்தமாக் இருக்கிறது!!!

  11. சிட்னியில் சிறுவர்களுக்காக ஒரு போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது அங்கு கவிதை,தேவாரம்,திருகுறள் போன்றவைகள் நடத்தி சிறுவர்களின் திறமைக்கு ஏற்ப தரம் பிரித்து பரிசில்கள் வழங்கபட்டன.சிறுவர்களும் உற்சாகம் பங்குபற்றினார்கள் சின்ன வயது ஆகவே பெற்றொரின் விருப்பக்ட்துகு ஏற்றவாறு பங்குபற்றி இருந்தார்கள்,இந்த சிறுவர்கள் இரண்டு,மூன்று வருடங்களிற்கு பிறகு பங்குபற்றமாட்டார்கள் என்பது வேறவிடயம். சமய அறிவு போட்டியில் திருநாவுகரசரின் அக்காவின் பெயர் அவரின் அம்மா அப்பாவின் பெயர் இப்படியான கேள்விகள் கேட்கபட்டன இதெல்லாம் இந்த சிறார்களுக்கு என்ன பாடம் புகட்ட போகிறது நாங்கள் இதை படித்து என்னத்தை கண்டோம். கவிதை போட்டியில் பாரதியாரின் ஓளிபடைத்த கண்ணிணாய் வா வா என்ற கவிதையை சிறார்கள் ஆழகாக கூற…

    • 5 replies
    • 1.6k views
  12. உலகில் உள்ள அனைத்து நாடுகளினதும் தேசியப்பறவை தேசிய மிருகம் தேசிய மரம் என்பவை பற்றிய தகவல் தேவைப்படுகின்றது. தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள். இணையத்தில் அதைப்பற்றிய தகவல்கள் பெறக்கூடிய தளங்கள் இருந்தால் அதனையும் அறியத்தாருங்கள் நட்புடன் பரணீதரன்

    • 2 replies
    • 3.1k views
  13. வணக்கம் கருத்துக்கல நண்பர்களே, உங்கள் உதவி கேட்டு எழுதும், ஓ விண்னப்பம்.என்னுடைய அண்னா 6 வருடங்கள் ஜெர்மனியில் வசித்து வந்தார். பிற்ற்பாடு வருடைய அரசியல் தன்ஞ கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் பிராஸ்க்கு சென்றார். அவர்களோ மீண்டும் ஜெர்மனிக்கே அவரை அனுப்பி விட்டார்கள். இப்போது அவர் இன்று அதாவது 25.04.2007 கொலைகார நாட்டு(இலங்கை) அனுப்பபட்டு விட்டார். உங்களுக்குஎதாவது தகவல் தெரியுமாவரை மீபதற்குஎன்ன செய்யலாம்என்று. நன்றியிடன் உண்மையுள்ள யாழ் கொளதமன் மீண்டும் சந்திப்போம்

    • 18 replies
    • 2.9k views
  14. பிரிட்டனில் கடன் அட்டை மோசடி சம்பவங்களின் புலிகளுக்கு தொடர்பு என குற்றச்சாட்டு மு.சுப்பிரமணியம் பிரித்தானியாவில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் நிரப்பவரும் பாவனையாளர்களின் கடன் அட்டைகள் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாகவும் பாவனையாளரின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் மோசடிகல் இடம் பெருவதாகவும் இவற்றில் பெருமளவு இலங்கையர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் எனவும் பி.பி.சி தொலைகாட்சி செய்தி பிரிவு செய்தி தெரிவித்துள்ளது குறிப்பிட்ட மோசடி சம்பவங்களில் இலங்கைகர்களுக்கு சிறிலங்காவில் தனிநாடு கோரி போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது . இன்று பி.பி.சி தொலைகாட்சிக்கு போட்டியளித்த பிரித்தானியவிற்கான இலங்க…

    • 9 replies
    • 1.9k views
  15. உலக அரங்கில் தமிழீழம் எதிர்நோக்கும் துர்ப்பாக்கிய நிலை பற்றி தமிழ் கார்டியன் Politics, Not Morals Only an end to state oppression can bring peace to Sri Lanka Every international actor involved in Sri Lanka’s ethnic conflict consistently asserts their unalloyed support for ‘peace’ and a negotiated solution. They also invariably insist that it is up to the protagonists themselves to resolve what is termed ‘their’ dispute. But this pious commitment to the abstract notion of ‘peace’ does not disguise their cynical pursuit of their own substantial interests both through the course of the conflict and shaping of its ultimate outcome. Interests in themselves cann…

  16. பிரான்ஸ் அரசாங்கம் பிரான்ஸ் தமிழர் ஒரங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகளை கைது செய்ததைக் கண்டித்து கடந்த 25.04.2007 புதன்கிழமை பாரிஸ் நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பாரிஸ் நகரத்தின் மையப் பகுதியான குடியரசுச் சதுக்கத்திலிருந்து பஸ்ரிய் சதுக்கம் வரை நடைபெற்ற இந்தக் கண்டனப் பேரணியை பிரான்ஸ் தமிழ் மாணவர் அமைப்பு எற்பாடு செய்திருந்தது. 3 வாரங்களுக்கு முன்பே இந்தப் பேரணியை நடத்தவதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்திருந்த போதிலும் பேரணி நடப்பதற்கு 20 மணி நேரம் இருக்கும் போதே இதற்கான அனுமதியை பாரிஸ் நகரக்காவல் துறையினர் வழங்கியிருந்தனர். ஆயினும் மிகக் குறுகிய நேர தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையில் இரண்டாயிரத்தில் இருந்து மூவாயிரம் வரையிலான தமிழ் மக்கள் இந்தப் பேரணி…

  17. சிங்கள கிறிக்கெற் அணியை நடுத்தெருவில் நிற்க வைத்த புலிகள் தாயகம் செல்வதற்காக முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட எமிரேற்ஸ் நிறுவனம் தனது விமானத்தை ரத்துச் செய்ததால் மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை இங்கிலாந்தில் தங்கியிருக்கின்றனர்.

    • 2 replies
    • 1.2k views
  18. அவுஸ்திரேலியர்களுக்கு நன்றி உலகக் கிண்ணத்தை வென்று தமிழ் சிங்கள முஸ்லிம் அனைவரையும் இணைத்த அணி, ஒன்றுபட்டு வாழ்கிற நாடு சிறிலங்கா என்ற பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டிருந்த சிங்களத்தின் கனவைத் தவிடுபொடியாக்கிய அவுஸ்திரேலியர்களுக்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான (தமிழுணர்வுள்ள) தமிழர்கள் சார்பில் நன்றி நன்றி நன்றி

  19. வணக்கம் சிறிய ஒரு கருத்தெடுப்பிற்கான தலைப்பு உங்களை மனவோட்டங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் புலம்பெயர் வாழ் மாணவர்களிடையே இன உணர்வு குறைவாக அல்லது அற்று காணப்படுவதற்கான காரணங்கள் என்ன ? அவற்றை நாம் எவ்வகையில் நிவர்த்தி செய்யலாம் ? இவ்வினா புலம்பெயர் ஆசிரியர்களிடையேயும் நிலவுகின்றது. இதற்கான உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். புலம்பெயர் மாணவர்களிற்கான கருத்தரங்குகளில் நாம் இவற்றை பகிர்ந்துகொள்ள பேருதவியாக இருக்கும் என நம்புகின்றேன். நட்புடன் பரணீதரன் உங்கள் பதில்களை தனிமடல் மூலமும் அறியத் தரலாம் nparaneetharan@gmail.com

    • 1 reply
    • 1.1k views
  20. Started by putthan,

    அண்மையில் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவியை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது,வெஸ்டர்ன் யூனியிலோ(மார்க்ஸ் குறைந்த ஆட்கள் படிப்பது அங்கே என்று நம்மன்ட சிட்னி டமிழ்ஸ் சொல்லினம்)பிள்ளை சொன்னா சீ சீ நான் சிட்னி யூனி என்றா,என்ன கோர்ஸ் என்று பிள்ளையை கேட்டபோது அவா சொன்னா வைனல் இயர் லோ செய்யிறன் என்றா.எனக்கு நல்ல விருப்பம் கோர்ஸ் நல்ல இன்றஸ்சா இருக்கு மாஸ்டர்சும் செய்ய வேண்டும் அப்ப தான் நல்ல வேலைவாய்பு எடுக்கலாம் என்று கூறினா,நானும் ஓம் ஓம் நல்ல வேளை இங்கே எடுக்கலாம் என்று சொன்னேன். பிள்ளை உடனே இங்கே வேலை பார்க்க அவ்வளவு விருப்பம் இல்லை(அப்பன்மார் வெளிநாடு வாரதுக்கு எத்தனி ஏஜென்டில காசு கொடுத்து தலை மாற்றி காலை கை பிடித்து வெளிநாடு வந்த கதை இவையளுக்கு எங்கே தெறிய போகுத…

    • 15 replies
    • 2.2k views
  21. வான்புலிகளின் பலாலிதளம் மீதான தாக்குதல்-கனடாவில் புலிக்கொடி ஏந்தியவண்ணம் இனிப்புக்களை வழங்கி மகிழ்ந்த இளைஞர்கள் Written by Pandara Vanniyan - Apr 25, 2007 at 12:54 AM பலாலி வான்படைத் தளத்தின்மீது தமிழீழ வான்படையினர் நேற்று நடத்திய தாக்குதற் செய்தி அறிந்த கனேடியத் தமிழ் இளைஞர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தியவாறு வீதிகளில் செல்வோருக்கு இனிப்புப் பண்டங்களை வழங்கி தமது மகிழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கனடாவில் தமிழர்கள் அதிமாக வசிக்கும் ரொறன்ரோவின் ஸ்காபுரோப் பகுதியில் முக்கிய சாலைகளின் ஓரங்களில் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தியவாறு செல்லும் இளைஞர்கள் இனிப்புப் பண்டங்களை சாலையால் நடந்து செல்வோருக்கு வழங்கி வருகின்றனர். எமது வான்…

    • 2 replies
    • 2.2k views
  22. ஜேசுதாசும் தமிழ்த்தேசிய ஆதரவும் ஜேசுதாஸின் கச்சேரி சென்ற ஞாயிற்றுக்கிழமை சிட்னி ஒபரா அரங்கத்தில் நடைபெற்றது. புகழ் பெற்ற இவ் அரங்கில் நிகழ்ந்த முதலாவது தமிழ் நிகழ்ச்சி என்ற பெருமையினை இக்கச்சேரி தட்டிக்கொண்டது. அரங்கு நிறைய 90 வீதத்துக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் பார்வையாளர்களாக இன்னிகழ்வுக்கு வந்து கச்சேரியினை ரசித்தார்கள். சிட்னியில் சென்ற திங்கள் கிழமை( நேற்று) அரசாங்க விடுமுறையான தொழிலாளர் தினம். பொதுவாக திங்கள் கிழமைகளில் விடுமுறை வந்தால் சிட்னித்தமிழர்களில் சிலர் வெள்ளி இரவே சுற்றுலாச் சென்று திங்கள் மாலை வருவார்கள். இத்தினங்களில் தமிழ்த் தேசிய ஆதரவுக்கூட்டங்கள் நடந்தாலும் அக்கூட்டங்களுக்கு செல்லாமல் மக்கள் சுற்றுலாவிற்குத்தான் செல்வது வழக்கம். கேட்டால் வே…

  23. European Tamil Federation 11 Concord Terrace, Coles Crescent Harrow HA2 0HJ Mail: europeantamilfederation@yahoo.co.uk BBC Complaints, PO Box 1922, Glasgow G2 3WT Dear Sir/Madam, Re: News bulletin broadcasted and telecasted under the headline of ‘involvement of the LTTE in credit card cloning’ Tamils living all over the world are disappointed about the quality of the subject mater as it was prepared with out any base, due care, caution and evidence to the source of this information. It is obvious that it’s a mud-slinging exercise carefully manipulated by the Sri Lankan government in order to discredit LTTE in the eyes of the international…

  24. பிரான்ஸ் அரசாங்கம் தமிழ் தேசிய ஆதரவாளர்களை கைது செய்ததை கண்டித்து நாளை மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை பாரிஸ் நகரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளது.பாரிசின் (République) குடியரசு சதுக்கத்திலிருந்து (Bastille)பஸ்ரில் சதுக்கம் வரை இந்தப் பேரணி நடைபெறவுள்ளது.பிரான்சிலுள்ள தமிழ் மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் இந்தக் கண்டனப் பேரணிக்கு பாரிஸ் மாநகரக் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

    • 3 replies
    • 1.4k views
  25. சிங்களத்தின் ரசிகர்களே! சந்தேகத்தைத் தீர்ப்பீர்களா? புலத்தில் அல்லது தாயகத்தில் வாழ்ந்து கொண்டு சிங்கள் அணிக்கு ஆதரவளிக்கும் தமிழர்களே. நீங்கள் படித்தவர்கள். பண்பானவர்கள். புத்திஜீவிகள். எனவே நீங்கள் நீங்கள் சிங்கள அணிக்கு ஆதரவளிப்பதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கக்கூடும் அவற்றை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் பதிவு செய்யும் இந்தப் பதிவு சிங்களத்தை நேசிப்பதை தேசத்துரோகமாகக் கருதும் என் போன்றவர்கள் எங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்வதற்கு உதவக் கூடும். எனவே தயவுசெய்து உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.