Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடாவில் இலங்கையர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று காலை டொரன்டோ பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சீ.பி.சீ செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கனேடிய குடியுரிமையை பெற்ற குறித்த இலங்கையர் தமது இரவு நேர முறைமாற்றல் தொழிலை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் தம்மை, இலங்கையரா? என வினவியதுடன் இலங்கைக்கு திரும்பிச் செல்லுமாறு அச்சுறுத்தியதாகவுதம் தாக்குதலுக்குள்ளான இலங்கையர் குறிப்பிட்டுள்ளார். 20 வயது மதிக்கதக்க சுரேஸ் ஒம்மி என்ற இந்த இலங்கையர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் காவற்துறையினர் விசா…

    • 4 replies
    • 1.1k views
  2. தற்பொழுது ரொறன்ரோவில் வீடுடைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அப்பகுதி மக்கள் அவதானமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று ரொறன்ரோ பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த சில வாரங்களாகவே ரொறன்டோவின் பல பகுதிகளிலும் வீடுடைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக மிட்டவுன் குடியிருப்பு பகுதிகளில் பல வீடு உடைப்புச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் குறித்த பகுதி மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இரவு வேளைகளில் தமது வீடுகளைப் பூட்டி வைப்பதுடன், வெளியே நிறுத்தும் வாகனங்கள் குறித்தும் அவதானமாக இருக்கவும் வேண்டும்’ என…

  3. நோர்வேயில் ’புதிய கடவுச்சீட்டு விதி முறை’ காவல்துறை திணைக்களத்தினால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட, அதேவேளை பல பத்து ஆண்டுகளாக ’நோர்வேஜியக் குடியுரிமை’ பெற்றிருந்தவர்களின் ‘பிறந்த இடம்’ கடவுச்சீட்டிலிருந்து நீக்கப்படுகின்றது. ஆபிரிக்கா (20 நாடுகள்), ஆசியா (10 நாடுகள்) மற்றும் ஐரோப்பாவில் கொசோவோ என 31 நாடுகளைப் பிறந்த நாடாகக் கொண்டுள்ளவர்களின் கடவுச்சீட்டுகள் புதுப்பிக்கப்படும் போது ‘பிறந்த இடம்’ என்று குறிக்கப்படும் இடத்தில் ‘தெரியாது – Unknown’ எனப் பதியப்பட்டிருக்கும் என்ற அறிவித்தலுக்கு பல மட்டங்களிலும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதில் இலங்கையும் உள்ளடங்குகின்றது. ’Group 2– நாடுகள…

    • 0 replies
    • 840 views
  4. கனடாநாட்டை விட்டு வெளியேறுபவர்களின் கடவுச்சீட்டு தரவுகள் சேகரிக்கப்படும். நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் கடவுச்சீட்டு தரவுகளை சேகரிக்கும் முயற்சியை கனடா ஆரம்பிக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் றலவ் குட்டேல் அறிவித்துள்ளார். கடவுச் சீட்டின் இரண்டாம் பக்கத்தில் இடமபெறும் முழுப்பெயர், தேசிய இனம், வழங்கும் அதிகாரிகள் மற்றும் பயணிகளின் பால் போன்றன இவற்றில் அடங்கும். கனடாவிற்குள் நுழைபவர்களின் தரவுகள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுவிட்டன. சேகரிக்கப்படும் இத்தகவல்கள் அம்பர் எச்சரிக்கைக்கு-காணாமல் போகும் குழந்தைகளின் விடயத்தில் சிறந்த பயனளிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. மனித கடத்தல்களை சமாளிக்க உதவும் என அமைச்ச…

    • 0 replies
    • 572 views
  5. நோர்வேயில் வேலையில் இருக்கும் சிறிலங்காவில் பிறந்த தமிழர்களின் சதவீதமானது (70.2%), நாட்டின் சராசரியையும் விட அதிகமானது மட்டுமன்றி, இங்குள்ள நோர்வேஜியாரின் (69.4%) சராசரியையும் விட அதிகமானது. இத்தகவலை நோர்வேயின் மத்திய புள்ளிவிவர திணைக்களம் அறிவித்துள்ளது. இதனை பற்றி கருத்து தெரிவித்த யோகராஜா பாலசிங்கம் "கடின உழைப்பு தமிழரின் கலாசாரம்" என்று கூறினார். எம்மை பொன் குடிவரவாளர்கள் (Golden Immigrants )என்று பத்திரிகைகள் அழைப்பதில் சந்தோசமே. தமிழருக்கு என்று ஒரு குணமுண்டு. தலை நிமிர்ந்து தரணியெங்கும் நிற்போம்.

    • 8 replies
    • 1.5k views
  6. இங்கு புலம் பெயர் நாடுகளில் நாம் பல்வேறு நாட்டவர்களுடன் வாழ்கின்றோம். மற்றய நாட்டவர்களுடன் ஒப்பிடும் போது ஈழத்தமிழர்கள் நாம் சற்று செலவாளிகள் என்பது எனது அனுபவம். நாம் சற்றுத் திட்டமிட்டால் பல வகைகளில் பணத்தை மிச்சப் படுத்த முடியும் என்பது எனது கருத்து (அனுபவம்), எமக்கு சில சேமிப்பு வழிமுறைகள் தெரிந்திருக்கும் அவற்றில் சில நாம் வாழும் நாடுகளுக்கு மட்டுமே உரியவை, சில எல்லோருக்கும் பொதுவானவை இவற்றை நாம் எம்மிடையே பகிர்ந்து கொள்வோம் . எமக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது கூட ஒருவகை தானம் தானே. இங்கு சுவிஸ் பத்திரிகைகளில் பல டிப்ஸ் கள் வருகின்றன அவை பெரும்பாலும் சக்தி சேமிப்பு தொடர்பாக இருக்கும். அவை மிகவும் பயணுள்ளதாக இருக்கும் முடிந்தவரை…

  7. இளங்கலைப் பட்டப்படிப்பிற்காக கனடா வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை, ஐக்கிய இராச்சியத்திற்குச் (UK) செல்லுபவர்களை விட அதிகமாகக் காணப்படுகிறது. சர்வதேச இளங்கலை மாணவர்களை தம்வசம் கவரும் போட்டியில் ஐக்கிய இராச்சியத்தின் பின்னடைவிற்கு அந்நாட்டின் இறுக்கமான குடிவரவு நடைமுறைகளே பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தித்தின் சகல கட்சிப் பாராளுமன்றக் குழு ஒன்றின் ஆய்வின் மூலம் இவ்விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. http://www.cicnews.com/2016/05/canada-popular-uk-international-undergraduates-058022.html#LmeVFdyPpqk6GT1j.99

    • 10 replies
    • 1.1k views
  8. அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கீழ்சபை மற்றும் செனட் சபைகளுக்கான இரட்டைத்தேர்தலில் போட்டியிடும் சில மெல்பேர்ன் வேட்பாளர்கள் மெல்பேர்ன் தமிழ் சமூகத்தினரை சந்தித்துள்ளனர். அழைப்பு விடுக்கப்பட்டவர்களும் முன்பதிவு செய்து கொண்டவர்களும் மாத்திரம் கலந்து கொண்ட இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த சந்திப்பு தமிழ்தாய் வாழ்த்து, அவுஸ்திரேலிய கீதம் என்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் முதலில் லேபர் கட்சியின் வேட்பாளர் ஸ்டெப்னி உரையாற்றுகையில், தனது குடும்பமும் கிறீஸ் நாட்டிலிருந்து இங்கு அகதியாக வந்த குடும்பம் தான். இப்போது இருக்கும் ஆட்சியில் மாற்றம் வேண்டும். அதற்கு லேபர் கட்சியே ஒரு வழி என்றும…

  9. கனடாவின் அதி உயர் கடேற் விருது அமோஸ் டன்ஸ்டன் என்ற இலங்கைத் தமிழ் மாணவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் அண்மையில் இந்த விதை வழங்கி கெளரவித்தார். கனேடிய கடேற் விருதுகளில் அதி உயர் விருதாகக் கருதப்படும் Lord Strathcona Award விருதே, அமோஸிற்கு வழங்கப்பட்டுள்ளது. உடல் பயிற்சி மற்றும் இராணுவப் பயிற்சிகளில் அதி உச்ச திறமைகளை வெளிப்படுத்தும் கடேற் வீரர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது. கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட அமோஸ் தற்போது கனேடிய பிரஜையாவார். மணி டன்ஸ்டன் - மேரி டண்ஸ்டன் ஆகியோரின் சிரேஸ்ட புதல்வாரன அமோஸ் American Football விளையாட்டிலும் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்த…

    • 9 replies
    • 1.7k views
  10. கனடாவில் - தென்மராட்சி மக்களிடையே விமர்சனங்களை உண்டுபண்ணியுள்ள தலைமைத்தெரிவு..!! ஒரு பார்வை. கனடாவிலுள்ள யாழ் - தென்மராட்சி பிரதேச மக்கள் மத்தியில் குறிப்பாக தென்மராட்சி பிரமுகா்கள் வர்த்தகர்கள் பிரதேச நலன்விரும்பிகள் மற்றும் ஊர்ச்சங்கங்களது தலைவா்கள் மத்தியில் பெரும் குழப்பநிலை ஒன்று உருவாகியுள்ளது. இந்த குழப்பநிலைக்கான காரணம் அண்மையில் ஐரோப்பியநாடுகளில் இருந்து கனடா வந்திருந்த வைத்தியர் திரு-புவிநாதன் தலைமையிலான குழுவினரது நல்லெண்ண வருகையும் திட்டங்களும் என தெரியவருகிறது. தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி தொடர்ப்பிலான கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற பலசுற்று சந்திப்புகளும் - அதனை மையமாகவைத்து கனடாவிலுள்ள சிலர…

    • 2 replies
    • 1.2k views
  11. கனடா- விடுமுறைக்கு அரிசோனா சென்ற கீதை தர்மசீலன் குடும்பத்தினர் தங்கியிருந்த ஹொட்டேலில் கடவு சீட்டுக்கள் களவாடப்பட்டு விட்டது. இது குறித்து எயர் கனடாவிடம் தெரிவித்த போது திரும்பி செல்வதற்கான ரிக்கெட்டுக்கள் போதுமென அவர்கள் உறுதியளித்துள்ளனர். திரும்பும் போது அவர்களிற்கு காத்திருந்த சோதனை குறித்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. நால்வர் அடங்கிய குடும்பம் பீனிக்ஸ் விமான நிலைய பாதுகாப்பு பகுதியை கடந்து விட்டனர்.ஆனால் ஏர் கனடா முகவர் இவர்களிடம் போர்டிங் பாசை கையளிக்க சிறிது முன்னர் மற்றொரு முகவர் இவர்களை அணுகி கடவு சீட்டுக்கள் இன்றி கனடிய சட்டத்தின் பிரகாரம் திரும்ப ரொறொன்ரோ செல்வது குற்றமாகும் என தெரிவித்துள்ளார். யு.எஸ் சுங்க மற்றும் பாதுகாப்பு அதிகாரிக…

    • 2 replies
    • 1.1k views
  12. புலம்பெயர் தேசங்களில் இங்கே எமக்கு பல பிரச்சனைகள் உள்ளன வேலை, மொழி, வீடு , சேமிப்பு,பிள்ளைகளின் படிப்பு, பிள்ளைகளின் கல்யாணம் (தகுந்த மணமக்கள் தேடல்), ஆரோக்கியம்,மன அழுத்தங்கள் , புதுப்புது நோய்கள் , ஊரில் உள்ள உறவுகளின் பிரச்சணைகள்............... இப்படி அதன் வடிவங்கள் பல. ஆனால் இங்கே எமது பிரச்சனையை பற்றி , எமது தேவைகளைப் பற்றி எத்தனை பேர் கதைகிறார்கள்....? எமக்குள் உள்ள மன அழுத்தங்களைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? ஆகவே உறவுகளே நாம் இந்தத்திரியில் பின் வரும் விடயங்கள் பற்றி எழுதலாம் என நினைக்கின்றேன். நல்ல வேலை ஒன்றை தேடுவத்ற்குரிய வழிகள்/ நுட்பங்கள் (பெண்களுக்கான) உடல்ரீதியாக கஸ்ட்டம் இல்லாத வேலைகள்/ பகுதி நேர வேலைகளை தேடுதல் வேலைத்தளங்களில் எமக்கு ஏற்பட்…

    • 39 replies
    • 4.7k views
  13. ஒன்ராரியோவின் அதி-சிறந்த தன்னார்வப் பணியாளர் கௌரவிப்பு ஒன்ராரியோவின் Brantford என்ற நகரைச் சேர்ந்த Austin Fowler, என்ற 19 வயதுடைய இளைஞர், Nova Vita என்ற இடத்தில் உள்ள துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண்களிற்கான புகலிடம் ஒன்றில், குழந்தைகளிற்காக செய்த தன்னலமற்ற தன்னார்வப் பணிக்காக விருது வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டின் இளைய தன்னார்வத் தொண்டர்களுக்கான பதக்கத்தைப் பெற்ற 10 பேர்களுள் இவரும் ஒருவராவார். ஓன்ராரியோவின் குடிவரவுத்துறை அமைச்சர் Michael Chan மற்றும் , மாகாண ஆளுனர் Lt.-Gov. Elizabeth Dowdeswell ஆகியோரிடம் இருந்து இவ் விருதை இவர் பெற்றுக் கொண்டார். http://www.brantfordexpositor.ca/2016/06/01/ontario-honour-for-selfless-volunteer

    • 0 replies
    • 578 views
  14. ஸ்காபரோ ரூச்ரிவர் தொகுதிக்கான வேட்பாளராக லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளரைத் தெரிவு செய்யும் தேர்தலில் திரு. பிரகல் திரு வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் மாகாணசபை உறுப்பினர் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட இடைவெளியை நிரப்புவதற்கான இடைத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட ஆறு பேர் முன்வந்திருந்தனர். கட்சியின் சார்பில் அவர்களின் தெரிவிற்கான வாக்கெடுப்பு இன்று ஸ்காபரோ நகரத்தில் இடம்பெற்றது இதன்போது வாக்கெடுப்பில் பிரகல் திரு வெற்றி பெற்றார். கனடியத் தமிழ்க் காங்கிரஸின் இயக்குனர் சபை உறுப்பினர், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இயக்குனர் சபை உறுப்பினராக இருந்தவர். 1700க்கும் மேற்பட்ட வாக்களார்கள் கலந்து கொண்ட இந்த…

  15. சீக்கிய இனத்தவர்கள் உந்துருளி (Motor cycle) செலுத்தும் போது தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்களிக்கக் கோரும் பிரேரணை, ஒன்ராரியோ சட்டசபையில் பல தடவைகள் சமர்ப்பிப்க்கப்பட்டுள்ளது. ஆயினும் இது ஒன்ராரியோவில் இன்னமும் சட்டமாக்கப் படவில்லை. பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் மனிடோபா மாகாணங்களில் இவ்வாறு விலக்களிக்கப்படும் சட்டம் அமுல் படுத்தப்பட்டதை அடுத்து, ஒன்ராரியோவிலும் இச்சட்டமூலத்திற்கு உயிரளிக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மாகாண சட்டசபைத் தொகுதியான Bramalea—Gore—Malton இன் புதிய சனநாயகக் கட்சி சட்டசபை உறுப்பினர் Jagmeet Singh MPP, அவர்கள் , ஒன்ராரியோவின் பெருந்தெரு வாகனச் சட்டத்தில் (Highway Traffic Act) திருத்தங்களை ஏற்படுத்த விழைகிறார். சீக்கியர்கள் உந்துருளி (Motor cycl…

    • 0 replies
    • 458 views
  16. கனேடிய அரசு கனடாவின் குடியுரிமைச்சட்டத்தில் மீண்டும் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற குடிவரவுச் செயற்குழுவின் தவிசாளர் (The chair of the House Immigration Committee) Borys Wrzesnewskyj, MP அவர்களின் கூற்றுப்படி, C-6 என்றழைக்கப்படும் இச்சட்டமூலம் ஜூலை மாதம் முதலாம் திகதியளவில் (July 1), கனடா தினத்தையொட்டி அல்லது அதற்கு முன்னதாக, சட்டமாக அங்கீகரிக்கப்பட உள்ளது. முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களில் முக்கியமானவை, 1. நிரந்தர வதிவாளர்களின் தகுதிகாண் வதிவிடக் காலப்பகுதியானது, ஆறு வருட காலப் பகுதியில் நான்கு வருடங்களாக இருந்து, ஐந்து வருட காலப் பகுதியில் மூன்று வருடங்களாகக் குறைக்கப்படல், 2. சில குறிப்பிட்ட வ…

    • 0 replies
    • 721 views
  17. புலம்பெயர் தமிழரின் அடுத்த தலைமுறையினர் தொலைந்த சந்ததியாகி விடுவார்களா? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறை தொலைந்த சந்ததியினராக மாறிவிடுவார்களா என்ற கேள்வியினை எழுப்பும் பலர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ளனர். இங்கு தொலைந்த சந்ததியினர் என்பது தாயகத்துடன் தொடர்பு அற்றவர்களாக, தமிழ்மொழி பேசமுடியாதவர்களாக, தமிழ்ப் பண்பாடு மறந்தவர்களாக, தமிழர் என்ற ஒரு சமூகமாக ஒழுங்கமைப்படாதவர்களாய், உதிரிகளாக தாம் வாழும் சமூகத்துடன் கரைந்து போபவர்களாக மாறிவிடும் ஒரு நிலையைக் குறிக்கும். புலம்பெயர் தமிழ் மக்களின் தலைமுறையினர் தொலைந்த சந்ததியினராக மாறிவிடக்கூடாது என்ற அக்கறையினை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.ப…

  18. டொரொன்டோவில் குடிவரவாளர்களுக்கான, தொழிற்றுறை, கல்வி, மற்றும் குடியமர்வு தொடர்பான இலவச கருத்தரங்கம் (FREE CAREER EDUCATION & SETTLEMENT IMMIGRANT FAIR) நீங்கள் டொரொன்டோவிற்கு அண்மையில் வந்த குடிவரவாளரா? இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள். ஜூன் மாதம் 8ம் திகதி மு.ப 10.00 மணி தொடக்கம் பி.ப 4.30 வரைக்கும் Metro Toronto Convention Centre (255 Front St. W) என்ற முகவரியில் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந் நிகழ்விற்கு Centennial College, Osgoode Professional Development – YORK University, Humber College ஆகியனவும், இன்னும் பல நிறுவனங்களும் ஆதரவு வழங்குகின்றன.

    • 0 replies
    • 438 views
  19. ஒன்ராரியோவின் மாகாண அரசு கடந்த கல்வி ஆண்டில் புதிய / மறுசீரமைக்கப்பட்ட பாலியல் கல்விப் பாடத்திட்டத்தை பாடசாலைகளில் அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து, பல்வேறு இனக்குழுக்களினால், டொரொன்டோவின் பல பகுதிகளில் பெற்றோர்களால் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது தெரிந்ததே. தமிழ் சமூகத்தைச் சார்ந்த பெற்றோர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் இவ்வெதிர்ப்பு நடவடிக்கைளில் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தவர் செறிந்து வாழும் பகுதியான Thorncliff Park இல், கடந்த வருடம் இவ்வெதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சில பாடசாலைகளில் 90% இற்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை. இது தவிர நகரின் முக்கிய பகுதிகளிலிலும், மாகாண அரசின் சட்டசபை முன்பாகவும் எதிர்ப்பு ந…

    • 0 replies
    • 567 views
  20. Eve 5:42:00 PM A+ A- Print Email சிறிலங்காவின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் பொறுப்புடமைக்கான பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை (Sri lanka - Monitoring Accountability Panel (MAP) , ஜூன் மாத ஐ.நா மனித உரிமைச்சபை கூட்டத் தொடரின் போது வெளிவர இருக்கின்றது. சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நடைமுறைக்கு அமைய ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு முன்னராக இவர்களது அறிக்கை வெளிவர இருக்கின்றது. ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தினை சிறிலங்கா ஏற்றுக் கொண்டிருந்ததோடு, ஆதரவு பல வாக்குறுதிகளை அனைத்துலக சமூகத்…

  21. 28 SHARES PrintReport us0 Comments சென்ற சனிக்கிழமை 21 May பழைய மாணவர் சங்கம் ஒன்றால் ஒரு நிகழ்ச்சி நடை பெற்றது. அந்த நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி தெளிவுகள் இல்லாமையால் அந்த கல்லூரியின் பழைய மாணவர் ஒருவர் தமிழ்வின் இணையத்தை தொடர்பு கொண்டிருந்தார். அவருடைய கேள்விகள் முறைப்படி அமைந்தமையால், அக்கேள்விகளை மக்களிடத்தே கொண்டு செல்வது ஒரு ஊடகத்தின் பொறுப்பு என்பதை அறிகிறோம். அதனால் அவருடைய கேள்விகளையும் கருத்துக்களையும் பிரசுக்கின்றோம். லண்டனில் உள்ள Hartley கல்…

    • 3 replies
    • 1.1k views
  22. நுண்ணறிவு தேர்வில் இலங்கை சிறுமி சாதனை நுண்ணறிவில் சிறந்த விஞ்ஞானியான அல்பட் என்ஸ்டைனின் சாதனை இலங்கை வம்சாவளி சிறுமியான நிஷி உக்லேயால் முறியடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மென்சா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட நுண்ணறிவுத் தேர்வில் 10 வயது சிறுமியான நிஷி உக்கலே கலந்துகொண்டு சாதனையை முறியடித்துள்ளார். குறித்த இச்சிறுமி தனது முதலாவது தேர்வில் 162 புள்ளிகளையும் இரண்டாவது தேர்வில் 142 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளார். இவரின் அறிவுத்திறமையைக்கண்டு வியந்த அவ் அமைப்பினர் இச்சிறுமியை அவர்களின் அமைப்பில் இணைத்துக்கொண்டுள்ளனர். இச்சிறுமி அல்பட் அய்ன்ஸ்டைனை விட 2 புள்ளிகள் அதிகமா…

    • 2 replies
    • 1k views
  23. 'ஆனாரூனா' என்று மதிப்பாக அழைக்கப்படும் மரியாதைக்;குரிய அமரர் நா. அருணாசலம் ஐயா அவர்களின் மறைவு, தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழினப்பற்று, மொழிப்பற்று மிக்கவரும் தமிழினத்தின் மேம்பாட்டுக்காக தனது செல்வம், உழைப்பு, உணர்வு எல்லாவற்றையும் அயராது செலுத்திய ஐயா அவர்களின் மறைவைக் கேள்வியுற்று ஆழ்ந்த துயரம் கொண்டுள்ளோம் எனவும் அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …

  24. லண்டனில் TCC இன் வன்முறையுடன் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நிகழ்வு BTF இன் நிகழ்வு லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இரு வேறு போட்டி அமைப்புக்களால் ‘கொண்டாடப்பட்டது’. வழமையாக பீ.ரீ.எப்(BTF) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும், ரீ.சீ.சீ (TCC) மாவீரர் தினத்தையும் நடத்துவதுண்டு, இந்த முறை முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை பீ.ரீ.எப் இற்குப் போட்டியாக ரீ.சீ.சீ ஏற்பாடு செய்திருந்தது. அருகருகான இரு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்பதாகவே பீ.ரீ.எப் இன் மேடை அமைந்திருந்த பகுதிக்குள் புகுந்த ரீ.சீ.சீ உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தனர். பீ.ரீ.எப் இன் மேடையை ரீ.சீ.சீ கலைக்க முற்பட்ட போது அங்கு குழுமியிருந்த மக்களின் தலையீட்டால்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.