வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
கனடாவில் தமிழர்கள் மீது மறைமுகத் தாக்கத்தை விளைவிக்கக்கூடியதாக ஏற்படுத்தப்பட்ட நிறவாதப் பிரச்சாரத்தை மிகவும் சாதுரியமாகத் கனடா வாழ்த் தமிழர்கள் முறியடித்தனர். தமிழர்கள் ரொறன்ரோவின் பெரும்பாகத்தில் தான் வாழ்கிறார்கள். அவர்களது 12 ஆயிரம் அங்கத்துவமும் ஒரு சிறுபகுதியை மையப்படுத்தியே உள்வாங்கப்பட்டது என ஒன்றாரியோ புரோக்கிரசிவ் கண்சவேட்டிவ் கட்சிக்கான தலைவர் தேர்தலில் பிரச்சாரமொன்று மேற்கொள்ளப்பட்டது. காலாகாலத்திற்கு தமிழர்கள் மீதான இவ்வாறான துணிந்த குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது மற்றைய இனங்கள் மறைமுக எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான துணையாக இருந்து வந்தன. எனினும் இந்த முறை மேற்கொள்ளப்பட்ட இப் பிரச்சாரத்தை தமிழர்கள் தரவுகளுடன் முறியடித்தனர். கனடிய மனிதவுரிமை மையத்தின் [ www.c…
-
- 0 replies
- 452 views
-
-
தமிழ்த் தேசியத்தின் சொத்துக்கு யேர்மனியில் வெள்ளிவிழா: [Wednesday 2015-04-15 07:00] யேர்மனியில் வாழும் 6000 க்கு மேற்பட்ட தமிழ்ப்பிள்ளைகளுக்கு 124 தமிழாலயங்களை அமைத்து 1100 ஆசிரியர்கள் ஊடாக வாரம் தோறும் தமிழ் மொழியையும் பண்பாடுகளையும் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 25 வது அகவை நிறைவை 11.04.2015 சனிக்கிழமை கனோவர் நகரிலும் மறுநாள் 12.04.2015 ஞாயிற்றுக்கிழமை வால்ட்றோப் என்ற நகரிலும் சிறப்பாக ஆரம்பித்துள்ளது. மண்டபம் நிறைந்த மக்களுடன் மாமனிதர் இரா . நாகலிங்கம் அவர்களின் அரங்கத்தில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு கல்விப் பணியின் பலனை அறுவடை செய்யும் அற்புதமான நிகழ்வு அரங்கேறியது . தமிழ்க் கல்விக் கழகத்தின் கால் நூற்றாண்டு அகவை நிறைவு விழா அதன் பரிண…
-
- 8 replies
- 2k views
-
-
April 13, 2015 அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்தக் கோரும் கையெழுத்துப் போராட்டம் சிங்கள மொழியிலும் முன்னெடுப்பு ! 0by tmdas5@hotmail.com • HRC இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரும் கையெழுத்துப் போராட்டம் சிங்கள மொழியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபையின் விசாரணைக்குழு அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ற் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கபடும் நிலையில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து பரிந்துரைக்குமாறு கோரி ஐ.நாவை நோக்கிய பத்து இலட்சம் கையெ…
-
- 0 replies
- 344 views
-
-
'நீங்கள் வாங்கும் தங்கம்... தங்கமே இல்லை..!'- அதிர்ச்சி தகவல் ''ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து தங்கம் வாங்கும் நுகர்வோரே, சற்றே சிந்தியுங்கள். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற தரமான, சரியான எடையுள்ள தங்கம் கிடைக்கிறதா? என்று பார்த்தால் 99.99 சதவிகிதம் இல்லை.." என்று அதிர வைக்கிறார், சென்னையைச் சேர்ந்த கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் தேசிகன். சென்னை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ''உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 600 டன் அளவுக்கும் மேல் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. காரணம், மற்ற நாட்டினரைக் காட்டிலும் நம் நாட்டில் ஏமாளிகள் அதிகம் என்ற ஒன்று மட்டுமே. தங்கம் வாங்காம…
-
- 1 reply
- 808 views
-
-
இருவர்களிற்கிடையேயான போட்டியாக மாறியுள்ள ஒன்றாரியோ மாகாண புரோகிரசிவ் கண்சவேட்டிவ் கட்சியின் தலைவர் தெரிவிற்கான போட்டியில் தமிழர்களை வைத்து மேற்கொள்ளப்படும் காழ்ப்புப் பிரச்சாரம் பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கனடியத் தமிழர்களை நோக்கி காலகாலமாக பிரயோகிக்கப்படும் நிறவெறுப்புப் பிரச்சாரங்களினை கடந்த காலங்களில் தமிழர்கள் முறியடிக்க முடியாதிருந்தனராயினும், இந்தத் தடவையுடன் இவ்வாறான நிறவெறுப்பைத் தோற்றுவிக்கக்கூடிய அல்லது இனக்குறியீட்டுப் பிரச்சாரத்தை முறியடிப்பதெனத் தமிழர்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர். மேற்படி கட்சியின் தலைவரிற்கான போட்டி மும்முனைப் போட்டியாக இருந்ததென்பதும், மூன்றாவதாக இருந்த வேட்பாளர் திரு. பற்றிக் பிரவுனிற்கு தனது ஆதரவினைத் தெரிவித்து இந்த போட்டியிலிரு…
-
- 0 replies
- 692 views
-
-
ரொரன்ரோவில் சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா ரொரன்ரோவில் சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழாகனடியத் தமிழர் மற்றும் ஐரோப்பியத் தமிழர் திரைப்படங்கள் பங்குகொள்ளும் திரைப்பட விழாவொன்றை கனடியத் தமிழ்த் திரைப்பட மேம்பாட்டு அமையம் மற்றும் சுயாதீன கலை, திரைப்படக் குழுமம் இணைந்து ஒழுங்குசெய்துள்ளது. இவ்விழா கனடியத் தமிழர் திரைப்படங்களுக்குள் போட்டி இடம்பெற்று சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணைநடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த திரைக்கதையாசிரியர், சிறந்த பாடகர், சிறந்த பாடகி, சிறந்த இசையமைப்பாளர் என பதினெட்டு பிரிவுகளுக்கான விருது இவ்வமைப்புகளால் மே மதம் 2-ம் திகதி பிற்பகல் 6 மணிமுதல் இரவு 11.30வரை நடத்தப்படும் சர்வதேசத் திர…
-
- 3 replies
- 602 views
-
-
கடந்த கோடை காலத்தின் போது எனது அண்ணனின் மகன் சிட்னி அவுஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்தார்.வந்தவரை கூட்டிக் கொண்டு திரியும் போது ஒரு நாள் கைதொலைபேசியில் போட்டு வைத்திருந்த Waze என்னும் ஜிபிஎஸ் இல் இருந்து அரை மைல் தூரத்தில் பொலிஸ் என்று சொன்னது தான் தாமதம் அமைதியாக இருந்தவர் ஏதோ கலை வந்த ஆட்களைப் போல திடீர் என்று எழும்பி சித்தப்பா எங்கே இருந்து இந்த அறிவித்தல் வந்தது எப்படி வந்தது என்று கேட்டு அமர்க்களப்படுத்தி விட்டார். இப்படி ஒன்றைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.உலகத்திலேயே வாகனத்துக்கு கூடிய பணம் அறவிடும் இடம் சிட்னி தான்.எமது வீட்டுக்கு உண்மையிலேயே இரண்டு வாகனம் தேவை கட்டுற பணம் கூட என்பதால் ஒன்றையே வைத்து பாவிக்கிக்கிறோம்.ஒரு வருடத்துக்கு பதிவு செய்யவே ஆயிரக் கணக்…
-
- 12 replies
- 1.3k views
-
-
சவுதி அரேபியா கலை மற்றும் கலாச்சார மையம், தம்மாம், சவுதி அரேபியா நடத்திய நான்கு நாள் கவிஞர்கள் மாநாட்டில் திருக்குறளை அரபி மொழியில் அறிமுகப்படுத்தி பேசியுள்ளார் முனைவர் ஜாகிர் உசேன். திருக்குறளை அரபு உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. நம் தாய் நாட்டுச் சொந்தங்கள், நண்பர்கள் அதிக அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அரபுக் கவிஞர்கள் வள்ளுவரின் வார்த்தைகளை மெய்மறந்து ரசித்தார்கள். இது ஓர் அற்புதமான அனுபவம்” என்று கூறியுள்ளார் முனைவர் ஜாகிர் உசேன். இப்படியான சிறந்த முன்னெடுப்பை மேற்கொண்ட முனைவர் ஜாகிர் உசேன் அவர்களுக்கு உலகத் தமிழர்களின் சார்பில் நம் பாராட்டுகளை தெரிவிப்போம். http://lankaroad.net
-
- 5 replies
- 1.1k views
-
-
பிரித்தானியா - உலக கிண்ண சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட போட்டியில் கனடிய தமிழர் அணி. [Thursday 2015-04-02 20:00] எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4ம் ,5ம் திகதிகளில் பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் ,உலக கிண்ண சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ,இலங்கை உட்பட பல நாட்டு வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். கனடா நாடு சார்பாக 11 போட்டியாளர்கள் ,இந்த உலக கிண்ண போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் , உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால் நடாத்தப்படும் 3 வது உலககிண்ண போட்டி எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4ம் ,5ம் திகதிகளில் பிரித்தானியாவில் உள்ள "The National Badminton Centre" Bradwell Road, Loughton, Milton Keynes, MK8 9 என்னும் பிரமாண்டமான அரங்கில் நடைபபறவுள்ளது. …
-
- 0 replies
- 448 views
-
-
என் நண்பன் ஒருவன் யாழ்பாணத்தில் காணி விசாரிச்சு இருக்கான். அவன் அங்கேயே வாழும் ஒரு அரசாங்க உத்தியோகம் பார்ப்பவன். அவன் விசாரிச்ச காணி 1 ½ மடங்கு விலைக்கு ஒரு UK காரன் வேண்டி போட்டானாம். அந்த காணிக்கு UK காரன் கொடுத்த விலை மிக அதிகம். இனி அந்த பக்கம் ஒரு உள்நாட்டு காரன் காணி வேண்ட ஏலாது. UK காரனை எனக்கு தெரியும். அவன் காசை என்ன செய்யுறது என்று தெரியாமல் ஓடி ஓடி காணி வாங்குறான். புலம் பெயர் தமிழா! நீ செய்வது சரியா? நீ அங்கு இருக்க போவதும் இல்லை, ஏன் இந்த வம்பு?
-
- 19 replies
- 2.3k views
-
-
இங்கு ஐரோப்பாவில் நாளை வசந்த கால நேர மாற்றம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் முன்னகர்த்தப்பட்டு 3 மணியாக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்பவர்கள் நேரமாற்றத்தினைக் கவனத்தில் எடுத்து ஒரு மணித்தியாலம் பிந்திச் செல்வதனைத் தவிருங்கள். அமெரிக்கா, கனடா , அவுஸ்திரேலியாவில் எப்போது நேரமாற்றம்?
-
- 8 replies
- 940 views
-
-
சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜா வின் வாழ்க்கை அவரைச் சுழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்து கொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யான வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள் ! இவ்வாறு தான் அனுஜாவின் வாழ்க்கையும், கேள்விக்குறியாகி இறுதியில் கட்டிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன ? அன…
-
- 27 replies
- 2.8k views
-
-
பல்லாயிரம் மக்கள் மத்தியில் நடைபெற்ற மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களின் இறுதி வணக்கநிகழ்வு தமிழ் மொழியையும் தமிழின விடுதலையையும் தனது இரு கண்களாக கொண்டு யேர்மனியில் பேரன் , பேர்த்தி கண்ட தமிழாலயங்கள் வளர்ச்சி முதல் தனது இறுதி மூச்சு வரை உழைத்த மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களின் இறுதி வணக்கநிகழ்வு பல்லாயிரம் மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது . புலம்பெயர் தேசமெங்கும் தமிழ் மொழியும், கலையும், பண்பாடும், வரலாறுமே எமது இனத்தைக் தாங்கி நிற்கும் என்பதை எமது எதிர்காலச் சந்ததிக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் எடுத்தியம்பி தனது இறுத்திக்காலம் வரை உழைத்த ஆசானுக்கு யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இறுதி மரியாதை செலுத்தும் முகமாக வித்துடல் தாங்கி வர…
-
- 1 reply
- 782 views
-
-
பிரித்தானியாவில் தஞ்சமடைந்த அகதி ஒருவரை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தும் திட்டம் இறுதி நிமிடத்தில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கண்ணன் காளிமுத்து எனும் 36 வயதான இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் காவல்துறையின் முன்னாள் உறுப்பினராவார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் குடும்ப உறவுகளைப் பிரிந்த இவர் அரசாங்கப் படையினரிடம் சரணடைந்ததாக வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. இங்கிலாந்துக்கு தப்பிச் செல்லும் முன்னர் கண்ணன் காளிமுத்து பல்வேறு சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார். மேலும் உயர் பாதுகாப்புடைய பிரித்தானிய குடிவரவு அகற்றுதல் மையத்தில் முன்னதாக இவர் இரண்டு முறைகள் தற்கொலை முயன்றதாகவும் தெ…
-
- 2 replies
- 925 views
-
-
சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது ! • மக்களை மையப்படுத்திய நீதிக்கான இயக்கம் • சர்வதேசக் குற்றங்களைச் செய்தது சிறிலங்கா அரசே தான் • ஒரு உள்நாட்டு விசாரணை அமைப்புக்கான அரசியல் சூழல் இல்லை இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மன்றத்தை வலியுறுத்தி நாடுகடந்த தமழீழ அரசாங்கம் ஒரு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது. ஒரு மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்துக்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள …
-
- 10 replies
- 1.4k views
-
-
குப்பிழான் கேணியடியை பிறப்பிடமாக கொண்ட நடராஜா சிவரூபன் என்ற இளைஞர் பிரித்தானியா பேர்மிங்கம் நகரில் உள்ள வாகன தரிப்பிடத்தில் கடந்த 27ம் திகதி இரவு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். குறிப்பிட்ட வாகன தரிப்பிடத்தில் இரவு நேரத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருக்கமாட்டார்கள். அந்த வாகன தரிப்பிடத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் காலையில் தனது கடமைக்கு திரும்பும் போது வாகன தரிப்பிடத்தில் ஒருவர் விழுந்து கிடந்தார். இதனை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காவல்துறையையும், அவசர சிகிச்சை பிரிவையும் சம்பவ இடத்திற்கு அழைத்தார். அவசர பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்கு முன்னராகவே அவர் இறந்து விட்டார். ஆரம்பத்தில் இதை ஒரு சாதாரண மரணமாகவே பொலிசா…
-
- 0 replies
- 720 views
-
-
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் முக்கிய அறிவித்தல்! நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு, முக்கிய அறிவித்தல் தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர் திரு.இரா.நாகலிங்கம் ஜயா அவர்கள் இயற்கை மரணமடைந்துள்ளார். யேர்மனியில் தமிழ் மொழி கற்பித்தலுக்கு வித்திட்ட முதல்வர். தமிழாலயங்களின் கல்விப் பணியின் பொறுப்பாளராக உழைத்த உத்தமன். தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளராக வழிகாட்டிய உலகப் பெரும் தமிழன். ஐயாவின் இழப்பால் தமிழ்க் கல்விக் கழகக் குடும்பம் துயரில் ஆழ்ந்துள்ளது. அவரின் இறுதி வணக்க நிகழ்வு பற்றிய விபரங்கள் இணையத்தளங்களில் உள்ளது. அந்நிகழ்வில் உங்கள் தமிழாலயத்தின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றார்கள், மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து ஜ…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் யேர்மனிய நண்பர்கள் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை தடுத்து நிறுத்த ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும் எனும் கோரிக்கையோடு , யேர்மனிய இளையோர்கள் குரல் கொடுக்கின்றனர் . அவ் வகையில் எதிர்வரும் மார்ச் 16 திகதி நடைபெற இருக்கும் மாபெரும் பேரணிக்கு தமிழர்கள் அனைவரும் தமது தாயக உறவுகளை நெஞ்சில் பதித்து நீதி கேக்க ஜெனீவா செல்ல வேண்டும் என்று அறைகூவல் விடுகின்றனர் . http://www.pathivu.com/news/38447/57//d,article_full.aspx
-
- 0 replies
- 617 views
-
-
Paul Kalanithi, MD, was a Stanford neurosurgeon who was diagnosed with lung cancer in his mid-30s. He wrote a popular op-ed for The New York Times in early 2014 on confronting mortality. Here, he reflects on his changing perception of time as doctor, patient and new father. He died at 37 on March 9. The Stanford community mourns his loss. ஒரு இளவயது நரம்பியல் வைத்திய நிபுணர் சுவாசப்புற்று நோய்காளானார்....ஆங்கிலத்தில் அவரின் குரலிலேயே.... http://stanmed.stanford.edu/2015spring/before-i-go.html http://med.stanford.edu/news/all-news/2015/03/stanford-neurosurgeon-writer-paul-kalanithi-dies-at-37.html
-
- 0 replies
- 676 views
-
-
28ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், மார்ச் திங்கள் 16ஆம் நாள் பிற்பகல் 2 மணிக்கு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அனைவரும் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு அணிதிரண்டு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். புலம்பெயர் நாடுகளெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் பெருந்திரளாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டப்பேரணியை நடாத்திக் கொட்டொலிகளை எழுப்பவுள்ளனர். பெப்ரவரித் திங்கள் நான்காம் நாள் பிரித்தானியாவில் ஆரம்பமாகிப் பல ஐரோப்பிய நாடுகளூடாக மேற்கொள்ளப்படும் விடுதலைச்சுடர் பயணமும் அந்நாளில் ஜெனீவாவில் நிறைவடையவுள்ளது. ஜெனீவாவில் நடைபெற உள்ள இம்மாபெரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள மக்களுக்காக பிரித்தானியாவிலிருந்து பேரூந்துகள் புறப்பட ஏற்பாடு…
-
- 0 replies
- 2.4k views
-
-
பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு மிட்லேன்ட் - பொலேசில் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த மார்ச் 5ம் திகதி அடிகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் மாலை உயிரிழந்தார். உயிரிழந்த நபர் இலங்கை பிரஜையான 48 வயதுடைய அருணாச்சலம் அருணோதயன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரதேச பரிசோதனை அறிக்கையில் இவர் தாக்குதலுக்கு உள்ளாகியே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொலை சந்தேகத்தின் பேரில் பெட்வேர்த் பகுதி விடுதி ஒன்றில் பணிபுரியும் கிரிதாஸ் சிறிஸ்கந்தராஜா என்பவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் பேர்மிங்…
-
- 1 reply
- 1.7k views
-
-
நான் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு ஒன்ராறியோவின் முதல்வராகிவுடன் நிச்சயமாக தமிழினத்தை கனடாவில் ஏனைய இனங்கள் போல அது பெற வேண்டிய அந்தஸ்த்தைப் பெற வைப்பேன் என திரு. பற்றிக் பிரவுன் தெரிவித்தார். இன்று தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய போது மேற்படி கருத்தைத் தெரிவித்த திரு. பற்றிக் பிரவுன் அவர்கள், எனக்காகச் சேர்க்கப்பட்ட 41 ஆயிரம் அங்கத்துவர்களில் 15 ஆயிரம் பேர் தமிழர்கள். இன்று நீங்கள் செய்த ஒரு காரியத்தால் கனடாவின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் உங்களின் மீது பார்வையைத் திருப்பியுள்ளார்கள். கனடிய மனிதவுரிமை மையம் மற்றைய எல்லா அமைப்புக்களும் ஒண்றினைத்து “பற்றிக்கிற்கான தமிழர்கள்” என செயலாற்ற வந்த போது இவ்வாறானதொரு வெற்றி சாத்தியம் என்பதை என்னால் நினைத்துக்…
-
- 0 replies
- 418 views
-
-
-
- 25 replies
- 3.2k views
-
-
முள்ளிவாய்காலில் இருந்து நல்லூர் வரை நீதிக்கான நடைப்பயணம் 574f2dae7c13dab28cf68b32ccd4369a
-
- 2 replies
- 630 views
-
-
எம் உரிமைக்காக ஐ நா நோக்கிய பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக உருவாக்கப்பட்ட பாடல்! பாடலாசிரியர் ..ஈழப்பிரியன். குரல் ........... விஜயன், நாதன், சுலோஜன், ஈழப்பிரியன், அஸ்வினி. இசை ..............சேகர் இரா. படக்கலவை ..ஜனனம் . வெளியீடு .... கலை பண்பாட்டுக்கழகம். https://www.youtube.com/watch?v=8ieYETx13dM
-
- 0 replies
- 982 views
-