நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
803 topics in this forum
-
வீழ்ந்து போனவர்களின் ஒலிக்கும் குரல்கள் டிசே தமிழன் -'வன்னி யுத்தம்' என்கின்ற நேரடிச் சாட்சியின் நூலைப் பற்றிய பதிவு- 1. யுத்தங்களில் நியாயமாய் நடந்த போர்கள், நியாயமற்று நடந்த போர்கள் என்கின்ற வரலாறே இல்லை. போர் என்பது எப்போதுமே அழிவுகளேயே தரக்கூடியயையே. போர் ஒன்றில் வென்றவர்களாய் இருந்தாலென்ன தோற்றவர்களாய் இருந்தாலென்ன யுத்தத்தின் நினைவுகளிலிருந்து அவ்வளவு எளிதில் எவருமே வெளியேறி விடமுடியாது. வென்றவர்கள் தம் வெற்றிக்களிப்பின் போதையில் அது நிகழ்த்திய அழிவுகளை மறந்தமாதிரி ஒரு நாடகத்தை நிகழ்த்தலாம். ஆனால் அது உண்மையல்ல, ஒரு மாயத் தோற்றம் மட்டுமே. தோற்றவர்கள் இந்த வலிகளோடும் வடுக்களோடும் மிஞ்சியுள்ள காலங்களை வாழத்தான் வேண்டியிருக்கின்றது. 'வன்னி யுத்தம்' என்…
-
- 9 replies
- 708 views
-
-
சாட்சியின் மீதி? த. அகிலன் ‘சிலுவை யேசுவைச் சிலந்தி சூழ்ந்தது பிள்ளையார் பலிபீடத்தில் களிம்பு படர்ந்தது மாமர ஊஞ்சல்கள் இற்று வீழ்ந்தன சருகடர்ந்த முற்றத்தில் பாம்புகள் ஊர்ந்தன’ சுமார் பத்து வருடங்களிற்கு முன்பு, நான் கருணாகரனைச் சந்தித்த முதலாவது நாள். கருணாகரன் இடம்பெயர்ந்திருந்த அகதி வாழ்வின் கூடாரத்தில் வைத்து “ஹம்சத்வனி”யின் இந்த வரிகளை என்னிடம் சொன்னார். ஏதோ சின்னப்பெடியன் முதல் கவிதையை அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகைக்கு அனுப்பிவிட்டேன் என்ற காரணத்தினால் அதையெல்லாம் மதித்து தன்னைச் சந்திக்கச் சொல்லியனுப்பி, சந்தித்த வேளையில் கவிதை குறித்தும், வாசிப்பின் திசைகள் குறித்த அறிமுகங்களையும் கொடுத்து, நிறையப் புத்தகங்களைத் தந்து, இலக்கிய நண்பர்களை அ…
-
- 1 reply
- 862 views
-
-
போக முடியாமல் இருக்கு ,அங்கு வேறு ஒரு விடயமும் இருக்கு என்று கேள்வி .
-
- 2 replies
- 938 views
-
-
http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1369:2013-03-07-01-08-26&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29
-
- 5 replies
- 841 views
-
-
மார்க்சீம் கோர்க்கியின் "தாய்" நாவலிலிருந்து... (முதலாம் பாகம் அத்தியாயம் 24) "இது எனக்குப் புரியவே மாட்டேனென்கிறது!" "எது?" என்று கேட்டான் ஹஹோல். " நாம் உணவுக்காகக் கால்நடைகளைக் கொல்கிறோம். அதுவே மோசம். காட்டு மிருகங்களால் ஆபத்து வருமென்று தெரிந்தால் அவற்றையும் நாம் கொன்று தீர்கிறோம். அது சரிதான். அது எனக்குப் புரிகிறது. ஒரு மனிதன் தன்னுடைய சகமனிதர்கள் மீது காட்டு மிருகத்தைப்போல் பாய்ந்து கடித்துத் தின்ன முனைந்தால், அவனை நாம் மிருகத்தைக் கொல்வதுபோல் கொன்று தீர்க்கத்தான் செய்வேன். ஆனால் இவனை மாதிரி அனுதாபத்திற்குரிய ஒரு ஜந்துவைத் தீர்த்துக் கட்டுவெதென்றால்? இவனை எப்படித்தான் ஒருவன் தாக்க நினைப்பான்?" ஹஹோல் தோள்களைக் குலுக்கிக் கொண்டான். "இவனும் காட்டு மிருக…
-
- 18 replies
- 4.8k views
-
-
தர்மினி பிப்ரவரி 17, 2013 பன்னிரண்டு சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு பிரண்டையாறு. கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மெலிஞ்சிமுத்தன் ஒருகவிஞரும் ஓவியங்களை வரைவதில்ஆர்வமுடையவரும்கூட. ஏற்கனவே ‘சிதையும் என்னுள்’ -’என் தேசக்கரையோரம்’ -’முட்களின் இடுக்கில்’ ஆகிய கவிதைத் தொகுதிகளும் கனவுகளின் தொகுப்பென ‘வேருலகு’ பிரண்டையாறைத் தொடர்ந்து இந்த வருடம் ‘அத்தாங்கு ‘ என்ற நாவலும் மெலிஞ்சிமுத்தனால் எழுதப்பட்டுள்ளன. 1990 இல் பெரும் எடுப்பில் தீவுப்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்ட சிறீலங்கா இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளினால் ஊர்காவற்றுறையின் மெலிஞ்சிமுனைக்கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து ஓர்அகதியாக அலைந்து இறுதியாக ஒரு நாட்டைக் கண்டு விட்ட போதும் தன்நினைவுகளில்,ஏன…
-
- 3 replies
- 891 views
-
-
புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்-கே.எஸ்.சுதாகர் [புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நாவல்கள் எனும்போது அவர்கள் தாயகத்தில் இருக்கும்போது எழுதி வெளியிட்ட நாவல்களை இங்கு நான் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் இங்கே குறிப்பிடும் எல்லா நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் தரவிற்காக அவற்றையும் சேர்த்துள்ளேன்.] உலகில் எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், சமகால தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றன. காலத்துக்குக் காலம் மக்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் தமிழர்கள் படைக்கும் படைப்புகளை ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ எனவும் ‘ப…
-
- 3 replies
- 2.4k views
-
-
இன்னும் சொல்லாதவை - தெணியான் முருகபூபதி நாவலாக எழுதியிருக்கவேண்டிய ஒரு படைப்பு சுயவரலாறாகியுள்ளது. தெணியான் ஒரு கதைசொல்லி. சிறுகதைகள்ää நாவல்கள் உட்பட சில தொடர்களும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். அவரது எந்தவொரு படைப்பை உன்னிப்பாகப்பார்த்தாலும் அவர் ஒரு சிறந்த கதைசொல்லி என்ற முடிவுக்கே வாசகர்கள் வந்துவிடுவார்கள். இன்னும் சொல்லாதவை நுலைப்படித்தபோது எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவர் தமிழ்நாட்டின் கரிசல்கட்டுமைந்தன் கி.ராஜநாராயணன். அவரும் சிறந்த கதைசொல்லி. அத்துடன் பிரதேச மொழிவழக்குகளை அநாயசமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லவல்லவர். தெணியான் எங்கள் தேசத்தின் வடமராட்சிக்கதைசொல்லி. இந்நூலின் பதிப்புரையில் பின்வரும் பந்தி எனக்கு முக்கியத்துவமாகப்பட்டது. ஒரு எழுத்தாளன…
-
- 0 replies
- 698 views
-
-
ஆங்கில மாயை, நலங்கிள்ளி, விஜயா பதிப்பகம், டிசம்பர் 2012, பக்கம் 160, விலை ரூ. 80 நலங்கிள்ளியின் மின்னஞ்சல் முகவரி enalankilli@gmail.com விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கிறார் நலங்கிள்ளி. ‘தமிழ்மொழியில் ஆங்கிலக் கலப்பு சரிதானா, கூடாதா?’ என்பதுதான் தலைப்பு. பிற மொழி கலப்பதால் தமிழ் மொழி ஒன்றும் அழிந்துவிடாது என்பதாக மீனா கந்தசாமி, இளங்கோ கல்லாணை ஆகிய பிறர் பேசுகிறார்கள். மக்கள் தொலைக்காட்சியில் ‘புதுமைக்குத் தடையாகுமா தமிழ்?’ என்ற தலைப்பில் ஓர் உரையாடலில் கலந்துகொள்கிறார் நலங்கிள்ளி. அதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் என்ற இதழில் ‘ஆங்கிலத்தின் முற்போக்கு: பகுத்தறிவா மூடநம்பிக்கையா?’ என்ற தலைப்பில் 12 இதழ்களுக்கு தொடர் கட…
-
- 2 replies
- 1.3k views
-
-
நான் மரணித்திருக்க வேண்டும் இயக்குனர் சேரன் வெள்ளி, 18 ஜனவரி 2013 04:56 "எம் இல்லங்கள் தீக்கிரையானது எம் குழந்தைகள் மடிந்தனர் எம் பெண்கள் கற்பிழந்தனர் எம் இளைஞர் சுடப்பட்டனர் எம் தேசம் அழிக்கப்பட்டது நாங்கள் எம் மொழியைப் பேசியிருக்கக் கூடாது'' ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தமிழீழத்தில் ஒரு பெரும் போர் நடந்து முடிந்தது. போரின் முடிவில் லட்சக்கணக்கானோர் அகதியாக்கப்பட்டு புலம்பெயர்ந்தனர். லட்சக்கணக்கான குழந்தைகளும், தாய்மார்களும் பெரியோரும் இறந்து போனார்கள். ஆயிரக்கணக்கான போராளிகள் செத்து மடிந்தனர். ஒரு போரினால், இவ்வளவு துயரங்கள் நடக்கும் என்பது வரலாறு நமக்களித்திருக்கின்ற படிப்பினை. ஆனால் எதற்காக இந்தப்போர் நடந்தது? உலகம் தோன்றிய காலந்தொட்…
-
- 8 replies
- 1.7k views
-
-
Book Description Publication Date: February 22, 2013 The tropical island of Sri Lanka is a paradise for tourists, but in 2009 it became a hell for its Tamil minority, as decades of civil war between the Tamil Tiger guerrillas and the government reached its bloody climax. Caught in the crossfire were hundreds of thousands of schoolchildren, doctors, farmers, fishermen, nuns and other civilians. And the government ensured through a strict media blackout that the world was unaware of their suffering. Now, a UN enquiry has called for war-crimes investigations. Those crimes are recounted here to the wider world for the first time in sobering, shattering detail. http://www…
-
- 0 replies
- 689 views
-
-
11 ஜனவரி முதல் 23 ஜனவரி வரை சென்னை புத்தகக் கண்காட்சி நடக்கவுள்ளது. இம்முறை புதிய இடம். நான் பார்க்கும் மூன்றாவது இடம் இது. பல ஆண்டுகள் காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் நடந்துவந்த புத்தகக் கண்காட்சி, சில ஆண்டுகளுக்குமுன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி வளாகத்துக்குச் சென்றது. இப்போது சென்னை மெட்ரோ வேலைகள் நடந்துகொண்டிருப்பதால் போக்குவரத்தைச் சமாளிக்கமுடியாது என்ற காரணத்தால் அந்த இடம் இருந்தாலும் மாநகரக் காவல்துறையிடம் அனுமதி கிடைக்கவில்லை. எனவே நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரித் திடலில் இம்முறை கண்காட்சி நடக்க உள்ளது. இதுவரையில் கிடைத்த இடங்களிலேயே பிரம்மாண்டமான இடம் இதுதான். ஊருக்கு மிக நடுவில், எங்கிருந்துவேண்டுமானாலு…
-
- 15 replies
- 1.8k views
-
-
தமிழகத்தில் திருச்சி வேலுச்சாமி அவர்களால் பல இன்னல்களுக்கு மத்தியில் வெளிக்கொண்டுவந்த புத்தகமான ராஜீவ் படுகொலை தூக்கு கயிற்றில் நிஜம்” புத்தகம் 20.01.2013 ஞாயிற்றுக்கிழமை லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள 338 London Road, Mitcham, London CR4 3UD எனும் முகவரியில் வெளியிடப்பட உள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க பல புலம்பெயர் முக்கியஸ்தர்கள், ஊடகவியளாலர்கள்,ஆய்வாளர்கள் என பலர் கலந்துகொண்டு இப்புத்தகத்தைப் பற்றி உரையாற்ற உள்ளார்கள். புலம்பெயர் ஊடகவியலாளர்கள் புத்தகத்தை வெளியிட புலம்பெயர் மக்கள் பெற்றுக்கொள்ள இருக்கின்றார்கள். செய்யாத குற்றத்திற்காக தூக்கிலிடப்பட இருந்த அப்பாவி தமிழர்களை தன்னுடைய அசுரத்தனமான துணிச்சலால் பல முறை தூக்கு கயிற்றில் இருந்து காப்பாற்ற காரணமாக இருந்த…
-
- 0 replies
- 778 views
-
-
நீண்ட நாட்களாக கோகுல் சேஷாத்ரி எழுதிய சேரர் கோட்டை படிக்க வேண்டும் என்று வைத்திருந்தேன். ஒருவாராக இந்த வார விடுமுறையில் வாசித்து விட்டேன். சோழ வரலாற்றைப் படித்தவர்களுக்கு இரண்டு விடயம் ஒரு தெளிவில்லாமலேயே இருக்கும். ஒன்று ஆதித்த கரிகாலன் கொலை மற்றொன்று "காந்தளூர்ச் சாலை கலமறுத்த" என்ற வாக்கியத்தின் பொருள். இதைப் பற்றி யாரும் தெளிவாக இதுவரை வரலாற்றுக் குறிப்புகளுடன் எழுதவில்லை. இந்த இரண்டையும் தேடி இணையத்தில் நான் அதிக நேரம் செலவிட்டு இருக்கிறேன். முதன் முதலாக கோகுல் சேஷாத்ரி காந்தளூர்ச் சாலை பற்றி வரலாற்றுக் குறிப்புகளுடன் எழுதியுள்ளார். காந்தளூர்ச் சாலை பற்றி சுஜாதா "காந்தளூர் வசந்தகுமாரன் கதை" என்ற நாவல் எழுதியிருந்தார். ஏனோ அதை முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு செ…
-
- 3 replies
- 4.8k views
-
-
கிளிநொச்சி – போர் தின்ற நகரம் - எதற்கு ஈழம்? PRAY FOR MY LAND ஈழத்து கவிஞரும் ஊடகவியலாளரும் குளோபல் தமிழ்செய்திகளின் எழுத்தாளருமான தீபச்செல்வனின் மூன்றுபுத்தகங்கள் தமிழகத்தில் சென்னையில் தற்பொழுதுநடைபெற்று வரும் 36ஆவது சென்னைப் புத்தகக்கண்காட்சியில் வெளிவந்துள்ளன. ஈழத்து மக்களின்பிரச்சினைகளைப் பற்றிய இந்தப் புத்தகங்கள் முக்கியத்துவம் கொண்டவையாக அமைந்துள்ளன. கிளிநொச்சி – போர் தின்ற நகரம் தனது சொந்த நகரான கிளிநொச்சியின் யுத்தத்திற்குப் பின்பானஅழிவு நிலையை உண்மையின் பதிவுகளாக குளோபல் தமிழ்செய்திகள் (www.globaltamilnews.net) இணையத்தில் தீபச்செல்வன்எழுதியிருந்தார். அவ்வாறு, கிளிநொச்சியில் சந்தித்தமனிதர்களையும் சம்பவங்களையும் பற்றி வெவ்வேறுசந்தர்ப்பங்களில் அவர் எழு…
-
- 2 replies
- 961 views
-
-
நண்பர்களே... இன்று புத்தக கண்காட்சி ஆரம்பம்.. அங்கே எனது சேரன் நூலகம் வெளியிட்டிருக்கும் "போரும் வலியும்" நூல் விற்பனைக்கு வந்துள்ளது... இது பதிப்பாளராக எனது முதல் நூல்... இலங்கையில் போர்க்காலங்களில் நடந்த கொடுமைகளை, பொதுமக்களுக்கு நடந்த அக்கிரமங்களை, இனஅழிப்பை சிங்கள அரசாங்கம் எப்படி நிகழ்த்தியது என்பதை அந்த பகுதியில் போர்க்காலங்களில் வாழ்ந்த சாவித்திரி அத்விதானந்தன் என்ற 67 வயது தாய் பதிவு செய்திருக்கிறார்... அதைப்படித்ததும் நாமே வெளியிட்டு இதை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என என் மனதுக்கு தோன்றியது... அதை இன்று வெளியிட்டு என் பணியை துவங்கியிருக்கிறேன்... உங்கள் அனைவரின் ஆதரவு அவசியம்... இதை வாங்கி படித்து, நண்பர்களிடம் பகிர்ந்து இதை எல்லா நண்பர்களின் முகப்பகுதியி…
-
- 1 reply
- 937 views
-
-
[size=5]கொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...![/size] தமிழ்மகன் வாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கிறான் என்பதை அப்போதுதான் வாசகனால் முழுதாகச் சிலாகிக்க முடியும்; அதன் மூலம் ஒரு அனுபவத்தை வாசகன் அடையமுடியும். வாசிப்பது என்பது எழுத்துக்களின் மீது கண்களை மேயவிடுவது என்பதல்ல. பயிற்சியுள்ள எழுத்தாளனை பயிற்சியுள்ள வாசகன் சுலபமாக அணுகுகிறான். ரஷ்ய நாவல்களை பலர் அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களுக்காகவும் ஊர்களின் பெயர்களுக்காகவுமே ஒதுக்கி விடுவதை அறிவேன். அந் நாவல்களைப் படிப்பது கை வரும்போது ரஸ்கோல்னிகோவும்…
-
- 2 replies
- 1.2k views
-
-
ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம் திருச்சி வேலுசாமி, தொகுப்பு: பா.ஏகலைவன் அந்தத் துன்பச் சம்பவம் நிகழ்ந்து 20 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், உண்மைக் குற்றவாளிகள் யார் என்று முழுமையாகத் தெரியவில்லை. இந்தியப் பிரதமர் நாற்காலியில் இருந்த ராஜீவ் காந்தியின் பச்சைப் படுகொலையில்கூட இத்தகைய மெத்தனமான விசாரணை நடத்த முடியுமானால் சாமான்யனின் மரணத்தில்? சட்டத் தின் ஆட்சி என்பது பல முக்கியமான நிகழ்வுகளில் தனி மனிதர்களின் ஆட்சியாக மாற்றப்படுகிறது என்பதற்கு உதாரணம் சொல்லக்கூடிய வழக் காக ராஜீவ் கொலைச் சதி அமைந்திருப்பதாகவே முடிவுக்கு வரத் தூண் டுகிறது இந்தப் புத்தகம்! ராஜீவ் கொலை சம்பந்தமாக இரண்டு முக்கியமான புத்தகங்கள் இதுவரை வந்துள்ளன. ஒன்று, அதன் விசாரணையைத்…
-
- 15 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழரும் நானும், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை – 4. விலை ரூ. 100 சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், இலங்கைத் தமிழர்கள் மீது அன்பு கொண்டவர். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ம.பொ.சி. பலமுறை இலங்கை சென்று வந்துள்ளார். அதுபற்றிய விவரங்களும், இலங்கையில் அளித்த பேட்டிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி பல புதிய தகவல்களைத் தரும் நூல் இது. ம.பொ.சி. எழுதிய “சிலப்பதிகார உரையாசிரியர்கள் சிறப்பு” என்ற நூலையும் பூங்கொடி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சிலப்பதிகா…
-
- 1 reply
- 673 views
-
-
மன்னார் அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி வெற்றிச்செல்வி (வேலு சந்திரகலா)எழுதிய முடியாத ஏக்கங்கள் என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா அண்மையில்இடம்பெற்றுள்ளது. இந்த சிறுகதை நூலில் முழுக்க ழுழுக்க போரில் பாதிக்கப்பட்டமாற்றுத்திறானாளிகளின் வாழ்க்கையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மன்னார் அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி என்பவரின் முடியாத ஏக்கங்கள் என்றசிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா கடந்த முதலாம் திகதி அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி செல்வி வேலுசந்திரகலாவின் இந்த நூல்வெளியீட்டு விழா கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் வெளிப்பாடுகளுடன்அமைந்திருந்தது. போரில் ஒரு கண்ணும் கையும் பாதிக்…
-
- 3 replies
- 815 views
-
-
[size=4]இந்திய வரலாறு ஓர் அறிமுகம்[/size] [size=3][size=4]டி.டி. கோசாம்பி[/size][/size] [size=3] [/size] [size=3][size=4]வெளியீடு: விடியல் பதிப்பகம், பக்கம்: 656, HB, விலை: ரூ. 350/-[/size][/size] [size=3][size=4]இந்திய வரலாறு பற்றிய மாபெரும் படைப்பு ‘இந்திய வரலாறு ஓர் அறிமுகம்.’ இப்புத்தகத்தில் கருத்தைக் கவரும் வகையில் விரிவாக வழங்கப்பட்டுள்ள அடிப்படைச் சிக்கல்களின் தேர்வு, பகுப்பாய்வு, நவீன விளக்கமுறை, அறிவியல் சார்ந்த முறையியல் ஆகியவை இந்திய வரலாற்று ஆய்விற்குப் புதிய அணுகுமுறைக்கான அடிப்படையை வழங்குகிறது.[/size][/size] [size=3][size=4]பேராசிரியர் டி.டி.கோசாம்பி புதிய பல கேள்விகளைக் கிளப்பியுள்ளார். பல கேள்விகளுக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
நேர்காணல் - என்.சரவணன் 1971 ஏப்ரல் புரட்சி பற்றிய பலர் மத்தியிலும் வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்ற போதிலும் அதில் பங்கு கொண்டவர்கள் செய்த அர்ப்பணிப்பு, தியாகம், பிரக்ஞை என்பவற்றையும் அதன் காரணமாக அவர்கள் பட்ட துன்பங்களையும், அவலங்களையும் எவரும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள் என்பது மாத்திரம் உண்மை. கட்சிக்குள் மாத்திரமல்ல, கட்சிக்கு வெளியிலும் பலர் ஆதரவாளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் இருந்து வந்துள்ளனர். அந்த வகையில் அன்றைய நெருக்கடி மிக்க காலப்பகுதியில் தாய்மாரினதும் தந்தைமாரினதும் பங்களிப்பு, தியாகம் என்பவையும் சாதாரணமானவையல்ல. ஏப்ரல் புரட்சியின் தலைவர்களில் ஒருவரான ஒஸ்மன்ட் டி சில்வாவின் தாயார் சீலவத்தி டி சில்வா பற்றி தமிழ் வாசகர்களுக்கு அற…
-
- 0 replies
- 669 views
-
-
[size=5]மின்வலையில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-711-5.html[/size] [size=5]Author: Dr.R.Niranjchanadevi[/size] [size=5]காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணை கட்டியும் காவிரியின் இரு கரைகளையும் உயர்த்தியும் தமிழ்நாட்டின் நெற்குவியலுக்கு வித்திட்டவர் மாமன்னன் கரிகாலன். இலங்கையை வென்று, 12,000 சிங்களரைக் கைதியாகக் கொண்டுவந்து, கல்லணை கட்டுவதற்கு அவர்களையும் மற்ற மன்னர்களையும் ஈடுபடுத்தினான். காவிரி, கொள்ளிடம் இரு ஆறுகளும் பிரியும் இடத்திலும், மீண்டும் சேரும் இடத்திலும் உள்ள கரை மட்டங்களை நுணுக்கமாக ஆராய்ந்து புரிந்துகொண்ட ‘புனல் நாடன்’ கரிகாலன் தகுந்த இடத்தில் பொருத்தமான கல்லணையைக் கட்டியது இந்தக் கால அணை வல்லுனர்களுக்கும் வியப்பை …
-
- 3 replies
- 1.8k views
-
-
[size=6]சே குவேரா நுழைந்தேயிராத கிறிஸ்தொபரின் வீடு [/size] யமுனா ராஜேந்திரன் ஹேபர்ட் மார்க்யூஸ் கூறுவது போல 'புள்ளிவிபரங்கள் ஒருபோதும் குருதி சிந்துவதில்லை'. கதை சொல்லிகளே புள்ளிவிபரங்களை குருதிசிந்த வைக்கிறார்கள். ஆவணங்கள் அறிக்கைகளில் வரும் புள்ளிவிபரங்களை விடவும் கதைசொல்லிகளால் ரத்தம் சிந்த வைக்கப்படும் உண்மைகள் அதிகம் கூரானவை, உயிருள்ளவை. - நிலாந்தன் நிலவிய சோசலிசம் குறித்து, பின் புரட்சிகர சமூகங்கள் குறித்து, சோவியத் யூனியன் மற்றும் சீனாவின் அடியொற்றிச் சென்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து எந்தப் பிரமைகளும் இல்லாதது போலவே ஈழப் போராட்டம் குறித்தும், விடுதலைப் புலிகள் அதனோடு பிற இயக்கங்கள் குறித்தும் விடுதலை அரசியலில் நாட்டமுள்ள எவருக்கும் இன்று எந்தப்…
-
- 7 replies
- 3k views
-
-
[size=5]பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108, விலை 75 ரூ.[/size] [size=4]ஆங்கிலத்தில் நீங்கள் எழுதியதில் ஒருவர் குற்றம் கண்டுபிடித்தால், கூனிக்குறுகிப் போகிறீர்கள். ஆனால், தமிழில் தவறு இருந்து, அதை யாராவது சுட்டிக்காட்டினால், ‘ஐ டோண்ட் நோ தட் மச் தமிழ்’ என்று பெருமையாகச் சொல்வீர்கள். [/size] [size=4]தாய்மொழியில் பேச, எழுதத் தெரியாததுகூட பெருமையாகச் சொல்வீர்கள். தாய்மொழியில் பேச, எழுதத் தெரியாததுகூட பெருமையாக ஆனது தமிழ்ச் சமூகத்தில் மட்டும்தான். பள்ளியில், கல்லூரியில், பட்டங்கள் பெறுவதில், வேலை பார்க்கும் இடத்தில், கோவிலில், நீதிமன்றங்களில் என அனைத்து இடங்களிலும் தமிழ் தள்ளி…
-
- 0 replies
- 2.3k views
-