சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2254 topics in this forum
-
பதின்ம வயதினர்க்கு ஏற்படும் மன அழுத்தமும் அதன் பாதிப்பும் பொதுவாக இளம்பராயத்தினரின் மன அழுத்தத்தினை பெரியவர்கள் கண்டறிவது மிகக் கடினமானது. ஆனாலும் பெரும்பாலும் அவர்களின் அன்றாட நடைமுறையும் அதனால் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடுகளுமே அவர்களது மன அழுத்தினை கண்டறிவதற்கான இலகுவான பாரம்பரிய முறையாக இருந்துவருகிறது. இளவயதினரின் பருவமாற்றங்கள் புதிய விடயங்களை தோற்றுவிக்கின்றன. காதல் பிரிவு புதிய உறவுகள் அல்லது பெற்றோரிடமிருந்து ஏற்படும் பிரிவுகள் போன்ற பல்வேறுபட்ட காரணிகள் இளையோரிடம் நம்பிக்கையீனத்தினை தோற்றுவிக்கின்றன. சிலவேளைகளில் அதுவே மன அழுத்தத்தினை தோற்றுவிக்கின்ற காரணியாகவும் அமைகின்றது. சிறார்கள்; இவ்வாறு நெருக்கடியான நிலைமையில் கவலையின் நிமித்தம் சோர்வடைவதற்கு மாறா…
-
- 0 replies
- 644 views
-
-
https://www.youtube.com/watch?v=Ypes1C203Bc வாகனத்தை விட்டு, இறங்க முன்... ஒரு வினாடி சிந்தியுங்கள்!!! அத்துடன், குழந்தைகள் வாகனத்தில் பயணித்தால்..... அவர்களால் உள்ளிருந்து கதவை திறக்க முடியாதவாறு... செய்து விடுங்கள்.
-
- 4 replies
- 1k views
-
-
சிறந்த படம் சதுரங்க வேட்டை 'பணம் இருக்கிறவன் என்ன வேணும்னாலும் பண்ணலாம்னா, அந்தப் பணத்தைச் சம்பாதிக்க நான் ஏன் என்ன வேணும்னாலும் பண்ணக் கூடாது?’- 'சதுரங்க வேட்டை’யின் பொளேர் ஒன்லைன் இது. மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங், எம்.எல்.எம்., ஈமு கோழி... என சமீபகாலத்தில் தமிழர்கள் கடந்த அத்தனை மோசடிகளின் பின்னணி மீதும் பளீர் வெளிச்சமிட்ட படம். 'ஒரு பொய் சொன்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்திருக்கணும். அப்பத்தான் அது பொய்னு தெரியாது’ - மாஸ் ஹீரோ சொல்லாமலேயே பட்டிதொட்டியெங்கும் பரவியது படத்தின் இந்த பன்ச். பெரும் பணம் சம்பாதிக்கப் பேராசைப்படும் தமிழர்களின் மனதைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காண்பித்து, அதில் அறுவடை செய்யத் துடிக்கும் ஜித்தர்களின் குறுக்குவழிகளையும் அம்பலப்பட…
-
- 0 replies
- 2.2k views
-
-
பாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப் பயிலும் பின்லாந்து போராளிகளிடம் - சே.க. அருண் குமார் அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்? உலக அளவில் ‘கல்வியின் உச்சம்’ படித்துப் பாருங்கள் உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை. ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED- organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நா…
-
- 6 replies
- 1.8k views
-
-
1) இப்பொழுது டிசிஎஸ் நிறுவனம் கைகளில் கோடாரியை எடுத்திருக்கிறது. கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரையிலான பணியாளர்களை வெட்டப் போகிறது. ரத்தச் சகதி. மிகச் சமீபத்தில் யாஹூ இதைச் செய்தது. அதற்கு முன்பாக ஐபிஎம். அப்புறம் ஆரக்கிள். இப்படி பெரும்பாலான நிறுவனங்கள் இதைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் டிசிஎஸ் இதுவரைக்கும் தங்களைப் புனித நிறுவனமாகக் காட்டிக் கொண்டிருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பாக டிசிஎஸ்ஸில் சேர்ந்தால் ‘அது கவர்ன்மெண்ட் வேலை மாதிரி’ என்பார்கள். சம்பளத்திலும் பதவி உயர்விலும் தாறுமாறான வளர்ச்சி இருக்காது என்றாலும் கூட முரட்டுத்தனமாக வெளியே தள்ளிவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை அது. முதல் சில வருடங்களுக்கு இந்தியாவில் இருப…
-
- 1 reply
- 1.3k views
-
-
பெற்றோர்கள் கவனத்திற்கு! Parents – Just a warning! Beware of these Code words! KPC: Keeping Parents Clueless MOS: Mom Over Shoulder P911: Parent Alert PAL: Parents Are Listening PAW: Parents Are Watching PIR: Parent In Room POS: Parent Over Shoulder ASL: Age/Sex/Location F2F: Face to Face. Asking for a meeting or video chat LMIRL: Let's Meet In Real Life NAZ: Name/Address/ZIP MOOS: Member of the Opposite Sex MOSS: Member of the Same Sex MORF or RUMORF: Male or Female, or Are Your Male or Female? RU/18: Are You Over 18? WUF: Where You From? WYCM: Will You Call Me? WYRN: What's Your Real Name? 143, 459 or ILU: I love you 11…
-
- 0 replies
- 969 views
-
-
மருத்துவ படிப்பு – ஒரு சமூக அந்தஸ்துக்காக மட்டுமே சூர்யா பனிரெண்டாம் வகுப்பில் மாநில அளவில் மாவட்ட அளவில் என அதிக மதிப்பெண்கள் பெரும் மாணவ-மாணவிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் பொழுது என்னவோ கருப்பாகவும், மாநிறமாகவும்தான் காணப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளால் தங்கள் மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளைப் பார்த்தால் ஏதோ ஆங்கிலோ இந்தியர்களைப் போல செக்கச் செவேள் என ஜொலிக்கிறார்கள். அவர்களை புதிதாக பார்க்கும் யாரும், “இவர்கள் இந்தப்பகுதி மக்கள் இல்லை போல” என்று கேட்கும் அளவுக்கு தனித்துக் காணப்படுகிறார்கள். வெயில் படாத அந்த வெள்ளைத் தோல் வேந்தர்களைப் பற்றி சற…
-
- 0 replies
- 914 views
-
-
பாலியல் வன்முறை உளவியல் காரணம்? நாம் மனிதர்கள் மத்தியில்தான் வாழ்கிறோமா என்கிற ஐயத்தை அவ்வப்போதைய சம்பவங்கள் உணர்த்துகின்றன. அண்மைக்காலமாக இந்தியாவெங்கிலும் அதிகரித்துவரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கிராமங்களில், சிறு நகரங்களில் தொடர்ந்து நடந்துவரும் இத்தகைய வன்முறைகளின் மீது கவனம் கொள்ளாத ஊடகங்கள், தலைநகர் டெல்லியில் நடைபெறும்போது அச்செய்தியை நாடெங்கும் கொண்டுசென்றுவிடுகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தேறும்போதெல்லாம் அரசியல் காரணங்களை மட்டுமே பேசிவிட்டு, தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்; சுட்டுக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் கூறும் ஊடகங்கள், சமூகக் காரணங்களைப் பேசுவதில்லை. இன்னும் குறிப்பாக மனநல ரீதியிலோ உளவியல் பார்வையுடனோ சுத்தமாக…
-
- 1 reply
- 853 views
-
-
2014 இன் ஓர விளிம்பில் நின்று கொண்டு இந்த வருடம் எப்படி இருந்தது, எவையெவை பிடிச்சு இருந்தன, எந்த எந்த விடயங்கள் சரியாக நடந்தன் என்று பார்ப்பமா? 2014 இல் 1. பிடித்த திரைப்படங்கள் எவை? 2. பிடித்த பாடல்கள் எவை? 3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது? 4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா? 5. மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா? 6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது? 7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்? 8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு? 9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது? 10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்? பகிர முடிகின்றவற்றை பகிரவும்.
-
- 24 replies
- 3.3k views
-
-
உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா? கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை. * உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா. * இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன. * இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது. * இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவ…
-
- 3 replies
- 1.9k views
-
-
கால்நூற்றாண்டுக்கு முன்னர் பெண் சிசுக்கொலைகள் நடந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய தமிழ்நாட்டில் இன்று பெற்றோர் கொலைகள் நடக்கத்துவங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டின் முதியோர் பராமரிப்பின் மோசமான நிலைமையே இத்தகைய மவுனக்கொலைகள். இந்த நிலைமை உருவானதற்கான சமூக, பொருளாதார, கலாச்சார பின்னணியை ஆராயும் பெட்டகத்தொடரின் முதல் பகுதி. "100 கிராமங்களில் மட்டும் 200 பேர் கொலை?" மதுரையை ஒட்டிய உசிலம்பட்டி பகுதியில் செயற்படும் தொண்டு நிறுவனமான யுரைஸ் என்கிற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் நூறு கிராமங்களில் மட்டும் 150 முதல் 200 முதியோர் கொலைகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலைமை வெறும் மதுரைப்பிராந்தியத்தில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாட்டின் வேறு இடங்க…
-
- 0 replies
- 643 views
-
-
பிரிட்டனில் ஒரு ஹோட்டலில்.. பெண் ஒருவர் தனது குழந்தைக்கு பாலூட்டும் போது மறைப்பிடவில்லை என்று குற்றச்சாட்டி அவர் மறைப்பிட்டு பாலூட்டக் கோரிய சம்பவம் பாலூட்டும் தாய்மார் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி உள்ளது. உலகத்தில் உள்ள பாலூட்டும் ஜீவராசிகள் அனைத்தும்.. தனது சொந்தக் குட்டிக்கு பசி எடுக்கும் நேரம் தனக்கு விரும்பிய படி.. பாலூட்டும் உரிமையைக் கொண்டிருக்க.. மனிதப் பெண்ணுக்கு அவள் விரும்பிய இடத்தில் விரும்பியவாறு பாலூட்ட உள்ள உரிமை மறுக்கப்படுவது சரியா..??! பாலூட்டல் என்பது என்ன பாலுறவுத்தூண்டலாவா நோக்கப்படுகிறது.. மனித சமூகத்தில்..????! இது பற்றி உங்கள் கருத்துக்களை.. அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..!! குறித்த பெண் மறைப்பிட முன்னும் நாகரிகமாகத்தானே பாலூட…
-
- 9 replies
- 1.7k views
-
-
"ஆப்ரிக்காவுக்கு மிஷினரிகள் வந்தபோது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தன. எங்களிடம் நிலங்கள் இருந்தன. அவர்கள் சொன்னார்கள்... நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம் என்று. நாங்களும் கண்களை மூடினோம். ஆனால் கண்களை திறந்து பார்த்தபோது, எங்களிடம் பைபிள்கள் இருந்தன, அவர்களிடம் எங்கள் நிலங்கள் இருந்தன.." என்று வேதனையோடு ஆப்பிரிக்காவில் நடந்த மதமாற்ற மோசடியை வெளி உலகத்திற்கு தெரிவித்தார் மறைந்த கென்ய அதிபர் ஜோமோ கென்யத்தா. மிஷினரிகளின் மார்க்கெட்டிங் டெக்னிக்குகள்தான், மக்களை கும்பலாக மதம்மாற்றுவதில் முக்கிய பங்காற்றுவதாக கூறுகின்றனர் மதம் மாற்றம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளோர். உதாரணத்துக்கு 2000மாவது ஆண்டில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 கோடியே 40 லட்சமாக இருந்தது கிறிஸ்தவர்கள் எண்ணிக…
-
- 0 replies
- 1.2k views
-
-
தட்டிவான் பயணமும், இன்னும் சில நினைவுகளும்! Wednesday, 03 December 2014 11:52 ‘அம்பாசடர்’ காரொன்று கடந்து சென்றதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. கடும் நீல நிறத்தில், அந்தக்காலத்து 'சிறீ' நம்பர் கார். இதுநாட்கள்வரை கொழும்பில் ஒரு அம்பாசடரைப் பார்த்ததில்லை. பழைய கார்களில் எப்போதாவது அபூர்வமாக பழைய வோக்ஸ்வேகன் கார்களைப் பார்க்கலாம். பழைய கார்களின் அணிவகுப்பு போன்ற விசேட தினங்களில் ஆகப்பழைய கால ஃபுட் போர்ட் வைத்த கார்கள் எல்லாம் புதுப்பொலிவுடன் கலந்துகொள்வதைக் காணலாம். மற்றபடி இங்கே அன்றாடப் பாவனையிலுள்ள பிரபலமான பழைய கார்களில் அதிகளவானவை 'ஒஸ்டின் மினி கூப்பர்', 'மார்க்' போன்ற மினி கார்கள்தான். யாழ்ப்பாணத்துக் கார்களைக் காணக் கிடைப்பதில்லை. ஒருமுறை சிறி அல…
-
- 0 replies
- 839 views
-
-
DEC 3, 2014 எல்லாமே எமோஷனல்தானா? சமீபத்தில் ஒரு சோஷியாலஜி பேராசிரியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓய்வு பெற்றவர். என்றாலும் இப்பொழுதும் தேசிய சட்டப்பள்ளியில் (National Law school)பணிபுரிகிறார். எப்பொழுதுமே நல்ல ஆசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்தால் நம் அறிவின் ஜன்னல்களைத் திறந்துவிட்டுவிடுவார்கள். இவரும் அப்படித்தான். ‘ரிட்டையர்ட் ஆகிட்டீங்க இல்ல...எதுக்கு மறுபடியும் வேலைக்கு போறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் ஆச்சரியமானது. சட்டப்படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் முதல் சில இடங்களைப் பிடிப்பவர்களுக்குத்தான் இந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும். ‘வர்ற பசங்க அறிவாளிகளா இருக்காங்க....அவங்ககிட்ட இருந்து நாமும் ஏதாச்சும் கத்துக்கலாம்’ என்றார். …
-
- 2 replies
- 1.1k views
-
-
கருத்தடை தொழில்நுட்பமும், சந்தைகளும் க. சுதாகர் கரு உருவாவதும்,உருவாகாது இருப்பதும் பெண்ணின் பொறுப்பாகவே சமூகம் கருதி வருகிறது. திட்டமிடாத கருத்தரிப்பு என்பது, கருத்தரிக்காது இருப்பதைப் போன்றே ஒரு பெரும் அழுத்தத்தை பெண்களுக்கு ஏற்படுத்தக் கூடியது. ஆண்களுக்கான கருத்தடை செயல்முறைகளும் கருவிகளும் மிககுறைவான அளவிலேயே வரவேற்கப்பட்டிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், வாஸக்டமி கருத்தடை முறையில், விந்துக்கள் கருத்தரிக்க வைக்க இயலும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்த ஐயங்கள். வெளியே அணிந்துகொள்ளும் சாதனங்களை வாங்குவதிலும், பயன்படுத்துவதிலும், அதனை அழிப்பதிலும் இருக்கும் சமூக ரீதியான தயக்கங்கள், அழுத்தங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆண்கள், மிகக் க…
-
- 6 replies
- 2.5k views
-
-
-
- 1 reply
- 739 views
-
-
இணையத் தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தைகளும் கைகோத்து பயணிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஃபேஸ்புக், பொழுதுபோக்குப் பக்கங்கள் என அவர்களின் கவனம் சிதற விடாமல் ஆக்கப்பூர்வமான வழியில் மடை திருப்ப, குழந்தைகளுக்கான பிரத்யேக வலைதளங்கள் பல செயல்பட்டு வருகின்றன. உங்கள் வீட்டு குட்டிஸுக்கு அறிமுகப்படுத்த சில தரமான வலைதள முகவரிகள் இங்கே.. Kids Health மருத்துவச் செய்திகளை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பக்கம் இது. ‘ஆஸ்துமா என்றால் என்ன?’, ‘நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?’, ‘வைரஸ் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது?’ என, இப்படி மருத்துவம் சம்பந்தமான குழந்தைகளின் அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இங்கே விடை கிடைக்கும். மேலும், வீடியோ மூலமாகவும் தகவல்களை தெள…
-
- 0 replies
- 684 views
-
-
Thursday, November 27, 2014 புற்று நோய் (நேற்று மாலை காந்தி ஆய்வு மையம், புதன் புத்தக அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியது) 30 ஜூலை 2014 அன்று காலை 76 வயதான என் தந்தை இறந்துபோனார். அன்று மதியமே அவரை எரியூட்டினோம். அடுத்த நாள் காலை அவரது எலும்புகளைத் தேடி எடுத்துச் சேகரித்தது ஞாபகம் இருக்கிறது. அவர் உடலை எரித்த அந்த நெருப்புதான் அவர் உடலில் பரவியிருந்த கேன்சர் செல்களை முற்றிலுமாக அழித்திருக்கும். அவருக்கு நான்காண்டுகளுக்குமுன் வயிற்றில் (டுவோடினம்) கேன்சர். அவருக்குக் கேன்சர் என்று நாங்கள் கடைசிவரை சொல்லவே இல்லை. வயிற்றில் கட்டி என்று மட்டுமே சொல்லியிருந்தோம். அதை அறுவை சிகிச்சையில் நீக்கி உலோக கிளிப் போட்டு வயிற்றைச் சுருக்கி, குடலுக்கு மாற்று ஏற…
-
- 3 replies
- 1.6k views
-
-
Troy நகரைக் கிரேக்கப் படைகள் சூழ்ந்திருக்கின்றன. கொடியின் எதிரே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் களம். அன்றைய நாள் மோதல் வித்தியாசமானது, முக்கியமானது. அந்நாட்டின் மிகச்சிறந்த வீரனும் நாட்டின் பிரதான படைத்தளபதியுமான இளவரசன் ஹெக்டர் தன் மனைவியிடமும், குழந்தையிடமும் விடைபெற்றுக் கொள்கிறான். அவன் அக்கலிஸ் உடன் ஒற்றைக்கு ஒற்றையாக மோதப் போகிறான். அக்கலிஸ் வெல்லப்பட முடியாதவன் என எதிரிகளாலும் மதிக்கப்படும் பெரும்வீரன். ஒரு விடிகாலையில் அக்கலிஸ்சின் தலைக்கவசத்தை அணிந்துகொண்டு போரிடுகிறான் அனுபவமில்லாத இளவயதினனான அவன் உறவினன். அவனை அக்கலிஸ் எனத் தவறுதலாக நினைத்துக் கொன்றுவிடுகிறான் ஹெக்டர். அதற்குப் பழிவாங்கவே ஹெக்டரை ஒற்றைக்கு ஒற்றை அழைக்கிறான் அக்கலிஸ். யுத்தம் ஆரம்பி…
-
- 6 replies
- 1.3k views
-
-
எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத் பாலியல் தொழிலாளர்களாக செயற்படுபவர்களில் அதிகமானவர்கள் முழு மனதுடன் இந்த தொழிலிலுக்கு வந்தவர்கள் இல்லையென்பது உண்மை. ஏதோ ஒரு விதத்தில் இந்த தொழிலுக்கு தள்ளப்படுகின்ற பெண்கள் அவற்றிலிருந்து விடுபட முடியாமல் தொடர்ந்தும் இந்தத் தொழிலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். அநாதரவாக சுற்றித்திரியும் அல்லது பொது இடத்தில் தேவையின்றி தரித்து நிற்கும் பெண்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் வகையில் மேல் மாகாண சமூகசேவை திணைக்களத்தின் கீழ் இயங்கிவருகின்ற கங்கொடவில மெத்செவன என்ற அரச நிறுவனம் செயற்பட்டு வருகிறது. அநாதரவ…
-
- 0 replies
- 728 views
-
-
வீட்டை அழகாகக் கட்டுவதைக் காட்டிலும் கட்டிய வீட்டை அலங்கரிக்கப்பது அவசியம். அப்போதுதான் முழுமையான அழகு வீட்டுக்குக் கிடைக்கும். வீட்டு அலங்காரம் என்றதும் செலவு அதிகம் ஆகும் என நினைக்க வேண்டாம். புதுமையான சிந்தனைகள் இருந்தாலேயே போதுமானது. வீட்டைக் கண்ணைக் கவரும் வகையில் மாற்றலாம். வீட்டை அழகுபடுத்தும் பொருள்களுள் பூ ஜாடிகளுக்கு முக்கியப் பங்குண்டு. பூஜாடிகளில் பிளாஸ்டிக் பூக்களை இட்டு அழகாக வைக்கலாம். வீட்டின் வரவேற்பறையில், புத்தக மேஜையில் வைக்கலாம். கண்ணாடி ஜாடிகளில் தண்ணீர் நிரப்பி நிஜப் பூக்களையும் வைக்கலாம். அப்படிவைக்கும்போது பூக்களின் மீது சிறிது தண்ணீர்த் தெளித்து வைக்கும்போது பார்வைக்குக் குளிர்ச்சியாக இருக்கும். வீட்டுக்கு அழகைத் தரும். வீட்டுக்குள்ளேயே வளரும் …
-
- 33 replies
- 37k views
-
-
(சிலாபம் திண்ணனூரான்) 'எல்லாத் தொழிலிலும் பொறாமையும் போட்டிகளும் உள்ளன. எனது தொழிலில் இவ்வாறான நிலை இல்லை. ஒரே வீதியில் பத்துக்கும் மேற்பட்டோர் வியாபாரத்திற்காக பயணிப்போம். எங்களுக்குள் ஒருவித பிரச்சினையும் இல்லை. பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளவும் மாட்டோம். இதுவே, எங்கள் வியாபாரத்தின் தர்மமாகும்' என்கிறார் பழைய பொருட்களை சேகரித்து விற்கும் எஸ். சந்திரசேகர். 'எனக்கு 54 வயதான வயதாகிறது. கொழும்பு முகத்துவாரத்தில் வசிக்கிறேன். முதலில் கொழும்பு புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத்தெருவில் சுமை தொழிலாளியாக வேலை செய்தேன். மிகவும் கஷ்டமான தொழில் இது. சுமைகளுடன் மாடிப்படிகளின் ஏறி இறங்குவது மிகவும் சுலபமான காரியமல்ல. பார்ப்பவர்களுக்கு மிகவும் சுலபமாகத்தான் தெரியும். அத்தொழிலை…
-
- 2 replies
- 934 views
-
-
மாதவலி -சங்கீதா பாக்கியராஜா டாம்பொன் (Tampon) ஒன்றை.. தேவைப்பட்டாலும் என்ற எண்ணத்துடன் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு வெளியே செல்லக் கிளம்பினேன்.. வீட்டை விட்டு இறங்கி தெருவோரம் காலடித்தடங்களை பின்விட்டு நடக்கும் போதுதான்.. காலத்தின் சுழற்சியில் எத்தனை விடயங்களை விட்டு வந்தேன் என்று நினைத்துப் பார்த்தேன்.. பெரியவளாகிய போது.. துணி சலவை செய்பவரின் மனைவி கொண்டு வந்து கொடுத்த ஒரு கட்டு வெளுத்த பழந் துணியை எடுத்த அம்மா, அதை ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி, இடுப்பில் பாவடை நாடாவொன்றைக் கட்டி, அதில் கோமணம் போல் அந்தத் துணிக்கட்டை சொருகி, விழுந்துவிடாமலிருக்க இரண்டு பின்கள் குத்திவிட்டார்.. ஏதோ தண்டனை போல, நடக்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல், வயிற்று வலியின் வேதனையுட…
-
- 18 replies
- 2k views
-
-
வாழ்க்கையில் அனைத்தையும் சமநிலையில் சமாளிப்பது எப்படி? நாம் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர் நோக்கியிருக்கிறோம். அதேபோல் பல பாஸிட்டிவ்வான விஷயங்களையும் சந்தித்து இருக்கிறோம். இருந்தாலும், வெற்றிகளையும் நன்மைகளையும் கண்டு அளவுக்கு அதிகமாக சந்தோஷமாக இருக்காமலும், தோல்விகளையும் துன்பங்களையும் கண்டு மிகவும் துவண்டு போகாமல் இருக்கவும் நாம் கற்றிருக்கிறோமா, பழகியிருக்கிறோமா? இதுதான் நம் வாழ்க்கையில் முக்கியமான விஷயம். இன்பத்தையும் துன்பத்தையும் தோள்களில் போட்டுக் கொண்டு வாழ்க்கையை ஒரே சமநிலையில் கொண்டு செல்கிறோமா என்பதை நமக்கு நாமே அவ்வப்போது அலசி ஆராய்ந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சில வழிமுறைகளை இப்போது நாம் பார்க்கலாம். முன் நோக்கிய…
-
- 3 replies
- 762 views
-