Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நான் சில காலங்களுக்கு முன்னர் தமிழ் திருமணங்களில் புலம் பெயெர் நாடுகளில் மணமகள் மணமகனின் காலில் வீழ்ந்து வணங்கும் வழக்கம் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் தாயகத்தில் அங்கே புலம்பெயர் நாடுகளை விட ஒரு படி மேல் அல்லவா செய்கிறார்கள். நான் இணைத்துள்ள காணஒளியில் 5.50 தொடக்கம் 6.00 நிமிடம் வரையிலான பகுதியை கவனிக்கவும், அதை பர்ர்த்து போடு கள உறுப்பினர்கள் தாம் திரும்பவும் திருமணம் செய்ய போகிறோம் என அடம் பிடிக்கக் கூடாது

    • 12 replies
    • 2.3k views
  2. உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா? கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை. * உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா. * இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன. * இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது. * இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவ…

  3. பிரிட்டனில் ஒரு ஹோட்டலில்.. பெண் ஒருவர் தனது குழந்தைக்கு பாலூட்டும் போது மறைப்பிடவில்லை என்று குற்றச்சாட்டி அவர் மறைப்பிட்டு பாலூட்டக் கோரிய சம்பவம் பாலூட்டும் தாய்மார் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி உள்ளது. உலகத்தில் உள்ள பாலூட்டும் ஜீவராசிகள் அனைத்தும்.. தனது சொந்தக் குட்டிக்கு பசி எடுக்கும் நேரம் தனக்கு விரும்பிய படி.. பாலூட்டும் உரிமையைக் கொண்டிருக்க.. மனிதப் பெண்ணுக்கு அவள் விரும்பிய இடத்தில் விரும்பியவாறு பாலூட்ட உள்ள உரிமை மறுக்கப்படுவது சரியா..??! பாலூட்டல் என்பது என்ன பாலுறவுத்தூண்டலாவா நோக்கப்படுகிறது.. மனித சமூகத்தில்..????! இது பற்றி உங்கள் கருத்துக்களை.. அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..!! குறித்த பெண் மறைப்பிட முன்னும் நாகரிகமாகத்தானே பாலூட…

  4. கால்நூற்றாண்டுக்கு முன்னர் பெண் சிசுக்கொலைகள் நடந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய தமிழ்நாட்டில் இன்று பெற்றோர் கொலைகள் நடக்கத்துவங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டின் முதியோர் பராமரிப்பின் மோசமான நிலைமையே இத்தகைய மவுனக்கொலைகள். இந்த நிலைமை உருவானதற்கான சமூக, பொருளாதார, கலாச்சார பின்னணியை ஆராயும் பெட்டகத்தொடரின் முதல் பகுதி. "100 கிராமங்களில் மட்டும் 200 பேர் கொலை?" மதுரையை ஒட்டிய உசிலம்பட்டி பகுதியில் செயற்படும் தொண்டு நிறுவனமான யுரைஸ் என்கிற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் நூறு கிராமங்களில் மட்டும் 150 முதல் 200 முதியோர் கொலைகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலைமை வெறும் மதுரைப்பிராந்தியத்தில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாட்டின் வேறு இடங்க…

  5. "ஆப்ரிக்காவுக்கு மிஷினரிகள் வந்தபோது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தன. எங்களிடம் நிலங்கள் இருந்தன. அவர்கள் சொன்னார்கள்... நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம் என்று. நாங்களும் கண்களை மூடினோம். ஆனால் கண்களை திறந்து பார்த்தபோது, எங்களிடம் பைபிள்கள் இருந்தன, அவர்களிடம் எங்கள் நிலங்கள் இருந்தன.." என்று வேதனையோடு ஆப்பிரிக்காவில் நடந்த மதமாற்ற மோசடியை வெளி உலகத்திற்கு தெரிவித்தார் மறைந்த கென்ய அதிபர் ஜோமோ கென்யத்தா. மிஷினரிகளின் மார்க்கெட்டிங் டெக்னிக்குகள்தான், மக்களை கும்பலாக மதம்மாற்றுவதில் முக்கிய பங்காற்றுவதாக கூறுகின்றனர் மதம் மாற்றம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளோர். உதாரணத்துக்கு 2000மாவது ஆண்டில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 கோடியே 40 லட்சமாக இருந்தது கிறிஸ்தவர்கள் எண்ணிக…

    • 0 replies
    • 1.2k views
  6. தட்டிவான் பயணமும், இன்னும் சில நினைவுகளும்! Wednesday, 03 December 2014 11:52 ‘அம்பாசடர்’ காரொன்று கடந்து சென்றதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. கடும் நீல நிறத்தில், அந்தக்காலத்து 'சிறீ' நம்பர் கார். இதுநாட்கள்வரை கொழும்பில் ஒரு அம்பாசடரைப் பார்த்ததில்லை. பழைய கார்களில் எப்போதாவது அபூர்வமாக பழைய வோக்ஸ்வேகன் கார்களைப் பார்க்கலாம். பழைய கார்களின் அணிவகுப்பு போன்ற விசேட தினங்களில் ஆகப்பழைய கால ஃபுட் போர்ட் வைத்த கார்கள் எல்லாம் புதுப்பொலிவுடன் கலந்துகொள்வதைக் காணலாம். மற்றபடி இங்கே அன்றாடப் பாவனையிலுள்ள பிரபலமான பழைய கார்களில் அதிகளவானவை 'ஒஸ்டின் மினி கூப்பர்', 'மார்க்' போன்ற மினி கார்கள்தான். யாழ்ப்பாணத்துக் கார்களைக் காணக் கிடைப்பதில்லை. ஒருமுறை சிறி அல…

  7. DEC 3, 2014 எல்லாமே எமோஷனல்தானா? சமீபத்தில் ஒரு சோஷியாலஜி பேராசிரியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓய்வு பெற்றவர். என்றாலும் இப்பொழுதும் தேசிய சட்டப்பள்ளியில் (National Law school)பணிபுரிகிறார். எப்பொழுதுமே நல்ல ஆசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்தால் நம் அறிவின் ஜன்னல்களைத் திறந்துவிட்டுவிடுவார்கள். இவரும் அப்படித்தான். ‘ரிட்டையர்ட் ஆகிட்டீங்க இல்ல...எதுக்கு மறுபடியும் வேலைக்கு போறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் ஆச்சரியமானது. சட்டப்படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் முதல் சில இடங்களைப் பிடிப்பவர்களுக்குத்தான் இந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும். ‘வர்ற பசங்க அறிவாளிகளா இருக்காங்க....அவங்ககிட்ட இருந்து நாமும் ஏதாச்சும் கத்துக்கலாம்’ என்றார். …

  8. கருத்தடை தொழில்நுட்பமும், சந்தைகளும் க. சுதாகர் கரு உருவாவதும்,உருவாகாது இருப்பதும் பெண்ணின் பொறுப்பாகவே சமூகம் கருதி வருகிறது. திட்டமிடாத கருத்தரிப்பு என்பது, கருத்தரிக்காது இருப்பதைப் போன்றே ஒரு பெரும் அழுத்தத்தை பெண்களுக்கு ஏற்படுத்தக் கூடியது. ஆண்களுக்கான கருத்தடை செயல்முறைகளும் கருவிகளும் மிககுறைவான அளவிலேயே வரவேற்கப்பட்டிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், வாஸக்டமி கருத்தடை முறையில், விந்துக்கள் கருத்தரிக்க வைக்க இயலும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்த ஐயங்கள். வெளியே அணிந்துகொள்ளும் சாதனங்களை வாங்குவதிலும், பயன்படுத்துவதிலும், அதனை அழிப்பதிலும் இருக்கும் சமூக ரீதியான தயக்கங்கள், அழுத்தங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆண்கள், மிகக் க…

  9. Thursday, November 27, 2014 புற்று நோய் (நேற்று மாலை காந்தி ஆய்வு மையம், புதன் புத்தக அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியது) 30 ஜூலை 2014 அன்று காலை 76 வயதான என் தந்தை இறந்துபோனார். அன்று மதியமே அவரை எரியூட்டினோம். அடுத்த நாள் காலை அவரது எலும்புகளைத் தேடி எடுத்துச் சேகரித்தது ஞாபகம் இருக்கிறது. அவர் உடலை எரித்த அந்த நெருப்புதான் அவர் உடலில் பரவியிருந்த கேன்சர் செல்களை முற்றிலுமாக அழித்திருக்கும். அவருக்கு நான்காண்டுகளுக்குமுன் வயிற்றில் (டுவோடினம்) கேன்சர். அவருக்குக் கேன்சர் என்று நாங்கள் கடைசிவரை சொல்லவே இல்லை. வயிற்றில் கட்டி என்று மட்டுமே சொல்லியிருந்தோம். அதை அறுவை சிகிச்சையில் நீக்கி உலோக கிளிப் போட்டு வயிற்றைச் சுருக்கி, குடலுக்கு மாற்று ஏற…

    • 3 replies
    • 1.6k views
  10. இணையத் தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தைகளும் கைகோத்து பயணிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஃபேஸ்புக், பொழுதுபோக்குப் பக்கங்கள் என அவர்களின் கவனம் சிதற விடாமல் ஆக்கப்பூர்வமான வழியில் மடை திருப்ப, குழந்தைகளுக்கான பிரத்யேக வலைதளங்கள் பல செயல்பட்டு வருகின்றன. உங்கள் வீட்டு குட்டிஸுக்கு அறிமுகப்படுத்த சில தரமான வலைதள முகவரிகள் இங்கே.. Kids Health மருத்துவச் செய்திகளை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பக்கம் இது. ‘ஆஸ்துமா என்றால் என்ன?’, ‘நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?’, ‘வைரஸ் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது?’ என, இப்படி மருத்துவம் சம்பந்தமான குழந்தைகளின் அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இங்கே விடை கிடைக்கும். மேலும், வீடியோ மூலமாகவும் தகவல்களை தெள…

  11. ஆண்களுக்கான... கருத்தடை, அவசியமா? ஆம்.... என்று, சொல்வேன் நான். இரண்டு, பிள்ளைகளை பெற்ற நான்...!? மூன்றாவது, பிள்ளையையும்... பெற்றால், என் பொருளாதார நிலைமை, வீட்டில் இட வசதி இல்லாதது என்பதால்.... எனது மனைவி வயிற்றில் உருவாகிய... (ஆறு கிழமை ஆன) மூன்றாவது கருவை அழிக்க, வைத்தியர் உதவியை நாடினேன். அவர்களும்.... கருவில், உருவாகும் குழந்தையை அழிப்பது தவறு. உங்களுக்கு, சில வழிகட்டுகின்றோம் என்று, இரண்டு மாதம், ஒவ்வொரு அலுவலகமும் ஏறி, இறங்கி வைத்து அன்பான... ஆலோசனையால் காலம் கடந்து...... மூன்று மாதம், ஆகி விட்டது. இப்போ..... கருவை, கலைக்கத் தயார், என்று..... அவர்கள் பச்சைக் கொடி காட்டிய போது....எங்களுக்கு, கொஞ்ச தயக்கம், அந்த இடத்திற்கு சென்ற, மனைவியின்... …

    • 41 replies
    • 4.2k views
  12. Troy நகரைக் கிரேக்கப் படைகள் சூழ்ந்திருக்கின்றன. கொடியின் எதிரே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் களம். அன்றைய நாள் மோதல் வித்தியாசமானது, முக்கியமானது. அந்நாட்டின் மிகச்சிறந்த வீரனும் நாட்டின் பிரதான படைத்தளபதியுமான இளவரசன் ஹெக்டர் தன் மனைவியிடமும், குழந்தையிடமும் விடைபெற்றுக் கொள்கிறான். அவன் அக்கலிஸ் உடன் ஒற்றைக்கு ஒற்றையாக மோதப் போகிறான். அக்கலிஸ் வெல்லப்பட முடியாதவன் என எதிரிகளாலும் மதிக்கப்படும் பெரும்வீரன். ஒரு விடிகாலையில் அக்கலிஸ்சின் தலைக்கவசத்தை அணிந்துகொண்டு போரிடுகிறான் அனுபவமில்லாத இளவயதினனான அவன் உறவினன். அவனை அக்கலிஸ் எனத் தவறுதலாக நினைத்துக் கொன்றுவிடுகிறான் ஹெக்டர். அதற்குப் பழிவாங்கவே ஹெக்டரை ஒற்றைக்கு ஒற்றை அழைக்கிறான் அக்கலிஸ். யுத்தம் ஆரம்பி…

  13. இங்கு பல யாழ்கள உறுப்பினர்க்கள், வாழ்க்கையில் கஷ்டப்பட்டு, நொந்து நூலாகி, தங்களுடைய ஆதங்கங்களை கொட்டித் தள்ளுகிறார்கள். பழமும் திண்டு கொட்டையும் போட்டவன் என்ற முறையிலும், வாழ்க்கையில் பலதையும் கண்டு களைத்தவன் என்ற முறையிலும், ஒரு புத்தி ஜீவி (இது எப்படி இருக்கு?) என்ற முறையிலும், உலகின் பல கண்டங்களில் வசித்து நல்லவர் பெரியவரோடு பழகி படித்தவன் என்ற முறையிலும், சில அறிவுரைகளை இங்கு வழங்காலம் என்று இருக்கிறேன். ஆனால், எனது அறிவுரையை கேட்டு நீங்கள் யாரவது நாசமாய் போனால், என்னை குறை சொல்லக் கூடாது. சொல்லிறவன் சொன்னால் கேட்கிற உனக்கு மதி என்னாச்சு", என்ற பழமொழியை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கோ...

  14. எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத் பாலியல் தொழி­லா­ளர்­க­ளாக செயற்­ப­டு­ப­வர்­களில் அதி­க­மா­ன­வர்கள் முழு மன­துடன் இந்த தொழி­லி­லுக்கு வந்­த­வர்கள் இல்­லை­யென்­பது உண்மை. ஏதோ ஒரு விதத்தில் இந்த தொழி­லுக்கு தள்­ளப்­ப­டு­கின்ற பெண்கள் அவற்­றி­லி­ருந்து விடு­பட முடி­யாமல் தொடர்ந்தும் இந்தத் தொழிலில் தம்மை ஈடு­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றனர். அநா­த­ர­வாக சுற்­றித்­தி­ரியும் அல்­லது பொது இடத்தில் தேவை­யின்றி தரித்து நிற்கும் பெண்­களை கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் அவர்­க­ளுக்கு புனர்­வாழ்வு அளிக்கும் வகையில் மேல் மாகாண சமூ­க­சேவை திணைக்­க­ளத்தின் கீழ் இயங்­கி­வ­ரு­கின்ற கங்­கொ­ட­வில மெத்­செ­வன என்ற அரச நிறு­வனம் செயற்­பட்டு வரு­கி­றது. அநா­த­ர­வ…

  15. (சிலாபம் திண்ணனூரான்) 'எல்லாத் தொழிலிலும் பொறாமையும் போட்டிகளும் உள்ளன. எனது தொழிலில் இவ்வாறான நிலை இல்லை. ஒரே வீதியில் பத்துக்கும் மேற்பட்டோர் வியாபாரத்திற்காக பயணிப்போம். எங்களுக்குள் ஒருவித பிரச்சினையும் இல்லை. பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளவும் மாட்டோம். இதுவே, எங்கள் வியாபாரத்தின் தர்மமாகும்' என்கிறார் பழைய பொருட்களை சேகரித்து விற்கும் எஸ். சந்திரசேகர். 'எனக்கு 54 வயதான வயதாகிறது. கொழும்பு முகத்துவாரத்தில் வசிக்கிறேன். முதலில் கொழும்பு புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத்தெருவில் சுமை தொழிலாளியாக வேலை செய்தேன். மிகவும் கஷ்டமான தொழில் இது. சுமைகளுடன் மாடிப்படிகளின் ஏறி இறங்குவது மிகவும் சுலபமான காரியமல்ல. பார்ப்பவர்களுக்கு மிகவும் சுலபமாகத்தான் தெரியும். அத்தொழிலை…

  16. Started by புலவர்,

    மாதவலி -சங்கீதா பாக்கியராஜா டாம்பொன் (Tampon) ஒன்றை.. தேவைப்பட்டாலும் என்ற எண்ணத்துடன் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு வெளியே செல்லக் கிளம்பினேன்.. வீட்டை விட்டு இறங்கி தெருவோரம் காலடித்தடங்களை பின்விட்டு நடக்கும் போதுதான்.. காலத்தின் சுழற்சியில் எத்தனை விடயங்களை விட்டு வந்தேன் என்று நினைத்துப் பார்த்தேன்.. பெரியவளாகிய போது.. துணி சலவை செய்பவரின் மனைவி கொண்டு வந்து கொடுத்த ஒரு கட்டு வெளுத்த பழந் துணியை எடுத்த அம்மா, அதை ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி, இடுப்பில் பாவடை நாடாவொன்றைக் கட்டி, அதில் கோமணம் போல் அந்தத் துணிக்கட்டை சொருகி, விழுந்துவிடாமலிருக்க இரண்டு பின்கள் குத்திவிட்டார்.. ஏதோ தண்டனை போல, நடக்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல், வயிற்று வலியின் வேதனையுட…

  17. வாழ்க்கையில் அனைத்தையும் சமநிலையில் சமாளிப்பது எப்படி? நாம் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர் நோக்கியிருக்கிறோம். அதேபோல் பல பாஸிட்டிவ்வான விஷயங்களையும் சந்தித்து இருக்கிறோம். இருந்தாலும், வெற்றிகளையும் நன்மைகளையும் கண்டு அளவுக்கு அதிகமாக சந்தோஷமாக இருக்காமலும், தோல்விகளையும் துன்பங்களையும் கண்டு மிகவும் துவண்டு போகாமல் இருக்கவும் நாம் கற்றிருக்கிறோமா, பழகியிருக்கிறோமா? இதுதான் நம் வாழ்க்கையில் முக்கியமான விஷயம். இன்பத்தையும் துன்பத்தையும் தோள்களில் போட்டுக் கொண்டு வாழ்க்கையை ஒரே சமநிலையில் கொண்டு செல்கிறோமா என்பதை நமக்கு நாமே அவ்வப்போது அலசி ஆராய்ந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சில வழிமுறைகளை இப்போது நாம் பார்க்கலாம். முன் நோக்கிய…

  18. புலம்பெயர் தமிழர்கள் சிலர் தங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வினை எவ்வாறு நடத்துகின்றனர்? https://www.facebook.com/video/video.php?v=828573870539240

  19. நான் எனது மகளுக்கு போட்டுக் காட்டும் தமிழ் பாடல்கள் இவை, அவா அதனை மிகவும் விரும்பிப் பார்ப்பா. அத்துடன் அவரின் தமிழ் மொழித் தேர்ச்சிக்கும் இப் பாடல்கள் உதவுகின்றன. இவற்றை நான் உங்களுடன் பகிர்கிறேன். உங்களுக்குத் தெரிந்த பாடல்களையும் இவ்விணைப்பில் இணைத்து விடுங்கள். நன்றி

    • 6 replies
    • 1.2k views
  20. ஒரு சமூகப் பரிசோதனை. யாருக்கு கொடுக்கும் மனம் உள்ளது? இந்த வீடியோவைப் பாருங்கள்.

  21. " "இதெல்லாம் நடக்குமெண்டு நினைக்கிறீரோ தம்பி?" அவ்வப்போது சிரித்துக்கொண்டே கேட்பார் மனேஜர். ஏன் நடக்காதா எல்லாம் சரியாத்தானே இருக்கு?" "இட்ஸ் ஒக்கே நான் சும்மா கேட்டன் நீர் என்ன நினைக்கிறீர் பாப்பம் எண்டு..." "என்னவாம் தம்பி.. தண்ணி கொண்டு வரப் போறாராமோ? சிறி இடையில் வந்து "இப்பிடித்தான் முந்தியும்..." கதைசொல்ல ஆரம்பிப்பார். 'அடப்பாவீங்களா நடக்காதுன்னு நினைச்சுக்கொண்டா வேலை செய்யுறீங்க?' எனத் தோன்றும். "என்ன இப்பிடி கதைக்கிறீங்க? இயக்கமே ஓக்கே சொல்லிட்டாங்களே?" "என்னமோ பாப்பம்... எங்களுக்கு நல்லா பே பண்ணீனம் சந்தோஷமா வேலை செய்துட்டு போக வேண்டியதுதான் இட்ஸ் ஒக்கே" - மனேஜர் 'இட்ஸ் ஒக்கே' என்பதே மனேஜரின் தாரக மந்திரம். 'ஒரு பொல்லாப்புமில்லை' என்கிற 'விச…

  22. நீங்களும் உலக நாயகன்தான்! மனிதனின் ஆயுள் எத்தனை வருடங்கள்? என்று என் கருத்தரங்குகளில் அடிக்கடி கேட்பேன். 60கள் என்பதுதான் அதிகமாகச் சொல்லப்படும் விடை. சிலர் இப்போது மருத்துவம் வளர்ந்ததால் 70கள் என்பார்கள். சரியான பதில் 120 என்றால் பலர் நம்பமாட்டார்கள். ஜப்பானில் ஒரு தீவில் 100 வயதைத் தாண்டியவர்கள் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள் என்று தகவல் கூறி மருத்துவ, மானிடவியல் ஆராய்ச்சிகள் எல்லாம் சொல்லி விளக்கிய பின் சரி என்பார்கள். ஏன் 60 ? அது சரி, ஏன் எல்லோரும் 60கள் தான் ஆயுள் என்கிறார்கள்? பணி ஓய்வு காலம் 58 அல்லது 60 வயதில். அதற்கு மேல் எதற்கு வாழ்வது என்கிற எண்ணம்தான். சம்பாதிக்காத மனிதன் வாழ்வதில் என்ன அர்த்தம் என்று நம் சமூகம் மறைமுகமாகச் சேதி சொல்கிறதோ? இன்றைய ந…

  23. கற்பு என்றால் என்ன? – இந்திரா பார்த்தசாரதி அற்ப விஷயங்களையும் அரசியலாக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வாயில் அகப்பட்டு, சமீபத்தில், மிகவும் அவதியுற்றச் சொல், ‘ கற்பு ‘. ‘கற்பு ‘ என்றால் என்ன ? ‘கல் ‘ என்ற வேர்ச்சொல்லினின்றும் பிறந்தவை ‘கற்பு ‘, ‘கல்வி ‘ போன்ற சொற்கள். ‘கல் ‘ என்றால், ‘தோண்டுதல் ‘. ஆங்கிலச் சொல், ‘ cultivate ‘, ‘culture ‘ போன்ற சொற்களும் இந்தத் ‘ தோண்டுதலை ‘ ( ‘உழுதல் ‘- லத்தீன்-cultivatus) அடிப்படையாகக் கொண்டு பிறந்த சொற்கள்தாம். கற்பிக்கப்படுவது எதுவோ அது ‘கற்பு ‘. கல்வியினால் உண்டாகும் ஞானமும் ‘கற்பு ‘தான். ‘பெரிய திருமொழியில் ‘ (திருமங்கைமன்னன்), ‘கற்பு ‘ என்ற சொல் ‘பெரிய ஞானம் ‘ என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது. ‘ஆழி ஏந்திய கையனை, அந்தண…

    • 0 replies
    • 7.1k views
  24. நிலாப் பாட்டி (குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள், புதிர்கள்,தகவல்கள்) ஒரு குட்டிப் புலியின் குரல் சுட்டிக் குழந்தைகளே! நான்தான் குட்டிப் புலி கோபு! இப்போதான் முதன்முதலா உங்களைப் பாக்குறேன். அதனால, நானே அறிமுகப்படுத்திக்கிறேன். நான் ஒரு வேங்கைப் புலிக் குட்டி (Bengal Tiger). வேங்கைப் புலின்னா, ஏதோ வித்தியாசமான புலின்னு நினைச்சுக்காதீங்க. இந்தியாவோட தேசிய விலங்குன்னு படிச்சிருப்பீங்கள்ல. அந்தப் புலியோட குட்டிதான் நான். மூங்கில் புதர்கள் நிறைஞ்ச ஒரு காட்டுலதான் நான் பொறந்தேன். இப்போதான் இந்த உலகத்தை எட்டிப் பாக்குறேன். ஏன்னா, நான் ரொம்ப ரொம்ப குட்டி. எனக்கு பார்வை தெரிஞ்சு கொஞ்ச நாள்தான் ஆச்சு. பொறந்து ரெண்டு, மூணு வாரத்துக்குப் பின்னாடிதான் புலிக் குட்டிகள…

    • 10 replies
    • 5.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.