Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது ! சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு... "பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்…

  2. ஓரு மனிதனுடைய இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல் தூரம் உடலில் பயணிக்கிறது. ஒருவன் 438 கன அடிக்காற்றை மூச்சாக உள்ளே இழுத்துக் கொள்கிறான். 750 தசைகளை அசைக்கிறான். 70,00,000 மூளை செல்களைப் பயன்படுத்துகிறான். இந்தச் செயல்களால் மனிதன் களைத்துப் போவதில்லை. ஏனென்றால் இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கின்றன. இதில் நம் முயற்சி என்று எதுவும் இல்லை. நாமாக முயற்சி எடுத்துச் செய்யும் சில்லறை வேலைகளால்தான் நாம் களைத்துப் போகிறோம். ஏன்? இயற்கை, தான் செய்யும் வேலைகளுக்கு கணக்கு வைத்துக் கொள்வதில்லை. நாம் துரும்பை நகர்த்தினால்கூட கணக்கு வைத்துக் கொள்கிறோம். இயற்கை, தன் செயல்களைச் சுமையாக நினைப்பதில்லை. மனிதன் தன் பெரும்பாலான செயல்களை சுமையாகவ…

  3. என்னினமே என்சனமே என்னை உனக்குத் தெரிகிறதா? என்று ஒரு கவிஞன் பாடல் இயற்றினான். அந்தப் பாடல் வரிகள் குறித்து சில மாற்றங்கள் செய்திருக்க வேண்டும் என்பது நம் நினைப்பு. அந்த மாற்றம்: என்னினமே என்சனமே உன்னை உனக்குத் தெரிகிறதா? என்பதாக இருந்திருக்க வேண்டும்? உன்னையே நீ அறிவாய் என்ற தத்துவம் மிகவும் முக்கியமானது. என்னை எனக்கு அறிவித்தான் எங்கள் குரு நாதன் என்ற தவத்திரு யோகர்சுவாமியின் திருவாக்குக்கு அப்பால் இன்னொரு எடுத்துக் காட்டுத் தேவையில்லை. எனவே என்னை நான் அறிதல் என்பது மிக வும் முக்கியமானதாகும்.எனினும் தமிழ் மக் களாகிய நாம் எங்களை நாங்களே அறிதல் என்பதில் தவறிழைத்து விடுகிறோம். கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் நடந்த த…

    • 0 replies
    • 923 views
  4. வாழ்க்கையின் பல இடங்களிலும் அடிக்கடி அடி வாங்குபவள் பெண் தான். பெற்றோரின், உறவுகளின் கைக்குள் வளரும் அவள், திருமணம் என்ற சடங்கினுள் புகுத்தப்பட்டதும் பல விடயங்களில் கைவிடப்படுகிறாள்... அல்லது கவனிப்பாரற்று போகிறாள். கடந்த 7-11-2012 அன்று விஜய் தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை பார்த்ததிலிருந்து இந்த எண்ணம் என்னை உலுப்பிக் கொண்டே இருந்தது. தன் வாழ்க்கையில் தவறும் பெண்ணை நடத்தை கெட்டவள் என்று எத்தனை இலகுவாக கூறி விடுகிறார்கள்.... அவள் ஏன், எப்படி, யாரால் அப்படியானாள் என்பதைப் பற்றி யாரும் பேசத் தயாரில்லை. தன் கணவனிடமிருந்து கிடைக்காத அன்பும் அரவணைப்பும் இன்னொருவரிடம் கிடைக்கும் போது, அவர்கள் மனம் பாசத்தில் ஆரம்பித்து பின்னர் மெல்ல மெல்ல தடம் மாறிப் போவ…

  5. பதின்மத்தின் பரிதவிப்பில்…………. பவள சங்கரி குழந்தைப் பருவம் மற்றும் காளப் பருவம், ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு அழகிய, நுண்ணிழைகளால் நெய்யப்பட்டதொரு மெல்லிய பருவம் இந்த ‘டீன் ஏஜ்’ என்கிற பதின்மப் பருவம்! ஆம் அதிகமாக உணர்ச்சிவயப்படுதலும், அச்சம் கொள்ளுதலும், ஊசலாடும் உள்ளமும், கோபம் கொள்ளுதலும், கை வந்த கலை இந்தப் பருவத்தினருக்கு. பெற்றோராகிய நாமும் சில காலம் முன்புதான் இப்பருவத்தைக் கடந்து வந்தவர்களாக இருப்பினும், ஏனோ பல சமயங்களில் இன்று நம் குழந்தைகளின் அப்பருவத்திற்கேயுரிய பிரச்சனைகளைக் கண்டு, அச்சம் கொண்டு, அதனை விட்டுப் பிடிக்காமல், அவர்கள் மீது மேலும் அழுத்தம் ஏற்படுத்த எத்தனிக்கிறோம். பெற்றோர் தம் குழந்தைகளுடன் நல்ல நண்பர்களாகப் பழக முயற்சிக்க வேண்டும். …

  6. திருமதி கொப்பலின் குற்றச்சாட்டு by noelnadesan திருமதி கொப்பலானின் ஆறடி உயரமும் ஆண்கள் போன்ற இடைவெளிவிடாத இடையமைப்பும் கடுகடுப்பான முகமும் எனது கவனத்தை ஈர்த்தது. அவருக்கு பின்னால் பதினாலு வயது இளம்பெண் தாயின் மறுபதிப்பாக சிறிய ரெரியர் நாய்க்குட்டியை மார்புடன் இறுக்கமாக அணைத்தபடிவந்தாள். இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்துசென்றேன். தங்களது மிருகவைத்தியரிடம் அப்பொயின்மன்ட் கிடைக்காததால் வந்தோம் என தாயார் கூறினார். அவர்கள் வார்த்தையில் உள்ள தொனியை ரசிக்கமுடியவில்லை. ஆனாலும் அந்த இளம் பெண்ணிடம் நாய்க்குட்டியை எனது மேசையில் வைத்துவிட சொன்னேன். எனது வேண்டுகோளை அலட்சியம் செய்தாளோ அல்லது புரியவில்லையோ? அந்த நாய்க்குட்டியை மேலும் இறுக்கமாக அணைத்துக்கொண்டார். ஏதாவது மனநல குறை…

  7. உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா? கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை. * உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா. * இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன. * இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது. * இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06…

  8. மாலை நேரம். வீட்டுக்கு வருகிறீர்கள். நல்ல பசி; வயிற்றைக் கிள்ளுகிறது. சாப்பிட உட்காருகிறீர்கள். மேசையில் உணவு ஏதுமில்லை. நீங்கள் என்ன செய்வீர்கள்? அ. மனைவிக்கு உதவி செய்யச் சமையலறைக்குச் செல்வீர்கள். ஆ. தொலைக்காட்சி பார்த்தபடி பொறுமையோடு காத்திருப்பீர்கள். இ. `விருட்’டென்று எழுந்து ஏதேனும் உணவகத்துக்குச் செல்வீர்கள். ஈ. எகிறிக் குதித்து எட்டு ஊருக்குக் கேட்குமாறு காட்டுக்கூச்சல் போடுவீர்கள். உங்கள் விடை என்ன? உங்கள் விடை `அ’ என்றால்… உங்கள் மனைவி தமன்னாவாக இருக்கவேண்டும்; இல்லையெனில் கிட்…டத்…தட்…ட… ஒரு தமன்னாவாக இருக்கவேண்டும். `ஆ’ என்றால்… அண்மையில்தான் உங்களுக்குத் திருமணம் ஆகி இருக்கவேண்டும். `இ’, `ஈ’ – இவை இரண்டுக்கும் விளக்கம் …

    • 2 replies
    • 1.1k views
  9. உணவு குறித்த ஒருவரின் மனோபாவம், சாப்பிடும் விதத்தை கவனிப்பதன் மூலம் அவரின் நடத்தை, குணாதிசயங்களை கணித்திட முடியும் என்கிறார்கள், வல்லுனர்கள். `சாப்பாட்டு மேஜையில் குளறுபடியானவராகவும், பிரச்சினைக்குரியவராகவும் நடந்து கொள்பவர் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார்' என்கிறார், புகழ்பெற்ற மேலை நாட்டு எழுத்தாளர் ஒருவர். `உணவைப் பெறுவது, சாப்பிடுவது போன்ற விஷயங்களில் சீடர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்தே அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதை அறிந்து, தனக்கான சீடர்களை அந்த காலத்தில் முனிவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்' என்கிறார், டெல்லியைச் சேர்ந்த பிரபல நட்சத்திர ஹோட்டல் `செப்' மஞ்சித் எஸ்.கில். "முடியும்..! அதனால்தான் இன்று நிறைய பேர் மாப்பிள்ளை, பெண் பார்ப்பதற்கு பிரபலமா…

  10. :குடிப்பழக்கத்தை நிறுத்தும் புதிய மருந்து ஒன்றை, சிலி நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில், இது நடைமுறைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களால், அதை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடிவதில்லை. இதனால், இது ஒரு சமூக பிரச்னையாகவே கருதப்படுகிறது. ஆனால், ரசாயன மாற்றத்தால் ஏற்படும் இந்த தூண்டுதலை, ரசாயனம் கொண்டே சரி செய்துவிடலாம் என்கிறார், சிலி நாட்டை சேர்ந்த ஆசின்ஜோ என்ற ஆராய்ச்சியாளர்.இந்த புதிய மருந்தை, ஊசி மூலம் உட்செலுத்தப்படும் பட்சத்தில், அதன் தாக்கம் குறைந்தபட்சம், ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டு வரை, நம் உடலில் நிலைத்திருக்கும். எனவே, மது குடிக்க வேண்டும் என்ற தூண்டுதலை இது பெருமளவில் தடுத்துவிடுகிறது…

    • 0 replies
    • 672 views
  11. ஊரில.. எங்கள் மக்கள் கடின உழைப்பால்.. வீடு கட்டி.. குடிபுகுந்து.....மதில் கட்டி.. இல்ல சுற்று வேலி போட்டு.. அழகாக முற்றம் பெருக்கி.. பலவகை பூமரங்கள் நாட்டி.. அதற்கு காலையும் மாலையும் தண்ணி பாய்ச்சி.. செழிப்புற.. வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இடையில்.. சிங்கள பேரினவாத.. மேலாதிக்க வெறி எங்கள் தேசத்தையும் தானே பரிபாலிக்கனும் என்று விரும்ப.. நடந்த விரும்பத்தகாத திணிக்கப்பட்ட போர் விளைவுகளால்.. வீடிழந்து.. ஊரிழந்து.. நாடிழந்து.. இன்று நாடோடிகளாக உலகம் பூரா பரவி நாம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இன்று எம் வாழ்க்கை அதன் பாரம்பரியம் இழந்து.. போக்கிடம் திணித்தவை மென்று..விழுங்கி.. ஏதோ நாங்களும்.. வாழிறம் என்று போய்க் கொண்டிருக்கிறது. இப்ப எல்லாம் நாம்.. அதிகம்.. வீடு க…

  12. கைக்கடிகாரம் மணிகாட்டிறதுக்கு (அதுக்குத்தான் CASIO இருக்கவே இருக்கே) என்று இருந்தது போய் இப்ப எல்லாம் முதலீட்டுக்கு வாங்கிறது (நகை வாங்கிறது போல) தான் வாடிக்கை. நானும் ஒன்று வாங்கி வைப்பம் என்று இணையத்தில தேடினால்.. பல ரகங்கள் பல விலைகளில் வருகின்றன. எல்லாமே பார்க்க கவர்ச்சியாகவும் அழகாகவும்.. இருக்கின்றன. அந்த வகையில் எந்தக் கடிகாரம் வாங்கினால் நல்ல அழகாகவும்..முதலீடாகவும்.. இருக்கும். அத்தோடு நேரமும் சரியாக் காட்டோனும். Rolex வாங்கிற அளவுக்கு நான் பணக்காரன் இல்லை. Citizen Seiko Ben Sherman Emporio Armani Brevet Omega இப்படியான ரகங்களில் எது நல்லது.. நீண்ட காலம் விலைமதிப்பிறக்கம் இன்றி வைத்திருக்கக் கூடியது..??! இப்ப…

  13. “”எனக்குச் சாக ஏதும் மருந்துதாங்கோ” எனக் கேட்டார் ஒரு முதியவர். ஏன் என நினைகிறீர்கள்? பல முதியவர்கள் இவ்வாறு கேட்கும் நிலையில் தான் அவர்களை எமது சமூகம் வைத்திருக்கிறது. “”"”" வயசு போட்டுது, நடப்பு ஒண்டும் விளங்காது சும்மா பழங் கதைகளையே வழவழக்கினம்” “உங்கடை பழங்கால மோட்டு நம்பிக்கைகளை இந்தக் காலத்திலை ஆர் கேட்டு நடக்கிறது” “வயசு போனால் பேசாமல் மூலையில் முடங்கிக் கிடக்கிறதுக்கு ஏன் எழும்பித் திரிஞ்சு, விழுந்து முறியிறியள்” வயசானவர்களை இவ்வாறெல்லாம் எடுத்தெறிந்து இழக்கமாகப் பேசுவதைக் கேட்கிறோம். பெற்றோர்களையும் முதியோர்களையும் தெய்வமாக மதித்த எமது சமூகத்தில் இன்று இவ்வாறு பேசுவதைக் காண்பது சகஜமாகிவி…

  14. இளைய பாரதத்தினாய்….. ஈஸ்வரனைக் காணும் போதெல்லாம் எனக்கு சந்தோசமாக இருக்கும். இவ்வளவு சின்ன வயதில் அரசியலில் அதுவும் ஒரு பிரபலமான கட்சியில் இணைந்து ஒன்றியக் குழு உறுப்பினராகி, தன்னைத் தேர்ந்தெடுத்த பகுதி மக்களுக்காய் அவன் பணி செய்வதை நான் ரசித்திருக்கிறேன். படித்து விட்டு வேலையில்லாமலிருந்த இளம்வயதில் நாங்கள் பொழுது போக்காய் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டலைந்து திரிந்தோம். சுவர்களில் சின்னம் வரைவதில் தொடங்கி, தேர்தல் நாளில் வாக்குச் சாவடியில் முகவராய் உட்காருவது வரையில் எல்லாப் பணிகளுக்கும் நாங்களே பொறுப்பாளிகள். எங்களை அரசியல் கட்சிக்காரர்கள் தேவையான அளவுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் எங்களில் ஒருவரும் அரசியல் கட்சியில் பதவி…

  15. வன்முறைதான் வழியா? ஸ்ரீரஞ்சனி வன்முறை என்பது, அதிகாரம் அல்லது உடற்பலத்தைப் பயன்படுத்தி ஒருவரை அல்லது அவர் சார்ந்த குழுவைத் துன்புறுத்துதல் அல்லது பொருள்களைச் சேதப்படுத்துவதன் மூலம் குறித்தவரை அல்லது குறித்த குழுவைப் பயப்படுத்துதல் ஆகும். முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு வன்முறையே சிறந்த வழி எனப் பலர் கருதுகின்றனர். அதற்கு, அவர்கள் வளர்ந்த முறையும், வாழ்ந்த சு10ழலும் முக்கிய காரணமாகின்றன. “அடி வாங்கி வளர்ந்ததால் தான், நான் இன்று ஒர் உயர்நிலையில் இருக்கிறேன். தழும்பு வந்தால் பெற்றோர்களிலும், ஆசிரியர்களிலும் ஒரு மரியாதையையும் பயமும் தானாகவே வந்துவிடும்!”- எமது சமுதாயத்தில் பெரியமனிதர் என மதிக்கப்படும் ஒருவர், இங்கு நிகழ்ந்த நடன அரங்கேற்றமொன்றில் சொன்ன வசனங்கள் இவை. இவ்வக…

  16. முதலில் ஒரு மூங்கில் குச்சி.உடனடியாக ஒரு உலர்ந்த சுள்ளி.சற்று நேரம் அமைதி. பின்னர் சரேலென்று வந்து ஒரு சணல் கயிறு.என் வீட்டுத் தாழ்வாரத்திலிருந்து ஒவ்வொன்றாகக் ’களவு’ போய்க் கொண்டிருக்கிறது. அண்ணாந்து பார்க்கிறேன். என் ஜன்னலுக்கு வெளியே விரிந்து நிற்கும் வேப்பமரத்தில் காகம் ஒன்று கூடுகட்டிக் கொண்டிருக்கிறது. ஓ! அதன் குடும்பத்தில் ஒரு புதிய தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. அதனை வரவேற்கதான் அந்தக் காக்கை அலைந்து திரிந்து அகப்பட்டதையெல்லாம் அலகில் ஏந்திச் சென்று அந்தக் கூட்டை அமைக்கிறது . எனக்குள் இருக்கும் குழந்தைக்கு இந்தப் பறவைக் கூடுகள் எப்போதுமே ஓர் ஆச்சரியம். எத்தனை வடிவம்! எத்தனை நுட்பம்! எத்தனை கரிசனம்! எத்தனை உழைப்பு! உலகில் உள்ள அத்தனை கூடுகளுக்கும் அட்ரஸ் …

    • 19 replies
    • 1.8k views
  17. சென்னை:""அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில், எந்த கலாசாரத்தை பின்பற்றுவது என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இதனால், எதிர்கால வாழ்க்கைக்கும், சந்ததிகளுக்கும் அவர்களால் பயனில்லாமல் போகிறது,'' என, அமெரிக்காவின் ஜியார்ஜியா பெரிமீட்டர் கல்லூரி பேராசிரியர் சால்லி வர்கீஸ் கூறினார். சர்வதேச சமூக அறிவியல் மாநாடு, சென்னை எத்திராஜ் கல்லூரி நேற்று துவங்கியது. மூன்று நாள் மாநாட்டில், சமூக அறிவியலின் புதிய கோணங்கள், அம்சங்கள், வளர்ச்சி முறைகள், புதுமை புகுத்தல் உள்ளிட்ட குறித்து, கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் விவாதிக்கின்றனர்.மாநாட்டை எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை தலைவர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார். அமெரிக்கா ஜியார்ஜியா பெரிமீட்டர் கல்லூரி பேராசிரியர் சால்லி …

  18. சே குவேரா... புரட்சிக்காரர்களின் இதயத்திலும், கோமாளிகளின் பேஸ்புக் புரபைல் பிக்சரிலும் வாழ்கிறார்... * * * அபாய அறிவிப்பு..: இந்தப் பதிவை வாசித்ததும், எதோ என்னை நான் ஒரு அறிஞனாகவோ, அதிபுத்திசாலியாகவோ எண்ணிக்கொண்டிருப்பதாகவும், வாசிப்பவன் எல்லோருமே முட்டாள் என கருதுவதாகவும், எனக்கு தமிழையோ, உலகத்தையோ, மனிதர்களையோ பற்றி நல்ல அபிப்பிராயமே இல்லை போலவும் தோன்றும். நான் இந்தப் பதிவில் காய்ச்சி இருப்பது, சற்றும் சிந்தனை இல்லாது, வெறுமனே பேஸ்புக்கில் அறிஞர்களாகவும், நல்லவர்களாகவும் காட்டிக் கொள்பவர்களை மட்டும்தான். ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். நான் இங்கே முட்டாள் எனச் சொல்லி இருக்கும் யாருமே, இப்படியாக ஒரு வலைப்பூ பதிவை வைத்து வாசிக்கு…

  19. ஹிந்துக்களின் சாதிவெறிக்கு வெள்ளைக்காரன் தான் காரணம் ? மதங்களைத் தாண்டி எழுத நினைத்தாலும் பலதடவை முடிவதில்லை, தினமும் மதங்களின் பெயரால் சொல்லப்படும் பரப்புரைகளைக் கேட்கும் போது சிரிப்பதா, கோப்படுவதா எனத் தெரியவில்லை. ஹிந்து அடிப்படைவாதிகளால் கூட பலமுறை சாதி முறை சரியான ஒன்றில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் அவற்றை களைவதற்கு முன்வருவதில் தயக்கம் காட்டியே வருகின்றார்கள். பலர் நமது பாரம்பரியத்தில் பெருமிதம் உடையவர்களாக இருக்கின்றார்கள், சாதியத்தையும் அதன் அங்கமாகவே பார்க்கின்றார்கள். ஆனால் அண்மையக் காலமாக எழுந்துள்ள புதிய ஹிந்து அறிவுஜீவிகள் பலர் இந்தியாவின் சாதியத்துக்கு முகாலயர்களும், பிரித்தானியர்களும் தான் காரணம் என்ற புதுவித விளக்கங்களை முன்வைக்கத் தொட…

  20. ஏன்னுடன் வேலை செய்பவர்களில் ஆபிரிக்காகாரன ஒருவனுமிருந்தான்.. மிக நல்லவன் நல்ல பகிடிகாரன். ஒரு நாள் மேலதிகாரி ஒருவர் வந்து தேவையில்லாமல் மிக அதிகமாக அவனிடம் கத்தினார். அவனோ மிக சிறப்பாக வேலை செய்து கொண்டிருந்தவன் திரும்பி என்னை பார்த்தான் ஏதோ ஆப்பிரிக்க மொழியில் சொல்லிவிட்டு பழையபடி வேலை செய்யத் தொடங்கினான். சிறிது நேரம் அவனது கோபம் அடங்க விட்டு மெதுவாக அவனிடம் என்னநடந்தது என்னக் கேட்டேன். மேலதிகாரி போன பக்கம் பார்த்து 'சிக்கன் மைண்டட் மான்'; என்றான் இப்போ எனக்கு நடந்த பிரச்சனை பற்றி கேட்ட கேள்வி மேலான ஆவல் போய் கோழிப் புத்தி பத்தி கேட்க வேணும் போல இருந்தது. மெதுவாக கோழிப் புத்தி பற்றி கேட்டேன். அது என்னடாப்பா அந்த கோழிப் புத்தி? மிக ஆறுதலாக என்னைப் பார்த்தான் ப…

  21. எனது குடும்பத்தில் துன்பவியல் நாடகங்களுக்கு பஞ்சமேயில்லை..! எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்திருக்கிறோம்.. உச்சக்கட்டமாக எனது தந்தை மற்றும் தாயின் புற்றுநோய் அவலங்களைக் குறிப்பிடலாம்.. இவைகளைக் கடந்து இத்தனையாண்டுகள் கழித்து மீண்டும் ஒரு அவலம்..! இப்போது எனது அண்ணன்..! பிரிவியூ தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாளில், என்னை உடனே தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனைக்கு வரும்படி போனில் அழைத்தார் எனது அண்ணனின் சகலை..! ஏற்கெனவே சென்ற மாதம் திருச்சியில் இருந்த அண்ணனின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவர் திட உணவு சாப்பிட முடியாமல் வெறும் கஞ்சி மட்டுமே குடித்துக் கொண்டிருந்தது என்னை கொஞ்சம் பயமுறுத்தியிருந்தது. அப்படியொன்று இருக்கக் கூடாதுடா முருகா என்று…

  22. லைவாணி எதற்கெடுத்தாலும் அழுதுவிடுவாள். அவள் அழுகையை அவ்வளவு சீக்கிரம் நிறுத்தவும் முடியாது. அதோடு, எப்போதும் அது இப்படி இருக்குமோ.. அப்படி இருக்குமோ என்று யோசித்துக் யோசித்து குழம்பிக் கொண்டே இருப்பாள். இதனால் அவளுக்கு அடிக்கடி தீராத தலைவலி வந்து சேரும். தலைவலிக்கு வைத்தியம் பார்க்க போனபோது தான் தெரிந்தது அவளுக்கு இருப்பது மன அழுத்தம் என்று. இதைக் கேட்டு அவளின் குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள். காரணம் அவளுக்கு 21 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் எப்படி மன அழுத்தம் வரும் என குழம்பிப் போனார்கள். கலைவாணி மட்டுமல்ல, இது போன்ற பலரும் இந்த மன அழுத்த நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த மன அழுத்தம் யாருக்கு வரும், எதனால் வரும், அதை எப்படி தீர்ப்பது என்று சொல்லுகிறார் மனநல மருத்த…

  23. கொலை, பாலியல் வன்முறைகளில் சிறுவர்கள் - சமூக வலைதளங்கள் காரணமா? டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்தால் பலியான சம்பவத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவனும் இடம் பெற்றிருப்பதால், வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், மைனர் என்பதற்காக வயதை குறைக்கலாமா என்ற பரிசீலனையில் உள்ளது. இந்தநிலையில் கடந்த 2011ம் ஆண்டு வரை 33 ஆயிரம் சிறுவர்கள் (18 வயதுக்குட்பட்டவர்கள்) மீது குற்றவழக்குகள் அந்தந்த மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை சம்பவங்களில் இப்போது பதினாறு வயது முதல் 18 வயதிற்குட்பட்டோர் அதிகம் ஈடுபடுகின்றனர். ஆடம்பர செலவுகளுக்காகவும், போதைக்காகவும் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அதேபோல் பள்ளிப் பருவத்தில் இருந்தே பாலியல் …

  24. Started by akootha,

    இவர் யார் ? என்ற விடைக்கு கீழே படியுங்கள்... ஒரு சோக நிகழ்வின் தொடர்ச்சியாகத் தான் பாண்டி எனக்கு அறிமுகமானார். அன்பு நண்பர் அந்தோணி 2 ஆண்டுகளுக்கு முன் திடீரென்று காலமானபோது தான். அந்தோணிக்கு தமிழ் வலையுலக நண்பர்கள் உதவியுடன் வாங்கிக் கொடுத்து இருந்த தானியங்கி சக்கர நாற்காலியை என்ன செய்யலாம் என்று யோசித்த போது, அந்தோணிக்குத் தெரிந்த பாண்டிக்கு அதை வழங்க, நண்பர்கள் சம்மதத்துடன் முடிவு செய்தேன். பாண்டி பிறந்து சில ஆண்டுகளிலேயே அவரது கால்கள் செயலிழந்து விட்டன என்று கேள்விப்பட்டேன். சற்றே பழுதடைந்திருந்த சக்கர நாற்காலியை பழுது பார்த்து பாண்டிக்கு கொடுத்தேன். பாண்டிக்கு மிகவும் சந்தோஷம். பாண்டியின் கால்கள் செயல் இழந்திருந்தாலும், அவரது கைகளில் அற்புதமான திறமை ஒளிந்திரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.