Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புஷ்ஷின் வருகைக்கு எதிர்ப்பத் தெரிவித்து பிரேசிலில் வன்முறைகள், ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் பிரேசில் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றுள்ளன. பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமி

  2. சென்னை: இலங்கை கடற்படையினரின் வெறித் தாக்குதலில் சிக்கி இதுவரை 123 தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை 250க்கும் மேல் என்று மீனவர்கள் கூறுகின்றனர். இலங்கையில் இனப் பிரச்சினை தலை தூக்கத் தொடங்கியது முதல் தமிழர்கள் என்றாலே அவர்கள் விடுதலைப் புலிகள் அல்லது அவர்களைப் போன்ற பிற போராளிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற அபத்தமான கொள்கையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது இலங்கை அரசு. தமிழர்களை எதிரிகளாக நினைத்துக் கொண்டு, தங்களது அன்றாட வாழக்கைக்காக உயிரைப் பணயம் வைத்து கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சரமாரியாக தாக்கிக் கொன்று வருகிறது. உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இப்படி ஒரு இனப் படுகொலை நடந்து கொண்டிருக்க முடியாது. அந்த அளவுக்கு த…

  3. மைக்கேல் ஜாக்சன். அவருடன் விருந்து சாப்பிட புக்செய்ய கட்டணம் ரூ.3 லட்சம். பிரபல பாம் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் இப்பொழுது ஜப்பானில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். டோக்கியோ நகரில் அவரது ரசிகர்கள் சார்பில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மைக்கேல் ஜாக்சன் கலந்து கொண்டார். அவருடன் விருந்து சாப்பிட புக்செய்ய கட்டணம் ரூ.3 லட்சம். 300க்கும் மேற்பட்ட வர்கள் கட்டணம் செலுத்தி இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இதே நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட அனாதை குழந்தைகளும், உடல் ஊன முற்றவர்களும் இலவசமாக அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுடன் மைக்கேல் ஜாக் சன் நீண்ட நேரம் உட்கார்ந்து பேசினார். விடுப்பு : Viduppu.com

    • 2 replies
    • 1.2k views
  4. சிறைச்சாலையை தாக்கி 140 பேரை விடுவித்தனர் அல்- ஹைடா தீவிரவாதிகள் ஈராக்கின் வடபகுதி நகரான மொசுல் மீது தாக்குதலை மேற்கொண்ட அல்-ஹைதா தீவிரவாதிகள் 140 இற்கும் மேற்பட்டவர்களை விடுவித்து தம்முடன் கூட்டிச் சென்றுள்ளனர். அமெரிக்கா 2003 இல் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர் இடம்பெற்ற பாரிய சிறையுடைப்பு இதுவென தெரிவிக்கப்படுகின்றது. இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அபு ஒமர் அல்-பக்தாடி தலைமையிலான 300 தீவிர வாதிகளே மாலை வேளையில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். பொலிஸார் இதனை முறியடிப்பதற்காக அமெரிக்க இராணுவத்தினரை துணைக்கு அழைத்திருந்தனர். சிறை மீட்கப்பட்ட அனைவரும் கிளர்ச்சிக்காரர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  5. அமெரிக்க கல்லூரி வளாகத்திலிருந்து நோபல் விருது திருடப்பட்டது அமெரிக்காவின் பெர்க்லி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து நோபல் விருது திருட்டுப் போய்விட்டது. 1939 ஆம் ஆண்டு இயற்பியல் விஞ்ஞானி எர்னஸ்ட் - ஓ - லாரன்ஸ் என்பவருக்கு வழங்கப்பட்டது இந்த விருது. 23 கரட் தங்கத்தால் செய்யப்பட்டது. நாணயம் போல இருக்கும், சிறந்த கலை வேலைப்பாடுகள் உள்ளது. மிகப்பழையது என்பதாலேயே, கலைப்பொருள் சேகரிப்பவர்களிடம் நன்றாக விலை போகக்கூடியது. எல்லாவற்றையும் விட இந்த பல்கலைக் கழகத்துக்குக் கிடைத்த முதல் விருது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு சுமார் 2 இலட்சம் ரூபாவாகும். இதுவெறும் தங்கத்துக்கும் அதன் வேலைப்பாடுக்குமானது. ஆனால், உண்மை மதிப்பு இதைவிட ப…

  6. மகா பணக்காரர்கள் வரிசையில் 36 இந்தியர்கள் மார்ச் 09, 2007 நியூயார்க்: உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 36 மகா கோடீஸ்வரர்கள் இடம் பெற்றுள்ளனர். பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை 2007ம் ஆண்டின் மிகப் பெரிய கோடீஸவரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 36 பேர் இந்தியர்கள் ஆவர். இந்தியாவச் சேர்ந்த லட்சுமி மிட்டல், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ஆசிம் பிரேம்ஜி ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். மொத்தம் 946 பெரும் பணக்காரர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்தியர்களின் மொத்த சொத்து மதிப்பு 191 பில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எஃகு நிறுவன தொழிலில் உலகைக் கலக்கி வரும் லட்சுமி மி…

  7. ரூ.20 ஆயிரத்தில் விமானம் ராணிப்பேட்டை: மோட்டார் மெக்கானிக் மாணவர்கள் இருவர், ரூ.20 ஆயிரம் செலவில் பயிற்சி விமானத்தை தயாரித்து சாதனை படைத்தனர். இதன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ராணிப்பேட்டை அடுத்த மலைமேடு அக்ராவரத்தை சேர்ந்தவர் கோபிநாத் (25). அதே ஊரை சேர்ந்தவர் லோகநாதன் (20). இவர்கள் இருவரும் மோட்டார் மெக்கானிக் டிப்ளமோ படித்து உள்ளனர். இவர்கள் ராணிப்பேட்டை லயோலா சமுதாய கல்லூரியில் சேர்ந்து பயிற்சி விமானத்தை சொந்தமாக தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதமாக விடாமுயற்சியுடன் செயல்பட்டனர். இதன் காரணமாக குறைந்த செலவில் பயிற்சி விமானத்தை தயாரிக்க முடியும் என்பதை நிரூபித்து சாதனை படைத்தனர். இவர்கள் ரூ. 20 ஆயிரம் செலவில் பயிற்சி வி…

  8. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதிக்க விரும்பும் 11 பிரபலங்கள் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் பதவிக்காலம் 2008 ஆம் ஆண்டு முடிகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்கிறது. இதில் அங்குள்ள பிரதான 2 கட்சிகளில் இருந்து மொத்தம் 11 பேர் போட்டியிடுகிறார்கள். இப்போதைய ஆளும் கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக 8 பிரபலங்கள் அறிவித்து உள்ளன. அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அரிசோனா செனட்டர் ஜோன் மெக்கைன். அவருக்கு 70 வயது ஆகிறது. வியட்நாம் போர் நடந்த போது அதில் கலந்து கொண்டு வீரதீர சாகசங்கள் செய்து கதாநாயகன் ஆனார். இவர் 2000 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட மனுச் செய்து கட்சியின் நியமனத்தைப்…

  9. சித்திரை முதல் வார முடிவில் வழமையாக அமுல்படுத்தப்படும் வடதுருவத்திற்கான கோடைகால நேரமாற்றம் இந்த முறை பங்குனி 11 ஆம் திகதி நடைமுறைக்கு வர இருக்கிறது. பூமி வெப்பமடைதலுக்கு ஒரு காரணமாக கருதப்படும் சக்திப் பயன்பாடு விரையம் போன்றவற்றை குறைக்க அல்லது சக்தியை சேமிக்க இந்த நடைமுறை கடைப் பிடிக்கப்பட இருக்கிறது. கணனி போன்ற இலத்திரனியல் உபகரணங்கள் வழமையாக தன்னிச்சையாக மாறும் என்பதின் மூலம் அறிந்து கெள்ளலாம் என்று நம்பி இருப்பவர்கள் அவதானமாக இருக்கவும். அவை தன்னிச்சையாக மாறுவது வழமை சித்திரை மாத முதல் வரமுடிவாகத்தான் இருக்கும்.

  10. மத ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: ஈராக்கில் 120 பேர் உடல் சிதறி சாவு பாக்தாத், மார்ச்.7- ஈராக்கில் சன்னி பிரிவினருக்கும் ஷியா பிரி வினருக்கும் மோதல் நடப்பது அன்றாட நிகழ்ச்சி யாகி விட்டது. தினமும் கார் குண்டு தாக்குதல், மனித வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கி சூடு ஆகியவற்றால் அங்கு ரத்த ஆறு ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று ஹில்லா பகுதியில் உள்ள ஷியா பிரிவினரின் மத ஊர்வலம் நடந்தது. கர்பலா நகரை நோக்கி அவர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்பொழுது அந்த ஊர்வலத்துக்குள் மனித வெடிகுண்டாக ஒருவன் நுழைந்தான். தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை அவன் வெடிக்கச் செய்தான். சிறிது நேரத்தில் இன்னொரு மனித வெடிகுண்டு தீவிரவாதி ஊர்வலத்துக்குள் புகுந்தான். அடுத்தடுத்து 2 …

  11. பாதுகாப்பு அமைச்சுக்குள்ளும் புலிகளின் ஊடுருவல் அண்மையில் கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை பிரிவைச் சேர்ந்த புலனாய்வுப் பொலிஸ் உத்தியோகத்தர்களால் அரச பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் உத்தியோத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்தவர் என்ற குற்றச்சாட்டுச் சம்பந்தமாகச் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கருதப்படும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேற்படி இரண்டு கைதுகளைப் பொறுத்தவரையிலும் குறிப்பிடத்தக்க விடயம் அவர்கள் இருவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்த உத…

  12. அமெரிக்காவில் வீசிய சூறாவளியால் அட்லாண்டிஸ் விண்கலத்துக்கு சேதம் திருத்த வேலைகள் ஆரம்பம் அமெரிக்காவில் அண்மையில் வீசிய சூறாவளியால் `அட்லாண்டிஸ்' விண்வெளி ஓடம் சேதமடைந்து விட்டது. அதையடுத்து ஏவுதளத்திலிருந்து விண்வெளி ஓடம் அப்புறப்படுத்தப்பட்டு பழுது பார்ப்பதற்காக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஏவுதளத்திலிருந்து 5.5 கி.மீ தொலைவில் உள்ள பணிமனைக்கு ஞாயிற்றுக்கிழமை அதைக் கொண்டு செல்ல 7 மணி நேரம் ஆனது. சில நாட்களுக்கு முன் சூறாவளி வீசியபோது பறந்து வந்த குப்பைகளும் கற்களும் ,மண்ணும் அட்லாண்டிஸ் ஓடத்தின் எரிபொருள் கலனின் மீது பொருத்தப்பட்டுள்ள காப்புறைத் தகடுகளைத் தாக்கிச் சேதப்படுத்தி விட்டன. அதற்கு ஏற்பட்டுள்ள சேதத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்…

  13. பாக்தாத்தில் 9 அமெரிக்கப் படையினர் பலி ஈராக்கின் வீதியோரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் 6 அமெரிக்க படையினர் பலியாகியுள்ளதுடன் பிறிதொரு சம்பவமொன்றில் 3 படையினர் பலியாகியுள்ளனர். ஸுன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் பாக்தாத்தின் வடபகுதியிலுள்ள சலஹட்டின் மாகாணத்தில் அமெரிக்கப் படையினரின் வாகனத்திற்கருகிலேயே இச் சம்பவம் இடம்பெற்றதாகவும் இதில் மேலும் மூவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தியலா மாகாணத்திலும் மூன்று அமெரிக்கப் படையினர் பலியாகியுள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளார். வீதியோர குண்டுகள் கிளர்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதாகவும் இவை ஈரானில் தயாரிக்கப்பட்டவை எனவும் அமெரிக்க தளபதிகள் இவ் விடயம் தொடர்பாக அக்கறை செல…

  14. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆணைக்குஎதிராக தடை உத்தரவு பெற்ற இந்திய மருத்துவர்கள் ஆகஸ்ட் முதல் திகதிக்குப் பிறகு பிரிட்டனில் தங்க `விசா' இல்லாத ஐரோப்பியர் அல்லாத டாக்டர்களை வேலைக்கு எடுக்க வேண்டாம் என்று பிரிட்டிஷ் அரசின் சுகாதாரத்துறை பிறப்பித்த ஆணைக்கு தடை உத்தரவு பெற்றுவிட்டனர் அங்கு சென்றுள்ள இந்திய வம்சாவளி டாக்டர்கள். எத்தனை சோதனைகள் வந்தாலும் பிரிட்டனில் டாக்டராகப் பணிபுரிந்தே தீருவது என்ற முடிவோடு உள்ள டாக்டர்கள், அந் நாட்டு அரசு அடுத்தடுத்து ஏற்படுத்திவரும் சட்டத்தடைகளை மனம் தளராமல் உடைத்துக் கொண்டே வருகின்றனர். பிரிட்டனில் வேலைபார்த்தால் கௌரவம், பணம் அதிகம் கிடைக்கும் என்பதையெல்லாம்விட தங்களுடைய படிப்புக்கும் திறமைக்கும் அது பெருத்த அங்கீகாரம் …

  15. சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினியின் மகள் ஆரித்ரா இந்தியா வர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் அவர் இந்திய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் அளிக்கவும் அனுமதி அளித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி ஆகியோருக்கு பிறந்தவர் ஆரித்ரா. வேலூர் சிறையில் இவர் பிறந்தார். அதன் பின்னர் இலங்கையில் உள்ள முருகனின் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். தற்போது இலங்கையில் வளர்ந்து வரும் ஆரித்ராவுக்கு இந்திய குடியுரிமை வழங்க அதிகாரிகள் மறுப்பதாகவும், ஆரித்ரா இந்தியாவில் பிறந்தவர், எனவே அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்த…

  16. இந்தோனேஷியாதரையிறங்கியபோது விமானம் வெடித்து சிதறியது49 பேர் பலி மார்ச் 07, 2007 ஜகார்தா: இந்தோனேஷியாவில் விமானம் தரையிறங்கியபோது ரன் வேயில் இருந்து விலகி ஓடி சுவரில் மோதி நொறுங்கி, வெடித்துச் சிதறியது. விமானத்தில் 140 பேர் இருந்தனர். இதில் 49 பேர் பலியாகியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகம் எனத் தெரிகிறது. யோக்யகார்தா நகர விமான நிலையத்தில் இன்று இச் சம்பவம் நடந்தது. இந்தோனஷிய அரசின் கருடா விமான நிறுவனத்தைச் சேர்ந்த அந்த போயிங் விமானத்தில் 133 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் இருந்தனர். தரையிறங்கிய அந்த விமானம் ரன் வேயில் இருந்து விலகி ஓடியது. ரன் வேயின் முடிவில் இருந்த சுவரில் மோதி வெடித்துச் சிதறியது. இதில் 48 பேர் சம்பவ…

  17. திருப்பதியில் சாமியார் தலை துண்டித்துக் கொலை மார்ச் 01, 2007 திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அருகே நாத்ஜி அபோரிபாபா என்ற சாமியார் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். வெங்கடாசலபதி கோவில் அருகே உள்ள தும்புரா தீர்த்தக் குளம் அருகே கடந்த 15ஆண்டுகளாக குடிசை போட்டு வசித்து வந்தவர் அபோரிபாபா சாமியார். திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இவரையும் தரிசித்து விட்டுச் செல்வது வழக்கம். தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாபாவை தரிசிக்க நீண்ட வரிசையில் நின்று கொண்டிருப்பது வழக்கம். இந்த நிலையில் பாபா சாமியார் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தனது குடிலில் பிணமாகக் கிடந்தது அப்பகுதியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாபாவுக்கு 30க்கும் மே…

  18. இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்தி வரும் 6ந் தேதி சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழக மீனவர்களைக் காப்பாற்றும் படி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் அண்மையில் அடுத்தடுத்து இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார். அந்தளவுக்கு இலங்கை அரசின் இனவெறி ஈழத்தமிழர்கள் மீது மட்டுமின்றி, தமிழக மக்கள் மீதும் திணிக்கப்படுகிறது. அண்மையில் கலியபெருமாள் என்ற மீனவத் தமிழர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ள…

  19. ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு படகு மூழ்கடிக்கப்பட்டது. தமிழக மீனவர்கள் காயமின்றி உயிர் தப்பி கரைக்கு வந்து சேர்ந்தனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் கலியபெருமாள் என்ற நாகை மாவட்ட மீனவர் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் போதாது என்று இலங்கை மீனவர்களும் இப்போது தமிழக மீனவர்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 100 படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென …

    • 4 replies
    • 1.1k views
  20. http://earthquake.usgs.gov/eqcenter/recent.../us2007zpah.php நடுக்கம் மலேசியா வரை உணரப்பட்டதாம். http://earthquake.usgs.gov/eqcenter/recent.../us2007zpal.php after shocks உம் உணரப்பட்டுள்ளது.

  21. சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்துள்ளார். தாக்குதல் தொடர்ந்தால் தமிழக மீனவர்கள் அமைதி காக்க மாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து அமைதி காக்க மாட்டார்கள், அவர்களது கைகள் கட்டப்பட்டிருக்காது என எச்சரிக்க விரும்புகிறேன். இந்த மாதம் மட்டும் நான்கு முறை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக அரசு பலமுறை கடிதம்…

    • 9 replies
    • 1.9k views
  22. இளைஞர். மும்பையைச் சேர்ந்த வினோத்குமார் சிங்கேஸ்வர் சிங்குக்கு இளம்பெண் சங்கீதா மீது பைத்தியமான காதல். `எனக்கு 24 உனக்கு 19' என்று காதல் வானில் சிறகடித்துத் திரிந்த இந்த ஜோடி, ஒரு கட்டத்தில் திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்தனர். அதற்கு பெற்றோர்களின் சம்மதம் வேண்டுமே? வினோத்குமார் வீட்டுத் தரப்பில் பிரச்சினையில்லை. பெண்ணின் அம்மா சம்மதத்தைப் பெற்றால் போதும். வினோத்குமாரும் தைரியமாகச் சென்று சங்கீதாவின் அம்மா மீனா லாலு பஞ்சாபியிடம் பெண் கேட்டார். `நான் சொல்கிற `நிபந்தனைக்கு' சரி என்றால் எனக்குச் சம்மதம்' என்றார் மீனா. சந்தோஷத்துடன் தலையசைத்தார் வினோத்குமார். ஆனால் அடுத்து மீனா விதித்த நிபந்தனை திடுக்கிட வைத்தது அவரை. அதாவது, ``நான் சொல்லும் ஆளை நீ காலி செய்தால் ப…

  23. பங்களாதேஷ் வங்கியை சவூதி இளவரசர் கொள்வனவு பங்களாதேஷின் ரூபாலி என்ற வங்கியை ரூ.4,200 கோடிக்கும் மேல் கொடுத்து வாங்குகிறார் சவூதி இளவரசர் பந்தர் பின் முகம்மது பின் அப்துல் ரெஹ்மான். பங்களாதேஷில் 4 ஆவது பெரிய வங்கி இது. கொடுத்த கடனை திரும்பப்பெற முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படவே விற்றுவிடுவது என்று அரசு முடிவு செய்தது. இவ்வங்கியின் 93% பங்குகளை இளவரசர் வாங்கிக் கொள்கிறார். மிகச் சாதாரணமாக விலை நிலவிய இவ்வங்கியின் பங்குகள், வங்கியை விற்கப் போகிறார்கள் என்ற தகவலுக்குப் பிறகு விலை மதிப்பில் உயர்ந்து இப்போது ஆறு மடங்காகிவிட்டது. ஒரு பங்கின் விலை சுமார் ரூ.4,000 ஆகிவிட்டது.

  24. டென்மார்கில் ஆர்ப்பாட்டம்:இளைஞர் இல்ல விவகாரம், தீக்கிரை 200 பேர் கைது ! [ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007] டென்மார்க் தலைநகர் கோபன்¦?கனில் இள வயதினருக்கான மையம் ஒன்றில் தர்ணா செய்து கொண்டிருந்தவர்களை அகற்றியது தொடர்பாக இரண்டாவது இரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிட்டதட்ட இருநூறு பேரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்நொர்ரிபுரோ மாவட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், வாகனங்களையும் தீயிட்டு எரித்துள்ளனர்.கூட்டத்தினரை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர், இதற்கு பதிலடியாக கூட்டத்தினர் காவல்துறையினர் மீது கற்கள் மற்றும் இதர பொருட்களை வீசினர்.சர்ச்சைக்குரிய யுவ வயதினருக்கான மையத்தினை இடதுசாரி குழு…

  25. பயங்கரவாதம் குறித்து அண்டை நாடுகளுடன் பேச வேண்டும் - சிவசங்கர மேனன் கருத்து வாஷிங்டன்: "எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இந்தியாவின் கவலைகளை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளோம். ஆனால், இந்த பிரச்னை குறித்து உள் நாட்டு அதிகாரிகளுடனும், நமது அண்டை நாடுகளுடனும் இறுதியாக விவாதிக்கப்பட வேண்டும்," என்று இந்திய வெளியுறவு செயலர் சிவசங்கர மேனன் கூறியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன், எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு, வாஷிங்டனிலுள்ள இந்திய துõதரகத்தில் நடந்த அமெரிக்க இந்திய உயர் தொழில்நுட்ப கூட்டுறவு குழுவின் ஐந்தாவது கூட்டத்தில் பேசுவதற்காக துõதரகம் வந்த சிவசங்கர் மேனன், செய்திய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.