Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 575 கி.மீ., வேகத்தில் ஓடும் மின்னல் ரயில் : புதிய சாதனை படைத்தது பிரான்ஸ் அரசு பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் நேற்று, மணிக்கு 574.8 கி.மீ., வேகத்தில் அதிவேக மின்னல் ரயில் இயக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. அதிவேக ரயில்கள் தயாரிப்பில் பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. தண்டவாளத்தில் செல்லும் ரயில்களில் அதிவேக ரயில் என்ற சாதனை பிரான்சில் தான் முன்னர் நிகழ்த்தப்பட்டது. 1990ல் மணிக்கு 515 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு இச்சாதனை படைக்கப்பட்டது. ஜப்பானில் 2003ல் காந்த சக்தியால் இயங்கும் ரயில் மணிக்கு 581 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது. உலகளவில் இது தான் அதிவேக ரயில். ஆனால், இந்த ரயில் தண்டவாளத்தில் செல்லாமல் அதற்கு மேலே வழுக்கிக் கொ…

  2. புவி வெப்பமடைதல் தொடர்பான வழக்கில் புஷ்ஷிற்கு எதிராக அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு புவி வெப்பமடைவதற்கு காரணமாகவுள்ள பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற்றத்தினை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரம் அமெரிக்க அதிகாரிகளுக்கு உள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க உச்ச நீதிமன்றம், புஷ் நிர்வாகத்திற்கு இதன் மூலம் பாரிய நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன்ட் டி ஒக்சைட்டையும் ஏனைய வாயுக்களையும் கட்டுப்படுத்தப் போவதில்லை என்ற தனது கொள்கையை அமெரிக்க சூழல் பாதுகாப்பு அமைப்பு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பச்சைக் குடில் வாயுக்கள் அவ்வாறு வெளியேறுவது வளி மாசடைதலுக்கு சமமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரி…

  3. 14வது சார்க் மாநாடு இன்று தொடக்கம் ஏப்ரல் 03, 2007 டெல்லி: தெற்காசிய கூட்டமைப்பின் (சார்க்) 14வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் சார்க் மாநாடு டெல்லி, விஞ்ஞான் பவனில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. தீவிரவாதம், போதைப் பொருள் தடுப்பு, பஞ்சம், பொருளாதர முன்னேற்றம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது. மாநாட்டின் முக்கிய அம்சமாக தெற்காசிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. மாநாட்டை பிரதமர் மன்ேமாகன் சிங் தொடங்கி வைக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜீஸ், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக் ஷே, ேநபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா,…

  4. என்னமா எல்லாம் 'திங்க்' பண்ணி தொலைக்கிறாங்கப்பா.. கக்கூசு ஒண்டு தான் காலல இன்பமா தொந்தரவில்லாம காலக்கடன் கழிக்க உதவிய ஒரே இடம்...அதுவும் போச்சா.. :angry: ஆமாங்க சார், கூகுள் புதிதான தொழிநுட்பமொன்றை அறிமுகப்படுத்துகிறது. அது எப்படி வேலை செய்யும் என்று விலாவாரியா கழிந்து வைத்திருக்கிறார்கள்- மூக்கைப் பொத்திக்கொண்டு பார்க்கவும்... http://www.google.com/tisp/install.html அப்ப இனி யாழில் போஸ்ட் பண்ற 'கக்கூஸ் இணைய அங்கத்தவர்களின்' பதிவுகள் ஒரே நாற்றமாகத்தான் இருக்க போகிறது. பார்வையாளர்கள் சென்ற்'ஐ கணணிக்கு அடித்து விட்டுத்தான் வாசிக்க தொடங்கும் துர்ப்பாக்கிய நிலையா போச்சுப்பா.. அது சரி- தூய்மையாக கருதப்படும் திருப்பதி கோயிலில்- ஒன்லைன் - அர்ச்சனைக்கு ஓட…

    • 18 replies
    • 1.8k views
  5. கம்ப்யூட்டரால் இயங்கும் அனுமன் சிலை ஏப்ரல் 03, 2007 டெல்லி: உலகிலேயே முதன்முதலாக கம்ப்யூட்டரால் இயங்கும் அனுமன் சிலை டெல்லியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை 108 அடி உயரத்தில் அனுமன் நின்ற நிலையில் விஸ்வ ரூப தரிசனம் தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. இது 13 வருட உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதோடு மற்றொரு முக்கிய சிறப்பம்சமும் இந்த அனுமன் சிலையில் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டு, பட்டனை இயக்கினால் அனுமன் இதயப்பகுதி திறந்து உள்ளிருந்து தங்கத்தாலான ராமர்-சீதா சிலை வெளியே தோன்றி பக்தர்களுக்கு காட்சி தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த அனுமன் சிலையை பற்றிய தகவல்களை கின்னஸ் புத்தகத்தில் இ…

  6. மேடையிலிருந்து விழுந்தார் இந்திய அமைச்சர் இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமதுக்கு சனிக்கிழமை இரவு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பஹ்ரைனில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கும்போது 5 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக பஹ்ரைன் இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக அந்த முருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலிஃபா ஞாயிறுக்கிழமை அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். thinakkural.com

    • 3 replies
    • 1.3k views
  7. மலேசியாவில் உலக தமிழ் பண்பாட்டு மாநாடு ஏப்ரல் 03, 2007 சென்னை: உலக தமிழ் பண்பாட்டு மாநாடு மலேசியாவில் நடக்கவிருக்கிறது. இதுக்குறித்து உலகத் தமிழ் பண்பாடு மாநாட்டின் இந்திய ஒருங்கிணைப்பாளர் அறவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக பண்பாட்டு இயக்கம் மற்றும் மலாயா பல்கலைகழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து மலேசிய நாட்டு தலைநகரான கோலாலம்பூரில் உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாடு ஜூலை மாதம் 20,21,22 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. கட்டுரையாளர்கள் இந்த மாநாட்டுக்கு ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி அனுப்பலாம். உலகத் தமிழர்களின் நிலை என்ற பொதுத் தலைப்பிலும், புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலை அன்று முதல் இன்று வரை என்ற சிறப்பு தலைப்பிலும் …

  8. வட மேற்கு பாகிஸ்தானில் பனி மழையால் பலர் மரணம் [03 - April - 2007] பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்துவரும் பனி மழை காரணமாக பலர் கொல்லப்பட்டுள்ளனர். சிட்டிரால் பிராந்தியத்தின் வசிஜ கிராமத்தில் சனிக்கிழமை பல வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 24 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக பலர் காணாமல் போயுள்ளனர். கடந்த ஒரு வாரகாலமாக மலைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பனி மழை காரணமாக 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 14 வீடுகள் புதையுண்டுள்ளதுடன் 14 பேர் காணாமல் போயுள்ளதுடன் ஆறுபேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தினக்குரல்

  9. தேர்தல் பிரசாரத்துக்காக நிதி திரட்டியதில் சாதனை படைத்தார் ஹிலாரி கிளின்டன் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள செனட்டர் ஹிலாரி கிளின்டன் தனது பிரசாரத்திற்காக பெருமளவு நிதியை திரட்டியுள்ளார். இது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னர் போட்டியிட்டவர்கள் திரட்டியதை விட அதிகமென தெரிவிக்கப்படுகின்றது. 2007 இன் முதலாவது காலாண்டுப் பகுதியில் ஹிலாரி 26 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டியுள்ளதாக அவரது பிரசார முகாமையாளர் தெரிவித்துள்ளார். 2000 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் துணை ஜனாதிபதி அல்-கோர் திரட்டிய தொகையை விட இது பல மடங்கு அதிகம். ஜனநாயக கட்சி சார்பில் 2008 இல் ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரியே போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. …

  10. சொலமன் தீவில் சுனாமி? Solomons town hit by 3m wave A 3M-high wall of water slammed into the Solomon Islands town of Gizo, causing widespread damage, according to an Australian woman living there. Aftershocks following a massive earthquake near the Solomons had made residents too frightened to return, said Kerrie Kennedy. Ms Kennedy is in Sydney visiting family but said her new house in Gizo was first rocked by the earthquake and than swamped by a tsunami. From many phone calls to her husband Danny in the Solomons, Ms Kennedy has heard Gizo, her home for the past 19 years, suffered extensive damage from the double whammy. "The town has certa…

  11. மக்கள் தொலைகாட்சியில் ஈழத்தமிழர் துயரம் தொடர்பாக நீதியின் குரல் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டதை யாரும் பார்த்தீர்களா?

    • 2 replies
    • 1.5k views
  12. உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் வளைகுடா இந்தியர் துபாய் : இந்த ஆண்டுக்கான பெரும் பணக்காரர்கள் பட்டியலை "போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. வளைகுடா நாட்டில் வசிக்கும் இந்தியர் முதன்முறையாக இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார். உலகின் பெரும் பணக்காரர்கள் என 946 பேரின் பட்டியலை "போர்ப்ஸ்' பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ஓமன் நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பி.எம்.சி. மேனன்(58) என்பவர் 754வது இடத்தைப் பிடித்துள்ளார். அவருடைய தற்போதைய சொத்து மதிப்பு ரூ.675 ஆயிரம் கோடி. மேனன் மூலம்தான் பணக்காரர்கள் பட்டியலில் முதல் முறையாக வளைகுடா நாடு ஒன்றின் பெயர் இடம் பெற்றுள்ளது. கேரளாவில் வடக்கம்சேரியைச் சேர்ந்த மேனன், கல்லுõரிப் படிப்…

    • 5 replies
    • 1.5k views
  13. ராமநாதபுரம்: தமிழக மீனவர்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது, அவர்களைக் கைவிட்டு விட்டது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரத்தில் நடந்த மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசினார். அப்போது அவர் கூறுகையில், லட்சக்கணக்கான தொண்டர்களால் உருவாக்கப்பட்ட மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. மதிமுகவில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. கூட்டணி அரசு என கூறி கூட்டணிக் கட்சிகளையும் வாக்காளர்களையும் ஏமாற்றியவர் கருணாநிதி. ராமதாசுடன் ஏற்பட்ட மோதலால் திமுக அரசு நிலையற்று உள்ளது. மதிமுக கட்சியில் ஓட்டை விழுந்து விட்டது, மாலுமி வைகோ தேற மாட்டார்., கப்பல் மூழ்க போகிறது என்று கூறி கழகத்தினரிடம் கோடிக்கணக்கான ரூபாயை காட்டி பேரம் பேசினார்க…

  14. மனைவியை 'அயர்ன்' செய்த கொடூர கணவன் வரதட்சணை கேட்டு மனைவி உடலில் இஸ்திரிப் பெட்டியால் சூடு போட்டுக் கொடுமை செய்த கணவனை போலீஸார் தேடி வருகின்றனர். கணவரின் சகோதரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது உமர். இவரது மகள் முபீனா பேகம். இவருக்கும் பெரம்பூரைச் சேர்ந்த ஷாநவாஸ் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. ஷாநவாஸ், புளியந்தோப்புப் பகுதியில் இறைச்சிக் கடை வைத்துள்ளார். கல்யாணத்திற்குப் பின்னர் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்த ஷாநவாஸ்முபீனா பேகம் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை எழுந்தது. கூடுதல் வரதட்சணை கேட்டு முபீனாவை அடிக்கத் தொடங்கினார் ஷாந…

    • 31 replies
    • 4.3k views
  15. உயிரி எரிபொருள் திட்டத்தின் மூலம் 300 கோடி மக்களை மரணத்தில் தள்ளியவர் அமெரிக்க ஜனாதிபதி புஷ் கியூபா ஜனாதிபதி காஸ்ட்ரோ கடும் கண்டனம் உயிரி எரிபொருள் திட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் 300 கோடி பேரை மரணத்தில் தள்ளியவர் என ஜனாதிபதி புஷ்ஷை கடுமையாகத் தாக்கியுள்ளார் பிடல் காஸ்ட்ரோ. 80 வயதாகும் பிடல் காஸ்ட்ரோ இரைப்பை தொடர்பான அறுவைச் சிகிச்சைக்காக கியூபாவின் ஆட்சிப் பொறுப்பை 8 மாதங்களுக்கு முன்னர் தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் முதல் முறையாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். உணவுத் தானியங்களை, கார்களுக்கான எரிபொருளாக மாற்றும் அமெரிக்காவின் உயிரி எரிபொருள் திட்டத்த…

  16. கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு மரணம் மார்ச் 31, 2007 டெல்லி: பிரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 91. சுப்புடுவின் உடலுக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இசை விமர்சகரான சுப்புடு என்ற சுப்ரமணியம் கர்நாடக இசையில் இந்துஸ்தானி இசை கலப்பதை கடுமையாக எதிர்த்தவர். இவரது விமர்சனங்கள் காரசாரமானவை சுவையானவை பல நேரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த அவர் நேற்று முன்தினம் டெல்லியில் காலாமானார். ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 11.30 மணிக்கு சுப்புடு…

    • 0 replies
    • 1.1k views
  17. இணையத் தளங்களைத் தணிக்கை செய்யும் கடும்போக்கு ஆட்சியாளர் தகவல் புரட்சியில், இணையத் தளங்கள் அண்மைக் காலங்களின் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன. ஆனால் அடக்குமுறை ஆட்சியாளர்களின் நாடுகளில் இவை ஆட்சிக்கு எதிரான நிலைமைகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக தணிக்கைக்கும் மற்றும் தடைக்கும் உள்ளாக்கப்படுகின்றன. இத்தகைய நாடுகளில் இவை எவ்வாறு தணிக்கை செய்யப்படுகின்றன, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பன போன்ற விடயங்கள் இன்று உலகெங்கும் பெரிதாக அலசப்படுகின்றன. வடகொரியா, சீனா, இரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உட்பட, குறைந்தது கண்டத்துக்கு ஒரு நாடாவது இவ்வாறு இணையத்தை தணிக்கை செய்வதாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவில் தகவல் தளங்களில், தகவல்களைச் சேர்த்ததற்கா…

    • 1 reply
    • 875 views
  18. இந்திய மீனவர்கள் சுடுக்கொன்றமையை கண்டித்து தூத்துக்குடியில் உண்ணாவிரதம் கன்னியாகுமரி அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் ஐந்து பேரை இலங்கை கடற்படையின சுட்டுக் கொன்றதை கண்டித்து இந்திய மீனவ மக்கள் கட்சி மாநில தலைவர் அலங்காரபரதர் தூத்துக்குடியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். மீனவர்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசிற்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க., வாபஸ் பெற வேண்டும், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும், படுகொலையை கண்டித்து தமிழக எம்.பி.,க்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் …

  19. ஜனாதிபதி கலாம் உருவப்படம்: 127 மணி நேரத்தில் வரைந்து சாதனை சென்னை: புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரி இளைஞர், தனது நாவினால் துõரிகைப் பிடித்து 127 மணி நேரத்தில் ஜனாதிபதி அப்துல்கலாமின் உருவப் படத்தை வரைந்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். புதுச்சேரி கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஆர்.ராஜேந்திரன் (24). பி.எஸ்.சி., பட்டதாரியான இவருக்கு சின்ன வயதிலிருந்து ஓவியம் வரையும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. துõரிகையை கையினால் பிடித்து ஓவியம் வரைந்தவர்கள் நிறைய சாதனைகளை செய்திருப்பதால், வித்தியாசமான முறையில் ஓவியம் வரைந்து சாதனை படைக்க ராஜேந்திரன் விரும்பினார். தனது நாவினால் துõரிகையை பிடித்து ஆயில் பெயின்டிங் ஓவியம் வரையும் முயற்சியில் இறங்கினார். கடந்த ஏழு ஆண்டுகளாக …

    • 8 replies
    • 3.5k views
  20. பாவாணன் விடுதலை புரட்சிக் கவிஞர் பேரவையின் சார்பில் வத்திராயிருப்பில் 28-10-2001ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதுக்கோட்டை பாவாணன், வத்திராயிருப்பு சுந்தரேசன், தமிழர் தேசிய இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் சோமு ஆகியோர் பேசினர். இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த இன்னல் குறித்தும் சிங்களவர்களை எதிர்த்துப் போராடிய விடுதலைப் புலிகளை ஆதரித்தும் மேற்கண்ட கூட்டத்தில் பேசியதாக வத்திராயிருப்பு காவல் நிலையம் தொடுத்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. பேச்சாளர்களுக்காக வழக்குரைஞர்கள் புளுகாண்டி, மனோகரன் ஆகியோர் வாதாடினர். திருவில்லிப்புத்தூர் நீதிமன்றம் மூவரையும் விடுதலை செய்து தீர்ப்புரைத்தது. - தென்செய்தி

  21. தமிழர் தேசிய இயக்கத்தின் மீதான தடையை நீக்குக! 'ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வண்டி இழுக்கிறது... கொம்பை மறந்த மாடு.' உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் குத்தீட்டிகளாகக் கொம்புகள் முளைத்திருக்க, தன் நிலை, பலம் அறியாது நுகத்தடியில் பூட்டப்படும் மாடுகளைப் போல் அல்லவா, தொன்மை, வீரம், வரலாறு முதலானவைகளை அறிந்துணராது தமிழர்கள் இன்று உள்ளனர்! இந்தி(ய), இந்துத்துவ ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுபடவும், திராவிட இயக்கத்தின் போலிகளான தேர்தல் அரசிய்ல கட்சிகள் மாயை களினின்றும் விடுபடவும் தமிழ் மக்களுக்காக தமிழர் தேசிய இயக்கம் கண்டார் பழ. நெடுமாறன் அவர்கள். முதலாம் மாநாட்டில், 'தமிழ்நாட்டுக்குத் தன்னுரிமை பெறுவது எமது இலட்சியம்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 10-02-2002…

  22. கை கோர்க்கும் ராமதாஸ், வைகோ, திருமா! மதுரை: மதுரையில் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெறவுள்ள முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் மாநாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர். இந்த மாநாடு குறித்து தமிழர் தேசிய இயக்க தலைவரும், முல்லை பெரியாறு அணை உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் கூறுகையில், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம, சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் கோடை காலங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படுவதோடு, தென்னை மற்றும் விவசாய பயிர்கள் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பிழைப்புக்காக வேறு இடத்திற்கு இடம் பெறும் நிலை ஏற்படும். …

  23. புலிகளின் புது பலம்: ராமநாதபுரத்தில் நிரந்தர விமான தளம் அமைக்க அரசு திட்டம் மார்ச் 29, 2007 ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகள் விமான தாக்குதல் பலத்தைப் பெற்றிருப்பதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் நிரந்தர விமான தளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விடுதலைப் புலிகள், இலங்கை விமானப் படை தளத்தை விமானம் மூலம் அதிரடியாக தாக்கிய சம்பவம் இலங்கை அரசை பயமுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டதம், சுந்தரமுடையான் கிராமத்தில், சீனியப்பா தர்கா என்ற இடத்தில் 8 விமானங்களைக் கண்டறியும் நவீன ரக ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஒரு கமாண்டர் தலைமயிலான 50 விமானப்படை வீரர்கள் கொண்ட க…

  24. இலங்கை அரசை இந்தியா நிர்பந்திக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை சென்னை, மார்ச்.29-: இலங்கையில் ஈழத் தமிழர்களின் ஜனநாயக அரசியல் உரிமைகளும், அடிப்படை மனித உரிமைகளும் நிலை நாட்டப்பட வேண்டும். இதற்கு இலங்கை அரசை இந்தியா நிர்பந்திக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- இலங்கையில் அன்றாடம் விமானத் தாக்குதல்களையும், பீரங்கி தாக்குதல்களையும் நடத்தி தமிழர்களை கொன்று குவித்து வரும் இலங்கை அரசும், இலங்கை ராணுவமும் விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலால் அதிர்ந்து போய் இருக்கின்றன. அச்சத்தில் மூழ்கி இருக்கின்றன. விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருப்பது இலங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.