Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சேலத்தில் காமனேரி அருகே உள்ள சாத்தப்பாடியில் சாந்தி என்பவருக்கு சொந்தமான திருவிழாவிற்காக பயன்படுத்தப்படும் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் படுகாயமடைந்த 7 பேர் சேலம், மேட்டூர், ஒமலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  2. எதிர்ப்பு படைகளின் பிடியில் இருக்கும் அலெப்போ நகருக்கு உதவிகள் சிரியாவின் அலெப்போ நகரில், அரசுப் படைகளின் முற்றுகையை தகர்த்தபின், எதிர்ப்பு படைகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும் பகுதிக்கு, சில உதவிகள் கிடைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. போராளிகளின் பிடியில் உள்ள அலெப்போவின் கிழக்குப்பகுதிக்கு, டிரக் ஒன்றில் காய்கறிகள் வந்தடைந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த பாதைகள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் ஆபத்து நிறைந்து உள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமையன்று நடந்த கடும் சண்டையில் போராளிகள் தங்கள் முற்றுகையை தகர்த்ததாக கூறுவதை அரசுப் படைகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். கிழக்கு அலெப்போவில் தங்கள் முற்று…

  3. அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்காவிடின் டிக் டொக் செயலி தடை செய்யப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை டிக் டொக் உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் செப்டம்பர் 15ஆம் திகதிக்குள் விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கெடு விதித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “டிக் டொக் செயலியை வாங்குவது தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைவர் சந்திய நாதல்லாவுடன் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். இந்த செயலியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ஆபத்தான ஒன்று. ஆகையால் டிக் டொக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமோ அல்லது வேறு ஏதேனும் அமெரிக்க பெருநிறுவனமோ…

  4. அமெரிக்காவில் போருக்கு சென்ற இராணுவத்தினரிடையே தற்கொலை செய்வது அதிகரித்து செல்கிறது என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள 21 மாநிலங்களிலும் நடாத்தப்பட்ட ஆய்வில் தினசரி 22 இராணுவ வீரர்கள் தற்கொலை செய்வதாக தெரிவிக்கிறது. கடந்த 1999 – 2010 ம் ஆண்டு காலப்பகுதியில் இடம் பெற்ற அமெரிக்க இராணுவ வீரர்களின் தற்கொலைகள் குறித்த ஆய்வறிக்கையே மேற்கண்ட அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. போரும், அதனால் உண்டாகும் அனர்த்தங்களும் ஏற்படுத்தும் உளவியல் தாக்கம் அமெரிக்க வீரர்களை மணிக்கு மணி கயிற்றில் தொங்க வைத்துக் கொண்டிருக்கிறது. போரில் வெற்றி பெறுவது என்பது ஊடகங்களின் வெற்று செய்தியே அல்லாது உண்மையாக வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் என்று போரில் ஈடுபடுகிறார்களோ …

  5. தாய்வானுக்கு அருகே நடைபெறும் இராணுவ பயிற்சிகள் ஒரு ‘தேவையான நடவடிக்கை’ – சீனா கடந்த வாரம் தாய்வானின் தென்மேற்கு கடற்கரையில் சீன இராணுவம் மேற்கொண்ட பயிற்சிகள் சீனாவின் இறையாண்மையைப் பாதுகாக்க ஒரு தேவையான நடவடிக்கை என பெய்ஜிங் நேற்று (புதன்கிழமை) கூறியுள்ளது. சீனாவின் பெரிய அளவிலான வான் மற்றும் கடற்படைப் பயிற்சிகள் கடுமையான ஆத்திரமூட்டல் நடவடிக்கை என தாய்வான் குற்றம் சாட்டியிருந்த நிலையில் சீனா இவ்வாறு பதிலளித்துள்ளது. ஜனநாயக தாய்வானை தனது சொந்தமாகக் கூறும் சீனா, தீவின் அருகே இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது, அத்தோடு சீன ஆட்சியை ஏற்பதை கட்டாயப்படுத்துவதற்கே இவ்வாறான மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தாய்வான் கருதுகிறது. தாய்வானின் பிரதான நிலப்பரப்…

  6. பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள விக்டோரியோவில் மாணவர்கள் குழுவாக தங்கியிருந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு பெண் உள்பட இரண்டு பேர் பலியாகினர். ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்டோரியோ மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் மாணவ மாணவிகள் குழுவாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்தனர். அவர்கள் நேற்று வெள்ளிகிழமை இரவு நீண்ட நேரம் வரை விருந்தில் பங்குகொண்டிருந்தனர் என்றும், பின்னர் அதிகாலை 4.30 மணிக்கு திடீரென எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்ததால், தீயில் சிக்கி ஒரு மாணவியும், ஒரு மாணவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Fire C…

  7. பாடலாசிரியர் பாப் டிலன் நோபல் பரிசை முறையாக ஏற்கவில்லை என குற்றச்சாட்டு இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஏற்பதாக முறையாக அறிவிக்காமல் இருப்பதால், அமெரிக்க பாடகர் பாப் டிலன், மரியாதையற்றவர், திமிர்பிடித்தவர் என்று ஸ்வீடன் அகாடமியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். நோபல் பரிசு பெறும் முதல் பாடலாசிரியராக பலரும் ஆச்சரியமடையும் வகையில் கடந்த வாரம் டிலன் அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள எடுத்த தொடர் முயற்சிகளுக்கு பின்னரும், அவரிடம் இருந்து எந்தவொரு மறுமொழியும் அகாடமிக்கு இன்னும் கிடைக்கவில்லை. இத்தகைய நிலைமை இதற்கு முன் ஏற்பட்டதில்லை என்று ஸ்வீடன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பெர் வாஸ்ட்பெர்க் தெரிவித்துள்ளார். …

  8. முகக் கவசத்துடன் தனது வாக்கினை பதிவு செய்தார் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி டெனால்ட் ட்ரம்ப் நேற்று சனிக்கிழமை புளோரிடாவில் தனது வாக்கினை பதிவுசெய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாகவும் களமிறங்கியுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தல் 3 ஆம் திகதி என்றபோதிலும், முன் கூட்டியே வாக்களிக்கும் முறை அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக புளோரிடா மாகாணத்துக்கு நேற்று சென்ற ட்ரம்ப், அங்குள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார். இதன்போது வ…

  9. சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தொடர்பில் சஜ்ஜன் குமார் என்பவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டுக்கு முன் சீக்கியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். கடந்த 1984ம் ஆண்டு இந்திய பிரதமர் இந்திரா காந்தி, அவரது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து டெல்லியில் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 3000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை ஏவிவிட்ட குற்றச்சாட்டில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன்சிங் கைது செய்யப்பட்டார். கடந்த 30 வருடங்களாக நிலுவையில் இருந்த இவ்வழக்கில் சஜ்ஜன் குமாரை விடுவித்தும் மற்றையவர்களை குற்றவாளிகள் என உறுதி செய்தும் மாவட்ட நீதிபதி ஆர்யன் அறிவிப்பு விடுத்தார். இதையடுத்து சஜ்…

    • 0 replies
    • 313 views
  10. பிரித்தானியாவில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 2020 ஆம் ஆண்டளவில் பிரித்தானியாவின் சனத்தொகையில் சுமார் அரைவாசிப் பேர், புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகளைப் பெறுவார்கள் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் 44 வீதமானவர்கள் புற்றுநோய்க்கான சிகிச்சைகளைப் பெற்றிருந்தனர். எனினும் முடியுமானமளவுக்கு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்படடுவதாக தெரிவிக்கப்படுகிறது. Half of UK population 'will get cancer in lifetime' The number of people in the UK who will get cancer during their lifetime will increase to nearly half the population by 2020, a report has forecast. Macmillan Cancer Support …

  11. ஏவுகணைகளை ஏவி மீண்டும் பதற்றத்தை அதிகரித்தது வடகொரியா வட கொரியா ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக ஒரு ஜோடி கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடலுக்குள் ஏவி சோதனை செய்துள்ளது. வட கொரியா தனது கிழக்கு கடற்பரப்பில் இரண்டு சந்தேகத்திற்குரிய ஏவுகணைகளை இன்று ஏவியது என்று ஜப்பானிய பிரதமர் சுகா யோஷிஹைட் வியாழக்கிழமை தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களின் கீழ் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக பதற்றத்தைத் தூண்டுவதாகவும், வட கொரியா கொள்கையை இறுதி செய்யும் பைடன் நிர்வாகத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளத…

    • 1 reply
    • 579 views
  12. கெவின் ரொட் விரைவில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது மேலதிக விபரங்களுக்கு.. http://tamilworldtoday.com/?p=19161

    • 0 replies
    • 298 views
  13. அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்ற ஏழு பேர் அசாதாரண இரத்த உறைவினால் உயிரிழப்பு! பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்ற பின்னர் ஏழு பேர் அசாதாரண இரத்த உறைவுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில், மார்ச் 24ஆம் திகதிக்குள் தடுப்பூசி போடப்பட்ட 18 மில்லியனில் 30 பேருக்கு இந்த ரத்த உறைவு இருந்தன. அவை வெறும் தற்செயல் அல்லது தடுப்பூசியின் உண்மையான பக்க விளைவுதானா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. நன்மைகள் எந்தவொரு ஆபத்தையும் விட அதிகமாக இருப்பதாக மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம் கூறுகிறது இருப்பினும், ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் கனடா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு தடுப்பூசி பயன்பாட்டை வயதானவர…

  14. அரவிந்தர் ஆசிரமத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அதை கையகப்படுத்தி நிர்வகிக்க புதுவை அரசு ஆலோசித்து வருகிறது. புதுச்சேரி சட்டசபையில் அரவிந்தர் ஆசிரமத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புகார் கூறினர். மேலும் அரசே அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வாகிக்க அரசு அதிகாரிகளை நியமிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சட்டத் துறையிடம் ஆலோசனை கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். http://tamil.oneindia.in/news/2013/07/26/tamilnadu-puducherry-govt-will-take-over-aurobindo-ashram-179920.html

  15. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பேச்சுவார்த்தையாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் தங்களிடையிலான முதல் நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். அமெரிக்க ராஜாங்க அமைச்சர் வாஷிங்டனில் அளித்த விருந்தில் இருதரப்பும் சந்தித்திருந்தனர்.மிக மிக மிக விசேஷமான ஒரு தருணம் இது என்று ஜான் கெர்ரி வர்ணித்திருந்தார். இஸ்ரேலின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் ஸிபி லிவ்னியும் பாலஸ்தீன தலைமை பேச்சுவார்த்தையாளர் சயேப் எரகாத்தும் சேர்ந்து அமர்ந்து பேசினர். வரவிருக்கும் மாதங்களில் நடக்கக்கூடிய பேச்சுவார்த்தைகளுக்கான நடைமுறை திட்ட வடிவம் பற்றி தற்போது அவர்கள் பேசினார்கள் என அமெரிக்க ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் பிரச்சினைக்குரிய விஷயங்கள் பலவற்றை விவாதிக்க வேண்டும் என்று அதிபர்…

  16. 77 ஆண்டுகளுக்கு முன்னரான நோர்மண்டித் தரையிறங்கல் தினமான D-Day 38 Views 77 ஆண்டுகளுக்கு முன்னர் 06.06.1944 இல் பிரான்சின் நோர்மண்டிக் கடற்கரை நகரில் கடல்வழியாக நேசப் படைகள் இங்கிலாந்துப் படைகளின் தரையிறங்கி 2வது உலகப்போரில் கிட்லரின் மத்திய படைகளுக்கு எதிரான தாக்குதலை தொடங்கின. இப்போரில் உயிர்த்தியாகம் செய்த 27000 நேசப்படையினரை நினைவு கூறும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை டீ-டே (D- Day) நாளாகத் தங்கள் மாவீர்களுக்கு 11 மணி 11 நிமிடத்திற்கு எழுந்து நின்று அமைதி காத்து வீரவணக்கம் செய்வர். இம்முறை கோவிட் தொற்றுக்கு மத்தியிலும் நேசநாடுகளின் இராணுவ மரியாதை நோர்மண்டியில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் இட…

    • 1 reply
    • 623 views
  17. 100-ஆவது நாள் பேரணியில் ஊடகங்களை கடுமையாக சாடிய டிரம்ப் அமெரிக்க அதிபராக தான்பதவியேற்ற 100-ஆவது நாளை குறிக்கும் வகையில் நடந்த பேரணியில் ஊடகங்கள் மீது கடுமையான தாக்குதலை டொனால்ட் டிரம்ப் தொடுத்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஊடகங்கள் மீது டிரம்ப் சாடல் பென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய டிரம்ப், ஒன்றன் பின் ஒன்றாக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும், தன்மீதான விமர்சனங்களை எவ்வித தொடர்பும், புரிதலும் இல்லாத சில பத்திரிக்கையாளர்கள் எழுதும் பொய்யான செய்திகள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அதிபர் அலுவலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுட…

  18. பங்களாதேஷ், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற 1971ல் நடத்திய போரின் போது , ஒட்டுமொத்தமாகப் பலரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இஸ்லாமிய அரசியல்வாதி ஒருவர் செய்த மேல் முறையீட்டில், பங்களாதேஷ் உச்ச நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. பிப்ரவரியில், சிறப்பு போர்க்குற்ற நீதிமன்றம் ஒன்று, அப்துல் குவாதர் மொல்லா என்ற இந்த ஜமாத் இ இஸ்லாமி கட்சித் தலைவருக்கு, ஆயுள் தண்டனை விதித்திருந்தது. ஆயுள்தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டது ஒருவருக்கு கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, மேல்முறையீட்டில், மரண தண்டனையாக உயர்த்தப்படுவது இதுவே முதன் முறை என்று அவருக்காக வாதிட்ட வழக்குரைஞர் தாஜுல் இஸ்லாம் கூறினார். இந்தத் தீர்ப்பு அ…

  19. ஆப்கானில் இன்று அரசாங்கத்தை அமைக்கவுள்ள தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தலிபான்கள் இன்று நாட்டில் அரசாங்கத்தை அமைக்க உள்ளனர். தலிபான்கள் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்குப் பிறகு அரசாங்கத்தை அமைப்பார்கள் என்று சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 15 அன்று காபூலைக் கைப்பற்றிய பிறகு தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். பல தசாப்த கால போருக்குப் பிறகு நாட்டில் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டுவருவதற்கான உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தி, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வெளியேறிய பிறகு இஸ்லாமிய போராளிக் குழுவினர் தங்கள் வெற்றியை வெளிப்படுத்தினர். இந்த வாரம் அமெரிக்கப் பட…

    • 2 replies
    • 531 views
  20. ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் புட்டினின் கட்சி அமோக வெற்றி ரஷ்யாவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி புட்டினின் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி 3 நாட்கள் நடைபெற்றது. ஜனாதிபதி புட்டினின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு, புட்டின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு பாராளுமன்றத்தில் 3இல் 2 பங்கு பெரும்பான்மை அவசியம் தேவைப்பட்டதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்பட்டது. அத்தோடு அந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியை கைது செய்து சிறையில் அடைத்த…

  21. தமிழ் தொலைக்காட்சி ( நேரடி ஒளிப்பரப்பு ) http://www.puthiyathalaimurai.tv/ http://www.thanthitv.com/ மேலும் ஈழம் பற்றிய செய்திகளை கனடா , ஐரோப்பா நாடுகளில் ஒளிப்பரப்பும் தொலைக்காட்சிகளை இங்கே பதிவு செய்ய கோருகிறேன் !

  22. தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்தியாவை பார்ப்பனியத்தின் சாதி அமைப்பு, கிரிக்கெட் மோகம் என இரண்டு விசயங்கள் வலிமையாக இணைக்கின்றன. ஒன்று நிலப்பிரபுத்துவம் என்றால் மற்றது முதலாளித்துவம். இரண்டுக்கும் இரண்டு நாயகர்கள் ஒரு பிராண்டு மதிப்புடன் இந்தியாவெங்கும் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனியத்திற்கு ராமன், முதலாளித்துவத்திற்கு டெண்டுல்கர். ராமனுக்கு கோவில் என்று பாபர் மசூதியை இடித்து ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ( இன்றைக்கு இந்தப் பருப்பு வேகவில்லை என்பது வேறுவிசயம்). ஆனால் முதலாளிகளால் முன்னிறுத்த்தப்பட்ட டெண்டுல்கரால் நுகர்வு கலாச்சாரப் பொருள்களின் விற்பனையில் கொடிகட்டிப் பறந்த முதலாளிகள் இன்றைக்கும் இந்த நட்சத்திர நாயகனுக்கு ஒளிவட்டம் போட்டே வருகிற…

  23. போர் மூண்டது : உக்ரைன் மீது ரஷ்யா பலமுனை தாக்குதல் ! எவர் தலையிட்டாலும் பதிலடி என்கிறார் புடின் உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று அறிவித்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதையடுத்து உக்ரைன் மீது ரஷ்யா உடனடியாக தாக்குதலை ஆரம்பித்துள்ளது. உக்ரைனின் தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதலை மேற்கொண்டன. உக்ரைனின் 2 ஆவது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒட்டேசா நகர் மீதும் குண்டு மழை பொழியும் சத்தம் கேட்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைய…

  24. பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று புதுடெல்லியில் சந்தித்து பேசினார். பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சி பணிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே அவர்களின் சந்திப்பு குறித்தான தகவல்கள் வெளியிடப்படவில்லை. சாதாரண சந்திப்பே என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. http://www.dailythanthi.com/2014-01-10-Rahul-Gandhi-meets-Manmohan-Singh

  25. இலண்டன் சுரங்க ரயிலில் வெடிப்பு ; பயங்கரவாதச் செயலா ? இலண்டனின் பார்சன்ஸ் க்றீன் சுரங்க ரயில் நிலையத்தில் ரயிலொன்றுக்குள் சற்று முன்னர் நிகழ்ந்த வெடிவிபத்தில் பயணிகள் காயமடைந்ததாக தெரியவருகிறது. மாவட்டங்களுக்கு இடையிலான ரயிலின் கடைசிப் பெட்டியில் இருந்த வெள்ளை நிறக் கொள்கலன் ஒன்று வெடித்ததிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில், பயணிகள் சிலர் முகத்தில் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர். இது பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து உடனடியாகத் தெரிவிக்க முட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.