உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26851 topics in this forum
-
துருக்கி அரசைக் கைப்பற்ற கடந்த மாதம் ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சிசெய்தது. மக்களின் ஆதரவுடன் களத்திலிறங்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தோற்கடித்தார் அதிபர் எர்டோகன். இதையடுத்து ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணைபோனவர்கள் தேடித் தேடி கைது செய்யப்பட்டனர். இதனால் துருக்கி சிறைகள் நிரம்பிவழிந்தன. இந்நிலையில் இதனைச் சமாளிக்க நிபந்தனையின்பேரில் 38 ஆயிரம் சிறைக் கைதிகள் துருக்கி சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நன்னடத்தையுடையவர்கள், இரண்டு வருட கால சிறைத் தண்டனையுடையுவர்களே பெரும்பாலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாறாக கொலைக் குற்றவாளிகள், பாலியல் குற்றம்புரிந்தோர், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டோருக்கு இந்த சலுகை அளிக்கப்படவில்லை. துருக்கி நீதித்துறை மந்திரி…
-
- 0 replies
- 514 views
-
-
சென்னை ,ஜனவரி 25 . ரயில் நிலையங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,” தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள்,பிளாட்பாரங்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க முன்வந்து உள்ளது. இதன் காரணமாக ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவது,குளிப்பது,சிறுநீர் கழித்தல்,துணி துவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ரயில்வே சட்டபிரிவுபடி ரூ.500 அபராதம் விதிக்கப்படும். ரயில்களில் போஸ்டர் ஒட்டுதல் மற்றும் சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களுக்கும் இந்த சட்டம் ப…
-
- 0 replies
- 429 views
-
-
தட்சிணாமூரத்தி : தமிழகம் பல கேவலங்களைச் சந்தித்திருக்கிறது… பல கேவலமான தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் இந்த வழக்கு கேவலமானதல்ல. வேலத்திலும் கேவலமானது.. இது பற்றிப் பேசும் நான் மனிதனும் அல்ல. இந்திய அரசியலிலே உள்ள பல கேவலமான மனிதர்களை போலத்தான் நானும். கட்சியிலே குழப்பம் விளைவித்தேன்… குடும்பத்தை குழப்பினேன்.என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். இப்படியெல்லாம் எதிர்ப்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று… இல்லை. நிச்சயமாக இல்லை. கட்சியிலே குழப்பம் விளைவித்தேன்…. கட்சியே கூடாது என்பதற்காக அல்ல… கட்சியிலே வேறு யாருமே தலைவராகக் கூடாது என்பதற்காக. குடும்பத்தை குழப்பினேன். குடும்பம் நாசமாகப் போக வேண்டும் என்பதற்காக அல்ல… என் குடு…
-
- 1 reply
- 1.1k views
-
-
டிக்ரே மோதலில் சர்வதேச நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது- எத்தியோப்பியா திட்டவட்டம்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/11/201125-tigray-ethiopia-mc-10455_df26fe974738625d819b462af20407a6.fit-760w-720x450.jpg எத்தியோப்பியாவில் மத்திய அரசாங்கத்துக்கும் அந்த நாட்டின் டிக்ரே மாகாணத்துக்கும் இடையிலான மோதல் விவகாரத்தில், சர்வதேச நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று பிரதமர் அபை அகமது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (புதன்கிழமை) கூறுகையில், ‘எத்தியோப்பியா குறித்து நட்பு நாடுகள் அக்கறை காட்டுவதைப் பாராட்டுகிறோம். ஆனால், எங்களது உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேச…
-
- 1 reply
- 586 views
-
-
தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவுச் சந்தையுடன் தொடர்புடைய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால், தற்போது ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சமூத் சகோன் என்ற மாகாணத்தையே முழுமையாத தாய்லாந்து அரசு மூட நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த மாகாணத்தில்தான் தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவுப் பொருட்கள் சந்தையான மகாசாய் சந்தை இருக்கிறது. இந்த மாகாணம், தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்குக்கு அருகே அமைந்துள்ளது. இந்த கடல்சார் உணவுச் சந்தையில் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்கள் (குறிப்பாக மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள்) வேலை பார்த்து வருகிறார்கள். அங்கு தொழிலாளர்களை வீட்டிலேயே இருக்குமாறு அரசு உத்தரவிட…
-
- 0 replies
- 370 views
-
-
மதுபானங்களை விற்பனை செய்கிற போது தமிழகத்தில் கள்ளுக்கடையை திறப்பதில் தவறு இல்லை என்று மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கட்சி அலுவலகத்தில் செய்தியாயளர்களிடம் பேசுகையில், இந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க வெற்றி என்பது தமிழ்நாட்டு மக்களின் வெற்றியாக இருக்கும். கடந்த முறை காங்கிரஸ், தி.மு.க கூட்டணி கட்சிகள் தமிழகம், புதுச்சேரியில் 40 க்கு 40 வெற்றி பெற்றது. அதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவு நல்ல பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான கள்ளுக்கடை திறப்பு என்பது நியாயமானதுதான். அரச…
-
- 3 replies
- 1.1k views
-
-
மொஸ்கோ ஹோட்டலுக்கு பாலியல் தொழிலாளிகளை அழைத்துச் சென்ற டொனால்ட் ட்ரம்ப் படுக்கையில் சிறுநீர் கழித்தாராம்; ரஷ்ய புலனாய்வாளர்களிடம் வீடியோ உட்பட ஆதாரங்கள் உள்ளதாக செய்தி - பொய்யான செய்திகள் என ட்ரம்ப் மறுப்பு அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் 5 வருடங்களுக்கு முன்னர் ரஷ்ய ஹோட்டலொன்றில் விலைமாது ஒருவரிடம் பாலியல் உறவு கொண்டதாகவும் ஹோட்டல் அறையின் படுக்கையில் சிறுநீர் கழித்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'வோட்டர்ஸ்போர்ட்கேட்' (Watersportsgate) என இந்த சர்ச்சை குறிப்பிடப்படுகிறது. ட…
-
- 4 replies
- 553 views
-
-
மும்பை: மும்பை எரவடா சிறையில் நடிகர் சஞ்சய் தத்துக்கு பைண்டிங், கோப்புகளை (ஃபைல்) பராமரிக்கும் வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தண்டனைப் பெற்று மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார் பிரபல நடிகர் சஞ்சய் தத். அங்கு இவருக்கு சமையல் செய்யும் வேலை ஒதுக்கப்பட்டது. ஆனால் உயிருக்கு ஆபத்து என்று கூறி வேறு சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும், வேறு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு சஞ்சய் தத் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து சஞ்சய் தத் எரவடா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இங்குதான் அவர் அடுத்த 42 மாதங்கள் இருக்க வேண்டும். இந்தச் சிறையில் சஞ்சய் தத்துக்கு மிகவும் பாதுகாப்பு மிகுந்த இடத்தில், அறைக்குள் அமர்ந்…
-
- 1 reply
- 542 views
-
-
சீனா மீது போர் தொடுக்கப் போகிறதா அமெரிக்கா? ட்ரம்ப்பின் அதிரடி வியூகம் 2014-ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபை கணக்கீட்டின்படி, உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் சந்தேகமே இல்லாமல் அமெரிக்கா இருக்கிறது. இரண்டாவது இடம் சீனாவுக்கு. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவீட்டின்படி அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு வந்து விட்டது சீனா. மேலும் இருதரப்புக் கொள்கைகள் தொடங்கி, எல்லைப்பரப்பு நிர்ணயம் வரை ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக தனது மறைமுக எதிரியாகக் கருதுவது சீனாவைத்தான். இந்தியாவுடன் அருணாச்சலப் பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளை ஆக்கிரமிப்பது தொடர்பாக தொடர்ந்து கருத்து வேறுபட்ட நிலையில் இர…
-
- 0 replies
- 769 views
-
-
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று துப்பாக்கி சூடு நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார். கடந்த ஒருவார காலத்தில் பாகிஸ்தான் ராணுவம் 3வது முறையாக இன்று ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தியத் தரப்பும் பதிலடி கொடுத்தது. இதை இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்வதை பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/07/india-j-k-pakistani-troops-vio…
-
- 5 replies
- 419 views
-
-
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது: சீனா சீனா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. ஏற்கனவே சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளது. அதே போல நிலவை ஆய்வு செய்வதற்கும் விண்கலங்களை அனுப்ப…
-
- 0 replies
- 663 views
-
-
குவைட்டில் இரண்டாவது பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டின் சிறுபான்மையினரான ஷியா முஸ்லிம்களின் பாதிக்கும் அதிகமான ஆசனங்கள் பறிபோயுள்ளன. சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் ஷியா பிரிவினர் 50 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களையே வென்றனர். முன்னதாக டிசம்பரில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில்ஷியாக்கள் 17 ஆசனங்களை வென்றிருந்தனர். எதிர்க் கட்சிகள் புறக்கணித்த தேர்தலில் 52.5 வீதமானோர் வாக்களித்திருந்தனர். லிபரல் மற்றும் பழங்குடியினரே அதிக ஆசனங்களை வென்றனர். குறைபாடுகளை காரணம் காட்டி குவைட் பாராளுமன்றம் கடந்த டிசம்பரில் கலைக்கப்பட்டது. மன்னராட்சி நிலவும் குவைட்டில் பாராளுமன்றம் மிகக் குறைந்த அதிகாரம் கொண்ட நிறுவனமாக செயற்பட்டபோதும் அதனையொட்டி நாட்டில் தொடர்ந்தும் பதற்றம் நீடிக…
-
- 0 replies
- 396 views
-
-
புர்க்கினா பாசோ கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்வு மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்க்கினா பாசோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் மீது ஒரே இரவில் துப்பாக்கி ஏந்தியவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளது. நைஜருடனான கிழக்கு எல்லைக்கு அருகிலுள்ள யாகா மாகாணத்தில் உள்ள சோல்ஹான் கிராமத்திலேயே வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் எரித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் ஜிஹாதி தாக்குதல்கள் வெடித்ததில் இருந்து பதிவான மோசமான தாக்குதல் இதுவாகும். இந் நிலையில் இத் …
-
- 0 replies
- 267 views
-
-
லண்டன் பயங்கரவாத தாக்குதல்: 12 பேர் கைது 7 பேர் பலியாக காரணமான லண்டன் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மூன்று தாக்குதல்தாரிகளில் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டைக்கு பின்னர் பார்கிங், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகளின் கூட்டத்துக்குள் புகுந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது. மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் பகுதிக்குள் கத்திகளுடன் ஓடி பலரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். http://www.bbc.com/tamil/glo…
-
- 1 reply
- 427 views
-
-
ஒருபாலுறவு திருமணச் சட்டத்துக்கு ஆதரவாக ஜெர்மனிய நாடாளுமன்றம் வாக்களித்திருப்பது குறித்த தகவல்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு எதிரான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தற்காலிக பயணத்தடை அமலுக்கு வந்திருப்பது குறித்த செய்திகள் மற்றும் பூச்சி மருந்துகளால் உலகெங்கும் தேனிக்கள் அழிவது குறித்த ஒரு புதிய ஆய்வறிக்கை குறித்த பிபிசியின் சிறப்புத்தகவல் ஆகியவை இன்றையை பிபிசி தொலைக்காட்சி செய்திகளில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 238 views
-
-
சென்னை: தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் உயிருடன் பிடித்து கொன்றது தொடர்பான சேனல் 4 தொலைக்காட்சியின் வீடியோ ஆதாரம் உண்மையெனில் மத்திய அரசு அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். இசைப்பிரியா போரின் போதே கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு கூறியிருந்தபோதிலும், அவர் இலங்கை ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சிகளை சேனல் 4 ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், அவர் இலங்கை ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டதற்கான ஆதாரத்தை சேனல் 4 இன்று காலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த த…
-
- 7 replies
- 1.6k views
-
-
ராம் ரஹீமுக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு! #WhyInGodsName பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம். இதன்மூலம் அவருக்கு மொத்தம் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு வழக்குகளுக்கும் தலா ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், தலா ரூ.14 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜக்தீப் சிங், தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான ராம் ரஹீம் சிங் மீது கடந்த 2002-ம் ஆண்டில் பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டது. …
-
- 1 reply
- 861 views
-
-
போர் நிறுத்தம்: துருக்கியில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று! உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நிலவிவரும் போரை நிறுத்துவது தொடர்பாக, இன்று (திங்கட்கிழமை) துருக்கியில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இரு தரப்பிலும் பலத்த உயிர் மற்றும் பொருட் சேதங்கள் மட்டுமன்றி உலகளவிலும் இந்த போரின் தாக்கம் எதிரொலித்துள்ள நிலையில், இப்பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. போர் நிறுத்தம் தொடர்பாக முன்னதாக பெலராஸில் இதுவரை நடைபெற்ற 3 கட்ட அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனைத்தொடர்ந்து துருக்கியில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா நட…
-
- 1 reply
- 227 views
-
-
கெடலோனியா சுதந்திர நாடா? இல்லையா? விளக்கம் கோரும் ஸ்பெய்ன் பிரதமர்! விவாதிக்கக் கூடும் அவர் அமைச்சரவை!!! செனகலை பாதிக்கும் துருக்கி அரசியல் மோதல்! வெளிநாட்டில் வாழும் துருக்கிய மதகுரு மீதான தடையால் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கும் மாணவர்கள்!! மற்றும் கடலில் கலக்கும் பிளாஸ்டிக்கின் அளவு ஆண்டுக்கு எண்பது லட்சம் டன்னாக அதிகரிப்பு! ஸ்வீடனின் பாட்டில்களை திருப்பித்தரும் திட்டம் அதை தடுக்க உதவுமா என்பதை ஆராயும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 234 views
-
-
புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளில் அடுத்த ஐந்தாண்டுகள் நல்லாட்சி! ஈபிள் கோபுர வெற்றி உரையில் மக்களுக்கு மக்ரோன் வாக்குறுதி April 25, 2022 44 வயதான எமானுவல் மக்ரோன் பிரான்ஸின் அதிபராக இரண்டாவதுமுறை வெற்றிவாகை சூடியுள்ளார். நேற்றிரவு எட்டு மணிக்கு வெளியாகிய உத்தேச மதிப்பீடுகளின் படி இரண்டாவது சுற்றில் அவர் 57.6%வீத வாக்குகளால் வென்றிருக்கிறார். மரின் லூ பென்னுக்கு 42.4%வீத வாக்குகள் கிடைத்துள்ளன. மக்ரோன் 2017 தேர்தலில் பெற்ற66.10 வீத வாக்குகளை விட 8.5 வீதம்குறைவான வாக்குகளையே வென்றிருக்கிறார். பதவியில் இருக்கின்ற அதிபர் ஒருவர் இரண்டாவது தடவையாகவும்வெற்றி பெறுவது கடந்த இருபது ஆண்டுகளின் பின்னர் இது முதல் முறை ஆகும். …
-
- 2 replies
- 659 views
- 1 follower
-
-
கறுப்புப் பணம் தொடர்பான விபரங்களை இந்திய அரசிற்கு வழங்கிவிட்டதாக சுவிட்சர்லாந்து விளக்கம் [Tuesday, 2014-03-11 11:34:44] இந்திய அரசு அதிகாரிகள் கேட்ட கறுப்புப் பணம் தொடர்பான வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கிவிட்டதாக சுவிட்சர்லாந்து அரசு கூறியுள்ளது. சட்டப்பூர்வமாக தரப்பட வேண்டிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதே சமயம் முறையற்ற வகையில் பெறப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்கள் அடிப்படையில் தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பணம் கண்டறியும் தங்கள் நடவடிக்கைக்கு சுவிட்சர்லாந்து அரசின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என கடந்த மாதம் நிதியமைச்சர் சிதம்பரம் கூறியிருந்த நிலையில் இக்கருத்து வெளியாகியுள்ளது. http://www.seithy.c…
-
- 1 reply
- 347 views
-
-
கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில்... சீனாவின், அத்துமீறல் : தாய்வான் வழியாக கப்பலை அனுப்பியது அமெரிக்கா கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவுடனான பதட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தாய்வான் வழியாக அமெரிக்க கடற்படை தனது இரண்டாவது கப்பலை அனுப்பியது. சர்வதேச சட்டத்தின்படி தாய்வானுக்கு அருகில் யு.எஸ்.எஸ். போர்ட் றோயல், டிகோண்டெரோகா வகுப்பு வழிகாட்டி-ஏவுகணை கப்பல் சென்றதாக அமெரிக்க கடற்படை கூறியது. தனது சுயமாநிலமாக சீனா கருதும் தாய்வானைச் சுற்றி தொடர்ந்தும் ரோந்து பணிகளில் அமெரிக்க கடற்படையும் அதன் நட்பு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை, 18 போர் விமானங்களை தாய்வானின் வான் பரப்பிற்குள் சீனா ரோந்து நடவடிக்கைக்காக அனுப்பியது. ஜ…
-
- 0 replies
- 127 views
-
-
வீட்டுக் காவலில் உள்ள ஜிம்பாப்வே அதிபர் முகாபேவை சந்திக்க தென்னாஃப்ரிக்க அமைச்சர்கள் ஹராரி வருகை - ராணுவ தளபதிகளை சந்தித்துப் பேசவும் திட்டம் யேமென் போரினால் ஆயிரக்கணக்கானோர் வாழ்வில் ஏற்படும் தாக்கம் - டாய்ஸ் நகர முன்னரங்கில் இருந்து பிபிசியின் சிறப்புச் செய்தி ரக்காவில் இருந்து நூற்றுக்கணக்கானோருடன் தப்பியபோது கண்ணிவெடியில் சிக்கி, குடும்பத்தை இழந்த தந்தையின் துயரம் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 581 views
-
-
கிழக்கு உக்ரைன் பிரிவினைவாதிகள் டொனெற்ஸ்க் மக்கள் குடியரசை அமைக்கத் தீர்மானம் : ஐரோப்பியசெய்தியாளர் லெனின் பாதச் சுவடுகளைப் பின்பற்றிக் கிழக்கு உக்ரைன் பிரிவினைவாதிகள் டொனெற்ஸ்க் மக்கள் குடியரசை அமைக்கத் தீர்மானம் எடுத்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புரட்சியை நிறுத்தி அரசியற் கட்டுமான அமைப்பொன்றை ஏற்படுத்துவது அவசியமெனக் கருதப்படுகிறது. வருங்காலங்களில், மிகவும் ஒழுங்கு படுத்தப்பட்ட கூட்டு வேலைத் திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு, இதுவரையில் பேச்சு மட்டுமிருந்த டொனெற்ஸ்க் மக்கள் குடியரசு மலர, லெனினின் பாதை பின்பற்றப்படவும் உள்ளது. 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இடம் பெற்ற மாபெரும் புரட்சிக் காலத்தில், லெனினால் எழுதப்பட்ட "தேசமும் புரட்சியும்" எனும் நூலில…
-
- 11 replies
- 638 views
-
-
இனப்படுகொலையில் ஈடுபட்ட சேர்பிய இராணுவத் தளபதி மிலாடிக் மீதான விசாரணைகள் ஆரம்பம் மே 20, 2014 இனப்படுகொலை மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக முன்னாள் பொஸ்னிய சேர்பிய இராணுவத் தளபதி ரத்கோ மிலாடிக் மீதான வழக்கில் பிரதிவாதி தரப்பு விசாரணை ஹேக் நகரில் நேற்று ஆரம்பமானது. முன்னாள் யுகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன்னால் ஆஜராகவுள்ள மிகவும் அதிகளவுக்கு சந்தேகநபராக கருதப்படுபவர்களில் 72 வயதுடைய மிலாடிக்கும் ஒருவராவார். 1992 - 1995 காலப்பகுதியில் பொஸ்னிய யுத்தத்தின் போதான 11 குற்றச்சாட்டுகளை மிலாடிக் மறுத்து வருகிறார். சிறிபெரினிக்காவில் 7 ஆயிரத்துக்கு அதிகமான பொஸ்னிய ஆண்களையும் சிறுவர்களையும் படுகொலை செய்ததில் இவருக்கு பங்களிப்பு இரு…
-
- 0 replies
- 410 views
-