Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புலிகளுக்கு இந்தியா உதவுகிறது: இலங்கை நவம்பர் 17, 2006 கொழும்பு: விடுதலைப் புலிகள் ஆயுதம் கடந்த இந்திய மீன் பிடிக்கும் படகுகளை இந்தியா கொடுத்து உதவுவதாக இலங்கை அரசு கூறியுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஜெனீவா பேச்சு வார்த்தை தேல்விக்கு பின் இலங்கை கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் விடுதலைப் புலிகளின் படகுகளை நாங்கள் மூழ்கடித்து வருகிறோம். விடுதலைப் புலிகளுக்கு இந்திய மீன்பிடி படகுகளை கொடுத்து ஆயுதம் கடத்த இந்தியா உதவி செய்து வருகிறது என்றார். மீண்டும் பேச்சுக்கு அழைப்பு: இதற்கிடையில் விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை அரசு …

    • 3 replies
    • 1.1k views
  2. சென்னை: சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு விமானங்களின் என்ஜின்கள் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ஜின்களின் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும். என்.இ.பி.சி. என்ற தனியார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான நான்கு விமானங்கள் சென்னை விமான நிலையத்தின் 8வது நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பல மாதங்களாக இந்த விமானங்கள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதற்கான வாடகையை என்.இ.பி.சி. நிறுவனம் தரவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நான்கு விமானங்களையும் விமான நிலைய குழுமம் பறிமுதல் செய்தது. இதேபோல தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான 3 விமானங்களும் இதே காரணத்திற்காக பறிமுதல் செய்யப்பட்டன. வாடகையைக் கட்டினால் விமானங்கள் திருப…

  3. இசைஞானி இளையராஜா பாரதியார் படத்துக்கு இசை அமைத்து பெருமை சேர்த்தார். ஆனால் தற்போது பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்து விட்டார். தெய்வ நம்பிக்கை கொண்டவர் இளையராஜா. கோடி ரூபாய் கொடுத்தாலும் பெரியார் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று அவர் கூறியதை நினைத்து பெருமைபடுகிறேன். அவரை பாராட்டுகிறேன். அவர் லட்சிய பற்றுள்ளவர். -திரு.இல.கனேசன் இவ்வாறு கூறியுள்ளார். ....."ஒரு திருமணம் நடக்கிறது. அதற்கு ஒரு சமையற்காரரை ஏற்பாடு செய்து விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது. கல்யாண வீட்டுக் காரர் திடீரென்று பந்தியின் முன்னால் உட்கார்ந்திருப்பவர்களிடம் 'இங்கே ஒரு பிரபலமான சமையற்காரரை அழைத்திருந்தேன். அவர் வருவதற்கு மறுத்து விட்டார்.' என்று சொன்னால் அங்கே இருப்பவர்கள் என்ன நினைப்பார…

    • 5 replies
    • 5.7k views
  4. http://www.alaikal.com/index.php?option=co...9&Itemid=34 ஜப்பான் கடலில் மிக பயங்கர பூகம்பம்சுனாமி எச்சரிக்கைமக்கள் வெளியேற்றம் புதன், 15 நவம்பர் 2006 14:26 டோக்கியோ: ஜப்பானின் குரில் தீவுப் பகுதியில் இன்று மிக பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 8.1 என்ற அளவுக்கு இந்த பூகம்பம் பதிவானது. இதையடுத்து ஜப்பானின் கிழக்குப் பகுதியையயும் ரஷ்யாவின் தென் கிழக்குப் பகுதியையும் சுனாமி அலைகள் தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் இருந்து 1,700 கி.மீ. தொலைவில் வட மேற்கே இந்த பூகம்பத்தின் மையம் இருந்தது. ரஷ்யாவை ஒட்டிய ஹோகாய்டோ மாகாணத்தின் அருகே உள்ளது இந்த குரில் தீவுக் கூட்டம். இந்திய நேரப்படி இன்று மாலை…

  5. பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில், விஞ்ஞானிகள் உள்ளிட்ட 150 பேரை போலீஸ் உடையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் கடத்திச் சென்றது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. தலைநகர் பாக்தாதின் மையப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான அறிவியல் ஆய்வுக் கழகம் உள்ளது. இங்கு ஏராளமான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், துப்பாக்கிகள் ஏந்தியபடி அதிரடிப் போலீஸ் சீருடையில் ஏராளமானோர் இந்த அலுவலகத்திற்கு ஏகப்பட்ட கார்களில் வந்தனர். ஆய்வுக் கழகத்திற்குள் நுழைந்த அவர்கள் அங்கிருந்த விஞ்ஞானிகள் உள்பட 150க்கும் மேற்பட்டோரை கார்களில் கடத்திக் கொண்டு பறந்தனர். இது ஒரு கடத்தல் என்பது சில நிமிடங்களுக்குப் பிறகுதான் தெரிய வந்தது. இதனால் பாக்தாத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட…

  6. சென்னை: விலை உயர்ந்த கார்களை வாடகைக்கு எடுத்து அவற்றை விற்றும், உதிரிபாகங்களை கழற்றி விற்றும் மோசடி செய்ததாக பிரபல தொழிலதிபர் ஓபுல் ரெட்டியின் மகள் மீனாட்சி ரெட்டியை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் அதிபர் பிரதாப் ரெட்டியின் சம்பந்தி தான் இந்த ஓபுல் ரெட்டி. நிப்போ பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரிகல் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை நடத்தி வருகிறார் ஓபுல் ரெட்டி. இவரது மகள் மீனாட்சி ரெட்டி. இவரது கணவர் விஜயவர்த்தன் ரெட்டி. இவர் கொடுங்கையூரில் பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த ஒரு வருடமாக மீனாட்சி ரெட்டி தமிழகத்தைச் சேர்ந்த பல டிராவல் ஏஜென்சிகளிடம் வாடகைக்கு கார்களை எடுத்து வந்துள்ளார். சென்னையில் மட்டும் 7…

  7. லண்டன்: அணுகுண்டுகள் தாயரிக்கும் முயற்சிகளில் அல்கொய்தா ஈடுபட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இங்கிலாந்தின் புலனாய்வு துறை (எம்ஐ 15) வெளியிட்டுள்ள தகவலில், சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை தயாரிக்கும் தொழில் நுட்பங்களை கற்று அணுகுண்டு தயாரித்து இங்கிலாந்து மற்றும் அமெ>க்கா போன்ற நாடுகளுக்கு பேரழிவை ஏற்படுத்த பின்லேடனின் அல்கொய்தா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சில முக்கியமான ரகசிய தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. கொடிய நோய்களை பரப்பும் உயிரியல் ஆயுதங்களை தயாரிப்பதிலும் அல்கொய்தா முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது http://thatstamil.oneindia.in/news/2006/11/15/alqueda.html

  8. டெல்லி: அருணாச்சல் பிரதேசம் மாநிலம் சீனாவுக்குச் சொந்தமானது என்று இந்தியாவுக்கான சீன தூதர் சூன் யூக்ஸி கூறியிருப்பதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அருணாச்சல் பிரதேச மாநிலம் முழுமையும் சீனாவுக்குச் சொந்தமான பகுதி என்று யூக்ஸி சீனத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சல் பிரதேசம் என்பதில் எந்தவித சந்தேக¬ம் சீனாவுக்குத் தேவையில்லை. அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலம். சீன தூதரின் பேச்சு கண்டனத்துக்குரியது. இது தேவையற்ற பேச்சு என்றார் முகர்ஜ…

  9. இலங்கை விமானப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி சண்டிகார்இ நவ.14- இலங்கை விமானப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி இலங்கை விமானப்படையை சேர்ந்த வீரர்களுக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகார் நகரில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்குள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் கடந்த மாதம்(அக்டோபர்) 14-ந்தேதி தொடங்கிய இந்த பயிற்சிஇ ஜனவரி மாதம் 5-ந்தேதி முடிவடைகிறது. ஹஹமிக்-27'' ரக விமானங்களை இயக்குவது பற்றி இலங்கை விமானப்படை வீரர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகிறார்கள். ரஷிய விமானம் இது பற்றி இலங்கை விமானப்படை வீரர் பெரேரா கூறுகையில்இ ஹஹநாங்கள் 6 பேர் கொண்ட குழுக்களாக பயிற்சி பெற்று வருகிறோம்.'' என்று தெரிவித்தார். ஹஹஇலங்கையில…

    • 3 replies
    • 1.2k views
  10. இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது. பொறுமையை முடித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்களை குறி வைத்து இலங்கை அரசு வெறித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 65 அப்பாவித் தமிழர்கள் பலியாகியுள்ளனர். வீடுகளை இழந்து மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்தவர்கள் இவர்கள். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியும் இச்செயலை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில மாதங்களுக்கு …

    • 11 replies
    • 2.3k views
  11. மேலதிக விபரங்கள் எதுவும் தெரியவில்லை.

    • 6 replies
    • 1.4k views
  12. அமெரிக்கா காங்கிரஸ் மற்றும் செனட் தேர்தலில் புஸ்ஸின் கட்சி தோல்விகளை சந்தித்து கொண்டிருகிறது காங்கிரசை democrats கைப்பற்றிவிட்டார்கள் வெளிவந்த முடிவுகளின் படி 227 ஆசனங்களை பெற்று democrats முன்னணியில் இருகிரார்கள் புஸ்சின் கட்சிக்கு 192 ஆசங்கள் கிடைத்துள்ளன இன்னும் 19 ஆசங்களின் முடிவுகள் அறிவிக்கப்படவேண்டி இருந்தாலும் புஸ்ஸினால் பெரும்பான்மையை பெறமுடியாது செனட்டை பொறுத்தவரையில் 49 ஆசனங்களை இருகட்சிகளும் பெற்றிருக்கின்றன இன்னும் 2 ஆசனங்களின் முடிவுகள் அறிவிக்கப்படவேண்டியுள்ளது governor பொறுத்தவரையில் 8 ஆசங்களி மேலதிகமாக பெற்று முன்னிலை வகிக்கின்றனர் democrats இன்னும் 2 ஆசனங்களின் முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது இத்தேர்தலானது புஸ்ஸின் கொள்கைக்கு கிடைத்த பேர…

  13. சரத்குமாரின் அரசியல் களத்தில் எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயம் இப்போது நடந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் தி.மு.க.வில் உறுப்பினாரக இணைந்த சரத்குமாருக்கு எம்.பி. பதவி கொடுத்து அழகு பார்த்தது தி.மு.க. இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மனக்கசப்புகளால் அதிருப்தியில் இருந்த சரத்குமார், தி.மு.க.வில் இருந்து விலகியதோடு எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் மனைவி ராதிகாவுடன் ஜெயலலிதாவை சந்தித்து அ.திமு.க.வில் இணைந்த சரத்குமார் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பல கூட்டங்களிலும் பேசினார். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பழமொழி போல அ.தி.மு.க.விலும் சரத்குமாருக்கு தகுந்த மரியாதை கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார…

  14. சிங்களக் கொலைகாரர்களுக்கு ஆயுதம் வழங்க இந்தியா முடிவு தமிழர்களே உங்கள் முடிவு என்ன? இலங்கை அரசுக்குத் தாக்குதல் ஆயுதங்களை வழங்குவது இல்லை என்ற கொள்கை உள்ளது. ஆனால் இலங்கையின் இறையாண்மை மற்றும் பிரதேசப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாம் கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் - என்று அரசிடம் இருந்து எங்களுக்கு அறிவுறுத்தல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்துடன் பேச்சு நடத்தினோம். சோனார்கள், இராடார்கள், இலத்திரனியல் தளவாடங்கள், கடற்படையினருக்கான துப்பாக்கிகள் ஆகியவற்றை வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க அவற்றை அனுப்ப உள்ளோம்" என்று இந்தியக் கடற்படைத் தளபதி அருண்பிரகாஷ் கூறியுள்ளார். இலங்கைக்கு இராணுவ உத…

  15. சியா முஸ்லீம்களை அதிகமாகக் கொண்டிருந்த ஈராக்கிய நகரான Dujail இல் 1982 இலி 148 பொதுமக்களைக் கொன்ற நிகழ்வில் மறைமுகமாக தொடர்பு கொண்டிருந்ததற்காக ஈராக்கிய முன்னாள் அதிபர் சதாம் குசைனுக்கு இன்று தூக்குத்தண்டனைத் தீர்வு அளிக்கப்பட்டது. இவர் ஈராக் மீதான 2003 அமெரிக்க பிரித்தானிய கூட்டுப்படையெடுப்பின் பின் சிறைபிடிக்கப்பட்டு நீதி விசாரணைக்குட்படுத்தப்பட்டி

  16. 40 ஆபிரிக்க நாட்டு தலைவர்கள் இந்த வாரம் சீனாவில் ஒன்று கூடியிருக்கிறார்கள் சீனா - ஆபிரிக்க கூட்டுறவு மகாநாட்டிற்காக. சீனாவின் தலைவர் பல அபிவிருத்தி திட்டங்களை இலவச பாடசாலை வைத்தியசாலை கட்டுதல், தொழிநுட்ப உதவிகள், ஆபிரிக்க மாணவர்களிற்கு சீனாவில் படிக்க புலமைப்பரிசில் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. மேற்குலகத்தோடு (பிரித்தானியாவோடு) முரண்பாட்டில் உள்ள சிம்பாவே ஜனாதிபதி போன்றோரும் பங்கு பற்றியது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ஆபிரிக்காவின் பெரும்பாலான நாடுகள் அனைத்தையும் நோக்கிய பாரிய ஆழமான அகலமான உதவித்திட்டங்கள் சினாவின் தற்போதைய பொருளாதார பலத்தையும் எதிர்கால திட்டங்களிற்கும் எடுத்துக்காட்டு. பொருளாதார இராஜதந்திர இராணுவ ரீதிகளில் மேற்குலகிற்கும் அவர்களத…

  17. Started by Subiththiran,

    பின்லேடனை போல் ஜார்ஜ்புஷ் ஆபத்தான தீவிரவாதி: கருத்துக்கணிப்பில் தகவல் இங்கிலாந்து, கனடா, மெக்சிகோ, இஸ்ரேல் ஆகிய நாடுகளை சேர்ந்த பத்திரிகைகள் இணைந்து இந்த நாட்டு மக்களிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. உலக அமைதிக்கு ஆபத்தாக இருக்கும் நாடு எது என்ற கேள்விக்கு அமெரிக்கா வினால் தான் உலக அமைதிக்கு ஆபத்து என்று அவர்கள் கருத்து தெரி வித்துள்ளனர். இங்கிலாந்தில் 69 சதவிதம் பேரும் கனடாவில் 62 சதவிதம் பேரும், மெக்சி கோவில் 53 சதவிதம் பேரும் அமெரிக்காவால் உலக அமைதி கெடுகிறது என்று கருத்து கூறி உள்ளனர். பின்லேடனை போல சர்வதேச தீவிரவாதிகள் பட்டி யலில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்சையும் அவர்கள் சேர்த்துள்ளனர். ஆபத்தான மனிதர் பின்லேடன் என்று இங்கிலாந்தில் 87 சதவிதத் தினர…

  18. நாயை துப்பாக்கியால் சுட்டவர் கைது நவம்பர் 03, 2006 மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், தன்னைப் பார்த்து குரைத்த நாயை துப்பாக்கிõயல் சுட்டவரை போலீஸார் கைது செய்தனர். மயிலாடுதுறை, பட்டமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயராமன். இவரது மகன் செல்வம். அவரது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார்கள். செல்வத்தின் வீட்டு வழியாக முருகேசன் என்பவர் நடந்து சென்றபோது நாய் குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், தனது கையில் இருந்த குருவி சுடும் துப்பாக்கியால் நாயை சுட்டார். இதனால் நாயின் முதுகுப் பகுதியில் 2 குண்டுகள் பாய்ந்து அது துடித்தது. நாய் சத்தம் கேட்டு செல்வத்தின் மனைவி சாவித்திரி வெளியே வந்தார். நாயை காப்பாற்ற முயற்சித்தார். அப்போது அவரது கையி…

  19. வைகோ மீதான தேச துரோக வழக்கு தள்ளுபடி சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பால் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. சென்னை அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் என்ற பகுதியைச் சேர்ந்தவர் காங்கிரஸ் பிரமுகர் பால். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மீது வழக்கு தொடர்ந்தார். அதில், ஆகஸ்ட் 21ம் தேதி சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் வைகோஇ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசினார். வன்முறையைத் தூண்டும் விதமாக பேசினார். பிரபாகரனை ஆதரித்துப் பேசினார். அவர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யமாறு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீஸார் புகாரைப் பெற மறுத்து விட்டனர். எனவே வைகோ மீ…

  20. பாட்னா: பீகார் மாநிலத்தில் பிறந்து 3 மாதமே ஆன கைக் குழந்தை மீது கொள்ளை வழக்குப் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது பீகார் காவல்துறை. பீகார் மாநிலம் ¬சாபர்பூர் மாவட்டம் மினாபூர் காவல் நிலையத்தில்தான் இந்த கூத்தோ கூத்து நடந்துள்ளது. சமீபத்தில் இந்த மாவட்டத்தில் பேருந்தை வழிமறித்து கொள்ளைச் சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நெகர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சசிகாந்த் ராய், பப்பு குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக மினாபூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், சசி காந்த் ராயின் 3 மாத கைக்குழந்தையான பிரவீன் குமாரின் பெயரையும் சேர்த்துள்ளனர். இதனால் அங்கு சர்ச்சை எழுந்த…

  21. வெறி நாய்களிடம் சிக்கி சிறுவன் படுகாயம்! அக்டோபர் 30, 2006 குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெறி நாய்களிடம் சிக்கி 7 வயது சிறுவன் படுகாயமடைந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குன்னூர் அருகே குட்டபெட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் நாகராஜ். 7 வயதாகும் நாகராஜன் 2ம் வகுப்பு படித்து வருகிறான். கன மழை காரணமாக சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் தனது நண்பர்களுடன் நாகராஜ் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது விளையாடிக் கொண்டிருந்த பந்து ஓடியதால் அதைப் பிடிக்க பின்னாலேயே ஓடியுள்ளான் நாகராஜ். அப்போது தெருவில் இருந்த ஒரு நாய் நாகராஜை விரட்டியுள்ளது. அந்த நாய் விரட்ட…

  22. சிறுமியை சீரழித்த 'சாமி'க்கு 10 வருடம் சிறை! அக்டோபர் 30, 2006 வேலூர்: 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் ஆற்காடு கங்காபுரத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. சாமியாராக தன்னை அறிவித்துக் கொண்ட இந்த தண்டபாணி அப்பகுதியில் தன்னை நாடி வருவோரின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு வலிப்பு நோய்க்கு இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக திவ்யா என்ற 8 வயது சிறுமியை அழைத்து வந்தனர். அப்போது அந்த சிறுமியை சாமியார் தண்டபாணி பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு தண்டபாணி கைது செய்யப்பட்டார். அவர் மீது வேலூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக…

  23. பச்சைத் துரோகம் செய்து விட்டது திமுக; இனி பாமக எதிர்க்கட்சி ராமதாஸ் அதிரடி அக்டோபர் 30, 2006 சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் திமுக பச்சைத் துரோகம் செய்து விட்டது. இனிமேல் பாமக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பெரும்பாலானவற்றை திமுக போட்டி வேட்பாளர்கள் கைப்பற்றி போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் பாமக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் கடும் அதிருப்தி அடைந்தன. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டி அறிக்கை விட்டார். இந்த அறிக்கைக்குப் பதில் அளித்து முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட…

    • 9 replies
    • 2.2k views
  24. சமூகத்தில் விதைப்பட்டும் கருத்துக்கள் கதைகள் பல அறிவுமட்டங்கள் உள்ள சமூகத்தை அடையும் போது சில சந்தர்ப்பங்களில் அவை தப்பான முடிவுகளுக்கான தவறான உதாரணங்களாகி பெரும் அழிவுகளைத் தந்துவிடுகின்றன. இது கூட அப்படி ஒன்றுதான்..வழக்கமாக சொல்லப்படும் சில தவறான உதாரணங்களை வைத்து புனையப்படும் கதைகளின் பாதுப்புகளாகச் சொல்லலாம்.. தவறான உதாரணங்களை சிந்தித்துத் தவிர்க்க வழிகாட்டுவதே நன்று. கிணற்றில் வீசி 3 குழந்தைகளைக் கொன்ற தாய்! அக்டோபர் 30, 2006 - தட்ஸ் தமிழ் சேலம்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்ற தாய் தானும் தற்கொலைக்கு முயன்றார். சேலம் மாவட்டம் சங்ககிரி என்ற இடத்தில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருபவர் பழனிச்சாமி. இவரது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.