Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. லண்டனுக்கு வந்த திமிங்கிலம் தேம்ஸ் நதியூடாக லண்டனின் மத்திய பிரதேசத்திற்குள் 5 மீற்றர் நீளமான திமிங்கிலம் உட்பிரவேசித்துள்ளது. வழக்கமாக வடக்கு அட்லாண்டிக் பகுதியின் ஆழ்கடல் பிரதேசங்களில் சிறு கூட்டமாக காணப்படும் இந்த சிறிய வகை திமிங்கிலம் தேம்ஸ் நதிக்கு வந்தது அதிசயமாக கருதப்படுகின்றது. இந்த அரிய காட்சியை காண தேம்ஸ் நதியருகே நேற்று பெருந்தொகையான மக்கள் கூடியிருந்தனர். இதனை பாதுகாப்பான முறையில் மீண்டும் கடலுக்கு அழைத்து செல்வதற்காக முயற்சியில் கடல் வாழ் உயிரினங்களை காக்கும் அமைப்பு ஈடுபட்டுள்ளது. நேற்று இந்த செய்தியே பிரத்தானிய தொலைக்காட்சிகளில் பரபரப்பான விடயமாக இருந்ததுடன் பல தொலைக்காட்சிகளில் திமிங்கிலம் பயணம் செய்வதை நேரடி ஒளிபரப்பாக காண கூடியதாக இருந்தது. …

    • 21 replies
    • 3.9k views
  2. ஐரோப்பாவில் எரிவாயு பற்றாக்குறை ? பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்காக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நாடுகளில் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிற்கு தேவையான எரிவாயுவின் பெரும்பங்கை ரசியா வழங்கி வருகின்றது. ரசிய எரிபொருள் நிறுவனமான காய்புரோ அண்மையில் அதன் அண்டை நாடான உக்ரெய்னுக்கு வழக்கப்பட்டு வந்த எரிவாயுவின் விலையை உயர்த்த போவதாக தெரிவித்தபோதிலும் அதற்கு உக்ரெய்ன் உடன்படவில்லை. இந்த இழுபறியை தொடர்ந்து உக்ரெய்னுக்கான எரிவாயு விநியோகத்தை ஜனவரி 1 முதல் ரசியா நிறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பலவும் தமது எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமக்கு குறைந்த அளவிலான …

    • 14 replies
    • 2.8k views
  3. நாய்களுக்காக தனி பேக்கரி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாய்களுக்காக தனி பேக்கரி ஒன்று திறக்கப்பட்டு உள்ளது.அமெரிக்காவை சேர்ந்த ஹரியத் ஸ்டெர்ன்ஸ்டீன் இந்த பேக்கரியை தொடங்கி இருக்கிறார். அங்கு நாய்களுக்காக வெவ்வேறு நறுமணத்துடன் கூடிய பிஸ்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.சிலர் தங்கள் செல்ல நாயை கடைக்கே அழைத்து வந்து அது விரும்பும் வாசனை உள்ள பிஸ்கெட்டை வாங்கிக் கொடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.சில வகை பிஸ்கெட்டுகள் பூனை மற்றும் நாய்களுக்கு பிடித்த 'எலும்பு' வடிவங்களில் தயாரிக்கப்பட்டு உள்ளன. முதலில் அனைவரும் வேடிக்கையாக பார்த்துச் சென்றதாகவும், இப்போது சகஜமாக தங்கள் செல்லப்பிராணிகளை அங்கு அழைத்துச் சென்று 'ஷாப்பிங்' செய்வது வாடிக்கையாகி விட்டதாகவும் அத…

    • 15 replies
    • 2.7k views
  4. ஜெர்மனிய மக்கள் தொகை 1972-ம் ஆண்டு முதல் குறைந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதம் உள்ள நாடு ஜெர்மனிதான். ஒரு பெண்ணுக்கு 1.3 குழந்தை என்ற அளவிலேயே பிறப்பு விகிதம் இருக்கிறது. 1960 முதல் 1967-க்குள் உள்ள இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களில் 30 சதவீதம் ஜெர்மானியர்கள் குழந்தை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.7 கோடியே 55 லட்சமாக உள்ள ஜெர்மானிய மக்கள் தொகை இன்னும் 45 ஆண்டுகளில் 5 கோடியாக குறைந்து விடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது ஜெர்மானியத் தலைவர்களுக்கு கவலையை அளித்து உள்ளது. Thanks:Malaimalar.. என்னப்பா நம்மட ஆக்கள் எல்லாம் தூங்கினமா? :oops: :oops:

  5. சிறுபான்மையினர் அச்சுறுத்தலுக்குள்ளாகும் உலக நாடுகளின் பட்டியலில் இராக் முதலிடம் வன்முறை, அடக்குமுறை மற்றும் துன்புறுத்தல்களால் சிறுபான்மையினர் அச்சுறுத்தலுக்குள்ளாகியிரு

    • 0 replies
    • 1.1k views
  6. இ****** அகதியாக சென்ற ஈழத்தமிழன் நித்திரையில் அடித்துக் கொலை. அகதியாக இ**** வந்தால் இதுதான் பதில் என்று கூறி தாக்கினர். இலங்கை அரச வன்முறைகளுக்கு பயந்து இ******அகதியாக தலைமன்னார் ஊடாக சென்ற ஈழத்தமிழன் இ***** அகதி முகாமில் ஆழந்த நித்திரையில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இ***** த**நாட்டின் மறக்கனம் என்ற இடத்திற்கு அருகாமையில் இந்த கோரச்சம்பவம் நடந்துள்ளது. இலங்கை அரசின் வன்முறைகளுக்கு பயந்து இ***** ஈழத்தமிழன் தனது மனைவி பிள்ளைகள் சகிதம் அண்மையில் அகதியாக சென்றுள்ளார். 26 வயதுடடைய நித்தியானந்தம் என்ற நேசன் தனது 24 வயது நிரம்பிய மனைவி கவிதா, 2 வயது குழந்தை பானு அல்லது மீராதர்சினியுடன் இ***** அகதியாக சென்றுள்ளார். தனது மனைவி குழந்தையுடன் ஆழ்ந்த நித்திரையில் உறங்கிய ந…

  7. பயணிகளை நிர்வாணமாக படம்பிடித்து காட்டும் கருவி லண்டன் ரெயில் நிலையங்களில் பொருத்தப்படுகிறது லண்டன், ஜன.13- லண்டன் நகரில் ரெயில் நிலையங்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளை நிர்வாணமாகப் படம் பிடித்துக் காட்டும் கருவி பொருத்தப்பட இருக்கிறது. வெடிகுண்டு தாக்குதல் லண்டன் நகர் ரெயில் நிலையங்களில், அல்கொய்தாவைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தி, 56 பயணிகளை பலி கொண்டனர்.இதைத் தொடர்ந்து, குண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு வரும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து கைது செய்வதற்கு வசதியாக உயர் தொழில் நுட்பம் கொண்ட டிஜிட்டல் ஸ்கேனர் கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன. இவை பயணிகளை நிர்வாணமாகப் படம் பிடித்துக் காட்டும். சோதனை முறையில் இந்த ஸ்கேனர் கருவ…

  8. தாடி, மீசையுடன் பள்ளிக்கு வரக்கூடாது : சீக்கிய மாணவனுக்கு மலேசியாவில் உத்தரவு கோலாலம்பூர்: மலேசியாவில் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் சீக்கிய மாணவனை தாடி மற்றும் மீசையை நீக்கி விட்டு வரும்படி பள்ளி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் படிப்பவர் ரன்வீர் சிங். வயது 17. இவரை முகச்சவரம் செய்து விட்டு பள்ளிக்கு வரும்படி அவர் படிக்கும் பள்ளியின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ரன்வீர் சிங் தந்தை ஜஸ்மெல் சிங் கூறுகையில்,"" எங்கள் சீக்கிய மதப்படி உடம்பின் எந்த பகுதியில் இருந்து முடியை அகற்ற கூடாது என்ற நடைமுறை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மலேசிய பள்ளி எனது மகனுக்கு அதற்கு எதிராக உத்தரவு …

  9. தகனமேடையில் `கேக்' வெட்டினார் சுடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் போபால், ஜன.12- மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயின் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரசிங் தாக்குர். இவருக்கு நேற்று 51-வது பிறந்தநாள். அதை நூதனமாக கொண்டாட விரும்பிய அவர், அதற்கு தேர்ந்தெடுத்த இடம், சுடுகாடு. சுடுகாட்டுக்கு தனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் கூட்டிச்சென்றார். பிணங்களை தகனம் செய்யும் மேடையில் பிறந்தநாள் 'கேக்'-ஐ வைத்தார். அங்கேயே 'கேக்' வெட்டி, தனது பிறந்தநாளை கொண்டாடினார். அங்கு இருந்த அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறினர். முன்னதாக, சுடுகாட்டில் உள்ள சிவன் கோவிலில் அவர் சாமி கும்பிட்டார். Dailythanthi

  10. காதலனை மறக்காமல்....... அவர் என் நெருங்கிய நண்பர். நல்ல பண்பாளர். அதிர்ந்து பேசாதவர். அவருக்கு பல இடங்களில் தேடி ரொம்ப கவனமாக ஒரு பெண்ணை தேர்வு செய்து பெரியவர்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து வந்ததிலிருந்து அழுது அவர்மனைவி கொண்டே இருந் திருக்கிறாள். இவரும் பிறந்த வீட்டை மறக்க முடி யாமல்தான் அழுகிறாள் என நினைத்து, நல்ல மனதுடன் அவளை ஏதும் கேட் காமல், அன்புடனே பார்த்துக் கொண்டி ருக்கிறார். ஆனால் அவளோ அவரது அன்பை புரிந்து கொள்ளாமல், யாரிட மும் சொல்லாமல், வீட்டை விட்டு சென்று விட்டாள். பிறகு தெரிந்தது. அவளுக்கு வேறு ஒரு காதலன் இருப்பதும், பெற்றோரின் வற்புறுத்தலால் தான் இத் திருமணம் நடைபெற்றுள் ளது என்பதும். சில மாதங் களுக்கு பிறகு அவளை, அவள் காதலன் வ…

    • 7 replies
    • 2.4k views
  11. நளினிமுருகன் மகள் தமிழகம் வந்தார்: சிறையில் பெற்றோரை சந்திக்கிறார் ஜனவரி 10, 2006 சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் நளினி, முருகன் தம்பதியினரின் மகள் ஆரித்ரா 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ளார். இன்று வேலூர் சிறைக்குச் சென்று தனது பெற்றோரை அவர் சந்திக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் முருகன் மற்றும் நளினி. கணவன், மனைவியான இவர்களில் முருகன் இலங்கையைச் சேர்ந்தவர், நளினி தமிழகத்தைச் சேர்ந்தவர். சிறையில் வைத்து நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. முருகன் மற்றும் நளினிக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. இருப்பினும் நளினியின் வேண்டுகோளை ஏற்று அவரது …

    • 8 replies
    • 2.3k views
  12. இலங்கையில் இருந்து அகதிகள் வருவது... அதிகரிப்பு: புலிகள் ராணுவம் மோதலால் கடும் பதட்டம் ராமேஸ்வரம்: கடந்த ஒரு மாதமாக இலங்கையில் ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருவதால் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதனால், பீதியடைந்த தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வருவது அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் ஐந்து பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர். இதுவரை மொத்தம் 38 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்துவரும் இனப்போராட்டத்தில் இதுவரை 64 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2002ம் ஆண்டு இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்பாடா...! சண்டை ஓய்ந்தது என்று இலங்கை…

  13. அமெரிக்காவை முதலில கண்டடைந்தவர் கிரிஸ்தோபர் கொலம்பஸ் என்பது நாம் படித்த வரலாறு. ஆனால் அண்மையில் கிடைத்த 1418 ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட உலகவரைபடத்தை ஆதாரமாக கொண்டு அமெரிக்காவை சீன அட்மிரல் சென்கி கண்டுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.இது கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்ததாக சொல்லப்படுவதற்கு 70 ஆண்டுகள் முன்னதாகும். இச் சீன அட்மிரல் நன்நம்பிக்கை முனையையும் முதலில் அடைந்தார் என சொல்லபடுகிறது. இப்படத்தில் அமெரிக்க பழங்குடி மக்களை குறிக்கும் வாசகங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சங்காய் நகரில் பழைய தட்டுமுட்டு பொருட்கள் விற்கும் கடையில் இவ்வோவியம் கண்டெடுக்கப்பட்டது. இதில் உள்ள மையின் வயதை கண்டறியும் வரை இத்தகவலின் உண்மைதன்மை பற்றி கூறமுடியாது என சொல்லப்படுகிறது. ஆயினும் இ…

    • 11 replies
    • 2.4k views
  14. நான்தான் உண்மையான மனைவி என்கிறார்கள், சென்னையில் ருசிகர வழக்கு ஒரு கணவருக்கு 3 பெண்கள் சொந்தம் கொண்டாடும் அதிசயம் ரூ.1 கோடி சொத்துக்காக குடுமிபிடி சண்டை சென்னை, ஜன.14- ஒரு கணவருக்கு 3 பெண்கள் நான்தான் அவருடைய மனைவி என்று சொந்தம் கொண்டாடும் அதிசய வழக்கு சென்னை நகர போலீசில் விசாரணையில் உள்ளது. ரூ.1 கோடி சொத்துக்காக அவர்களிடையே இந்த குடுமி-பிடி சண்டை நடக்கிறது. இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதில் போலீசார் தலையை பிய்த்தபடி உள்ளனர். அதிசயம் சென்னை நகரில் காலியாக கிடக்கும் நிலங்களை புரோக்கர்களும், ரியல் எஸ்டேட் அதிபர்களும் போட்டி போட்டு கொள்ளை அடித்து வருகிறார்கள். சொத்துக்களை அபகரிப்பதில் உறவினர்களே போட்டிபோடும் நிலை உள்ளது. தந்தை, பிள்ளைகளை ஏமாற்றுகிறார்…

  15. தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவு இலங்கை ராணுவம் அட்டூழியம், அகதிகள் தமிழகம் வருகை ஜனவரி 12, 2006 ராமேஸ்வரம்: இலங்கையில் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர். புலிகள்ராணுவம் இடையே போர் வெடிக்கும் சூழல் நிலவுவதால் வடகிழக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் பீதி பரவியுள்ளது. இதையடுத்து குடும்பம், குடும்பமாக தப்பி தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர். 24 தமிழர்கள் ஒரு படகில் அரிச்சமுனை கடல் பகுதியில் வந்து சேர்ந்தனர். இதில் 8 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், 9 பேர் குழந்தைகள் ஆவர். அரிச்சமுனையில் இருந்து பல கி.மீ. தூரத்தை நடந்தே கடந்து ராமேஸ்வரத்தின் முகுந்தராயர் சத்தி…

  16. மெக்காவிற்கு அருகே கூட்ட நெரிசல், 345 பேர் பலி சவூதி அரேபியாவில் இருக்கும் புனிதத்தலமான மெக்காவுக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, கிட்டத்தட்ட 345 முஸ்லீம் யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. ஹஜ் புனிதப் பயணத்தின் ஒரு பகுதியாக சாத்தானை குறிக்கும் மூன்று தூண்களை நோக்கி கல்லெறியும் சடங்கின்போது, அந்த தூண்களை நோக்கி ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் முண்டியடித்து முன்னேறியதாக, சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். சூரியன் மறைவுக்கு முன்பு இந்த சடங்கை முடித்துவிட வெண்டும் என்கிற நோக்கத்தில், எல்லா பக்கங்களில் இருந்தும் மக்கள் அங்கே குழுமத்துவங்கியதாகவும் அவர் தெரிவித்தார். இவர்களில் சிலர் ஒருவரோடு ஒருவர் தோள்களை…

  17. நாய் மீது சவாரி செய்யும் குரங்கு அமெரிக்காவின் கோலராடோ பகுதியில் குரங்குகளுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. நாய்கள் மீது சவாரி செய்யும் போட்டியில் டென்லர் அணியை சேர்ந்த குரங்கு கால் இறுதி போட்டியில் வெற்றி பெற்றது. Maalaimalar

  18. வடக்கு கிழக்கிற்கு பயணம் செய்யாதீர் - பிரித்தானிய அரசு தனது நாட்டினருக்கு எச்சரிக்கை இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசியல் வன்முறைகள் தீவிரமடைந்திருப்பதால் அப்பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பிரிட்டன் அரசு தனது நாட்டினரை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அவசிய தேவை இருந்தால் மட்டுமே இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசியல் வன்முறைகளும் குழப்பநிலையும் காணப்படுகிறது. நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து செயற்படுங்கள். அரசியல் கூட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள…

  19. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் ரூ.2700க்கு ஆண் குழந்தையை விற்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்சூல் என்ற இந்த ஆண் குழந்தை பிறந்து 3 மாதம் தான் ஆகிறது. தாய் குழந்தையை தவிக்க விட்டு ஓடிப் போய் விட்டாள். தந்தைக்கோ காது கேட்காது, வாய் பேச முடியாத ஊமை. இதனால் குழந்தை பாட்டி ஷாஜகான் கடுன் வசம் இருந்தது. அதை அவளால் வளர்க்க முடியாததால் ரூ.2700க்கு விற்றாள். அந்த குழந்தையை நஸ்மா கதூர் என்ற பிச்சைக்காரி விலை கொடுத்து வாங்கி இருக்கிறாள். நஸ்மா ஏற்கனவே பல குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் தொழில் செய்து வருகிறாள். தற்போது இந்த குழந்தையும் அவள் பிச்சை எடுக்கவே வாங்கியிருப்பதாக அக்கம் பக்கம் இருப்பவர்கள் கூறினார்கள். இதை நஸ்மா மறுத்தாள். மற்ற குழந்தைகள் போல் அல்லாமல் இந்த க…

    • 5 replies
    • 2.1k views
  20. விமானத்தில் மாமியார்மருமகள் சண்டை!!!!!!! ஜனவரி 09, 2006 கொச்சி: ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்த விமானத்தில் மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டு இருந்து அந்தக் குடும்பமே இறக்கிவிடப்பட்டது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் முலவரிக்கால் என்பவர் தனது மனைவி கோல்டி, மற்றும் குழந்தை, பெற்றோர்களுடன் அமெரிக்கா செல்ல விமான நிலையம் வந்தார். துபாய் வழியாகச் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் ஏற வந்தார். விமான நிலையம் வந்தபோதே அந்தக் குடும்பம் சண்டையிட்டபடி வந்தது. ஜார்ஜின் மனைவி தனது மாமனார், மாமியாரை திட்டிக் கொண்டும் அவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டும் இருந்தார். அவர்களை சமாதானப்படுத்தி அழைத…

  21. அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதா?: சிறிலங்கா கடற்படைக்கு ஜெயலலிதா கண்டனம் [திங்கட்கிழமை, 9 சனவரி 2006, 01:53 ஈழம்] [ம.சேரமான்] தமிழக அப்பாவி மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்தியக் கூட்டரசின் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள கடித விவரம்: சிறிலங்கா கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். பாக் நீரிணை அருகே உள்ள பகுதியான கச்சத் தீவில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் இதுபோன்ற தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகின்றனர். இதுபோன்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது. ராமேஸ்வ…

    • 9 replies
    • 2.2k views
  22. இலங்கையில் சுட்டு கொல்லப்பட்ட இன்ஜினியர் உடல் சென்னை வந்தது சென்னை : இலங்கையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆந்திர இன்ஜினியரின் உடல் நேற்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லுõர் மாவட்டம் காவாலி பகுதியைச் சேர்ந்தவர் ஆத்ம குரு பிரசாத்(26). இவர் ஆஸ்டர் டெலி சர்வீஸ் என்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்தார். சமீபத்தில் அவர் வேலை பார்த்த நிறுவனம் இலங்கையில் உள்ள மொபைல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதையடுத்து, ஆத்ம குரு பிரசாத் இலங்கை கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றலாகி அருகில் உள்ள கிவேலா என்ற இடத்தில் தங்கியிருந்தார். கடந்த 4ம் தேதி இரவு பணி முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, மர்ம ஆசாம…

    • 1 reply
    • 1.5k views
  23. Started by sooriyamuhi,

    அவுஸ்திரேலியா, பில்ஸ்மோஸில் 27வது பலூன் வாரத்தில் பறக்க விடப்படும் வெப்பக்காற்றுப் பலூன்கள்

    • 0 replies
    • 1.3k views
  24. பிணத்துக்கு 'உயிர்' வந்ததால் பணிப்பெண்கள் அதிர்ச்சி 'உங்களால் முடியுமா?' என்ற வரிசையில் வெளியான டி.வி. நிகழ்ச்சி ஒன்றினால், அதன் தயாரிப்பாளர் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டு இருக்கிறார். டச்சு நாட்டில் தயாரிக்கப்பட்ட அந்த டி.வி. நிகழ்ச்சியில் இடுகாட்டில் சவப்பெட்டிக்குள் ஒருவர் 'பிணம்' போல் படுத்திருந்த காட்சி இடம் பெற்று இருந்தது. தற்செயலாக அங்கு வந்த மயானத்தில் பணி புரியும் 3 பெண்கள், பிணத்தின் கோட்டில் இருக்கும் சாவியை அகற்றும்படி கூறினார்கள். அந்த நேரத்தில் பிணமாக படுத்து இருந்தவர் 'திடீர்' என்று அசைந்ததால் படப்பிடிப்பு என்று அறியாத அந்த பெண்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். அவர்கள் தொடர்ந்த வழக்கிற்காக இப்போது அந்த டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கோ…

  25. "இந்தி படியுங்கள்': அதிபர் புஷ் அறிவுரை வாஷிங்டன்: ""தேசிய பாதுகாப்பிற்காகவும், வளர்ச்சிக்காகவும் அமெரிக்க மாணவர்கள் இந்தி உட்பட பல வெளிநாட்டு மொழிகளை கற்க வேண்டும்,'' என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு மொழித் திட்டத்தை அமெரிக்கா துவக்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்க இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட பிறகு வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா வந்து படிப்பதற்கு தயங்குகின்றனர். இதனால், மற்ற நாட்டு மாணவர்களுடன் உரையாடவும், அவர்களுடைய கலாசாரத்திற்கு மதிப்பு கொடுக்கவும் அமெரிக்க அதிகாரிகள் இந்தி, அரபு, சீனம், ரஷ்யா மற்றும் பார்சி மொழிகளை கற்க வேண்டும். அமெரிக்க அதிபர் புஷ்சின் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.