Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Published By: SETHU 11 MAY, 2023 | 04:18 PM ஜேர்மனியிலுள்ள மேர்சிடிஸ் - பென்ஸ் வாகனத் தொழிற்சாலையொன்றில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சின்டெல்பின்கென் நகரிலுள்ள இத்தொழிற்சாலையில் காலை 7.45 மணியளவில் நுழைந்த நபர் ஒருவர் இருவர் மீது துப்பாக்கிக் பிரயோகம் செய்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் பின்னர் உயிரிழந்தனர். 53 வயதான இச்சந்தேக நபரை, தொழற்சாலையின் பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். https://www.virakesari.lk/article/155072

  2. பாக்முத்திலிருந்து வெளியேறுவோம்! - வாக்னா் குழு கிழக்கு உக்ரைனில் தீவிர சண்டை நடைபெற்று வரும் பாக்முத் நகரில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து வெளியேறப்போவதாக ரஷிய தனியாா் படையான வாக்னா் குழுவின் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் திடீா் மிரட்டல் விடுத்துள்ளாா். பாக்முத்தில் தொடா்ந்து போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களை ரஷியா அனுப்பாததாலும், அந்த நகரில் நடைபெறும் சண்டையில் தங்களது வீரா்கள் அதிக எண்ணிக்கையில் பலியாவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவா் கூறினாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாக்முத் நகரில் நாங்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளிலிருந்து வரும் 10-ஆம் தேதி வெளியேற முடிவு செய்துள்ளோம்.…

  3. டோங்கா தீவில் தூதரகத்தைத் திறந்த அமெரிக்கா அமெரிக்கக் கொடிக்கு பின்னால் Manhattan நகரக்காட்சி. (படம்: Reuters) அமெரிக்கா, டோங்கா (Tonga) தீவில் தூதரகத்தைத் திறந்துள்ளது. சுமார் 100,000 குடிமக்களைக் கொண்ட நாடு, டோங்கா. தென் பசிபிக் பகுதியில் செல்வாக்கை நிலைநாட்டச் சீனாவுடன் போட்டியிடுகிறது அமெரிக்கா. அதற்காகத் தென் பசிபிக் தீவுகளில் நட்புறவைப் புதுப்பிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துவருகிறது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு சாலமன் (Solomon) தீவுக…

    • 0 replies
    • 351 views
  4. Published By: SETHU 11 MAY, 2023 | 01:00 PM பின்லாந்தின் பிரதமர் சனா மரீனும் அவரின் கணவரும் விவாகரத்து பெறுவதற்கு கூட்டாக விண்ணப்பித்துள்ளனர். 2019 ஆம் ஆணடு தனது 34 ஆவது வயதில் பின்லாந்தின் பிரதமராக சனா மரீன் பதவியேற்றார். அப்போது உலகின் மிக இளமையான பிரதமராக அவர் விளங்கினார். பின்லாந்து வரலாற்றில் மிக இளமையான பிரதமர் அவரே. தனது காதலாரான மார்க்ஸ் ரெய்கோனெனை 2020 ஆம் ஆண்டு சனா மரீன் திருமணம் செய்தார். பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இத்திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முன்னரே இவர்கள் நீண்டகாலமாக இணைந்து வாழ்ந்தனர். இத்தம்பதியினருக்கு 5 வயதான ஒரு மகள் உள்ளார். 'நாம் இருவரும் 19 வருடங்களாக இணைந்து வா…

  5. Published By: DIGITAL DESK 3 11 MAY, 2023 | 10:01 AM கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக ஐக்கி நாடுகள் சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம், ஐக்கி நாடுகள் சபை குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு (பிஎம்என்சிஎச்) ஆகியவை இணைந்து 'குறை பிரசவ குழந்தைகள்' என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தின. அதில் கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.9 சதவீதம் குழந்தைகள் குறை பிரசவத்தில் (37 வாரத்துக…

  6. புடின் விரைவில் கொல்லப்படுவார் சிதறும் ரஷ்யா – அமெரிக்கா உளவுத்துறை..! உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள புடின் கொல்லப்படுவார் என்றும், ரஷ்யா மீண்டும் உடைந்து சிதறும் என்றும் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். உக்ரைனை எளிதாக வென்றுவிடலாம் என்று எண்ணி புடின் உக்ரைன் மீது போர் தொடுத்தார். ஆனால், உக்ரைன் இன்னமும் எதிர்த்து நிற்கிறது. ரஷ்ய தரப்பிலோ, சுமார் 200,000 படைவீரர்கள் பலியாகிவிட்டார்கள். 17 பில்லியன் டொலர்கள் அளவில் வாகனங்கள் முதலானவற்றை ரஷ்யா இழந்துவிட்டது என்கிறது உக்ரைன் தரப்பு. ஆக, இனி என்ன நடக்கும், ரஷ்யாவுக்கு என்ன ஆகும், புடின் என்ன ஆவார் என்பது குறித்து மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், புடின் …

  7. இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத், கடந்தாண்டு செப்டெம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மூத்த மகனும், பட்டத்துக்கு இளவரசருமான சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். அவர் மன்னராக முடிசூட்டும் விழா அடுத்த மாதம் 6 ஆம் திகதி லண்டனில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவ்விழாவில் அரசு குடும்பத்தினர் உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் அவரது 2ஆவது மகனும், இளவரசருமான ஹாரிக்கு 10 ஆவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவர் அரச குடும்பத்தினரில் 10ஆவது வரிசைக்கு பின்னால் அமர்ந்திருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தை சார்லஸ், சகோதரரான இளவரசர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபா…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,அலெக்ஸ் மூரே பதவி,பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஜெர்மனி தலைமையிலான நாஜிப் படைகளுக்கும், பிரிட்டன் தலைமையிலான நேச நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வரலாற்றில் என்றும் நினைவுகூரத்தக்கது. உலக போரில் பிரிட்டன் மற்றும் அதன் நேச நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களின் பங்கு, அவர்களது வீரம், தியாகம் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் நோக்கில், “We Were There” எனும் தலைப்பில் பிபிசி, அனுபவ கட்டுரைகளை தொகுத்து வழங்கி வருகிறது. இரண்டாம் உலகப் போரில் பங்கேற்று ,தற்போது உயிருடன் உள்ள நேச நாடுகளின் …

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,மாட் மர்பி & ஜரோஸ்லாவ் லுகிவ் பதவி,பிபிசி செய்தியாளர் 9 மே 2023, 06:00 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. புதிய வகை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு, ரஷ்யா தொடங்கியுள்ள தாக்குதலால் உக்ரைனில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் கீவ்வில் இரவு முழுவதும் வெடிசப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது எனக் கூறும் நகர மேயர், ரஷ்யாவின் காமிகேஸ் வகை பெரிய ட்ரோன் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 5 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இந்த த…

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் 1950-களில் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்திய ரஷ்யாவுக்கு ஒரு அச்சத்தை உருவாக்கும் முயற்சியாக அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு வினோதமான திட்டத்தை தீட்டினர். ஆனால் அணு குண்டு வெடித்து அந்த நிலவின் நிலப்பரப்பை கதிரியக்கம் மிக்க ஆபத்தான நிலப்பரப்பாக மாற்றியிருந்தால் அது எப்படியிருக்கும்? நிலவுக்கு மேற்கொள்ளப்படும் பயணங்கள் குறித்த ஆய்வறிக்கை, தொகுப்பு 1 என்ற அந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் அது ஒரு சாதாரண அறிவியல் ஆராய்ச்சி குறித்த தகவல்களை வெளிப்படுத்தும் விதத்திலேயே இருக்கிறது. அந்த புத்தகத்தை சாதாரணமாக நாம் புறந்தள்ளிவிட முடியும். அது தான் அந்தத் தலைப்பின்…

  11. டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – 9 பேர் உயிரிழப்பு டெக்சாஸ் மாகாணத்தின் உள்ள வணிக வளாகத்தில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வழிப்போக்கர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இதன்போது நூற்றுக்கணக்கானோர் வணிக வளாகத்தில் இருந்து தப்பி ஓடியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சிலர் குழந்தைகள் என்றும் குறைந்தது 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேநேரம் அவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்துள்…

  12. பட மூலாதாரம்,MOHAMED OSMAN/ BBC கட்டுரை தகவல் எழுதியவர்,முகமது ஒஸ்மான் பதவி,பிபிசி செய்தியாளர், சூடானிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிபிசி அரபு சேவையின் செய்தியாளர் முகமது ஒஸ்மான் தனது வாழ்நாள் முழுவதும் சூடானில் வாழ்ந்தவர். கடந்த மாதம் ராணுவத்தின் இரண்டு தரப்பு பிரிவுகளுக்கு இடையில் மோதல் வெடித்தபோது, அவர் அதுகுறித்த செய்திகளை வெளியிட்டு வந்தார். ஆனால் நாளடைவில் அங்கு நிலைமை மோசமானது. அவர் தனது தாய்நாட்டை விட்டு எகிப்துக்கு தப்பிச்செல்ல ஆபத்தான தரைவழி பயணத்தை மேற்கொள்ளும் கடினமான முடிவைப் பற்றி சிந்தித்தார். பிறந்த ஊரை விட்டு வெளியேறி… சூடான் தலைநகர் கார்தூமின் மே…

  13. ரஷிய ஆதரவு எழுத்தாளர் பயணித்த காரில் குண்டு வெடிப்பு – ஒருவர் பலி உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 438-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இதனிடையே, இந்த போரில் பல்வேறு முக்கிய பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றன. குறிப்பாக, போரில் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு கருத்து தெரிவித்த நபர்களையும் மர்மான முறையில் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், ரஷிய ஆதரவு எழுத்தாளர் சகர் பெர்லிபினை குறிவைத்து கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷிய ஆதரவு எழுத்தாளர் பெர்லிபின் நேற்று மாஸ்கோவில் இருந்து 400 கிலோ மீட…

    • 1 reply
    • 637 views
  14. கொங்கோவில் வெள்ளம்- நிலச்சரிவில் சிக்கி 200 பேர் பலி May 7, 2023 கொங்கோவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளனா். கொங்கோவில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் திடீரென இரவு முழுவதும் பெய்த கனமழையால் அங்குள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. இதனால ஏற்பட்ட வெள்ளத்தில் சில கிராமங்கள் மூழ்கியதில் அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிாிழந்துள்ளனா். அப்பகுதியில் உள்ள வீதிகள், பாடசாலைகள் , மருத்துவமனைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.. இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மேலும், காணாமல் போன 100-க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு இர…

  15. கட்டுரை தகவல் எழுதியவர்,யோகிதா லிமாயே பதவி,ஆப்கானிஸ்தான் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிறந்து மூன்று மாதமே ஆன தயாபுல்லாவின் உடல் அமைதியாக அசையாமல் இருக்கிறது. அவனது மூக்கில் வைக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜன் குழாயை எடுத்துவிட்டு, கொஞ்சமாவது அவன் மூச்சு விடுகிறானா என அவனது தாய் சோதித்துப் பார்க்கிறார். குழந்தையின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததை உணர்ந்து அந்த தாய் கதறி அழத் தொடங்குகிறாள் ஆஃப்கானிஸ்தானில் உள்ள இந்த மருத்துவமனையில் நன்றாக வேலை செய்யும் ஒரு வென்டிலேட்டர் கூட இல்லை. வென்டிலேட்டர்களைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு மூச்சு விட உதவலாம் என்றால், அவர்களின் சிறிய முகங்களுக்குப் பொரு…

  16. துருக்கி மாநாட்டில் ரஷ்ய, உக்ரேனிய எம்.பிகள் கைகலப்பு Published By: Sethu 05 May, 2023 | 11:04 AM துருக்கியில் நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (PABSEC) பாராளுமன்றப் பிரதிநிதிகள் மாநாட்டில் இச்சம்பவம் இச்சம்பவம் இடம்பெற்றது. இம்மாநாட்டின் ஆரம்ப நாளான நேற்று, ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினரான ஒல்கா திமோபீவா நேர்காணல் ஒன்றில் பங்குபற்றியபோது, அவருக்குப் பின்னால் உக்ரேனிய பாராளுமன்ற உறுப்பினர் ஒலெக்ஸாண்டர் மரிகோவிஸ்கி, உக்ரேனிய தேசியக் கொடியை விரித்துப் பிடித்தார். …

  17. Published By: RAJEEBAN 06 MAY, 2023 | 11:49 AM இங்கிலாந்து மன்னர் சார்ள்ஸின் முடிசூடும் நிகழ்விற்கு முன்னதாக அவருக்கு கடிதமொன்றைஅனுப்பிவைத்துள்ள விக்கிலீக்சின் இணை ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சே தான் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு சார்ள்ஸ் விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூலியன் அசஞ்சே தான் தடுத்துவைக்கப்பட்டுள்ளதையும் சிறைச்சாலையின் நிலைமையையும் எள்ளிநகையாடும் விதத்தில் இந்தகடிதத்தை எழுதியுள்ளார். லண்டனின் பெல்மார்ஷ் சிறைச்சாலையில் நான்கு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அசஞ்சே எழுதியுள்ள முதல் பகிரங்க கடிதம் இது. ஒரு இக்கட்டான வெளிநாட்டு இறையாண்மையின் சார்பாக இந்த கடிதத்த…

  18. Manipur On Fire: என்ன நடக்கிறது மணிப்பூரில்? ஏன் தொடங்கியது கலவரம்? முழு களத்தகவல் இதோ! 05 May 2023, 8:34 IST நிலைமை சீராகும் வரை ரயில் இயக்கத்தை நிறுத்துமாறு மணிப்பூர் அரசு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து ரயில் சேவையை வடகிழக்கு ரயில்வே நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மெய்டேய் சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடிகள் (எஸ்.டி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து மாணவர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தத…

    • 1 reply
    • 909 views
  19. உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்த அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவி! ரஷ்யாவுடனான அதன் தீவிரப் போரின் போது தீர்ந்துபோன உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்துவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்க உள்ளது. இதில் உயர் துல்லியமான ஹிமார்ஸ் பீரங்கி ரொக்கெட்டுகள் மற்றும் ஹோவிட்சர்கள் அடங்குவதாக, வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள பீரங்கிகளும் குண்டுகளும் தேவை என முன்பு உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தமைக்கு அமைய இந்த உதவி வழங்கப்படுகின்றது. ஆறுகள் மற்றும் பள்ளங்களை கடக்க அனுமதிக்கும் கவச வாகனங்கள் உள்ளிட்ட இராணுவ உதவி…

  20. Published By: RAJEEBAN 29 APR, 2023 | 10:47 AM இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் மிகச்சிறந்த பங்களிப்பு குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு முதலாவது கொரிய குடியேற்றவாசிகள் சென்று 120 வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வில் ஜூலி சங் குறித்து இராஜாங்க செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார். சியோலில் இருந்து கலிபோர்னியாவிற்கு ஜூலி சங் 1977ம் ஆண்டு குடிபெயர்ந்தவேளை அவருக்கு 7 வயது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார். அவ்வேளை அவர் ஒரு ஆங்கிலவார்த்தை கூட தெரியாதவராக காணப்பட்டார். அவரது தந்தைக்கு பொறியல் நிறுவனத்தில் வேலை கி…

  21. பொதுவாக பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதை பற்றி தான் கேள்விபட்டு இருப்போம். ஆனால் அமெரிக்க வைத்திய குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து உள்ளனர். அங்குள்ள ஒரு பெண் கர்ப்பமானார். அவரது வயிற்றில் கரு உருவாகி 34 வாரங்கள் ஆன நிலையில் அந்த பெண் பாஸ்டன் குழந்தைகள் மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக சென்றார். குழந்தையின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை அறிய வைத்தியர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். இந்த சோதனையில் மூளையில் இருந்து இதயத்துக்கு இரத்தத்தை எடுத்து செல்லும் இரத்த நாளம் சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தமை தெரிய வந்தது. இது வீனஸ் ஆப் கேலன் என்ற குறைபாடாகும். இந்த குறைபாடு இரத்த ஓட்டத்தை மெதுவாக்கும். இரத…

  22. Published By: SETHU 03 MAY, 2023 | 04:34 PM ருவாண்டாவில் வெள்ளம் காரணமாக குறைந்தபட்சம் 109 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்க நாடான ருவாண்டாவின் மேற்குப் பிராந்தியத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, வட பிராந்தியத்தில் 14 பேர் உயிரழந்துள்ளனர். பல வீடுகளும் வெள்ளத்தினால் அழிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பெய்த கடும் மழை காரணமாக. சேபேயா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியதாகவும் மண்சரிவுகளும் ஏற்பட்டதாகவும் ருவாண்டாவின் மேற்கு மாகாண ஆளுநர் பிராங்சுவா ஹபிட்டேகெகோ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/154426

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மே 2023 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் "அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்குக் கிடைத்த வரம்" - காதல் மனைவி ஜென்னியின் மறைவுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய அஞ்சலிக் கடிதத்தில் இடம் பெற்ற உருக்கமான வாசகங்கள் இவை. ஆம், அது உண்மைதான். தன் வாழ்க்கையில் பூரணத்துவம் கண்ட, நிறை மனிதர்களால் மட்டும் தானே இந்த சமூகத்தைப் பற்றி சிந்திக்க முடியும். மானுட சமூகத்தையே புரட்டிப் போட்ட பொதுவுடைமை சித்தாந்தம் தந்த கார்ல் மார்க்ஸுக்கு அத்தகைய முழுமையை தந்தவர் ஜென்னி. அள்ளஅள்ள குறையாத அன்பும், எத்தகைய நெருக்கடியிலும் விலகாத நேசமும் தந்து மார்க்சின் சிந்த…

  24. Published By: RAJEEBAN 03 MAY, 2023 | 08:14 AM அமெரிக்காவில் காணாமல்போன பதின்மவயதினரை தேடிச்சென்ற பொலிஸார் காணியொன்றிற்குள் 7 சடலங்களை கண்டுபிடித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர்களில் தாங்கள் தேடிவந்த இவி வெப்ஸ்டர் 14 பிரிட்டனி பிரூவர் ஆகியோரின் உடல்களும் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதின்ம வயது சிறுமிகளுடன் பயணித்த பாலியல் குற்றவாளி ஜெசே மக்படனின் சடலத்தையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரணத்திற்கான காரணம் என்னவென பொலிஸார் தெரிவிக்கவில்லை. ஏனைய நான்கு உடல்கள் குறித்து அதிகாரிகள் தகவல்கள் எவற்றையும் வெளியிடவில்லை. திங்கட்கிழமை பதின்மவயது சிறுமிகள் இருவரும் காணாமல்போயுள்ளதாக ஒக்லஹோமாவின் பொலிஸார் அற…

  25. Published By: SETHU 04 MAY, 2023 | 04:43 PM தெற்கு ஆசியாவில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற போதிலும், இதே வேகத்தில் சென்றால் தெற்கு ஆசியாவில் சிறுவர் திருமணத்தை ஒழிப்பதற்கு மேலும் 55 ஆண்டுகள் செல்லும் என யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் தற்போதைய வேகத்தில் சிறுவர் திருமணத்தை ஒழிப்பதற்கு மேலும் 300 ஆண்டுகள் செல்லும் என யுனிசெப் தெரிவித்துள்ளது. அதேவேளை, தெற்காசியாவில் இதற்கு 55 ஆண்டுகள் செல்லும் எனவும் யுனிசெப்பின் தெற்காசிய பிரிவு தெரிவித்துள்ளது. யுனிசெப்பின் தெற்கு ஆசியப் பிரிவு இது தொடர்பாக நேற்று (03) விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.