Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பதிவு: ஏப்ரல் 06, 2020 06:58 AM நியூயார்க், உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சுமார் 336,673 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 1,272,860- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 69,424- பேர் கொரோன பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டு வந்தன. ஆனால், இந்தக்கூற்றைப் பொய்யாக்கும் வகையி…

  2. பீஜிங்: சீனாவின் வூகானிலிருந்து தான் முதன் முதலாக கொரோனா உலகமெங்கும் பரவத் துவங்கியது. இன்றுவரை அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உலக அளவில் 1.3 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில் சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சூஃபென்ஹேயில் கொரோனா மீண்டும் பரவத் துவங்கி உள்ளது. சீனாவில் இன்று மட்டும் புதிதாக 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,500 ஆகி உள்ளது. ரஷ்யாவிலிருந்து சீனர்கள் வெளியேற்றப்பட்டு வருவதால் சீனாவில் கொரோனா தொற்று அதிகரிக்க துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. சீன …

    • 0 replies
    • 333 views
  3. ஜெர்மனியில் 94 வயதான ரீன்ஹோல்ட் ஹான்னிங்ன் வழக்கில் இன்று தீர்ப்பு நாஜிக்களின் பிடியில் இருந்த போலாந்தின் பகுதியான அவுஷ்விட்சின் முன்னாள் பாதுகாவலர் குறித்த வழக்கு ஒன்றின் தீர்ப்பை ஜெர்மனியில் உள்ள நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. 94 வயதான ரீன்ஹோல்ட் ஹான்னிங், 1,70,000 பேரை கொன்றதற்கு உதவியாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். அவரது வழக்கறிஞர்கள் அவர் தனிப்பட்ட வகையில், யாரையும் அடிக்கவோ, கொல்லவோ இல்லை என்று வாதிட்டனர். ஹான்னிங் ஏப்ரலில் நடந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டார். தான் அநீதியை பார்த்தபோதும், அதை நிறுத்த எதுவும் செய்யாமல் இருந்ததற்காக வெட்கப்படுவதாக கூறினார். ஜெர்மனியில் போர்க்கால நாஜிக்கள் கு…

  4. அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க இந்திய அரசியல்வாதிகளிடம் ஹிலாரி பணம் வாங்கினார்: டிரம்ப் குற்றச்சாட்டு அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டனும் குடியரசுக்கட்சி சார்பில் பெரும் தொழிலதிபரான டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். இரு தலைவர்களும் போட்டிபோட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் ஹிலாரி கிளின்டன் பணம் பெற்றதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். டிரம்பின் தேர்தல் பிரச்சார பேச்சுக்கள் அடங்கிய 35 பக்கங்கொண்ட கையேடு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மேற்கண்ட தகவல் அடங்கியுள்ளது. இந்தியா-அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்து…

  5. நியூயார்க் நகரில் குண்டு வெடிப்பு?: ஒருவர் காயம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மத்திய பூங்காவில் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் அந்த வழியாக நடந்து சென்ற ஒருவர் படுகாயமடைந்தார். மற்றவர்கள் தப்பிச் சென்றனர். உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வெடி குண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் இந்த இச்சம்பவம் குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் கூறுகையில் இது ஒரு வெடி விபத்தாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். http://www.dinamani.com/latest_news/2016/07/03/நியூயார்க்-நகரில்-குண்டு-வெ/article3512144.ece

  6. ‘அமெரிக்க சமூகத்தின் ஒரு நீண்டகால நோய்’: ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு சீனா- ஈரான் கடும் கண்டனம்! by : Anojkiyan நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரி உலகெங்கிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இனவாதமென்பது ‘அமெரிக்க சமூகத்தின் ஒரு நீண்டகால நோய்’ என சீனா விமர்சித்துள்ளது. 46 வயதான ஜோர்ஜ் ஃபிலாய்ட், நான்கு மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகளால் கடந்த திங்கட்கிழமை கொல்லப்பட்டார். இதுதொடர்பான காணொளியொன்றும் வெளியாகி தற்போது உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காணொளியில் ‘ஜோர்ஜ் ஃபிலாய்ட்’ என்னால் மூச்சுவிட முடியாது என்று கத்திக் கொண்டிருந்தபோது, 46 வயதான பொலிஸ் அதிகா…

  7. பிரிவு (ஈழம், எழுத்து) திகதி November-18-2008 தொன்னூறின் ஆரம்பம். இந்திய இராணுவம் வெளியேறிய காலப் பகுதி. யாழ்ப்பாணத்தின் சிற்சில இடங்களில், இறந்த இந்திய இராணுவ வீரர்களது நினைவு நடுகற்களை, அவர்கள் அமைத்திருந்தார்கள். இராணுவம் ஊர்களை விட்டுக் கிளம்பவும் அராலி என்னும் இடத்தில் பொதுமக்களில் சிலர், அலவாங்கு போன்ற ஆயுதங்களுடன் இந்திய இராணுவ நடுகற்களை நோக்கிக் கிளம்பி விடுகின்றனர். செய்தியறிந்த புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர், போராளிகள் உடனடியாக அங்கு விரைகின்றனர். கல்லறைகளில் கை வைச்சால்.. வைச்சவையின் கையைக் காலை முறிப்பம் என எச்சரிக்கை பொதுமக்களுக்கு விடப் படுகிறது. புறுபறுத்துக் கொண்டே சனம் கலைந்து போகிறது. 95 இன் இறுதி வரை அவ் நினைவு நடுகற்கள் யாழ்ப்பாணத்தில் இருந…

  8. அவதூறு வழக்கில் பிரபல ஊடகவியலாளர் குற்றவாளியென தீர்ப்பு! பிலிப்பைன்ஸின் பிரபல ஊடகவியலாளர் மரியா ரேஸா, இணையவழி அவதூறு வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் இன்றுதீர்ப்பளித்துள்ளது. 56 வயதான மரியா ரேஸா, பிலிப்பைன்ஸ் ரெப்ளர் செய்தி இணையத்தள நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஆவார். குறித்த வழக்கில் ரெப்ளர் தளத்தின் முன்னாள் எழுத்தாளர் ஒருவரும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நிலைவையில் உள்ள மேன்முறையீட்டின் அடிப்படையில் இவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 6 வருட சிறைத்தண்டனையை எதிர்நோக்குகின்றனர். வர்த்தகர் ஒருவருக்கும் முன்னாள் நீதிபதி ஒருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து 2012 ஆம் ஆண்டு வெளியிடப்ப…

    • 1 reply
    • 438 views
  9. வணக்கம், இண்டைக்கு இஞ்ச பத்திரிகையில ஒரு செய்தி பார்த்தன். அதிர்ச்சியாய் இருந்திச்சிது. அது என்ன எண்டால் அமெரிக்காவில இருக்கிற ஒரு பெண் நெட்டில செய்த ஒரு சேட்டை காரணமாக ஒரு பதின்மூண்டு வயசு சிறுமி தற்கொலை செய்து இறந்துவிட்டா. நடந்த சம்பவம் என்ன எண்டால் ஒரு வயதுமுதிர்ந்த பெண் சும்மா பன்பலுக்கு மைஸ்பேஸ் தளத்தில ஒரு பதினைஞ்சு வயசு ஆண் பெயரில ஒரு உறுப்புரிமையை எடுத்து இருக்கிறா. பிறகு சம்மந்தப்பட்ட பதின்மூண்டு வயசு பெண்ணை பசப்பு காட்டி வசீகரம் செய்து இருக்கிறா. அந்தப்பிள்ளையிண்ட மனதில விசமத்தனமான முறையில ஆசையை ஏற்படுத்தி வளர்த்து இருக்கிறா. சும்மா சீண்டி விளையாடி அந்த சிறுமியிண்ட மனதை குழப்பி அடிச்சு இருக்கிறா. கடைசியில அந்தச்சிறுமி நிஜமாக இல்லாத ஒரு ஆணை மனதில நினை…

  10. 2012ஆம் ஆண்டு நடந்த சிறப்பான மற்றும் மோசமான நிகழ்ச்சிகளாக சிலவற்றை ஊடகங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்த பரபரப்பான செய்தி ஒன்றை பார்ப்போம்., பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் பாலிவுட் மறுப்பிரவேசம், பாலிவுட்டில் சிறப்பான நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் மறுபடியும் நடிப்புத்துறைக்கு வந்துள்ள அவர், இனியும் தொடர்ந்து நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும் என பாலிவுட் ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதே நேரத்தில் ஆபாச படங்களில் நடித்து கனடாவில் புகழ்பெற்ற சன்னி லியோன் என்ற கவர்ச்சி நடிகையின் புதுவரவுக்கு போதுமான ஆதரவு இல்லை. அவர் நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட JISM 2படம் சரியாக ஓடாததால், அவர் அடுத்து புதுப்படங்களில் நடிப்பாரா? அல்லது நடித…

  11. இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகள் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றில் தொடுத்த வழக்கின் பிரகாரம் தனிநபர்களின் மரபணு அலகுத் (டி என் ஏ) தகவல்கள் மற்றும் கைப்பெருவிரல் அடையாளங்களை பொலிஸ் தேவைகளுக்காகப் பெற்றுக் கொள்வது சேமித்து வைப்பது என்பன அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் போன்ற நாடுகளில் கேட்பார் கேள்வி இன்றி CCTV கள் மூலம் மக்களைப் படம் பிடிப்பதும்.. எந்தக் குற்றச்சாட்டுக்களும் இன்றி.. டி என் ஏ மற்றும் பெருவிரல் அடையாளங்களைத் திரட்டிச் சேமித்துக் கொள்வதும் பாரபட்சமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரிட்டன் அண்மைக்காலமாக ஆசிய மற்றும் ஆபிரிக்க குடிபெயர்வாளர்கள் மத்தியில் இருந்து எக்குற்றச்சாட்டும் இன்றி biom…

  12. வியேண்டியன், வடகொரியா, உலக நாடுகளின் ஏகோபித்த எதிர்ப்பையும், ஐ.நா.வின் பொருளாதார தடைகளையும் கண்டுகொள்ளாமல் 2006-ம் ஆண்டில் இருந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. 3 முறை தொடர்ந்து அணுகுண்டு சோதனைகளை நடத்திய நிலையில், கடந்த ஜனவரி மாதம் அதிபயங்கர ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி உலக அரங்கை அந்த நாடு அதிர வைத்தது. வடகொரியாவின் அத்துமீறிய செயல்களால் கடும் அதிர்ச்சி அடைந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் அந்த நாட்டுக்கு எதிராக மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. ஆனாலும் வடகொரியா, தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் தாவி சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் வாய்ந்த ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அடுத்தடுத்த அணு ஆ…

  13. சிரியா அதிபர் பஷர் அல்-அசாத் நேற்று டமாஸ்கஸில் டி.வி., முன் பேசினார்.அப்போது பயங்கரவாதத்தை மட்டும் புரிந்து கொள்பவர்களுடனும், மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக செயல்படுபவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்த முடியாது, என, சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் பேசினார். இதற்கு அமெரிக்கா அவரது பேச்சை தள்ளுபடி செய்ததாக அறிவித்துள்ளது.அவரது பேச்சு மீண்டும் அவர் ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டுவதில‌ேயே குறி்‌க்கோளாக இருப்பதை காட்டுகிறது என்றும் மக்களின் மாற்றத்திற்கு ஏற்றதாக இல்லை என வெளியுறவு பெண் செய்தி தொடர்பாளர் விக்டோரியா நூலாண்ட் தெரிவித்துள்ளார். http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%9A-%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8D…

  14. மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த கோரிக்கை மகாராஷ்டிராவில் பள்ளி புத்தகப் பையின் சுமை அதிகரிப்பால் வெகுண்டெழுந்த 7-ம் வகுப்பு மாணவர்கள் இருவர், பத்திரிகை யாளர்களுக்கு பேட்டியளித் திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சந்திர பூரில் உள்ள வித்யா நிகேதன் பள்ளியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர்கள் இருவர், அங்குள்ள உள்ளூர் பத்திரிகையாளர்கள் மன் றத்துக்குச் சென்றனர். அங்கிருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்து தினசரி 5 கிலோ சுமை கொண்ட பாடப்புத்தக பைகளைச் சுமந்து செல்வதால் தாங்க முடியாத வேதனையை சந்தித்து வருவதாக வும், இது தொடர்பாக விவரமாக பேட்டியளிக்க விரும்புவதாகவும் இரு மாணவர்களும் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர் கள…

    • 0 replies
    • 248 views
  15. கறுப்பு தேசம்! மோடி மேஜிக்! கறுப்புப் பணம் (Black Money), என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குச் செலுத்த வேண்டிய வணிக வரி, சேவை வரி, வருமான வரி, கலால் வரி, சுங்கக் கட்டணம், முத்திரைத் தாள் கட்டணம் போன்ற வரிகளை முறைப்படி அரசுக்குச் செலுத்தாமல், வரி ஏய்ப்பு மூலம் ஒருவர் ஈட்டியப் பணத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பதுக்கிவைக்கும் பணம். அப்படி இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பணம் எவ்வளவு என்ற உறுதியான தகவல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், கறுப்புப் பணப் பதுக்கலுக்கு சொர்க்க புரியாகத் திகழும் ஸ்விஸ் வங்கி, உலக நாடுகளின் வற்புறுத்தலுக்குப்பின் வெளியிட்ட அறிக்கையில் இந்தியர்கள் மட்டுமே 1500 பில்லியன் அமெரிக்க டாலர் கறுப்புப் பணத்தை அங்…

  16. ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: இரண்டு மசூதிகளை மூட அரசாங்கம் உத்தரவு! வியன்னாவில் தாக்குதல் நடத்திய ஜிஹாதி துப்பாக்கிதாரி அடிக்கடி சென்றுவந்த இரண்டு மசூதிகளை மூட ஆஸ்திரிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரியா நல்லிணக்க சூசேன் ராப் கூறுகையில், ‘திங்களன்று தாக்குதல் நடத்தியவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தாக்குதல் நடத்திய ஜிகாதி ஒருவர் இரண்டு வியன்னா மசூதிகளுக்கு பலமுறை விஜயம் செய்ததாக உட்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு மசூதிகள் வியன்னாவின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ளன, ஒன்று ஒட்டாக்ரிங் மாவட்டத்தில் மெலிட் இப்ராஹிம் மசூதி என்றும் மற்றொன்று மீட்லிங் பகுதியில் உள்ள தெவ்ஹிட் மசூதி என்றும் அழைக்கப்படுகிறது. உள்ந…

  17. நன்றி தமிழ்நெற் & ஜனசக்தி http://tamilnet.com/art.html?catid=13&artid=28660

    • 0 replies
    • 692 views
  18. முன் எப்போதும் இல்லாத அளவில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் குறைந்துள்ளது. திங்கள்கிழமை மட்டும் மிக அதிகபட்சமாக ரூ.984 குறைந்து ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 72-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தே சரிந்து வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ. 2 ஆயிரத்துக்கும் மேல் குறைந்துள்ளது. காரணம் என்ன? சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் இந்திய வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளில் நிலவி வந்த பொருளாதார ஏற்ற இறக்கங்கள் கடந்த வாரத்தில் இந்தியச் சந்தையில் எதிரொ…

    • 0 replies
    • 1.6k views
  19. அமேதி: ராகுல் மாமாவுக்கு மறக்காம ஓட்டு போடுங்க என்று கூறி பெரியவர்களின் காலில் விழுந்து ராகுல் காந்திக்காக, அவரது சகோதரி பிரியங்காவின் குழந்தைகள் ஓட்டு வேட்டையாடின. உ.பி. மாநிலம் அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவருக்காக அங்கு பிரியங்கா காந்தி முகாமிட்டு ஓட்டு வேட்டையாடுகிறார். அவருடன் நேற்று பிரியங்காவின் பிள்ளைகளான ரைஹான் மற்றும் மிரயா ஆகியோரும் ராகுல் மாமாவுக்கு வாக்கு சேகரிக்க அம்மாவுடன் கிளம்பி விட்டனர். பிரியங்காவுடன் சென்ற அவர்கள் வழியெங்கும் திரண்டிருந்த வாக்காளர்களைப் பார்த்து அவர்கள் காலில் போய் விழுந்து கும்பிட்டு வணங்கி, மாமாவுக்கு ஓட்டுப் போடுங்க என்று கேட்டுக் கொண்டனர். தங்களது அம்மா பிரியங்கா பெரியவர்களின் காலில் விழுந்து வணங்க…

  20. சவூதியில் தனித்து வாழும் பெண்களின் தொகையை குறைக்க புதிய முயற்சி சவூதி அரேபியாவில் விவாகரத்துப் பெற்ற பெண்கள், கைம்பெண்கள் மற்றும் முதிர் கன்னிகளின் தொகை அதிகரித்து வருவதால் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் குழு வினர் திருமணப் பொருத்த வட்ஸ்அப் பக்கத்தை உருவாக்கி ஏற்கனவே திருணம் செய்த ஆண்களுக்கு அந்தப் பெண்களைத் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டைச் சேர்ந்த 8 அதிகாரிகள் கூட்டிணைந்து பலதார திருமணம் என்ற தலைப்பின் கீழ் மேற்படி வட்ஸ்அப் பக்கத்தை ஸ்தாபித்துள்ளனர். சவூதி அரேபியாவில் வாழ்க்கைத் துணை யற்று இருக்கும் பெண்களின் தொகையைக் குறைக்கும் வக…

  21. அமெரிக்கக் கண்டத்தைக் 'கண்டுபிடித்த' கிறிஸ்டோபர் கொலம்பஸின் நினைவாக அந்த நாட்டிற்குக் கொலம்பியா எனப் பெயர் சூட்டப்பட்டது. அதன் தலைநகர் போகோட்டாவில் இன்றைய ஜனாதிபதி தனது பதவியேற்பு வைபவத்தை கொண்டாடிக் கொண்டிருந்தார். நாட்டின் தீராத பிரச்சினையான தீவிரவாத இயக்கங்களை ஒழிப்பேன் என புதிய ஜனாதிபதி விழாமேடையில் சூளுரைத்துக் கொண்டிருந்த சமயம், எங்கிருந்தோ வந்த செல்கள் விழா நடந்த இடத்திற்கு அருகாமையில் விழுந்து வெடித்தன. ஜனாதிபதி தீவிரவாதிகளை ஒழிக்க காடுகளுக்குப் போக முன்னர் அவர்களாகவே தலைநகருக்கு வந்துவிட்டனர். இது நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை. தலைநகரின் மத்தியில் பணக்காரக் குடும்பங்கள் தமது ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்களை நடத்தும் மண்டபம் குண்டுவெடிப்பில் சேதமாகியது. இன்னொ…

  22. சீனாவின் சைபர் தாக்குதல்கள்... சைபர் போருக்கான அறிகுறியா? பிரசன்னா ஆதித்யா Cyber Warfare சீனா தங்கள் நாட்டு இணையத்தைச் சுற்றி Great Firewall of China-வை உருவாக்கியிருக்கிறது. ஆனால், இந்தியாவிடமோ எந்த தற்காப்புத் திட்டமோ அல்லது தாக்குதல் திட்டமோ இல்லை. இந்தியா விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. இரண்டாம் உலகப் போரை அடுத்து, உலகில் பெரும் சேதத்தை விளைவிக்கும் வகையில் எந்தப் போரும் நிகழவில்லை. போர் என்று வந்துவிட்டால் அது அதைத் தொடர்புடைய அனைத்து நாடுகளையும் பாதிக்கும். இரண்டாம் உலகப் போர் மாதிரியான இன்னொரு போர் உலகில் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு குறைவுதான். ஏனெனில் அதனால் ஏற்படக்கூடிய சேதங்களையும், பாதிப்புகளையும் அனைத்து நா…

    • 1 reply
    • 911 views
  23. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இஸ்ரேலிய- பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வாக இரு நாட்டுக் கொள்கையை கைவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது ஐநா விமர்சனம். * காவலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக கறுப்பின இளைஞர் குற்றஞ்சாட்டியதை அடுத்து பாரிஸ் நகரில் பெரும் போராட்டம்; பல்லாயிரக்கணக்கானோர் தெருக்களில் குதித்தனர். * இங்கிலாந்தில் ஐம்பது ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நீராவி ரயில் பயணம்.

  24. டுரோன்களை அழிக்கும் உயிர்கொல்லி கழுகுகள்..! டுரோன் கெமராக்களை அழிப்பதற்கு உயிர்கொல்லி கழுகுகளுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் விமானப்படை அறிவித்துள்ளது. ஆளில்லா விமானங்கள் மூலம் படங்களை எடுத்து தக்குதல்கள் நடத்துதல் மற்றும் தீவிரவாத தாக்குதலுக்கு தேவையான தகவல்களை சேகரித்தல், போன்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயப்படுத்தப்படும் டுரோன் கெமராக்களை இனங்கண்டு அழிப்பதற்காக, பிரான்ஸ் விமானப்படை கழுகுகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கியுள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக டுரோன் கெமராவின் பாவனைகள் அதிகரித்துள்ள நிலையில், குறித்த கெமராக்களை கொண்டு ஏற்படுத்தப்பட்ட தாக்குதல் அழிவுகளும் அதிகமாக பதிவாகியுள்ளது. அதனால் சட்டவிரோத …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.