Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அறிவிக்க அமெரிக்கா தீர்மானம்! உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டுவரும் ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அமெரிக்கா அறிவிக்கவுள்ளது. அடுத்த வாரம் இந்த குழு மற்றும் ஆதரவு வலையமைப்பு மீது புதிய தடைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, விதிக்கும். இது, சிரியா, லிபியா மற்றும் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் மற்ற இடங்களில் செயற்பட்டு வந்த துணை இராணுவக் குழுவிற்கு எதிராக பரந்த பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்த அமெரிக்க அரசாங்கத்தை அனுமதிக்கும். இந்தக்குழு, உக்ரைன் மற்றும் பிற இடங்களில் அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை செய்கிறது என தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி …

    • 39 replies
    • 2.2k views
  2. ரிசி சுனக்கிற்கு காரின் பின் இருக்கையில் இருக்கை பட்டி இன்றி பயணித்த குற்றத்துக்காக தண்டம் விதித்தது பிரித்தானியாவின் லாங்கஷேர் காவல்துறை. பிரித்தானியாவில் தனது அரசாங்கத்தின் சமச்சீர் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு பற்றி ஒரு சிறு வீடியோவை ஓடும் காரில் இருந்து வெளியிட்டே இப்படி சிக்கலில் மாட்டி உள்ளார் ரிசி. ஒரு தண்ட அறிவிப்பு 42 வயதான இலண்டன் ஆணுக்கு வழங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது லாங்கஷேர் காவல்துறை. ரிசி தவறை முழுமையாக ஏற்று மன்னிப்பு கோருவதுடன், தண்டதையும் செலுத்துவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்பு கொவிட் விதிகளை மீறி விருந்தில் கலந்தமைக்காக பொரிசுடன் சேர்த்து ரிசிக்கும் தண்டம் விதிக்கப்பட்டது நினைவுகூறதக்கது. பிரதமர் சட்டங்களை ப…

  3. உக்ரேனில் ஹெலி வீழ்ந்ததால் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி By Sethu 18 Jan, 2023 | 02:09 PM உக்ரேனில் விமானமொன்று பாலர் பாடசாலையொன்றின் மோதி வீழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் குறைந்தபட்சம் 16 பேர் உயிரிழந்துள்ளனர், உக்ரேனின் உள்விவகார அமைச்சர் டேனிஸ் மொனாஸ்டிரிஸ்கிம் இச்சம்பவத்pழல் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரின் துணை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பாலர் பாடசா‍லையொன்றில் வீழ்ந்து தீப்பற்றியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிறார்களும் அடங்கியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது, கியேவ் ப…

  4. வாக்னர் கூலிப்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் ரஷ்யாவின் முடிவிற்கு செர்பியா கண்டனம்! உக்ரைனில் உள்ள ரஷ்ய துருப்புக்களுடன் சேர்ந்து போரிட செர்பிய தன்னார்வலர்கள் பயிற்சி பெறுவதைக் காட்டுவதாகக் வெளிப்படுத்தும் ஒரு ரஷ்ய செய்தி காணொளி செர்பியாவில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான தனது லட்சியத்தை விட ரஷ்யாவுடனான அதன் நீண்டகால நட்புக்கு செர்பியா முன்னுரிமை அளிப்பதாக விமர்சகர்கள் அடிக்கடி குற்றம் சாட்டுகின்ற நிலையில், இந்த காணொளி வெளியாகியுள்ளது. போருக்கான ஆட்சேர்ப்பை ஊக்குவிப்பதற்காக செர்பிய மொழியில் வெளியிடப்பட்ட காணொளிகளை தேசிய தொலைக்காட்சியில் செர்பியாவின் ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் கடுமையாக விமர்சித்தார். தங்கள் விதிமுறைகளுக…

  5. சட்டப்பிரிவு 370 ரத்தை நீக்கினால் மட்டும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை Posted on January 18, 2023 by தென்னவள் 8 0 இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்த நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளித்தால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. துபாயை மையமாகக் கொண்டு இயங்கும் அல் அரேபியா என்ற தொலைக்காட்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் நேர்காணல் அளித்துள்ளார். அதில், ”இந்தியாவுடன் ஆழமான, நேர்மையான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை அனுமதிக்க வேண்டும். இரு நாட…

  6. இத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கைது! இத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிசிலியில் கைது செய்யப்பட்டார். சிசிலியின் தலைநகர் பலேர்மோவில் உள்ள தனியார் கிளினிக்கில் மெசினா டெனாரோ தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேட்டியோ மெசினா டெனாரோ, மிகவும் மோசமான சிசிலியின் கோசா நோஸ்ட்ரா மாஃபியாவின் தலைவராக இருப்பதாகக் கூறப்படுகிறது. மாஃபியா குற்றக்குழுவின் மிக முக்கியமான உறுப்பினரை தடுத்து வைப்பதில் ஆயுதப் படைகளின் பணிக்காக நன்றி தெரிவித்த இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி டெனாரே, இது அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என விபரித்தார். இந்…

  7. ஜேர்மனியில் போராட்டத்தில் ஈடுபட்ட கிரேட்டா துன்பெர்க் கைது! ஜேர்மனியில் போராட்டத்தில் ஈடுபட்ட காலநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கார்ஜ்வெய்லர் சுரங்கத்தின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் கலந்துக் கொண்ட கிரேட்டா துன்பெர்க் மற்றும் போராட்டக்காரர்கள் சுரங்கத்தின் ஆபத்தான இடத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். https://athavannews.com/2023/1320627

  8. உக்ரைன் தலைநகரில் ரஷியா ஏவுகணை மழை..!! உக்ரைன் தலைநகர் கீவில் ரஷிய படைகள் ஏவுகணை மழை பொழிந்ததில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. தினத்தந்தி கீவ், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. உக்ரைனின் ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என கூறி போரை தொடங்கிய ரஷியா பின்னர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள், மின்நிலையங்கள் என தாக்குதல்களை விரிவுப்படுத்தியது. அந்த வகையில் தற்போது ரஷிய படைகள் உக்ரைனின் பொதுஉள்கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கீவ் நகர் மீது மீண்டும் கவனம் போர் தொடங்கிய சமயத்தில் தலைநகர் கீவை கை…

    • 4 replies
    • 1k views
  9. உளவுத்துறை ரகசிய கோப்புகள் தனியார் இடத்தில் கண்டுபிடிப்பு: சங்கடத்தில் வெள்ளை மாளிகை பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் வெள்ளை மாளிகைக்கு அரசியல் சங்கடம் வளர்ந்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உதவியாளர்கள் ரகசிய அரசாங்க பதிவுகள் அடங்கிய புதிய தொகுப்பை இரண்டாவதாக மற்றுமோர் இடத்தில் கண்டுபிடித்துள்ளனர். பைடன் துணை அதிபராக இருந்த பிறகு பயன்படுத்திய ஆவணங்களின் முதல் தொகுப்பு, வாஷிங்டன் டிசியில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் அமெரிக்க நீதித்துறையின் பரிசீலனையில் உள்ளது. ரகசிய கோப்புகளைத் தவறாகக் கையாண்டதாக டொனால்ட் …

  10. சீனாவில் கொரோனா தாக்கம் உச்சம் - ஒரே மாதத்தில் 60,000 பேர் உயிரிழப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் கடந்த ஒரே மாதத்தில் 60,000 பேர் கொரோனா தொடர்புடைய பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி(Zero Covid Policy) கைவிடப்பட்ட பிறகு வெளியிடப்பட்டுள்ள மிகப்பெரிய உயிரிழப்பு விவரம் இது. மருத்துவமனைகளும் தகன மேடைகளும் நிரம்பி வழிந்த காட்சிகள் அப்பட்டமாக வெளியான போதிலும்கூட, கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் குறைத்தே காட்டியதாக சீனா மீது குற்றம் சாட்டப்பட்டது. தற்போது சீன அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்படி, அங்கு டிசம்பர் 8 முதல் ஜனவரி 12 வரை கொரோனா தொடர்பான பாதிப…

  11. ஆப்கானிஸ்தானில் வீடு புகுந்து முன்னாள் பெண் எம்.பி.யை சுட்டுக் கொன்ற கும்பல்! ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை அகற்றிவிட்டு, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து, பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து வன்முறை சம்பவங்களும், படுகொலைகளும் அரங்கேறியவண்ணம் உள்ளன. இந்நிலையில், அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தில் எம்.பி.யாக இருந்த முர்சால் நபிஜாதா என்ற பெண் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில், நபிஜாதா மற்றும் அவரது பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்தனர். நபிஜாதாவின் சகோதரர் பலத்த காயமடைந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு பட…

  12. போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிச்சட்டம் அமெரிக்காவில் நிறைவேற்றம் - அவர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு வழக்குத்தொடரும் வாய்ப்பு By DIGITAL DESK 5 14 JAN, 2023 | 03:45 PM (நா.தனுஜா) எந்தவொரு நாட்டில் போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் அமெரிக்காவில் இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கக்கூடிய 'போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிச்சட்டம்' அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனின் கையெழுத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த சட்டத்தைப் பொறுத்தமட்டில், அதனூடாக அமெரிக்காவிற்குள் அல்லது அமெரிக்காவிற்கு வெளியில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்கப்பிரஜைகள் அல்லது அமெரிக…

  13. கிழக்கு உக்ரைன் நகரமான சோலேடரைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரம்! கிழக்கு உக்ரைனில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரைக் கைப்பற்றுவதற்கு அதன் படைகள் நெருங்கி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் சோலிடருக்கான போரில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உயிரிழந்ததாக உக்ரைனின் டொனெட்ஸ்க் ஆளுனர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார். டிசம்பரில் கெர்சன் நகரை இழந்த பின்னர் சமீபத்திய மாதங்களில் நல்ல போர்க்கள உத்திகளுடன் களமிறங்கிய ரஷ்யாவுக்கு சோலிடர் ஒரு நல்ல பரிசாக அமைந்துள்ளது. இந்த முன்னேற்றம், உக்ரைனிய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தின் மற்ற பகுதிகளை, குறிப்பாக அருகிலுள்ள மூலோபாய நகரமான பாக்முட்டை கைப்பற்ற ரஷ்…

    • 15 replies
    • 2.3k views
  14. பியானோ வாசித்து அசத்தும் ஆட்டிசம் பாதித்த சிறுவன் காணொளிக் குறிப்பு, பியானோவில் அசத்தும் ஆட்டிசம் பாதித்த சிறுவன் 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஆட்டிசம் பாதித்த 11 வயதான ஜூட், தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். தன்னுடைய வீட்டில் இருந்த சாதாரண பியானோவில் வாசிக்க ஆரம்பித்த ஜூடால், தற்போது எந்தப் பாடலையும் கேட்ட உடனேயே வாசிக்க முடியும். https://www.bbc.com/tamil/articles/clkxd302jvmo

  15. இளவரசர் வில்லியம் என்னை உடல்ரீதியாக தாக்கினார்: இளவரசர் ஹரி தெரிவிப்பு By SETHU 05 JAN, 2023 | 03:10 PM பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் வில்லியம் தன்னை உடல் ரீதியாக தாக்கினார் என இளவரசர் ஹரி கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு தனது மனைவி மேகன் மேர்கெல் தொடர்பான வாக்குவாதத்தின்போது இச்சம்பவம் இடம்பெற்றதாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். 38 வயதான இளவசர் ஹரி, Spare எனும் தனது நூலில் இதைத் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் இந்நூல் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அந்நூலின் சில பகுதிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. மேகன் மேர்கெல், கடுமையானவர், முரட்டுத்தனமானவர் என இளவரசர் வில்லியம் கூறினாரெனவும்,…

  16. உலகளவில் பெரிதும் தேடப்பட்டு வந்த மனித கடத்தல் கும்பல் தலைவன் கைது- இன்டர்போல் January 14, 2023 ஐரோப்பிய புலம்பெயர்வு நெருக்கடியின் போது ஆயிரக்கணக்கான மக்களை கடத்தியதில் குற்றவாளியாக அறியப்பட்ட மனித கடத்தல்காரரான ஜகாரியாஸ் ஹேப்டேமரியம் எனும் எரித்திரிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகமும் சர்வதேச காவல்துறையான இன்டர்போலும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், கடந்த ஜனவரி 1ம் திகதி சூடானில் இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவரை கடந்த 2019ம் ஆண்டு முதல் இன்டர்போல் கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கிழக்கு ஆப்பிரிக்க குடியேறிகளை கடத்தி, தவறாக நடத்தி, அவர்களை மிரட்டி பணிப் ப…

  17. உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உக்ரைன் இராணுவத்தினருக்கு உதவியாக போரில் களமிறங்கியுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகருக்கு மருத்துவம் படிக்க சென்ற சென்னை - ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் பாலா சங்கர் (32) என்பவரே மருத்துவப் படிப்பு முடிந்த பின்னர் இவ்வாறு உக்ரைன் இராணுவத்தினருக்கு உதவியாக போரில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞன் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனில் மருத்துவப் படிப்பு முடிந்த பின்னர் உக்ரைனில் சுவையான தமிழக உணவுகளை விற்பனை செய்யும் உணவகத்தை ஆரம்பித்துள்ளார். அதன் பின்னர் 'கார்க்கிவ் தமிழ் சங்கம்' என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி நடத்தியுள…

    • 25 replies
    • 1.8k views
  18. கடன் நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தானை கரை சேர்க்குமா சௌதி? பட மூலாதாரம்,@SPA படக்குறிப்பு, செளதி அரேபியாவின் பிரதமரும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் முக்கிய சாராம்சம் பாகிஸ்தானின் அன்னியச் செலாவணி கையிருப்பு ஒரு மாத இறக்குமதிச் செலவை ஈடுகட்டும் அளவிற்கு மட்டுமே உள்ளது. பாகிஸ்தான் திவாலாகும் ஆபத்தில் உள்ளது. ஆனால் செளதி மீண்டும் ஒருமுறை அதை காப்பாற்றப் போகிறது செளதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டுமே இஸ்லாமிய நாடுகள். ஆனால் அவற்றின் உறவு பரஸ்பர தேவைகளை அடிப்படையாகக் கொண்டது பாகிஸ்தானின் ராணுவத…

  19. யுக்ரைனில் போரிட மறுத்த ரஷ்ய சிப்பாய்க்கு 5 வருட சிறை By SETHU 12 JAN, 2023 | 05:07 PM யுக்ரைனில் போரிடுவதற்கு மறுத்த ரஷ்ய இராணுவ சிப்பாய் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 வரட சிறைத்தண்னை விதித்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தள்ளனர். 24 வயதான, மார்செல் கன்டரோவ் என்பவருக்கே இத்தண்டனை வதிக்கப்பட்டள்ளது. ரஷ்யாவின் "விசேட இராணுவ நடவடிக்கையில்" பங்குபற்ற மறுத்த மேற்படி சிப்பாய், கடந்த மே மாதம் கடமைக்கு சமுகமளிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பின்னர் கடந்த செப்டெம்பர் மாதம் அவரை அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர். https://www.virakesari.lk/article/145655

  20. உக்ரைனில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக தகவல்! உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 48 வயதான ஆண்ட்ரூ பாக்ஷா மற்றும் 28 வயதான கிறிஸ்டோபர் பாரி ஆகிய இரு தன்னார்வப் பணியாளர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 17:15க்கு காணாமல் போனவர் குறித்த புகாரைப் பெற்றதாக பக்முட் நகர பொலிஸ்துறை கூறியது. இறுதியாக வெள்ளிக்கிழமை சோலேடார் நகருக்குச் சென்று கொண்டிருந்தபோதே அவர்கள் காணாமல் போயிருக்க கூடுமெனவும் அவர்கள் குறித்த தகவல் தெரியுமாயின் தம்மிடம் அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். சமீப நாட்களில் ரஷ்யாவி…

  21. பிரேசிலில் சங்கேத மொழி மூலம் 50 லட்சம் பேர் திரண்டது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 11 ஜனவரி 2023, 05:24 GMT பிரேசிலில் நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் கடந்த ஞாயிறன்று முன்னாள் அதிபர்ஜேர் போல்சனாரோ ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைந்ததைக் கண்டு உலகமே அதிர்ச்சியுற்றது. சரியாக ஈராண்டுகளுக்கு முன்பு நடந்தேறிய அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலைப் போல, பிரேசிலின் முககிய கட்டடங்களுக்குள் நுழைந்த அவர்கள், அதிபர் தேர்தல் முறைகேடு நடந்துள்ளது, ஜேர் போல்சனாரோவே உண்மையான வெற்றியாளர் என்பன போன்ற தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்கள் முழக்கங்களையும் எழு…

  22. அமெரிக்காவில் ஆசிரியை மீது துப்பாக்கி சூடு நடத்திய 6 வயது மாணவன் By T. SARANYA 07 JAN, 2023 | 10:44 AM அமெரிக்காவில் ஆசிரியை மீது 6 வயது மாணவன் துப்பாக்கி சூட்டை நடத்திய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வேர்ஜினியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற ஆரம்ப பாடசாலை ஒன்றிலே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த பாடசாலையின் 30 வயதுடைய ஆசிரியை ஒருவருக்கும் 6 வயது சிறுவன் ஒருவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதில், சிறுவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியையை நோக்கி சுட்டுள்ளான். இந்த தாக்கு…

  23. அமெரிக்காவில் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமானத்தின் பாதையில் ஆபத்து விளைவிக்கும் சாத்தியக் கூறுகள் குறித்து விமானிகளுக்கு எச்சரிக்கும் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம்(FAA) கூறியுள்ளது. அந்த அமைப்பின் சில செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டாலும் தேசிய விமான போக்குவரத்து கட்டமைப்பின் செயல்பாடுகள் குறிப்பிட்ட வரம்புக்குள் மட்டுமே இருப்பதாக எஃப்.ஏ.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது- தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு வி…

  24. பெருவில் முன்னாள் ஜனாதிபதியை விடுதலை செய்யக்கோரிய போராட்டங்களில் 17பேர் உயிரிழப்பு! தெற்கு பெருவில் முன்கூட்டியே தேர்தல் நடத்த கோரியும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்யக்கோரியும் நடைபெற்ற போராட்டங்களை அடுத்து ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 17பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலியாக்கா நகரில், எதிர்ப்பாளர்கள் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றதில் உயிரிழந்தவர்களில் இரண்டு இளைஞர்களும் உள்ளடங்குவதாக அந்நாட்டின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனங்களின்படி, அருகிலுள்ள நகரமான சுகுய்டோவில் எதிர்ப்பாளர்கள் நெடுஞ்சாலையைத் தடுத்த போது ஏற்பட்ட மோதலில், …

  25. 2009ஆம் ஆண்டு ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த மஹிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளராக இருந்த அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது. இதனை வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இன்று(10.11.2023) அறிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக இவர்கள் மீது கனடா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது. பொறுப்புக்கூறலுக்கான முக்கிய நகர்வு மேலும் அதே காலகட்டத்தில், ராஜபக்ச சகோதரர்களுக்கு மேலதிகமாக, இன்று விதிக்கப்பட்ட தடைகளில் இலங்கை இராணுவப் படைப் பிரிவின் அதிகாரி சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படைப் புலனாய்வு அதிகாரி லெப்டினன்ட் கமாண்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.