உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26863 topics in this forum
-
பிரெக்சிற் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னோக்கி நகர்கின்றன – ஜேர்மனி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னோக்கி நகர்வதாக ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்கல் கருத்து வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய ஓன்றிய உச்சி மாநாட்டின் முதலாம் நாள் முடிவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் செய்தித்தாள்கள் சித்தரிக்கும் விதத்திற்கு மாறானதாக தனது உணர்வுகள் காணப்படுகின்றன எனவும் பிரித்தானியா , ஐரோப்பிய ஓன்றிய பேச்சுவார்த்தைகள் படிப்படியாக முன்னேறிச்செல்கி;ன்றன என தான் கருதுகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 551 views
-
-
காணமால் போன மலேசிய விமானத்தை அமெரிக்கா கடத்தி வைத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காணமால் போன மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம் கடத்தி, Diego Garcia என்ற தீவில் ஒளித்து வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் கசிந்து வந்தன. இந்த தீவு இந்திய பெருங்கடலில் உள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான இந்த தீவில் அமெரிக்க போர்விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தீவில்தான் மலேசிய விமானம் …
-
- 2 replies
- 1.2k views
-
-
உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட்ட 3 பேருக்கு மரண தண்டனை! உக்ரைனில் கிழக்கு பகுதியில் உக்ரைன் அரசுக்கு ஆதரவாக சண்டையிட்டதற்காக பிரிட்டனைச் சேர்ந்த 2 பேர் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கூலிப்படை நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத செயல்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது. இந்த மூன்று பேரும் கூலிப்படையினர் என்றும், போர்க் கைதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என…
-
- 31 replies
- 2.2k views
-
-
ஈரானில் கடுமையான நிலநடுக்கம் ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள கெர்மான் மாகாணத்தில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கும் கெர்மான் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக, கெர்மான் நகரில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதாகவும் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முதலில் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியில் இந்த அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டால், கடுமையான சேதம் ஏற்…
-
- 0 replies
- 337 views
-
-
ஜெர்மனியின் Düsseldorf ல் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன… ஜெர்மனியின் தியூசல்டோர்ஃபு பகுதியில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூர் நேரப்படி சுமார் 6:30 மணியளவில் 150க்கும் மேற்பட்டோருடன் சென்று கொண்டிருந்த பயணிகள் புகையிரதம் எதிர்பாராத விதமாக சரக்கு புகையிரதம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றி…
-
- 0 replies
- 262 views
-
-
அமெரிக்காவை கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸின் பிரதான கப்பலான 'சாந்த மரியா'வின் சிதைவுகளை ஹெய்ட்டிக்கு அருகிலுள்ள கடலின் அடிப்பரப்பில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இக்கப்பல் நீரில் மூழ்கி சுமார் 500 ஆண்டுகளுக்குப்பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடலடியிலிருந்து மீட்கப்பட்ட மிக முக்கியமான தொல்பொருளியல் பொருள் இதுவென வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். இக்கப்பல் மீட்கப்பட்ட இடம், மற்றும் பல்வேறு தொல்பொருளியல் ஆதாரங்களை கருத்திற்கொள்ளும்போது இது கொலம்பஸின் புகழ்பெற்ற சாந்த மரியா கப்பலின் சிதைவு எனக் கருதப்படுகிறது என இப்பலை மீட்ட ஆய்வுக்குழுவின் தலைவரான பெரி கிளிபோர்ட் தெரிவித்துள்ளார். 2003 ஆம் ஆண்டில் நடத்த…
-
- 0 replies
- 809 views
-
-
தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. காரணம்... நான்குமுறை உலக ‘செஸ் சாம்பியன்’ விஸ்வநாதன் ஆனந்துக்கு ஹைதராபாத்தில் நடந்த கணித நிபுணர்கள் மாநாட்டில் ‘டாக்டர்’ பட்டம் மறுக்கப்பட்டிருப்பதுதான். மறுத்திருப்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். ‘ஆனந்த், ஸ்பெயின் நாட்டுக் குடியுரிமை பெற்றவர். அவர் இந்தியர்தானா என்பதில் சந்தேகம் இருக்கு. அதனால் டாக்டர் பட்டம் கொடுக்க வழியில்லை!’ இப்படி உப்புசப்பில்லாத காரணங்களை அடுக்கியிருக்கிறது மத்தியஅரசு. இதில் வேதனையான வேடிக்கை என்ன தெரியுமா? அமெரிக்காவின் ‘ஹார்வேர்ட்’ பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர். டேவிட் மம்ஃபோர்டு என்பவருக்கு அதே மாநாட்டில் டாக்டர் பட்டம் கொடுக்க மத்திய அரசு எந்த மறுப்பும் சொல்லவில்லை என்பதுதான். …
-
- 5 replies
- 1.3k views
-
-
ராஜீவ்காந்தியின் கொலையும் சுப்பிரமணியசுவாமியின் அலட்டலும்! ராஜீவ்காந்தி கொலையைப் பற்றி இந்தியாவில் உள்ள பைத்தியக்கார அரசியல்வாதி என குறிப்பிடப்படும் சுப்பிரமணியசுவாமி "விடை கிடைக்காத வினாக்களும் கேட்கப்படாத கேள்விகளும் என்ற தலைப்பில் தனது அலட்டல்களை புத்தகவடிவில் கொண்டு வந்துள்ளார். புத்தகத்தின் அரைப்பகுதி வரை சுய புராணம் பாடியுள்ள சுவாமி ஏதோ ராஜீவ்காந்தி தன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்ததாகவும், சுவாமியை காங்கிரசுக்கு வந்து சேருமாறு கெஞ்சி மன்றாடியதாவும், ஆனால் தான் ஜனதா கட்சியையும் கொள்கையையும் விட்டு விலகாதவன் என்று புலம்பியிருக்கிறார். அத்தோடு நில்லாமல் தான் அமைச்சராக இருந்த நேரத்தில் தான் ஒருவர்தான் நம்பிக்கையான நியாயமான அரசியல்வாதி என்றும், யஷ்வந்த்சிங…
-
- 16 replies
- 3.4k views
-
-
மோடி இப்போது 110 கோடி + 30லட்சம் மக்களின் நம்பிக்கை நாயகமாக வந்துள்ளார்.. அவரது செயல்பாடுகளை (அவருக்கு கிடைக்கும்..கொடுக்கும் பல்புகளை) ஒரே திரியில் பதிந்து..அதை தொடர்ந்து ஓட்டிகொண்டிருந்தால்...என்ன? எல்லா விடயங்களும் ஒரே இடத்தில் இருக்குமே.... ----------------------------------------------------------------------------------------------------------------------------- உபயம்: கவிதை வானம் பிரதமர் மோடி ராஜபக்சேவுக்கு வச்ச ஆப்பு நமது பிளாக்கில் வைத்த கருத்துக்கணிப்பில் ....பிரதமர் மோடியால் ராஜபக்சேவுக்கு ஆதாயமா? ஆபத்தா? என்ற பதிவில் ஆபத்தே என்று அனைவரும் வாக்களித்தனர் அது உண்மையாகிவிட்டது நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண…
-
- 2 replies
- 701 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். தாய்லாந்து: மோசடி செய்தவருக்கு 13,275 ஆண்டுகள் சிறை சுமார் 40,000 முதலீட்டாளர்களிடம் அதிக லாபம் தருவதாகக் கூறி, 160 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பணத்தை ஏமாற்றிய தாய்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 13,275 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதனால் அந்த தண்டனை பாதியாகக் (6,637 ஆண்டுகள், 6 மாதங்கள்) குறைக்கப்பட்டுள்ளது. எகிப்து: துப்பாக்கித் தாக்குதலில் 9 பேர் பலி எகிப்தில் கிறிஸ்த்தவ மதத்தவர்களைக் குறிவைத்து ஒரு துப்பாக்கிதாரி…
-
- 0 replies
- 159 views
-
-
கரீபியன் கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை! கரீபியன் கடல் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், கடலோர பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஹோண்டுராஸ் - கியூபா நாடுகளுக்கு இடையேயான நடுக்கடலில், கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்பொழுது, மிகவும் வலுவான இந்த பூகம்பம் ஆரம்பத்தில் 7.8 ரிக்டர் அளவாக பதிவாகியது. அதன் பின்னர் 7.6 ரிக்டராக அளவு குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது. இதனையடுத்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறும்பொழுது, ரிக்டர் அளவு 7.6 ஆக பதிவாகியுள…
-
- 0 replies
- 277 views
-
-
அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் தாய்வான் ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென்னை இன்று புதன்கிழமை தாய்பேயில் சந்தித்தார். சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் சென்றடைந்தார். அவருக்கு தாய்வான் இராணுவம் பாதுகாப்பு அளித்துள்ளது. கடந்த 1949 இல் நடந்த உள்நாட்டு போரைத் தொடர்ந்து, சீனாவும், தாய்வானும் பிரிந்தன. இரு நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வ உறவு இல்லையெனினும், சீனா தாய்வான் நாட்டை சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது…
-
- 1 reply
- 295 views
-
-
நாளிதழ்களில் இன்று: தலை கவசம் இல்லையெனில் கோவில்களில் பூஜை இல்லை முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி அலங்காநல்லூரில் இன்று நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு குறித்த செய்தி பிரதான இடத்தினை தினத்தந்தி நாளிதழில் பிடித்துள்ளது. "உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பொள்ளாச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 1050 காளைகள் வந்துள்ளன" என்று அந்த செய்தி விவரிக்கிறது. தினமணி அரசியல் கட்…
-
- 0 replies
- 463 views
-
-
சிஐஏ உளவாளி கேரி ஷ்ரோன்: ஒசாமா பின்லேடனை பிடிக்க அமெரிக்கா அனுப்பிய ஜேம்ஸ் பாண்ட் பெர்ண்ட் டெபுஸ்மேன் ஜூனியர் பிபிசி நியூஸ் 7 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2005ஆம் ஆண்டு என்பிசியில் கேரி ஷ்ரோன் 9/11 நாட்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு முதல் உளவுப்படை அணியை வழிநடத்திய சிஐஏ ஏஜென்ட் கேரி ஷ்ரோன் ஆகஸ்ட் 1ஆம் தேதி தனது 80ஆவது வயதில் காலமானார். பொதுவாக உளவு அமைப்புகளில் வாழ்ந்து, கடமைக்காகவே அர்ப்பணித்து மறைந்தவர்கள் பற்றி உலகம் அதிகம் அறிவதில்லை. ஆனால், அந்த உளவு அமைப்புகளின் வரலாற்றில் இதுபோன்ற ஜேம்ஸ் பாண்டுகள் என்றென்றும் நினைவுகூரப்படுவர்…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
"சபோரிஜியா" அணுமின் நிலையத்தை... ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய, ரஷ்யா இணக்கம். சபோரிஜியா அணுசக்தி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய ஐ.நா அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். விளாடிமிர் புடினுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலின் பின்னர் கிரெம்ளின் இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஜபோரிஜியா அணுசக்தி வளாகம் மார்ச் தொடக்கத்தில் இருந்து ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளபோதும் உக்ரேனிய தொழில்நுட்ப நிபுணர்களே இயக்குவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் அறிக்கையை வரவேற்றுள்ள, ஐ.நா.அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர், ஆலைக…
-
- 0 replies
- 220 views
-
-
அரசியல் காரணங்களுக்காக சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று பாரதிய ஜனதா குற்றம்சாட்டி உள்ளது. சிபிஐ புலனாய்வு அமைப்பை தவறாகப் பயன்படுத்துவதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால் சமீபத்தில் குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. ஆனால் அந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ அமைப்பு அவசரம், அவசரமாக உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது. இதிலிருந்து சிபி.ஐ. அமைப்பை காங்கிரஸ் எந்தளவுக்கு அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறது என்பது புரியும். ஷா வழக்கில் சிபிஐ வழக்கத்தைவிட வேகம் காட்டி வருகிறது. ஆனால் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள போஃபர் பீரங்கி ஊழல் வழக்கு, 1984 கலவரம் சஜ்ஜன் குமார் மீதான வழக்கு ஆகியவற்றில் …
-
- 0 replies
- 444 views
-
-
உக்ரைனுக்கு, 2023ஆம் ஆண்டும்... குறைந்தபட்சம் "2.3 பில்லியன் பவுண்டுகள்" ஆதரவு வழங்க பிரித்தானியா திட்டம்! உக்ரைனுக்கு 2023ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் பவுண்டுகள் ஆதரவு வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான ஆதரவு தொகை, இந்த ஆண்டு ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போருக்கு பிரித்தானியா வழங்கிய 2.3 பில்லியன் பவுண்டுகள் உடன் ஒத்துப்போகும் அல்லது அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூயோர்க் நகரத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றத் திட்டமிடப்பட்டிருக்கும் பிரதமர் லிஸ் ட்ரஸ், அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் போது, உக்ரைனுக்கு தொடர்ச்சியான மற்றும் கணிசமான இராணுவ உதவி பற்றிய செய்தியை வழங்குவார…
-
- 1 reply
- 307 views
-
-
காஷ்மீர், ஈழப் போராட்டங்களை நாங்கள் (மாவோயிஸ்டுகள்) ஆதரிக்கிறோம்! வரவர ராவ் ‐ இன்று இந்திய அரசும் மாநில அரசுகளும் அஞ்சி நடுங்கும் மாவோயிஸ்டு இயக்கத்திற்காக கருத்துத் தளத்தில் சமரசமின்றி போராடும் போராளி. அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்குமான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றுபவர். ஆந்திர புரட்சிகர எழுத்தாளர் இயக்கத்தின் தலைவர். இவரின் எழுத்துகளும் பேச்சுகளும் ஆளும் வர்க்கத்தை தூக்கமிழக்கச் செய்பவை. ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்திருந்தவரை, ஒரு மாலை வேளையில் நேர்காணலுக்காக சந்தித்தேன். நடுத்தர வர்க்க மக்களிடம் மாவோயிஸ்டுகள் குறித்து இருக்கும் எண்ணங்களை கேள்விகளாக முன்வைத்தேன். பொருட்செறிவான பதில்கள் அவரிடமிருந்து வந்தன. கே: மாவோயிஸ்டுகளால் போலீச…
-
- 1 reply
- 375 views
-
-
நான் நிதியமைச்சரானால் 2 வாரத்தில் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பேன் என்று சுப்பிரமணிய சாமி சவால் விடுத்துள்ளார். கோவை ரோட்டரி சங்கம் சார்பில் ‘இந்திய பொருளாதாரம் நேற்று, இன்று, நாளை’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேசியதாவது:- நமது நாட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வருமான வரியிலிருந்து கிடைக்கிறது. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள். வருமானம் இல்லாததால் ஏழைகள் வரி செலுத்துவதில்லை. சட்டம் மற்றும் சட்ட வல்லுனர்களை தங்கள் கைக்குள் வைத்திருப்பதால் பணக்காரர்கள் வருமான வரி செலுத்துவதில்லை. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு பலன் க…
-
- 0 replies
- 497 views
-
-
மீளமுடியாத நோயுள்ளவர்களின் 'கருணைக்கொலைக்கு' இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES "வாழும் விருப்பம்" அற்ற நோயுற்றவர்கள் தங்களின் உயிரை கருணைக்கொலை மூலம் மாய்த்துக்கொள்வதற்கு இந்திய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டால், மீளமுடியாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பை து…
-
- 0 replies
- 319 views
-
-
$450-million (Rs.3000 – 4000 crore) Mega Undersea Power Transmission link between India and Sri Lanka "Business Standard" - ல் இன்று (29-12-2011) வந்த செய்தி http://business-standard.com/india/news/india-plans-underwater-power-line-to-sri-lanka/419973/ 285 Kilometer India-Srilanka Power link which includes submarine cables over 50 km HVDC overhead lines from Madurai to the Indian coast (near Rameshwaram) (139 km), a 400 KV HVDC cable from the Indian coast to the Sri Lankan coast (39 km), a 400 KV HVDC overhead line from the Sri Lankan coast to Anuradhapura/Puttalam (125km) via Talaimannar Jointly implemented by Power Grid Corporation of India L…
-
- 3 replies
- 692 views
-
-
கனேடிய தேர்தல்களில் சீனா தலையீடு : ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு By DIGITAL DESK 3 08 NOV, 2022 | 12:58 PM கனேடிய தேர்தல்களில் தலையீடு செய்வதற்கு சீனா முயற்சிப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருரோனா குற்றம் சுமத்தியுள்ளார். கனேடிய நிறுவனங்களை இலக்கு வைத்து, ஜனநாயகத்துடன் ஆக்ரோஷாமான விளையாட்டு நடத்துவதாக பிரதமர் ட்ரூடோ விமர்சித்துள்ளார். கனடாவில் அண்மைக்கால தேர்தல்களில் சீனாவின் ஆதரவு பெற்ற வலையமைப்பு ஒன்றை கனேடிய புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளதாக செய்தி வெளியானதையடுத்து பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இவ்வாறு கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு கனடாவின் சமஷ்டி தேர்தல்களில் குறைந்தபட்சம் 11 பேர் சீனாவின் ஆதரவைப் பெற்றிரு…
-
- 11 replies
- 998 views
- 1 follower
-
-
இலங்கையைச் சேர்ந்த 40வயதுடைய ராஜஸ்ரீ, 1991-ம் ஆண்டு சென்னையில் தங்கி இருந்தார். அப்போது போலி பாஸ்போர்ட்டு வழக்கில் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் இருந்த இவர், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் அவரை விமானநிலைய அதிகாரிகள் பிடித்து அவர் சி.பி.ஐ. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சி.பி.ஐ. போலீசார், அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். ராஜஸ்ரீ கனடா நாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தார். அதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். thanks to .... http://www.thedipaar.com/news/news.php?id=24497
-
- 0 replies
- 872 views
-
-
இந்தியாவுக்கு எதிராக போராட தமது இராணுவம் தயாராகவுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்திய தாக்குதல் உக்கிரமானதும் ஐ.நாவிடம் தஞ்சமடைந்தது பாகிஸ்தான். ஆனால் ஐநா இந்த விவகாரத்தில் தலையிடப்போவதில்லை என்று கூறிவிட்டது. இந்நிலையில், பாக். முன்னாள் ஜனாதிபதி முஷாரப் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், காஷ்மீருக்காகவும் "காஷ்மீர் மக்கள் ஆர்வமுடன் உள்ள நிலையில், அவர்களிற்காகவும் இந்தியாவுக்கு எதிராக போர்தொடுக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராகவே உள்ளது. காஷ்மீருக்காக போர் தொடுக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்கள் எதிர்பார்க்கிறார்…
-
- 7 replies
- 677 views
-
-
அயர்லாந்து கருக்கலைப்பு தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பெருவாரியான ஆதரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அயர்லாந்து குடியரசில் கருக்கலைப்பு தடைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான வாக்கெடுப்பில் 66.4 சதவீத வாக்குகள் ஆதரவாகவும், எதிராக 33.6 சதவீத வாக்குகளும் பெறப்பட்டுள்ளன. படத்தின் காப்புரிமைREUTERS தற்போதைய சட்டப்படி தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்…
-
- 0 replies
- 346 views
-