Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் அகதிகள் கலவரம் – கட்டிடங்களிற்கு தீ மூட்டினர் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் முகாமின் கட்டிடங்களிற்கு தீ மூட்டியுள்ளனர். செவ்வாய்கிழமை இரவு இரண்டு கட்டிடங்கள் தீமூட்டப்பட்டன என தடுப்பு முகாமிற்குள் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. தடுப்புமுகாமின் கட்டிடமொன்றின் உச்சியில் இருவர் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முகாமில் தாங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கோரினோம் அதற்கு அனுமதி மறுக்…

  2. Published By: RAJEEBAN 18 DEC, 2023 | 01:20 PM வடகுயின்ஸ்லாந்தில்பெரும் வெள்ளத்தில் சிக்குண்டுள்ள மக்கள் அவசர உதவியை கோரியுள்ளனர். குயின்ஸ்லாந்தின் தொலைதூர வடபகுதியில் சிக்குண்டுள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களிற்கான விநியோகங்கள் முடிவடையும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளதுடன் அவசர இராணுவ தலையீட்டிற்காக காத்திருக்கின்றனர் என டக்ளஸ் சயரின் மேயர் தெரிவித்துள்ளார். குக்டவுன் முதல் இனிஸ்பெயில் வரை பல நகரங்கள் வெள்ள நீரினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பிரதான வீதிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன கெயர்ன்சின் மக்களை அவசர தேவைக்காக மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு அதிக…

  3. Published By: RAJEEBAN 13 APR, 2024 | 01:58 PM அவுஸ்திரேலியாவில் வணிகவளாகமொன்றில் நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திகுத்து தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். சிட்னியின் பொன்டி ஜங்சன் எனப்படும் பகுதியில் இந்த வன்முறை சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. வணிக வளாகமொன்றிற்குள் நபர் ஒருவர் கத்தியுடன் காணப்படுவதாக பொதுமக்களை எச்சரித்துள்ள காவல்துறையினர் பாரிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். அந்த பகுதியிலிருந்து பொதுமக்கள் தப்பிவெளியேறிய வண்ணமுள்ளனர். அவசரசேவை பிரிவினரின் வாகனங்கள் அந்த பகுதிக்கு விரைகின்றன. பலர் கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகின்ற…

  4. அவுஸ்திரேலியாவின் சிறப்புப்படை மீதான விசாரணையும், அரசின் நிலைப்பாடும் – முடிவு அதிர்ச்சியானதாக அமையலாம்? நியூசிலாந்து சிற்சபேசன் அண்மையிலே அவுஸ்திரேலியா இராணுவத்தின் சிறப்புப்படை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியாகியது. அஃது ஆப்கானிஸ்தானில் சிறப்புப்படையினர் மீதான படுகொலைக் குற்றச்சாட்டு தொடர்பானதாகும். விசாரணை முடிவு அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம் என்பதை அவுஸ்திரேலியப் பிரதமர் முன்னரே கோடி காட்டியிருந்தார். இருந்தபோதிலும், சிறப்புப்படையினர் சட்டவிரோதக் கொலைகளுடன் சம்பந்தப்பட்டதை அறிந்தபோது கங்காருதேசம் அதிர்ச்சியடைந்தது. 2001 செப்டம்பரில் நியூயோர்க் இரட்டைக்கோபுரம் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதன்போது மூவாயிரம் வரையானவர்கள் கொல்லப்பட்…

  5. அவுஸ்திரேலியாவின் டஸ்மானியாவில் காட்டுத் தீ: 100 பேரைக் காணவில்லை! By General 2013-01-07 10:24:00 அவுஸ்திரேலியாவின், டஸ்மானியா தீவுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அடுத்து அங்கு சுமார் 100 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுமையான வெயில் காரணமாக அங்கு வெப்பநிலை 41 பாகை சென்டிகிரேட்டுக்கும் அதிகமாகவுள்ளது. இதனால் இங்குள்ள காட்டில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. அங்கு தொடர்ச்சியாக பரவிய இந்த காட்டித்தீ அருகில் உள்ள வீடுகளை தீக்கிரையாக்கியது. உடனே அப்பகுதி வீடுகளில் இருந்த 3000 பேரை மீட்புபடையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். பெரும்பான்மையான மக்கள் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒரு சில உடல்கள் எரிந…

  6. Published By: RAJEEBAN 15 APR, 2023 | 12:51 PM அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு தகவல்களை வெளிநாடுகளிற்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிட்னியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் தேசிய புலானய்வு அமைப்பும் பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் என்ற இந்த நபர் பொன்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சேர்கோ வெளிநாடொன்றிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை புத்திஜீவிகளின் அமைப்பை சேர்ந்தவர் என தன்னை அறிமுகப்படுத்திய நபர் ஒருவர் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்புகொண்டு சேர்கோ தனது இரண்டு பிரதிநிதிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்ற…

  7. அவுஸ்திரேலியாவின் பிரதிப்பிரதமர் இரட்டை பிரஜாவுரிமைக்குரியவர் என்பதை நியுசிலாந்து உறுதிசெய்துள்ளதனையடுத்து புதிய சர்ச்சை : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவின் பிரதிப்பிரதமர் பார்னபி ஜொய்ஸ் இரட்டை பிரஜாவுரிமைக்குரியவர் என்பதை நியுசிலாந்து உறுதிசெய்துள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலிய அரசியலில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது நியுசிலாந்தின் உள்துறை அமைச்சரின் அலுவலகம் நியுசிலாந்து பிரஜையொருவரிற்கு பிறந்த குழந்தைக்கு நியுசிலாந்து பிரஜாவுரிமை வழங்கப்படுவது வழமை என தெரிவித்துள்ளதை தொடர்ந்தே இந்த சர்ச்சை உருவாகியுள்ளது. இதனை உறுதிசெய்துள்ள நியுசிலாந்து பிரதமரும் அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் ஓரு நியுசிலாந்து பிரஜை …

  8. அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரானார் ஸ்கொட் மோரிசன் அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மோரிசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லிபரல் கட்சியின் தலைவராகவும், அவுஸ்திரேலியாவின் பிரதமராகவும் இருந்த மல்கம் டெர்ன்புல் நீக்கப்பட்டதையடுத்து , அவுஸ்திரேலியாவின் 30 ஆவது பிரதமராக ஸ்கொட் மோரிசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். லிபரல் கட்சியின் பொருளாளராக ஸ்கொட் மோரிசன் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/39049

  9. Published By: RAJEEBAN 19 JUN, 2023 | 11:01 AM அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதற்கு அவுஸ்திரேலிய செனெட் அனுமதியளித்துள்ளது. செனெட் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வது குறித்த சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சர்வஜனவாக்கெடுப்பிற்கான திகதியை அறிவிக்கவேண்டும்,இரண்டுமுதல் ஆறுமாதங்களிற்குள் அவர் சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் . பிரதமர் ஒக்டோபரில் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு …

  10. Published By: RAJEEBAN 08 NOV, 2023 | 01:08 PM அவுஸ்திரேலியாவின் தொலைதொடர்பு ஜாம்பவான்கள் என அழைக்கப்படும் ஒப்டஸ் நிறுவனத்தின் வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் மொபைல் இணைய வசதிகளை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். 10 மில்லியன் வாடிக்கையாளர்களையும் ஆயிரக்கணக்கான வர்த்தகங்களையும் கொண்டுள்ள ஒப்டஸ் நிறுவனத்தின் வலையைமைப்பில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து தாமதங்கள் மருத்துவமனைகளில் தொலைபேசி சேவைகள் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் கட்டணங்களை செலுத்துவதற்கான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக மக்…

  11. அவுஸ்திரேலியாவின் மிகப்பெரும் நிறுவனத்தினை இலக்குவைத்து சைபர் தாக்குதல்-10மில்லியன் வாடிக்கையாளர்களின் தரவு பறிபோயிருக்கலாம் என அச்சம் By RAJEEBAN 26 SEP, 2022 | 12:49 PM ஒப்டஸ் நிறுவனத்தின் கணிணி வலையமைப்பை இலக்குவைத்து சைபர் தாக்குதல்களை மேற்கொண்டவர்களை இனம் காண்பதற்காக வெளிநாட்டு சட்ட அமுலாக்கல் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதாக அவுஸ்திரேலிய பொலிஸ் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய டெலிகொம் நிறுவனமான ஒப்டஸ் தனது கணிணி வலையமைப்பை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல்கள் காரணமாக தற்போதைய முன்னாள் வாடிக்கையாளர்கள் குறித்த தரவுகள் களவாடப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளது. எண்ணிக்கை குறி…

  12. அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியைத் தாக்கியது ஃபினா சூறாவளி ; ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை Published By: Digital Desk 3 23 Nov, 2025 | 04:19 PM அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் சனிக்கிழமை இரவு முழுவதும் வெப்பமண்டல ஃபினா சூறாவளி கடுமையாக தாக்கியதால் மரங்கள், போக்குவரத்து மின் விளக்குகள் வீழ்ந்து ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. அத்தோடு, சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் குடியிருப்பாளர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவுஸ்திரேலியாவின் வடக்குப் பிராந்தியத்தின் கரையோரம் பல நாட்கள் நீடித்த வெப்பமண்டல சூறாவளி ஃபினா, 3 ஆம் வகை சூறாவளியாக வேகமாக வலுவடைந்ததன் பின்னர் பல நாட்கள் நீடித்துள்ளது. சனிக்கிழமை இரவு, பரபரப்பான டார்வின் நகருக்கும…

  13. அவுஸ்திரேலியாவிலும் இனவாதம் பேசும் வட இந்தியர் அண்மைக்காலமாக அவுஸ்திரேலியாவில் இந்தியர் மேல் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அவர்களே ஊடகங்களுக்கும் பொலீசிலும் முறைப்பாடு செய்துவருவது அனைவரும் தெரிந்ததே. இவ்வாறு இந்தியர்கள் முறையிடும் தாக்குதல் சம்பவங்கள் அநேகமானவை தங்களுக்குள்ளேயோ அல்லது தமக்குத் தாமேயோ செய்தவைதான் என்பது பின்னர் நிரூபணமானது வேறுகதை.மனைவியின் கழுத்தை மரக்கறி வெட்டும் கத்தியால் அறுத்துவிட்டு மெல்பேனுக்கு பஸ்ஸேறிய கணவன், காப்புறுதிப் பணத்திற்காக தனது காரை தானே எரித்து விட்டு அதில் தானே மாட்டிக்கொண்டு இனவாதிகள்தான் தாக்கினார்கள் என்று முறையிட்ட இந்தியன்......இப்படிப்பல உதாரணங்களும் "இனவாதிகளின் தாக்குதல்கள்" பட்டியலில்த்தான் சேர்க்கப்பட்டு வருகின்றன. இ…

  14. 12 Nov, 2025 | 04:06 PM அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னப்செட் போன்ற சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதால், அவர்களின் உடல், உள நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குறிப்பிட்டுள்ளார். நிகழ்நிலையில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலேயே அவர்களின் சமூக ஊடக பாவனைக்கு தடை விதித்திருப்பதாக அந்தோணி அல்பனீஸ் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/230168

  15. அவுஸ்திரேலியாவில் 20 வயதான பல்கலைக்கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்பபடுத்தப்பட்டார் 27 பெப்ரவரி 2013 இலங்கையை சேர்ந்த இளைஞர் கைது அவுஸ்திரேலியாவில் 20 வயதான பல்கலைக்கழக மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவரை நியூசவுத்வேல் காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். 21 வயதான சந்தேக நபர் அரசியல் தஞ்சம் கோரி அந்த நாட்டுக்கு சென்றவர் என அந்த நாட்டின் குடிவரவு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த மாணவி கடந்த 20 ஆம் திகதி இரவு மெகாரி பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபர் மேலும் சில இலங்கை அகதிகளுடன் குறித்த பல்கலைக்கழகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக கூறப்ப…

  16. அவுஸ்ரேலியா குயின்ஸ் லெண்ட் மாநிலத்தில் உள்ள மனோர என்னும் இடத்தில் ஒரு வீட்டுக்குள் இருந்த 18 மாதம் தொடக்கம் 15 வயது வரைக்கும் இடைப்பட சிறுவர்கள் 8 பேர் சடலமாக மீட்கப் பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதல் கட்ட விசாரணைகள் நடத்தப் படுவதாக குயின்ஸ் லாண்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர் . குறித்த சம்பவம் இடம்பெற்ற வீட்டில் பலத்த காயங்களுடன் 34 வயது மதிக்கக்தக்க பெண் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அவரிடம் தொடர்ந்து விசாரணைகள மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். http://virakesari.lk/articles/2014/12/19/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0…

  17. சுப்ரமணியம் தவப்புதல்வன் (36) இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர் இலங்கை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியை சொந்த இடமாகக் கொண்டவர். அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து அகதி தஞ்சம் கோரிய இவர், 4 வருடங்கள் பிரிஸ்பேர்னிலும் அதன் பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிட்னியிலும் வசித்து வந்துள்ளார். இவரது அகதி தஞ்சக் கோரிக்கை குடிவரவுத் திணைக்களத்தினாலும் மீளாய்வு மையத்தினாலும் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தார். இவரது மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதமளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தவேளையில் இவர் சில தினங்களுக்கு முன்னர் சிட்னி Blacktown பகுதியில் புகைய…

  18. Published By: RAJEEBAN 15 JUL, 2023 | 12:08 PM அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் இடம்பெற்ற சம்பவமொன்றில் இரு பொலிஸார் கத்திக்குத்திற்குள்ளாகியுள்ள அதேவேளை நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மிகவும் ஆபத்தான சம்பவம் ஒன்று குறித்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்டின் வடகிழக்கில் மிகவும் ஆபத்தான சம்பவமொன்றை தொடர்ந்து ஆயுதமேந்திய பொலிஸார் அந்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர் Campbelltown, பகுதியை சுற்றிவளைத்துள்ள பொலிஸார் பொதுமக்களை அந்த பகுதியை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/160072

  19. அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் சிறுவயது கட்டாய திருமணங்கள் - ஏபிசி By RAJEEBAN 04 SEP, 2022 | 12:58 PM அவுஸ்திரேலியாவில் சிறுவர் திருமணமும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைப்பதும் அதிகரிக்கி;ன்றது என அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நியுசவுத்வேல்சிலும் விக்டோரியாவிலும் அதிகளவு காணப்படும் இந்த வகை திருமணங்களை எப்படி தடுத்து நிறுத்துவது என தெரியாமல் காவல்துறையினரும் அதிகாரிகளும் தடுமாறுகின்றனர் என தெரிவித்துள்ள ஏபிசி கடந்த வருடம் பொலிஸாருக்கு இது தொடர்பில் 80 முறைப்பாடுகள் கிடைத்தன இதில் அரைவாசிக்கும் மேற்பட்டவை 18 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு திருமணம் தொடர்பானது எனவும் குறிப்பிட்டுள்ளது. பணத்…

  20. அவுஸ்திரேலியாவில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்ள இருநாடுகளும் இணக்கம்; சீனா எதிர்ப்பு அவுஸ்திரேலிய மண்ணில், அமெரிக்கப் படையினரை நிலைகொள்ளச் செய்வதற்கு இரு நாடுகளும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட்டும் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு பராக் ஒபாமாவும் அவுஸ்திரேலிய பிரதமர் கில்லார்ட்டும் அவுஸ்திரேலிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இத்தகவலை வெளியிட்டனர். அவுஸ்திரேலியாவின் வடபகுதியில் 200 - 250 அமெரிக்கப் படையினரை 6 மாத காலத்திற்கு நிறுத்தி வைத்திருப்பதற்கு இணக்கம் காணப்…

    • 9 replies
    • 1.2k views
  21. அவுஸ்திரேலியாவில் அவசரகால நிலை பிரகடனம்! அவுஸ்திரேலியா - நியூ சவுத் வேல்ஸில் ஒரு வாரத்திற்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் வெப்ப சூழல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து இதன் நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று குறித்த பகுதியில் வெப்பநிலை சராசரியாக அதிகபட்சம் 40.9 சி வரை காணப்பட்டது. ஆனால் இதனைவிட இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 7 நாட்களுக்கு குறித்த அவசரகால நிலை அமுலில் இருக்கும். இதனிடையே நிய…

  22. அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி May 19, 2019 அவுஸ்திரேலியாவில் நேற்றையதினம் நடந்த பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுத் தேர்தலில் 16.4 மில்லியன் வாக்காளர் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளில் 6 முறை பிரதமர்கள் மாறி உள்ளனர். இதனால் லிபரல்கட்சிக்கு பொதுத் தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் எனக் கருதப்பட்ட போதிலும் பிரதமர் ஸ்கொட் மாரிசன் தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. #scottmorrison #australia #election #அவுஸ்தி…

  23. அவுஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள ஒரு வீட்டின் வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் இயங்கும் ஒரு இந்திய கடைக்கு எதிராக இலங்கையர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். குறித்த கடை 2023ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும் உறைந்த உணவுகள் உட்பட பல்வேறு பொருட்கள் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. கடையில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இருப்பதும், அவர்களின் கவனக்குறைவான வாகன நிறுத்துமிடமும் அந்தப் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். ஆபத்தான சூழ்நிலை கடைக்கு பொருட்களை கொண்டு செல்லும் லொறிகள் வீதியில் பயனாளர்களுக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. காலை 6:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை கடை இயங்குகிறது, மேலும் பொருட்கள…

  24. அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல் அவுஸ்திரேலியாவில் இன்று சனிக்கிழமை (03.05.2025) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் பிரதமரைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் இடம்பெறுகிறது. முன்னதாக பிரதமர் அந்தோணி அல்பனீஸ், வீட்டுவசதி பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 12 இலட்சம் வீடுகள் கட்டப்படும் என கடந்த 2023 ஆம் ஆண்டு உறுதியளித்தார். ஆனால் அது தொடர்பான நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு இந்த தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே திர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு …

  25. அவுஸ்திரேலியாவில் இலகுவாக குடியேறும் வகையில் புதிய விசா நடைமுறை! அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தமது பெற்றோர்களை அந்நாட்டுக்குள் அழைப்பதற்கான புதிய விசா நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது. தற்காலிக பெற்றோர் விசா அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்விசா தொடர்பான சட்டமூலமான Migration Amendments (Family Violence and Other Measures) Bill இனை கடந்த 2016ம் ஆண்டு அப்போது ஆட்சியிலிருந்த லிபரல் முன்மொழிந்திருந்த நிலையில் தற்போது குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள தங்களது குடும்பங்களைச் சந்தித்துக்கொள்ள இப்புதிய நடைமுறை விசா வழியேற்படுத்தும் என குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோல்மன் குறிப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.