Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை கடந்த 2013-ஆம் ஆண்டில், தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை கொலை செய்த தென்னாப்பிரிக்க ஒலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு, ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கோப்பு படம் தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்கார் பிஸ்டோரியஸ் உடனடியாக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அரசு மற்றும் பிஸ்டோரியஸ் ஆகிய இரு தரப்பும் மேல்முறையீடு செய்யலாம். கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 29 வயதான பிஸ்டோரியஸ் தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை தாழ்ப்பாளிட்டிருந்த ஒரு கழிப்பறையில் நான்கு முறை சுட்டார். ரீவா ஸ்டீன்காம்பை தான் சுட்டதை ஒப்புக்கொண்ட பிஸ்டோரியஸ், அச்சத்தின் விளைவாகவும், யாரோ திருடன் என்று எண்ணி…

    • 2 replies
    • 311 views
  2. இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இந்தி பட இசை அமைப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயில் தர்பார், ரகுமான் விருது பெற்றதை விமர்சித்துள்ளார். சமீபத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’2008-ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன். உண்மையிலேயே ஏ.ஆர்.ரகுமான் திறமை உள்ளவர் என்றால் “ரோஜா” அல்லது “பம்பாய்” படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியது தானே? அவர் பணம் கொடுத்துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும்’’ என்று கூறியு…

  3. ஆஸ்டெக் பழங்குடிகள் வரலாறு: மீண்டும் உயிர் பெறும் 700 வருட மிதக்கும் தோட்டங்கள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மெக்சிக்கோ நகரில், 700 ஆண்டுகள் பழமையான ஆஸ்டெக் பண்ணை தொழில்நுட்பம் நவீன விவசாயத்திற்கு ஒரு நிலையான அம்சத்தை அளிக்கிறது. அது ஒரு ஞாயிறு அதிகாலை நேரம். மெக்சிக்கோ நகரின் தெற்கே 28 கி.மீ தொலைவில் உள்ள வரலாற்று மையமான எக்ஸோசிமில்கோ(Xochimilco)வின் மிதக்கும் தோட்டங்கள் பகுதியில் நான் இருந்தேன். அங்கிருந்த முடிவற்ற கால்வாய்கள், நீர் வழிகள் ஏற்கனவே வண்ண மயமான தட்டையான படகுகள் நிறைந்திருந்திருந்தன. மெக்சிக்கோ நகரில் இருந்து ஒரு நாள் சுற்றுப்பயணத்துக்காக வந்திருந்த பயணிகளால் அவை…

  4. ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: இரண்டு மசூதிகளை மூட அரசாங்கம் உத்தரவு! வியன்னாவில் தாக்குதல் நடத்திய ஜிஹாதி துப்பாக்கிதாரி அடிக்கடி சென்றுவந்த இரண்டு மசூதிகளை மூட ஆஸ்திரிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரியா நல்லிணக்க சூசேன் ராப் கூறுகையில், ‘திங்களன்று தாக்குதல் நடத்தியவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தாக்குதல் நடத்திய ஜிகாதி ஒருவர் இரண்டு வியன்னா மசூதிகளுக்கு பலமுறை விஜயம் செய்ததாக உட்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு மசூதிகள் வியன்னாவின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ளன, ஒன்று ஒட்டாக்ரிங் மாவட்டத்தில் மெலிட் இப்ராஹிம் மசூதி என்றும் மற்றொன்று மீட்லிங் பகுதியில் உள்ள தெவ்ஹிட் மசூதி என்றும் அழைக்கப்படுகிறது. உள்ந…

  5. ஆஸ்திரியாவில் ஜூலை 1ஆம் திகதி விபச்சார விடுதி மீண்டும் திறப்பு! by : Anojkiyan ஆஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஒரு பகுதியாக, எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி விபச்சார விடுதி மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார நடவடிக்கைகளை உருவாக்க நாட்டின் 8,000 பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களுடன், சுகாதார அமைச்சகம் செயற்பட்டு வருவதாக ஆஸ்திரியா பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், வோக்ஷில்ஃப் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் ‘சோஃபி’ என்ற ஆலோசனை மையத்தின் தலைவரான ஈவா வான் ரஹ்டன், தொற்றுநோயால் பல பாலியல் தொ…

    • 1 reply
    • 421 views
  6. ஆஸ்திரியாவில் புதிய சகாப்தத்தைப் படைக்கவுள்ள தீவிர வலதுசாரி கட்சி! ஆஸ்திரியாவின் சுதந்திரக் கட்சி (FPO) ஞாயிற்றுக்கிழமை இரவு (29) நாட்டின் பொதுத் தேர்தலில் ஆளும் பழமைவாத கட்சியைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆஸ்திரியாவின் தீவிர வலதுசாரிக் கட்சி பெற்றுக் கொண்ட முதல் வெற்றி இதுவாகும். 10 மில்லியன் மக்கள் வசிக்கும் குறித்த நாட்டில் அதிக பணவீக்கம், உக்ரேன் – ரஷ்யப் போர் மற்றும் கொவிட்-19 தொற்றுநோய் ஆகியன பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. இதனால் அந்நாட்டு மக்கள் ஆளும் கட்சி மீது பெரும் விரக்தியில் இருந்துள்ளனர். இந்நிலையில் முதற்கட்ட உத்தியோகபூர்வ முடிவுகள் சுதந்திரக் கட்சி 29.2% வாக்குகளைப் பெற்று முதலிடத்தை…

  7. ஆஸ்திரியாவில் மலையேற்றத்தின் போது காதலி மரணம் ; காதலனுக்கு எதிராக வழக்கு பதிவு Published By: Digital Desk 3 18 Feb, 2026 | 05:10 PM ஆஸ்திரியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரமான கிராஸ்க்ளோக்னரில் (3,798 மீ), கடந்த ஆண்டு குளிர்காலத்தில் தனது காதலியை கடும் குளிரில் தவிக்கவிட்டு உயிரிழக்கச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மலையேற்ற வீரர் மீதான விசாரணை வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் திகதி அதிகாலையில், 33 வயதுடைய பெண், கடும் பனிப்புயலில் சிக்கி உடல் உறைந்து உயிரிழந்தார். அவருடன் சென்ற 36 வயதுடைய காதலன், காதலி மிகவும் சோர்வடைந்த நிலையில் அவரை மலை உச்சியில் தனியே விட்டுவிட்டு உதவி தேடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்ப்ரூக் அரச…

  8. ஆஸ்திரேலிய அரசால் திட்டமிட்டுத் திருடப்பட்ட ஆஸ்திரேலிய இனத்தின் தலைமுறைகள் - மன்னிப்பு தினத்தின் பின்னணி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES/ IAN WALDIE எந்த ஒரு நாட்டுக்கும் அதன் குழந்தைகள்தான் எதிர்காலம். ஆனால், ஓர் இனத்தில் சில தலைமுறைகளுக்கு குழந்தைகளே இல்லாமல் செய்துவிட்டால் என்ன நடக்கும்? அதைச் செய்ததன் விளைவாகத்தான் ஆண்டுதோறும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலிய அரசு. ஆஸ்திரேலியாவின் தொல்குடி மக்களுக்கு, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பொறுப்பேற்று ஆண்டுதோறும் பிப்ரவரி 26ஆம் தேதி தேசிய மன்னிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஒர…

  9. ஆஸ்திரேலிய கடற்கரையில் வினோதம்: கடலை ஒளிரும் நீல நிறமாக மாற்றி விட்ட பாசிப்பெருக்கம் ஆஸ்திரேலிய கடற்கரைப் பகுதியில் உருவாகியுள்ள ஒரு பெரும் கடற்பாசிப் பெருக்கம், பிரகாசமாக ஒளிரும் நீல பகுதியாக அக்கடற்கரையை மாற்றியுள்ளது. படத்தின் காப்புரிமைBRETT CHATWIN Image captionகடலை ஒளிரும் நீல நிறமாக மாற்றி விட்ட பாசிப்பெருக்கம் 'சீ ஸ்பார்க்கில்' என்றழைக்கப்படும் ஒளியை உற்பத்தி செய்து உமிழும் பாசி, டாஸ்மேனியாவின் பாதுகாப்பு விரிகுடா பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தன்னை தற்காத்துக் கொள்ளும் விதமாக இந்த சிறிய உயிரினங்கள் ஒளியை உமிழ்வது ஒரு இயற்கையான செயல்பாடாக அமைவதாக இது குறித்து ஒரு நிபுணர் தெரிவித்துள்ளார். …

  10. ஆஸ்திரேலிய கடற்படையின் கப்பல்களை வழிமறித்த சீனா YouTube தென்சீனக் கடலில் ஆஸ்திரேலிய கடற்படையைச் சேர்ந்த 3 கப்பல்களை சீனா வழிமறித்துள்ளது. தென்சீனக் கடல் முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தென் சீனக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில் ஆஸ்திரேலிய கடற்படையைச் சேர்ந்த 2 போர்க் கப்பல்கள், ஒரு எண் ணெய் கப்பல் வியட்நாமுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த 3 கப்பல்களையும் சீன கடற்படையின் போர்க் கப்பல்கள் வழிமறித்துள்ள…

  11. ஆஸ்திரேலிய கடற்பரப்பு “பிளாஸ்டிக் சூப்” ஆக மாறியுள்ளது: ஆய்வாளர்கள் கடலினுள் காணப்படும் பிளாஸ்டிக் ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் மாசுப்படுவது அந்நாட்டு பெருங்கடலை மாற்றியமைத்துள்ளதாக கூறியுள்ள ஆய்வாளர்கள் , அதனை “பிளாஸ்டிக் சூப்” என்றும் அழைத்துள்ளனர். சுற்றுச்சூழல் தொடர்பில் ஆராய்வதற்காக, ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வாளர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய பெருங்கடலினுள், சுமார் 35 பில்லியன் பிளாஸ்டிக் கழிவுத் துண்டுகள் காணப்படுவதாக அவர்கள் மதிப்பிட்டுள்ளனர். அழகு சாதனங்கள் மற்றும் பற்பசைக்கு பயன்படுத்தப்படும் “மைக்ரோ பீட்ஸ்” என்ற பொருளை மீன்கள் உட்கொள்வதாகவும், அதன் பின்னர் அது கடல் உணவாக வாடிக்கையாளர்களாகல்…

  12. ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் 100 வீடுகள் எரிந்து நாசம் ஆஸ்திரேலிய காட்டுத்தீயை அணைக்க அரசு கட்டமைப்பு போராடிவருகிறது ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் எரிந்து நாசமாயின. இதில் பிரபல சுற்றுலா நகரங்களான வைரிவர் மற்றும் செபரேஷன் கிரீக் ஆகிய இரண்டு நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களை இந்த காட்டுத்தீ பாதித்துள்ளது மேலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கும் Great Ocean Roadஉம் இந்த காட்டுத்தீயால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வேகமாக பரவிய காட்டுத்தீயின் தீவிரம் காரணமாக இந்தப் பகுதிகளில் வசித்த பலரும் அங்கே சென்றிருந்த சுற்றுலாப்பயணிகளும்…

  13. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாடின் வீட்டில் வெடிகுண்டு கண்டெடுப்பு! சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் வீட்டு தோட்டத்தில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை ஆஸ்திரேலிய போலீசார் கைப்பற்றியுள்ளனர். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்று வருகிறது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் தனது மனைவி கரினா மற்றும் குழந்தை மியாவுடன் இங்கிலாந்தில் உள்ளார். இந்நிலையில் ஆஸஷ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் பிராட் ஹாடின் விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக பிராட் ஹாடின் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் சிட்னி நகரில் உள்ள பிராட் ஹாடின் வீட்டில் வெடி குண்டு …

  14. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்கள் : முரடர்கள் என விமர்சிக்கப்பட்டவர்கள்தான் ஓடிவந்து உதவுகிறார்கள்! மு.பிரதீப் கிருஷ்ணா Australian Cricketers கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேபோகிறது. இதுவரை காணாத இழப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது இந்தியா. கஷ்டப்படும் இந்திய மக்களுக்கு உதவுவதற்காக கைகோர்த்திருக்கிறார்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்கள். இந்திய மக்களுக்கு உதவுமாறு அனைவருக்கும் யுனிசெஃப் (UNICEF) ஆஸ்திரேலியா மூலம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்! ஐபிஎல் தொடர் நடந்துகொண்டிருக்கும்போது கொரோனாவின் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் பலரும் கஷ்டப்படத் தொடங்கினார்கள்…

  15. ஆஸ்திரேலிய சிறையில் 2000 தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மேரி ஆஸ்திரேலியாவில் திருநங்கையை ஒருவரை சிறையில் வைத்து 2 000 தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திருநங்கையான மேரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 1990 ஆண்டில் கார் திருடிய வழக்கில் கைதாகி அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் க்வீன்ஸ்லேண்டில் உள்ள போக்கோ ரோடு ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சில மணிநேரங்களில் இருந்து தண்டனை காலம் முடியும் வரை அவர் சுமார் 2 000 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவர் சிறை தண்டனை அனுபவித்த காலத்தில் பல சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதை …

  16. ஆஸ்திரேலிய துணை பிரதமர் ராஜினாமா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionராஜினாமா செய்த பார்னபி ஜாய்ஸ் முன்னாள் ஊழியருடன் தொடர்பு வைத்திருந்த விவகாரத்தில், அரசியல் நெருக்கடிக்கு ஆளான பார்னபி ஜாய்ஸ், ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் …

  17. ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் நடந்த பொதுத் தேர்தலில் பெருந்தோல்வியைச் சந்தித்த தொழிற்கட்சிக்கு புதிய தலைவர் ஒருவர் தெரிவாகியுள்ளார். கட்சியின் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் நடந்த வாக்குப் பதிவிலும் பில் ஷோர்ட்டன் வெற்றிபெற்றுள்ளார் முன்னாள் கல்வியமைச்சர் பில் ஷோர்ட்டன் தொழிற்கட்சியின் புதிய தலைவராகியுள்ளார். வழமையில் தொழிற்கட்சியின் செனட்டர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமே கட்சித் தலைமையை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவில் கலந்துகொள்வார்கள். ஆனால் முதற்தடவையாக, இம்முறை புதிய தலைவர் கட்சியின் அனைத்து உறுப்பினர்களாலும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தொழிற்கட்சியின் அரசியல்வாதிகள் மத்தியில் ஷோர்ட்டனுக்கே அதிக ஆதரவு இருந்துள்ளது. மற்றைய வேட்பாளரான அந்தனி அல்பனேஸுக்கு கட்…

  18. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வரும் 29-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டி, பிரச்சாரம் என இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். விக்டோரியா மாகாணத்தில் 1.10 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். இம்மாகாணத்தில் அதி வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சமூகமாக இந்திய சமூகம் உள்ளது. பஞ்சாபி வேகமாக பரவி வரும் மொழியாகவும், இந்துமதம் வேகமாக பரவும் மதமாகவும் உள்ளது. இந்திய வம்சவாளியினர் இங்கு அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றனர். தேர்தலில் புறநகர்ப்பகுதிகளில் ஏராளமான இந்தியர்கள் போட்டியிடுகின்றனர். லிபரல், லேபர், கிரீன்ஸ்,ஆஸ்திரேலின் கிறிஸ்டியன்ஸ் என பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் ஏராளமான இந்தியர்கள் போட்டியிடு…

    • 2 replies
    • 571 views
  19. ஆஸ்திரேலிய தேர்தலில் கால் பதித்த முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி ஆஸ்திரேலிய பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற மேலவையில் குடியேற்றங்களுகெதிரான ஒரே தேசம் என்ற கட்சி நான்கு இடங்களை வென்றுள்ளது. மால்கம் டர்ன்புல் பவுலின் ஹான்சன் என்பவர் தலைமைதாங்கும் இந்த கட்சி, இஸ்லாமியர்கள் ஆஸ்திரேலியாவில் அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என்றும், மசூதிகள் கட்டுவதை இடைநிறுத்தம் செய்யவேண்டும் என்றும் பிரசாரம் செய்து வருகிறது. அவர் ஆஸ்திரேலியா ''ஆசியர்களால் நிரப்பப்படுகிறது'' என்றார். ஆனால், பவுலின் ஹான்சன் வருகை, ஆஸ்திரேலிய அரசியலில் வரவேற்கத்தக்கதல்ல என்று பிரதமர் மால்கம் டர்ன்புல் விமர்சித்துள்ளார். http://www.bbc.com/t…

  20. ஆஸ்திரேலிய தேர்தலில் பிரதமர் ஜொன் ஹோவார்ட் தோல்வி ஆஸ்திரேலியர்கள் ஒரு புதிய அரசாங்கத்தையும் அதனை வழிநடத்த ஒரு புதிய தலைமுறையையும் தெரிவு செய்துள்ளார்கள். இன்று சனிக்கிழமை நடந்த பொதுத் தேர்தலில் எதிர்கட்சியாக இருந்துவந்த தொழிற்கட்சி பெருவாரி வித்தியாசத்தில் வெற்றிபெற்று பழமைவாத பிரதமர் ஜொன் ஹோவர்டிடமிருந்து 11 ஆண்டுகள் கழித்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. ஹொவர்டைக் காட்டிலும் 20 வயது குறைவான நாட்டின் புதிய தலைவர் கெவின் ருட், முன்பு ராஜீய அதிகாரியாக இருந்தவர். ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு புதிய தொடக்கமாக அமையும் என்று உறுதியளித்ததோடு, நாடு தனது சரித்திரத்தில் ஒரு புதிய பக்கத்தை எழுதப்போகிறது என்று வெற்றிபெற்ற பின்னர் முதன்முதலாக கருத்துவெளியிட்ட கெவின் ருட் …

    • 12 replies
    • 2.3k views
  21. ஆஸ்திரேலிய தேர்தல் முடிவுகளில் தொங்கு நாடாளுமன்றம் அமைய சாத்தியகூறு ஆஸ்திரேலியாவின் பொது தேர்தலில் 90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முடிவுகள் மிகவும் நெருக்கமாக இருப்பதால் தொங்கு நாடாளுமன்றம் அமைவதற்கான சாத்தியக்கூறு நிலவுகிறது. ஆஸ்திரேலியாவில் தொங்கு நாடாளுமன்றம் அமைய வாயப்பு பெரும்பான்மை பெற்று அரசு அமைக்கலாம் என்று நம்புவதாக பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்திருக்கிறார். கீழவையில் மட்டும் பிரதமரின் கன்சர்வேடிவ் கூட்டணி குறைந்தது 11 இருக்கைகளை இழந்திருக்கிறது. தொழிலாளர் கட்சியின் கொள்கைகளுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்தான் இத்தேர்தல் முடிவு என எதிர்க்கட்சி தலைவர் பில் ஷாட்டன் கூறியிருக்கிறார். …

  22. ஆஸ்திரேலியாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், விக்டோரியா மாகாணத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே போட்டியிடுகிறார். இது குறித்து விக்கிலீக்ஸ் ஆஸ்திரேலிய குடிமக்கள் கூட்டணி (டபிள்யூ.ஏ.சி.ஏ) கட்சி செய்தித் தொடர்பாளர் சாம் கேஸ்ட்ரோ கூறியது: விக்டோரியா மாகாண செனட் உறுப்பினர் பதவிக்கு ஜூலியன் அசாஞ்சே போட்டியிடுகிறார். 10 உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் குழு, இன்னும் ஒருவாரத்தில் அமைக்கப்படும். அசாஞ்சே தேர்தலில் வெற்றி பெற்று, அவர் அவைக்கு வர இயலாத நிலையில், அவருக்குப் பதில் வேறு நபரை கட்சி பரிந்துரை செய்யும் என்றார். அசாஞ்சேவின் தந்தை, ஜான் ஷிப்டன், புதிதாகத் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என அறிவிக்கப்பட்டு…

    • 0 replies
    • 417 views
  23. ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கலைப்பு, ஜூலை 2 தேர்தல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு எதிர்வரும் ஜுலை மாதம் இரண்டாம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில், பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான அறிவிப்பை பிரதமர் மால்கம் டர்ண்புல் வெளியிட்டார். எட்டுமாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்த அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். உட்கட்சி முரண்பாடு மற்றும் சதி காரணமாக, இவருக்கு முன்னர் பிரதமராக இருந்த டோனி அபாட் பதவி விலகும் நிலை ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவின் முக்கிய ஏற்றுமதியான இரும்பு மற்றும் நிலக்கரியில் ஏற்பட்ட விலைச்சரிவின் காரணமாக, நாட…

  24. ஆஸ்திரேலியாவின் பனிச்சறுக்குப் பகுதியில் காணாமல் போன கனடிய மனிதர் ஒருவரை கடந்த ஒருவாரமாக மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே கூடுதல் மீட்புப்படையினரை அனுப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே மாதம் 13 ஆம் தேதி காணாமல் கனடிய நபர் Prabhdeep Srawn என்பவர், Kosciuszko National Park அருகே தனது காரை நிறுத்திவிட்டு, பனிச்சறுக்கு பகுதிக்கு சென்றதாகவும், அதன்பின் அவர் திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. மோசமான வானிலை மற்றும் அதிகப்படியான பனிப்பொழிவு காரணத்தால் மீட்புப்படையினரின் தேடுதலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. காணாமல் போன Prabhdeep Srawn என்பவரின் குடும்பத்தினரும் நண்பர்களும் ஆஸ்திரேலியா விரைந்து சென்று, Prabhdeep Srawn அவர்களை தேடுவதற்க…

    • 0 replies
    • 324 views
  25. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான க்ளைவ் பால்மர், நாட்டின் பிரதமராகும் கனவோடு அரசியல் கட்சியொன்றைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். மூழ்கிய டைட்டானிக் கப்பலை போன்ற ஒரு கப்பலை மீண்டும் உருவாக்கவுள்ளதாக அறிவித்த க்ளைவ் பால்மர், சுரங்கத் தொழிற்துறையைச் சேர்ந்த பெரும் பணமுதலை. அவர் அண்மைக் கால செய்திகளில் பெருமளவில் பேசப்பட்டு வந்திருக்கிறார். எதிர்வரும் செப்டம்பரில் நடக்கவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் எல்லாத் தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 1945-இல் கலைக்கப்பட்ட ஐக்கிய ஆஸ்திரேலிய கட்சிக்கு மீள உயிர்க்கொடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டு மக்கள் இரண்டு பிரதான கட்சிகளுக்குமாக பிரிந்துவிட்டதால் இந்தக் கட்சி க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.