Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நாளை (30-11-2011) பிரித்தானியாவில் தலைமுறை கண்டிராத பெரும் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் படி சுமார் இரண்டு மில்லியன் பொதுத்துறை ஊழியர்கள் வேலையை பகிஸ்கரிப்பர். நாடு பூராவும் சுமார் 1000 ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் பிரித்தானிய அரசுகள்.... பொதுச் சேவைகளில் தொழில் குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக இறங்கி உள்ளன. தற்போது.. பொதுத்துறையினரின் ஓய்வூதியத்திலும் அவை கைவைக்க ஆரம்பித்துள்ளன. ஓய்வூதியம் பெற நீண்ட காலச் சேவையும் (ஓய்வூதிய எல்லை 67 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது.) சம்பளத்தில் கூடிய ஓய்வூதியக் கழிவுத் தொகையும் (ஓய்வூதிய வரி) செலுத்த அரசு கேட்டுக் கொண்ட…

  2. இந்தியாவை கலக்கும் மருத்துவ மாணவர் தேர்வு மோசடி! 36 பேர் பலி! மத்திய அரசு ஆட்டங்காணுமா? [ வியாழக்கிழமை, 23 யூலை 2015, 09:04.35 AM GMT ] வியாபாரம் என்ற மத்திய பிரதேச மாகாண மருத்துவ பரீட்சை மையத்தில் இடம்பெற்ற மாபெரும் பரீட்சை முறைக்கேட்டு ஊழலில் 2,000 பேர் கைது செய்யப்பட்டாலும் மருத்துவர்களின் தராதரம் பற்றிய கேள்வியை அது எழுப்பியுள்ளது. இப்போது இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ) மாற்றப்பட்டுள்ள இந்த விவகாரம் அந்த மாகாணத்தின் ஆளும் கட்சியான பா.ஐ.கட்சியையும், மோடியின் மத்திய அரசையும் சிக்கலில் மாட்டிவிட்டுள்ளது என இவ்வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா அவர்கள் குறிப்பிட்டார். http://www.tamilwin.com/show-RUmtyHRXSVnv0H.html#

    • 0 replies
    • 608 views
  3. அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு சீனா அதிரடி வரி அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கான வரியை ஜனாதிபதி டிரம்ப் பன்மடங்கு உயர்த்தினார். அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது. இதனால் உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு மத்தியில் வர்த்தக போர் உருவானது. அதன்பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசி இந்த வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளனர். http://www.virakesari.lk/article/55820

  4. கனடாவில் வறியவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக நினைத்ததை விடவும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வறுமையில் வாடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய உணவு வங்கிகளின் அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 25 வீதமான கனடியர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வறியவர்களின் எண்ணிக்கை 10 வீதம் என அறிக்கையிட்டிருந்தது. உண்மையில் வறியவர்களின் எண்ணிக்கை இதனை விட அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து, பாதணிகள், புரதச்சத்து, விசேட வைபவங்கள், பரிசு பொருட்கள், ஆடைகள், பற்சுகாதாரம், எதிர்பாராத செலவுகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் மக்களின் வறுமை நிலைமை குறித்து கவனம் …

  5. மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் – ஏமன் துறைமுகத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்! ஏமன் துறைமுகத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்குப் பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஹவுதிகள் கட்டுப்பாட்டிலுள்ள ஏமன் துறைமுகமான ஹொடெய்டாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீடித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் சமீபத்தில் ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனல். இதற்கு பதிலடி கொடுக்க…

  6. வெள்ளிக் கொலுசுக்கு ஆசைப்பட்டு, பாழும் கிணற்றில் வீசப்பட்ட குழந்தை, நடுங்கும் குளிரில் 30 மணி நேரம் போராடி உயிர் பிழைத்த அதிசய சம்பவம் டில்லி அருகே நடந்தது. டில்லியை அடுத்த அலிபூர் அருகே டீகரீகுர்த் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி சஞ்சனா. இவள், தன் அம்மாவில் கால் கொலுசுடன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த வழியாக சென்ற இரண்டு பேர், கொலுசைத் திருட, குழந்தையை அழைத்துச் சென்றனர். கொலுசுகளைப் பிடுங்கிக் கொண்டு, குழந்தையை அருகில் உள்ள கிணற்றில் வீசித் தப்பினர். பெற்றோர் பல இடங்களிலும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இது குறித்து அலிபூர் போலீசில் புகார் கொடுத்தனர்.இதற்கிடையே குழந்தையின் அழுகைக்குரல் கேட்டு அந்தப் பகுதி கிராம மக்கள், கிணற்றில்…

    • 0 replies
    • 1.1k views
  7. மாஸ்கோ, ரஷியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 21 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தெற்கு ரஷியாவில் உள்ள மனநல மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 19 பேரது சடலங்கள் காணப்பட்டு உள்ளது. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த இருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மருத்துவமனையில் மரப் பலகையினால் உருவாக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. http://www.dailythanthi.com/News/World/2015/12/13112908/Fire-at-Russian-hospital-kills-21.vpf

  8. 48 மணி நேரத்தில் 23 குர்து இன போராளிகள் கொன்று குவிப்பு: துருக்கியில் ராணுவம் அதிரடி Ca.Thamil Cathamil December 17, 2015 Canada துருக்கியில் குர்து இன போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு தென் கிழக்கு துருக்கியில் சிலோப்பி, சிஜ்ரே பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிற குர்து இன போராளிகளுக்கு எதிராக கடந்த 48 மணி நேரத்தில் துருக்கி பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல்கள் தொடுத்தனர். இந்த தாக்குதல்களில் 23 குர்து இன போராளிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை துருக்கி அரசு செய்தி நிறுவனம் ‘ஆனடோலு’ வெளியிட்டுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/54265.html#sthash.A9IfWTCX.dpuf

  9. பிகேகே எனும் குர்திஸ் மக்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கேட்டு ஆயுத வழியில் போராடும் அமைப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட நடவடிக்கைகள் (குறிப்பாக அவற்றின் சொத்துக்களை முடக்கி உறையவைத்தமை + பயங்கரவாதப்பட்டியலில் இட்டமை) சரியானதல்ல என்று ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் Basque separatists, Eta, Tamil Tigers மற்றும் Hamas போன்ற போராளி அமைப்புக்களும் குறித்த செயற்பாட்டுக்கு எதிராக தடை நீக்கம் கோரக் கூடிய சாத்தியம் உள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. EU court annuls PKK terror ruling A ruling to blacklist Kurdish rebel group the PKK as a terrorist organisation and freeze its assets has been overturned b…

  10. யார்மூக்கிலிருந்து சிரிய கிளர்ச்சியாளர்களை வெளியேற்றும் பணி நிறுத்தம் யார்மூக் முகாமில் உள்ள கிளர்ச்சிக்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் தெற்கில் உள்ள யார்மூக் அகதிகள் முகாமிலிருக்கும், சிரிய அரச எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வெளியேற்றும் நடவடிக்கை தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஐஎஸ் அமைப்பைச்சேர்ந்த சிலரும், அல் நுஸ்ரா முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலரும், அவர்களது குழுக்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு அனுப்பப்படுவதற்கான பேருந்துகள் ஏற்கனவே முகாமுக்கு வந்துசேர்ந்துவிட்டன. அந்த முகாமில் சிக்கியுள்ள பொதுமக்களுக்குத் தேவையான அவசர உதவிப் பொருட்களை ஐநா வழ…

  11. தென் கொரிய விமான விபத்து; விமானத்தின் என்ஜின்களில் பறவை இறகுகள்! கடந்த டிசம்பர் மாதம் தென் கொரியாவில் விபத்துக்குள்ளாகி 179 நபர்களின் மரணத்துக்கு வழி வகுத்த பயணிகள் விமானம் மீது பறவை மோதியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜெஜு ஏர் விமானத்தின் இரண்டு என்ஜின்களிலும் வாத்து வகையைச் சேர்ந்த பறவைகளின் இறகுகள் மற்றும் இரத்தக் கறைகள் காணப்பட்டிருந்தாக திங்களன்று (27) வெளியிடப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையானது இப்போது விபத்துக்குள்ளான விமானத்தின் பறவை தாக்குதலின் பங்கு மற்றும் விமானம் ஓடுபதையின் முடிவில் அமைக்கப்பட்டிருந்த கொன்கிரீட் சுவர் என்பவற்றின் முக்கிய பங்கினை எடுத்துக் காட்டுகிறது. ஜெஜு ஏர…

  12. துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு: 10 பேர் பலி; 15 பேர் காயம் இஸ்தான்புல் குண்டுவெடிப்புப் பகுதியில் மீட்புப் படையினர். | படம்: ராய்ட்டர்ஸ். இஸ்தான்புல்லில் குண்டு வெடிப்புப் பகுதியில் மீட்புப் படையினர். | படம்: ராய்ட்டர்ஸ் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது. மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்தான்புல் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த இந்த கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுல்தனாமெட் சதுக்கத்தில…

  13. அமெரிக்காவில் பெரும் பனிப்புயல்: 8 பேர் பலி அமெரிக்காவில் கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் மிகப் பெரியது என்று கருதப்படும் பனிப்புயல் ஒன்று அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியைத் தாக்கியதில், பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு மாபெரும் பனி புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை தாக்கியதில், பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் வாஷிங்டன் டி சியில் முதல் சில மணி நேரங்களிலேயே இருபது செண்டிமீட்டர் அளவுக்கு பனி பெய்துள்ளது. மக்களை வீடுகளிலேயே இருக்குமாறு அதிகாரிகள் கோரியதை அடுத்து, அங்கு தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. மிகக் கடுமையான இந்தப் பனிப் புயல் சார்ந்த வ…

  14. பிரித்தானியாவில் வாழும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் ஆங்கிலம் பேசத் திணறுவதாக ஆய்வறிக்கையொன்றில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வெளியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 16 வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் எனவும், 51.6 சதவீதமானோர் ஆங்கிலம் தங்கள் முக்கிய மொழியாகக் கருதுவதாகவும், 38.4 சதவீதமானோர் தங்களால் நன்றாகப் பேச முடியும் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை 8 சதவீதமான 7,94,332 மக்கள் தங்களால் நன்றாக ஆங்கிலம் பேச முடியாது எனத் தெரிவித்துள்ளதோடு, அதில் 1.4 சதவீதமானோர் அதாவது 1,37,876 பேர் ஆங்கில அறிவு அற்றவர்களாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த விட…

      • Haha
      • Thanks
      • Like
    • 9 replies
    • 775 views
  15. Published By: RAJEEBAN 14 MAR, 2025 | 01:56 PM காசா மருத்துவமனையின் மகப்பேறு வோட்கள் ஐவிஎவ் சிகிச்சை நிலையங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் ஒரு இனப்படுகொலை செயல் என ஐநா தெரிவித்துள்ளது. காசாவின் பெண்களிற்கு மருத்துவசதிகளை வழங்கும் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் திட்டமிட்டு மேற்கொண்ட தாக்குதலை இனப்படுகொலை நடவடிக்கைகளிற்கு சமனானது என தெரிவித்துள்ள ஐநா பாலஸ்தீன பிரதேசங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அவற்றை அழிப்பதற்கும் இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறையை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் சுயாதீன ஆணைக்குழு மேற்கொண்ட 49 பக்க அறிக்கை ஐநாவிடம் கையளிக்கப்…

  16. ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிறு­வ­னுக்கு தலையை துண்­டித்து மர­ண­தண்­டனை ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், மேற்­கத்­தேய இசையை செவி­ம­டுத்துக் கொண்­டி­ருந்த வேளை தம்மால் பிடிக்­கப்­பட்ட 15 வயது சிறுவன் ஒரு­வ­னுக்கு தலையைத் துண்­டித்து மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்­றி­யுள்­ளனர். அயிதாம் ஹுஸைன் என்ற மேற்­படி சிறுவன் ஈராக்­கிய மொசூல் நகரில் நபி யூனிஸ் சந்­தையில் அமைந்­தி­ருந்த தனது தந்­தையின் பல­ச­ரக்குக் கடையில் காவிச்­செல்லக் கூடிய இறு­வட்டு உப­க­ர­ணத் தில் மேற்­கத்­தேய துள்­ளிசைப் பாடலை செவி­ம­டுத்துக் கொண்­ டி­ருந்த வேளை தீவி­ர­வா­தி­க ளால் பிடிக்­கப்­பட்­டான். இத­னை­ய­டுத்து தீவி­ர­வா­தி­களின் நீதி­மன்­றத்­துக்கு இழுத் துச் செல்­லப்­பட்ட அந்த சிறு­வ­னுக்கு பொது இ…

  17. கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவரும் ட்ரம்ப்! கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த நாட்டிற்கான புதிய கட்டண விகிதத்தை விரைவில் அறிவிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்தார். ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய கனடாவுக்கு வர்த்தக பேச்சு விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.கனடவை அமெரிக்காவின் மற்றொரு மாகாணம் என்று கூறி அந்நாட்டை ட்ரம்ப் சீண்டியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்க தொழிநுட்ப நிறுவனங்கள் மீது கூடுதல் வரியை கனடா விதித்தது. இதனால் கடும் கோபமடைந்த ட்ரம்ப், கனடாவின் செயல் அப்பட்டமான விதி மீறல் என்றும் அந்த நாட்…

  18. இன்றைய நிகழ்ச்சியில்… கத்தாரின் கால்பந்து உலக்கோப்பை விளையாட்டரங்கங்களைக் கட்டும் பணியாளர்கள் சுரண்டப்படுவதாக அம்னெஸ்டி குற்றச்சாட்டு; பிஃபா அமைப்பு நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை. கிழக்கு ஐரோப்பாவுக்கு ஆயிரக்கணக்கான படைகளை அனுப்பும் அமெரிக்காவுக்கு ரஷ்யா தெரிவிக்கும் எதிர்ப்பால் மோதல் முற்றுகிறது. குழந்தை சேஷ்டைகள் தெரியும்; கொரில்லாக்குட்டியின் சேஷ்டைகள் தெரியுமா? இங்கிலாந்தில் மனித அம்மாவிடம் வளரும் கொரில்லாக் குட்டியின் கதை ஆகியவற்றைக் காணலாம்.

  19. காவிரி ஆணைய கூட்டம்: இவ்வளவு மெத்தனமாகவா செயல்படுவது - பிரதமருக்கு சுப்ரீம் கோர்ட் சாட்டையடி திங்கள்கிழமை, செப்டம்பர் 3, 2012, 18:40 [iST] Posted by: Mathi [size=3]டெல்லி: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டாத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.[/size] [size=3]காவிரி நதி நீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.[/size] [size=3]உச்ச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், எம்.பி. லோகுர் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது முதலில், மத்திய அரசு வழக்கறிஞரைப் பார்த்து காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்துக்கான தேதி குறிக்க…

  20. இரட்டை கோபுர தாக்குதலில் பலியானவர்களை விட அதிகமானவர்களை கொல்லுவோம் என அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. மேலும் அண்டை நாடான தென் கொரியாவுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் எப்போது வேண்டுமானால் போர் ஏற்படலாம் என உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. இதற்கிடையே தென் கொரியாவுக்கு ஆதரவாகவும் தமக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம் என வட கொரியா எச்சரித்திருந்தது. தற்போது அமெரிக்காவுக்கு எதிராக மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் அரசாங்க ஊடகமா…

  21. இனி பாலஸ்தீன நாடு கிடையாது : அந்த நிலம் எங்களுடையது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு 12 Sep, 2025 | 11:05 AM மேற்குக் கரையில் சர்ச்சைக்குரிய குடியேற்றத் திட்டமான “E1” விரிவாக்கத்திற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். "இந்த இடம் எங்களுக்கு மட்டுமே சொந்தமானது" என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேற்கு கரையில் உள்ள மாலே அடுமிம் குடியேற்றப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய நெதன்யாகு, "நமது வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன. இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இருக்காது. இந்த நிலம் எங்களுடையது மட்டுமே. இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும். நமது க…

  22. கொரோனா வைரஸ் முதன் முதலில் வெளிப்பட்ட உகான் நகரம் குறைந்த அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு: ஏப்ரல் 06, 2020 06:44 AM பீஜிங், சீனாவில் ஹுபெய் மாகாணம் உகான் நகரில்தான், உலகில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. அங்கு தற்போது வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா வைரஸ் தாக்காத பகுதிகள், குறைந்த அபாயம் கொண்ட பகுதிகளாகவும், 50 பேருக்கு குறைவாக தாக்கிய பகுதிகள் ‘நடுத்தர அபாய பகுதி’களாகவும், 50 பேருக்கு மேல் தாக்கிய பகுதிகள், ‘அதிக அபாய பகுதி’களாகவும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. உகான் நகரில் மொத்தம் உள்ள 13 நிர்வாக பகுதிகளில், 9 பகுதிகள் ‘குறைந்த அபாயம் கொண்ட பகுதி’களாக நேற்று அற…

  23. தென்கொரியாவில் குணமடைந்த கொரோனா வைரஸ் நோயாளிகள் பலர் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயிலிருந்து மீண்டுள்ளனர் என கருதப்படும் 91 நோயாளிகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தென்கொரியாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையைம் தெரிவித்துள்ளது. குணமடைந்தவர்களிற்கு மீண்டும் நோய் எப்படி தொற்றியது என்பதை உறுதி செய்யமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீண்டும் தொற்றிற்குள்ளாகவில்லை மாறாக நோயாளிகளிடம் மீண்டும் மீள் உற்பத்தியாகியுள்ளது என செய்தியாளர் மாநாட்டில் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தவறானசோதனைகளும் இதற்கு காரணமாகயிருக்கலாம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் இந்த நோய்க்கான நோய் எதி…

    • 0 replies
    • 295 views
  24. கொரோனா வைரஸ் தொற்று: சீனாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் - இந்திய வம்சாவளி பெண் தலைவர் தொடங்கினார் னாவில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. ஆனால் இது தொடர்பாக எச்சரித்தவர்களை சீன கம்யூனிஸ்டு அரசு கைது செய்தது, உண்மை தகவல்களை வெளியிடாமல் மறைத்தது, மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியதுதான் கொரோனா வைரஸ் தொற்று என்பதை தொடக்கத்தில் மறைத்து விட்டது என்று சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அது மட்டுமல்ல, இந்த வைரஸ், உகான் பரிசோதனைக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கிய ஒன்றுதான் என்பது சீனா மீதான அமெரிக்காவின் சமீபத்திய பரபரப்பு குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில், அங்க…

    • 2 replies
    • 484 views
  25. [size=3][size=4]டிக்ஸ்வில்லே நாட்ச் (நியூஹாம்ப்ஷையர்): அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதல் வாக்குப் பதிவு இரு கிராமங்களில் தொடங்கியது. வாக்குப்பதிவு முடிந்ததுமே அவை எண்ணப்பட்டன.[/size][/size] [size=3][size=4]இதில் முதல் கிராமத்தில் ஒபாமாவுக்கு 5 வாக்குகளும், ராம்னிக்கு 5 வாக்குகளும் கிடைத்தன.[/size][/size] [size=3][size=4]இன்னொரு கிராமத்தில் ஒபாமாவுக்கு 23 வாக்குகளும், ராம்னிக்கு 9 வாக்குகளும், லிபர்ட்டி கட்சி வேட்பாளருக்கு ஒரு வாக்கும் கிடைத்தன.[/size][/size] [size=3][size=4]முதல் வாக்குப் பதிவு நடந்த கிராமம் டிக்ஸ்பில்லே நாட்ச். வடக்கு நியூ ஹாம்ப்ஷையரில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக, இங்குதான் முதல் வாக்குப் பதிவு தொடங்குகிறது. வாக்குப் பதிவு முடிந்த சில நிமிடங்களில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.