Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவில் சிற்பக் கலைஞர் ஒருவரின் புதிய சாதனை Ilango BharathyDecember 23, 2020 அமெரிக்காவில் சிற்பக் கலைஞர் ஒருவரின் புதிய சாதனை2020-12-23T13:22:28+05:30உலகம் FacebookTwitterMore அமெரிக்காவில் Dave Rothstein என்ற சிற்பக் கலைஞரொருவர் 2 தொன் பனியை பயன்படுத்தி 8அடி உயர பனிச் சிற்பத்தை உருவாக்கி சாதனை சாதனையடைத்துள்ளார். இவர் அறுகோண வடிவத்தில் இதனை உருவாக்கி உள்ளார். தனது வீட்டின் முற்றத்தில் உருவாக்கியுள்ள இந்த பனி சிற்பத்தில் இயற்கை அன்னை தொடர்பான வாசகங்களை பதிவிட்டுள்ளார். குளிர்கால கலைகளை மக்களுக்கு தெரியப்படுத்தவே இந்த மாதிரி பனி சிற்பங்களை உருவாக்குவதாக அவர் தெ…

  2. பாக்கிஸ்தானை சேர்ந்த பெண் மனித உரிமை செயற்பாட்டாளர் கனடாவில் சடலமாக மீட்பு Rajeevan ArasaratnamDecember 23, 2020 பாக்கிஸ்தானை சேர்ந்த பெண் மனித உரிமை செயற்பாட்டாளர் கனடாவில் சடலமாக மீட்பு2020-12-22T23:04:53+05:30உலகம் FacebookTwitterMore பாக்கிஸ்தானை சேர்ந்த பெண் மனிதஉரிமை செயற்பாட்டாளர் ஒருவர் கனடாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கரிமா பலோச் என்ற 37வயது பெண் மனித உரிமை செயற்பாட்டாளரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாக்கிஸ்தான் அரசாங்கத்தையும் இராணுவத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்த கரிமா பலோச் ஞாயிற்றுக்கிழமை காணாமல்போயிருந்த நிலையில் கனடா பொலிஸார் அவர் குறித்த விபரம் தெரிந்தவர்கள் தங்களை தொடர்புகொள்ள…

  3. புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே கனடாவிலும் அமெரிக்காவிலும் இருக்கலாம் என அச்சம்! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/image-4.jpg பிரித்தானியாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே கனடாவிலும் அமெரிக்காவிலும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் டொக்டர் அந்தோனி ஃபாசி இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, கனடா உட்பட, இதுவரை கண்டறியப்படாத பிற நாடுகளில் இது ஏற்கனவே குறைந்த மட்டத்தில் இருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய வைரஸ் பிரித்தானியாவில் இதற்கு முன்னர் பரவியதை விட 70 சதவீதம் வரை வேகமாக பரவக்கூடியது என்றே கூறப்பட…

  4. ஜெர்மனியை தொடர்ந்து பிரான்சிலும் மீண்டும் ஊரடங்கு அமல் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 214 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 4 கோடியே 45 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவந்தது. இதையடுத்து, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், …

  5. பிரிட்டனில் பரவும் புது வைரஸ் தொற்று பிரான்ஸில் இல்லை – தீவிர ஆய்வுகள் நடப்பதாக அரசு தகவல் பிரிட்டனில் பரவும் புது வைரஸ் தொற்று பிரான்ஸில் இல்லை – தீவிர ஆய்வுகள் நடப்பதாக அரசு தகவல் கார்த்திகேசு குமாரதாஸன் மாற்றமடைந்த கொரோனா வைரஸ் (New strain of coronavirus) பிரான்ஸில் இன்னமும் கண்டறியப்படவில்லை என்பதை அரசாங்கப் பேச்சாளர் கப்றியல் அட்டால் (Gabriel Attal) இன்று உறுதிப்படுத்தி உள்ளார். பிரிட்டனில் வேகமாகப் பரவியுள்ள மாற்றமடைந்த வைரஸ் நாட்டினுள் தொற்றியுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்திருக்கிறார…

    • 2 replies
    • 447 views
  6. பிரித்தானியாவில் பரவிவரும் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ், இத்தாலிக்கும் பரவியது..! Ilango BharathyDecember 22, 2020 பிரித்தானியாவில் பரவிவரும் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ், இத்தாலிக்கும் பரவியது..!2020-12-22T07:44:52+05:30உலகம் FacebookTwitterMore கட்டுப்படுத்த முடியாத நிலையிலுள்ளது என பிரித்தானியா வர்ணித்துள்ள வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தொற்று, இத்தாலிக்கும் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ் வார ஆரம்பத்தில் பிரித்தானியாவிலிருந்து ரோம் நகரிலுள்ள பியூமிசினோ(Fiumicino) விமான நிலையத்திற்கு திரும்பிய 2 பேரில் ஒரு நபருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக இத்தாலி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. …

  7. பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் புதிய வகை கொரோனாவையும் கட்டுப்படுத்தும் – ஜேர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/corona-Medicine.jpg பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் புதிய வகை கொரோனா வைரஸையும் கட்டுப்படுத்தும் என ஜேர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரஸைவிட மிகவும் வேகமாக பரவுகின்றமை ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள…

  8. அண்டை நாடுகள் மூலம் அச்சுறுத்தல்: இராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கும் ஜப்பான்! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/maxresdefault-1-720x450.jpg அண்டை நாடுகள் மூலம் அச்சுறுத்தல் எழுந்துள்ளதையடுத்து அதனை எதிர்கொள்ள இராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து ஜப்பானின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. இதனை எதிர்கொள்ள வேண்டுமெனில் இராணுவத்தை பலப்படுத்த வேண்டியது அவசியத் தேவையாகி உள்ளது. நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை மேம்படுத்தவும், போர் விமானங்களை வாங்கவும…

  9. ஜோ பைடன்: டி.வி நேரலையில் வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டது ஏன்? பட மூலாதாரம், GETTY IMAGES அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியிருக்கும் ஜோ பைடன், ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். இந்த காட்சி, தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது. இவருடன் சேர்த்து அமெரிக்க அரசியல் பிரபலங்களான சபாநாயகர் நான்சி பெலோசி, துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோரும் தடுப்பூசி மருந்தின் முதல் டோஸை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்த வாரம் இரண்டாவது வைரஸ் தடுப்பு மருந்தான மாடர்னாவுக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியது. அந்நாட்டில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. …

  10. ரொறன்ரோவின் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நேரத்தில் இடையூறு விளைக்க காத்திருக்கும் புயல்! ரொறன்ரோவின் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நேரத்தில் டிசம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இருந்து இப்பகுதியைச் சூறையாட ஒரு புயல் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிறிஸ்மஸ் நாளன்று நெருங்கி வரும் குளிர் முன் வருவதற்கு முன்பு டிசம்பர் 23ஆம் திகதி ஒரு லேசான மழை பெய்யும். ரொறன்ரோ முன்னறிவிப்பின்படி, டிசம்பர் 25ஆம் திகதிக்குள் வெப்பநிலை -11 சி வரை குளிராக இருக்கும். உறைபனி புயலைக் கொண்டுவரும், அதாவது கிறிஸ்மஸுக்கு சற்று முன் பனியைப் பார்ப்போம். இருப்பினும், தெற்கு ஒன்றாரியோ இந்த ஆண்டு ஒரு அழகிய கிறிஸ்மஸை அனுபவிக்…

  11. சிறப்பம்சங்கள்: தடுப்பூசி தொடர்பாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மதத் தலைவர்களிடையே விவாதம் தடுப்பூசிகளின் சேமிப்பு மற்றும் போக்குவரத்தின் போது அவற்றின் பாதுகாப்பையும் செயல்திறனையும் பராமரிக்க பன்றி இறைச்சியிலிருந்து (பன்றி இறைச்சி) தயாரிக்கப்படும் ஜெலட்டின் பெரிய அளவிலான பயன்பாடு ஃபைசர், மாடர்ன் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவின் செய்தித் தொடர்பாளர்கள் பன்றி இறைச்சியிலிருந்து தயாரிக்கப்பட்ட தயாரிப்புகள் எதுவும் இல்லை என்றார் ஜகார்த்தா ஒருபுறம், பல நிறுவனங்கள் கோவிட் -19 தடுப்பூசி தயாரிப்பதில் மும்முரமாக உள்ளன மற்றும் பல நாடுகள் தடுப்பூசி மருந்துகளைப் பெற தயாராகி வருகின்றன. மறுபுறம், சில மத குழுக்கள் தடைசெய்யப்பட்ட பன்றி இறைச்சியிலிருந்து தயாரிக்…

    • 3 replies
    • 640 views
  12. தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவுச் சந்தையுடன் தொடர்புடைய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால், தற்போது ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சமூத் சகோன் என்ற மாகாணத்தையே முழுமையாத தாய்லாந்து அரசு மூட நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த மாகாணத்தில்தான் தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவுப் பொருட்கள் சந்தையான மகாசாய் சந்தை இருக்கிறது. இந்த மாகாணம், தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்குக்கு அருகே அமைந்துள்ளது. இந்த கடல்சார் உணவுச் சந்தையில் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்கள் (குறிப்பாக மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள்) வேலை பார்த்து வருகிறார்கள். அங்கு தொழிலாளர்களை வீட்டிலேயே இருக்குமாறு அரசு உத்தரவிட…

  13. போட்டி போட்டு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் வளர்ச்சியடைந்த நாடுகள் BharatiDecember 21, 2020 போட்டி போட்டு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் வளர்ச்சியடைந்த நாடுகள்2020-12-21T08:32:16+05:30கட்டுரை FacebookTwitterMore போட்டி போட்டுக்கொண்டு கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசிகளை தாமே முதலில் பயன்படுத்துகின்றனர். அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளோ தமக்கு எப்போது ஒன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்ற நிலையிலேயே உள்ளன. ஆனாலும் இந்தியா, இந்தோனேஷியா, வியட்னாம் போன்ற நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்கும் முயற்சியில் மும…

  14. `இந்தியாவுடனான மோதல் போக்கு... அதிகரித்த அதிகாரப் போட்டி!’ - கலைக்கப்பட்டது நேபாள நாடாளுமன்றம் ஹரீஷ் ம நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி பிரதமர் ஒலியின் இந்தச் செயலை ஆளும் என்.சி.பி கட்சியின் நிர்வாகக்குழு வன்மையாகக் கண்டித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் ஒலிக்கும், என்.சி.பி கட்சியின் நிர்வாகக்குழுத் தலைவர் பிரசந்தாவுக்கும், இடையே நேரடியாக மோதல் வெடித்தது. முன்னாள் நேபாள் பிரதமர் புஷ்பா கமல் தஹால் பிரசந்தா உடனான அதிகார மோதல் காரணமாக, நேபாளத்தின் தற்போதைய பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி நாடாளுமன்றத்தைக் கலைக்கப் பரிந்துரைத்தார். `நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, அரசியலமைப்புக்கு முரணானது’ என்று சட்ட வல்லுநர்களும், அரசியல் தலைவர்களும்…

  15. அமெரிக்க அரசாங்கம் மீதான சைபர் தாக்குதலுக்கு காரணம் ரஷ்யா அல்ல சீனா – ட்ரம்ப் அமெரிக்க அரசாங்கம் மீதான சைபர் தாக்குதலுக்கு காரணம் ரஷ்யா அல்ல சீனாவே என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க அரசின் முக்கிய துறைகளையும் பல தனியார் நிறுவனங்களையும் குறிவைத்து பல மாதங்களாக சைபர் தாக்குதல் நடந்து வந்ததை அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனர். இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளும் தனியார் நிறுவனங்களும் சந்தேகம் தெரிவித்தன. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோவும் அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் என கூறியுள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் …

  16. ஈரான் பூமிக்கு அடியில் அணு உலையை அமைப்பதாக தகவல்! ஈரான் பூமிக்கு அடியில் மேலும் ஒரு அணு உலையை அமைப்பதாக செயற்கை கோள் படங்கள் காட்டியுள்ளன. குவாம் மாகாணத்தின் போர்டோ நகரில் அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை காட்டும் செயற்கைகோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. எனினும் போர்டோ நகரில் அணு உலை கட்டப்படுவதை ஈரான் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை. அதேபோல் ஈரானின் அணு திட்டங்களை கண்காணித்து வரும் ஐ.நா. கண்காணிப்பாளர்களும் இதுகுறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. முன்னதாக இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளதாக ஐ.நா. கண்காணிப்பாளர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் தெரிவித்திரு…

  17. பிரிட்டனில் மில்லியன் கணக்கான மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இங்கிலாந்தில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் மீது கடுமையான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான போராட்டங்களை பிரிட்டன் முன்னெடுத்து வரும் நிலையில், கிறிஸ்மஸ் மீதான கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்களையும் பெருமளவில் மாற்றியமைத்துள்ளார். இது தொடர்பில் சனிக்கிழமையன்று ஒரு செய்தியாளர் மாநாட்டில் பேசிய அவர், நாங்கள் திட்டமிட்டபடி கிறிஸ்மஸைத் தொடர முடியாது என்று நான் உங்களுக்கு கூற வேண்டும் என்று தெரிவித்ததுடன், அதற்கான மாற்றுவழிகள் என்னிடம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். புதிய கட்டுப்பாடுகளின் க…

  18. ஒப்பந்தம் எட்டப்படாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற தயாராக இல்லை பிரெக்ஸிற் நாளுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ஒப்பந்தம் எட்டப்படாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற தயாராக இல்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. அத்தோடு வீழ்ச்சியைச் சமாளிக்க அடுத்த 15 நாட்களில் ஒரு வலுவான செயல் திட்டம் இருப்பதை உறுதி செய்யுமாறு பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த தெரிவுக்குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. எல்லை, மீன்பிடி, புதிய வர்த்தகம் மற்றும் பயணத் தடைகள் பற்றிய பல விவரங்கள், ஐரோப்பிய பிடியாணை உத்தரவு உள்ளிட்ட சட்ட அமுலாக்க உடன்பாடுகளில் தொடர்ந்தும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒப்பந்த மாற்றம் காலம் முடிய இன்னும்…

  19. டிசம்பர் 16 முதல் ஜனவரி 10 வரை பெரும்பாலான கடைகளை மூடிவைப்பதற்கு ஜேர்மன் திட்டம் ! கட்டுப்பாடுகளை கடுமையாக்கி, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, ஜேர்மனி அரசாங்கம் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஜனவரி 10 வரை பெரும்பாலான கடைகளை மூட திட்டமிட்டுள்ளது. அதிபர் அங்கலா மேர்க்கலுக்கும் மாநிலத் தலைவர்களுக்கும் இடையிலான கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் முன்னர் நாடளாவிய ரீதியிலான கட்டுப்பாடுகளுக்கு ஆதரவளிக்காத ஜேர்மனியின் மாநிலங்களும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவை தெரிவித்துள்ளன. அதன்படி பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் மற்றும் வங்கிகள் மட்டுமே திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கப்பட்ட…

    • 33 replies
    • 3.2k views
  20. தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்க துணை ஜனாதிபதி அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றம் அவரது மனைவி கரீன் பென்ஸ் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவுள்ளார் என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக பாதிப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. அந்நாட்டில் இதுவரை 1 கோடியே 80 இலட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, அனைத்து மாகாணங்களுக்கும் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு கடந்த 14-ம் த…

  21. நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் – பிபின் ராவத் எச்சரிக்கை! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-1-720x450.jpg நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என இந்திய பாதுகாப்பு தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ இந்தியாவிற்கும் நேபாளத்துக்கும் இடையிலான ‘தனித்துவமான ஆழமான மற்றும் விரிவான’ உறவுகள் பல நூற்றாண்டுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளன. சர்வதேச வி…

  22. ரஷ்ய ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு விவகாரம்: துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/b3a54ecc0915f9347c3f53fa31d161fe_XL-1-720x450.jpg அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், நேட்டோ நட்பு நாடான துருக்கிக்கு ரஷ்ய வான் பாதுகாப்பு முறையை வாங்குவது தொடர்பாக பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் பதவியேற்கத் தயாராகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையில் மேலும் மோதலுக்கு களம் அமைத்துள்ளது. துருக்கியின் இராணுவ ஆயுத கொள்முதல் நிறுவனத்தின் நான்கு மூத்த துருக்கிய அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச பாதுகாப்பு மற்றும் கட…

  23. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டம் – அறிவிப்பு வெளியானது! ஐரோப்பிய நாடுகளில் எதிர்வரும் டிசம்பர் 27ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த ருவிற்றர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ள அவர், டிசம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் தடுப்பூசி தொடங்கும் எனவும் மக்கள் பாதுகாப்பை முழுமையாகத் தொடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் டிசம்பர் 27ஆம் திகதி தடுப்பூசி பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் அறிவித்தருந்தார். அத்துடன், ஆஸ்திரியா மற்றும் இத்தாலி ஆகிய நா…

  24. கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து, ஆய்வு செய்ய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு! கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து ஆய்வுசெய்ய சர்வதேச நிபுணர் குழு அடுத்த மாதம் சீனா செல்லவிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனா தீநுண்மி எந்த உயிரினத்தில் தோன்றி, அது மனிதர்களுக்குப் பரவத் தொடங்கியது என்பது குறித்த ஆய்வுகளை சர்வதேச நிபுணர் குழு சீனாவில் மேற்கொள்ளவிருக்கிறது. சீனாவின் ஹூபேய் மாகாணம்- வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று, உலகம் முழுவதும் 190க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் பரவியுள்ளது. முன்னதாக உண்மைகளைக் கண்டறிய 10 நிபுணர்கள் அடங்கிய குழுவை உலக சுகாதார அமைப்பு கடந்த ஜூல…

  25. கொதித்தெழும்பும் மவுண்ட் எட்னா எரிமலை: அருகிலுள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரிக்கை! இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை கடும் சீற்றத்துடன் காணப்படுவதால், அருகிலுள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஐரோப்பாவின் மிக உயர்ந்த எரிமலை மவுண்ட் எட்னா, கடந்த சில வாரங்களாக உயிர்ப்புடன் இருந்த இந்த எரிமலை நேற்று (திங்கட்கிழமை) அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. எரிமலை சாம்பல் மேகங்கள், விமான பயணங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அருகிலுள்ள கட்டானியா விமான நிலையம் திங்களன்று இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. விசிறியடிக்கப்பட்ட சாம்பல் பல நூறு அடி உயரத்திற்கு எழும்பின. தொடர்ந்து நெருப்புக் குழம்பையும் எட்னா எரிம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.