உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நேரம் கிட்டியுள்ளது: தொழிற்கட்சி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான உரிய நேரம் கிட்டியுள்ளதாக பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பிரதமர் தெரேசா மே-யின் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மகத்தான பெரும்பான்மை வாக்குகளுடன் அரசாங்கம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பிரதமர் மே-யின் ஒப்பந்தம், முன்மொழிவுகள் என்பவற்றுக்கு நாடாளுமன்றத்தின் ஆதரவில்லை என்பதை தற…
-
- 0 replies
- 351 views
-
-
தெரசா மேயின் தீர்மானம் 2-வது முறையாகவும் தோல்வி March 13, 2019 ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிற் நடவடிக்கை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரசா மே கொண்டு வந்த ஒப்பந்தத்துடன் வெளியேறும் தீர்மானம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் 2-வது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது. பிரெக்ஸிற் நடவடிக்கை தொடர்பில் தெரசா மே ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை பிரித்தானிய பாராளுமன்றம் நிராகரித்துள்ளதுடன் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தினர். எனினும் ஐரோப்பிய ஒன்றியம் புதிய ஒப்பந்தத…
-
- 0 replies
- 587 views
-
-
பிரேசில் அணை உடைந்த விபத்தில் பலி எண்ணிக்கை 200 ஆனது பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது.இந்த சுரங்கத்தின் அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அணை கடந்த 25-ம் தேதி திடீரென உடைந்தது. அணையில் இருந்த தண்ணீரும், சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து வெளியேறியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அணை வளாகத்தில் இருந்த உணவகம் சகதியில் முழுவதும் புதைந்தது. அணையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்த நிறுவனங்கள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவிலான சகதி நிரம்பியதால், அவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் ச…
-
- 0 replies
- 912 views
-
-
போயிங் விமானங்களை இடைநிறுத்த போவதில்லை: அமெரிக்கா அறிவிப்பு போயிங் 737 மக்ஸ் விமான சேவைகளை இடைநிறுத்த போவதில்லை என அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரசபை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எத்தியோப்பிய விமான விபத்தை தொடர்ந்து எழுந்த செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் அழுத்தங்களுக்கு மத்தியில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், போயிங் 737 மக்ஸ் விமானங்களை முடக்கி வைக்கும் செயற்பாடு அடிப்படையற்றது எனவும் அமெரிக்கா கூறியுள்ளது. அத்துடன், போயிங் 737 மக்ஸ் விமானத்தின் பாதுகாப்புக் குறித்து தாம் முழு நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. எத்தியோப்பியன் எயர்லைன்ஸ் விமானம் கடந்த…
-
- 0 replies
- 285 views
-
-
போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு சீனா தடை போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது. சீனாவில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை இயக்க கூடாது என அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. போயிங் மற்றும் அமெரிக்காவின் எப்.ஏ.ஏவிடம் பேசி, பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் விமானத்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது சீனா விமான போக்குவரத்து அமைச்சகம். மறுபுறம் இதுதொடர்பாக போயிங் நிறுவனம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்து விட்டதாவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் எத்தியோப்பியாவில் நேற்று போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்கள…
-
- 11 replies
- 1.5k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images வட கொரிய தேர்தலில் சர்வாதிகாரத் தலைமையுடைய ஆளும் தரப்புக்கு வரலாறு காணாத பெரும் வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், இந்த நாட்டின் வரலாற்றிலேயே, வாக்குச்சீட்டில் கிம் ஜாங்-உன்னின் பெயரே இல்லாமல் இருப்பது இதுவே முதல்முறை. இது உறுதி செய்யப்படுமானால், சம்பிரதாய நாடாளுமன்றமாக இருக்கின்ற வட கொரிய நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக வட கொரிய தலைவர் போட்டியிடவில்லை என்பது தெரியவரும். கிம் ஜாங்-உன்னின் சகோதரியான கிம் யோ-ஜாங் இந்த நாடாளுமன…
-
- 0 replies
- 492 views
-
-
Miss International Queen திருநங்கை மகுடத்தை வென்ற அமெரிக்கா! உலக அழகு ராணி, பிரபஞ்ச அழகி போன்று Miss International Queen எனப்படும் சர்வதேச இளம் திருநங்கை ராணி மகுடத்தை இந்த வருடம் அமெரிக்கா சூடிக்கொண்டது. கடந்த வாரயிறுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமெரிக்காவைச் சேர்ந்த Jazell Barbie Royale என்ற திருநங்கை அமெரிக்கா சார்பில் போட்டியிட்டார். தாய்லாந்தின் கரையோர நகரமான பட்டாயாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த திருநங்கை ராணி மகுடம் சூடும் விழா 14 வது முறையாக இடம்பெற்றது. உலகின் மிகப் பெரிய மற்றும் பிரபலமான திருநங்கை அலங்கார அணிவகுப்பாக இது திகழ்கின்றது. இந்த வருட போட்டியில் இரண்டாம் இடத்தை தாய்லாந்தைச் சேர்ந்த KANWARA KAEWJIN என்ற திருநங்கையும், மூன்றாவ…
-
- 0 replies
- 878 views
-
-
ஜப்பான் கப்பலை, திமிங்கிலம் தாக்கியது: 100 பேர் காயம் ஜப்பானில் திமிங்கிலம் ஒன்று கப்பலைத் தாக்கியதில், குறைந்தது 100 பயணிகள் காயமடைந்துள்ளனர். நிகாடா துறையில் இருந்து சடோ தீவிற்கு கப்பல் சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. திமிங்கலம் மோதியதில் 15 சென்றி மீற்றர் நீளத்திற்கு கப்பல் நடுப்பகுதியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கப்பலை இயக்கியவர்கள் தெரிவிக்கின்றனர். நிபுணர்கள் இந்த சம்பவத்தை ஆராய்ந்து இது திமிங்கிலத்தால் ஏற்பட்ட பாதிப்பு என உறுதிப்படுத்தியுள்ளனர். கப்பலில் பயணித்த பயணிகள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த சமயத்தில் இருந்த கப்பல் பணியாளர்களும் பயணிகளும் இந்த சம்பவத்தில…
-
- 2 replies
- 933 views
-
-
கத்திக்குத்தின் எதிரொலி – விற்பனையை நிறுத்தியது அஸ்டா! சமையலறையில் பயன்படுத்தப்படும் சிறிய கத்திகளின் விற்பனையை இடைநிறுத்துவதாக அஸ்டா நிறுவனம் அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் கத்திக்குத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தாக்குதலில் 17 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்திருந்தார். குறித்த கத்திக்குத்து தாக்குதல் பிரித்தானியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையிலேயே சமையலறையில் பயன்படுத்தப்படும் சிறிய கத்திகளின் விற்பனையை இடைநிறுத்துவதாக அஸ்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பிரித்தானியாவில் …
-
- 0 replies
- 700 views
-
-
படத்தின் காப்புரிமை AFP Image caption வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் வட கொரியாவின் தலைநகருக்கு அருகிலுள்ள ராக்கெட் ஏவுத்தளத்திலிருந்து ராக்கெட் அல்லது ஏவுகணை செலுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகிலுள்ள சானும்தொங் என்ற அந்த இடத்தில்தான் வட கொரியா தனது பெரும்பாலான ஏவுகணைகளையும், ராக்கெட்டுகளையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வட கொரியாவின் சோஹே பகுதியிலுள்ள அந்நாட்டின் முக்கிய ராக்கெட் ஏவுத்தளம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்த…
-
- 0 replies
- 899 views
-
-
படத்தின் காப்புரிமை PA பிரிட்டனில் இருந்து ஐஎஸ் குழுவில் சேர சென்ற ஷமிமா பேகமின் குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவித் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவில் சேர்வதற்காக 2015-ஆம் ஆண்டு கிழக்கு லண்டனை விட்டு கிளம்பிய மூன்று பள்ளி மாணவிகளில் ஒருவர் ஷமிமா பேகம். அவர் சமீபத்தில் லண்டன் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் பிரிட்டன் குடியுரிமையை ரத்து செய்தார் பிரிட்டனின் உள்துறை அமைச்சர் சயித் ஜாவித். …
-
- 0 replies
- 734 views
-
-
அமெரிக்கா மீது ஹூவாய் வழக்குப் பதிவு சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய் நிறுவனம் அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. ஹூவாய் நிறுவனம், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை மீறி ஈரானுடன் வர்த்தகம் வைத்துக்கொண்டதாக புகார் எழுந்தது. இதனால் ஹூவாய் நிறுவன அதிபரின் மகளும், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கனடா நாட்டின் வான்கூவர் நகரில் கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்டார். மேலும் ஹூவாய் நிறுவனம் தனது தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் சீனாவுக்காக உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அந்நிறுவனத்தின் பொருட்களை அமெரிக்காவில் பயன்படுத்த தடை விதித்தது. இந்த நிலையில், தங்கள் நிறுவனத…
-
- 0 replies
- 483 views
-
-
இந்த ஆண்டு 2 பேருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு March 7, 2019 ஒவ்வொரு வருடமும் இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு 2 பேருக்கு வழங்கப்படும் என நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. சுவீடிஷ் இலக்கிய பேரவையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் புகைப்பட கலைஞரான ஜீன் கிளாட் அர்னால்ட்டுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதனையடுத்து அவரது மனைவியான கவிஞர் கத்தரினாவும் பல முக்கிய உறுப்பினர்களும் பேரவையிலிருந்து வெளியேறியிருந்தனர். இந்த பிரச்சினைகளால் 2018-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை.…
-
- 1 reply
- 1.1k views
-
-
புல்வாமா தாக்குதல் : பாகிஸ்தானியர்களின் வீசா கட்டணத்தை உயர்த்தியது அமெரிக்கா! புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கான வீசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென உலகநாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையிலேயே அமெரிக்காவிற்கு வீசா பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தை பாகிஸ்தானியர்களுக்கு மட்டும் உயர்த்தியுள்ளது. இதன்படி அமெரிக்காவிற்குப் பயணம்செய்யும் பாகிஸ்தானியர்களின் வீசாவின் கால அளவு குறைக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வீசா கால அளவை தற்பொழுது 3 மாதமாக மட்டுப்படுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தானை சேர்ந்த ச…
-
- 1 reply
- 906 views
- 1 follower
-
-
தப்பியோட முயன்ற 400 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது சிரியாவில் தப்பியோட முயன்ற 400 ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்நாட்டு படையினரால் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். சிரியாவில் அரசு படையினருக்கும் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011 ஆம் ஆண்டு மோதல் எழுந்தது. இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இதில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளும் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் பாகவுஜ் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களின் கட்டுக்குள் இருக்கும் கடைசி பகுதி இதுவாகும். இதனையடுத்து சமீப வாரங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் உறவி…
-
- 0 replies
- 677 views
-
-
மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் ஒலிபரப்புவதனை நிறுத்திய பிபிசி March 5, 2019 பாலியல் குற்றச்சாட்டின் எதிரொலியாக கடந்த மாதம் 24-ம் திகதிக்குப் பின்னர் பிபிசி வானொலி அமெரிக்க பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் ஒலிபரப்புவதனை நிறுத்தியுள்ளதாக என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொப் பாடல் உலகின் மன்னராக திகழ்ந்த் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் காலமாகியிருந்தார். இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சனின் இசைக்குழுவில் பணியாற்றிய வேட் ரொப்சன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகிய இருவர் தாம் சிறுவர்களாக இருந்தபோது மைக்கேல் ஜாக்சன் பலமுறை தங்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தனர். இதுதொடர்பாக ‘லீவிங் நெவர்ல…
-
- 2 replies
- 1.3k views
-
-
டயானாவின் ஓவியங்கள் அழிப்பு – விசாரணைகள் ஆரம்பம்! பரிஸ் எட்டாம் வட்டாரத்தில் Pont de l’Alma பாலத்தில் வரையப்பட்டிருந்த இளவரசி டயானாவின் ஓவியங்கள் அழிக்கப்பட்டுள்ளமை குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரித்தானிய இளவரசி டயானா Pont de l’Alma சுரங்கப்பாதைக்குள் இடம்பெற்ற கார் விபத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவர் நினைவாக குறித்த சுரங்கத்தின் தூண்களில் டயானாவின் ஓவியம் வரையப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது குறித்த ஓவியங்கள் வெள்ளைநிற வர்ணம் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களை அழிக்குமாறு எந்த அறிவுத்தலும் பரிஸ் நகரசபையால் வழங்ககப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்…
-
- 1 reply
- 454 views
-
-
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த நேரிடும்! – பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை பாகிஸ்தானில் செயற்பட்டுவரும் தீவிரவாத அமைப்புகள் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் போல நடவடிக்கை எடுக்கப்போவதாக பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் காசிம் சோலிமணி (Qasem Soleimani) ஊடகங்களுக்க கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் தெரிவித்த அவர், “பாகிஸ்தான் அனைத்து அயல் நாடுகளுக்கும் தீவிரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. பாகிஸ்தான் அயல் நாடுகளை அழிக்கும் அளவுக்கு பலம்வாய்ந்த அணுகுண்டை வைத்திருக்கின்றது. அதேநேரம், உங்கள் மண்ணில் செயற்பட்டுவரும் தீவிரவாத அமைப்புகளை அழிக்க முடியவில்லையே.. ஏன்…
-
- 0 replies
- 435 views
-
-
அலபாமா சூறாவளி: லீ வட்டாரத்தில் மீண்டும் தொடங்கிய மீட்பு பணிகள், 23 பேர் பலி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSCOTT FILLMER அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு சூறைக் காற்றுகள் தாக்கியதில் குழந்தைகள் உள்பட குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கட்டடங்கள், சாலைகள் பலத்த சேதமடைந்…
-
- 0 replies
- 500 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption அல் - அசாரின் இமாம் ஷேக் அகமத் அல்- தயீப் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணையோடு வாழும் வகையில் பலதார மணம் புரிவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி என எகிப்தின் உயர் இஸ்லாமிய அமைப்பான அல்-அசாரின் இமாம் தெரிவித்துள்ளார். சன்னி இஸ்லாமியர்களின் உயர் தலைமையிலுள்ள ஷேக் அகமத் அல்-தயீப் இது குறித்து பேசுகையில், ''குரான் பற்றிய சரியான புரிதலின்மை காரணமாகவே பலதார மணம் புரியும் பழக்கம் வந்திருக்கிறது'' என்றார். தொலைக்காட்சியில் வார நிகழ்ச்சி ஒன்றில் அவர் இக்கருத்த…
-
- 1 reply
- 604 views
- 1 follower
-
-
'ஜமால் உடல் எரிக்கப்பட்டுவிட்டது' Published : 04 Mar 2019 17:55 IST Updated : 04 Mar 2019 17:55 IST ஜமால் கஷோக்ஜி - Getty Images ஜமால் கஷோகி உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி இல்லத்தில் எரிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், ''மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கும் அல்- ஜசிராவின் விசாரணையில் சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல் துருக்கியில் உள்ள சவுதி தூதரக அதிகாரி வீட்டில் எரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், இறுதியில் உண்மை கண்டறியப்பட…
-
- 0 replies
- 511 views
- 1 follower
-
-
தூக்கு மேடை வரை மூன்று முறை சென்று உயிர் பிழைத்தவரின் வியப்பளிக்கும் கதை மேரி குட்ஹர்ட்பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மலாவி நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பைசன் காவ்லா மூன்று முறை ஏறத்தாழ தூக்கில்கு போடப்படும் நிலைக்கு போனார். ஆனால் ஒவ்வொரு முறையும் பைசன் காவ்லாவின் முறை வரும் …
-
- 0 replies
- 855 views
- 1 follower
-
-
இந்தியா தங்களை முட்டாளாக நினைத்துக் கொண்டிருக்கின்றது – ட்ரம்ப் குற்றச்சாட்டு! வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா தங்களை முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ட்ரம்ப் இதனைத் கூறினார். அதில் தொடர்ந்தும் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியாவை உச்சபட்ச வரி விதிக்கும் நாடு என்று குறிப்பிட்டார். அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் இருசக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் 100 விகிதம் வரி விதிக்கப்படுவதாகவும், ஆனால் அந்நாட்டு இருசக்கர வாகனங்களுக்கு இங்கு வரி ஏதும் விதிக்கப்படுவதில்லை என்றும் கூறினார். அதேநேரம் இந்தியா வரி விதிப்பது போன்ற…
-
- 0 replies
- 739 views
-
-
நைஜீரியாவில் எண்ணெய் குழாய் வெடித்து சிதறியது : 50 பேர் மாயம் தெற்கு நைஜீரியாவில் எண்ணெய் குழாய் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு நைஜீரியாவின் நெம்பே மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த போது குறித்த இடத்தில் கடமையாற்றிய 50 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காணாமல் போனோர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் எண்ணெய் களஞ்சியசாலையை கொண்டு நடாத்தும் நிறுவனம் இந்த விபத்து தொடர்பாக இதுவரையில் எந்த விடயத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 276 views
-
-
ஆப்கானிஸ்தான் இராணுவ தளம் மீது தலிபான்கள் தாக்குதல்: 23 படையினர் உயிரிழப்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 23 ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள மிகப்பெரிய இராணுவத் தளங்களில் ஒன்றான ஹெல்மெண்ட் மீது நேற்று மற்றும் நேற்று முன்தினம் தலீபான் போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 23 படையினர் கொல்லப்பட்டதோடு 15 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 48 மணித்தியாலங்களில் தலிபான் போராளிகள் நடத்திய 3 வது தாக்குதல் இதுவென தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் தலீபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நட…
-
- 0 replies
- 351 views
-