உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27029 topics in this forum
-
படத்தின் காப்புரிமை Getty Images உலகின் விலைவாசி மிகுந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர், பாரீஸ், ஹாங்காங் ஆகிய மூன்று நகரங்கள் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. உலகின் விலைவாசி மிகுந்த நகரங்களின் பட்டியலின் முப்பதாண்டுகால வரலாற்றில் முதலாவது இடத்தை மூன்று நகரங்கள் ஒருசேர பிடிப்பது இதுவே முதல் முறை. உலகிலுள்ள 133 நகரங்களில் வாழ்க்கைச் செலவினங்களை அடிப்படியாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் கடந்த ஆண்டு இந்த …
-
- 2 replies
- 913 views
-
-
பிரெக்ஸிற் தாமதத்துக்கான கோரிக்கையை முன்வைக்கவுள்ள பிரதமர்! பிரெக்ஸிற்றை ஜூன் 30 ஆம் திகதி வரை பிற்போடுவதற்கான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரதமர் தெரேசா மே முன்வைப்பாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்துக்கு பின்னரும் பிரெக்ஸிற் பிற்போடப்படலாமெனவும் நம்பப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் இன்னும் 10 நாட்களில் மார்ச் 29 ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறவுள்ளது. ஆனாலும் இதுவரை ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாத காரணத்தால் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பிரெக்ஸிற்றை தாமதப்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரெக்ஸிற் தாமதத்துக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. இந்நிலைய…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஜீ – 20 மாநாட்டின்போது சமூக வலைத்தளங்கள் குறித்து ஆராயுமாறு வலியுறுத்தல்! நடைபெறவுள்ள ஜீ – 20 மாநாட்டின்போது சமூக வலைத்தளங்கள் குறித்து ஆராயுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேவிற்கு அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அத்துடன், உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் கோரியுள்ளார். கடந்த வௌ்ளிக்கிழமை நியுசிலாந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் நேரடி ஔிபரப்பை பேஸ்புக் நிறுவனத்தினால் தடைசெய்ய முடியாமல் போனமை குறித்தும் ஸ்கொட் மொரிசன் கடும் கண்டனம் வௌியிட்டுள்ளார். இதேவேளை, 50…
-
- 0 replies
- 491 views
-
-
209 பயணிகளுடன் பயணித்த விமானத்தில் தீ – அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! நியுயோர்க்கிலிருந்து லண்டன் சென்ற போயிங் 777 ரக விமானத்தில் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து கனடா, சென். ஜோன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று(செவ்வாய்கிழமை) அவசரமாக தரையிறக்கப்பட்டது. 209 பயணிகளுடன் ஜோன் எப். கெனடி சர்வதேச விமானநிலையத்திலிருந்து லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற போயிங் 777 ரக விமானத்திலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. விமானம் பறந்து சில மணி நேரங்களில், விமானத்தின் பொதிகள் களஞ்சியப்படுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீப்பரவல் குறித்து பயணிகளால் விமானிக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சாமர்த்தியமாக செயற்பட்ட விமானி, குறித்த விமானத்தை கனடாவின், சென். …
-
- 0 replies
- 327 views
-
-
படத்தின் காப்புரிமை EPA நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், ஒரு டிராமில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள டிராம் நிலையத்திற்கு அருகே உள்ள சதுக்கத்தில் அதிகாரிகள் குவிந்துள்ளனர். மேலும் அங்கு அவசர சேவைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிதாரி சம்பவ இடத்தில் இருந்து காரில் தப்பிச் சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அப்பகுதிக்கு மக்கள் வரவேண்டாம் என்றும் அப்பகுதியில் உள்ள பள்ளிகளை திறக்க வேண்டாம் என்றும்…
-
- 1 reply
- 1k views
-
-
நியூசிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு :9 பேர் உயிரிழப்பு நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் மையப்பகுதி என்றழைக்கப்படும் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இச்சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் லைன்வுட் மஸ்ஜித் பள்ளிவாசலில் 110 பேர் வரையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்கள் உட்பட சுமார் 30…
-
- 24 replies
- 3.2k views
- 1 follower
-
-
சீனாவின் கடன் கடிவாளத்தில் பாகிஸ்தான், இலங்கை; உலகை சூறையாடும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் சீனா: அமெரிக்க அதிகாரி குற்றச்சாட்டு Published : 17 Mar 2019 10:51 IST Updated : 17 Mar 2019 10:51 IST வாஷிங்டன் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்குக் கடன் வழங்குவதன்மூலம் சீனா பிற நாடுகளை சூறையாடும் பொருளாதார உத்திகளைக் கையாள்கிறது என அமெரிக்க அதிகாரி ஜோசப் டன்ஃபோர்டு என்பவர் குற்றம்சாட்டியுள்ளார். சீனா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதில் மிக முக்கியமானது One Belt, One Road என்ற திட்டம். இதன் மூலம் உலகம் முழுவதுமுள்ள தனது வர்த்தக சந்தைகளை இணைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இத…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
எத்தியோப்பிய விமான விபத்து – இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, கருகிய மண்… March 17, 2019 எத்தியோப்பியாவில், கடந்த 10ம் திகதியன்று விமான விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து எடுக்கப்பட்ட கருகிய மண் மட்டும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 157 பேரின் உடல் எச்சங்களை அடையாளம் கண்டுபிடிக்க குறைந்தது ஆறு மாத காலம் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கருகிய மண் மட்டும், கொடுக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகளில் பயன்படுத்தப்படவுள்ள அந்த மண், அவர்களுக்கான கல்லறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் புதைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் உறவினரை இழந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கிலோ மண் கொடுக்கப்பட்டுள்ளதாகவும…
-
- 0 replies
- 374 views
-
-
பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புப் பிரேரணை தோல்வி பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக தீர்மானிப்பதற்கான பிரேரணை வாக்கெடுப்பு இன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. முன்னாள் கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினரான சாரா வொலஸ்ட்டனால் முன்வைக்கப்பட்ட இத்திருத்தம் மீதான பிரேரணை வாக்கெடுப்பில் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான திருத்தம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இத்திருத்தத்துக்கு ஆதரவாக 85 உறுப்பினர்களும் எதிராக 334 உறுப்பினர்களும் வாக்களித்தையடுத்து 249 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கும் இந்த திருத்தத்துக்கு பிரதான எதிர்க்கட்…
-
- 0 replies
- 801 views
-
-
கேம்பினோ மாபியா கும்பலின் தலைவர் பிரான்ஸிஸ்கோ கொல்லப்பட்டார் குற்றம் சாட்டப்பட்டிருந்த அமெரிக்காவின் கேம்பினோ மாபியா கும்பலின் தலைவன் பிரான்ஸிஸ்கோ கேலி, அவரது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் (புதன்கிழமை) மாலை, ஸ்டேடன் தீவில் உள்ள கேலியின் வீட்டில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது என NYPD இன் துப்பறிவாளர் டெர்மோர்ட் சீ நேற்று தெரிவித்துள்ளார். குறித்த நபர் அவரது வீட்டு வாசலில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கிடந்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. விரைந்து வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கொலை தொடர்பான விசாரணைகள் முன்னெடு…
-
- 0 replies
- 440 views
-
-
பாப்பாண்டவரின் நிதி ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை பாப்பாண்டவரின் நிதி ஆலோசகருக்கு எதிரான பாலியல் வழக்கில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவை சேர்ந்த 75 வயதான கார்டினல் ஜோர்ஜ் பெல் என்பவர் பாப்பாண்டவர் பிரான்சிஸ்சின் நிதி ஆலோசகராக பணிபுரிந்து வந்துள்ளார். 1970 ஆம் ஆண்டுகளில் நீச்சல் குளம் ஒன்றில் வைத்து 40 வயதைக் கடந்த 2 ஆண்களை கார்டினல் ஜோர்ஜ் பெல், தங்களிடம் தவறாக நடந்ததாகவும், முறையற்ற விதத்தில் தொட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இதே போன்று 1980 ஆம் ஆண்டுகளில் 3 சிறுவர்கள் முன்பாக ஜோர்ஜ் பெல், தன் முழு உடலையும் நிர்வாணமாக காட்டியவாறு நின்றார் எனவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மெல்போர்ன் நகரில் ஆர்ச் பிஷப்பாக பணிபு…
-
- 5 replies
- 1.2k views
-
-
சில நாள்களுக்கு முன்பு எத்தியோப்பியாவிலும், ஐந்து மாதங்கள் முன்பு இந்தோனீசியாவிலும் நடுவானில் இருந்து நொறுங்கி விழுந்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை உலகம் முழுவதிலும் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது இந்த விமானங்களைத் தயாரித்த அமெரிக்க நிறுவனமான போயிங். உலகம் முழுவதும் பறந்துகொண்டிருக்கும் இந்த ரகத்தைச் சேர்ந்த 371 விமானங்கள் இதன் மூலம் நிறுத்திவைக்கப்படும். எத்தியோப்பிய விமான விபத்தில் 157 பேரும், இந்தோனீசிய விமான விபத்தில் 189 பேரும் உயிரிழந்தனர். இந்த இரு சம்பவங்களிலும் விமானத்தில் இருந்த ஒருவர்கூட உயிர்பிழைக்கவில்லை. …
-
- 0 replies
- 699 views
-
-
பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நேரம் கிட்டியுள்ளது: தொழிற்கட்சி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான உரிய நேரம் கிட்டியுள்ளதாக பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பிரதமர் தெரேசா மே-யின் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மகத்தான பெரும்பான்மை வாக்குகளுடன் அரசாங்கம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பிரதமர் மே-யின் ஒப்பந்தம், முன்மொழிவுகள் என்பவற்றுக்கு நாடாளுமன்றத்தின் ஆதரவில்லை என்பதை தற…
-
- 0 replies
- 353 views
-
-
தெரசா மேயின் தீர்மானம் 2-வது முறையாகவும் தோல்வி March 13, 2019 ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிற் நடவடிக்கை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரசா மே கொண்டு வந்த ஒப்பந்தத்துடன் வெளியேறும் தீர்மானம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் 2-வது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது. பிரெக்ஸிற் நடவடிக்கை தொடர்பில் தெரசா மே ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை பிரித்தானிய பாராளுமன்றம் நிராகரித்துள்ளதுடன் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தினர். எனினும் ஐரோப்பிய ஒன்றியம் புதிய ஒப்பந்தத…
-
- 0 replies
- 589 views
-
-
பிரேசில் அணை உடைந்த விபத்தில் பலி எண்ணிக்கை 200 ஆனது பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது.இந்த சுரங்கத்தின் அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அணை கடந்த 25-ம் தேதி திடீரென உடைந்தது. அணையில் இருந்த தண்ணீரும், சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து வெளியேறியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அணை வளாகத்தில் இருந்த உணவகம் சகதியில் முழுவதும் புதைந்தது. அணையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்த நிறுவனங்கள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவிலான சகதி நிரம்பியதால், அவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் ச…
-
- 0 replies
- 923 views
-
-
போயிங் விமானங்களை இடைநிறுத்த போவதில்லை: அமெரிக்கா அறிவிப்பு போயிங் 737 மக்ஸ் விமான சேவைகளை இடைநிறுத்த போவதில்லை என அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரசபை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எத்தியோப்பிய விமான விபத்தை தொடர்ந்து எழுந்த செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் அழுத்தங்களுக்கு மத்தியில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், போயிங் 737 மக்ஸ் விமானங்களை முடக்கி வைக்கும் செயற்பாடு அடிப்படையற்றது எனவும் அமெரிக்கா கூறியுள்ளது. அத்துடன், போயிங் 737 மக்ஸ் விமானத்தின் பாதுகாப்புக் குறித்து தாம் முழு நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. எத்தியோப்பியன் எயர்லைன்ஸ் விமானம் கடந்த…
-
- 0 replies
- 289 views
-
-
போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு சீனா தடை போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது. சீனாவில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை இயக்க கூடாது என அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. போயிங் மற்றும் அமெரிக்காவின் எப்.ஏ.ஏவிடம் பேசி, பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் விமானத்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது சீனா விமான போக்குவரத்து அமைச்சகம். மறுபுறம் இதுதொடர்பாக போயிங் நிறுவனம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்து விட்டதாவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் எத்தியோப்பியாவில் நேற்று போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்கள…
-
- 11 replies
- 1.5k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images வட கொரிய தேர்தலில் சர்வாதிகாரத் தலைமையுடைய ஆளும் தரப்புக்கு வரலாறு காணாத பெரும் வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், இந்த நாட்டின் வரலாற்றிலேயே, வாக்குச்சீட்டில் கிம் ஜாங்-உன்னின் பெயரே இல்லாமல் இருப்பது இதுவே முதல்முறை. இது உறுதி செய்யப்படுமானால், சம்பிரதாய நாடாளுமன்றமாக இருக்கின்ற வட கொரிய நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக வட கொரிய தலைவர் போட்டியிடவில்லை என்பது தெரியவரும். கிம் ஜாங்-உன்னின் சகோதரியான கிம் யோ-ஜாங் இந்த நாடாளுமன…
-
- 0 replies
- 497 views
-
-
Miss International Queen திருநங்கை மகுடத்தை வென்ற அமெரிக்கா! உலக அழகு ராணி, பிரபஞ்ச அழகி போன்று Miss International Queen எனப்படும் சர்வதேச இளம் திருநங்கை ராணி மகுடத்தை இந்த வருடம் அமெரிக்கா சூடிக்கொண்டது. கடந்த வாரயிறுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமெரிக்காவைச் சேர்ந்த Jazell Barbie Royale என்ற திருநங்கை அமெரிக்கா சார்பில் போட்டியிட்டார். தாய்லாந்தின் கரையோர நகரமான பட்டாயாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த திருநங்கை ராணி மகுடம் சூடும் விழா 14 வது முறையாக இடம்பெற்றது. உலகின் மிகப் பெரிய மற்றும் பிரபலமான திருநங்கை அலங்கார அணிவகுப்பாக இது திகழ்கின்றது. இந்த வருட போட்டியில் இரண்டாம் இடத்தை தாய்லாந்தைச் சேர்ந்த KANWARA KAEWJIN என்ற திருநங்கையும், மூன்றாவ…
-
- 0 replies
- 879 views
-
-
ஜப்பான் கப்பலை, திமிங்கிலம் தாக்கியது: 100 பேர் காயம் ஜப்பானில் திமிங்கிலம் ஒன்று கப்பலைத் தாக்கியதில், குறைந்தது 100 பயணிகள் காயமடைந்துள்ளனர். நிகாடா துறையில் இருந்து சடோ தீவிற்கு கப்பல் சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. திமிங்கலம் மோதியதில் 15 சென்றி மீற்றர் நீளத்திற்கு கப்பல் நடுப்பகுதியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கப்பலை இயக்கியவர்கள் தெரிவிக்கின்றனர். நிபுணர்கள் இந்த சம்பவத்தை ஆராய்ந்து இது திமிங்கிலத்தால் ஏற்பட்ட பாதிப்பு என உறுதிப்படுத்தியுள்ளனர். கப்பலில் பயணித்த பயணிகள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த சமயத்தில் இருந்த கப்பல் பணியாளர்களும் பயணிகளும் இந்த சம்பவத்தில…
-
- 2 replies
- 937 views
-
-
கத்திக்குத்தின் எதிரொலி – விற்பனையை நிறுத்தியது அஸ்டா! சமையலறையில் பயன்படுத்தப்படும் சிறிய கத்திகளின் விற்பனையை இடைநிறுத்துவதாக அஸ்டா நிறுவனம் அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் கத்திக்குத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தாக்குதலில் 17 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்திருந்தார். குறித்த கத்திக்குத்து தாக்குதல் பிரித்தானியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையிலேயே சமையலறையில் பயன்படுத்தப்படும் சிறிய கத்திகளின் விற்பனையை இடைநிறுத்துவதாக அஸ்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பிரித்தானியாவில் …
-
- 0 replies
- 709 views
-
-
படத்தின் காப்புரிமை AFP Image caption வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் வட கொரியாவின் தலைநகருக்கு அருகிலுள்ள ராக்கெட் ஏவுத்தளத்திலிருந்து ராக்கெட் அல்லது ஏவுகணை செலுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகிலுள்ள சானும்தொங் என்ற அந்த இடத்தில்தான் வட கொரியா தனது பெரும்பாலான ஏவுகணைகளையும், ராக்கெட்டுகளையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வட கொரியாவின் சோஹே பகுதியிலுள்ள அந்நாட்டின் முக்கிய ராக்கெட் ஏவுத்தளம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்த…
-
- 0 replies
- 904 views
-
-
படத்தின் காப்புரிமை PA பிரிட்டனில் இருந்து ஐஎஸ் குழுவில் சேர சென்ற ஷமிமா பேகமின் குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவித் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவில் சேர்வதற்காக 2015-ஆம் ஆண்டு கிழக்கு லண்டனை விட்டு கிளம்பிய மூன்று பள்ளி மாணவிகளில் ஒருவர் ஷமிமா பேகம். அவர் சமீபத்தில் லண்டன் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் பிரிட்டன் குடியுரிமையை ரத்து செய்தார் பிரிட்டனின் உள்துறை அமைச்சர் சயித் ஜாவித். …
-
- 0 replies
- 736 views
-
-
அமெரிக்கா மீது ஹூவாய் வழக்குப் பதிவு சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய் நிறுவனம் அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. ஹூவாய் நிறுவனம், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை மீறி ஈரானுடன் வர்த்தகம் வைத்துக்கொண்டதாக புகார் எழுந்தது. இதனால் ஹூவாய் நிறுவன அதிபரின் மகளும், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கனடா நாட்டின் வான்கூவர் நகரில் கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்டார். மேலும் ஹூவாய் நிறுவனம் தனது தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் சீனாவுக்காக உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அந்நிறுவனத்தின் பொருட்களை அமெரிக்காவில் பயன்படுத்த தடை விதித்தது. இந்த நிலையில், தங்கள் நிறுவனத…
-
- 0 replies
- 484 views
-
-
இந்த ஆண்டு 2 பேருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு March 7, 2019 ஒவ்வொரு வருடமும் இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு 2 பேருக்கு வழங்கப்படும் என நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. சுவீடிஷ் இலக்கிய பேரவையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் புகைப்பட கலைஞரான ஜீன் கிளாட் அர்னால்ட்டுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதனையடுத்து அவரது மனைவியான கவிஞர் கத்தரினாவும் பல முக்கிய உறுப்பினர்களும் பேரவையிலிருந்து வெளியேறியிருந்தனர். இந்த பிரச்சினைகளால் 2018-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை.…
-
- 1 reply
- 1.1k views
-