உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
கனேடிய பழங்குடியின மாணவர்கள் மீதான... துன்புறுத்தல்கள்: மன்னிப்பு கோரினார், போப் ஃபிரான்சிஸ்! கனடாவில் கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளில் கடந்த 1970ஆம் ஆண்டு வரை பழங்குடியின மாணவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்காக போப் ஃபிரான்சிஸ் மன்னிப்பு கோரினார். ஆறு நாட்கள் பயணமாக கனடா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப், நேற்று (திங்கட்கிழமை) முதல் நிகழ்வாக அல்பர்டாவில் எட்மான்டனின் தெற்கு பகுதியில் மிகவும் பாழடைந்த நிலையில் அமைந்திருக்கும் கத்தோலிக்க தேவாலய பாடசாலையில் குழுமியிருந்த பூர்வகுடி மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடையே உரையாற்றினார். இதன்போதே அவர் மன்னிப்பு கோரினார். இதன்போது உரையாற்றிய அவர், ‘பூர்வகுடி மக்களுக்கு ஏராளமா…
-
- 0 replies
- 170 views
-
-
கனேடிய பொதுத் தேர்தல் ; மூன்றாவது முறையாகவும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக அந் நாட்டுச் செய்திச் சேவையான சி.பி.சி. தெரிவித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும் தொடர்ச்சியாக கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தல் வெற்றிகள் இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர்ந்தும் வாக்குகளை கணக்கிட்டு வருகின்றனர். சி.பி.சி. செய்திச் சேவை திங்கள்கிழமை தாமதமாக, லிபரல் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று அறிவித்தது. எனினும் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்படுமா அல்லது பெரும்பான்மை அரச…
-
- 28 replies
- 2k views
- 1 follower
-
-
நாடாளுமன்றத் தேர்தல் : லிபரல் கட்சி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது! கனேடிய பொதுத்தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, இரண்டாவது தடவையாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ஜஸ்டின் ட்ரூடோ சிறுபான்மை ஆட்சியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. உலகளவில், முற்போக்கு சிந்தனையுள்ள தலைவர்களில் ஒருவராக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பார்க்கப்படுகிறார். இருப்பினும், ஆளும் லிபரல் கட்சிக்கு எதிராக அரசியல் செய்துவரும், வலதுசாரி சிந்தனையுடைய பழமைவாத கட்சிக்கு, முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்கள் கிடைத்திருக்கின்றன. மொத்தமுள்ள 338 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், …
-
- 2 replies
- 462 views
-
-
கனேடிய பொருட்களுக்கு 35% வரி விதித்த ட்ரம்ப்! எதிர்வரும் ஒகஸ்ட் 1 முதல் கனேடிய பொருட்களுக்கு 35% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெரும்பாலான வர்த்தக பங்காளிகள் மீது 15% அல்லது 20% மொத்த வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியதோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதன் பொருட்களுக்கான புதிய வரி விகிதத்தை விரைவில் அறிவிப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில், புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளும் சுயமாக விதித்துக் கொண்ட காலக்கெடுவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வந்துள்ளது. கனடா மீதான அண்மைய வரிகளை ட்ரம்ப் வியாழக்கிழமை (10) சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அதில், கனடாவுக்கான புதிய வரிகள் ஒகஸ்ட் 1 முதல…
-
-
- 1 reply
- 125 views
-
-
கனேடியப் பொருளாதார வளர்ச்சி வேகம் மந்த கதியில் செல்வதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஏப்ரல் – ஜீன் ஆகிய மாதங்களுக்கிடைப்பட்ட காலப்பகுதியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 0.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.தொடர்ச்சியாக கடந்த இரண்டு காலாண்டுகளாக வீழ்ச்சிப் போக்கைக் கொண்டிருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, முதலாவது காலாண்டில் 0.8 வீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 19 இல் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பருக்கு இவ்வீழ்ச்சி நிலையானது பாரிய நெருக்கடியைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதனால் தேர்தல் பிரசார நேரடி விவாதங்களில் கனேடியப் பொருளாதாரம் முக்கிய விடயமாகக்…
-
- 0 replies
- 547 views
-
-
கனேடிய மருத்துவ அணி மீண்டும் யப்பானை நோக்கிப் புறப்படுகிறது யப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு உதவும் வகையில் கனேடிய மருத்துவ அணியொன்று கடந்தவாரம் டோக்கியோவிற்குச் சென்றிருந்தது. ஆனால் அங்கு விபத்துக்குள்ளாகிய அணு உலையிலிருந்து கதிரியக்கம் வெளிப்பட்டதைத் தொடர்ந்து ஊர் திரும்பியிருந்த கனேடிய மருத்துவ அணியினர் மீண்டும் யப்பானை நோக்கிப் புறப்படுகிறார்கள். மீண்டும் யப்பானை நோக்கிப் புறப்படும் இ;ந்த மருத்துவ அணியினர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் நன்மைகருதி தற்காலிக மருத்துவனையொன்றை நிறுவவுள்ளதோடு மருத்துப்பொருட்கள் மற்றும் தண்ணீரைச் சுத்திகரிப்பதற்காக வழிவகைகளையும் கொண்டுசெல்கிறார்கள். இம்முறை அணுக்கத…
-
- 0 replies
- 793 views
-
-
கனேடிய மாகாணங்களுக்குள் பரவிய அமெரிக்க காட்டுத் தீ அமெரிக்க மேற்கு கடற்கரையில் பரவி வரும் கடுமையான காட்டுத்தீயில் இருந்து வரும் புகை, மத்திய மேற்கு, கனடா மற்றும் வடக்கு நியூயோர்க்கின் சில பகுதிகளுக்கு கிழக்கு நோக்கி ஆயிரக்கணக்கான மைல்கள் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலிபோர்னியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காட்டுத் தீ பரவி வருகிறது. இதன் காரணமாக இதுவரையில், 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கலிபோர்னியாவில் மட்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர் எரிந்துள்ளது. இந்த நிலையில், அந்த நெருப்பிலிருந்து வரும் புகை இரண்டு பெரிய சதுப்பு நிலங்களில் கிழக்கு நோக்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, அவற்றில் ஒன்று மேற்கு அமெரிக்கா முழுவ…
-
- 0 replies
- 424 views
-
-
இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள கனேடிய வெளியுறவு அமைச்சர் ஜோன் பெயர்ட் ராம்லா பகுதி ஊடாக பயணித்த வேளையில், பாலஸ்தீனர்கள் அவரது வாகனத் தொடரணி மீது காலணிகள் மற்றும் முட்டைகள் என்பவற்றை வீசி தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரெய்ட் மாலிக்கை சந்திப்பதற்காக ஜோன் பெயர்ட் மேற்குக்கரை நகருக்கு பயணித்த வேளையிலேயே இந்த அதிருப்தி போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. “ஜோன் பெயர்ட்டை நாங்கள் பாலஸ்தீனத்திற்குள் வரவேற்கவில்லை” என்ற பதாதைகளையும் தாங்கியிருந்த போராட்டக்காரர்கள், அவருக்கு எதிரான பல்வேறு கோசங்களையும் எழுப்பி தமது கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். கனேடிய அரசாங்கம் தொடர்ந்து இஸ்ரேலுக்கு சார்பான நிலைப்பாட்டினை வெளிப்படுத்திவரும் நிலையில், கனேடிய…
-
- 0 replies
- 265 views
-
-
கனேடியக் கட்டடம் மீது மோதிய இரண்டு விமானங்கள் கட்டிடம் ஒன்றின் மீது இரண்டு சிறிய ரக விமானங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம், கனடாவின் மொன்றியல் மாகாணத்தில் சென். ப்ரூனோ நகரில் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது. ஒரு விமானம் கட்டடத்தின் மீது நேராக மோதியதாகவும், மற்றொரு விமானம் வாகனத் தரிப்பிடத்தின் அருகே விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு விமானங்களிலும் தலா ஒருவர் மட்டுமே பயணித்திருந்தனர். கட்டடத்தில் மோதிய விமானத்தைச் செலுத்திய விமானி உயிரிழந்த அதேவேளை, மற்ற விமானத்தின் விமானி காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைய…
-
- 0 replies
- 420 views
-
-
கனேடியப் பிரஜாவுரிமையைப் பெறுவதற்காக நீண்ட காலம் போராடி வந்த முதிய பெண்ணொருவருக்கு கனேடியப் பிரஜாவுரிமை கிடைத்துள்ளது .டொன்ன ஹெஹிர் எனப்டும் குறித்த பெண் கடந்த 70 வருடங்களுக்கு முன் கனடாவுக்கு வந்துள்ளார். கடந்த வருடம் இவர் கடவுச்சீட்டை எடுப்பதற்கு முயற்சித்தபோது, அவர் கனேடிய நாட்டவர் அல்ல என்று தெரிவித்து கடவுச் சீட்டை வழங்க அரசு மறுத்தது. அவர் தான் கனேடியப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்றும், தனக்கு கனடாவில் வாக்குரிமை இருக்கும் அதேவேளை, தான் வரி செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டதுடன், இந்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், அண்மையில் அவர் கனேடியப் பிரஜை என்று உறுதியாகியிருப்பதாகவும், விரைவில் அவருக்கு அங்கு கடவுச்சீட்டைப…
-
- 0 replies
- 600 views
-
-
கனடாவில் கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் கனேடியர்களின் வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பின் அளவை விட, அவர்கள் பெற்ற கடன்களின் அளவில் நிலவிய அதிகரிப்பு அதிகமானதென கனடா புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகிறது. கனேடியர்களின் செலவிடக்கூடிய வருமானத்தின் 163.3 சதவீதமாக அவர்களது கடன்கள் இருப்பதாக அது தெரிவித்தது. ஒவ்வொரு டொலர் வருமானத்திற்கும், கனேடியர்களக்கு சராசரியாக 163 சதம் கடன் இருந்ததென்பதை அது காட்டுகிறது,எனவும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகிறது. - See more at: http://www.canadamirror.com/canada/39267.html#sthash.GqQMu9jU.dpuf
-
- 0 replies
- 385 views
-
-
கன்சர்வேடிவ் கட்சித் தேர்தல்: முதல் சுற்றில் வென்றார் தெரெசா மே பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு நடக்கும் தேர்தலின் முதல் சுற்றில், உள்துறை அமைச்சர் தெரெசா மே, தெளிவான பெரும்பான்மையுடன் வென்றுள்ளார். முதல் சுற்றில் வென்றார் தெரெசா மே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் அமைந்ததை அடுத்து, பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகவுள்ள நிலையில், புதிய பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சிப்பிரிவின் தலைவர் தேர்தல் நடக்கிறது. ஒட்டுமொத்த கன்சர்வேடிவ் கட்சியின் ஆதரவையும் பெறுபவராக தான் மட்டுமே இருப்பதை இந்தத் தேர்தல் முடிவு காட்டுவதாக தெரெ…
-
- 5 replies
- 424 views
-
-
இங்கிலாந்து பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையை இரண்டு நாடுகளாக பிரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும் இது நாட்டின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய தாக்குதல் எனவும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தல் இந்த மாதம் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்காக அந்நாட்டின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கடந்த மாதம் 25 ஆம் திகதி வெளியிட்டது. இலங்கையில் காணப்படும் பிரச்சினைக்கு தீர்வாக…
-
- 0 replies
- 417 views
-
-
பெங்களூர் தமிழ்ச் சங்கம் மீதும் தாக்குதல் பெங்களூர்: பெங்களூர் அல்சூரில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் மீதும் கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். ற்கு நேற்று 20 பேர் கொண்ட கும்பல் வந்தது. வெளியில் உள்ள தட்டிகள் மற்றும் போர்டுகளை அவர்கள் தாக்கி சேதப்படுத்தினர். இரண்டு பேர் உள்ளே வந்து சில பிட் நோட்டீஸ்களை போட்டு விட்டுச் சென்றனர். ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் நேற்று தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட 2 தியேட்டர்கள் சூறையாடப்பட்டன. இதி்ல் நடராஜ் தியேட்டருக்குள் புகுந்து நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இந்த தியேட்டர்களின் முன் வைக்கப்பட்டிருந்த சினிமா படங…
-
- 6 replies
- 1.5k views
-
-
11 கன்னியாகுமரி மீனவர்களை பிடித்துச் சென்ற, மாலதீவு கடற்படை! சென்னை: சர்வதேச கடல் எல்லையை மீறி தங்கள் கடல் எல்லையில் புகுந்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை மாலத் தீவு கடற்படை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவருமே தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தேன்துறையை, முள்ளுத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது குறித்து துத்தூர் பஞ்சாயத்துத் தலைவரான ஜான் அலோஸியஸ் கூறுகையில், இரவிபுத்தேன்துறையை, முள்ளுத்துறை ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு மீன் பிடி படகில் கடந்த 23ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். ஆனால், ஒரு வாரம் ஆகியும் அவர்கள் திரும்ப வரவில்லை. இந் நிலையில் மாலத்தீவு கடற்படையிடமிருந்து படகின் உரிமையாளரின் மனைவிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர்க…
-
- 8 replies
- 882 views
-
-
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை பாதுகாக்க கோரி நடைபெற உள்ள போராட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்க உள்ளதாக அக்கட்சியின் எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"கன்னியாகுமரியில் விவேகானந்தர் ஜெயந்தியையொட்டி நடைபெறும் விழா வில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன். திமுக தலைவர் கருணாநிதி வருகிற 19 ஆம் தேதி திருவள்ளுவர் சிலையை பாதுகாக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அதில் தலைவர் கருணாநிதி,பேராசிரியர் அன்பழகன்,பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.நமது கலாச்சாரம், மொழி, இனம், பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்ட…
-
- 0 replies
- 416 views
-
-
கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று இரவு நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வெளியே படுத்துத் தூங்கினர். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று இரவு 8.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இரவு 10.07 மணியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. வீடுகளில் இருந்த பொருட்கள் ஆட்டம் கண்டன, கட்டில்கள் ஆடின, சில பொருட்கள் கீழே விழுந்து உடைந்தன. சில வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். வீடுகளை விட்டு வேகம் வேகமாக வெளியேறி தெருக்களில் கூடி நின்றனர். சுனாமி வருமோ என்ற அச்சமும் மக்களிடையே காணப்பட்டது. நில அதிர்வு சில விநாடிகளே நீடித்த…
-
- 1 reply
- 890 views
-
-
கன்னியாஸ்த்திரிகளை பாலியல் அடிமைகளாக நடத்திய கத்தோலிக்க ஆயர்களும் குருமாரும் - பாப்பாண்டவர் தகவல் தற்போதைய கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரும், உயர் குருவுமான பாபாண்டவர் பிரான்ஸிஸ் அவர்கள், கத்தோலிக்க ஆயர்களும் குருக்களும் பல கன்னியாஸ்த்திரிகளை பாலியல் அடிமைகளக நடத்திவந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். அவரது கருத்துப்படி, தனக்கு முன்னால் ப்பாப்பாண்டவராகக் கடமை புரிந்த பெனெடிக்ட் அவர்கள் இந்தப் பாலியல்க் கொடுமைகள் நிமித்தம் ஒரு கன்னியாஸ்த்திர்கள் சபையையே கலைத்துவிட நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறுகிறார். கத்தோலிக்கத் திருச்சபையினுள் கன்னியாஸ்த்திரிகளுக்கெதிரான வன்கொடுமைகள் பற்றி இதுவே முதன் முதலாக ஒரு பாப்பாணடவரால் வெளிக்கொண்டுவரப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. …
-
- 1 reply
- 822 views
-
-
கபில் தேவ், கவாஸ்கர், சித்து, ஆமீர்கான் ஓ.கே - பரிசீலனையில் மோடி உள்ளிட்ட சார்க் தலைவர்கள் பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் விழாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைக்கலாமா? என்ற ஆலோசனையில் வெளியுறவு துறை ஈடுபட்டுள்ளது. #ImranKhan #Pakistan இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்கள் வென்ற இம்ரான்கானின் பிடிஐ கட்சி சிறிய கட்சிகள் உதவியுடன் ஆட்சியமைக்க உள்ளத…
-
- 2 replies
- 472 views
-
-
03 JUN, 2025 | 11:01 AM இஸ்ரேலின் முற்றுகையை உடைப்பதற்காக புறப்பட்டுள்ள கப்பலில் காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கும் பயணிக்கின்றார். காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக தனது கப்பல் சிசிலியிலிருந்து புறப்பட்டுள்ளது என சர்வதேச இலாபநோக்கமற்ற அமைப்பான பீரிடம் புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு முன்னர் இதேபோன்றதொரு முயற்சியில் ஈடுபட்டபோதும் அது மத்தியதரை கடலில் இடம்பெற்ற ஆளில்லா விமான தாக்குதலால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த கப்பலில் கிரெட்டாவுடன் பிரான்ஸின் பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட அரசியல்வாதி ரிமா ஹசனும் பயணம் செய்கின்றார். இந்த கப்பல் கட்டானியா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட அளவு நிவாரணங்களையே கொண்…
-
- 6 replies
- 424 views
- 1 follower
-
-
கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு உள்ளிட்ட... அதி நவீன ஆயுதங்களை, உக்ரைனுக்கு வழங்கும் சுவீடன்! உக்ரைனுக்கு தனது மூன்றாவது உதவிப் பொதியை வழங்குவதாக, சுவீடனின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த உதவிப் பொதியின் மூலம், உக்ரைனியப் படைகள் ரோபோ 17 கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பைப் பெறும். தற்போதைய சூழ்நிலையில், சுவீடனின் ரோபோ-17 நன்கொடையானது உக்ரைனிய இராணுவத்திற்கு மிகவும் தேவையானதொன்றாக கருதப்படுகின்றது. ரோபோ- 17 அமைப்பைத் தவிர, 102 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொகுப்பில் உக்ரைனிய மத்திய வங்கியின் நிதி மற்றும் உக்ரைனிய ஆயுதப் படைகளுக்கான நேட்டோவின் நிதி ஆகிய இரண்டிற்கும் நிதியுதவியும், 5,000 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் ஏ.டி.4 இலகுரக ஆயுத எதி…
-
- 0 replies
- 234 views
-
-
கப்பல்களை தாக்க பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களில் கனேடிய பாகங்கள்: ரஷ்யா குற்றச்சாட்டு! கிரிமியாவில் உள்ள கருங்கடலில் ரஷ்ய கப்பல்களை தாக்க பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களில், வழிசெலுத்தல் அமைப்புகளில் கனேடிய தயாரிப்பான பாகங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள கருங்கடலில் 16 உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் ரஷ்ய கப்பல்களை தாக்க முயற்சித்ததாகவும் செவஸ்டோபோல் விரிகுடாவில் நடந்த இந்த தாக்குதலை ரஷ்ய கடற்படை முறியடித்தாகவும் ரஷ்யா கூறியுள்ளது. இதுதொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வான்வழி வாகனங்களில் காணப்பட…
-
- 5 replies
- 994 views
-
-
கமரூனில் கடத்தப்பட்ட 77 மாணவர்கள் விடுதலை November 7, 2018 மத்திய ஆபிரிக்க நாடான கமரூனில் பாடசாலை ஒன்றிலிருந்து கடத்தப்பட்ட 77 மாணவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கமரூனில் பமிண்டா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் என 80க்கும் மேற்பட்டோர் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளால் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது கடத்தப்பட்ட 77 பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் எனினும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் தொடர்ந்தும் தீவிரவாதிகளின் கட்டுப்பாடிலேயே இருப்பதாகவும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடத்தலுக்க…
-
- 0 replies
- 481 views
-
-
கமரூனில் பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்கள் பலர் கடத்தல் November 5, 2018 ஆபிரிக்க நாடான கமரூனின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையிலிருந்து பெருமளவு மாணவர்கள் ஒட்டுமொத்தமாக கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. வட மேற்கு பிராந்தியத்தின் தலைநகர் பேமெண்டாவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறைந்தது 79 மாணவர்கள் கடத்தப்பட்டதாக அரச மற்றும் ராணுவத் தகவல்களை மேற்கோள் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஆயுதம் தாங்கிய நபார்கள் இன்று திங்கட்கிழமை காலை அவர்களைக் கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கமரூனின் வட மேற்கு மற்றும் தென் மேற்கு பிராந்தியங்கள் அண்மைக்காலமாக பிரிவினைவாதக் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் பேசும் இரண்டு பகுதிகளை த…
-
- 0 replies
- 459 views
-
-
பைடன் மருத்துவமனையில் - கமலா அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியானார் Biden briefly transfers power to Harris, making her the 1st woman in U.S. history to hold powers of the presidency
-
- 17 replies
- 1.1k views
- 1 follower
-