உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26704 topics in this forum
-
[size=5]ஒலிம்பிக் போட்டிகளுக்காக லண்டன் சென்றுள்ள கனடிய அணியினர் எத்தனை பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பர் என்பதே தற்போது கனடாவில் உள்ள விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் நோக்கும் விடயமாகி விட்டது. பதக்கப் பட்டியலில் முதல் நாடாக கனடா வருவது சாத்தியமே இல்லை என்பதால் தர வரிசைப் பட்டியலில் முதல் 12 நாடுகளில் ஒன்றாக இடம் பெற்று விட வேண்டும் என்பதே தற்போது கனடாவின் இலக்கு. கடந்த ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெற்ற போது முதல் 7 நாட்களிலும் கனடாவால் பதக்கங்கள் பெற முடியாமல் போனது பெரும் பின்னடைவினை ஏற்படுத்தியதால் இந்த ஒலிம்பிக்கில் முதல் ஏழு நாட்களில் பெறப் போகும் பதக்கங்களே கனடிய அணிக்கு வலுச் சேர்க்கும் என்கின்றனர் இத்துறை வல்லுனர்கள். கன…
-
- 0 replies
- 414 views
-
-
சிவாஜி பிறந்த நாளில் புதிய கட்சி: நடிகர் பிரபு திங்கள்கிழமை, ஜூன் 23, 2008 சேலம்: நடிகர் திலகம் சிவாஜியின் 80 வது பிறந்த தினமான அக்டோபர் முதல் தேதியன்று அரசியில் பிரவேசம் நடைபெறும் என நடிகர் பிரபு கூறியுள்ளார். சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரபு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறஉகையில், சேலத்திற்கும் எங்களது குடும்பத்திற்கும் நெருங்கிய உறவு உள்ளது. எனது தந்தை ஏழு வயதில் சேலத்தில் தான் முதன் முதலில் நாடக நடிகர் ஆனார். எனது தந்தை மேல் உயிராக உள்ள ரசிகர்களுக்காகவும், ஏழை மக்களுக்காக உதவி செய்யவும் சிவாஜி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு வருடமும் 100 ஏழை மாணவ…
-
- 21 replies
- 3.7k views
-
-
முழு சூரிய கிரகணம்: இருளில் மூழ்கிய இந்தோனேசியாவின் சில பகுதிகள் இந்தோனேசியாவின் டெர்னேட் தீவின் கடற்கரையில் சூரிய கிரகணத்தை கண்டு களிக்கும் மக்கள். | படம்: ராய்ட்டர்ஸ். சென்னை, பெசண்ட் நகர் எலியட்ஸ் பீச்சில் சூரியகிரகணத்தைப் பார்க்கும் சிறுவர்கள். | படம்: எம்.கருணாகரன். முழு சூரிய கிரகணத் தாக்கத்தினால் இந்தோனேசியாவின் சில பகுதிகள் 2 நிமிடங்களுக்கும் மேல் இருளில் மூழ்கியது. முழு சூரிய கிரகணம் புதன் காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை ஏற்பட்டது. இந்த சூரிய கிரகணத்தை உலகின் பல பகுதிகளிலும் மக்கள் கண்டு களித்தனர். இந்த ச…
-
- 0 replies
- 302 views
-
-
பாகிஸ்தானில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டு அவர்களின் மத சுதந்திரம் பறிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ (Mike Pompeo) குற்றம் சாட்டி உள்ளார். 27 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச மத சுதந்திர கூட்டணி அமைப்பை (International Religious Freedom Alliance)வாஷிங்டனில் துவக்கி வைத்து பேசுகையில் அவர் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தார். பாகிஸ்தானைப் போன்று நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும், பர்மாவில் முஸ்லீம்களும், ஈராக்கில் யசீதிகளும் தீவிரவாதிகளாலும், வன்முறையாளர்களாலும் தாக்கப்படுவதாக அவர் கூறினார். பாகிஸ்தானில் இந்து வழிபாட்டுத் தலங்கள் அடித்து நொறுக்கப்படுவதுடன், இந்துப் பெண்கள் கட்டாய மத மாற்றத்திற்கு பின் திருமணம் செய்யப்படுவதாக அடிக…
-
- 0 replies
- 921 views
-
-
கேட்டி சூறாவளியின் காரணமாக இங்கிலாந்திலும் வேல்ஸிலும் 105 மைல் வேகத்தில் காற்று வீசியதால் பல விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் முக்கியமான பாலங்கள் மூடப்பட்டன. லண்டன் கட்விக் விமான நிலையத்திற்கு வர வேண்டிய 20 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதுடன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கான 60 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் 5,000 இல்லங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் 23 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று மிகப் பெரிய பாலங்கள் மூடப்பட்டுள்ளன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130508/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 296 views
-
-
பதவி விலக மாட்டேன்: மன்மோகன் சிங் திட்டவட்டம் Posted Date : 15:06 (31/08/2012)Last updated : 15:39 (31/08/2012) புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பா.ஜனதாவின் கோரிக்கையை நிராகரித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், எதிர்கட்சிகளின் நிர்ப்பந்ததிற்கு பணிந்து, தாம் பதவி விலகப்போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். இது விஷயத்தில் மவுனமாக இருப்பதே சிறந்தது என்று கூறியுள்ள அவர், நாடாளூமன்றத்தை முடக்குவது ஜனநாயக விரோதம் என்றும்,நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தைப் பயன்படுத்தி மத்திய…
-
- 7 replies
- 646 views
-
-
பிரித்தானியாவில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! பிரித்தானியாவின் பிரதமராக கியர் ஸ்டார்மர் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டின் குடியேற்றச் சட்டங்களில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அந்தவகையில் தற்போது பிரித்தானியாவில் குடியுரிமை பெற தேவையான கால அவகாசம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளமை பிரிட்டனில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பிரித்தானியாவில் குடியேற ஆங்கில மொழித் தகமை மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமான குறித்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் நாட்டி…
-
- 0 replies
- 187 views
-
-
Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 12:28 PM ரஸ்ய, இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் எச்சரித்துள்ளார். மோதல்களில் நடைபெறும் பகுதிகளில் பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தரப்பினர் பட்டியலில் ரஸ்ய, இஸ்ரேலிய படையினரும் சேர்க்கப்படலாம் என அவர் எச்சரித்துள்ளார். ஐக்கிய நாடுகளால் தொடர்ந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ள சிலவகையான பாலியல் வன்முறைகளின் வடிவங்கள் குறித்த குறிப்பிடத்தக்க கவலையின் விளைவு இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மோதல்களின் போது இடம்பெறும் பாலியல் வன்முறைகள் குறித்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கான தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர், பாலியல் வன்முறை மற்றும் ஏனைய பாலியல் ன்வன்முறை வட…
-
- 2 replies
- 208 views
- 2 followers
-
-
அவுஸ்திரேலியாவுக்கு செல்பவர்களை தனிமைப்படுத்த தீர்மானம் – ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா March 15, 2020 உலகெங்கும்; அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று தங்கள் நாட்டில் மேலும் பரவாத வகையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்பவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 249 ஆக உயர்ந்துள்ளதுடன் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தநிலையிலேயே அவுஸ்திரேலியா இவ்வாறு முடிவெடுத்துள்ளது. இதற்கான உத்தரவை நேற்று சனிக்கிழii நள்ளிரவு பிறப்பித்த பிரதமர் ஸ்கொட் மாரிசன், எமது வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களுக்கு நாம் பழகிக் கொள்ள வேண்டியுள்…
-
- 0 replies
- 290 views
-
-
தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா? in அதிகார வர்க்கம், சட்டங்கள் - தீர்ப்புகள், சாதி, தீண்டாமை, தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், நீதிமன்றம், பயங்கரவாதப் படுகொலைகள், பார்ப்பன இந்து மதம், பெண், போராடும் உலகம், போலீசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்கள் நாள்தோறும் பன்மடங்கு பல்கிப் பெருகி வருகின்றன. இதில் மாறுபட்ட கருத்தோ இருவேறு கருத்தோ கிடையாது. அத்தாக்குதல்களைத் தொடுப்பவர்களின் தரப்பை பல்வேறு வகைகளிலும் அளவுகளிலும் நியாயப்படுத்துபவர்களும் கூட, இந்த உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள். ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்களுக்கு இணையாக அரசு எந்திரத்தின் ஆயுதப் படையாகிய போலீசும் இந்தக் கிரிமினல் க…
-
- 0 replies
- 769 views
-
-
கனடாவில் காட்டுத் தீயினால் மீட்பு பணிகள் பாதிப்பு : 80 ஆயிரம் மக்கள் வெளியேற்றம் (வீடியோ இணைப்பு) கனடாவில் அதிகரித்து வரும் காட்டுத் தீயால் மீட்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள காடுகளில் கடந்த செவ்வாய் கிழமை முதல் தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுத் தீ அல்பெர்டா மாகாணத்தின் சில நகரங்களை முற்றிலுமாக அழித்து விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். காட்டுத் தீயால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஃபோர்ட் மெக்மர்ரி நகரிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள், விமானம் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். அங்கிர…
-
- 1 reply
- 520 views
-
-
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடல் வழி முற்றுகைப் போராட்டத்தில் ஆயிரம் ஆயிரமாய் படகுளில் மீனவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒரு படகில் அணு உலைக்கு எதிரான கலை நிகழ்ச்சியும் நடந்த வண்ணம் உள்ளது. பறை இசை ஒரு பக்கம் முழங்க , மறுபக்கம் அணு உலைகளை இழுத்து மூடு என்கிற முழக்கங்களும் எழுப்பட்டு வருகிறது . சுற்றியுள்ள படகுகளில் வழக்குரைஞர் குழுவும் பங்கு கொண்டுள்ளது. கரையில் இருந்து இந்நிகழ்வை கூர்ந்து கவனித்து கொண்டிருகின்றனர் காவல் துறையினர். http://thaaitamil.com/?p=34684
-
- 1 reply
- 669 views
-
-
ஜெலென்ஸ்கி: ஐரோப்பிய ஒன்றியம் ஒரு மாதத்திற்குள் 20வது ரஷ்யா தடைகள் தொகுப்பைத் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. KATERYNA TYSHCHENKO - 9 நவம்பர், 20:06 உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி. புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் 3185 - ஐரோப்பிய ஒன்றியம் அதன் 20வது ரஷ்ய தடைகள் தொகுப்பை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது என்றும், இது ஒரு மாதத்திற்குள் தயாராகும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன் ரஷ்ய சட்ட நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி வளங்களிலிருந்து லாபம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் உக்ரைனிய குழந்தைகளை கடத்துவதில் ஈடுபட்டுள்ள நபர்களைச் சேர்க்க முன்மொழிந்துள்ளது. மூலம்: ஜெலென்ஸ்கியின் மாலை உரை மேற்கோள்: " எங்கள் EU கூட்டாளர்களுடன் ச…
-
- 0 replies
- 125 views
-
-
சென்னை: இலங்கை கடற்படையுடன், இந்திய கடற்படை கூட்டு ரோந்து செல்வது உகந்ததாக இருக்காது. எனவே இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இலங்கை கடற்படையினரின் கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டிற்கு ஏராளமான மீனவர்கள் பலியாகி வருகின்றனர். இதுதொடர்பாக சமீபத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், இனி இலங்கை கடற் படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த மாட்டார்கள் என்று இலங்கை உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தார். …
-
- 0 replies
- 639 views
-
-
துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்:குளோபல் தமிழ்ச் செய்தியாளர் துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusogluஇலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் வாரத்தில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக துருக்கி வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரை சந்திக்க உள்ளார். சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது. இரு தரப்பு உறவுகளை வலுப்டுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamiln…
-
- 0 replies
- 316 views
-
-
[size=4] உலகின் மிகக் கூடுதலான எண்ணை ஏற்றுமதி செய்யும் சவுதி அரேபியாவில் மன்னராட்சி நிலவுகிறது. மக்களுக்கு எதுவித தனிநபர் சுதந்திரமும் வழங்கப்படவில்லை. என்றாலும் ஆட்சி மாற்றங்களை தூனீசியா, எகிப்து, லிபியா, யேமன் ஆகியவற்றில் ஏற்படுத்திய அரபு வசந்தம் சவுதி அரேபியாவில் பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை.[/size][size=4] மத்திய கிழக்கு விவகாரங்களை ஆய்வு செய்வோர்களுக்கு விதிவிலக்காக அமையும் சவுதி அரேபியாவை ஆழமாகக் கற்க வேண்டியுள்ளது. அப்துல் அசிஸ் இபின் சவுத் (Abdul Aziz ibn Saud) என்ற மன்னர் சவுதி அரேபிய மன்னர் பரம்பரையை தொடக்கி வைத்தார். அவருடைய சவுத் (Saud) என்ற பெயர் இந்த நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.[/size][size=4] [/size][size=4] அப்துல் அசிஸ் இபின் சவுத் 1953ல் காலமான…
-
- 0 replies
- 1k views
-
-
எல்லையில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே மோதல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு இந்திய சீன எல்லையான சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் இன்று இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பதிவு: மே 10, 2020 15:05 PM சிக்கிம், பாகிஸ்தானைப் போல் மற்றொரு அண்டை நாடான சீனாவும் ஏதாவது ஒரு வகையில் இந்தியாவுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசல பிரதேசத்துக்கு சீனா அநியாயமாக உரிமை கொண்டாடி வருகிறது. சீன ராணுவம் அவ்வபோது இந்திய நிலைகளுக்கு ஊடுருவதும், இந்திய ராணுவம் எதிர்ப்பு தெரிவிக்கவும் திரும்பி செல்லும் சம்பவங்கள…
-
- 1 reply
- 629 views
-
-
பாலஸ்தீனத்து மீது 5வது நாளாக தாக்குதலை நடத்துகிறது இஸ்ரேல் Published: Sunday, November 18, 2012, 13:15 [iST] காசா: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் காசா பகுதி மீது இஸ்ரேல் இன்று 5வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 8 குழந்தைகள் உட்பட 47 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித்தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் இயக்க மூத்த தளபதி ஜபாரி உயிரிழந்தார். ஹமாஸ் இயக்கத் தலைமையகம் மற்றும் ஹமாஸ் ஆதரவு தொலைக்காட்சி நிலையம் ஆகியவை நிர்மூலமாகின. இதில் 6 பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்தனர். காசா பகுதியிலிருந்தும் பல நூறு ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டு வருகின்றன. …
-
- 6 replies
- 908 views
-
-
பிரிவு 50-ஐ பிரிட்டன் பிரயோகிக்கும் வரை வெளியேறுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெறாது - ஜெர்மனி பிரிவு 50 என்று அறியப்படும் முறையான வழிமுறையை லண்டன் தொடங்குவது வரை, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிபந்தனைகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்று ஜெர்மானிய சான்சலர் ஏங்கெலா மெர்கலின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் பிரிவு 50-யை தொடங்கினால் தான் வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் - ஜெர்மனி ஒரு தேக்கநிலையை யாரும் விரும்பவில்லை என்று ஸ்டெஃபென் செய்பர்ட் கூறியிருக்கிறார். பிரிட்டிஷ் அரசின் நிலைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகப் பரப்புரை கொண்ட முக்கிய நபர்களின் நிலைக்கும் முரண்பாடாக இந்த நிலைபாடு உள…
-
- 0 replies
- 445 views
-
-
வுகான் சந்தையில் உருவாகவில்லையா கொரோனா வைரஸ்?- விஞ்ஞானிகள் கருத்தால் புதிய குழப்பம் கண்ணுக்கு தெரியாத இந்த கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே? சீனாவின் மத்திய நகரமான வுகானில் உள்ள விலங்குகள் சந்தையில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி இந்த வைரஸ் முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அந்த வைரஸ் காட்டுத்தீ போல பரவத்தொடங்கியதும் அந்த சந்தை மூடப்பட்டு விட்டது. இந்த 5 மாத காலத்தில் சுமார் 200 நாடுகளில் இந்த கொடிய வைரஸ் கால் பதித்து விட்டது. அந்த வகையில், ஏறத்தாழ 57 லட்சம் பேரை உலகமெங்கும் இந்த வைரஸ் பாதித்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்றும் பலன் இன்றி 3 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சர…
-
- 0 replies
- 456 views
-
-
உலகளவில் தரமான வாழ்க்கைக்கு உரிய நகரங்களின் வரிசையில் கனடாவின் வான்கூவர் ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளது. கனடாவின் Mercer ஆய்வகம் உலகளவில் தரமான வாழ்க்கைக்கு உரிய நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இப்பட்டியலில் வியன்னா முதலிடத்திலும், ஜுரிச் இரண்டாமிடத்திலும், ஆக்லாந்து மூன்றாமிடத்திலும், மியூனிச் நான்காமிடத்திலும் மற்றும் வான்கூவர் ஐந்தாமிடத்திலும் உள்ளது. மேலும் கனடாவின் ஒட்டாவா(14), டொரோண்டோ(15), மொன்றியல்(23) மற்றும் கேல்கரி(32) போன்ற நகரங்களும் இடம்பெற்றுள்ளன. வாழ்க்கைதரம் குறைந்த நகரங்களின் பட்டியலில் சூடான், சாட், போர்ட் ஆப் பிரின்ஸ் மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் பாங்கூய் போன்றவை இடம்பெற்றுள்ளன. http://www.canadamirror.com/canada/2709.html
-
- 0 replies
- 485 views
-
-
அமெரிக்காவில் ஆண்டு தோறும் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான உணவுப் பொருட்கள் வீணாகிறது.செல்வசெழிப்புமிக்க அமெரிக்காவில் உணவுக்கு பஞ்சமில்லை. ஆனால் அதை அமெரிக்கர்கள் சரிவர பயன்படுத்தாமல் வீணடிக்கின்றனர். இந்த தகவல் சமீபத்தில் தேசிய அளவில் எடுக்கப்பட்ட சர்வே மூலம் தெரியவந்துள்ளது.இங்கு ஆண்டுதோறும் 5,886 கோடி கிலோ எடையுள்ள உணவு பொருட்களை இங்கு வாழும் மக்கள் வீணடிக்கின்றனர். அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.11 லட்சம் கோடி (160 மில்லியன் டாலர்) என கணக்கிடப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் வீணாவது குறித்து அமெரிக்க அரசு கவலைப்படுகிறது. எனவே அதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அளவுக்கு மீறி உணவு பொருட்கள் தயாரிப்பதால் சாப்பிட முடியாமல் காலாவதி ஆ…
-
- 0 replies
- 280 views
-
-
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ்: "போர்க்கால அவசரநிலை" அமல் - என்ன நடக்கிறது அங்கே? 19 ஜூலை 2020, 04:43 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் Getty Images கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் "போர்க்கால அவசரநிலை" அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக 17 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமையன்று அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதாகக் க…
-
- 1 reply
- 1.1k views
-
-
வாஷிங்டன்: பெரும் சர்ச்சைக்குள்ளான குவான்டனாமோ தீவு முகாமை மூட அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஒரு ஆண்டில் இந்த தீவு முகாமின் செயல்பாடுகள் முழுமையாக முடிவுக்கு வரும். கியூப கடல் பகுதியில் உள்ள குவான்டனாமோ தீவில் அமெரிக்க கடற்படையின் சிறை முகாம் உள்ளது. இங்கு பல்வேறு கைதிகள் உள்ளனர். நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம் தொடர்பான கைதிகளும், ஈராக் கைதிகளும் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அமெரிக்க அதிகாரிகள் கொடூரமாக சித்திரவதை செய்வதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தன. இந்த சிறை முகாமை மூட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் இந்தக் கோரிக்கைகளை முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் நிராகரித்து வந்தார். ஆனால் அதிபர் தேர்தல் பிரசாரத்தின்ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
பிரிட்டனின் மாபெரும் ரயில் கொள்ளை என்று வர்ணிக்கப்படும் கொள்ளையை 50 ஆண்டுகளுக்கு முன்னர் திட்டமிட்டு நடத்திய கொள்ளையன் ப்ரூஸ் ரெய்னால்ட்ஸ் இறந்துவிட்டார். லண்டனின் வடமேற்குப் பகுதியில் சென்று கொண்டிருந்த மெயில் ரயிலை தடுத்து நிறுத்தி, இன்றைய பண மதிப்பில் பார்த்தால், சுமார் 60 மில்லியன் டொலர்கள் பணத்தைக் கொள்ளையடித்த குழுவிற்கு ப்ரூஸ் ரெய்னால்ட்ஸ் தலைமை தாங்கினார். அவர் ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டு, பின்னர் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். விடுதலையான பின்னர் அவர் கொள்ளையடிப்பது தொடர்பாக தயாரான திரைப்படம் ஒன்றிற்கு ஆலோசகராக வேலைசெய்தார். "ஒரு திருடனின் சுயசரிதை" என்ற புத்தகத்தையும் எழுதினார். 81 வயதான அவர் தூக்கத்தில் இறந்தார் என்று அவரது மகன் கூறினார்…
-
- 0 replies
- 267 views
-