உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26709 topics in this forum
-
சலிப்பை தரும் பைடன் – டிரம்ப்? – மாற்றத்தை விரும்பும் மக்கள் அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இரு கட்சி ஜனநாயக முறை கடைபிடிக்கப்படும் அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் (80) அதிபராக பதவி வகிக்கிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக ஆதரவு சேகரித்து வருகிறார். பல வருடங்களாக இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கே அமெரிக்க மக்கள் மாறி மாறி வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், இரு முன்னணி வேட்பாளர்களை விட புதிய மற்றும் இளைய வயது வேட்பாளர்களை அமெரிக்கர்கள் களத்தில் காண விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் முன…
-
- 2 replies
- 451 views
-
-
மது போதையில் கார் விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து, மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மேலும், மும்பை விசாரணை நீதிமன்றத்திடம் ரூ.30,000 பிணைப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நடிகர் சல்மான் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான சல்மான் கானின் மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர் நீதிமன்றம் விசாரிக்கவுள்ள நிலையில், அவர் விடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2002-ல் இந்தி நடிகர் சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டியதில் ஒருவர் பலியான வழக்கில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் புதன்கிழமை பரப…
-
- 7 replies
- 3k views
-
-
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் வரும் மே 6-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மும்பை விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது. மதுபோதையில் கார் ஓட்டி, ஒருவர் இறக்கவும், நான்கு பேர் காயமடையவும் காரணமாக இருந்தார் என்று சல்மான் கான் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு மும்பை விசாரணை நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் நேற்றுடன் (திங்கள்கிழமை) வாதங்கள் முடிவடைந்தன. எனினும், ‘இந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சியாக இருக்கும் ரவீந்தர் பாட்டீலின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது. காரணம் அவர் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை' என்று சல்மானின் வழக்கறிஞர் கூறினார். ஆனால் குறுக்கு விசாரணை செய்வதற்க…
-
- 0 replies
- 198 views
-
-
சல்மான் ருஷ்டி யார்? முகமது நபியை அவமதித்ததாக முஸ்லிம்களின் வெறுப்புக்கு ஆளானது ஏன்? 13 ஆகஸ்ட் 2022, 02:27 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, 1993-இல் சல்மான் ருஷ்டி பிரிட்டனின் கிங் கல்லூரி தேவாலயத்துக்கு முன்பு எடுத்த படம் நியூயார்க்கில் கத்தியால் குத்தப்பட்ட சர் சல்மான் ருஷ்டிக்கு கடந்த அரை நூற்றாண்டாகவே தனது இலக்கியப் பணியின் காரணமாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. பிரிட்டிஷ் நாவலாசிரியரான சல்மான் ருஷ்டியின் பல புத்தகங்கள் இலக்கிய உலகில் பிரபலமானவை. அவரது இரண்டாவது நாவலான 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' 1981ஆம் ஆண்டில் புக்கர்…
-
- 7 replies
- 621 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினை…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
சல்மான், அசின் - இன உணர்விலும் சினிமாத்தனம்? இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த DABANGG என்ற படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படம் சென்னையில் மட்டும் நான்குக்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவே வேறு மாநிலமாக இருந்தால் இந்தப் படம் எந்த தடங்கலுமின்றி ஓடுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. ஈழப் படுகொலையை மறைப்பதற்காக பாசிஸ ராஜகப்சே அரசு வலிந்து நடத்திய ஐஃபா திரைப்பட விழாவில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என திரைப்பட கூட்டமைப்பு அறிவித்தது. மே 17 இயக்கம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. தமிழர்களின் உணர்வை புரிந்து கொண்ட அமிதாப்பச்சன் திரைப்பட விழாவின் தூதர் பொறுப்பிலிருந்து விலகியதோடு விழாவையும் புறக்கணித்தார். …
-
- 0 replies
- 715 views
-
-
ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் நடிகர் சல்மான்கான் வீட்டை இன்று முற்றுகையிட்டனர். இலங்கை அதிபருக்கான தேர்தல் வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்குள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ராஜபக்சேவுக்கு எதிராக களமிறங்கி உள்ளன. இதையடுத்து, இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தற்போதைய அதிபர் ராஜபக்சேவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி இலங்கையிலுள்ள பொரளை பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டு ராஜபக்சேவுக்…
-
- 1 reply
- 430 views
-
-
தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு மற்றும் பிலிம்சேம்பர் விடுத்த வேண்டுகோள் மற்றும் தடை எச்சரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டு, ஐஃபா விழாவில் பங்கேற்ற வட இந்திய நட்சத்திரங்கள் அனைவரது படங்களுக்கும் இன்றுமுதல் தடை விதிக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் 5 மாநிலங்களிலும் இந்த நடிகர் நடிகைகள் தொடர்புடைய எந்தப் படத்தையும் விநியோகஸ்தர்கள் வாங்க மாட்டார்கள், திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவும் மாட்டார்கள்.பெஃப்ஸி அமைப்பின் தலைவர் வி.சி.குகநாதன் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இலங்கையில் நடைபெறும் படவிழாவில் பங்கேற்க வேண்டாம் என்று தென்னிந்திய திரையுலகின் அனைத்து அமைப்புகளும் கேட்டுக் கொண்டன. அதை ஏற்று பலபேர் அவ்விழாவுக்கு செல்லவில்லை. எங்கள் வேண்டுகோளுக்கு மரி…
-
- 4 replies
- 440 views
-
-
பழங்குடி மக்கள் மீதான சல்வா ஜூதுமின் வன்முறைகளுக்குப் பழிவாங்கவே மே 25-ந் தேதி தாக்குதல் நடத்தப்பட்டதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மே 25-ந் தேதியன்று சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் அதிரடித் தாக்குதலை நடத்தினர். இதில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், முன்னாள் மாநில அமைச்சர் மகேந்திர கர்மா, முன்னாள் எம்.எல்.ஏ. உதய் முதியார் உள்ளிட்ட 27 பேர் கொல்லப்பட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா உள்ளிட்ட 36 பேர் படுகாயமடைந்தனர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீதான மாவோயிஸ்டுகளின் இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்நிலையில் மாவோயிஸ்டுகளின் தண்டகாருண்யா செய்தி…
-
- 4 replies
- 901 views
-
-
சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான சவர்க்காரம், கிருமிநாசினிகள், சலவைத்தூள்கள் மற்றும் துணிகளில் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதாக சுற்றுச்சூழல் நீதி மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த இரசாயனங்களால் சிறுநீரகநோய், புற்றுநோய், தைராய்ட், கர்ப்பம் தொடர்பான உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதோடு இரத்தம் மற்றும் தாய்ப்பாலின் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு இந்த இரசாயனங்கள் பரவ வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் செக் குடியரசில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுத் துறை நடத்திய ஆய்வில் நீரை வடிய விடும் துணியால் செய்யப்பட்ட ஏப்ரன்கள், ரெயின்கோட்கள் போன்றவற்றிலும் மோசமான இரசாயனங்கள் இரு…
-
- 0 replies
- 439 views
- 1 follower
-
-
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் ஒரு கொடூர கொலையாளி – ரகசியத்தை போட்டுடைத்த உளவுத்துறை முன்னாள் உயரதிகாரி! சவுதி இளவரசராக இருந்த முகமது பின் நயீப்பின் நீண்டகால ஆலோசகராக இருந்த அல்ஜப்ரி, சவுதி அரேபியாவின் இப்போதைய இளவரசர் ‘எம்பிஎஸ்’ என்றழைக்கப்படும் முகமது-பின்-சல்மான் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சவுதி உளவுத்துறை முன்னாள் உயரதிகாரி அல்ஜப்ரி கூறியிருப்பதாவது, “எம்பிஎஸ் கடத்தல் மற்றும் கொலைகளை மேற்கொள்ள “புலிப்படை” என்று அழைக்கப்படும் கூலிப்படையின் கொடூரமான கும்பலை நடத்துகிறார். MBS தனது மக்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த பூலோகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளார். எம்பிஎஸ் ஒரு மனநோயாளி, பச்சாதாபம் இல்லாதவர், உணர்ச்சிகளை உணரமா…
-
- 1 reply
- 422 views
-
-
சவுதி அரேபியா உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறு ஈரான் ஜனாதிபதிக்கு அழைப்பு? இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஒப்புக்கொண்ட ஒரு வாரத்திற்குள், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை உத்தியோகபூர்வ விஜயத்திற்கு சவுதி அரேபியா அழைத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த அழைப்பிதழ் மன்னர் சல்மானின் கடிதத்தில் வந்ததாக கூறப்படுகிறது, ஆனால் சவுதியால் இன்னும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. இரு நாடுகளும் வெளியுறவு அமைச்சர் மட்டத்தில் சந்திப்பை நடத்த ஒப்புக்கொண்டதாகவும், மூன்று சாத்தியமான இடங்கள் முன்மொழியப்பட்டதாகவும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார். ஆனால், இச்சந்திப்பு எப்போது நடைபெறும் மற்றும் …
-
- 1 reply
- 599 views
-
-
சவுதி அரேபியா எப்போதும் எங்கள் நண்பன்தான்: இம்ரான் கான் சவுதி அரேபியா எப்போதும் பாகிஸ்தானின் நண்பன்தான் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓஐசி) சர்வதேச அளவில் குரல் கொடுப்பதில்லையே என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு இம்ரான் கான் பதிலளித்துள்ளார். அதில், “ஆம். காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று விரும்புகிறோம். இருப்பினும் ஒன்றை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். சவுதி அரேபியா எப்போதும் எங்கள் நண்பன்தான்” என்று இம்ரான் கான் தெரிவித்தார். முன்னதாக, காஷ்மீர் விவகாரம் தொடர…
-
- 0 replies
- 333 views
-
-
சவுதி அரேபியா சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களை வழங்க தீர்மானம் ! சவுதி அரேபியா முதல் முறையாக சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களை வழங்க தீர்மானம் செய்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெட்ரோலிய கச்சா எண்ணெய் வளம் தவிர்த்து சுற்றுலாத் துறையின் மூலமும் வளர்க்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவர சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் திட்டமிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை முதல் முறையாக சவுதி அரேபியா வழங்குகிறது. இதுகுறித்து சவுதி அரேபியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் அகமது அல் காதீப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''சவுதி அரேபியாவை சர்வதேச சுற்றுலாவுக்…
-
- 0 replies
- 347 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டிவரும் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையை தாறுமாறாக விமர்சித்து வருகிறார்.ஜப்பானும், கொரியாவும் தங்களது அணு ஆயுத உற்பத்தியை பெருக்கிக் கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்ய வேண்டும் என சமீபத்தில் குறிப்பிட்ட டிரம்ப், சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை தேடிக் கொண்டார்.தற்போது, வடக்கு பசிபிக் பகுதியில் உள்ள 28 நாடுகளை சேர்ந்த அமைப்பான ‘நேட்டோ’ மீது சீறிப்பாய்ந்துள்ள டிரம்ப், இந்த அமைப்பே ’வீண்’ என்று குறிப்பிட்டுள்ளார். விஸ்கான்சின் மாநிலத்தில் ஆதரவு திரட்டிய அவர், முன்னர் செய்த குறைபாடுகளுக்கு அவர்கள் (நேட்டோ அமைப்பில் …
-
- 0 replies
- 599 views
-
-
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மானை விமர்சனம் செய்த 20க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்களை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது. சவுதி அரேபியாவின் அரசராக சல்மான் உள்ளார். அங்கு பட்டத்து இளவரசராக அவரது மருமகன் முகமது பின் நயீப் இருந்தார். ஆனால் திடீரென அங்கு பட்டத்து இளவரசர் மாற்றி அமைக்கப்பட்டார். ஜூன் 20ல் நடந்த அரச குடும்பத்து கூட்டத்தில் புதிய பட்டத்து இளவரசராக அரசர் சல்மான் மகன், முகமது பின் சல்மான் தேர்வு செய்யப்பட்டார். அதோடு துணை பிரதமர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. ராணுவம், எண்ணெய் வளம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் அனைத்து பொறுப்பும் ஒதுக்கப்பட்டது. ஒட்டுமொத்தத்தில் சவுதியில் மிகவும் சக்திவாய்ந்த அரச குடும்ப வாரிசாக அவர்…
-
- 0 replies
- 585 views
-
-
சவுதி அரேபியாயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 தமிழர்கள் பலி! ராமநாதபுரம்: சவுதி அரேபியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 தமிழர்கள் பலியாகியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியைச் சேர்ந்தவர் முகம்மது கில்மி (48), சவுதி அரேபியாவின் எல்லை பகுதியான நஸீரான் என்ற இடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளாக சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரக்கத்நிஷா, மகன் வாசிம் அக்ரம், மகள் அம்ஷத்நிஷா ஆகியோர் ஏர்வாடியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சவுதி அரேபியாவின் எல்லை பகுதியான நஸீரான் பகுதியில் ஏமன் நாட்டை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் நேற்று குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் முகம்மது கில்மி பலியாகியுள்ளார்.…
-
- 0 replies
- 692 views
-
-
சவுதி அரேபியாவின் எண்ணெய்வள அமைச்சர் பதவி நீக்கம் சவுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணெய் வள அமைச்சராக இருந்த அலி அல்-நய்மி அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எண்ணெய் வள அமைச்சரை பதவி நீக்கியது சவுதி அரசாங்கம் பரந்துபட்ட அளவில் மன்னாரால் மேற்கொள்ளப்பட்ட அரசாங்க சீர்திருத்ததின் ஒரு பகுதியாக அவரது பதவி நீக்கமும் இடம்பெற்றுள்ளது. அவருக்கு பதிலாக சுகாதார அமைச்சராக இருந்த காலிதி அல்-ஃபாலி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். எரிசக்தி மற்றும் தொழில்த்துறை என்ற புதிய அமைச்சுக்கு அவர் தலைமை வகிப்பார். முன்னர் மன்னர் சல்மானின் உத்தரவிற்கு அமைய மேலும் பல அமைச்சர்களும் மாற்றப்பட்டுள்ளனர். சவுதியின் பொருளாதாரம் எண்ணெய் ஏற்றுமதிய…
-
- 0 replies
- 378 views
-
-
சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது பின் சல்மான் நியமனம் By T. SARANYA 28 SEP, 2022 | 11:17 AM சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், மன்னர் கலந்துகொள்ளும் அமைச்சரவையின் வாராந்த அமர்வு இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் நடைபெறும். பட்டத்து இளவரசர் மன்னர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவை மறுசீரமைத்துள்ளார். மேலும், இராணுவ துணை அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மானை இராணுவ அமைச்சராக நியமித்து மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்தார். புதிய கல்வி அமைச்சராக யூசுப் பின் அப்துல்லா அல்-பென்யான் நியமிக்கப்பட்…
-
- 1 reply
- 354 views
- 1 follower
-
-
சவுதி அரேபியாவின் மரண தண்டனைகளை இந்த உலகம் ஆதரிக்கிறதா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புத்தாண்டை வரவேற்கிறார்கள். சிலர் கேக் வெட்டி, பலூன் வெடித்துக் கொண்டாடினார்கள். சவுதி அரேபியாவின் ஸ்டைல் சற்றே மாறுபட்டது. தலையை வெட்டி, துப்பாக்கியால் சுட்டு ரத்தக் கரங்களுடன் புத்தாண்டை வரவேற்றிருக்கிறது அந்நாடு. ஒரே நாளில் 47 குற்றவாளிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நாடு முழுவதிலும் உள்ள 12 சிறைச்சாலைகளைச் சேர்ந்த குற்றவாளிகள் கொல்லப்பட்டுவிட்டதாக கடந்த சனிக்கிழமை சவுதி அறிவித்துள்ளது. 8 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகளின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. மிச்சமுள்ளவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த அசாதாரணமான நிகழ்வை உலகம் எப்படி எதிர்கொண்டிருக்கிறது? …
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீது ஏவுகணை தாக்குதல் ஜெட்டா வுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் ம் ஈது ஏமனின் ஹவுத்தி படைகள் ஏவுகணையை வீசியதாக ஹவுத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார், ஆனால் சவுதி அதிகாரிகளிடமிருந்து உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை.இத்தாக்குதலில் அரம்கோவில் உள்ள ஒரு நிலையம் வெடித்து சிதறியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹவுத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரியா டுவிட்டர் பதிவில், ஏவுகணையைப் பயன்படுத்தி விடியற்காலையில் இந்த தாக்குதல் நடந்தது என்றும், அதன் இலக்கை விரிவாக விவரிக்காமல் தாக்கி…
-
- 0 replies
- 421 views
-
-
சவுதி அரேபியாவின் முக்கிய சமூக செயற்பாட்டாளர் 3 ஆண்டுகளின் பின் விடுதலை 24 Views சவுதி (Saudi Arabia)அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும், பல்வேறு விழிப்புணர்வுகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் சமூக செற்பாட்டாளரான லூஜின் அல் ஹத்லால். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் லூஜின் கைது செய்யப்பட்டார். லூஜினின் சிறைத் தண்டனைக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்நிலையில், 3 ஆண்டு சிறைத் தண்டனைக்கு பின் லூஜின் அல் ஹத்லால் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். ஆனால் அவரது விடுதலை குறித்து சவுதி அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும்…
-
- 0 replies
- 435 views
-
-
சவுதி அரேபியாவின் முடிவால் எண்ணெய் விலை சரிந்தது! சவுதி அரேபியாவின் முடிவால் சர்வதேச சந்தையில் நேற்றைய தினம் (26)எண்ணெய் விலைகள் 3 சதவீதத்துக்கு மேல் சரிவடைந்துள்ளதாக ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகின் முதன்மையான மசகு எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, டிசம்பர் மாதத்தில் OPEC உறுப்பினர்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் சேர்ந்து உற்பத்தியை உயர்த்த தீர்மானித்ததன் பின்னர் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெ்ய் ஒரு பீப்பாய்க்கு $1.86 அல்லது 2.53% குறைந்து 71.60 அமெரிக்க டொலர்களாக பதிவானது. அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $2.02 அல்லது 2.90% குறைந்து 67.67 அமெரிக்க டொலர்களாக பதிவானத…
-
- 0 replies
- 671 views
-
-
சவுதி அரேபியாவின் முதலீட்டு மாநாட்டை புறக்கணிப்போர் பட்டியல் வெளியானது! ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலையில் சவுதி அரேபியாவின் ஈடுபாட்டைத் தொடர்ந்து அங்கு இடம்பெறவுள்ள மிகப் பிரமாண்டமான முதலீட்டு மாநாட்டில் கலந்துகொள்வத்திலிருந்து வணிக உலகின் மிக சக்திவாய்ந்த முதலாளிகள் மற்றும் பல நாடுகளின் அரச அதிகாரிகள் விலகியுள்ளனர். ஆனாலும் ரியாத்தில் நடைபெறவுள்ள இம்மூன்று நாள் நிகழ்வானது நூற்றுக்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களின் வருகை எதிர்பார்ப்புடன் முன்னோக்கி செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செவ்வாயன்று ஆரம்பிக்கவுள்ள இம்மாநாட்டைப் புறக்கணிப்போரின் பட்டியலை கீழே காணலாம். சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் (Christ…
-
- 0 replies
- 418 views
-
-
சவுதி அரேபியாவின் ரியாத் நகரை குறிவைத்து ஏவுகணை வீச்சு! சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தை குறிவைத்து நேற்று ஏவுகணை ஒன்று வீசப்பட்டது. இதை ரியாத் காலித் சர்வதேச விமான நிலையம் அருகே சவுதி அரேபியா இடைமறித்து தடுத்தது. இதனால் பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டது. வீசப்பட்ட ஏவுகணை பர்கான் 2-எச் ரக ஏவுகணை ஆகும். இது 800 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக் கூடியது. ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த ஏவுகணையை சவுதி அரேபியாவை குறிவைத்து ஏவி உள்ளனர். உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 8.07 மணிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசுப்படைகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஏமன் அரசுக்கு ஆ…
-
- 0 replies
- 663 views
-