உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26905 topics in this forum
-
தமிழகத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படும் தாலி அகற்றும் விழாவுக்கு கடும் கண்டனங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் கைப்பேசி மூலம் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் வருகிற ஏப்ரல் 14ம் திகதி, தாலி அகற்றும் விழா நடத்தப்படும் என்று கி.வீரமணி அறிவித்திருந்தார். தி.க. சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 10 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தாலி அகற்றும் போராட்டம் தொடர்பாக திராவிடர் கழகத்தின் மகளிர் பாசறை சார்பில் தற்போது அறிவிப்பு ஒன்று வெளி…
-
- 20 replies
- 2.5k views
-
-
தனது சொத்து முழுவதையும் நன்கொடையாக வழங்கியோர் பட்டியலில் சேர்ந்துள்ளார் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக். இத்தகவலை பார்ச்சூன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இவரது 78.50 கோடி டாலர் சொத்தை தனது 10 வயது உறவுக்கார சிறுவனின் கல்லூரி படிப்புக்குப் பிறகு அறக்கட்டளைக்கு செல்லு மாறு திட்டமிட்டுள்ளார் குக். இவருக்கு திருமணமாகவில்லை. பார்ச்சூன் பத்திரிகை மதிப் பீட்டின்படி டிம் குக் வசம் உள்ள ஆப்பிள் நிறுவன ஸ்டாக்குகள் அடிப்படையில் அவரது சொத்து 12 கோடி டாலராகும். அத்துடன் அவர் கட்டுப்பாட்டில் உள்ள பங்குகளின் மதிப்பு 66.50 கோடி டாலராகும். 54 வயதாகும் டிம் குக், அறக் கட்டளைகளுக்கு அதிக நன் கொடை அளிக்கும் பெரும் பணக் கார கொடையாளிகள் பட்டியலில் சேர்ந்துள்ளார். …
-
- 1 reply
- 357 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கவனத்திற்கொள்ளாது ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளின் தடையை நீடித்துள்ளது என வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தினால் விடுதலைப் புலிகளின் தடையை நீடிக்க முடிந்துள்ளது என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்பு கொண்டு இந்த தடையை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த நவம்பரில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பெரட்ரிக்கா மொக்ஹெரன்னியுடன் தொடர்புகொண்டு இந்த தடையை நீடிக்குமாறு கோரியிருந்தார் என்றும் பெரேரா சுட்டிக்காட்டி…
-
- 0 replies
- 423 views
-
-
ஸ்ரீநகர்: உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி யில், ஆஸ்திரேலியாவிடம், இந்திய அணி தோல்வி அடைந்ததை, காஷ்மீர் மக்கள், பட்டாசு வெடித்து கொண்டாடினர். பா.ஜ., ஆதரவுடன், மக்கள் குடியரசு கட்சியை சேர்ந்த, முப்தி முகமது சயீத் தலைமையிலான ஆட்சி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடக்கிறது.கடந்த 26ம் தேதி, சிட்னியில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில்,இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடின.சமபலம் பொருந்திய இரு அணிகள் மோதியதில், இந்தியா 95 ரன் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.இந்திய அணி தோல்வி அடைந்ததை அறிந்தரசிகர்கள், தற்கொலை வரை சென்றனர். ஆனால், இந்திய அணியை சேர்ந்த, உமேஷ் யாதவை, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஸ்டார்க் அவுட்டாக்கி, பெவிலியனுக்கு அனுப்பிய போது, …
-
- 2 replies
- 447 views
-
-
ராகுல் காந்தியை காணவில்லை, கண்டுபிடித்து தகவல் தருவோருக்கு பரிசு என உத்தரப் பிரதேசத்தின் பல இடங்களில் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் தொடங்கியபோது, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நீண்ட விடுமுறையில் சென்றார். இது குறித்து அதிகளவில் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து ராகுல் 3 வாரத்தில் டெல்லி திரும்புவார் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா அறிவித்தார். அதன்பின் இரண்டு முறை தனது விடுமுறையை ராகுல் நீட்டித்தார். கட்சியை வலுப்படுத்துவது குறித்து உள்ளாய்வு செய்வதற்காக, அவர் கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று நீண்ட விடுப்பில் சென்றுள்ளார். அவர் இம்மாத இறுதியில் டெல்லி திரும்புவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெர…
-
- 1 reply
- 530 views
-
-
1,000 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று நாளை பூமியை மிக அருகில் கடக்க உள்ளதாகவும், 37 ஆயிரம் கிமீ வேகத்தில் வரும் இந்த விண்கல் பூமியில் மோதினால் ஒரு பெரிய நாட்டையே அழித்துவிடக் கூடிய அளவுக்கு அதன் தாக்கம் இருக்கும் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். '2014 ஒய்.பி.35' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள விண்கல்லானது, பூமியை நெருங்க 4,473,807 கிலோ மீட்டர்களை கடந்து பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 37 ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து வரும் இந்த விண்கல்லானது, பூமியின் மீது மோதினால் ஒரு நாட்டையே அழித்துவிடக் கூடிய அளவுக்கு ஆபத்தானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மிகவும் நெருக்கமாக வரும் இந்த விண்கல் பூமியின் மீது மோதினால், பருவநிலை மாற்றம், நிலநடுக்கம், சுன…
-
- 5 replies
- 1k views
-
-
TRIBUTE TO LEE KUVAN YEW FOR HIS LANGUAGE POLICY WHICH MADE SINGAPORE IS THE ONLY COUNTRY IN THE WORLD WHERE TAMILS ENJOY LINGUISTIC EQUALITY AND FREEDOM தனது இன மொழிச் சமத்துவ கொள்கையால் தமிழர் மொழிவாரி சுதந்திரத்துடனும் சமத்துவத்துடனும் வாழ்கிற ஒரே நாடாக சிங்கப்பூரை மேம்படுதியமைக்காக சிங்கை முதல்வர் லீ குவான் யூவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். சோசலிசமோ பொது உடமையோ முதலாளித்துவமோ பிரதேச இனங்களின் மொழிவாரிச் சமத்துவமில்லாத நாடு ஒரு நோயாளிதான். மொழிவாரிச் சமத்துவமின்மை உலக வல்லரசான சோவியத் ரூசியாவைக்கூட காப்பாறவில்லை. எழுபது வருடங்களாக ரூசிய மொழி படித்து அடங்கிக் கிடந்த மாநிலங்கள் வெளி எதிர்ப்பும் நெருக்கடியும் அதிகரித்தபோது ஒன்றாக நிற்காமல் பிரித்துக்கொண்டு ஓடிவிட்டன…
-
- 0 replies
- 987 views
-
-
தக்காளி சுவையூட்டி தயாரிப்புகளுக்கு பேர் போன ஹைன்ஸ் (Heinz) நிறுவனம், இன்னொரு பெரிய உணவுக் கம்பனியான கிராஃப்ட் (Kraft foods) நிறுவனத்துடன் இணைந்து, சுமார் 40 பில்லியன் டாலர்களுக்கும் அதிக பெறுமதி கொண்ட உலக உணவு நிறுவனத்தை உருவாக்க இணங்கியுள்ளது. இந்தப் புதிய கூட்டு நிறுவனமே அமெரிக்காவின் மூன்றாவது பெரிய உணவு மற்றும் குடிபான உற்பத்தி நிறுவனமாகும் என்று அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன. சீஸ் மற்றும் காப்பி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கிராஃப்ட் பிராண்டுகளின் கீழ் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்க வர்த்தகரான வாரன் பஃபெட்டினால் நிறுவப்பட்ட பேர்க்ஷயர் ஹாதவே (Berkshire Hathaway) நிறுவனத்துக்கும் பிரேஸில் முதலீட்டு நிறுவனமான 3-ஜி கெப்பிட்டல் நிறுவனத்துக்கும் சொந்தமானது தான் ஹைன்ஸ் நிறுவ…
-
- 0 replies
- 332 views
-
-
செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் பயணம்: 2 ஆண்டு தாமதம் நெதர்லாந்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் ‘மார்ஸ் ஒன்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அங்கு செல்பவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாது. அங்கேயே நிரந்தரமாக தங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை 4 பேர் செவ்வாய் கிரகத்துக்கு பயணம் செய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு பரிசோதனைகளுக்கு பின் இறுதியாக 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அமெரிக்கா புளோரிடா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் தரஞ்ஜித் சிங் பாட்டியா (29), துபாயில் வசிக்கும் ரித்திசாகிங் (29), கேரளாவை சேர்ந்த சாரதா பிரசாத் (…
-
- 5 replies
- 590 views
-
-
மனைவியின் மருத்துவ செலவுக்காக 35மைல் தூரம் நடக்கும் கணவன் மனைவி என்பவள் ஆணின் வாழ்க்கைக்கு மிக நெருங்கிய தொடர்புடையவள். ஓர் ஆணின் வெற்றி மற்றும் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பவள். குடும்ப உறவுகளைப் பேணி அதன் மூலம் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிகளைத் தருபவளே மனைவி என்று கூறுவதுண்டு. ஆனால், அவ்வாறான மனைவிக்கு கணவன் செய்வது என்ன? சுகயீனமுற்றிருக்கும் தனது மனைவியை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நாளொன்றுக்கு 35 மைல் தூரம் நடந்து செல்லும் நபர் பற்றி கேள்வியுற்றிருக்கின்றீர்களா? ஆம், ஸ்டீவன் சிம்ஓப் எனும் 61 வயதுடைய நபர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள டேவிஸ் நகரத்தில் வசிக்கின்றார். இவர் அமெரிக…
-
- 0 replies
- 364 views
-
-
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நடிகை குஷ்புவை அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி நியமனம் செய்துள்ளார். தி.மு.க.வில் சில ஆண்டுகாலம் இருந்து வந்த நடிகை குஷ்பு, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுடனான மோதலால் கட்சியை விட்டு விலகினார். பின்னர் பாரதிய ஜனதாவில் சேருவார் எனக் கூறப்பட்ட நிலையில் திடீரென சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸில் நடிகை குஷ்பு இணைந்தார். காங்கிரஸில் குஷ்பு இணைந்தது முதலே தமிழக காங்கிரஸ் கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் நடிகை குஷ்பு முன்னிலைப்படுத்தப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று நடிகை குஷ்புவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ச…
-
- 0 replies
- 475 views
-
-
பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. விமான விபத்தில் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் பிரெஞ்ச் அதிபர்ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான ஜெர்மன்விங்ஸின் விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விமானத்தில் 142 பயணிகளும், ஆறு பணியாளர்களும் இருந்ததாக உள்ளூர் செய்தி பத்திரிகை ஒன்று கூறுகிறது. விபத்துக்குள்ளான விமானம் பார்சிலோனாவிலிருந்து டசல்டார்ஃப்க்கு பறந்து கொண்டிருந்தது. டின் லே பான் நகருக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அபாய சமிஞ்கை வெளியிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன. அந்த விமானத்தில…
-
- 68 replies
- 4.1k views
-
-
இணையத்தில் ஆட்சேபத்திற்குரிய கருத்துக்களை வெளியிட்டால் கைது செய்வதற்கு காவல்துறையினருக்கு அதிகாரமளிக்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 ஏ பிரிவை ரத்து செய்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 66ஏ சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதால் அதனை ரத்துசெய்வதாக இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், இணையத்தில் சில கருத்துக்களை தடை செய்ய அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் தடுக்கவில்லை. சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரே மரணடைந்த போது, மும்பையில் நடந்த கடையடைப்பைக் கண்டித்து, தாணே மாவட்டத்தில் பால்கர் என்ற இடத்தைச் சேர்ந்த ஷகீன் தாதா, ரீனு சீனிவாசன் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவுசெய்தனர். இதற்காக அவர்கள் இருவரும் 66ஏ பிரிவின் கீ…
-
- 0 replies
- 279 views
-
-
இங்கிலாந்தில் 530 வருடங்களுக்கு முன் இறந்த மூன்றாம் ரிச்சர்ட் என்ற மன்னரின் உடல் நேற்று தான் முறையாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பிரான்சில் இருந்து இங்கிலாந்து வந்து குடியேறிய பிளான்டஜெனட் என்ற ஒரு பிரிவினர் அங்கு லீசெஸ்டர் என்ற பகுதியை 1154 முதல் 1485 வரை ஆண்டு வந்திருக்கிறார்கள். அந்த வம்சத்தின் கடைசி மன்னராக இருந்த மூன்றாம் ரிச்சர்ட், 1485 ல் நடந்த ஒரு போரில் இறந்துவி்ட்டார். அவரது உடலை அப்போது உள்ளவர்கள், ஒரு சவப்பெட்டி கூட் வைத்திருக்காமல்,ஒரு மரியாதையும் செய்யாமல் அப்படியே எங்கோ புதைத்திருக்கிறார்கள். 2012-ல் ஒரு புதைபொருள் ஆராட்சியாளர், தற்செயலாக இவரது எலும்புகளை, கார்பார்க்கிங் ஒன்றின் அடியில் கண்டுபிடித்து எடுத்து லீசெஸ்டன் பல்கலைக்கழகத்தில் கொ…
-
- 4 replies
- 476 views
-
-
சிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி குவான் யூ மறைந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் அறிவித்திருக்கிறது. கடந்த பல வாரங்களாக அவர் கடும் நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரிட்டனிடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறும் வழிமுறையை முன்னின்று நடத்திய லீ க்வான் யூ பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார். அவர் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த மூன்று தசாப்தகாலத்தில் , அந்த நாடு, பெரிய இயற்கை வளங்கள் ஏதுமற்ற ஒரு சாதாரண துறைமுகம் என்ற நிலையில் இருந்து பிரகாசிக்கும் வர்த்தக மையமாக உருவான ஒரு அசாதாரண மாற்றத்தை ஏற்படுத்தினார். கருத்து மாறுபடுபவர்களை அவர் நீதிமன்றங்களை வைத்து ஒடுக்…
-
- 12 replies
- 2.1k views
-
-
மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் இன்றைய துயரங்களுக்கு பிரிட்டன் பொறுப்பேற்ற வேண்டும் என்று கோரி, இந்திய வம்சாவளி மக்களின் உரிமைக்கான ஹிண்ட்ராஃப் அமைப்பு பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. பிரிட்டன் ஆட்சியின் கீழ் மலேயா இருந்தபோது, தமிழ்நாட்டிலிருந்து பல லட்சம் பேர், கூலித் தொழிலாளர்களாக அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்திய வம்சாவளி மக்களுக்கு அரசியல் அமைப்பு ரீதியாக போதிய பாதுகாப்பை வழங்க பிரிட்டன் தவறிவிட்டது என்பதை பிரிட்டன் ஏற்றுக் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாங்கள் பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்திலிருந்து பெற்றுள்ளதாக ஹிண்ட…
-
- 0 replies
- 280 views
-
-
பாகிஸ்தானின் சிறுமிகள் பாலியல் தொழிலுக்காக இலங்கைக்கு அனுப்பப்படுகின்றரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில், கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது 16 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட யுவதிகள் விபச்சார தொழில்களில் ஈடுபடுவதற்காக தங்கியிருந்த வேளையில், குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவர்களின் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த யுவதிகள் லாகூரில் உள்ள ஆட்கடத்தல்காரர்களிடம் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் படியே இலங்கைக்கு வந்ததாக தெரியவந்துள்ளது. ஆசிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான சேவையை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்த உடன்படிக்கை என்று கூறப்படுகிறது. இதேவேளை குறித்த ஆட்கடத்தல்காரர்கள் இலங…
-
- 3 replies
- 456 views
-
-
உக்ரேன் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்த இலங்கைத் தூதுவர் ரஸ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீது உக்ரேன் அரசாங்கம் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. உதயங்க, உக்ரேனின் பிரிவினைவாதிகளுக்கு ஆயுத விநியோகப் பணிகளில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான குற்றச்சாட்டை உக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ, இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முன்வைத்துள்ளார். இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். உக்ரேனின் குற்றச்சாட்டின்படி உதயங்க, பிரிவினைவாதிகளுக்கு ரைபிள்கள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களை விநியோகித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனின் …
-
- 3 replies
- 384 views
-
-
அமெரிக்காவில் நீண்ட கால சிறை தண்டனை அனுபவித்த முதல் நபரான ரிக்கி ஜாக்சன் என்ற அப்பாவிக்கு நஷ்ட ஈடாக 6 கோடி ரூபாய் பணம் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் க்ளீவ்லாந்தை சேர்ந்த ரிக்கி ஜாக்சன் தான் செய்யாத கொலைக்கு 39 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து விட்டு, கடந்த ஆண்டு விடுதலையானார். மணியார்டர் விற்பனை செய்யும் ஒருவரை கொலை செய்ததாக கடந்த 1975 ஆம் ஆண்டு ஜாக்சன், வைலி பிரிட்ஜ்மேன் மற்றும் அவரது சகோதரர் ரோனி ஆகியோருக்கு 39 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் 12 வயதான பள்ளி சிறுவனான எட்டி வெர்னான், மூவரும் கொலை செய்ததை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்ததை தொடர்ந்தே இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாறு சாட்சியம் அளித்து ஏறத்தாழ 40 வ…
-
- 2 replies
- 414 views
-
-
அமெரிக்காவுடன் அணு ஆயுத போரில் ஈடுபட வட கொரியா தயாராக உள்ளதாக வடகொரியாவின் பிரிட்டன் தூதர் ஹியுன் ஹக்-பாங் தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், “நாங்கள் எப்போதும் அமைதியை விரும்புபவர்கள். ஆகையால் போரை விரும்பவில்லை. ஆனால் போரை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. இது தான் எங்கள் அரசின் கொள்கை. அணு ஆயுதங்களில் அமெரிக்கா ஏகபோகம் அல்ல. அணு ஆயுத பரவல் தடை சட்ட ஒப்பந்தந்தில் 1993 வட கொரியா கைபெழுத்திட்டதால் அது அமைதியாக இருந்துவிடும் என அர்த்தம் அல்ல. மீண்டும் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திறன் இப்போதும் உள்ளது, ஆம் வடகொரியா எந்த நேரத்திலும் பயன்படுத்தும். அமெரிக்கா எங்களை அடித்தால் நாங்கள் திருப்பி அடிப்போம். வட கொரியாவின் எல்லைப்பகுதி…
-
- 2 replies
- 395 views
-
-
ஏமன் நாட்டில் மசூதிகளில் நடந்த தற்கொலை படை தாக்குதல்களில் 140 பேர் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.அரபு நாடான ஏமனில் அதிகாரப்போட்டி காரணமாக, நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அங்கு தலைநகர் சனாவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் அங்கு ஷியா பிரிவு முஸ்லிம்களும், ஹவுதி கிளர்ச்சியாளர்களும் அடிக்கடி வந்து தொழுகை நடத்திச்செல்கிற அல் பாதிர், அல் ஹாஸ்ஹூஸ் மசூதிகளில் நேற்று தற்கொலை படை தீவிரவாதிகள் உடலில் வெடிகுண்டுகள் கட்டப்பட்ட பெல்ட்டுகளை அணிந்து வந்து அவற்றை வெடிக்கச்செய்தனர். இதன்காரணமாக பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. தொழுகையில் கலந்து கொண்டவர்கள்…
-
- 0 replies
- 387 views
-
-
உலகின் தூய்மையான 100 கேரட் வைரம் ஒன்று துபாயில் இடம்பெறும் கண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஏலம் விடப்படவுள்ள இந்த வைரம், 25 மில்லியன் டொலர்கள் வரையில் விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தென் ஆபிரிக்காவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்ட இந்த வைரம் ‘மனம்கவரும் நகைகள்’ என்ற பிரிவின் கீழ் நியூயார்க்கில் ஏலம் விடப்பட உள்ளது. ஏல நிறுவனத்தின் கூற்றின்படி இவ்வைரத்தின் மதிப்பு பல மில்லியன் கோடியைத் தாண்டுமாம். இதுகுறித்து அந்த ஏல நிறுவனம், ‘அருமையான வடிவமைப்பு கொண்ட இந்த வைரம் சரியாக 100.20 கேரட் ஆகும். சரியான வண்ண அமைப்புடன் கொஞ்சம் கூட மாசு மருவில்லாத வைரம் இது. இதுவரை ஏலம் விடப்பட்ட வைரங்களை விட அருமையான ஒன்று’ என்று தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 416 views
-
-
நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் லொரெட்டா பரோக்ஸ் ( வயது63) இவரது கணவர் டேனியல் (வயது 64) இவரை விட்டு விட்டு வேறு ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டு புளோரிடாவிற்குச் சென்றுவிட்டார். பரோசிடம் இருந்த நிலத்தையும் பங்கு போட்டு இளம் மனைவிக்கு டேனியல் கொடுத்து விட்டார். இந்நிலையில், டேனியலைக் காணவில்லை என அவரது சகோதரர் பொலிஸில் முறைப்பாடு செய்தார். இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. கணவன் வேறு பெண்ணுடன் சென்ற கோபத்தில், பெரோஸ் கணவனை சந்தித்துப் பேசி வீட்டிற்கு அழைத்து வந்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து 2 பெரிய பெட்டிகளில் மூடி வைத்திருந்துள்ளார். பிண வாடை…
-
- 3 replies
- 596 views
-
-
ஆஸ்திரேலியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் கடந்த 1975 முதல் 1983 வரை பிரதமராக இருந்தவர் மால்கம் பிரேசர்.[அவருக்கு வயது 84] பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று காலையில் காலமானார். மால்கம் பிரேசர் கடந்த 1955-ம் ஆண்டு தனது 25-வது வயதில் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்துக்கு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1975-ல் பட்ஜெட் மசோதாக்களை செனட் சபையில் நிறைவேற்றாததற்காக, அப்போதைய பிரதமர் கவு விட்லமை கவர்னர் ஜெனரல் பதவி நீக்கம் செய்தார். இதைத்தொடர்ந்து, மால்கம் பிரேசர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். லிபரல் கட்சியின் சிக்கலான குடியுரிமை கொள்கை மற்றும் ஈராக் போர் ஆதரவு நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த மால்கம் பிரேசர், பிரதமர் பதவியை விட்டு விலகிய பின் பெரும்…
-
- 0 replies
- 318 views
-
-
இதற்கென, காலராடோ மாகாணத்திலுள்ள பியூப்லோ ரசாயனக் கிடங்கில், தானியங்கி இயந்திரங்களைக் கொண்ட, முழுவதும் மூடப்பட்ட பிரத்யேக ரசாயனக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரசாயனக் கூடத்தில், ஒரே ஒரு "மஸ்டர்டு' குடுவை சோதனை முறையில் புதன்கிழமை அழிக்கப்பட்டது. அந்தக் குடுவையில் அடைக்கப்பட்டிருந்த மஸ்டர்டு ரசாயனப் பொருள் வெளியே எடுக்கப்பட்டு, அதனுடன் மாற்று ரசாயனப் பொருள் கலந்து செயலிழக்கச் செய்யப்பட்டது. எனினும், 2,600 டன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அந்தக் கிடங்கில், புதன்கிழமை அழிக்கப்பட்டது சில கிராம்களே எனக் கூறப்படுகிறது. ஆயுதங்களை அழிப்பதற்கான இந்த ரசாயனக் கூடம், வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான் முழு வீச்சில் செயல்படத் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித…
-
- 0 replies
- 290 views
-