Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சீனாவுடன் பேச்சுக்கு தோவல் நியமனம் புதுடில்லி : சீனாவுடனான எல்லைப் பேச்சுக்கான சிறப்பு பிரதிநிதியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சு, மீண்டும் துவங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை உள்ளது. இந்தப் பிரச்னை குறித்தும், செயல்திட்ட ரீதியான மற்ற விஷயங்கள் குறித்து, சீனாவுடன் பேச்சு நடத்துவதற்கான சிறப்பு பிரதிநிதியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். தன் பணியின் ஒரு பகுதியாக, எல்லை பேச்சுக்களை அவர் நடத்துவார்.இவ்வாறு, பிரதமர் அலுவலகம் கூறிஉள்ளது. இதற்கு முன் பதவி வகித்த தேசிய பாதுகாப்பு…

  2. அணு ஆயுத தயாரிப்பில் பாகிஸ்தான் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. உலக அளவில் அணு ஆயுத திட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக பாகிஸ்தான் மாறி வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்குள் அந்நாடு, 200 அணு ஆயுதங்களை தயாரிக்க கூடிய மூலப் பொருட்களை சேகரித்து வைத்துள்ளதாக அமெரிக்காவின் வெளிவிவகாரங்களுக்கான கவுன்சில் கூறியுள்ளது. மேலும் அதன் அறிக்கையில், உலகின் பல நாடுகளில் அணு ஆயுதங்களை குறைக்க வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும், ஆசியாவில் மட்டும் அணு ஆயுத பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் அணு ஆயுத தயாரிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியா, 90 முதல் 110 அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களையும், ச…

  3. ஹாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகர் அர்னால்ட். ஏழு முறை உலக ஆணழகன் பட்டம் வென்ற இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.. இவருக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த செப்டம்பர் மாதம் ஷங்கர் இயக்கியுள்ள ‘ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார். அப்போது நேரமின்மையால் நிகழ்ச்சியின் பாதியிலேயே கிளம்பி சென்றுவிட்டார். மீண்டும் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் இந்தியா வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அர்னால்டு கூறியதாவது :- நான் திரைத்துறை, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளை ஊக்குவிக்க பல முறை இந்தியா வந்துள்ளேன். மிகச்சிறந்த நாடான இந்த…

  4. அமெரிக்க ராணுவ அமைச்சர் ராஜினாமா வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ அமைச்சர் செக் ஹேகல் திடீரென ராஜினாமா செய்தார். அமெரிக்க அதிபர் ஒபாமா அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக உள்ளவர் செக் ஹேகல், இன்று ராணுவ தலைமையகமான பென்டகன் வந்தார்.உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அமைச்சராக பணியாற்றிட தனக்கு ஆதரவு அளித்த அதிபர் ஒபாமா உள்ளிட்டோருக்கு தான் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார். ஹேகல் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஒபாமாவும் அங்கிகரீத்து முறையாக அறிவித்தார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1122799

  5. லைபீரியாவில் நடந்த 14 ஆண்டு உள்நாட்டுப் போரைக்கூட அதிக ஆள்சேதம் இல்லாமல் தாக்குப்பிடித்துவிட்டது கைசர் டௌரின் குடும்பம். ஆனால் பாழாய்ப்போன இந்த எபோலா வைரஸுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பலியானதுதான் கொடுந்துயரம். மன்ரோவியா நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலை சந்திப்பு அது. ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்காமல் வீதியில் நடமாடிக்கொண்டிருந்தனர். எஸ்தர் என்ற 5 வயதுச் சிறுமி எபோலா காய்ச்சலின் கடுமையைத் தாங்க முடியாமல் வீதியில் விழுந்த ஒரு மலர் போல தரையில் படுத்திருந்தாள். கடுமை யான வெயில் அடிக்கிறதே, இந்தக் குழந்தை சிணுங்கக்கூட காணோமே என்று மனம் பதைத்தது. அதைவிடப் பலமடங்கு வெப்பத்துடன் உள்ளே அடித்துக்கொண் டிருந்த காய்ச்சல் காரணமாக முனகக்கூட சக்த…

  6. தென் சீனக் கடல் பகுதியில் புதிதாகப் பெரும் தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெஃப்ரி போல் வாஷிங்டனில் கூறியது: தென் சீனக் கடலில் உள்ள ஸ்ப்ராட்லி தீவுகள் பகுதியில் பெரும் அளவில் மண்ணை நிரப்பி, புதிதாகப் பெரிய தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. அங்கு விமான தளம் அமைக்கும் விதத்தில் தீவு உருவாக்கப்பட்டு வருகிறது. அந்தக் கடற்பகுதியில் பல்வேறு இடங்களில் மணலை நிரப்பி, நிலப் பரப்பை சீனா விஸ்தரித்து வருகிறது. எனினும், இந்தக் குறிப்பிட்ட தீவில் நடைபெறும் பணி மூலம், விமான தளம் அமைக்கும் அளவுக்கான புதிய நிலப் பரப்பை அந்நாடு உருவாக்குகிறது.இதைத் தவிர, பெரிய எண்ணெய் சரக்குக் கப்பல்களும் ப…

  7. இலக்கத்தை மாற்றாவிட்டால் விமானம் தரையில் விழும் என்று ஜோசியர் கூறியிருந்தார் பிரேசிலின் அரச விமான போக்குவரத்து நிறுவனத்தில் ஒரு விமானத்திற்கு வழங்கப்பட்ட எண் ஜோசியர் சொன்னதைக் கேட்டு மாற்றப்பட்டிருந்தது என்று தெரிவிக்கப்படும் கூற்றுக்களை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. கடந்த புதன்கிழமை சா போலோவிலிருந்து பிரசிலியா செல்லும் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு நகரின் முக்கியமான இடத்தில் அவ்விமானம் தரையில் விழும் என ஜூசெலினோ நொப்ரேகா டா லுஸ் என்ற அந்நாட்டின் பிரபல ஜோசியர் ஒருவர் கூறியிருந்தார். அந்த விமானத்தின் எண் ஜேஜே3720 என்பதிலிருந்து ஜேஜே4732 என்று மாற்றப்பட்டிருந்ததற்கு ஜோசியரின் வாக்கு காரணமல்ல, நிர்வாக மாறுதல்களே காரணம் என என்று விமான நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆகஸ…

  8. இலங்கை அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் விடுதலைக்கு நடிகர் சல்மான் கான் உதவியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமேசுவரம் தங்கச்சி மடம் மீனவர்கள் 5 பேருக்கு போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சே 5 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டதால் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பினார்கள். தூக்கு தண்டனையை எதிர் நோக்கி இருந்த 5 பேரும் விடுதலையானது தமிழக மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 5 மீனவர்களையும் மீட்க கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கடிதங்கள் எழுதியது. தமிழகத்தில் போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து மத்திய அரசு தூதரகம் மூலம் நடவடிக்கையில் இறங்கியது. பிரதமர் மோடி இலங்கை அதிபர் ராஜ…

  9. மோடி விரும்பி அழைத்து சென்றால் அவருடன் சேர்ந்து வாழ தயாராக இருப்பதாக அவரது மனைவி யசோதா பென் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலின் போது வதோதரா தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி தனது வேட்பு மனுவில் தனக்கு மனைவி இருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கு முந்தைய தேர்தல்களில் இந்த தகவலை மறைத்தது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அப்போது குற்றம் சாட்டின. இதனை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில் மோடியின் மனைவி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாயின. குஜராத்தை சேர்ந்த யசோதாபென் என்பவருக்கும் மோடிக்கும் கடந்த 1968ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே மனைவியை விட்டு மோடி பிரிந்தார். தற்போது 62 வயதான யசோதா பென் ஆசிரியைய…

  10. கொலம்பிய கால்பந்து வீரர் எஸ்கோபார் | கோப்புப்படம் கொலம்பியாவைப் பற்றி அறியத் தொடங்குவதற்குமுன் அது தொடர்பாக எழக்கூடிய ஒரு குழப்பத்தைத் தீர்த்துக் கொண்டுவிடலாம். ‘’நாங்கள்தான் கொலம்பியா. கொலம்பியாதான் நாங்கள்’’. ஒபாமாவை ஜனாதிபதியாகக் கொண்ட நாட்டினர் இப்படிச் சொல்வதுண்டு. கொலம்பியா என்பது ஒரு பெண்ணின் பெயர். தங்கள் நாட்டைப் பெண்மையின் வடிவமாகப் பார்ப்பதில் அந்த மக்களுக்கு மகிழ்ச்சி. கொலம்பியா பல்கலைக்கழகம், கொலம்பியா நதி, கொலம்பியா மாவட்டம் இத்தனையும் யு.எஸ்.ஏ.வில் உள்ளன. தலைநகரத்தின் பெயரே வாஷிங்டன் D.C. (டி.ஸி.யின் விரிவு டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா). ஆனால் இந்தத் தொடரில் கொலம்பியா என்று நாம் குறிப்பிடுவது ஒரு தேசத்தை. தென் அமெரிக்காவின் நான்காவது பெரிய நாடு இது. அ…

  11. பலன் கேட்டு சென்ற ஐடி நிறுவன பெண் ஊழியரை, பலாத்காரம் செய்த பெங்களூரு நாடி ஜோதிடர்! பெங்களூரு: நாடி ஜோதிடம் பார்க்க போன ஐடி பெண் ஊழியரை பலாத்காரம் செய்த ஜோதிடர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூரு ராமமூர்த்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹொய்சாலா நகரில் அகஸ்தியர் நாடி ஜோதிடம் என்ற பெயரில் ஜோதிடம் பார்த்து வருபவர் தாமோதரன். தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது கணிப்புகள் சரியாக உள்ளதாக கேள்விப்பட்டுள்ளார் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவரும், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள உலக புகழ் பெற்ற ஒரு ஐடி நிறுவனத்தின் ஊழியருமான மம்தா (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது). எனவே தனது திருமண வரன் குறித்து விளக்கம் கேட்பதற்காக, தனது ஆண் நண்பர் ஒருவருடன்…

  12. சீனா மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவின் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அமைப்புகளின் கம்ப்யூட்ரில் முக்கிய உள் கட்டமைப்புகளை முடக்கும் திறன் கொண்டவை. அமெரிக்கா வின் முக்கிய சேவைகள் வழங்கும் அமைப்புகளின் கம்யூட்டர்களில் சீனா மற்றும் வேறு ஒரு சில நாடுகளின் வைரஸ்ககளை அமெரிக்கா கண்டு பிடித்து உள்ளது. அமெரிக்க்க கணினிகளில் எதிர்கள் உளவு பார்ப்பது குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளப்படும் அப்போது இது போல் கண்டறியப்பட்டு உள்ளது. என்று கூறினார். இத்தகைய தாக்குதல் சாத்தியம் உள்ளது என நாட்டின் சைபர் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுவது இதுவே முதல் முறையாகும். அதிகாரி கூறியதில் சீனா தவிர வேறு எந்த நாடுகளின் பெயர்கள் இல்லை என்றாலும் ரஷ்யா, ஈரான், போன்ற நாட…

  13. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்ய வந்த போலீஸாரை தனது ஆதரவாளர்களை ஏவிவிட்டு, தாக்குதல் நடத்தி போக்குகாட்டி வந்த ஹரியானா சாமியார் ராம்பால், தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். 12 ஏக்கர் பரப்பிலான அவரது ஆசிரமத்திற்குள் உள்ளே நுழைந்து பார்த்த போலீஸார், சாமியார் வாழ்ந்த ஆடம்பர மற்றும் உல்லாச வாழ்க்கைக்கு சாட்சிகளாக நிற்கும் மசாஜ் படுக்கைகளையும், நீச்சல் குளம் போன்றவற்றையும் பார்த்து திகைத்துப்போய் நிற்கிறார்கள். யார் இந்த ராம்பால்...? அவர் சாமியார் ஆனது எப்படி...ஆசிரமம் எந்த அளவுக்கு ஆடம்பரமாக உள்ளது என்பது குறித்த ஒரு ஸ்கேன் ரிப்போட் இங்கே... ஹரியானா மாநிலம் சொனேபட் மாவட்டத்தில் எளிய விவசாய குடும்பத்தில் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி பிறந்தார் ராம்ப…

  14. சட்டவிரோதமாக பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றதாக கூறி 61 இந்திய மீனவர்களையும் அவர்களின் 11 படகுகளையும் பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். நேற்று கைது செய்யப்பட்ட மீனவர்கள் கராச்சியில் உள்ள டாக் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் வெளியுறவு சட்டத்தின் கீழும் மீன்படி சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். குஜராத் மற்றும் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்திற்கும் இடையேயுள்ள குறிக்கப்படாத கடல் எல்லைப்பகுதிக்குள் தவறுதலாக நுழைந்து விடும் மீனவர்களை இரு நாடுகளும் அடிக்கடி செய்கின்றன. இவ்வாறு கைது செய்யப்…

  15. http://m.vikatan.com/tiny/gallery.php?module=cinema&cinema_gallary=7237

    • 4 replies
    • 1.8k views
  16. அமெரிக்கா மற்றும் கனடாவில் கடும் பனி புயல் வீசி வருகிறது.இந்த கடுமையான பனிப் புயலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பனிப்புயலால் வடக்குப் பகுதி மற்றும் கனடா நாடுகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.பப்பலோ நகரில் பனிக்கட்டிகள் 5 அடி அளவில் அனைத்து இடங்கலீலும் உள்ளது. நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவோமா பனிப்புயல் ஒரு "வரலாற்று நிகழ்வு" என்று கூறி உள்ளார்.உறைபனி நிலை அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் நிலவி வருகிறது. இதனால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் 50 மாகாணங்களும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டுள்ளது. சாலைகளில் சிக்கியுள்ள கார்களில் இருப்பவர்களை மீட்பதற்கு ஏதுவாக மீட்பு படைகள் ஆங்காங்கே தயார் நில…

  17. சண்டிகர்: ஹரியானாவில் கைது செய்யப்பட்ட சர்ச்சை சாமியார் ராம்பாலை வருகிற 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்ய சென்ற போலீஸார் மீது ஆதரவாளர்களை ஏவிவிட்டு தாக்குதல் நடத்திய சாமியார் ராம்பாலுக்கு கொலை வழக்கில் வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராம்பால், பன்ச்குலா காவல் நிலைய லாக் அப்பில் அடைக்கப்பட்டார்.பின்னர் இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வருகிற 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்…

  18. சுவாமி, ஒரு புதிர் ! - சுவாமியின் திருவிளையாடல்கள் புரியாதவர்களுக்கு !! ஜெயலலிதாவை நிரந்தர சிறைப் பறவையாக்க தன்னிடம் கட்டுக் கட்டாக ஆவணங்கள் இருப்பதாக மார் தட்டுகிறார் சுப்ரமணிய சாமி. அவற்றில் சிலவற்றை மேலோட்டமாக பார்த்தாலே பலமான வழக்குகளாகத் தெரிகிறது. இதெல்லாம் இவருக்கு எப்படி கிடைக்கின்றன என்று அநேகருக்கு ஆச்சரியம். உண்மையில் அது பெரிய விஷயம் அல்ல. நீங்கள் அதிகாரத்தில் இருக்கும்போது எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பலருக்கு நன்மை அளிப்பதாக இருக்கலாம். சிலருக்கு அதனால் பாதிப்பும் ஏற்படும். வேண்டுமென்றே நீங்கள் தீமை இழைத்ததாக நம்புவோர், பழி வாங்க சந்தர்ப்பம் வரட்டும் எனக் காத்திருப்பார்கள். உங்கள் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்து பாதகமான தகவல்களை பத்திரப் படுத…

    • 8 replies
    • 4.2k views
  19. Stories about acts of bravery and kindness were emerging after as much as 6 feet of snow covered Buffalo, New York, one of the hardest-hit areas in a week when snowstorms and record-low temperatures whacked much of the country. Seven deaths in the region have been blamed on the extreme storm, authorities said. Buffalo Mayor Byron Brown and city officials Wednesday recounted stories of emergency personnel working double shifts with little sleep, of rescuers trudging around snow drifts as high as houses to get people to hospitals, of fire stations turned into temporary shelters and police officers delivering special baby formula to a pair of infants. http://www.…

  20. அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரில் 4.50 லட்சம் பேர் இந்தியர்கள் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருபவர்களில், 4 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு இடைவெளியில் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக இடம் பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், அதேசமயம், 2012ம் ஆண்டின்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக இடம் பெயர்ந்து வாழ்வோரின் எண்ணிக்கை 1.12 கோடியாக இருந்தது என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது அதே அளவில் உள்ளது. இன்டியானாவில் உள்ள சட்டவிரோத இந்தியர்களின் எண்ணிக்கை 4 சதவீதமாக …

  21. நீங்கள் நீண்ட காலமாக கட்ட முடியாமல் கஷ்டப் படும் மின்சாரக் கடன் பாக்கி, திடீரென ஒரு நாள் மின்சார சபையின் கணனியில் இருந்து அழிக்கப் பட்டால், எவ்வளவு சந்தோஷப் படுவீர்கள்? பல்லாயிரக் கணக்கான துருக்கி மக்களுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது. துருக்கியில் ரொபின் ஹூட் பாணியில் இயங்கும், கம்யூனிச ஹேக்கர் அமைப்பான ரெட் ஹேக், கோடிக் கணக்கான டாலர் மின்சாரக் கடன் பாக்கியை அழித்து விட்டுள்ளது. (http://www.techworm.net/2014/11/redhack-hacks-turkeys-electric-distribution-company-website-delete-bills-worth-1-5-trillion-turkish-lira.html) துருக்கி மின்சார சபையின் கணனிக் கோப்புகளுக்குள் நுளைந்து, சுமார் 1.5 ட்ரில்லியன் லீரா (668523705000.00 US Dollar ) தொகையை அழித்து விட்டது. இதனால் ம…

  22. போதைப்போருள் கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பு நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்துபேரும் சிறையில் இருந்து இன்று பிற்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஐந்து பேரையும் சிறையிலிருந்து விடுவித்து விட்டதாகவும், அவர்களை குடிவரவு அதிகாரிகளிடம் கையளித்து விட்டதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஐந்துபேரும் இந்திய அதிகாரிகளுடன் இன்றே இந்தியா திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=121071&category=TamilNews&language=tamil

  23. ஜெரூசலத்தில் யூத வழிபாட்டிடத்தில் தாக்குதல் ஜெரூசலத்தில் கடந்த பல வருடங்களில் நடந்த மிகவும் மோசமான தாக்குதலாக கருத்தப்படும் ஒன்றில், யூத வழிபாட்டிடம் ஒன்றில் துப்பாக்கிகள் மற்றும் இறைச்சி வெட்டும் கத்தி ஆகியவற்றுடன் நுழைந்த இரு பாலத்தீனர்கள், அங்கு வழிபாட்டாளர்கள் 4 பேரைக் கொன்றதுடன் மேலும் பலரைக் காயப்படுத்தியுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் மூவர் இஸ்ரேலிய அமெரிக்க இரட்டை குடியுரிமைகளை கொண்டவர்களாவர். அடுத்தவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இஸ்ரேலியராவார். தாக்குதலாளிகள் இருவரையும் போலிஸார் சுட்டுக்கொன்றார்கள். இந்த வன்செயலை தூண்டியதாக பாலத்தீன தலைவர்கள் மீது குற்றஞ்சாட்டிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இதற்கு கடுமையான பதிலடி தரப்படும் என்று கூறியுள்ளார். சுயபாதுக…

  24. இந்தியாவில் எபோலா பாதித்த ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார் -- (படத்தில் எபோலா சிகிச்சையில் மருத்துவர்கள், ஆவணப்படம்) லைபீரியாவிலிருந்து இந்தியா திரும்பிய இந்தியப் பிரஜை ஒருவருக்கு எபோலா தொற்று இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். லைபீரியாவில் இருந்தபோது இந்த நோய் தொற்றிய இந்த 26 வயது ஆணுக்கு அவர் அங்கிருந்த போதே உடல்நிலை சரியாகிவிட்டது என்று இந்திய சுகாதார அமைச்சகம் கூறியது. கடந்த வாரம் டில்லிக்கு விமானம் மூலம் வந்த இவர்மீது , உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளின்படி செய்யப்பட்ட பரிசோதனைகளில், எந்த ஒரு வைரஸ் தொற்றும் இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் நடத்தப்பட்ட பர…

  25. சென்னை, பயிற்சிக்காக சென்னை வந்துள்ள கொரியா நாட்டு கடற்படை வீரர்கள் மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தினர். கொரியா நாட்டு வீரர்கள் இந்தியாவின் கடற்படை போர் யுக்திகளை தெரிந்துகொள்வதற்காக தென் கொரியாவில் இருந்து 2 போர்க்கப்பல்கள் நேற்றுமுன்தினம் சென்னை துறைமுகத்துக்கு வந்தன. கடற்படையை பலப்படுத்துவதற்காகவும், பல்வேறு நாடுகளுடன் நட்புறவை பேணுவதற்காகவும் கொரியாவில் இருந்து 600-க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் வந்துள்ளனர். முதற்கட்டமாக, கொரியா நாட்டு கப்பற்படை வீரர்கள் நேற்று மெரினா கடற்கரையில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 600 கொரியா கடற்படை வீரர்கள், 400 இந்தியா கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் சேர்ந்து கடற்கரை முழுவதும் கிடந்த குப்பைகளை அள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.