உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27041 topics in this forum
-
நைஜீரியாவில் போகோ ஹராம் போராளிக்குழுவால் கடத்தப்பட்ட 200க்கு மேற்பட்ட சிறுமிகளை தமது போராளிக்குழு உறுப்பினர்களுக்கு அந்தக் குழு திருமணம் செய்து வைத்துள்ளதாக மேற்படி குழுவின் தலைவர் என தன்னைத்தானே உரிமை கோரும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். அபூபக்கர் ஷிகாயு என்ற அந் நபர் தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் வடகிழக்கு சிபொக் நகரிலிருந்து கடத்தப்பட்ட 219 சிறுமிகளும் தற்போது தமது கணவர்மாரின் வீடுகளிலுள்ளதாக கூறினார். ''அவர்கள் அனைவரும் இஸ்லாமிய மதத்துக்கு மதமாற்றப்பட்டுள்ளதுடன் புனித குர்ஆன் நூலின் இரு அத்தியாயங்களையும் மனனம் செய்துள்ளனர்'' என அவர் தெரிவித்தார். ''நாங்கள் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள…
-
- 0 replies
- 546 views
-
-
கட்டுப் படுத்தப் படாத தொடர்ச்சியான கணிய எரிபொருள் (fossil fuel) அகழ்வு மற்றும் பயன்பாடு நீடித்தால் 2100 ஆம் ஆண்டளவில் அது தீர்ந்து விடும் எனவும் அதனுடன் ஆபத்தான பருவநிலை மாற்றமும் ஏற்படும் என்றும் ஐ.நா ஐப் பின்புலமாகக் கொண்டு இயங்கும் IPCC எனும் கால நிலை மாற்றத்துக்கான அரசாங்களுக்கு இடையேயான குழு எச்சரித்துள்ளது. IPCC மேலும் கூறுகையில் 2050 அளவில் உலகின் மிகப் பெரும்பான்மையான மின் பேட்டரிகள் மிகக் குறைந்த கார்பன் வெளியீட்டு முறைகளில் கட்டாயம் தயாரிக்கப் பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளதுடன் இல்லாவிட்டால் உலகம் மிக மோசமான அதே நேரம் மீளத் திரும்ப முடியாத காலநிலை சீர்கேட்டை நிச்சயம் சந்தித்தே தீர வேண்டும் எனவும் அச்சுறுத்தியுள்ளது. டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் கடந்…
-
- 2 replies
- 703 views
-
-
இஸ்ரேலின் கடும் எதிர்ப்புகளையும் மீறி பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு, சுவீடன் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கட் வால்ஸ்டிரம் கூறுகையில், பாலஸ்தீன நாட்டுக்கு அங்கீகாரம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.பாலஸ்தீனர்கள், தங்களது சுய நிர்ணய உரிமையைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை உதவும். எங்களைப் பின்பற்றி, பிற நாடுகளும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் என நம்புகிறோம் என்றார் அவர். அண்மையில் சுவீடனின் பிரதமராகப் பதவியேற்ற ஸ்டெஃபான் லோஃப்வென், நாடாளுமன்றத்தில் தொடக்க உரையாற்றுகையில், பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் விசயத்தில், மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த முதல் ஐரோப்பிய யூனியன் நாடாக சுவீடன் இருக்கும் என்று அறிவித்திருந…
-
- 12 replies
- 1.1k views
-
-
Posted Date : 31-10-2014 02:42:16 PMLast updated : 01-11-2014 10:26:16 AM நாம் காபி சாப்பிட ஓட்டலுக்குச் சென்றால் பேரரிடம் 'ஒரு காஃபி' என்று சொல்வோம். காஃபி குடித்துவிட்டு, 'பில் எவ்ளோ?' என்று கேட்போம். 10 ரூபாய் என்றதும், பில்லுக்குப் பணம் கட்டிவிட்டு வந்துவிடுவோம். இதுவே ஆஸ்திரேலியாவின் கேரோவா (Gerroa) பகுதியில் உள்ள 'செவன் மைல்ஸ் பீச் கியோஸ்க் கபே' (Seven Mile Beach Kiosk Café)க்குச் சென்று பேரரிடம் 'காஃபி கொண்டுவா' என்று சொன்னால், அவர் கொண்டு வருவார். காஃபி குடித்துவிட்டு பில் கேட்போம். 5 டாலர்கள் என்றதும் கட்டிவிட்டு வருவோம். அடுத்த நாள் அதே கபேக்கு சென்று பேரரிடம் 'காஃபி பிளீஸ்' என்று கொஞ்சம் மரியாதையைச் சேர்த்து காபியை ஆர்டர் செய்து, அ…
-
- 3 replies
- 545 views
-
-
-
- 27 replies
- 2.9k views
-
-
பெய்ஜிங்: இந்திய - சீன எல்லைப் பகுதியில் சாலை வசதியை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதற்கு போட்டியாக, திபெத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்ட செய்திக் குறிப்பில், "அருணாசலப் பிரதேச மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதியில், திபெத் தலைநகர் லாசாவில் இருந்து நியிங்க்சி வரை இந்தப் புதிய ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இதில், நியிங்க்சி பகுதி, அருணாசலப் பிரதேச மாநிலம் அருகே மலை உச்சியில் அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்துக்கு சீனாவின் தேசிய மேம்பாட்டு, சீர்திருத்த ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 6 பில்லியன் டாலர் செலவில் (இந்திய மதிப்பில் ரூ. 36,897…
-
- 0 replies
- 483 views
-
-
ல்லாயிரம் பேரை பலிவாங்கிய போபால் விஷ வாயு வழக்கின் முக்கிய குற்றவாளி வாரன் ஆண்டர்சன் மரணம் அடைந்தார். அமெரிக்காவில், ஹூஸ்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி மருந்து ஆலை, மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் இயங்கி வந்தது. கடந்த 1984–ம் ஆண்டு, டிசம்பர் 3–ந் தேதி, இந்த ஆலையில் மீத்தேல் ஐசோ சயனேட் என்ற விஷ வாயு கசிவு ஏற்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்து 787 பேர் பலியானதாக மத்திய பிரதேச மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறின. இந்த சம்பவம் நடந்து, 30 ஆண்டுகளாகியும் இன்னும் மக்கள் மனங்களில் இருந்து மறையவில்லை. …
-
- 0 replies
- 440 views
-
-
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது புதிய வழக்குப்போடப் போவதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார். ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு சாமி மீது ஐந்து அவதூறு வழக்குகளைப் பதிவு செய்தது தமிழக அரசு. ஆனால் அதன் மீதான விசாரணைக்கு நேற்று உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. இந்நிலையில் ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப் போவதாக சாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் போடப் போகிறேன். தமிழக அரசுடன் வர்த்தக் தொடர்பை மேற்கொண்டு வரும் 12 பினாமி நிறுவனங்கள் குறித்தது இது என்று அவர் கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=119852&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 361 views
-
-
பெங்களூர், உட்பட.... 12 நகரங்களின் பெயர்கள் மாறின! மாநில அரசு அறிவிக்கை வெளியிட்டது. மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து பெங்களூர், மைசூர் உள்ளிட்ட 12 கர்நாடக நகரங்களின் பெயர்கள் கன்னட பெயர்களாக மாற்றி கர்நாடக மாநில அரசு நேற்றிரவு அறிவிக்கை வெளியிட்டது. பெங்களூர், மைசூர், பெல்காம் உள்ளிட்ட நகரங்களின் பெயர்களில் ஆங்கில வாசம் அடிப்பதாக கருதியது 2008ல் கர்நாடகாவை ஆட்சி செய்த பாஜக அரசு. இதையடுத்து பெங்களூர் உள்ளிட்ட 12 நகரங்களின் பெயர்களை லேசான மாறுதலுடன் கன்னட பெயர்களாக மாற்றி அதற்கு ஒப்புதல் அளிக்குமாறு கர்நாடக வருவாய் துறை மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. ஆனால் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டுவிட்ட…
-
- 5 replies
- 1.6k views
-
-
"காத்தாட" வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த, பெண்ணை "படம்" பிடித்துக் காட்டிய கூகுளுக்கு அபராதம்! மான்ட்ரீல், கனடா: கனடாவின் மான்ட்ரீல் நகரில் தனது வீட்டு வாசலில் முன்னழகு தெரிய உட்கார்ந்திருந்த பெண்ணை கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ கேமரா படம் பிடித்துக் காட்டி ஒளிபரப்பியதால் அந்தப் பெண் கூகுள் மீது வழக்குப் போட்டார். இதை விசாரித்த கோர்ட், கூகுளுக்கு 2250 டாலர் அபராதம் விதித்துள்ளது. கூகுளின் இந்த செயல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக அந்தப் பெண் கூறியுள்ளார். தனக்கு இது பெரும் சங்கடத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் பெண்ணின் பெயர் மரியா பியா கிரில்லோ. மான்ட்ரீல் நகரில் வசித்து வருகிறார். 45,000 டாலர் கொடுங்க. கூகுள் ஸ்ட்ரீட் …
-
- 4 replies
- 1.1k views
-
-
கற்போம் நம் மூதாதையர்களிடம்...! அண்மையில் ஜீயன்தொட்டி எனும் பழங்குடி கிராமத்தில் தங்கியிருந்தபோது மசனனின் வீட்டை யானை துவம்சம் செய்ததையறிந்து விசாரிக்கச்சென்றபோது... மசனனுக்கு இருக்கும் ஒரே சொத்து இந்த வீடு மட்டுமே அதனையும் இந்த யானை துவம்சம் செய்து விட்டதே என பதறிப்போய் துக்கத்துடன் விசாரித்தபோது... மசனன் கூறியது, "விடுங்க சாமி இதுக்குபோயி ஏன் வருத்தப்படரீங்க வேற வீடு கட்டிட்டா போகுது... நேத்து ராத்திரி நம்ம பெரிய சாமி வந்தாரு, வெளையாடிட்டு போயிட்டாரு. அவங்க எடத்துல நாம வாழறோம். நாம கண்ணும் கருத்துமா வாழணும். அவங்கள குத்தம் சொல்லமுடியுமா சாமி..." என்றார். வனவிலங்குகளை சாமியாகவும் வனங்களை கோயிலாகவும் பார்க்கும் இந்த மூதாதையிடம் கற்போம்...! …
-
- 0 replies
- 402 views
-
-
கோழிக்கோடு மையப்பகுதியில் ‘டவுண் டவுண்‘ என்ற ஓட்டல் உள்ளது. இங்கு காதலர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த ஓட்டலில் சில ஜோடிகளின் வரம்பு மீறிய ஆடல், பாடல் காட்சிகள், உள்ளூர் டிவியில் ஒளிபரப்பானது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா தொண்டர்கள் அந்த ஓட்டலை சூறையாடினார்கள். இந்த சம்பவத்துக்கு அந்த ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களும், பிரபல மலையாள சினிமா டைரக்டர் ஆஷிக் அபு உட்பட சில சினிமா ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓட்டலை சூறையாடியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொச்சியில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடமான மரைன் டிரைவ் பகுதியில் வரும் 2ம் தேதி மாலை, முத்தம் கொடுத்து போர…
-
- 2 replies
- 390 views
-
-
ஈராக் மற்றும் சிரியாவில் பல நகரங்களை கைப்பற்றிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். ஈராக்கை தொடர்ந்து சிரியாவிலும் பல நகரங்களை தன் வசப்படுத்த தீவிரமாக போரிட்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு சிரியாவில் கிழக்கு பகுதிகளில் பெரிய நகரங்களில் ஒன்றான ரக்ஹாவை கைப்பற்றினர். தற்போது அடுத்த படியாக இட்னிட் நகரை கைப்பற்ற அங்கு கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அது அலெக்போ மற்றும் கடற்கரை நகரமான லடாகியா இடையே உள்ளது. இவை அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியின் கீழ் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் ஜப்கத்ர ஆல் நு ஸ்ரா தீவிரவாதிகள் இட்லிப் நகருக்குள் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் அங்கு சமீபத்தில…
-
- 0 replies
- 561 views
-
-
பியோங்யாங்: தென் கொரிய நாட்டு டி.வி. சீரியல்களைப் பார்த்ததற்காக, வட கொரியாவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக தென் கொரிய உளவுத்துறை அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வட கொரியாவில் தென் கொரிய நாட்டு படங்கள், வீடியோ பதிவுகள், மெமரி கார்டுகள் உள்ளிட்ட பல பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு தென் கொரிய நாட்டு ரேடியோ போன்ற சாதனங்கள் கறுப்பு சந்தை வழியாகவே விற்கப்பட்டு வருகின்றன. இந்த திருட்டுச் சந்தையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் அந்நாட்டு அரசால் எடுக்கப்பட்டாலும், தென்கொரியாவின் திரைப்படங்கள் மக்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2014 ஆம் வருடத்தில், தென் கொரிய டிவி …
-
- 0 replies
- 563 views
-
-
வங்காளதேசத்தில் இஸ்லாமியத் தலைவர் மொதியூர் ரஹ்மான் நிஜாமி என்பவருக்கு மரண தண்டனை அளித்து அந்நாட்டு சிறப்பு நீதி மன்றம் தீர்ப் பளித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசம் பிரிவதற்குக் காரணமான 1971-ம் ஆண்டு போரின்போது, மனித உரிமைகளை மீறிய வகையில்போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக வங்காள தேசத்தைச் சேர்ந்த மொதியூர் ரஹ்மான் நிஜாமி என்ற இஸ்லாமிய இயக்கத் தலைவர் மீது கடந்த 40 ஆண்டுகளாக அந்நாட்டின் சர்வதேச தலைமை தீர்ப்பாயத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. ஜமாத் இ இஸ்லாமி என்ற இயக்கத்தின் தலைவரான மொதியூர் ரஹ்மான் நிஜாமி மீது சுமத்தப்பட்ட 16 முக்கிய போர்க் குற்றங்களில் 8 குற்றங்கள் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை வழங்கி 3 நபர்கள் கொண்ட தலைமை தீர்ப்பாயம் இன்…
-
- 1 reply
- 514 views
-
-
ரெஹானா ஜப்பாரி மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது. அன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குப் பதிலடியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை நெருங்கிவிட்டேன் என்பதை ஏன் சொல்லாமல் மறைத்துவிட்டாய்? இதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது. இது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா? இந்த உலகம் என்னை எந்தக் கவலையுமின்றி 19 ஆண்டுகள் வாழ அனுமதித்தது. கொடூரம் நிறைந்த அந்த இரவில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய உயிரற்ற உடல் நகரின் ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டிருக்கும். சில நாட்களுக்குப் பிறகு, போலீஸார் வந…
-
- 3 replies
- 935 views
-
-
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கமைய கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் இதில் றாகுல், சோனியா கருணாநிதி உள்ளிட்டோர் முன்னிலையில் உள்ளதாக செய்தி கசிந்துள்ளது. If the latest guideline of Supreme Court is to be followed, the entire list of black money account holders should be out by the early hours of October 29. The Apex Court has ordered the Narendra Modi-led central government to reveal the entire list of perpetrators who are guilty of stocking up unaccounted sums of money. A day after the government revealed the names of Pradeep Burman (Promoter of Dabur India), Pankaj Chimanlal Lodhiya (Rajkot-based bullion trader), Radha Satish Timblo…
-
- 4 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்து புறப்பட்ட விமானத்தில் அல்கொய்தாவின் பெயரில் வை-பை நெட்வொர்க் இருப்பது தெரியவந்ததால் குறித்த விமானபயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து லண்டனுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராகியுள்ளது. அப்போது பயணி ஒருவர் தனது கைத்தொலைபேசியில் வை-பையை ஒன் செய்துள்ளார். அப்போது அந்த பகுதியிலுள்ள அனைத்து வை-பை நெட்வொர்க்குகள் தொலைபேசி திரையில் தென்பட்டுள்ளன. அதில் ஒரு நெட்வொர்க் பெயர் 'அல்கொய்தா ஃப்ரீ டெரர் நெட்வொர்க்' என்று இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அந்த பயணி, யாரோ தீவிரவாதி ஒருவரும் இந்த விமானத்தில் பயணியை போல ஏறியிருக்க வேண்டும், அவரது செல்போன் ஹாட்ஸ்பாட் பெயர்தான் இப்படி இருக்க வேண்டும் என்ற முடி…
-
- 2 replies
- 611 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திரமோடி கேரளாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் போது கொலை செய்யப்போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் கடிதம் மூலம் அச்சுறுத்தியுள்ளனர். திருவனந்தபுரம் தம்பனூரிலுள்ள பா. ஜ. க. அலுவலகத்திற்கு வந்த மர்ம கடிதத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இங்கிலாந்து நாட்டின் தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெயின்ஸ் என்பவரை கொல்லும் முன்பு அவர் முகமூடி அணிந்த தீவிரவாதி முன்பு மண்டியிட்டு இருப்பது போன்ற படம் ஒட்டப்பட்டிருந்தது. அந்த படத்தில் டேவிட் ஹெயின்சுக்கு பதில் பிரதமர் மோடியின் படம் ஒட்டப்பட்டிருந்தது. அதற்கு கீழ் நரேந்திர மோடி குஜராத்தில் முஸ்லிம்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இப்போது பாகிஸ்தான் முஸ்லிம்களை கொன்று வருகிறார். அவர், கேரளாவுக்கு வந்தால் அவருக்கு இதில் ஒட்டப்ப…
-
- 0 replies
- 483 views
-
-
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையை ஒட்டி அமைந்துள்ள கிரேட் பேரியர் ரீஃப் பவளப் பாறைகள் இயற்கைக் கட்டமைப்பை அழிவிலிருந்து பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் வரைந்துள்ள திட்டம் போதுமான பலன் அளிக்காது என ஆஸ்திரேலியாவின் அறிவியல் கழகம் கூறுகிறது. பவளப் பாறைகளில் ஏராளமான கடல்வாழ் பிராணிகள் வாழ்கின்றன பருவநிலை மாற்றம், கரையோரத்தில் நடக்கும் அளவுக்கதிமாக அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்றவற்றின் காரணமாக பவளப் பாறைகளுக்கு ஏற்படுகின்ற பெரிய பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகள் பற்றி அரசாங்கம் கொண்டுவந்துள்ள ரீஃப் 2050 லாங் டர்ம் சஸ்டெய்னபிலிட்டி பிளான் என்ற நெடுங்கால நோக்கிலான பாதுகாப்புத் திட்டம் போதிய அளவுக்கு பேசவில்லை என அக்கழகம் தெரிவிக்கிறது. பவளப்பாறைகள் சேதமடைந்து வருகின்றன…
-
- 0 replies
- 304 views
-
-
வாலன்டைன் ஜெல்வேகர் கருப்புப் பண விவகாரத்தில் இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவது உண்மைதான் என்று சுவிட்சர்லாந்து வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி வாலன்டைன் ஜெல்வேகர் தெரிவித்துள்ளார். இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் பலர் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பெருமளவில் பதுக்கி வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை மீட்க இந்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 3 தொழிலதிபர்களின் பெயர்களை இந்திய அரசு நேற்று வெளியிட்டது. அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பலரின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.…
-
- 0 replies
- 370 views
-
-
(CNN) -- An unmanned NASA-contracted rocket exploded in midair early Tuesday evening, producing huge flames and loud booms along the eastern Virginia coast but no injuries or deaths. Orbital Sciences Corp.'s Antares rocket and Cygnus cargo spacecraft had been set to launch at 6:22 p.m. ET from the Wallops Flight Facility along the Atlantic Ocean, carrying roughly 5,000 pounds of supplies and experiments to the International Space Station. It exploded about six seconds after launch. http://www.cnn.com/2014/10/28/us/nasa-rocket-explodes/index.html?hpt=hp_t1
-
- 0 replies
- 608 views
-
-
மென்பொருள் வளர்ச்சியும், தனிநபர் கணினி பயன்பாடும் உலகின் மேற்பரப்பில் தவழ்ந்து திரிந்து கொண்டிருந்த தருணங்களில், அவற்றின் முதுகில் இறக்கை கட்டி பறக்க வைத்தது பில்கேட்ஸ் என்ற மந்திரச் சொல். 1955ல் அக்டோபர் 28ல் பிறந்த பில்கேட்ஸ் அறுபது வயதை இன்று எட்டிப் பிடிக்கிறார். பில்கேட்ஸ் சொல்லும் பண்புகள் தன் இலக்குகளையும் ஆர்வத்தையும் தன் வாழ்க்கையின் எந்தவொரு சூழ்நிலையிலும் விட்டுக் கொடுத்ததே இல்லை. தன் வழக்கறிஞர் அப்பா, பில்கேட்ஸையும் வழக்கறிஞராக்க அனுதினமும் வாதாடிக் கொண்டிருந்தாலும் அவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு தனக்குப் பிடித்த கணினி சார்ந்த தொழிலை தேர்ந்தெடுத்தார். அவர் யாருக்காவும் தன் இலக்குகளில் இருந்து பின் வாங்வில்லை. அம்மாவின் செல்லப்பிள்ளையாக துறுதுறுவெ…
-
- 0 replies
- 2.3k views
-
-
புதுடில்லி : சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா, அரியானாவில் மேற்கொண்ட நில பேரங்கள் குறித்து, விசாரணை நடத்தப்படும் என, அம்மாநிலத்தில், புதிதாக பதவியேற்றுள்ள, முதல்வர் மனோகர் லால்கட்டார் தலைமையிலான, பா.ஜ., அரசு அறிவித்துள்ளது. இதனால், ராபர்ட் வாத்ராவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், ராபர்ட் வாத்ராவின் நில பேரங்களுடன் தொடர்புடைய, டி.எல்.எப்., கட்டுமான நிறுவனமும் சிக்கலில் மாட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சர்ச்சையான நில பேரம்: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா. இவருக்கு சொந்தமான நிறுவனம் ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி. இந்த நிறுவனம், அரியானா மாநிலம், குர்கான் அருகேயுள்ள ஷிக்கோபூரில், 2008ம் ஆண்டில், 3.5 ஏக்கர் நிலத்தை, 7.5 கோடி ரூபாய்க்கு வாங்கிய…
-
- 0 replies
- 307 views
-
-
பிரிட்டனில் உள்ள பாகிஸ்தானியர்கள், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக மேற்கொண்ட பேரணியால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. 'மில்லியன் மார்ச்' என்று அழைக்கப்படும் இந்தப் பேரணி லண்டனில் உள்ள டிரபல்கர் சதுக்கத்திலிருந்து, ட்ரவ்னிங் தெரு வரை நடத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி திடீரென மேடை அமைத்துப் பேசத் தொடங்கிய போது குழப்பம் தொடங்கியது. ஆனால் அவரைப் பேச விடாமல் அந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களே, பூட்டோ மீது காலி பாட்டில்களை விட்டெறியத் தொடங்கினர். இந்தச் சர்ச்சையில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரி-கி-இன்சாஃப் கட்சியின் ஹசன் நியாஸி (இம்ரான் உறவினர்) என்பவரும் சிக்கினார். இதனையடுத்து நியாஸியை பிரிட்டன் போலீஸ் சிறிது நேரத்திற்குக் கைது …
-
- 0 replies
- 410 views
-