Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உக்ரைன் விமானம் என நினைத்து தாக்கினேன்: - ரஷ்ய ஆதரவுப்படை தலைவர் [Friday 2014-07-18 11:00] மலேசிய விமானத்தை உக்ரைன் விமானப்படை விமானம் என தவறுதலாக நினைத்து தான் சுட்டுவிட்டதாக ரஷ்ய ராணுவ ஆதரவுப் படையின் தலைவரான இகோர் ஸ்ட்ரெல்கோவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 295 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு வியாழக்கிழமை மதியம் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 295 பேரும் உடல் கருகி பலியாகினர். இந்நிலையில் ரஷ்ய ஆதரவுப்படை தீவிரவாதிகளின் தலைவரான இகோர் ஸ்ட்ரெல்கோவ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உக்ரைன் விமானப்ப…

  2. https://www.facebook.com/photo.php?fbid=465419050262262&set=a.121009184703252.21333.100003825135026&type=1&theater நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய நோக்கி புறப்பட்ட MH17 விமானம் உக்ரேய்ன் வான் பரப்பில் வைத்து சுட்டுவீழ்த்தப்பட்டதால் அவ்விமானத்தில் பயணித்த 295 பேரும் நேற்று உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த விமானம் புறப்பட முன்னர் அதன் பயணிகளில் ஒருவரான நெதர்லாந்து நாட்டுக் காரர் Cor Pan என்பவர், ஆம்ஸ்டர்டாம் சிபோல் விமானநிலையத்தில் வைத்து அவ்விமானத்தை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். 'ஒருவேளை இவ்விமானம் காணாமல் போனால், விமானத்தின் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்பதை நினைவ…

  3. உக்ரைனின் கிழக்கில் பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்டதற்கான பொறுப்பை உக்ரைனே ஏற்க வேண்டும் என்று இன்று வெள்ளிக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். பிரிவினைவாதிகளுக்கு எதிராக ஓர் இராணுவ நடவடிக்கையை உக்ரைன் அரசாங்கம் மீண்டும் தொடங்காமல் இருந்திருந்தால் இது நடந்திருக்கமாட்டாது எனவும் அவர் கூறினார். அங்கு அமைதி இருந்திருப்பின் இந்த துயர சம்பவம் இடம்பெற்றிருக்காது. தென்கிழக்கு உக்ரைனில் இராணுவ நடவடிக்கை நடைபெற்றிருக்காவிடின் இது இடம்பெற்றிருக்காது எனவும் அவர் கூறினார். இந்த துயர சம்பவத்துக்கான பொறுப்பை இந்தச் சம்பவம் இடம்பெற்ற ஆட்புலத்தின் அரசாங்கம் ஏற்க வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இயன்ற சகல உதவிகளையும் வழங்குமாறு ரஷ்ய அதிகாரி…

  4. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம், நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்டது. அந்த விமானம், உக்ரைன் நாட்டு வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ‘ராடார்‘ கருவியின் பார்வையில் இருந்து மறைந்தது. சற்று நேரத்தில், விமானம் தீப்பிடித்தபடி, வானத்தில் இருந்து நெருப்புக் கோளமாக தரையில் விழுந்தது. மலேசிய விமானம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 298 பேர் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளான பகுதியில்தான் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். விமானத்தை கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்திவிட்டர் என்று உக்ரைன் அரசு தரப்பு கூறியுள்…

  5. ஈராக்கில் தனி நாடு அமைக்கும் வகையில் போர் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, அல்கன்சா என்ற பெயரில் பெண்கள் படையையும் உருவாக்கி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஈராக்கில், ஐ.எஸ்,ஐ,எஸ்., என்ற பயங்கரவாத அமைப்பு, அங்குள்ள அரசுக்கு எதிராக போர் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு சிரியாவிலும், ஈராக்கிலும் பல நகரங்களை கைப்பற்றி உள்ளது. ரக்கா, திக்ரித், மோசூல் உள்ளிட்ட பல நகரங்கள் இந்த அமைப்பின் பிடியில் சிக்கி உள்ளன. இதைத் தொடர்ந்து தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைத்து, புதிய நாடாக ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு பிரகடனப்படுத்தி உள்ளது. இந்த பயங்கரவாத அமைப்பில் இந்தியாவை சேர்ந்த ஒரு தமிழர் உட்பட 18 பேர் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், …

  6. உக்ரேய்ன் ரஸ்ய எல்லைப்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் அம்ஸ்டடாமிலிருந்து மலேசியா நோக்கிப் பயணித்த எம்.எச்.17 ரக விமான உக்ரேய்ன் ரஸ்ய எல்லைப் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். ரஸ்ய ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களினால் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், உக்ரைன் இராணுவமே விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில் விபத்திற்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி கிடைத்துள்ளதால் அந்த கறுப்பு பெட்டியில் உள்ள தகவல் பரிமாற்றம் மூலம், சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய…

  7. ஒரு வேளை உலகம் முடியப் போகுதோ...? கிலியை ஏற்படுத்தும் சைபீரியாவின் பெரும் பள்ளம். மாஸ்கோ: சைபீரியாவின் யாமல் தீபகற்பத்தில் தோன்றிய மிகப்பெரிய பள்ளத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்குட்பட் வடக்கு சைபீரியாவின் தீபகற்ப பகுதியான யாமல் ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையாக அமைந்துள்ளது. இயற்கை எரிவாயு அதிகம் உள்ள நிலப்பரப்பு இப்பகுதி ஆகும். உலகத்தின் கடைசிப் பகுதி என்றும் இது அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் மெகா சைஸ் பள்ளம் தோன்றியுள்ளது. இது 80 மீ அகலம் கொண்டதாகவும் இருந்தது. ஆனால் ஆழம் என்ன என்று தெரியவில்லை. எனவே அதன் ஆழம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். திடீரென இந்தப் பள்ளம் தோன்றியத…

  8. இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் 120க்கும் மேற்பட்ட மக்கள் பலி காசா மீதான இஸ்ரேலின் தொடர் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீனர்களில் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள் என்று ஐநா கூறுகின்றது. இஸ்ரேலின் தாக்குதல்களில் தொடங்கிய நாள்முதல் இதுவரை 120க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர். இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ராக்கெட் குண்டுகளை ஏவிவரும் ஹமாஸ் ஆயுததாரிகளின் தாக்குதல்களை நிறுத்தும் முயற்சியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது. ராக்கெட் தாக்குதல்களில் எந்தவொரு இஸ்ரேலியரும் கொல்லப்படவில்லை. பீய்ட் லாஹியா நகரில் தொண்டு நிறுவனம் ஒன்று பயன்படுத்திவந்த கட்டடம் மீது நடந்துள்ள வான் தாக்குதல்களில் அங்கவீனச் சிறார்கள் இருவர் கொல்லப்…

    • 14 replies
    • 881 views
  9. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பேரனும், மகள் பிரியங்கா-ராபர்ட் வதேரா தம்பதியரின் மகனுமான ரேஹான் இன்று பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் போது பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்த்தார். நேரு குடும்பத்து ஐந்தாவது தலைமுறை ரேஹான் 13 வயது ஆகிறது. அவர் இன்று தனது 3 நண்பர்களுடன் வந்து இருந்தார்.அவர் சபாநாயகர் இருக்கைக்கு நேர் எதிரில் அமர்ந்து இருந்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=113258&category=IndianNews&language=tamil

  10. யுக்ரெயின் ராணுவம் (ஆவணப்படம்) யுக்ரெயின் அரசு ரஷ்யா தனது போர் விமானங்களில் ஒன்றை, அது யுக்ரெயின் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, சுட்டு வீழ்த்திவிட்டதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்த எஸ்.யு 25 ரக விமானம் புதனன்று ரஷ்ய ஏவுகணை ஒன்றால் தாக்கப்பட்டதாகவும், ஆனால் விமானி வெளியே குதித்து விட்டார் என்றும், அவர் காயமின்றி மீட்கப்பட்டார் என்றும் பாதுகாப்பு அமைச்சகத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறினார். ரஷ்ய நிலப்பரப்பிலிருந்து ஒரு யுக்ரெயினிய கிராமம் ஒன்றில் க்ராட் ரக ராக்கெட்டுகள் ஏவப்படுவது போல காட்டும் amateur வீடியோ காட்சிகளை யுக்ரெயினிய ஊடகங்கள் காட்டின. இந்த காட்சிகளை பிபிசியால் முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை. கிழக்கு யுக்ரெயினில் பிரிவினைவாதி…

  11. பெங்களூரு: பெங்களூருவில் ஒன்றாம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமி 2 பேரால் பள்ளியில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவின் கிழக்குப்பகுதியில் விப்கியார் என்ற பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் நிஷா ( பெயர் மாற்றம்) என்ற சிறுமியை அப்பள்ளியில் பணிபுரியும் உடற் பயிற்சியாளரும், காவலாளியும் சேர்ந்து பள்ளியின் மறைவான இடத்திற்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளியில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அச்சிறுமி கழிப்பறைக்கு சென்றபோதே அவர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர். கடந்த ஜுலை 2 ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தெரிவிக்…

  12. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகைக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள புதுபாஸ்டன் நகரில் வசித்து வரும் நடிகை ஷனான் கெஸ் ரிச்சர்டுசன் டி.வி. தொடர்களில் நடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, நியூயார்க்கில் மேயராக இருந்த மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோருக்கு ரிசின் என்ற கொடிய விஷத்தை தடவி கடந்த ஆண்டு மே மாதம் கடிதம் அனுப்பியதாக ஷனான் கெஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. டெக்சாஸ் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையின்போது, விஷத்தை வைத்ததாக ஒப்புக்கொண்ட நடிகை, ஆனால் விஷம் தடவிய கடிதங்களை தனது முன்னாள் கணவர்தான் அனுப்பினார் என்றும் வாதிட்ட…

  13. பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீஃப்புக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது... "பாகிஸ்தான் அரசுடன் இணைந்து, இணக்கமாக செயல்பட தயாராக உள்ளேன். இந்தியா பாகிஸ்தான் இடையேயான நட்புறவு மேலும் வளரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கராச்சி விமான நிலையத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அந்த கடிதத்தில் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட நவாஸ் ஷெரீஃப், தனது இந்தியப் பயணம் திருப்திகரமாக இருந்ததாகவும் புதிய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் இரு நாடுகளுக்கு இட…

  14. காஸா மீது ராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் அப்பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களின் வீடுகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. காஸாவிலுள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையிலான போர் முற்றியுள்ளது. காஸா பகுதி மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், காஸாவில் 208-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இப்போரை நிறுத்துவதற்காக எகிப்து மேற்கொண்ட சமரச முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஹமாஸ் தீவிரவாதிகள், லெபனான் மற்றும் காஸா பகுதியிலிருந்து ராக்கெட் வீசி தாக்குதல் நடத்துகின்றனர்…

  15. நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உயர்நீதின்றம் உத்தரவிட்டுள்ளது. சாமியார் நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என, அவருக்கு எதிரான பாலியல் குற்ற வழக்கை விசாரித்து வரும் கர்நாடக பொலிசார் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதையேற்ற ராம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நித்யானந்தா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு ஆண்மை பரிசோதனை செய்யக்கூடாது என்றும் செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும்ம் கேட்டுக்கொண்டார். எனவே செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம் இதுகுறித…

  16. ஜெய்ப்பூர் :ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், 'அட்சய பாத்திரா' என்ற அரசு சார்பற்ற அமைப்பால் நடத்தப்படும், பிரமாண்ட சமையலறைக்கு, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், நேற்று வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, எப்படி உணவு தயாரிக்கப்படுகிறது என்பதை கேட்டறிந்தார். பின், மாணவர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்ந்தார். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன். இவர், 'கிளின்டன் அறக்கட்டளை' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் கிளைகள், பல நாடுகளில் உள்ளன. அவற்றின் செயல்பாடுகளை கண்டறிவதற்காக, ஆசிய, பசிபிக் நாடுகளுக்கு, தற்போது பில் கிளின்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, தற்போது, இந்தியா வந்துள்ளார். பின், வியட்நாம், இந்தோனேச…

    • 0 replies
    • 326 views
  17. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள சர்வதேச விமானம் நிலையம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரொக்கெட் உந்து கணைகள் மற்றும் தன்னியக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த கட்டடொன்றை ஆயுததாரிகள் கைப்பற்றியுள்ளனர். அனைத்து ஆயுததாரிகளும் வேறு நகரங்களை நோக்கி துரத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் பொலிஸார் குறிப்பிடுகின்றன. எனினும் இந்தத் தாக்குதலில் விமான நிலையத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என ஆப்கான் உள்விவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதுhttp://www.pathivu.com/news/32499/57//d,article_full.aspx

    • 0 replies
    • 229 views
  18. மெக்ஸிக்கோவின் மிசோகன் மாநிலத்தில் சமோரா நகரிலுள்ள சிறுவர்கள் பராமரிப்பு நிலையமொன்றில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வந்த 450 க்கு மேற்பட்ட சிறுவர்களை அந்நாட்டு அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேற்படி, பிக் பமிலி சிறுவர்கள் பராமரிப்பு இல்லத்தின் உரிமையாளரான ரோஸா டெல்கார்மென் வொர்டுஸ்கோவும் 8 ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் 271 சிறுவர்களும் 174 சிறுமிகளும் 3 வயதுக்கு கீழ்ப்பட்ட 6 பாலகர்களும் உள்ளடங்குகின்றனர். அதேசமயம் மேற்படி பிராந்தியத்தில் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட 40 வயதுக்கு மேற்பட்ட 138 வயது வந்தவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். மேற்படி, இல்லத்திலுள்ள தமது பிள்ளைகளை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படாததால் சினமடைந்த பெற்றோ…

  19. காஸாவில் இனப்படுகொலை நடத்தும் இஸ்ரேலை கண்டித்து தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு டெல்லி: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இனப்படுகொலை நிகழ்த்தி வரும் இஸ்ரேலை கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லோக்சபாவில் காஸா மீதான இஸ்ரேல் கொடுந்தாக்குதலை நடத்தி இனப்படுகொலையை அரங்கேற்றி வரும் விவகாரம் இன்று எதிரொலித்தது. காஸா பகுதி மீதான இஸ்ரேலின் கொடுந்தாக்குதலை கண்டித்தும் ஐ.நா. சபையில் காஸா பகுதி மக்களுக்காக குரல் கொடுக்க வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ், திரிணாமுல், மக்கள் ஜனநாயகக் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், மஜ்லிஸ்…

  20. லிபி­யாவின் தலை­நகர் திரி­போ­லி­யி­லுள்ள பிர­தான சர்­வ­தேச விமான நிலை­யத்தின் மீது திங்­கட்­கி­ழமை மாலை புதிய ஏவு­கணைத் தாக்­கு­த­லொன்று நடத்­தப்­பட்­டுள்­ளது. மேற்­படி விமான நிலையம் மூடப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்த மோதல்கள் இடம்­பெற்­ற­மைக்கு மறு­நாளே இந்த ஏவு­கணைத் தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது. இந்த தாக்­கு­தலில் குறைந்­தது ஒருவர் உயி­ரி­ழந்து 6 பேர் காய­ம­டைந்­துள்­ள­துடன் 12 விமா­னங்கள் சேத­ம­டைந்­துள்­ளன. இந்­நி­லையில்இ நாட்டின் பாது­காப்பை மீள நிலை­நி­றுத்­து­வ­தற்கு சர்­வ­தேச படை­களின் உத­வியை நாடு­வ­தற்கு லிபிய அர­சாங்கம் எதிர்­பார்த்­துள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்கப் பேச்­சாளர் ஒருவர் கூறினார். வெளி உல­கத்­திற்­கான லிபி­யாவின் பிர­தான போக்­கு­வ­ரத்த…

  21. இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி போர்ட்டலேசா, ஜூலை 16- ‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார். ஏற்கனவே, இவ்வமைப்பில் உள்ள இதர நாடுகளுக்கும் இதே எண்ணம் இருந்து வந்த நிலையில் 100 கோடி அமெரிக்க டாலர்களை ஆரம்ப முதலீடாக கொண்டு பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கியை தொடங்க இன்று முடிவு செய்யப்பட்டது. இந்த வங்கியின் தலைமையகத்தை சீனாவில் அமைப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் முதல் தலைவராக இந்தியாவும…

  22. காஸா நிலவரங்கள் குறித்து ஜனாதிபதி ஆழ்ந்த அனுதாபம் பலஸ்தீன தலைவருடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடல் பலஸ்தீனில் உயிரிழந்த பொது மக்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டு ள்ளார். பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, பலஸ்தீனின் பிந்திய நிலவரங்கள் குறித்து அறிந்துகொண்டதுடன், உயிரிழந்த மக்களுக்குத் தனது ஆழ்ந்த கவலையையும் வெளியி ட்டார். காஸா பகுதியில் பலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் உயிரிழ ப்புகள் குறித்து பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு விளக்கமளித்தார். உயிரிழந்த மக்களுக்கு அனுதாபங்களைத் தெரி விப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறினார். காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களா…

    • 1 reply
    • 289 views
  23. இங்கிலாந்து தேவாலயங்ளில் பெண்கள் பிஷப் ஆக அனுமதி! [Tuesday 2014-07-15 09:00] இங்கிலாந்து தேவாலயங்ளில் இதுவரை பெண்கள் பிஷப்களாக நியமிக்கப்பட்டதில்லை. ஆனால், பெண் களை பிஷப்களாக நியமிக்க வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை விடப் பட்டு வந்தது. இது தொடர்பாக, 'சர்ச் ஆப் இங்கிலாந்து' என அழைக்கப்படும் திருச்சபைகளில் கடந்த 2012ல் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்நிலையில், பெண் பிஷப் நியமனம் தொடர்பாக, சர்ச் ஆப் இங்கிலாந்தின் 3 திருச்சபைகளில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. யோர்க் நகரில் நடந்த திருச்சபைகளின் பொது குழு கூட்டத்தில், 'பெண்கள் பிஷப் ஆக தடையில்லை' என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பிஷப்கள் சபையில், தீர்மானத்துக்கு ஆதரவாக 37 ஓட்டுக…

  24. பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். [Tuesday 2014-07-15 09:00] அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலையொட்டி பிரதமர் டேவிட் கேமரூன் அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளார். இதன் எதிரொலியாக வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ஹேக் விலகியுள்ளார். இது குறித்து ஹேக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஹேக்கின் விலகலையடுத்து தற்போதைய பாதுகாப்புத் துறை செயலாளர் பிலிப் ஹம்மோன்ட் வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.seithy.com/breifNews.php?newsID=113162&category=WorldNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.