உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
வட லண்டனின் டொட்டென் ஹாம் பிரதேசத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த காரொன்றிலிருந்து குழந்தையுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை பொதுமக்கள் துணிகரமாக செயற்பட்டு காப்பாற்றியுள்ளனர். தீ அனர்த்தம் ஏற்பட்டபோது அந்தக் காரிலிருந்த வயோதிபர் ஒருவர் ஆசனப்பட்டியிலிருந்து விடுவிக்க முடியாது போராடிய அதேசமயம், குழந்தையும் காரின் ஆசனத்தில் பிணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியாக சென்ற இருவர் மீட்புப் பணியாளர்கள் வருவதன் முன் துரிதமாக செயற்பட்டு அனைவரையும் காரிலிருந்து பாதுகாப்பாக மீட்டனர். அவர்கள் இறுதியாக குழந்தையை மீட்பதற்கு ஒருசில செக்கன்களில் கார் பாரிய வெடிப்புச் சத்தத்துடன் தீப்பற்றி எரிந்துள்ளது. மேற்படி துணிகர மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் உள்ளூர்வா…
-
- 0 replies
- 187 views
-
-
கணவர் பாதுகாப்பு சட்டம் கொண்டுவருவோம்: சுயேட்சை வேட்பாளர் வாக்குறுதி. அகமதாபாத்: தேர்தல் வந்துவிட்டால் போதும் வேட்பாளர்களின் வாக்குறுதிகள் வண்ணமயமாய் வாக்காளர்களின் கதவுகளை தட்டும். குஜராத் மாநிலத்தில் ஒரு வேட்பாளர் கொடுத்த வாக்குறுதி இருக்கிறதே கொஞ்சம் வித்தியாசமானதுதான். எனக்கு ஓட்டு போட்டால் மனைவியிடம் அடிவாங்கும் கணவரை பாதுகாப்போம் என்று ஆண்களை டச் செய்யும் வகையில் வாக்கு சேகரித்து வருகிறார் ஒரு சுயேட்சை வேட்பாளர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு சுயேட்சை வேட்பாளர் சொல்லும் வாக்குறுதிகளும் அப்படித்தான் உள்ளது. ஆமதாபாத் கிழக்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் தஷ்ரத் தேவ்தா என்பவர், மனைவியால் அடித்து- உதைத்து தாக்கப்படும் கணவரை காப்பாற்றுவோம். அதற்கு ஏற்…
-
- 4 replies
- 733 views
-
-
கிழக்கு உக்ரைனில் பதற்றம்: எந்நேரமும் போர் வெடிக்கலாம்!! [Thursday, 2014-04-17 08:05:11] கிழக்கு உக்ரைனில் சுமார் 10 நகரங்கள் ரஷிய ஆதரவாளர்கள் வசம் உள்ளன. அந்தக் கட்டிடங்களை விட்டு வெளியேறவும், ஆயுதங்களை கைவிடவும் உக்ரைன் விதித்த கெடுவை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. 2 நாட்கள் பொறுத்துப்பார்த்த நிலையில், ரஷிய ஆதரவாளர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதில் உக்ரைன் தீவிரம் காட்டத்தொடங்கி உள்ளது. உக்ரைன் கொடியுடன் கூடிய 7 கவச வாகனங்களில் உக்ரைன் படையினர் கிழக்கு உக்ரைனில் உள்ள கிரமாட்டார்ஸ்க் நகரில் நிலை கொண்டுள்ளனர். ஏற்கனவே 7 பஸ்களில் அதிரடிப்படை வீரர்கள், டாங்குகள் ஸ்லாவான்ஸ்க் நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளன. ரஷியா தனது செல்வாக்…
-
- 9 replies
- 894 views
-
-
கனடியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களில் பாதிக்கு மேற்ப்பட்டவை பழுதடைந்தவை! [Monday, 2014-04-21 18:58:44] கனடியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களின் எண்ணிக்கையில் அரைவாசித் தொகையானவை பழுதடைந்த நிலையில் குறிப்பாகத் திருத்தப்பட வேண்டிய கட்டத்தில் இருக்கின்றன எனத் தெரிகின்றன. கிட்டத்தட்ட அரைவாசிக்கும் அதிகமான கடற்படைக் கப்பல்களும் மற்றும் நீர் முழ்கிக்க கபெ;பல்களும திருத்தப்பபட வேண்டிய கட்ட்த்தில் இருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 33 பிரதான கபபல்குளும் மற்றும் நீர்மூகிக் கப்பல்களும் இருக்கின்றபோது அவற்றில் 15 திருத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன எனத தெரியவருகிறது. இவற்றைத்தவிர 4 கப்பல்கள் பரீட்சிக்கப்படுகின்றன எனவும் தெரியவருகிறது. …
-
- 0 replies
- 254 views
-
-
போபால்: மத்திய பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சிங்ராவ்லி மாவட்டம் நலதானி என்ற இடத்தில் சிறுமி ஒருவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பேருந்தில் இருந்தவர்கள், சித்திக் பகுதியில் இறங்கிவிடுவதாக கூறி பேருந்தில் சிறுமியை ஏறுமாறு கூறியிருக்கின்றனர். அந்த சிறுமியும் அதை நம்பி பேருந்தில் ஏறியிருக்கிறார். அந்த பேருந்தில் ஒரு டிரைவர் 2 கிளினர் உள்பட 5 பேர் இருந்துள்ளனர். பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், பேருந்தில் இருந்த 5 பேரும் சிறுமியை பலவந்தமாக பலாத்காரம் செய்த…
-
- 0 replies
- 595 views
-
-
அமெரிக்காவின் அதிநவீன துப்பாக்கி வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் ஒவ்வொரு நாடும் புதிது புதிதாக போர்க்கருவிகளை உருவாக்கி வருகின்றன. அந்தவகையில், வெடிபொருள் உதவியின்றி இயங்குகிற மின்காந்த துப்பாக்கி ஒன்றை முதன்முதலாக பயன்படுத்த அமெரிக்க கடற்படை திட்டமிட்டுள்ளது. ‘ரெயில்கண்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த துப்பாக்கி, ஒலியை விட 7 மடங்கு வேகத்தில் தோட்டாக்களை செலுத்தும் திறன் வாய்ந்தது. மேலும் இதன் மூலம் 160 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளை தாக்க இயலும். இதில் உள்ள மின்காந்த விசை, தோட்டாக்களை வேகமாக வெளிச்செலுத்த உதவும். இதன் மூலம் பாரம்பரிய துப்பாக்கிகளை விட அதிக வேகத்தில் இந்த துப்பாக்கி செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் இதை பரிட்சித்…
-
- 2 replies
- 541 views
-
-
476 பயணிகளுடன் கப்பல் மூழ்கியது ஏப்ரல் 2014 08:25 தென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று 476 பயணிகளுடன் தென்கொரிய கடலில் இன்று புதன்கிழமை மூழ்கிகொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 476 பயணிகளில் 325 பேர் உயர்தர பாடசாலையின் மாணவர்கள் என்றும் 32 பணியாளர்கள் இருந்ததாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது. கப்பலில் இருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் 18 ஹெலிகொப்டர்களும் 34 படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/106966-476-.html
-
- 19 replies
- 1.6k views
-
-
'இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கின்றனர். காங்கிரசை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. அருமை தலைவர் ராஜிவ் இந்த மக்களுக்காக ரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும்' என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்துக்காக கன்னியாகுமரி பிரதேசத்துக்குச் சென்றுள்ள சோனியா தொடர்ந்தும் பேசியுள்ளதாவது, இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என அரசியல் கட்சியினர் குற்றம்சுமத்துகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. அருமை தலைவர…
-
- 11 replies
- 1.1k views
-
-
முடிவில்லா மர்மமாக தொடரும் மலேசிய விமான மாயம்.. [sunday, 2014-04-20 16:28:55] மலேசியாவில் இருந்து சீனா நோக்கி சென்று நடுவானில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானத்தின் பாகங்களை தேடும் பணி இன்றுடன் 44வது தினத்தை அடைந்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் சோனார் கருவிகள் கொண்டு நடத்தப்படும் தேடுதல் பணி ஒரு வாரத்தில் முடிவு பெறும் என்று ஆஸ்திரேலிய தேடுதல் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலேசியாவில் இருந்து சீனா நோக்கி சென்ற எம்.எச்.370 என்ற மலேசிய விமானம் கடந்த மார்ச் 8ந்தேதி நடுவானில் மாயமானது. அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் குறித்த தகவல் வெளிவரவில்லை. விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்திருக்க கூடும் என்று கிடைத்த…
-
- 0 replies
- 262 views
-
-
உக்ரைனின் கிழக்குபகுதி மக்கள் ஜெனிவா ஒப்பந்தத்தை ஏற்க மறுப்பு சனி, 19 ஏப்ரல் 2014 (13:18 IST) உக்ரைனின் கிழக்கு பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைக்க வலியுறுத்தி போராடி வரும் மக்கள், போராட்டத்தை நிறுத்திக் கொள்ள வலியுறுத்தும் ஜெனிவா ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் ஒருபகுதியாக இருந்த கிரிமியா பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் தன்னை இணைத்துக் கொண்டது. இந்நிலையில், கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இதனை எதிர்த்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, ஜெனிவாவில் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன், மற்றும் ரஷ்யா ஆகி…
-
- 0 replies
- 486 views
-
-
தெற்கு சூடான் பாதுகாப்பு முகாம் மீதான தாக்குதல் போர்க்குற்றமாகவே கருதப்படும்: ஐ.நா கண்டனம் [saturday, 2014-04-19 12:43:11] ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள தெற்கு சூடான் நாட்டில் அரசு துருப்புகளுக்கும், முன்னாள் துணை அதிபரின் போராளிப் படைகளுக்கும் இடையே சில மாதங்களாக நடைபெற்றுவரும் அதிகார சண்டையில் அப்பாவி பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 500க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளதால் தஞ்சம் தேடி மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி உள்ளனர். இவர்களுக்கு அடைக்கலம் அளிக்க ஐ.நா அமைதிப்படை வீரர்கள் ஆங்காங்கே பாதுகாப்பு முகாம்களை அமைத்து அவர்களைத் தங்க வைத்துள்ளனர். இதுபோல் போர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் ஐயாயிரம் பேர் அகதிகளாகத் …
-
- 0 replies
- 276 views
-
-
மிஸ்டர் பீன் என்ற பெயரில் உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ரோவன் அட்கின்ஸன் தன்னைவிட பாதி வயதான நடிகையொருவரை காதலிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 59 வயதான ரோவன் அட்கின்ஸன் பிரிட்டனைச் சேர்ந்தவர். மிஸ்டர் பீன் நகைச்சுவைத் தொடர்களில் வார்த்தைகளால் இல்லாமல் தனது வேடிக்கையான செய்கைகளால் சிரிக்க வைத்து புகழ் பெற்றவர் இவர். எந்த மொழி பேசுபவர்களுக்கும் புரியும்படியாக இருந்ததால் இவரின் நகைச்சுவை நாடகங்கள் உலகம் முழவதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. இதனால் கோடிக்கணக்கான ரசிகர்களையும் பணத்தையும் ரோவன் அட்கின்ஸன் சம்பாதித்தார். மிஸ்டர் பீன் பாத்திரத்தில் கோமாளி போல் தோன்றினாலும் நிஜத்தில் மிக வித்தியாசமானவர் ரோவன் அட்கின்ஸன். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்த…
-
- 5 replies
- 928 views
-
-
-
பனிப்புயலில் சிக்கி 6 பேர் மரணம் ( எவெரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியைக் காட்டும் ஆவணப்படம்) எவெரெஸ்ட் சிகரத்தை நோக்கிச் செல்லும் இமயமலைப் பாதையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென்று வீசிய பனிப்புயலில் சிக்கி குறைந்தது ஆறு உள்ளூர் வழிகாட்டிகள் (ஷெர்பாக்கள்) இறந்தனர் என்று நேபாள அதிகாரிகள் கூறுகின்றார். எவெரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற முயலும் மலையேறிகள் அங்கு செல்வதற்கு முன் புறப்படும், சுமார் 5,800 மீட்டர் உயரத்தில் இருக்கும் எவரெஸ்ட் கீழ்மட்ட முகாம் என்ற இடத்தில் இருந்து சற்று மேலே இந்த பனிப்புயல் தாக்கியதாக ஒரு அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார். இந்த ஷெர்பா வழிகாட்டிகள் இன்று அதிகாலை , அவர்களுக்கு பின் வரவிருந்த மலையேறிகளுக்கு கயிறுகளைக் கட்டி பாதைகளை சீர்படுத்…
-
- 1 reply
- 446 views
-
-
நாடாளுமன்ற தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்களில், 121 தொகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை புனேவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஒரு எந்திரத்தில் மக்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும், அனைத்து வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றபோது ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் காங்கிரஸ் சின்னத்திற்கே சென்றதால் வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்த போது தங்கள் சின்னத்திற்கு எதிரே உள்ள லைட் ஒளிராமல் காங்கிரஸ் சின்னத்திற்கு நேரே உள்ள லைட் ஒளிர்ந்ததாக தெரிகிறது. வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்தது…
-
- 2 replies
- 423 views
-
-
காண்ட்வாலா: கனிவாகவும் பண்பாகவும் பிரசாரம் செய்வது காங்கிரசாரின் இயல்பு என்று ராகுல் பெருமிதத்துடன் கூறினார். மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வாலாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ''அரசின் செயல்பாடுகள் பற்றி யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் கடசியினர் யாரும் திமிராகப் பேசுவது கிடையாது. கனிவாகவும் பண்பாகவும் பிரசாரம் செய்வது காங்கிரசாரின் இயல்பு. நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் உணவு கிடைப்பதை காங்கிரஸ் அரசு உறுதி செய்துள்ளது. 100 நாள் வேலைத்திட்டம் மூலம் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ். எல்லோருக்கும் கல்வி …
-
- 0 replies
- 369 views
-
-
http://www.youtube.com/watch?v=NSVYem6EkC4&feature=youtu.be
-
- 0 replies
- 362 views
-
-
மத்திய ஆப்பிரிக்க நாட்டில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் 200 பள்ளி இளம் மாணவிகளை கடத்திச் சென்றுள்ளனர். அவர்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக தப்பி வந்த மாணவிகள் தெரிவித்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. நைஜீரியாவில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை தாக்கி அழிக்கும் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். நைஜீரியா நாட்டின் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் உள்ள அம்ச்சக்கா மற்றும் சுற்றுப்புற கிராங்களுக்குள் நேற்று முன்தினம் கும்பலாக புகுந்த போகோ ஹரம் தீவிரவாதிகள், அங்கிருந்த வீடு…
-
- 1 reply
- 2.5k views
-
-
புதுடெல்லி: திருநங்கைகளை 3வது பாலினமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. திருநங்கைகளை 3-வது பாலினமாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், கல்வி, வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், பொருளாதார, சமூகரீதியில் திருநங்கைகளை பின்தங்கியவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுநாள் வரை திருநங்கைகள் தங்களது பாலினத்தை ஆண் அல்லது பெண் ஆக குறிப்பிட நிர்ப்பந்திக்கப்பட்டு வந்த நிலையில், இத்தீர்ப்பு அவர்களுக்கு சமூக அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இனிமேல் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் மூன்றா…
-
- 0 replies
- 319 views
-
-
http://www.youtube.com/watch?v=fbThRjMaC4s&feature=youtu.be
-
- 1 reply
- 721 views
-
-
200 பயணிகளுடன் சவூதி நோக்கி புறப்பட்டு சென்ற விமானம் விமானியின் தவறால் ஜித்தாவில் தரையிறக்கப்பட்டது! [Monday, 2014-04-14 23:08:49] இன்று காலை பாகிஸ்தான் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து PIA 731 என்ற இலக்கம் கொண்ட பாகிஸ்தானுக்கு சொந்தமான விமானம் 200 பயணிகளுடன் சவூதி நோக்கி புறப்பட்டு வந்து விமானியின் தவறு காரணமாக ரியாத்தில் தரையிரங்குவதர்க்கு பதிலாக ஜித்தாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனை உடன் விசாரணை செய்த பாகிஸ்தான் அதிகாரிகள் இதில் எந்தவித அடிப்படி நோக்கமும் கிடையாது எனவும் விமானியின் தவறே காரணம் என கூறியுள்ளனர். அதிகமான பயணிகள் இதன்போது சிரமதுக்குள்ளானதாகவும், எரிபொருள் சிக்கனதுக்காகவே விமானி இதனை செய்துள்ளதாகவும் பயணிகள் குறிப்பிட்டன…
-
- 1 reply
- 572 views
-
-
திமுக - அதிமுக மீது மோடி கடும் தாக்கு! ஈழத் தமிழர், மீனவர்கள், மாநில உரிமை பற்றி பேச்சு!! சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதல் முறையாக திமுக, அதிமுகவை மிகக் கடுமையாக தாக்கிப் பேசினார். அத்துடன் தமிழக மீனவர் நலன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடு வாழ் தமிழர் பிரச்சனை பற்றியும் விரிவாக பேசினார் மோடி. சென்னை மீனம்பாக்கத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது: புத்தாண்டு காணும் தமிழக மக்களுக்கு கடவுள் வரங்களை அள்ளித்தர வேண்டும் என வேண்டுகிறேன். தேர்தலுக்கு முன்பு இப்படி ஒரு ஆவேசம் இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போதே தேர்தல் முடிவும் அறிவிக்கப்…
-
- 2 replies
- 865 views
-
-
பிரியங்கா காந்தி அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்: சொல்கிறார் சு. சாமி. டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பிரியங்கா காந்தி வாரனாசியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும் காங்கிரஸ் அதை ஏற்கவில்லை. அவர்கள் அவரை காப்பாற்றிவிட்டனர். இல்லை என்றால் அவருக்கு நல்ல அடி கிடைத்திருக்கும். அவர் மக்கள் மத்தியில் பிரபலம் இல்லை. அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர். அவருக்கும், அவரது கணவருக்கும் கெட்ட பெயர் உள்ளது. தனது தந்தையை கொன்றவர்களை சிறையில் சென்று பார்த்த பிரியங்கா நன்றி கெட்ட மகள் ஆவார். வருண் க…
-
- 6 replies
- 1.3k views
-
-
சஞ்சய், இந்திரா, ராஜீவுக்கு அல்லா தண்டனை வழங்கினார்: மீண்டும் சர்ச்சை கிளப்பிய ஆஸம்கான். டெல்லி: தாங்கள் செய்த தவறுகளுக்காகவே இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோருக்கு அல்லா தண்டனை வழங்கினார் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர்களில் ஒருவரான அசாம் கான் கூறியுள்ளார். இது தொடர்பாக பிஜ்னூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அசாம் கான், கூறியதாவது: "எமர்ஜென்சி காலக்கட்டத்தின்போது சஞ்சய் காந்தி கொண்டுவந்த 'கட்டாய மலட்டுத்தன்மை' திட்டத்துக்காகவும், பாபர் மசூதியின் நுழைவு வாயிலை திறந்து விட ராஜீவ் காந்தி உத்தரவிட்டதற்காவும் இருவருக்குமே அல்லா தண்டனை வழங்கினார் அதேப்போன்று இந்திரா காந்தியும் பொற்கோவிலுக்குள் புல்டோசரை அனுப்பினார்…
-
- 1 reply
- 435 views
-
-
இந்தியர்களையும், சீனர்களையும் தங்களுக்கு போட்டியாக அமெரிக்கர்கள் கருதவேண்டும்: ஒபாமா அறிவுரை! [sunday, 2014-04-13 20:15:34] இந்தியர்களையும், சீனர்களையும் தங்களுக்கு போட்டியாக அமெரிக்கர்கள் கருதவேண்டும்,'' என, அமெரிக்க அதிபர், ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவின், மேரிலாண்டில் நடந்த விழாவில், மாணவர்களிடையே அதிபர், ஒபாமா பேசியதாவது - நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால், ஒரே நகரத்தில் போட்டியிடாமல், உலகம் முழுவதும் போட்டியிட வேண்டும். இந்த உண்மையை இந்திய மற்றும் சீன இளைஞர்கள் உணர்ந்திருப்பதால் தான், உலக பொருளாதாரத்தில் அவர்கள் முத்திரை பதித்துள்ளனர். இந்தியர்களும், சீனர்களும் செய்வதை விட சிறப்பாக, உங்களால் செய்ய முடியும். ஆனால், முதலில் முடித்த வேலையின் சந்தோஷத்தி…
-
- 0 replies
- 297 views
-